புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 2 I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 2 I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 2 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 2 I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 2 I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 2 I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 2 I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Jun 25, 2009 6:19 pm

First topic message reminder :

திருச்செந்தூர் முருக‌ன் கோயி‌லி‌ல் ஜூலை 2ம் தேதி கு‌‌ம்பா‌பிஷேக‌ம் நட‌க்க‌விரு‌க்‌கிறது. இதையொட்டி யாகசாலைகளுக்கு கால்கோள் விழா நேற்று நடந்தது.






முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ‌திரு‌ப்ப‌ணிக‌ள் நட‌ந்து முடி‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல் ஜூலை 2ஆ‌ம் தே‌தி கோ‌யி‌ல் கும்பாபிஷேகம், நடக்கிறது.

சுமா‌ர் ரூ.1.23 கோடி செலவில் கோ‌யி‌ல் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கு‌ம்பா‌பிஷேக ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு ம‌ட்டு‌ம் ரூ.1.21 கோடி செலவாகு‌ம் எ‌ன்று கண‌க்‌கிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மூலவருக்கு தங்க கொடிமரம் அருகேயும், சண்முகருக்கு ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும் யாகசாலை அமைக்கப்படுகிறது. சண்முகருக்கு 49 ஹோம குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 21 குண்டங்களும், பெருமாளுக்கு 5 குண்டங்களும் அமைக்கப்படுகிறது.

நே‌ற்று காலை 8 மணிக்கு மேலவாசல் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க கால்கோள் எடுத்து வரப்பட்டு கிரிபிரகாரத்தில் ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கன்னிமூலையில் கோயில் சிவாச்சாரியாரால் கால்கோள் நடப்பட்டது.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ‌ஏராளமான ப‌க்த‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டனர‌். கு‌ம்பா‌பிஷேக ‌நி‌‌க‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது



From Webdunia


avatar
Guest
Guest

PostGuest Fri Jun 26, 2009 8:58 pm

manekan2000 wrote:முருகன் படம் சூப்பர் முருகனடிமை வார்த்தை சூப்பரோ சூப்பர்

சிரி சிரி நன்றி நன்றி

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 10:41 am

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 2 Tiruchendur-murugan-temple


புண்ணியக்கடலில் நீராடச் செல்லும் முன்னர் அங்கி௫ந்து தி௫ம்பி பார்த்தால் கிடைக்கும் எழில்மிகு தரிசனம்


avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 11:05 am

மு௫கனடிமை wrote:
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 2 Murugar

பத்துமலை மு௫கா சரணம்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 27, 2009 11:34 am

அருமையான படங்கள் .

இளவரசன் , முருகன் அவர்களுக்கு நன்றிகள் . கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அப்டேட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 4:02 pm

Kraja29 wrote:அருமையான படங்கள் .

இளவரசன் , முருகன் அவர்களுக்கு நன்றிகள் . கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அப்டேட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நானும்தான் கேட்டுக்கொள்கிறேன்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 8:12 pm

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 2 Nlf2p02


jegha
jegha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 28/06/2009

Postjegha Wed Jul 01, 2009 8:31 pm

மகிழ்ச்சி thanks 4 the photoes

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 8:33 pm

jegha wrote:மகிழ்ச்சி thanks 4 the photoes

நன்றி

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 8:50 pm

முருகப்பெருமான் கொலுவீற்றிருக்கும் ஆலயங்களில் ஆறுபடை வீடுகள் சிறப்புப்பெற்றவை. இதில் இரண்டாம் படைவீடாக இருப்பது திருச்செந்தூர் ஆகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது

இராஜ கோபுரம் (மேல கோபுரம் என அழைக்கப்படும் மேற்கு கோபுரம்):

இக்கோயிலின் ராஜகோபுரம் மேற்கு வாயிலின் மீது அமைந்திருப்பதால் மேலைக்கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழக ஆலயங்களில் பொதுவாக கிழக்கு வாயிலின் மீது அமைக்கப்படும் கோபுரமே உயரமானதாக அமைக்கப்படும். இத்தலத்தில் கிழக்கு வாயில் கடலுக்கு அருகில் இருப்பதால் அதன்மீது கோபுரம் கட்டினால் கடல் அரிப்பால் பாதிக்கப்படும். அத்துடன் உறுதியான அடித்தளம் அமைக்க முடியாதென்பதால் ராஜகோபுரத்தை மேற்கு வாயில் மீது கட்டியுள்ளனர்.


இக்கோபுரம் ஒன்பது அடுக்குகள் கொண்டது. வாயில் உள்ள வியாள மட்டத்திலிருந்து உயரம் 137 அடி உயரமும் 90 அடி அகலமும் கொண்டதாகும். தென்வடலாக அமைந்த இக்கோபுரத்தின் அகலம் 65 அடிகளாகும். மேல்தளம் 20 அடி உயரமும், 47 அடி அகலமும் கொண்டது. உச்சியில் ஒன்பது செப்புக் கலசங்கள் அமைந்துள்ளளன.


சண்முகவிலாசம்

இக்கோயிலின் முதன்மை வாயில் தெற்கு நோக்கியவாறு உள்ளது. இதன் வழியாக உட்சென்றதும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சண்முக விலாசம் என்னும் பெரிய மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபம் 120 அடி உயரமும், 86 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதைத் தாங்குகின்றன. முன்னாளில் வெள்ளைக் கற்களால் கட்டப்பட்டிருந்த இந்த மண்டபத்தை மெளன சுவாமிகள் கருங்கல்லால் புதுப்பித்துள்ளார். இம்மண்டபத்தின் கருங்கல் கூரை தமிழர்களின் கட்டிடக்கலையின் தொழில்நுட்பத்திறமையைப் பறைசாற்றுகிறது.


சண்முக விலாச மண்டபத்திலிருந்து (உட்சென்று) மகாமண்டபத்தில் கோயில் கொண்டுள்ள சண்முகப் பெருமானையும், தேவியர்களையும் வழிபடலாம். தெற்கு நோக்கியவாறு அமைந்த தங்கக் கால்கள் கொண்ட விமானத்தில் சண்முகரைக் காண்கிறோம். இம்மண்டபத்தின் படிகளில் இறங்கும்போது, ஆடவர்கள் தங்கள் மேலாடைகளைக் களைந்து விடுகின்றனர். இக்கோயிலை அமைத்த கேரள மன்னர்கள் காலத்திய வழக்கம், இங்கு இன்றும் நடைமுறையில் உள்ளது.


இரண்டாவது பிரகாரம்

படிகளில் இறங்கி இரண்டாவது பிரகாரத்தை அடையலாம். இங்கு தெற்கு நோக்கியவாறு சிறிய தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவரை வணங்கியபின், இதே பிரகாரத்தில் மேற்குப் பகுதியில் 108 சிவலிங்கங்கள் அமைந்த சந்நிதி உள்ளது. தொடர்ந்து சூரசம்ஹார மூர்த்தி திருவுருவத்தைக் காணலாம். அடுத்து திருப்புகழ் என்னும் நூலை அருளிச் செய்த ஸ்ரீமத் அருணகிரிநாதர் சந்நிதி உள்ளது. இவருடைய சந்நிதியை அடுத்து மேல்கோபுர வாயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் உள்ளது. தொடர்ந்து வலம்வரும்போது, மேற்கு கோபுர வாயிலுக்கு நேராக மேற்கு நோக்கியவாறு விநாயகர் உள்ளார். இவர் மேலவாசல் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.இவர் மேலைக்கோபுரத்தைக் கட்டும்போது துணையாக இருந்து காத்தருளினார் என்கின்றனர். இந்தப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் பெருமாள் சந்நிதி உள்ளது. இதில் பெருமாள் நின்றவாறு காட்சியளிக்கிறார். சந்தனாசலம் என்னும் பாறையைக் குடைந்து செய்யப்பட்ட ஆலயத்தில் அரங்கநாதர் பள்ளி கொண்டவாறு காட்சியளிக்கிறார். அவருக்கு அருகில் கஜலட்சுமித் தாயாரைக் காண்கிறோம். மேலும் இங்கு ஒரே வரிசையில் அமைந்த ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோருடன் பன்னிரு ஆழ்வார்களின் திருவுருவங்களும் உள்ளன.


செப்புத்தகடு போர்த்திய கொடிமரம்

முதல் பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் கருவறைக்கு நேராக செப்புத்தகடு போர்த்திய கொடிமரம் உள்ளது. மாசி மாதம், ஆவணி மாதம் நடைபெறும் பெருந்திருவிழாக்களின்போது இதில் கொடியேற்றப்படுகிறது. இக்கொடிமரத்திற்கு நேராக மதிற்சுவரில் நீளவாட்டில் அமைந்த துளை உள்ளது. இதன் வழியாகப் பார்த்தால் நுரையுடன் பொங்கி வந்து கரையில் மோதித்திரும்பும் அலைகளையும், அதன் பின்புலத்தில் அமைதியான நீலக்கடலையும் காணலாம். இந்தத் துளையின் அருகில் காதை வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி கேட்கிறது. கொடிமரத்தின் அருகில் விநாயகர் திருவுருவம் உள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 8:51 pm

முதற் பிரகாரம்

முதல் பிரகாரத்தில் நுழைந்ததும் இடப்புறத்தில் குமாரவிடங்கர் என்னும் உற்சவ மூர்த்தி உள்ளார். இவரே முதன்மை மூர்த்தியாவார். இவர் சண்முகரின் பிரதி பிம்பமாவார். தெய்வத் திருமண நிகழ்ச்சிகளில் மணவாளராக எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச்சாமி என அழைக்கப்படுகிறார். இவரை வணங்கியபின் தொடர்ந்து வரிசையாக இருக்கும் அறுபத்து மூன்று நாயன்மார்கள், தொகையடியார்கள் திருவுருவங்களைக் கண்டு வணங்கலாம். இங்குள்ள தூண்களில் இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகளைச் செய்த காசி சுவாமிகள், மெளனச்சுவாமிகள், தேசிகமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரின் திருவுருவங்கள் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கே பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட வள்ளியம்மன் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதியின் பின்புறம் சங்கர நாராயணர் சுவாமி, விசாலாட்சி அம்மன், வேதபுரீசுவரர் சுவாமி, வாதபுரீசுவரர் சுவாமி, ஏகாம்பரநாதர் சுவாமி நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அடுத்ததாகப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள தெய்வயானை சந்நதி உள்ளது. இப்பகுதியில் யாகசாலை உள்ளது. இப்பிராகாரத்தின் வடக்கில் சந்திரேசுவரர் (சுந்தரேசுவரர்) சந்நிதி உள்ளது. அதற்கு நேர் எதிரில் நடராஜர், சனீஸ்வரர், வைரவர் சந்நிதிகள் உள்ளன.

நடராஜர் சந்நிதியில் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்க, அருகில் சிவகாமியம்மை உள்ளார். நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டு வியந்து அமர்ந்திருக்கும் காரைக்காலம்மையாரையும் காண்கிறோம். இங்கிருந்து சற்றுத் தெற்கே சென்றால், தங்கமுலாம் பூசிய நெடிய கொடிக்கம்பம் உள்ளது. இதில் கொடியேற்றும் வழக்கமில்லை.


மகாமண்டபம்

மகாமண்டபத்தில் இருந்தவாறு மூலவராக அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பாலசுப்பிரமணியப் பெருமாளையும், சபையில் வீற்றிருக்கும் ஆறுமுக நயினாரையும் தரிசிக்கலாம். மூலவருக்கு முன்னுள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கே இருந்தவாறு பார்வதி தேவியாரையும், கரிய மாணிக்க விநாயகரையும் கண்டு தரிசிக்கலாம்.
கருவறை வாயிலில் வீரபாகு தேவரும், வீரமகேந்திர தேவரும் வாயிற்காவலர்களாக உள்ளனர்.


மூலவர்

கிழக்கு நோக்கிய கருவறையில், கிழக்கு நோக்கியவாறு பாலசுப்பிரமணியர் (செந்தில்நாதன்) எழுந்தருளியுள்ளார். தலையில் சடையை எடுத்துக் கட்டியுள்ளார். நான்கு கரங்களுடன் திகழும் இவர், மேற்கரங்களில் வஜ்ரம், ஜப மாலையும், கீழ்க்கரங்களில் தாமரையும், ஊரு முத்திரையும் தாங்கியுள்ளார். மூலவருக்கு முன்பாக வலப்புறத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட ஸ்ரீபலிநாயகரும், இடப்புறம் தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீபலிநாயகரும் உள்ளனர்.


கருப்பக்கிரகத்தின் பின்புறம் பாம்பறை எனப்படும் ஒரு குகை உள்ளது. அதில் ஐந்து லிங்கங்கள் உள்ளன. இந்த ஐந்து லிங்கங்களை முருகப்பெருமான் பூசித்து கொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர். கருவறைக்கு நேர் எதிரில் (மகா மண்டபத்தில்) இரண்டு மயில்களையும், ஒரு நந்தியையும் காணலாம். நந்தி பஞ்சலிங்கங்களுக்கு வாகனமாகும்.


ஆறுமுகர் (சண்முகர்)

மகாமண்டபத்தின் வலப்புறம் சண்முகர் சந்நிதி உள்ளது. இதில் ஆறுமுகங்களும் பன்னிரண்டு கரங்களும் கொண்டவராக முருகப்பெருமான் அறுமுகநாயினார் எனும் பெயரில் உள்ளார். இவருக்கு இருபுறமும் வள்ளி தெய்வானையர் உள்ளனர். இச்சந்நிதியில் ஆத்மலிங்கம் ஒன்று உள்ளது.


ஜெயந்தி நாதர்

பிரகாரத்தில் உள்ள தூணில் ஆறுமுகரின் திருவுருவம் உள்ளது. மணியடியின் வெளிப்புற வாயில் வழியாக வரும்போது, ஜயந்திநாதர் எனும் உலாத்திருமேனியைக் காண்கிறோம். இவரே மூலவருக்கு இணையான உலாமூர்த்தியாவார். செந்தில் நாயகர் எனப்படும் இவரே தங்கத்தேரில் உலா வருவார். சூரனோடு போரிடுபவரும் இவரே. இவருக்கு இருபுறமும் வள்ளி தெய்வானையர் உள்ளனர். மேலும், இங்கு அலைவாய் உகந்த பெருமான், முதலான உலாத்திரு மேனிகளும் உள்ளன.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக