புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 8:15 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 4:47 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:22 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 2:32 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 2:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:54 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:26 pm
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 9:16 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 7:45 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 1:42 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
by manikavi Today at 8:15 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 4:47 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:22 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 2:32 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 2:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:54 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:26 pm
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 9:16 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 7:45 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 1:42 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்!
Page 1 of 1 •
கொங்கு வளநாடு தொன்மை வரலாறும், பக்திச் சிறப்பும் உடையது. கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழு. வைப்புத் தலங்கள் பதினான்கு. மாணிக்கவாசகர், கருவூர்த் தேவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடிய திருத்தலங்களும் பல உள்ளன. கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் திருநணா ஒன்றாகும். தற்போது இத்தலம், "பவானி' என்ற பெயரால் வழங்கப்படுகிறது.
சங்ககாலச் சேரர் புகழ்பாடும் நூல் பதிற்றுப் பத்தாகும். செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் ஏழாம் பத்தில் பாடியுள்ளார். ""சிறுபுறமென நூறாயிரம் காணம் கொடுத்து நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ''என அரசன் தந்த பரிசினைப் பதிற்றுப் பத்து கூறுகிறது.
இந்நன்றா என்னும் குன்று கி.பி. 7ஆம் நூற்றாண்டில் "நணா' என மருவியது. திருஞான சம்பந்தர் திருப்பதிகம் நணாவைக் குன்றெனக் கூறுகிறது. நன்றாவின் மேலிருந்து காட்டிய நாடு கொல்லிக் கூற்றமாகும். அங்குள்ள ஊர்களில் ஒன்று, "கபிலக்குறிச்சி' எனப் பெயர் கொண்டு நிலவுவது இதற்குச் சான்று பகர்கின்றது.
நணா இன்று பவானி என வழங்கப் பெறுகிறது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். வானி ஆறும், காவிரி ஆறும் கூடுகின்ற கூடுதுறையில் பவானி அமைந்துள்ளது. நிலத்துக்கு அடியில் வந்து சேர்கின்ற அமுத ஆறு ஒன்றும் சேர்ந்து முக்கூடலாய் உள்ளது.
""காவிரி அன்றியும் பூவிரி புனலொரு, மூன்றுடன் கூடிய கூடலனையை'' எனச் செங்குட்டுவனை கபிலர் பதிற்றுப் பத்தில் பாராட்டியுள்ளார். இவ்வூரைச் சோழன் பூர்வ பட்டயம், "வானிகூடல்' என்று குறிப்பிடுகிறது.
"பவானி நீர் தெளிந்தது. சுவை மிகுந்தது. பவானி ஆற்றில் மகளிர் நீராடினர். காதில் அணிந்திருந்த குழை கழன்று விழுந்தது. அது தெளிந்த நீரில் மேலே தெரிந்தது. இத்தகு நீரினும் இனியவன் சேர அரசனாகிய இளஞ்சேரல் இரும்பொறை' எனப் பெருங்குன்றூர்க்கிழார் ஆற்றையும் அரசனையும் ஒருங்கே போற்றியுள்ளமை அறியத்தக்கதாகும். இதனை""புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த, பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் சாந்து வரு வானி நீரினும், தீம் தண் சாயலன்'' எனப் பதிற்றுப் பத்து கூறியுள்ளது.
நாயன்மார் பெயர்களைக் கொங்கு நாட்டில் மக்கள் மிகுதியாக வைத்திருந்தனர். கொங்கு நாட்டுக் கல்வெட்டில், "அறத்தைப் பாதுகாப்பவர்கள் அறுபத்து மூவர் பெற்ற பேறு பெறுவர்' என்ற செய்தி வருகிறது. நாயன்மார்கள் தமிழகத்தில் வழிபாட்டில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர்கள். அவர்கள் செய்யும் தொழில் எதுவாக இருப்பினும் வழிபாட்டுக்கும் அடியார்க்கும் உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.
சமயக்குரவர் நால்வருள் தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர், திருக்கொடிமாடச் செங்குன்றூரில் (திருச்செங்கோடு) வழிபட்டுப் பதிகம் பாடிய பின் திருநணாவுக்கு எழுந்தருளினார்.
""அப்பாலைக் குடபுலத்தில் ஆறணிந்தார் அமர் கோயில் எப்பாலும்சென்றேத்தித் திருநணாவினை இறைஞ்சி'' எனச்சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.
திருநணாவில் திருஞானசம்பந்தர், ""பந்தார் விரல் மடவாள் பாகமா'' என்னும் திருப்பதிகம் பாடினார்.
""சொல் வித்தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்
வல்வித்தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின் மேலே'' எனப் பதிகப் பயன் பாடியுள்ளார்.
16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அருணகிரிநாதர்,""சிலைவேட சேவற் கொடியோனே! திருவானி கூடற் பெருமாளே'' எனப் பவானித் திருப்புகழில் பாடியுள்ளார். பல புலவர்கள் இத்தலத்திற்குப் புராணம், சிற்றிலக்கியம் பாடியுள்ளனர்.
புலவர் பாடும் புகழ்மிக்க பவானி பண்ணார் மொழியம்மை உடனுறை திருநண்ணாவுடையார் திருக்கோயில் பல சிறப்புகள் உடையது. இக்கோயிலுக்கென்று திருவருளும், குருவருளும் கூட்ட நாயன்மார்களுக்கும், சமயச் சான்றோர்களுக்கும் புதிதாக நூறு செப்புத் திருமேனிகளைத் தக்கோர் உதவியுடன் அடியார் திருக்கூட்டம் உருவாக்கியுள்ளமை, உலகத்தோர் உணர்ந்து மகிழத் தக்க செய்தியாகும்.
கைத்திருத் தொண்டு செய்யும் கடப்பாட்டினர், கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராகிய அறுபான்மும்மை நாயன்மார்கள், திருமுறை ஆசிரியர்கள், திருமுறை கண்ட சோழர் மாமன்னர் ராசராச சோழ தேவர், பெரிய புராணம் பாட முன்னின்ற அநபாயச் சோழர், தெய்வப் புலவர் திருவள்ளுவத் தேவ நாயனார், சந்தானக் குரவர்கள், மாதவச் சிவஞானமுனிவர் ஆகியோர்க்கும் புதிய செப்புத் திருமேனிகள் செய்யப் பெற்றுள்ளன. அடியார்களின் உள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்க்கும் உயிர் ஓவியங்களாக அந்த அற்புதத் திருமேனிகள் எழிலுறத் திகழ்கின்றன.
இந்தச் செப்புத் திருமேனிகளுக்கான சிறப்பு ஆராதனை, பவானியில், நாளது 16.5.2010 அன்று சிறப்புற நடைபெற உள்ளது. பின்னர் அத்திருமேனிகளை கொங்கு நாட்டில் உள்ள ஏனைய பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு பல்லக்குகளில் சுமந்து சென்று பதிகம்பாடி மகிழவும் திட்டம் உள்ளது. பிறகு உரியதொரு திருநாளில் அனைத்து அடியார் திருவுருவச் சிலைகளும் பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் முறைப்படி ஒப்படைக்கப்படும்.
ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிறுத் தொண்டர், திருநீலநக்கர் ஆகியோர் முருக நாயனார் திருமடத்தில் ஒன்று கூடியிருந்தபோது,
"திருப்பதிகச் செந்தமிழின் திறம் போற்றி, மகிழ்வுற்றுப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர் பொற்றாளில்
விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை
விரித்துரைத்து அங்கு ஒருப்படு சிந்தையினார்கள் உடனுறைவின் பயன்பெற்றார்' என்று தெய்வச் சேக்கிழார் பாடியுள்ளார். அவர்தம் திருவாக்கினை 21ஆம் நூற்றாண்டில் உள்ள அடியார்கள் உணர்ந்து, உடனுறைவின் பயன் பெறுவதற்கு, இவ்விழாவிற்கு எழுந்தருளிச் சிறப்பிக்குமாறு மனம், மொழி, மெய்களால் வணங்கி வேண்டுகிறோம்.
சிவனடியார் திருக்கூட்டம்
சங்ககாலச் சேரர் புகழ்பாடும் நூல் பதிற்றுப் பத்தாகும். செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் ஏழாம் பத்தில் பாடியுள்ளார். ""சிறுபுறமென நூறாயிரம் காணம் கொடுத்து நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ''என அரசன் தந்த பரிசினைப் பதிற்றுப் பத்து கூறுகிறது.
இந்நன்றா என்னும் குன்று கி.பி. 7ஆம் நூற்றாண்டில் "நணா' என மருவியது. திருஞான சம்பந்தர் திருப்பதிகம் நணாவைக் குன்றெனக் கூறுகிறது. நன்றாவின் மேலிருந்து காட்டிய நாடு கொல்லிக் கூற்றமாகும். அங்குள்ள ஊர்களில் ஒன்று, "கபிலக்குறிச்சி' எனப் பெயர் கொண்டு நிலவுவது இதற்குச் சான்று பகர்கின்றது.
நணா இன்று பவானி என வழங்கப் பெறுகிறது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். வானி ஆறும், காவிரி ஆறும் கூடுகின்ற கூடுதுறையில் பவானி அமைந்துள்ளது. நிலத்துக்கு அடியில் வந்து சேர்கின்ற அமுத ஆறு ஒன்றும் சேர்ந்து முக்கூடலாய் உள்ளது.
""காவிரி அன்றியும் பூவிரி புனலொரு, மூன்றுடன் கூடிய கூடலனையை'' எனச் செங்குட்டுவனை கபிலர் பதிற்றுப் பத்தில் பாராட்டியுள்ளார். இவ்வூரைச் சோழன் பூர்வ பட்டயம், "வானிகூடல்' என்று குறிப்பிடுகிறது.
"பவானி நீர் தெளிந்தது. சுவை மிகுந்தது. பவானி ஆற்றில் மகளிர் நீராடினர். காதில் அணிந்திருந்த குழை கழன்று விழுந்தது. அது தெளிந்த நீரில் மேலே தெரிந்தது. இத்தகு நீரினும் இனியவன் சேர அரசனாகிய இளஞ்சேரல் இரும்பொறை' எனப் பெருங்குன்றூர்க்கிழார் ஆற்றையும் அரசனையும் ஒருங்கே போற்றியுள்ளமை அறியத்தக்கதாகும். இதனை""புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த, பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் சாந்து வரு வானி நீரினும், தீம் தண் சாயலன்'' எனப் பதிற்றுப் பத்து கூறியுள்ளது.
நாயன்மார் பெயர்களைக் கொங்கு நாட்டில் மக்கள் மிகுதியாக வைத்திருந்தனர். கொங்கு நாட்டுக் கல்வெட்டில், "அறத்தைப் பாதுகாப்பவர்கள் அறுபத்து மூவர் பெற்ற பேறு பெறுவர்' என்ற செய்தி வருகிறது. நாயன்மார்கள் தமிழகத்தில் வழிபாட்டில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர்கள். அவர்கள் செய்யும் தொழில் எதுவாக இருப்பினும் வழிபாட்டுக்கும் அடியார்க்கும் உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.
சமயக்குரவர் நால்வருள் தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர், திருக்கொடிமாடச் செங்குன்றூரில் (திருச்செங்கோடு) வழிபட்டுப் பதிகம் பாடிய பின் திருநணாவுக்கு எழுந்தருளினார்.
""அப்பாலைக் குடபுலத்தில் ஆறணிந்தார் அமர் கோயில் எப்பாலும்சென்றேத்தித் திருநணாவினை இறைஞ்சி'' எனச்சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.
திருநணாவில் திருஞானசம்பந்தர், ""பந்தார் விரல் மடவாள் பாகமா'' என்னும் திருப்பதிகம் பாடினார்.
""சொல் வித்தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்
வல்வித்தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின் மேலே'' எனப் பதிகப் பயன் பாடியுள்ளார்.
16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அருணகிரிநாதர்,""சிலைவேட சேவற் கொடியோனே! திருவானி கூடற் பெருமாளே'' எனப் பவானித் திருப்புகழில் பாடியுள்ளார். பல புலவர்கள் இத்தலத்திற்குப் புராணம், சிற்றிலக்கியம் பாடியுள்ளனர்.
புலவர் பாடும் புகழ்மிக்க பவானி பண்ணார் மொழியம்மை உடனுறை திருநண்ணாவுடையார் திருக்கோயில் பல சிறப்புகள் உடையது. இக்கோயிலுக்கென்று திருவருளும், குருவருளும் கூட்ட நாயன்மார்களுக்கும், சமயச் சான்றோர்களுக்கும் புதிதாக நூறு செப்புத் திருமேனிகளைத் தக்கோர் உதவியுடன் அடியார் திருக்கூட்டம் உருவாக்கியுள்ளமை, உலகத்தோர் உணர்ந்து மகிழத் தக்க செய்தியாகும்.
கைத்திருத் தொண்டு செய்யும் கடப்பாட்டினர், கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராகிய அறுபான்மும்மை நாயன்மார்கள், திருமுறை ஆசிரியர்கள், திருமுறை கண்ட சோழர் மாமன்னர் ராசராச சோழ தேவர், பெரிய புராணம் பாட முன்னின்ற அநபாயச் சோழர், தெய்வப் புலவர் திருவள்ளுவத் தேவ நாயனார், சந்தானக் குரவர்கள், மாதவச் சிவஞானமுனிவர் ஆகியோர்க்கும் புதிய செப்புத் திருமேனிகள் செய்யப் பெற்றுள்ளன. அடியார்களின் உள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்க்கும் உயிர் ஓவியங்களாக அந்த அற்புதத் திருமேனிகள் எழிலுறத் திகழ்கின்றன.
இந்தச் செப்புத் திருமேனிகளுக்கான சிறப்பு ஆராதனை, பவானியில், நாளது 16.5.2010 அன்று சிறப்புற நடைபெற உள்ளது. பின்னர் அத்திருமேனிகளை கொங்கு நாட்டில் உள்ள ஏனைய பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு பல்லக்குகளில் சுமந்து சென்று பதிகம்பாடி மகிழவும் திட்டம் உள்ளது. பிறகு உரியதொரு திருநாளில் அனைத்து அடியார் திருவுருவச் சிலைகளும் பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் முறைப்படி ஒப்படைக்கப்படும்.
ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிறுத் தொண்டர், திருநீலநக்கர் ஆகியோர் முருக நாயனார் திருமடத்தில் ஒன்று கூடியிருந்தபோது,
"திருப்பதிகச் செந்தமிழின் திறம் போற்றி, மகிழ்வுற்றுப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர் பொற்றாளில்
விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை
விரித்துரைத்து அங்கு ஒருப்படு சிந்தையினார்கள் உடனுறைவின் பயன்பெற்றார்' என்று தெய்வச் சேக்கிழார் பாடியுள்ளார். அவர்தம் திருவாக்கினை 21ஆம் நூற்றாண்டில் உள்ள அடியார்கள் உணர்ந்து, உடனுறைவின் பயன் பெறுவதற்கு, இவ்விழாவிற்கு எழுந்தருளிச் சிறப்பிக்குமாறு மனம், மொழி, மெய்களால் வணங்கி வேண்டுகிறோம்.
சிவனடியார் திருக்கூட்டம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|