புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
68 Posts - 45%
heezulia
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
5 Posts - 3%
prajai
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
4 Posts - 3%
jairam
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Jenila
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
9 Posts - 4%
prajai
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
6 Posts - 3%
Jenila
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
jairam
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 1:53 am

First topic message reminder :

( டாக்டர். அண்ணா பரிமளம் )


அண்ணாவின் இளமைக் காலம்

அறிஞர் அண்ணா பிறந்தது பல்லவ நாட்டின் தலைநகரம் காஞ்சி. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் புத்தர் காஞ்சிக்கு வந்து சமயத் தொண்டாற்றியிருக்கிறார். காஞ்சிபுரத்துக்கு யுவான் சுவாங் சீனயாத்ரிகன் அசோகன் மணிமேகலை ஆகியோர் வந்து சமயத் தொண்டாற்றிருக்கிறார்கள்.

மிகப்பெரிய வடமொழி பல்கலைக்கழகம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு இருந்திருக்கிறது.

காஞ்சியில் இருந்து தர்ம பாலர் எனும் பேராசிரியர் நாளந்தா பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருக்கிறார்.

திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் பிறந்து காஞ்சியில் கல்வி வள்ளல் பச்சையப்பர் பிறந்த ஊர்.

இசைக் கலையில் சிறந்த நயனா பிள்ளை பிறந்த ஊர்.

கல்வி, கலை இவைகளில் சிறந்திருந்த காஞ்சி நெசவுத் தொழிலிலும் பெயர் பெற்று இருந்தது.

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் தேதி நடராசன் - பங்காரு இணையினருக்கு அண்ணா பிறந்தார்.

தொடக்கக்கல்வியும் உயர் நிலைக் கல்வியும் காஞ்சி பச்சையப்பர் கல்வி நிறவனங்களில் பயின்றார். தெய்வீக நம்பிக்கைக் கொண்டது அண்ணாவின் குடும்பம். ஆலய வழிபாட்டிற்கு அண்ணா கூட்டம் குறைவாக உள்ளக் கோயிலுக்கே செல்வார்.

பள்ளிக்குச் செல்லும் போது தானே மாட்டு வண்டி ஓட்டிச் செல்வார்.

அண்ணாவின் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி அம்மையார் அண்ணா அவர்களைத் தொத்தா என்றே அழைப்பார்கள். அண்ணாவை வளர்த்தவர் வழிகாட்டியாக அண்ணாவின் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர், அவர்தான்.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே அண்ணாவிடம் பொடி போடும் பழக்கம் தொற்றிக் கொண்டது. பத்தாம் வகுப்பு முடித்ததும், மேலே படிப்பைத் தொடர முடியாமல், குடும்ப சூழ்நிலைக் காரணமாக காஞ்சி நகராட்சியில் எழுத்தராகச் சேர்ந்து ஆறு மாதம் பணியாற்றினர்.

அண்ணா அவர்களை அவருடைய தாய் தந்தையர் அந்த நாளில் மதப்பற்றும் தெய்வ நம்பிக்கையும் உள்ளவராகவே வளர்த்தனர். அண்ணாவுக்கு அருந்துணையாக இருந்து ஆளாக்கி விட்ட அவருடைய சிற்றன்னையும்(தொத்தா) அதற்கு விதிவலக்காக இருக்கவில்லை.

இன்று பகுத்தறிவு இயக்கத்தின் தனிப் பெரும் சுடராய் ஒளிவிட்டுத் திகழும் அண்ணா, இளமைப் பருவத்தில் ஆலய வழிபாட்டைத் தவறவிடாத இளைஞராகத்தான் திகழ்ந்து கொண்டிருந்தார். ஆலய வழிபாட்டில் தவறாத அவர் அதிலும் ஒரு புதுமையைக் கையாண்டார். எந்த தோயிலில் கூட்டம் அதிகம் இருக்குமோ அங்கு செல்லாமல், கூட்டம் குறைவாக உள்ள கோயிலுக்குச் சென்று தெய்வ வழிபாடு செய்துகொண்டு வந்தார். கூட்டம் இல்லாத நேரத்தில் தனியாகக் கோயிலுக்குச் செல்வதில் அவர் பெரிதும் விருப்பம் உள்ளவராகவே விளங்கினார்.

எல்லா மக்களும் கூட்டமாகச் சென்று இடநெருக்கடியில் திண்டாடாமல், கூட்டம் குறைவாக உள்ள இடத்துக்குச் சென்று வழிபடுவோம் என்ற கொள்கையை இளமைப் பருவத்தில் அடாப்பிடியாகக் கைக்கொண்டிருந்தார். எல்லோரும் செல்லும் போயிலுக்கு அவரும் போவதுண்டு; ஆனாலும் கூட்டமே அங்கு இல்லாத நேரமாகப் பார்த்துத்தான் செல்வது வழக்கம்.

இளமையில் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தமான கடவுள் பிள்ளையார்தான்! பிள்ளையாருக்கு இளம் வயதில் பூஜைகளும் செய்வதுண்டு. பிள்ளைப் பருவத்தில் பிள்ளையார் பக்தராக அண்ணா விளங்கியிருந்தார் என்றால் பலருக் ஆச்சரியமாக இருக்கும். காஞ்சியிலுள்ள அதிகம்பேர் கவனத்தில் கவராத புண்ணிய கோடீசுவரர் கோயில் என்ற சிறிய கோயிலுக்குத்தான் அண்ணா அடிக்கடி சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.



நொண்டிச் சாக்கு

பிள்ளைப் பருவத்தில் அண்ணா விளாயாட்டில் ஆர்வம் உள்ளவராகவே இருந்தார். தன்னொத்த இளம்பருவத் தோழர்களுடன் கலந்து கேரம் விளையாடுவதில் அவருக்கு அளவு கடந்த ஆனந்தம். ஓய்வு கிடைக்கின்ற நேரங்களிலெல்லம் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு கேரம் விளையாடியே பொழுதைக் கழிப்பார். அதைப்போலவே சீட்டாடுவதையும் பிற்காலத்தில் பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.

விளையாட்டில் ஆர்வம் உண்டென்றாலும் பள்ளியில் நடக்கும் டிரில் வகுப்புக்கு அதிகம் போவது கிடையாது. பொதுவாகவே அண்ணாவுக்கும் உடற் பயிற்சிக்கும் அதிகம் சம்பந்தமில்லை. அதிகத் தேகப் பயிற்சி பெற்றவருமல்ல அன்பதை அவரது உடலும் உயரமும் காட்டும். உடற்பயிற்சி வகுப்புக்கு, பள்ளி நாட்களில் அண்ணா போனது இல்லை. இவரது விருப்பத்துக்கு ஏற்ப இவரது குடும்பத்தினரும் இருந்தார்கள். டிரில் வகுப்புக்குப் போகாமல் இருக்க ஒரு உபாயம் சொல்லிக் கொடுத்தார்கள். டிரில் வகுப்புக்கு போகாமல் இருக்க வேண்டுமானால் காலில் கட்டு போட்டுக்கொள் என்பாராம் அண்ணாவின் தாத்தா. அதன்படி அண்ணாவும் காலில் சிவப்பு மையைக் கொட்டி, கட்டும் போட்டுக் கொள்வார். சுளுக்குபோல நொண்டிச் சென்று, கால் வலிக்கிறது சார் என்பாராம். டிரில் வாத்தியாரும் அண்ணாவை வீட்டுக்கு அனுப்பி விடுவாராம்.


மாமியார் அனுபவம்

அண்ணா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, வீடு வெகு தூரத்தில் இருந்தது. ஆகவே அவர் வீட்டுக் வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்குப் போவது கஷ்டமாக தோன்றிய காரணத்தால், அவரது பெற்றோர்கள் பள்ளிக்கு அருகிலேயே தங்கள் உறவினர் வீட்டில் பகல் உணவுக்கு எற்பாடு செய்திருந்தார்கள். அந்த வீட்டின் நிலையோ மிகவும் விசித்திரமாக இருந்ததை அண்ணா சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்.

அண்ணா சாப்பிட ஏற்பாடாகியிருந்த அந்த வீட்டுக்குரிய மாமியார், வீட்டில் உயர்ந்த பொருளாக இருந்தால் அதை அலமாரியில் வைத்துப் பூட்டி விடுவார்களாம். அண்ணா அவ்வீட்டுக்குச் சாப்பிடப் போனதும் வீட்டிற்குரிய மருமகள் அண்ணாவுக்கு சாதம் போட்டுவிட்டு, மாமியாரை அழைத்து, சாதம் போட்டுவிட்டேன், உருளைக் கிழங்கு வறுவல் வேண்டும் என்று சொன்னால், மாமியார் சாவியைச் கொடுத்து அனுப்பி அதை எடுத்துக்கொண்டு வந்து அண்ணாவுக்கு வைத்த விறகு, அதனை மீண்டும் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிடுவார்களாம் அந்த மாமியார்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:25 am

மறுமலர்ச்சி - ஆனால் வெற்றி!

1942-ல் சர்.கே.வி.ரெட்டி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த காலத்தில், அறிஞர் அண்ணா அவர்களை வரவழைக்க முயற்சி எடுத்து, அந்த முயற்சி தோல்வியுறவே, திராவிட இயக்க மாணவர்கள் வேறொரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்தனர்.

சர்.கே.வி.ரெட்டி இயற்கை எய்திய பிறகு தோழர் எம்.இரெத்தினசாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக வந்தார். அப்பொழுது தமிழ்த் துறைப் பேராசிரியராகத் தோழர் கா.சு.பிள்ளை அவர்கள் இருந்தார்கள். தோழர் க.அன்பழகன் தமிழ் இலக்கியக் கழகத்தின் செயலாளராக இருந்தார். திராவிட இயக்க மாணவர்களின் ஒத்துழைப்பின் பேரில் தோழர் க.அன்பழகன் அவர்கள் விடா முயற்சிசெய்து அறிஞர் அண்ணா அவர்களை வரவழைப்பதற்கான அனுமதியைத் துணைவேந்தரிடம் பெற்றார். அறிஞர் அண்ணா அவர்களின் வருகை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மட்டுமல்லாமல், மாணவ உலகிடையே புதியதொரு வரலாற்றை ஏற்படுத்துவதாகவும், மாணவ இயக்க வளர்ச்சிக்கு ஊட்டம் ஊட்டுவதாகவும் இருந்தது.

தமிழ்ப் பேரவை, தமிழ் இலக்கியக் கழகம் ஆகிய இரண்டின் சார்பாகப் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்குப் பேராசிரியர் கா.சு.பிள்ளை அவர்கள் தலைமை தாங்கி அறிஞர் அண்ணாவைப் பற்றி அரிய பாராட்டுரை ஒன்று வழங்கினார். மாணவ உண்ணங்களெல்லாம் அடைய முடியாதவொன்றை அடைந்துவிட்டதைப் போல் பெருமித உணர்ச்சியோடு களிகொள்ள, அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றோரம் என்னும் பொருள் பற்றி அழகுபட, ஆர்வம் மிக, நகைமிளிர, நயம் சிறக்க, பொல் இனிக்க, பொருள் பொதிய அருவியின் வீழ்ச்சியென அரிய சொற்பொழிவு ஆற்றினார்கள்.

அறிஞர் அண்ணா அவர்களின் தமிழ்ப் பேச்சின் அருமையைக் கேட்டறிந்த செவிகள், அதைவிட மேலாக விளங்கிய அவரது ஆங்கிலப் பேச்சின் அருமையையும் கேட்டறியும் வாய்ப்பினையும் பெற்றன. துணைவேந்தர் தோழர் எம்.இரெத்தினசாமி அவர்கள் தலைமையின் பழைய உலகமும் புதிய உலகமும்(கூந றடிசட டீடன யனே சூநற) என்னும் பொருள் பற்றி அரியதோர் சொற்பொழிவாற்றினார்கள். இந்த இரண்டுபேச்சும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அப்பொழுது படித்துக் கொண்டிருந்த செயல் மாணவர்கள் சிலர்க்கு, அறிஞர் அண்ணாவைச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் வழிகட்டியாகவும் கொள்ளும்படி ஊக்கமளித்தன என்றால் மிகையாகாது.

அந்தத் தடவை அண்ணா அவர்கள் விருந்தினர் விடுதியில் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து தங்கினார்கள். அப்பொழுதான் தேனடையை மொய்க்கும் தேனீக்கள் போல் அறிஞர் அண்ணாவைச் சுற்றிக்கொண்டு மாணவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டதும், அண்ணா அவர்கள் விடையிருத்ததும், மாணவர்களை மாணவநிலைக்குப் பிறகு பொதுப்பணிக்கு அழைத்ததும், மாணவர்கள் இசைந்ததும் ஆகும்.
(மன்றம், நாள்: 01.12.1954)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:26 am

அரண்மனையில் வாழ்ந்த கட்சி ஆலமரத்தடிக்கு வந்தது

1944-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்ததைச் சேர்ந்த திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி(தென்னிந்திய நலவுரிமைச் சங்க) மாநாட்டில் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் கட்சியின் தலைவராகவும், அறிஞர் அண்ணா அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெரியார் அவர்கள் தலைமையின் கீழ் நீதிக்கட்சி வந்த காலத்திலிருந்தே, அதாவது 1938-லிருந்தே, பெரியார் இராமசாமியும், அறிஞர் அண்ணாவும் அரசியல் கருத்துக்களோடு பொருளாதார-சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் நாட்டில் பரப்பலாயினர். சுருங்கக் கூறின் மாளிகையிலே மட்டும் உலாவிவந்த கட்சியை மரத்தடிக்கு கொண்டுவர விரும்பினர்.

பொருளாதார-சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பிற்போக்கு வாதிகளாய் விளங்கிய நீதிக்கட்சியைச் சார்ந்த சில பழைய பிரபுக்களும், பணக்காரர்களும், பட்டதாரிகளும் நீதிக் கட்சியின் தலைமைப் பதவியைப் பெரியாரிடத்திலிருந்து பிடுக்கிவிடவேண்டும் என்று எண்ணினர் அதற்கான முயற்சிகளையும் செய்தனர்.

1944-ம் ஆண்டில் சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு கூட்ட ஏற்பாடு ஆயிற்று. அந்த மாநாட்டில் பெரியார் அவர்களின் தலைமையை மாற்றி, அந்தப் பதவிக்குக் காலஞ்சென்ற சர்.ஆர்.கே.சண்மும் அவர்களையாவது அல்லது வேறு எந்தப் பரிவுவையாவது கொண்டுவர சில பிரபுக்களும், பிரபுக்களை அண்டினோரும் ஆதரவு தேடும் படலத்தைத் துவக்கினர். பிரபுக்களின் போக்கு பெரியாருக்குக் கலக்கத்தையும், வேதனையையும் தந்தது. நீதிக்கட்சியை விட்டு விட்டு சுயமரியாதை இயக்கத்திலேயே தம் கவனத்தை செலுத்தலாமா என்றுகூட பெரியார் அவர்கள் எண்ணினார்கள். அந்த நேரத்தில் அறிஞர் அணணா அவர்கள் நீதிக்கட்சியிலிருந்து பதவி வேட்டைக்காரர்களை நாம் விரட்டவேண்டுமேயொழிய நாம் நீதிக்கட்சியைவிட்டு விலகக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தினார்கள். அரண்மனையிலிருந்த கட்சியை ஆலமரத்தடிக்குக் கொண்டு வரவே அறிஞர் அண்ணா அவர்கள் அரும்பாடுபட்டார்கள். அதற்கான முறையில் முயன்றார்கள்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற கட்சியின் பெயரை திராவிடக் கழகம் என்று மாற்றியமைக்கும் தீர்மானத்தையும், அரசாங்கம் தந்துள்ள கவுரவப் பட்டங்களையும், பதவிகளையும், கழக உறுப்பினர்கள் துறந்துவிடவேண்டும் என்றும், அப்படித் துறக்க வில்லையானால் அத்தகையோர் கழக உறுப்பினர்கள் ஆகமாட்டார்கள் என்றம் கருத்தமைந்த தீர்மானத்தையும் 1944-ம் ஆண்டில் சேலத்தில் நடந்த நீதிக்கட்சியின் மாநில மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டுவந்து நிறைவேற்றினார். பட்டம்-பதவி வேட்டைக்காரர்கள் கட்சியை விட்டு ஓடினர்; கட்சி பாட்டாளி மக்களின் கைக்கு வந்துசேர்ந்தது. அறிஞர் அண்ணா அவர்களின் குறிக்கோள் வெற்றிகரமாக ஈடேறியது.
(மன்றம், நாள்: 15.12.1954)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:26 am

புகையிலை நறுக்கும் கத்திரிக்கோல்

1948-ஆம் ஆண்டில் பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் ஒன்று, சென்னை பெரம்பூர் புகை வண்டி நிலையத்திற்கு எதிரிலுள்ள மைதானத்தில் கூட்டப்பட்டது. அந்த விழாப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் அன்று பகற்கொழுதில் தோழர் க.அன்பழகன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். ஓய்வான நேரத்தில் சேப்டி ரேசர் மூலம் முகச் சவரம் செய்து கொண்டார்கள். மீசையைச் செம்ப் படுத்தவேண்டி தோழர் அன்பழகனிடம் கத்திரிக்கோல் ஒன்று கேட்டார்கள். தோழர் அன்பழகன் அவர்கள் பெரியதொரு கத்தரிக்கோலைக் கொண்டுவந்து கொடுத்தார். அந்தக் கத்திரிக்கோல் மீசையைச் செம்மைப்படுத்துவதற்குப் பதிலாகச் சீர்குலைத்துவிட்டது. இறுதியில் மீசை முழுவதுமே எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எப்பொழுதும் மீசையோடு காட்சியளித்துவந்த அண்ணா அவர்கள் அன்று பொதுக் கூட்டத்தில் மீசையில்லாமல் காட்சியளிக்கவேண்டியிருந்தது.

அந்த நேரம் அறிஞர் அண்ணா அவர்கள் இயக்க நடவடிக்கைகயில் மிகவாகத் தொடர்பு கொள்ளாமல் ஒதுங்கியிருந்த நேரமாகும். தாம் மீசையில்லாமலிருப்பதைத் தமது அரசியல் போக்கோடு சிலர் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடும் என்பதை உணர்ந்த அறிஞர் அண்ணா அவர்கள், பொதுக்கூட்டத்தில் பேசிக்பொண்டிருக்கும்போதே ஏற்ற ஒரு இடத்தில் அதனை வெளிப்படுத்திவிட்டார்கள். இன்று எனக்கு மீசையில்லாமலிருப்பதைக் கண்ட சிலர், இது என்ன புதுமையாக இருக்கிறதே என்று வியப்படைகிறார்கள்; வேறு சிலர் இதற்கு ஏதேனும் அரசியல் காரணம் இருக்கவேண்டுமென்று ஐயப்படுகிறார்கள். இதற்கு ஒரு காரணமும் இல்லை. தோழர் அன்பழகன் அவர்களைக் கத்தரிக்கோல் கேட்டேன். அவர் புகையிலை நறுக்கும் கத்திரிக்கோல் ஒன்றினைக் கொண்டுவந்து கொடுத்தார். அதன் விளைவால் என் மீசை முழுவதும் எடுக்க வேண்டியதாயிற்று. அவ்வளவுதான்! என்னும் கருத்துப்பட கூறினார்கள். கூடியிருந்த மக்கள் கொல்லென்று சிரித்துச் சிரிப்பொலி கிளப்பினர்.
(மன்றம், நாள்: 01.01.1955)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 8:35 pm

இவ்வளவு அருமையான திரி இன்று தான் பார்த்தேன்..........நிறைய விஷையங்கள் இருக்கு இதில், நிதானமா ய்த்தான் படிக்கணும்......என்றாலும் எல்லோரும் பார்க்க மேலே கொண்டு வருகிறேன் ; அவரின் இந்த பிறந்தநாளின் போது ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 15, 2015 9:28 pm

பலே சிவா...ஓர் புத்தகம்போல் பதிவு செய்துள்ளீர் நன்றி ..நல்ல பதிவு..

siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Wed Sep 16, 2015 11:34 pm

சுவையான தகவல்கள் கொண்ட அருமையான பதிவு.

பாதியில் நிறுத்திவிட்டது போல் தோன்றுகிறது,

தொடருங்களேன் சிவா.

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக