புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
viyasan
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 1:53 am

First topic message reminder :

( டாக்டர். அண்ணா பரிமளம் )


அண்ணாவின் இளமைக் காலம்

அறிஞர் அண்ணா பிறந்தது பல்லவ நாட்டின் தலைநகரம் காஞ்சி. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் புத்தர் காஞ்சிக்கு வந்து சமயத் தொண்டாற்றியிருக்கிறார். காஞ்சிபுரத்துக்கு யுவான் சுவாங் சீனயாத்ரிகன் அசோகன் மணிமேகலை ஆகியோர் வந்து சமயத் தொண்டாற்றிருக்கிறார்கள்.

மிகப்பெரிய வடமொழி பல்கலைக்கழகம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு இருந்திருக்கிறது.

காஞ்சியில் இருந்து தர்ம பாலர் எனும் பேராசிரியர் நாளந்தா பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருக்கிறார்.

திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் பிறந்து காஞ்சியில் கல்வி வள்ளல் பச்சையப்பர் பிறந்த ஊர்.

இசைக் கலையில் சிறந்த நயனா பிள்ளை பிறந்த ஊர்.

கல்வி, கலை இவைகளில் சிறந்திருந்த காஞ்சி நெசவுத் தொழிலிலும் பெயர் பெற்று இருந்தது.

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் தேதி நடராசன் - பங்காரு இணையினருக்கு அண்ணா பிறந்தார்.

தொடக்கக்கல்வியும் உயர் நிலைக் கல்வியும் காஞ்சி பச்சையப்பர் கல்வி நிறவனங்களில் பயின்றார். தெய்வீக நம்பிக்கைக் கொண்டது அண்ணாவின் குடும்பம். ஆலய வழிபாட்டிற்கு அண்ணா கூட்டம் குறைவாக உள்ளக் கோயிலுக்கே செல்வார்.

பள்ளிக்குச் செல்லும் போது தானே மாட்டு வண்டி ஓட்டிச் செல்வார்.

அண்ணாவின் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி அம்மையார் அண்ணா அவர்களைத் தொத்தா என்றே அழைப்பார்கள். அண்ணாவை வளர்த்தவர் வழிகாட்டியாக அண்ணாவின் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர், அவர்தான்.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே அண்ணாவிடம் பொடி போடும் பழக்கம் தொற்றிக் கொண்டது. பத்தாம் வகுப்பு முடித்ததும், மேலே படிப்பைத் தொடர முடியாமல், குடும்ப சூழ்நிலைக் காரணமாக காஞ்சி நகராட்சியில் எழுத்தராகச் சேர்ந்து ஆறு மாதம் பணியாற்றினர்.

அண்ணா அவர்களை அவருடைய தாய் தந்தையர் அந்த நாளில் மதப்பற்றும் தெய்வ நம்பிக்கையும் உள்ளவராகவே வளர்த்தனர். அண்ணாவுக்கு அருந்துணையாக இருந்து ஆளாக்கி விட்ட அவருடைய சிற்றன்னையும்(தொத்தா) அதற்கு விதிவலக்காக இருக்கவில்லை.

இன்று பகுத்தறிவு இயக்கத்தின் தனிப் பெரும் சுடராய் ஒளிவிட்டுத் திகழும் அண்ணா, இளமைப் பருவத்தில் ஆலய வழிபாட்டைத் தவறவிடாத இளைஞராகத்தான் திகழ்ந்து கொண்டிருந்தார். ஆலய வழிபாட்டில் தவறாத அவர் அதிலும் ஒரு புதுமையைக் கையாண்டார். எந்த தோயிலில் கூட்டம் அதிகம் இருக்குமோ அங்கு செல்லாமல், கூட்டம் குறைவாக உள்ள கோயிலுக்குச் சென்று தெய்வ வழிபாடு செய்துகொண்டு வந்தார். கூட்டம் இல்லாத நேரத்தில் தனியாகக் கோயிலுக்குச் செல்வதில் அவர் பெரிதும் விருப்பம் உள்ளவராகவே விளங்கினார்.

எல்லா மக்களும் கூட்டமாகச் சென்று இடநெருக்கடியில் திண்டாடாமல், கூட்டம் குறைவாக உள்ள இடத்துக்குச் சென்று வழிபடுவோம் என்ற கொள்கையை இளமைப் பருவத்தில் அடாப்பிடியாகக் கைக்கொண்டிருந்தார். எல்லோரும் செல்லும் போயிலுக்கு அவரும் போவதுண்டு; ஆனாலும் கூட்டமே அங்கு இல்லாத நேரமாகப் பார்த்துத்தான் செல்வது வழக்கம்.

இளமையில் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தமான கடவுள் பிள்ளையார்தான்! பிள்ளையாருக்கு இளம் வயதில் பூஜைகளும் செய்வதுண்டு. பிள்ளைப் பருவத்தில் பிள்ளையார் பக்தராக அண்ணா விளங்கியிருந்தார் என்றால் பலருக் ஆச்சரியமாக இருக்கும். காஞ்சியிலுள்ள அதிகம்பேர் கவனத்தில் கவராத புண்ணிய கோடீசுவரர் கோயில் என்ற சிறிய கோயிலுக்குத்தான் அண்ணா அடிக்கடி சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.



நொண்டிச் சாக்கு

பிள்ளைப் பருவத்தில் அண்ணா விளாயாட்டில் ஆர்வம் உள்ளவராகவே இருந்தார். தன்னொத்த இளம்பருவத் தோழர்களுடன் கலந்து கேரம் விளையாடுவதில் அவருக்கு அளவு கடந்த ஆனந்தம். ஓய்வு கிடைக்கின்ற நேரங்களிலெல்லம் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு கேரம் விளையாடியே பொழுதைக் கழிப்பார். அதைப்போலவே சீட்டாடுவதையும் பிற்காலத்தில் பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.

விளையாட்டில் ஆர்வம் உண்டென்றாலும் பள்ளியில் நடக்கும் டிரில் வகுப்புக்கு அதிகம் போவது கிடையாது. பொதுவாகவே அண்ணாவுக்கும் உடற் பயிற்சிக்கும் அதிகம் சம்பந்தமில்லை. அதிகத் தேகப் பயிற்சி பெற்றவருமல்ல அன்பதை அவரது உடலும் உயரமும் காட்டும். உடற்பயிற்சி வகுப்புக்கு, பள்ளி நாட்களில் அண்ணா போனது இல்லை. இவரது விருப்பத்துக்கு ஏற்ப இவரது குடும்பத்தினரும் இருந்தார்கள். டிரில் வகுப்புக்குப் போகாமல் இருக்க ஒரு உபாயம் சொல்லிக் கொடுத்தார்கள். டிரில் வகுப்புக்கு போகாமல் இருக்க வேண்டுமானால் காலில் கட்டு போட்டுக்கொள் என்பாராம் அண்ணாவின் தாத்தா. அதன்படி அண்ணாவும் காலில் சிவப்பு மையைக் கொட்டி, கட்டும் போட்டுக் கொள்வார். சுளுக்குபோல நொண்டிச் சென்று, கால் வலிக்கிறது சார் என்பாராம். டிரில் வாத்தியாரும் அண்ணாவை வீட்டுக்கு அனுப்பி விடுவாராம்.


மாமியார் அனுபவம்

அண்ணா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, வீடு வெகு தூரத்தில் இருந்தது. ஆகவே அவர் வீட்டுக் வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்குப் போவது கஷ்டமாக தோன்றிய காரணத்தால், அவரது பெற்றோர்கள் பள்ளிக்கு அருகிலேயே தங்கள் உறவினர் வீட்டில் பகல் உணவுக்கு எற்பாடு செய்திருந்தார்கள். அந்த வீட்டின் நிலையோ மிகவும் விசித்திரமாக இருந்ததை அண்ணா சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்.

அண்ணா சாப்பிட ஏற்பாடாகியிருந்த அந்த வீட்டுக்குரிய மாமியார், வீட்டில் உயர்ந்த பொருளாக இருந்தால் அதை அலமாரியில் வைத்துப் பூட்டி விடுவார்களாம். அண்ணா அவ்வீட்டுக்குச் சாப்பிடப் போனதும் வீட்டிற்குரிய மருமகள் அண்ணாவுக்கு சாதம் போட்டுவிட்டு, மாமியாரை அழைத்து, சாதம் போட்டுவிட்டேன், உருளைக் கிழங்கு வறுவல் வேண்டும் என்று சொன்னால், மாமியார் சாவியைச் கொடுத்து அனுப்பி அதை எடுத்துக்கொண்டு வந்து அண்ணாவுக்கு வைத்த விறகு, அதனை மீண்டும் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிடுவார்களாம் அந்த மாமியார்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:05 am

இன்னொருவருடைய அச்சகத்தில் அச்சடிப்பதால் பத்திரிகையில் வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருந்தது. இதனால் ஏராளமான சிரமங்களுக்கிடையே பத்திரிகை வந்து கொண்டிருந்ததது. இந்த சமயத்தில் தந்தை பெரியார் காங்சிக்கு வந்து திராவிட நாடு பத்திரிகையின் வரவு செலவுகளைப் பார்த்து, பத்திரிகை நஷ்டத்தில் வெளிவந்துககொள்டிருப்பதை அறிந்தார்.
சொந்தத்தில் அச்சகம் தொடங்கினால், இந்த நஷ்டம் ஏற்படாது என்று எண்ணினார்.

அதானால் அண்ணாவை அழைத்து, சொந்தமாக இரு அச்சகம் தொடங்கும்படி கூறினார்.

அண்ணாவுக்கோ சொந்தமாக அச்சகம் தொடங்குகிற அளவுக்கு வசதியில். அப்படி வசதியிருந்தால் அவர்க ஏன் இன்னொருவர்க அச்சகத்தில் அடித்துக்கொண்டிருப்பார்?

தந்தை பெரியாரிடம் சொந்தமாக அச்சகம் தொடங்க வசதியின்மையை அண்ணா சொன்னார்.
தந்தை பெரியார் எதுபும் பதில் சொல்லாமல் ஊருக்குத் திரும்பிவிட்டார். இரண்டொரு நாட்களில் விடுதலை யில் ஒரு அறிக்கை வருகிறது.

அண்ணாதுரை திராவிடநாடு பத்திரிகை நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருக்கிறார். எனவே கழகத் தோழர்கள் அனைவரும் மனமுவந்து அண்ணாதுரை சொந்தமாக ஒரு அச்சகம் தொடங்கிட தாராளமாக நிதி உதவி அளித்திட முன்வரவேண்டும்.

நான் அந்த அச்சகத்திற்கு தேவையான எழுத்துக்களையெல்லாம் தருவதெனவும் - எஞ்சிய இயந்திரச் செலவுகளை கழகத் தோழர்கள் பகிர்ந்துகொண்ணவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். எனவே இப்பொழுதிலிருந்தே அண்ணாதுரை அச்சக நிதி உதவி என்று கழகத் தோழர்கள் நிதி அனுப்பவேண்டுகிறேன். என்ற அந்த அறிக்கையை தனது பெயரிலேயே விடுத்திருந்தார்.

அந்த அறிக்கையில் இன்னொரு விபரத்தையும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாதுரை எம்.ஏ. படித்தவர். சிறந்த எழுத்தாளர்; பேச்சாள்ர். அவர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் ஒரு பெரிய அரசாங்க வேலைக்குச் சென்று எந்தவிட கஷ்டமுமின்றி நிம்மதியாக இருந்திட முடியும். இருந்தாலும் அவர் அது கோன்ற வேலைகள் எதுபும் வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர். எனவே அவரது அரசியல் சிரமங்களை நாம்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

நிதி குவியத் தொடங்கியது. தேவைக்கு மேலும் நிதி வருவது நின்றபாடில்லை.

இனிதொடர்ந்து யாரும் நிதி அனுப்ப வேண்டாம்; அச்சகத்திற்கு கோதுமான நிதி வாந்தாகிவிட்டது என்று அண்ணா திராவிடநாடு இதழில் அறிக்கை வெளியிட்டு மேற்படியும் நிதி வராமல் செய்தார்.

வந்துகொண்டிருக்கும் நிதி உதவியை இனி தேவையில், நிறுத்துங்கள் போதும் என்று சொன்ன ஒப்பற்ற தலைவர் அண்ணா!

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் புதுமனை புகுவிழா அன்று மாலை, இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் இசை விருந்து நடைபெற்றது.

இசைச் சித்தரின் பாடல்கள் மக்களை ஆனந்த வெள்ளத்தில் குளிப்பட்டிக் கொண்டிருந்தது, ஒரு சில பாடல்களைப் பாடிய பின்னர் இசைச் சித்தர் ஜெயராமன் அவர்கள் வரவுக்கு மேல் செலவு செய்யாதே; வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே என்னும் பாடலைப் பாடத் தொடங்கினார்.

இதைப் பக்கத்தில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த அண்ணா, உடனே இசைச் சித்தரைப் பார்த்து, பாடலைக் கொஞ்ச நேரம் நிறுத்துங்கள் என்ற சொல்லிவிட்டு வெளியே ஒருவரை அனுப்பி வெளியே நின்றுகொண்டிருந்த கே.ஆர்.ராமசாமியை உள்ளே அழைத்துவரச்சொல்லி - இசைச் சித்தருக்கும் பக்கத்தில் அமர வைத்து, இப்போது பாடலைத் தொடருங்கள் என்று இசைச் சித்தரைப் பார்த்து சொன்னார்கள்.

பாடல் தொடர்ந்தது; பந்தலே அதிரும்படியான கரவொலி அதனுடைய எதிரொலியாக இருந்தது.

கே.ஆர்.ராமசாமி தனது வரவுக்கு மிஞ்சிய செலவினைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அண்ணா சொல்லாமல் சொன்னதைப் புரிந்துகொண்ட மக்கன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தன்னுடைய நண்பர்கள், தன்னைச் சார்ந்தவர்கள் எப்போதுமே நன்றாக இருக்கவேண்டும்; அவர்கள் துயரத்தில் மூழ்கக் கூடாது; துன்பத்தில் உழலக் கூடாது என்பதில் அண்ணா எந்த அளபுக் கு கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

1952-ம் ஆண்டு கோவையில் ஒரு நண்பரின் வீட்டு நிகழ்ச்சிக்கு அண்ணா அவர்கள் வந்திருந்தார்கள். அப்போது கம்யூனிஸ்டு தோழர்களுக்கு, ஏனோ அண்ணா அவர்களின்பால் இனம் புரியாத இரு வெறுப்பு!

கோவைக்கு வருகை தந்த அவரைத் தாக்க வந்தார்கள்; அவரை பொதுவுடமை விரோதி என்று விமர்சித்தார்கள். சரமாரியாக பல கேள்விக்கணைகளைத் தொடுத்தார்க்.ள அண்ணா அவர்கள் கொஞ்சம் கூட அஞ்சவில்லை - அயரவில்லை.

எதிரிகளுடைய கணைகளுக்கு, பதில் கணைகளை பன்மடங்கு வலிவுள்ளதாக ஏவினார். வந்தவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. தங்களை இவன் மடக்குவதா என்று தீப்பிழம்புகளாக அநாவசியமாக மேலும் கோபம் கொண்டார்கள். அண்ணா அவர்களைப் பார்த்து இவ்வளவு தூரம் பேசுகிறீர்களே கார்ல் மார்க்ஸ் எழுதிய கேப்பிடல் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள்.

அதற்கு அண்ணா அவர்கள் மிகவும் சாந்தமாகவும், அலட்சியமாகவும் - நான் திருக்குறள் படித்திருக்கிறேன். என்று பதில் சொன்னார்கள்.

நாங்கள் கேட்டது கேப்பிடல் படித்திருக்கிறீர்களா என்பதுதான் - இது கம்யூனிஸ்ட் தோழர்கள்.

நான் திருக்குறளையே படித்து முடித்துவிட்டேன் என்கிறபோது கேப்பிடலை ஏன் தனியாகப் படிக்கவேண்டும்? கேப்பிடலில் தொழில் துறைகளைப் பற்றியும், ஆலைகளைப் பற்றியும் இருக்கிறது. ஆனால் திருக்குறளில் நீங்கள் சொல்கிற தொழில் துறைகளும் ஆலைகளும் மட்டுமில்லாது - மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்தும் இருக்கிறது - இது பேரறிஞர் அண்ணா.

வந்தவர்கள் வாயடைத்துப்போய்விட்டார்கள்.

அண்ணா அத்தோடு விடுவதாக இல்லை. கேப்பிடலைப் பற்றி படித்திருக்கிறீர்களா என்றா கேட்டீர்கள்; நான் படித்திருப்பது என்ன தெரியுமா? எம்.ஏ.பொருளாதாரம். எப்படி - கண், மூக்கு, காது என்றால் அவைக்ள எல்லம் முகத்திற்குள் அடக்கமோ அப்படித்தான் நீங்கள் சொல்கிற கேப்பிடலும் பொருளாதாரத்திற்குள் அடக்கம். பொருளாதாரம் படித்தவனைப் போய் கேப்பிடலைப் பற்றித் தெரியுமா என்று கேட்கிறீர்களே. . . பரிதாபமாக இருக்கிறது உங்களை நினைத்தால்! என்று சரியான சாட்டையடி கொடுத்தார்.

இதைக் கேட்டதும் - வந்திருந்த கம்யூனிஸ்ட் தோழர்களில் ஒருவரான கோடீஸ்வரராவ் என்பவர், அண்ணாவின் கரங்களைப் பிடித்து, அண்ணா! நான் இனி உங்களோடு சேர்ந்துவிடுகிறேன்; உங்கள் பேச்சுத் திறமையும், வாதத் திறமையும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது; மறுத்துவிடாதீர்கள்; என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி தன்னை அண்ணாவோடு பிணைத்துக்கொண்டார்.
மாற்றாரையும் தன் வயப்படுத்தும் திறமை அண்ணாவின் கைவந்த கலை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

த் பேரறிஞர் அண்ணா விடுதலைப் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நேரம்! அவரது கட்டுரைகளுக்கும், தலையங்கங்களுக்கும் மக்களிடையே ஏகப்பட்ட வரவேற்பு.
இப்போதுள்ள ஒரு சில எழுத்தாளர்கள் சொல்வதுபோல - எனக்கு மூடு இல்லை, இப்போது எழுத வராது; எனக்கு இந்த இடம் ஒத்து வராது; காஜ்மீர் போனால்தான் எழுத வரும்; குற்றாலம் அருவியோரம் உட்கார்ந்து எழுதினால்தான் எழுத்துக்கள் ஊறும் என்றெல்லாம் அண்ணா அலட்டிக்கொண்டதேயில்லை.

பெரும்பாலும் நள்ளிரவுக்குப் பின்தான் தனது எழுத்துக்களை வெளிக்கொணர்வார். அதுவும் நண்பர்கள் யாராவது சந்திக்க வந்துவிட்டால் - நள்ளிரவுகூட இன்னும் கொஞ்சம் நகர்ந்து அதிகாலை என்றாகிவிடும்.

அதுவும் எழுதுவதற்கு வசதியான இடங்களை அவர் நாடிப் போனதே கிடையாது. ஈரோடு புகைவண்டி நிலையத்தில் ஒரு ஒளிமயமான விளக்கு எரிந்துகொண்டிருக்கும். பெரும்பாலும் அங்கு உட்கார்ந்துகொண்டிருந்துதான் அண்ணா அவர்கள் தனது உயிரோட்டமான எழுத்துக்களை உலவ விடுவார்.

ஒரு முறை சென்னையில் சனாதனிகளி மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் பெரியாரையும், சுயமரியாதை இயக்கத்தையும் கண்டித்துத் தீர்மானம் போட்டார்கள்.

இதைக் கேள்விப்பட்ட அண்ணா அந்த மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்திய டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரியையும் அந்த மாநாட்டுத் தீர்மானங்களையும் வன்மையாகக் கண்டித்து விடுதலை பத்திரிகையில் உணர்ச்சி பொங்க ஒரு நீண்ட கட்டுரை எழுதினார்.

இது தந்தை பெரியார் அவர்களுக்குத் தெரியாது. மறு நாள் காலையில் அவர் அண்ணாவை அழைத்து, அவர்கள் ஏதோ மாநாடு போட்டார்களாமே, அதைக் கண்டித்து ஏதாவது எழுதினால் தேவலாமே என்று சொன்னார்.

அதற்கு அண்ணா நான் நேற்றே அது பற்றி எழுதிவிட்டேனே என்று கூறி தான் எழுதியதைக் கொண்டு வந்து காட்டினார்.

தந்தை பெரியாருக்கு கொஞ்ச நேரம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவருள்ளே பூரிப்பு - பெருமிதம்!

நான் என்ன நினைத்தேனோ, எப்படி எழுதவேண்டும் என்று எண்ணினேனேளா அதை எப்படியே நீ சொய்திருக்கிறாய் என்று அண்ணாவை வெகுவாகப் பாராட்டினார்.

தந்தை பெரியார் ஒன்றை நினைப்பதற்குள்ளாகவே அதை நிறைவேற்றி முடித்துவிட வல்லவர் அண்ணா! (அ. சங்கரய்யா)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:06 am

பெரியார் அவர்களோடு சயமரியாதை இயக்கத்தில் பணியாயற்றிக் கொண்டிருந்தபொழுது, சென்னையில் நான் பேசுகிற கூட்டங்களுக்கெல்லாம் தவறாமல் இரு குள்ளமான உருவம் வந்து செல்வதைக் கண்டேன். நான் வண்ணாரப்போட்டையில் பேசினாலும் வடபழனியில் பேசினாலும், மைலாப்பூரில் பேசினாலும், மாம்பலத்தில் பேசினாலும் அடையாற்றில் பேசினாலும் சரியே, சென்னையிலும், சென்னையைச் சார்ந்த சுற்றுப்புறங்களிலும என எங்கு நான் பேசினாலும் பேசுகிற அக்கூட்டங்கள் அனைத்திலும், நான் அந்த உருவத்தைக் கண்டபடி இருந்தேன்.

முதலில் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரப் பற்றுள்ள ஒரு இளைஞர்போலும் அவர் என்று எண்ணினேன். எனினும் அவ்வுருவமே நான் செல்லும் கூட்டங்களிதோறும் வர ஆரம்பித்ததால் எனக்கென்று ஒரு சந்தேகம் கிளம்ப, அருகில் இருந்த கூட்டம் நடத்துகிற பலலை மிகமிகக் குள்ளமாக, கறுப்பாக, குறுகுறுப்பான கண்களோடு காணப்படும் இந்த இளைஞர் யார்? என்று கேட்டேன். ஒருவராலும்சரியான கதிலை அளிக்க முடியவில்லை. ஆனால்; அவ்வுருவம் மட்டும் நான் செல்லும் கூட்டங்கட்குத் தொடர்ந்து வந்தபடியேயிருந்தது.

இந்நிலையில் என்னாலும் அவரை அறிய முடியவில்லை; பிறராலும் அறிந்து கூற முடியவில்லை. எனவே எனக்கென்று நான் கற்பித்துக்கொண்ட, அப்போதைய சூழ்நிலைக்கேற்ற விடையையே என்னுடைய யார் இந்த இளைஞர்? என்ற வினாவிற்கு விடையாக அமைத்துக்கொண்டேன்.

இந்த இளைஞர் வேறு யாருமல்ல, இவர்தான் அரசினாரால் நமக்கென்றே அனுப்பப்பட்டிருக்கிற சி.ஐ.டி. இல்லாவிட்டால் இப்படி நாம் செல்லும் கூட்டங்கள்தோறம் இநத இளைஞர் வரத் தேவையில்லை என்பதே அப்போது எனது முடிவாக இருந்தது.

இந்த முடிவிற்கு வந்ததற்குப் பிறகு வேறு யாரிடமும் யார் அந்த இளைஞர்? என்று கேட்பதில்லை. சென்னையில் நடைபெறும்பொழுது மட்டும் என் கண்கள் என்னையறியாமலே அந்த இளைஞரைத் தேடும். நான் தேடுகிற இடத்திலேயே அவரும் காட்சியளிப்பார்.

ஆனால், என்னுடைய முயற்சி பலன் பாணாமல்போன சில காலம் கழித்து எனக்கு அந்த ஒருவத்தைக் கொண்டிருந்த அந்த இளைஞர் யான் என்பது தெரிய வந்தது. அந்த இளைஞர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்க என்றும், அவருடைய கல்லூரிப் பருவத்தில் என் கூட்டங்களை விடாமல் தொடர்ந்து கேட்கவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் அமைதியாக இருந்து அரசியலை அறியவேண்டிய பருவமே மாணவப் பருவம் என்ற அழுத்தமான எண்ணத்தினாலும் அவ்வாறு கூட்டங்கட்கு வந்துகொண்டிருந்தார் என்றும் தெரியவந்தது.

நான் என்னைப் பின்பற்றிவரும் அந்த உருவம் சி.ஐ.டி. யே என்று தீர்மானமாக முடிவு கட்டுகிற அளவுக்கு, அன்னைப் பின்பற்றி வந்த அந்த சி.ஐ.டி. யார்? என்று அகட்கத் தோன்றும். அவர் வேறு யாருமல்ல. இன்று தனது எண்ணத்தாலும், எழுத்தாலும், பெச்சாலும் எங்கள் இதயத்தையெல்லாம் ஈர்த்துவிடடிருக்கிற; இதோ இந்த மேடையிலே உங்கள் முன்னே அமர்ந்திருக்கிற, நீங்கள் எல்லாம் அண்ணா..., அண்ணா என்று அழைத்து அகம் மகிழ்கிற தேழர் அண்ணாதுரை அவர்கள்தான்.

நான் இதை எதற்காக எடுத்துக்காட்டுகிறேன் என்றால்; மாணவர்களுக்கும் அரசியலுக்கும் உண்ண தொடர்பு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்ற சர்ச்சைக்குரிய நீண்டகாலப் பிரச்னைக்கு அவரின் மாணவப் பருவமே சிறந்த தீர்வாக இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டுவதற்காகத்தான்,

அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி மேற்கண்டவாறு கூறியவர் மறைந்த பொதுவுடைமைத் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்கள். தகவல்: கரந்தை கணேசன்.

பெரியார் அவர்களின் சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளிலே மிகுந்த பற்றுடையவன் நான். அதன் காரணமாக 1934-ம் ஆண்டு முதலே பெரியார் அவர்களோடு நாங்கள் நெருங்கிப் பழகி வந்தோம். அந்த நாளில் தமிழ்மொழியை அழகாகவும், திறமையாகவும்
எழுதுபவர்களிடத்திலே எங்களுக்குத் தனி மதிப்புண்டு.

அப்போது நாங்கள் ஈரோட்டில் நாடகங்கள் நடித்துக்கொண்டிருந்தோம். 1937-ம் ஆண்டு என நினைக்கிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் விடுதலை இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். அறிஞர் அண்ணா அவர்களின் உணர்ச்சி மிகுந்த தலையங்கள்களை நாங்கள் தவறாமல் படிப்பது உண்டு.

காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையாவோடு பொட்டியிட்டுத் தலைவர் தேர்தலில் வெற்றியடைந்தார் சுபாஷ் சந்திரபோஸ். அந்த வெற்றியினைப் பாராட்டி விடுதலை இதழில் ஒரு அருமையான தலையங்கம் வெளி வந்தது. மிக உணர்ச்சிகரமான தலையங்கம் அது. அறிஞர் அண்ணா அவர்கள் தாம் எழுதியிருந்தார் எங்கள் குழுவில் அப்போது அரசியல் உணர்வுடையவர்கள் அதிகம். அனைவரும் அறிஞர் அண்ணா அவர்களின் உணர்ச்சி நிறைந்த, ஆற்றல் வாய்ந்த தலையங்கங்களைப் படித்து அவருடைய தமிழ் நடையில் சொக்கிக் கிடந்தோம் ன்றே சொல்லவேண்டும்.

அண்ணா அவர்கள் ஈரோட்டில் எங்கள் நாடகங்களைத் தவறாமல் வந்து பார்ப்பார். பம்பாய் மெயில், வித்தியாசாகரர், தேச பக்தி, மேனகா, குமாஸ்தாவின் பென் முதலிய நாடகங்களிலே அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இராமாயணம், கந்த லீலா, கிருஷ்ணலீலா முதலிய புராண நாடகங்களையும் அவர் பார்க்கத் தவறியதில்லை. நாடகத்துறையிலே அறிஞர் அண்ணா அவர்களுக்கிருந்த ஆர்வத்தையும், சுவைணுர்வையும் கண்டு நாங்கள் வியப்படைந்தோம். அதுபற்றி அவரோடு அடிக்கடி வாதிப்பது உண்டு. பொதுவாக அறிஞர் அண்ணா அவர்களை நாடகாசிரியராகவும், நடிகராகவும் நாம் காண்பதற்குரிய ஆர்வத்தைத் தூண்டியதே எங்கள் நாடகக் குழுதான் என்பதை நாம் பெருமையோடு சொல்கி கொளுவேன்.

அந்த நாளில் எங்கள் குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்கு அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய விமரிசனம் ஒன்றை நான் பொனேபோல் போற்றி வைத்திருந்தேன். சென்ற ஆண்டு சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டபோது அந்த நீண்ட விமரிசனத்தையும் வெளியிட்டிருந்தேன். அதைப்படித்து வியப்படைந்த சில நண்பர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். 27 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு திறமையாக நாடகத்திற்கு விமரிசனம் எழுதும் ஆற்றல் வாய்ந்த ஒருவர் இருந்தார் என்பதை இந்த விமரிசன் இல்லாவிட்டால் எங்க்ளால் நம்பியிருக்கவே முடியாது, என ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வளவு அழகாக, சின்னங்சிறு வாக்கியங்களால் அமைந்துள்ள ஒரு சிறந்த நாடக விமரிசனம் அது. நான் அறிந்த பத்திரிகையிலே விமரிசனம் வந்ததும், நாடக விமரிசனம் என்று நான் முதன் முதலாகப் படித்தும் அந்த குமாஸ்தாவின் பெண் விமரிசனம்தான்! குமாஸ்தாவின் பெண் நாடகம் அண்ணா அவர்களை மிகவும் கவர்ந்தது. தாமும் நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. நாடகங்களின் மூலம் மகத்தான சாதனைகளைச் செய்யலாமென்ற நம்பிக்கையும் உருவாக்கியது.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:06 am

ஈரோடு முடிந்ததும் நாங்கள் வெளியூருக்கப் பயணமானோம். வழக்கம்போல் பெரியார் அவர்களைக் கண்டு விடைபெற்றோம். அப்போது அண்ணா அவர்களும் எங்களோடிருந்தார். மாதக் கணக்கில் நெருங்கிப் பழகியதால் அண்ணாவின் கண்கள் கலங்கின. பெரியார் அவர்கள் சிரித்துக்கொண்டே,

என்ன, அண்ணாதுரைக்கும் நாடகப் பைத்தியத்தை உண்டாக்கிவிட்டீர்களே! அவரும் உங்களோடு வந்துவிடுவார் போலிருக்கிறதே! என்றார். ஆம்; உண்மை; நிலைமை அப்படித்தான் இருந்தது. அண்ணா அவர்கள் ஈதோடு ரயில் நிலையத்தில் எங்களை அழியனுப்ப வந்திருந்ததோது கலங்கிய கண்களோடுதான் நாங்கள் விடைபெற்றோம். பற்றும், பாசமும் விவரித்துச் சொல்லமுடியாத அளபுக்கு எங்களிடையே வளர்ந்திருந்தன.

அதன் பிறகு எங்களிடையே இருந்த நட்பைக் கடிதங்கள் மூலம் பரிமாறிக்கொண்டடோம்.

1934-ல் நாங்கள் ஈரோட்டில் நடித்துக் கொண்டிருந்தபோது அண்ணா அவர்களின் பிரசித்தி பெற்ற சந்திரோதயம் என்னும் முதல் நாடகம் எங்கள் மேடையில் நடிக்கப் பெற்றது. அறிஞர் அண்ணா அவர்கள அந்நாடகத்தின் ஆசிரியராக மட்டுமல்லாமல் முக்கிய நடிகராகவும் காட்சி அளித்தார். எங்கள் நடிகருக்கெல்லாம் ஒரே குதூகலம். அண்ணா அன்ற பிரமாதமாக நடித்தார். பொஹரியார் அவர்கள் தலைமைதாங்கிப் பாராட்டியபோது, நானும் சில வார்த்தைகள் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.

இப்படியே தொடர்ந்தது சில நாடகங்களில் நடித்துவிட்டால் பரம்பரை நடிகர்களான நாங்களேல்லாம் இந்தத் தொழிலை விட்டுவிடும்படியாக இருக்கும் பொல் தோன்றுகிறது என்று கூறினேன். அவ்வளவு அற்புதமாக நடித்தார் அண்ணா.

ஒரு கட்டம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சந்திரோதயத்தில் அண்ணா ஜமீன்தாராக வருகிறார். ஜமீன்தாரிசத்தின் ஆணவம், சோம்பேறித்தனம் முழுவதையும் அப்படியே அப்பட்டமாகக் காட்டினார். உட்கார்ந்த நிலையிலேயே சாய்ந்துகொண்டு எதிரே நின்ற வேலையாளிடம் என் காலைத் தூக்கி மேலேவை என்று சொல்லி காலைத் தூக்குவதற்குக் கூட பணமூட்டைகளுக்கு பணியாட்கள் வேண்டுமென்ற உண்மையை அழகாக நடித்துக் காட்டினார்.

சந்திரோதயம் நாடகம் முடிந்த மறுனாள் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் கூறினேன்.
சந்திரோதயம் போன்ற நாடகங்களை நாங்கள் நடிக்க இயலாது, எங்களைப் போன்றவர்கள் நடிக்க முடியாத சில கருத்துக்கள் இந நாடகத்தில் இருக்கின்றன. பொதுவான சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களின் அடிப்படையில் ஒரு நாடகம் எழுதிக் கொடுங்கள்; நடிக்கிறோம். என்று கூறினேன். ஆண்ணா எழுதுகிறேன் என்றார். ஆனால் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில் நடிப்பிசைப்புலவர் நண்பர் கே.ஆர்.இராமசாமிக்குக் கிடைத்தது.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கைது செய்யப்பெற்று வழக்கு நடந்து கொண்டிருந்தகாலம், நாங்கள் திருச்சிராப்பிள்ளியில் நடித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் தஞ்சையில் நண்பர் கே.ஆர்.ஆர். அவர்கள் கிருஷ்ணன் நாடகசபை என்னும் பெரால் ஒரு குழுதொடங்குவதாகத் தகவல் கிடைத்தது. அரிஞர் அண்ணா அவர்களின் ஓர் இரவு என்னும் புதிய நாடகம் அரங்கேறுவதாக அறிந்தபோது பெரிதும் மகிழ்ந்தோம். ஆர்வத்தோடு தஞ்சை சென்று நாடகத்தையும் பார்த்து வந்தோம். அதைத் தொடர்ந்து அண்ணாவின் வேலைக்காரி நாடகமும் அரங்கேறியது. பொதுவாக அந்த ஆண்டினை நாடக மறுமலர்ச்சி ஆண்டு எனக் குறிப்பிடுவது முற்றிலும் பொருந்தும் திருச்சியில் எங்கள் அந்தமான் கைதி, முள்ளில் ரோஜா நாடகங்களும் தஞ்சையில் நண்பர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் ஓர் இரவு, வேலைக்காரி நாடகங்களும் நாடகசபையின் கவியின் கனவு, விதி ஆகிய நாடகங்களும், சென்னையில் என்.எஸ்.கே. நாடக சபையின் நாம் இருவர் நாடகமும் அந்த ஆண்டிலேதான் நடைபெற்றன.

ஓர் இரவு, வேலைக்காரி ஆகிய இரு நாடகங்களிலும் அறிஞர் அண்ணா அவர்கள் கையாண்டுள்ள உரைநடை புதுமையானது, எழுச்சிதரக் கூடியது உணர்ச்சி நிறைந்தது, மற்றவர்கள் விரும்பிப் பின்பற்றக் கூடியது. அறிஞர் அண்ணா அவர்களின் அந்த அற்புதமான உரை நடையினைப் பின்பற்றி இன்று ஒரு எழுத்தாளர் பரம்பரையே தோன்றியிருக்கிறது என்று சொன்னால் அது முற்றிலும் உண்மை. . . காலஞ்சென்ற கல்கி திரு.ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந நாடகங்களுக்கு எழுதிய விமரிசனத்தில் அறிஞர் அண்ணா அவர்களை தமிழ்நாட்டின் பெர்னாட் ஷா என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. 1946-ல் திருச்சி வானொலியில் நாடக வசனங்களைப் பற்றிப் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அறிஞர் அணணா அவர்களின் நாடக உரை நடைச் சிறப்பினைப் பற்றி நான் போற்றிப் பாராட்டினேன்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:07 am

அறிஞர் அண்ணா அவர்களின் சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம் ஆகிய இருநாடகங்களையும் 1948-ல் தான் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சந்திரமோகன் நாடகத்தில் அவர் கங்கு பட்டராக வந்து ஆசனத்தில் அமர்ந்துகொண்டு மன்னனோடு வாதிடும் கட்டம் மறக்க முடியாத ஒன்று. அந்தக் கட்டத்தில் அண்ணா அவர்களின் உள்ளத்திலே தோற்றுவித்தன என்று சொல்லவேண்டும்.

நீதிதேவன் மயக்கம் நாடகத்தில் அண்ணா இராவணனாகத் தோன்றி குற்றவாளிக் கூட்டிலே நின்றுகொண்டு வாதிடும் கட்டம் மிக அற்புதமானது. நாடகத்தின் பயனை நன்கு உணர்ந்தவர்; நாடகத்துறைக்கு ஒரு பெருமையைத் தேடித் தந்தவர்; ஒரு மிகச்சிறந்த நடிகர் என்ற முறையிலே அறிஞர் அண்ணா அவர்களைக் கலைஞர்காளாகிய நாங்கள் என்றும் போற்றக் கடமைப்பட்டிருக்கிறோம்.

1940-ல் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியன் குறிப்புக்கள் என்னும் முதல் நாவலுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அதில் அன்றே நான் குறிப்பிட்டேன்; தோழர அண்ணாதுரை அவர்கள் வருங்காலத் தமிழர் தலைவர் என்று, அன்ற அறிஞர் அண்ணா அவர்களுக்கு அறிஞர் என்ற சிறப்புப் பட்டம் இல்லை. தொடர்ந்து நாடகங்கள் எழுதிய பிறகே அந்தப் பட்டம் பொது மக்களால் அவருக்குத் தரப்பெற்றது.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் தோழர் அண்ணாதுரையாக எங்கள் உள்ளத்தை கவர்ந்தவர் அறிஞர் அண்ணாவாக, தமிழர் தலைவராக மலர்ந்து இன்று மூன்றரைக் கோடி தமிழ் மக்களின் இதயங்களில் இடம் பிடித்து, இந்திய துணைக் கண்டத்தின் ஏனையப் பகுதியினரையும் ஈர்த்து, பிற நாட்டினரும் கண்டு பெருமை பே.சும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருப்பதைப் பார்க்கும்போது எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அறுபதாவது ஆண்டினைத் தொடங்கும் நாடகக் கலைச்செல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் உடல் வலிமையோடும், உளத்திண்மையோடும் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழுலகை வாழ்விக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
(முத்தமிழ் கலா வித்வ ரத்ன டி.கே.சண்முகம்)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:08 am

1933 ஆம் ஆண்டு ஆனர்ஸ் தேர்வு எழுதினார் அவருடைய உற்ற நண்பருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் தேர்வு எழுத முடியவில்லை. அந்த உற்ற நண்பருக்காக தொடர்ந்து தேர்வு எழுதாமல் அண்ணா விலகிக்கொண்டார். அவர் எழுதி முடித்த இரண்டு தேர்வு தாள்களும் மிகச் சிறந்தது என்று பல்கலைக் கழகத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1935 ஆம் ஆண்டு அண்ணா ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தால். அண்ணா அவர்கள் சிறிது காலம் அன்றய ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களின் ஒருவராய் இருந்த பொப்பிலிராஜாவிடம் அவருடைய உதவியாளராக இருந்து, அவருடைய ஆங்கிலப் பேச்சை மொழிபெயர்த்து அவருடன் அன்றய சென்னை ராஜதானியில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார்.

1936 ஆம் ஆண்டு குமாரராசா முத்தையா செட்டியார் அவர்கள் அண்ணாவை தன்னிடம் உதவியாளராக வந்துவிடுங்கள் மாதம் ரூ. 120./ தருகிறேன் என வேண்டுகோள் விடுக்க அண்ணா அதற்கு நன்றி கூறி மறுத்துவிட்டார்.

1937 ஆம் ஆண்டு அண்ணா குடியரசில் துணை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த போது, ஈரோடு வந்த ஜி.டி.நாயுடு, அண்ணாவை என்னிடம் உதவியாளராக வந்துவிடுங்கள் மாதம் ரூ. 250 -ம், காரும் பங்களாவும் தருகிறேன் என்றார். அதையும் அண்ணா மறுத்துவிட்டார்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சி நாடெங்கும் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. அப்போது நம் தோழரகள் இந்தக் கிளர்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தை தந்தை பெரியாரிடம் தெரிவித்தார். ஆனால் தந்தை பெரியார் அதை மறுத்துவிட்டார்.

1942 ஆம் ஆண்டில் இந்தியாவில் வைஸ்ராயாக இருந்து ஆங்கிலேயர் அண்ணாவுக்கு அழைப்பு விடுத்தார். தனக்கும் தன் அரசாங்கத்திற்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்ய - பிரச்சார செயலாளராக நியமிக்கிறேன் - நல்ல சம்பளமும் தருகிறேன் என்று. அண்ணா அதற்கு நன்றி கூறி, அந்த அழைப்பை ஏற்க மறுத்தார்.

1944 ஆம் ஆண்டு பர்மாவில் அன்றய பிரதமர் யுநு அவருக்கு உதவியாளராகப் பணியாற்ற மாதம் ரூ. 2000 தருகிறேன், என்று அண்ணாவுக்கு அழைப்பு விடுத்தார். அண்ணா அதற்கும் நன்றி கூறிவிட்டு, அந்த பதவியை ஏற்க மறுத்தார்.


1937 ஆம் ஆண்டில், நான் பட்டுக்கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பில் பயின்றுகொண்டிருந்தபோதுதான், அறிஞர் அண்ணாவின் அருமை பெருமைகளை, முதன் முதலாகச் செவிவழி கேட்டு மகிழும் சீரிய வாய்ப்பினைப் பெற்றேன். 1937-ம் ஆண்டு, 1921 முதல் 1936 வரை சென்னை மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நீதிக்கட்சியானது, தேர்தல் களத்திலே படுதோல்வியுற, காங்கிரசுக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நேரம். தேர்தல் களத்தில் தோல்வியைத் தழுவிய நீதிக்கட்சியின் தலைவர்கள் பலர், கட்சியைவிட்டு உதுங்கிப் போய்விட்டனர். அந்த நேரத்தில், பகுத்தறிவுத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், வீழ்ந்து பட்டுக்கிடந்த நீதிக் கட்சிக்கு எழுச்சியூட்டவும், அதன் கொள்கைகளையும், போட்பாடுகளையும் சீர்படுத்திச் செம்மைப்படுத்திச் செல்வாக்குப் பெறச் செய்யவும் முழு மூச்சோடு பாடுபடத் தொடங்கினார்கள். அதன் முதற்கட்டமாகச் சிதறுண்டு கிடந்த தொண்டர்களையெல்லாம் ஒன்று திரட்டி, ஓரணியில் கொண்டுவர, பெரியார் அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த துறையூரில், சிறப்பு மாநாடு ஒன்றினைக் கூட்டினார்கள். அந்து மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, அறிஞர் அண்ணாவுக்குப் பெரியார் அழைப்பு விடுத்தார்கள். பெரியாரின் அன்பு அழைப்பினை ஏற்று, அறிஞர் அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு, சீரிய சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள். அத வரையில் அண்ணா அவர்க, சென்னையில் உள்ள இரு சிலருக்கு மட்டும் அறிமுகமானவராக விளங்கினார்கள். துறையூர் மாநாட்டிற்குப் பிறகுதான் அங்கு ஆற்றிய அரிய அழகான சொற்பொழிவு, அவரைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த நீதிக்கட்சியைச் சார்ந்த தலைவர்களுக்கும் - தொண்டர்களுக்கும் நன்கு அறிமுகப்படுத்திற்று என்று சொல்ல வேண்டும்.

பட்டுக்கோட்டையிலிருந்து துறையூர் மாநாட்டிற்குச் சென்று வந்த சிலர், அண்ணாவைப் பற்றியும், அவரது சொற்பொழிவின் அருமையைப் பற்றியும் வியந்து வியந்து பாராட்டிப் புகழக் கேட்டேன். மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவர்கள், மாநாட்டில் ஆற்றிய உரைகளில், சென்னையிலிருந்து வந்த தோழர் அண்ணாத்துரை என்ற இளைஞர் ஆற்றிய உரைதான் தலைசிறந்ததாக அமைந்திருந்தது- அவருக்கு வயது இருபத்தெட்டுதான் இருக்கும். எம்.ஏ.பட்டம் பெற்ற பட்டதாரியாம் அவர். குள்ளமான உருவம்; ஒல்லியான உடல், எளிமையான தோற்றம்; விரிந்த முகம், பரந்த நெற்றி; ஒளிர்ந்த கண்கள்; எடுப்பான மூக்கு; நறுக்கு மீசை; வலது பக்கம் வாகு எடுத்த தலைமுடி; ஓயாமல் வெற்றிலைப் பாக்கைக் குதப்பிக் கொண்டிருக்கும் வாய்; அவ்வப்போது சிட்டிகைப் பொடி போடும் பழக்கம்; அவர் பேச எழுந்து வந்தபோது யாரோ? எவரோ? என்று நினைத்தோம். தோற்றத்தில் கவர்ச்சியில்லை. ஆனால், அவர் பேசத் தொடங்கியவுடன், அவரிடம் காணப்பட்ட அவரது எடுப்பான குரல்; அடுக்குச் சொற்கள் அழகிய தமிழ் எதுகையும் மோனையும், உவமையும் உருவகமும், அணி அழகும் பொருளாழமும் கொண்ட சொல்லோட்டம்; ஓசை நயம்; அழுத்தமான கருத்துக்கள்; ஆணித்தரமான வாதங்கள்; உறுதியான கொள்கைகள்; உயர்ந்த எண்ணங்கள்; கேலியும் கிண்டலும் கலந்த கூற்றுக்கள்; நகைச்சுவை ததும்பும் எடுத்துக்காட்டுகள்; வீரம்-வியப்பு-தெளிவு-திட்பம்-நயம்பலன்-கலைச் சிறப்பு-கற்பனை வளம் போன்ற சுவைகள்; சுய மரியாதை உணர்வின் ஆக்கம்; பகுதிதறிவுக் கொள்கையின் இன்றியமையாச் சிறப்பு; நீதிக்கட்சிக் கொள்கையின் நியாயம்; அதன் போக்கிலே காணப்படும் நேர்மை; அது நிலை நாட்ட விரும்பும் உண்மை; பெரியாரின் தலைமையின் கீழ் ஒன்று திரள வேண்டிய பெரும்படையின் இன்றியமையாமை; பெரும் படை போராட வேண்டிய களங்களின் வகைகள்; பெற வேண்டிய வெற்றிகளின் தன்மைகள் ஆகியவை எங்களை அப்படி இப்படி நகரவொட்டாதபடியும், அங்கும் இங்கும் பார்க்க முடியாதபடியும், கண்-காது-கருத்து ஒன்றி, மெய் மறந்து, மனமகிழ்ந்து, மகிழ்ச்சி ஆரவாரக்கடலில் மூழ்கி வீட்டோம் என்றெல்லாம் அவர்கள் பல படப் பாராட்டிச் சொல்லியவைகள், என் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அவர்கள் அண்ணாவின் பேச்சு வன்மையைப் பற்றிப் பல நாட்கள் வரை வியந்து வியந்து சொல்லிக்கொண்டே இருந்தனர்; அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டெ இருந்தனர்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:09 am

முதன் முதலில் கண்ணாரக் கண்டது:

அப்படிப்பட்ட அண்ணாவை, எப்படியாவது நேரில் காண வேண்டும், அவரது அழகுப் பேச்சைக் கேட்டு மகிழ வேண்டும் என்ற வேணவா, என் உள்ளத்தை ஆட்கொண்டது. அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துத் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தேன்.

துறையூர் மாநாட்டிற்குப் பின்னர், சில திங்கள் கழித்துத், தஞ்சை நகரை அடுத்த பள்ளி அக்ரகாரத்தில் சுயமரியாதை மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அந்த மாநாட்டிற்குத் தோழர சி.என். அண்ணாதுரை தலைமை தாங்குவார் என்றும், ஈ.வெ.ரா.பெரியார், பட்டுக்கோட்டை கே.வி.அழகர்சாமி, பூவாளூர் பொன்னம்பலனார், திருச்சி. கி.ஆ.பெ.விசுவநாதம், மூவலுர் இராமமிர்தத்தம்மையார், கைவல்யசாமியார், நாகை மணி, சேலம் சித்தையன், நாகை காளியப்பன், எஸ்.வி.லிங்கம், மணவை ரெ. திருமலைச்சாமி, டபுள்யூ.பி.ஏ.சௌந்தர பாண்டியன், விவி.இராமசாமி, கே.கே.நீலமேகம் போன்ற பெரியவர்களெல்லோரும் மாநாட்டில் கலந்து கெள்வார்கள் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அப்போழுது எனக்க வயது பதினேழு இருக்கும். அண்ணாவைக் காணவும், அவரது அருமைப் பேச்சைக் கேட்டு மகிழவும் மிக்க ஆவரோடு அந்த மாநாட்டிற்குப் பட்டுக்கோட்டையிலிருந்து இயக்கத் தோழரகளின் துணையோடு சென்றேன்.

1937-ல் நடைபெற்ற அந்த மாநாட்டில்தான் அறிஞர் அண்ணா அவர்களைப் பந்தலின் ஒரு பக்கத்தில், தொலைவில் நின்று, கண்ணாரக் கண்டு களித்தேன். அவரது தலைமைச் சொற்பொழிவைச் செவியாரக் கேட்டு மகிழ்ந்தேன். சிந்தையார அதனைப் பருகி உளம் குளிர்ந்தேன்.

பட்டுக்கோட்டை அழகர்சாமியின் பேச்சு:

அந்த மாநாட்டில், பட்டுக்கோட் அஞ்சாநெஞ்சன் அழகர்சாமி அவர்கள் உரையாற்றும்கோது, பத்தாயிரம் ப.ஜீவானந்தங்கள் நமது இயக்கத்தை விட்டுப் போனாலும், முப்பதினாயிரம் முத்துச்சாமி வல்லத்தரசுகள் நம்மைவிட்டு விலகினாலும், பல்லாயிரம் நீலாவதி இராமசுப்பிரமணியன்கள் நீங்கினாலும், நமது இயக்கத்தைக் கட்டிக் காத்து வளர்க்க, அறிவாற்றல் மிக்க பெரும் படிப்பு படித்த ஈடும் எடுப்பும் அற்ற ஒரு பெரும் பேச்சாளரும், சிந்தனையாளரும், செயல் வீரருமாகிய அண்ணாதுரை நமக்குக் கிடைத்திருக்கிறார். அவர் ஒருவரே நமக்குப் போதும். எதிரிகள் நம்மீது ஏசல் ஈட்டிகளை வீசுகிறார்கள்; அந்த ஈடடிகள் எட்டின மட்டுந்தான் பாயும். பணபலத்தை வைத்து நம்மை மிரட்டுகிறார்கள்;அவர்களின் பணம் பாதாளம் வரையில்தான் செல்லும். எங்கள் அண்ணாத்துரையின் அறிவுச்சுடர்; எதிரிகளின் அண்டபிண்ட பகிரண்ட சராசரங்களையெல்லம் துளைத்துச் சென்று, அவற்றையெல்லம் சுட்டெரித்து, படுசாம்பலாக்கிவிடும் என்பது திண்ணம். இனி, எங்களுடைய வேலையெல்லாம் வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். ஓடுகின்ற குருதி ஓட்டத்தின் ஊடே ஊடே மூழ்கி எழுபவன் சுயமரியாதைத் தோழன். எந்த புடலங்காயும் எங்களை எதிர்காலத்தில் எதுவும் செய்துவிடமுடியாது. எதிரிகளின் எதிர்ப்பு இனி டண்டனார் தான் என்று குறிப்பிட்ட கருததுக்கள், என் உள்ளத்தில் இன்னமும ஆழப் பதிந்திருக்கின்றன.

திருவள்ளுவர் இளைஞர்த் தமிழ்க் கழகம்:

1938-ஆம் ஆண்டில், இத்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கம் தலைதூக்கிய காலத்தில், நானும், எனது இளவர் இரா.செழியனும், பிற பள்ளி மாணவர்களும் சேர்ந்து, திருவள்ளுவர் இளைஞர்த் தமிழ்க் கழகம் தொடங்கி தமிழ் விழக்கள் நடத்தி வந்தோம். விளக்க அறிக்கைகள் பல வெளியிட்டோம். அந்த நேரத்தில், அறிஞர் அண்ணாவை அழைத்துப் பொதுக்கூட்டம் கூட்ட, மாணவர்களாகிய நாங்கள் பெரிதும் முயன்றோம். எங்கள் முயற்சி அப்போது வெற்றி பெறவில்லை. எங்கள் அழைப்பினை ஏற்று, வருகை தர வாய்ப்பு கிட்டவில்லை என்று விடை எழுதிவிட்டார்கள்.

அண்ணாவின் கடற்கரைச் சொற்பொழிவு:

1938-ல் சென்னை கடற்கரையில், பேராசிரியர் மறைமலையடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புக்கூட்டத்தில், பெரியாரும், அறிஞர் அண்ணாவும் சொற்பொழிவாற்றக் கேட்டேன். அதுதான் எனக்கு அண்ணாவின் பேச்சை, இரண்டாவது தடவையாகக் கேட்கும் வாய்ப்பாகும். தொலைவில் இருந்துதான் கேட்டு மகிழ்ந்தேன்.

திருவாரூர் மாநாட்டில் அண்ணாவின் பேச்சு:

1940-ம் ஆண்டில் திருவாரூரில் பெரியார் தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், தமிழ்நாடு ஏன் தமிழர்க்கு ஆக வேண்டும் என்னும் பொருள்பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் ஆணித்தரமாக காரணகாரிய விளக்கங்கள் அணித்து ஆற்றிய அருமையான சொற்பொழிவைக் கேட்டேன். அப்பொழுது நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்து, மாநாட்டில், பார்வையாளனாகச் சென்று கலந்து கொண்டென். அப்பொழுதும் அண்ணாவை நெருங்கிடும் வாய்ப்பினை நான் பெற முடியவில்லை.

சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் அண்ணாவைக் காணல்:

1941-ல், சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பெரியார், அண்ணா, சி.பி.சிற்றரசு, மூவரும் வந்தனர், அப்பொலுது மேடையின் முன்புரம் முதல்வரிசையில் உட்கார்ந்து அண்ணாவின் வாதங்கள் - எதிர்வாதங்கள் நிறைந்த ஆராய்ச்சி மிக்க அரசியல் சொற்பொழிவைக் கேட்டேன். கூட்டம் முடிந்தவுடன், அவருடன் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டு, அவர் அருகில் சென்று கையொப்ப ஏட்டை நீட்டிக் கையொப்பம் போட்டுத் தரவேண்டும் என்ற கேட்டுக் கொண்டென். அண்ணா அவர்கள் ஏட்டில் கையொப்பமிட்டார்கள். அதுவே எனக்கு பெருமதிப்பை ஏற்படுத்தித் தந்துவிட்டதாக எனக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன். ஏதேனும், பேச்சுக் கொடுக்கக் கருதி, நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். நலந்தான் என்றார். அதற்குமேல் கேட்க எனக்கு எதுவும் தேன்றவில்லை. அவரைச் சுற்றி அலை மோதிய கூட்டம் என்னை ஒரு பக்கம் ஒதுக்கித் தள்ளிவிட்டது. அறிஞர் அண்ணாவிடம் எப்படியோ பேச்சுக் கொடுத்துவிட்டோம் என்ற பெருமிதவுணர்வோடு அண்ணாமலை நகர் தங்கும் விடுதிக்குச் சென்றேன்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:10 am

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா:

1943-ஆம் ஆண்டில், பேராசிரியர் எம்.இரத்தினசாமி அவர்கள் துணைவேந்தராக இருந்த காலத்தில், அறிஞர் அண்ணா அவர்களைக் கொண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா மண்டபத்தில், சொற்பொழிவுகள் ஆற்ற வைக்க என்னைப் போன்ற மாணவர்க்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. எங்களது அழைப்பினை ஏற்று, அண்ணா அவர்கள், அவரது உற்ற நண்பர்களான காஞ்சி இராசகோபால், புட்டாசாமி, பொன்னப்பன் ஆகியவர்களோடு வந்தார். ஆற்றோரம் என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய மன்றத்திலும், கூழநு குருசுலு டீகு கூழநு குடுஹஆநு என்ற தலைப்பில், பல்கலைக்கழகப் பேரவையிலும் இரண்டு சொற்பொழிவுகள், முறையே தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நிகழ்த்தினார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் எங்களைப்போன்ற மாணவர்களின் ஆர்வத்தையும் அக்கறையையும், எழுச்சியையும், உணர்ச்சியையும் கண்டு, எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கிக், கூடுதலாக இரண்டு நாட்கள் விருந்தினர் விடுதியிலேயே உரையாடி, அளவளாவி, விளக்கங்கள் கேட்டுத் தெளிவு பெற்று, மகிழ்ச்சியுறுவதற்கான வாய்ப்பு, முதன்முதலாக எனக்கும், என்னையொத்த பிற மாணவர்களுக்கும் ஏற்பட்டது. அந்தத் தொடர்பும் கலந்துரையாடலும் என் மனதைவிட்டு என்றென்றும் நீங்காமல் நிலை பெற்ற நிற்கும் நிகழ்ச்சிகளாகும்.

குடந்தை மாணவர் மாநாடு

1944-ம் ஆண்டு சனவரித் திங்களில், குடந்தையில் மாணவர் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில், பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நானும் இளவல் இரா.செழியன், நண்பர்கள் க.அன்பழகன், இ.ரெ.இளம்வழுதி, கே.ஏ.மதியழகன், தவமணியரசன் போன்றவர்களும் மாணவர்கள் என்ற முறையில் கலந்துகொண்டோம். நான்கு வேளைகளில் நான்கு பகுதிகளாக நடைபெற்ற அந்த மாநாட்டில், முதல் மூன்று பகுதிகளுக்குப் பேராசிரியர் முத்தையா, தாவுத்ஷா, கான்பகதூர் கலிபுல்லாசாகிப் ஆகியோர் முறையே தலைமை தாங்க, நான் நான்காம் பகுதிக்குத் தலைமை தாங்கும்பேறு பெற்றேன். அப்பொழுது, நான் நீண்ட கருந்தாடிக் கோலத்தோடு காட்சியளித்துவந்தேன். அந்த மாநாட்டில்தான் நானும், மற்ற மாணவர்களும் பெரியாராலும், அண்ணாவாலும் முழுமையாக ஆதரிக்கப்பட்டோம். இயக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டோம்; இயக்கத்தொழர்களால் அரவணைக்கப்பட்டோம்.

ஈரோடு இளைஞர் மாநாடு

1944 மே திங்களில், பெரியார் அவர்களால், ஈரோட்டில் ஏற்பாடு செய்யப்பெற்ற இளைஞர் மாநாட்டிற்கு, அறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கவும், நான் மாநாட்டைத் துவக்கி வைக்கவும் அழைக்கப் பட்டொம். அந்த மாநாட்டில்தான், மாவட்டவாரியாகக் கொள்கைப் பரப்புச் செய்ய, மாணவர் அணிகள் அமைக்கப்பட்டு, மாவட்டந்தோறம் அனுப்பி வைக்கப்பட்டன.

மாநாடுகளில் தலைமை தாங்குதல்:

1944 ஆம் ஆண்டில், பெரியாரின் விருப்பத்திற்கு இணங்க கோபிச்செட்டிப்பாளையத்திலும், இலால்குடியிலும் கூட்டப்பட்ட இளைஞர் மாநாடுகளுக்கு, அறிஞர் அண்ணா அவர்களின் அன்பு ஆணையை ஏற்று, நான் தலைமை தாங்கினேன்.

இராசிபுரம் நீதிக்கட்சி மாநாடு:

1944-ல், சேலம் மாவட்டம் இராசிபுரத்தில் பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், அறிஞர் அண்ணா அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவரோடு சென்று பங்கு கொண்டு உரையாற்றினேன்.

திராவிடக்கழகம் - சேலம் மாநாடு

1944 ஆகஸ்டு திங்களில், சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில்தான், கட்சியின் பெயரைத் திராவிடக் கழகம் என்று மாற்றி அமைக்கும் புரட்சிகரமான தீர்மானத்தைக் கொண்டு வந்து, அறிஞர் அண்ணா அதனை நிறைவேற்றினார்கள். அப்பொழுது நீதிக்கட்சியிலிருந்த பெரும் பணக்காரர்களும் சர் திவான்பகதூர் - இராவ்பகதூர் - கான்பகதூர் - இராவ்சாகிப் போன்ற மரியாதைப் பட்டத்திற்குரியவர்களும், வெள்ளையரசின் பதவியாளர்களும் பெரியார் தலைமைக்கும், கட்சியின் பெயர் மாற்றத்திற்கும் பெரும் எதிர்ப்புக் காட்டி வந்தார்கள். அவர்களின் முயற்சிகளையெல்லாம் முறியடிக்கும் பணிகளில், தீவிரமாக ஈடுபட்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள், மாநாட்டிற்குப் பதினைந்து நாட்களக்கு முன்பிருந்தே, என்னைத் தம்மோடு உடனிருக்கும்படி பணித்தார்கள். மாணவர் பட்டாளத்தோடும், இளைஞர் பட்டாளத்தோடும் தொடர்புகொண்டு அவர்களையெல்லாம் பெருவாரியான நிலையில், அண்ணாவின் பக்கத்திலேயே நான் இருந்ததால், அவருடைய அறிவுரைகளைக் கேட்டுச் செய்ய வேண்டிய பணிகளை, எளிதாகச் செய்து முடிக்க முடிந்தது. அண்ணாவும் நானும் ஈரோடு சென்று, பெரியாரை அழைத்துக் கொண்டு சேலம் போய்ச் சேர்ந்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடி, நாட்டின் நாலாப் பக்கங்களிலிருந்தும், தொண்டர்களும், இளைஞர்களும், மாணவர்களும் ஏராளமாக வந்து மாநாட்டுப் பந்தலில் குழுமினார்கள். பெரியார் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்கள். அறிஞர் அண்ணா பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்து முன்மொழிந்தார்கள். நானும், நண்பர்கள் சிலரும் வழிமொழிந்து உரையாற்றினோம். பெருத்த கையொலிக்கு இடையே, பேராரவாரத்திற்கிடையே தீர்மானம் நிறைவேறிற்று எதிர்ப்பாக இருந்த சிலர், ஏதும் சொல்லாமல், மாநாட்டுப் பந்தலைவிட்டு நழுவி வெளியேறிவிட்டார்கள். திராவிட இயக்கத்தில் இது மிக முக்கியமானதொரு கட்டமாகும்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:13 am

திராவிடக் கழகத் திருச்சி மாநாடு

1945-ல் திருச்சியில் பெரியார் தலைமையில் திராவிடக் கழக மாநாடு நடைபெற்றது. அப்போழுது அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடக் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஆவார். அண்ணாவும், நானும் பத்து நாட்களுக்கு முன்பே சென்று மாநாட்டுப் பணிகளைக் கண்காணித்தோம். ஒரு சத்திரத்தை ஏற்பாடு செய்து கொண்டு, அங்குத் தங்கியிருந்தோம். அறிஞர் அண்ணா அவர்கள் பணிகளைச் சொல்வார். அவற்றை ஓடியாடிச் செய்து முடிக்கும் பொறுப்பினை நான் மேற்கொண்டேன். அந்த மாநாட்டில்தான், திராவிடக் கழகத்திற்கு என்று கருஞ்சட்டைப் படை அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரைக் கருஞ்சட்டை மாநாடு

1946-ல் மதுரையில் பெரியார் அவர்கள் தலைமையில் கருஞ்சட்டைப் படையினர் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் அறிஞர் அண்ணா சிறப்புரை நிகழ்த்தினார். இரண்டாவது நாள் பெரியாருக்குத் துணையாக என்னை இருக்கும்படி பணித்துவிட்டு, அண்ணா அவர்கள், அவசர வேலையொன்றின் காரணமாகக் காஞ்சீபுரம் சென்றுவிட்டார்கள். இரண்டாம் நாளில்தான், எதிர்க்கட்சியினரால், வைகையாற்று மணலில் நடைபெற்ற கருஞ்சட்டைப்படை மாநாடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மதுரை எஸ்.முத்துவும், தொண்டர்கள் பலரும் காலையிலேயே கைது செய்யப்பட்டுவிட்டார்கள். நானும், சம்பத், திருவாரூர் தண்டவாளம், கே.வி.கே.சாமி போன்ற பல நண்பர்களும், கைகளிலே தடிகளை ஏந்திக்கொண்டு, பகல் 2 மணி வரையில் பந்தலைக் காத்து நின்றோம். எதிரிகளின் வலிவான தாக்குதல்களைச் சமாளிக்க முடியவில்லை. காவல்துறையினரின் பாதுகாப்பு அறவே இல்லை. அதிரிகள் பந்தலை இறுதியில் பகல் 2 மணிக்குக் கொளுத்திவிட்டார்கள். திராவிடக்கழகத் தொண்டர்கள் பலர் பெரும் தொல்லைகளுக்கும், துயரங்களுக்கும் ஆளானார்கள். பின்னர் ஆறு திங்கள்களுக்கு எந்தவிதப் பொது நிகழ்ச்சியும் திராவிடக் கழகத்தின் சார்பாக மதுரையில் நடைபெறவில்லை. எதிர்ப்புக்கிடையே எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்பட முடியவில்லை. பின்னர் மிக்கத் துணிவோடு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் நானும், பட்டுக்கோட்டை கே.வி.அழகர்சாமியும், மதுரை எஸ்.முத்துவும் கலந்து கொண்டு, கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

புரட்சிக் கவிஞருக்குப் பாராட்டும் பணமுடிப்பும்

1946-ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணா அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்திப் பணமுடிப்பு வழங்க முயற்சியெடுத்தார்கள். நான் அறிஞர் அண்ணா அவர்களுக்குத் துணையாக இருந்து, பணம் திரட்டும் பணியிலும், விழவிற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டேன். திரு.டி.என்.இராமன், திரு.சலகண்டபுரம் ப.கண்ணன் ஆகியோர் உதவியாக இருந்தனர். பாராட்டுவிழா, சென்னை பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் நடபெற்றது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் விழாவைக் காண வருகை தந்தனர். விழவிற்கு நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் தலைமை தாங்கினார். தமிழறிஞர்களும், கவிஞர்களும், அரசியல் பெருமக்களும் விழாவில் பெருவாரியினராகக் கலந்துகொண்டு பாராட்டுரைகள் வழங்கினர். அந்த விழாவில் றிப்புரை ஆற்றுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் என்னையும் பணித்தார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எந்த எந்தப் பொருள்கள் பற்றிப் புதுப்பாங்கோடும், புரட்சிகரமான போக்கோடும், புதுச் சிந்தனையோடும், புதுக் கருத்தோடும், அழகு-அருமை-பெருமை - புகழ் - வலிவு - வளம் - நலன் - நயம் சிறக்கப் பாடியுள்ளார் என்று பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் மூலம் விளக்கினேன். இறுதியில் அறிஞர் அண்ணா அவர்கள் சிறப்புரை ஆற்றும்போது, இருபதாம் நூற்றாண்டின் ஈடும் எடுப்பும் விழா எடுத்துள்ளோம். இது அவர் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆற்றியுள்ள தொண்டுக்காக எடுக்கப்படும் நன்றிக்கடன் காட்டும் விழாவாகும். இன்றைய தமிழ் இலக்கிய உலகில், புரட்சிக் கவிஞர் அவர்கள் முகிலைக் கிழித்து எழுந்து நிற்கும் ஒரு முழுமதி போல் காட்சியளிக்கிறார். நண்பர் ஜீவானந்தம் பேசும்போது பாரதிதாசன் தொழிலாளர்களைப் பற்றிப் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புரட்சிக் கவிஞர் எந்த எந்தத் துறைகளைப் பற்றியெல்லாம், எப்படியெப்படி எல்லாம், அழகாகவும் அருமையாகவும் பாடியிருக்கிறார் என்பதைத் தம்பி நெடுஞ்செழியன் அடுக்கடுக்காக இங்கே எடுத்து வைத்தார். நண்பர் ஜீவானந்தம் இனிமேலாவது அவற்றையெல்லாம் படித்துப் பார்ப்பது அவருக்கும் நலம் பயக்கும்; நாட்டிற்கும் நலம் பயக்கும்; என்று குறிப்பிட்டார்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:13 am

1947 ஆகஸ்டு 15

1947-ம் ஆண்டு, ஆகஸ்டு 15-ஆம் நாளாகிய இந்திய விடுதலை நாளைத், திராவிடக்கழகத் தலைவர் பெரியார் அவர்கள், துக்கநாளாக நாட்டினர் அனைவரும் கருத வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.

1947 ஆகஸ்டு 15-ம் நாளாகிய வெள்ளையர் ஆட்சி வெளியேற்றப்படும் அந்த நாள், இந்தியா முழு விடுதலை பெறும் அந்த நாள், மகிழ்ச்சிகரமான நாளே யொழிய, துக்ககரமான நாள் அல்ல என்பது என்னுடைய திட்டவட்டமான தெளிவான கருத்தாக இருந்தது. அந்த எண்ணத்தைப் பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர் பகுதிகளிலிருந்த கழகத் தோழரகளிடம் கலந்துரையாடல்கள் மூலம் தெரிவித்துவிட்டுச் சென்னை வந்தேன். அப்பொழுது நானும். இளவர் செழியனும் சென்னை செம்புதாஸ் தெரு, கார்னர் எஸ்டேட் மாளிகை, நான்காவது மாடி 30-ம் எண் அறையில் குடியுருந்தோம். அறிஞர் அண்ணா அப்பொழுதெல்லாம் சென்னைக்கு வந்தார், அந்த அறையில்தான் தங்குவார். நாட்கள் கணக்கில், வாரங்கள் கணக்கில் அவரோடு உரையாடி மகிழும் வாய்ப்பு அப்பொழுதெல்லாம் எனக்கும், செழியனுக்கும், ஏனைய நண்பர்களுக்கும் ஏற்பட்டது.

பெரியாரின் துக்கநாள் பற்றிய அறிக்கையைப் படித்த அறிஞர் அண்ணா அவர்கள் வேதனையோடும், வருத்தத்தோடும், வாட்டத்தோடும் என் அறைக்கு வந்தார். அந்த அறிக்கைப்பற்றி அண்ணா அவர்கள் எங்களோடு விரிவான முறையில் கலந்துரையாடல் நடத்தினார். 1947 ஆகஸ்டு 15-ம் நாள் இந்தியராகத்-திராவிடராகத் - தமிழராகப் பிறந்த எல்லோர்க்கம் மகிழ்ச்சிகரமான நாளேயாகும். அது எந்தவொரு வகையிலும் துக்க நாள் ஆகாது. வெள்ளையன் வெளியேறுவதில் நீதிக் கட்சியினராகிய - திராவிடக் கழகத்தினராகிய - சுயமரியாதைக்காரர்களாகிய நாமும் மகிழ்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்திருக்கும் கடைசி நாள் ஆகஸ்டு 15-ம் நாள்தான். இந்த வாய்ப்பைவிட்டால், நாம் வெள்ளையனுக்கு அடிமைகள் - வெள்ளையனின் அடிவருடிகள் என்ற பட்டங்கள் என்றென்றம் நிலைத்து விடும் என்று எனக்கு முன்பே அத்தகையதொரு முடிவுக்கு வந்திருந்ததனால், கருத்து ஒருமைப்பாட்டின் அடிப்படையில், என் வாதங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, நானும் செழியனும் மற்ற நண்பர்களும் பெரியார் அறிக்கைக்கு எதிர்ப்பு அறிக்கை உடனடியாக விட்டுத் தீரவேண்டும் என்று வற்புறுத்தியதையும் ஏற்றுக்கொண்டு, ஆகஸ்டு 15 மகிழ்ச்சிக்குரிய நாள்தான் என்பதைத் தெளிவுபடுத்துவதற்கான காரண காரிய விளக்கங்களைத் தந்து, நீண்டதொரு அறிக்கையைத் திராவிடநாடு இதழில் வெளியிட்டார். திராவிட இயக்க வரலாற்றில், அந்த அறிக்கையானது மிகமிக முக்கியமானதொரு இடத்தைப் பெற்றதாகம். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை எழுதப்பட்ட இடம், நானும் செழியனும் தங்கியிருந்த அந்தக் கார்னர் எஸ்டேட் 4-வது மாடி 30-ம் எண் அறையேயாகும்.

கருஞ்சட்டைப் படைக்குத் தடை

1948-ஆம் ஆண்டில், கறுப்புச் சட்டைப் படையைத் தடைசெய்து, அப்பொழுது சென்னை மாநில உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன் அவர்களால் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. 1945-க்குப் பிறகு கறுப்புச் சட்டை அணிவதைப் பொறுத்துப் பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் சிறிது கருத்து வேறுபாடு இருந்தது. பெரியார், திராவிடக்கழகத்திலுள்ள எல்லோரும் கறுப்புச் சட்டை அணியவேண்டும், எப்பொழுதும் அணியவேண்டும என்றார். அறிஞர் அண்ணா அவர்கள கறுப்புச் சட்டைப்படை வீரர்களாகத் தம்மைப் பதிவு செய்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுந்தான், கறுப்புச்சட்டை அணியவேண்டும்; அதுவும் படையின் சார்பாகப் பணியாற்றும்போதுதான் அணிந்துகொள்ளவேண்டும என்று கூறினார்கள். இந்தக் கருத்து வேறுபாடு காரணமாக, அறிஞர் அண்ணா அவர்கள் சிறிது காலம் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் அதிகமாகக் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருந்தார்கள்.

கறுப்புச் சட்டைப் படைமீது விதிக்கப்பட்ட தடை ஆணையை மீறி, அதனை உடைத்திடும் நோக்கத்தோடு, பெரியார் அவர்கள், சென்னை மெமோரியல் மண்டபத்தில், கறுப்புச்சட்டை மாநாட்டைத் திடீரென்று கூட்டினார்கள். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் கைது செய்யப்படலாம் என்ற செய்தி செய்தித்தாள்களில் வெளிவந்தது. அப்பொழுத, அறிஞர் அண்ணா அவர்கள் எனது அறையில் தங்கிறிருந்தார்கள். பெரியார் நம்மை அழைக்காவிட்டாலும், நாம் தடையெதிர்த்துக் கூட்டப்படுகின்ற கறுப்புச்சட்ப் படை மாநாட்டில் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும். புறப்படு என்றார். நான் என்னுடைய நீண்ட கறுப்பு ஜிபபாவை எடுத்துப் போட்டுக்கொண்டேன். அறிஞர் அண்ணா அவர்கள் எனக்கும் ஒரு கறுப்புச் சட்டை வேண்டுமே. எனக்குத் தகுந்த சட்டை ஒன்றைக்கொடு என்றார். எனக்குத் தகுந்த கறுப்பு ஜிப்பாதான் என்னிடத்திலிருக்கிறது. உங்களுக்குத்தகுந்த கறுப்புச் சட்டை என்னிடத்தில் இல்லையே! என்றேன். சரி! எனக்குக் கொடு. அதையாவது போட்டுக் கெள்கிறேன் என்றார். நான் என் கறுப்பு ஜிபபா ஒன்றைக் கொடுத்தேன். அதை அவர் போட்டுக் கொண்டார். அது அவருக்குத் தொளதொள என்று பெரியதாகவும் நீண்டதாகவும் இருந்தது. நீண்ட கறுப்பு அங்கி அணிந்த பாதிரியாரைப்போல் காட்சி அளித்தார். மாநாட்டு மண்டபத்தில், அறிஞர் அண்ணாவைக் கண்டதும் அனைவரும் ஆரவாரித்து, ஒலி முழக்கம் எழுப்பி, வரவேற்று, மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். மாநாட்டில் பெரியார், அண்ணா, நான் மற்ற நண்பர்கள் பலரும் சொற்பெருக்காற்றினோம். அறிஞர் அண்ணா அவர்கள் உணர்ச்சிமிக்க, வீரஞ்செறிந்த பேருரை ஒன்றை நிகழ்த்தினார்கள். யாரும் கைது செய்யப்படவில்லை. சில நாட்களக்குப் பிறகு தடை ஆணை திரும்பப் பெறப்பட்டது.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:14 am

தூத்துக்குடி திராவிடக்கழக மாநில மாநாடு

1948-ஆம் ஆண்டில் பெரியார் அவர்கள் தூத்துக்குடியில் திராவிடக் கழக மாநில மாநாட்டைக் கூட்டினார்கள். அந்த மாநாட்டிற்குப் பெரியார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அந்த நேரம் பெரியார் அவர்கள் அறிஞர் அண்ணாவிடம் வெறுப்புணர்ச்சிக் கொண்டு, அண்ணாவைப் புறக்கணித்து வந்த நேரம். புரட்சிக் கவிஞருக்குப் பண முடிப்பு தந்தது, எப்பொழுதும் கறுப்புச்சட்டையைப் போட மறுத்தது, 1947 ஆகஸ்டு 15-ம் நாளை மகிழ்ச்சி நாளாகவே கொண்டாடச் செய்தது, கொள்கைப் பரப்புப்பணிகளுக்கு மிகவாகச் செல்லாமலிருந்ததது ஆகியவை அண்ணாவிடம் பெரியாருக்கு வெறுப்புணர்ச்சி ஏற்படக்காராணமாக இருந்தவையாகும். பெரியார் கடுமையான சினங்கொண்டிருப்பதன் காரணமாக மாநாட்டிற்குப் போகலாமா? வேண்டாமா? என்ற ஐயப்பாட்டு எண்ணத்தோடு அண்ணா இருந்து வந்தார்கள். அறிஞர் அண்ணாவும், நானும் காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டு, மாநாட்டில் கலந்து கொள்வதைப் பொறுத்து அரைமனதோடு திருச்சி போய்ச் சேர்ந்தோம். திருச்சியில் தோழர ஈ.வெ.கி.சம்பத் வந்து தங்கியிருந்தார். பல சூழ்நிலைகளையும் ஆராய்ந்து பார்த்ததற்குப் பிறகு, மாநாட்டிற்குச் சென்று கலந்து கெள்ளவேண்டாம் என்று மூவரும் முடிவு செய்தோம். அறிஞர் அண்ணாவின் அரிய உரையைக் கேட்கும் பேராவலோடு மாநாட்டில் குழுமியிருந்த பெரும்பாலான மக்களுக்கு அண்ணா வருகை தராதது, பெருத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் வாட்டத்தையும் அளித்தது. ஆனால் பெரியாருக்கும், அவரோடு நெருங்கியிருந்த கழகத்தொழர்களுக்கும் அந்தச் செயல் பொல்லாத சினத்தைப் பொங்க வைத்தது.

ஈரோடு சிறப்பு மாநாடு

சில திங்கள் கழித்துப், பெரியார் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களைத் தம் அன்பு வலைக்குள் மீண்டும் இழுத்துப போடவேண்டி, 1948-இல் ஈரோட்டில், திராவிடக்கழகத்தின் சிறப்பு மாநாடு ஒன்றினை, அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் கூட்ட ஏற்பாடு செய்தார். அறிஞர் அண்ணா அவர்களும் மாநாட்டில் கலந்து கொள்ள இசைவு அளித்தார். அந்த மாநாட்டை ஒட்டி நடைபெற்ற உர்வலத்தில்தான், அறிஞர் அண்ணா அவர்கள் அணி செய்யப்பட்ட, குதிரைகள் பூட்டப்பட்ட, கோச்சுவண்டியின் முன்னால் நடந்தே சென்றார்கள். பட்டுக்கோட்டை கே.வி.அழகர்சாமி கலந்து கொண்ட இறுதி மாநாடு அதுதான். தமிழ்த்தென்றல் திரு.வி.க. கலந்துகொண்டு மாநாட்டில் திராவிடக் கழகத்தின் முன்னணியினர் பலரும் கலந்து கொண்டனர். அறிஞர் அண்ணாவின் விருப்பதிற்கிணங்க, நான், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றினேன். கழகத்தின் பெட்டி சாவியை அண்ணாத்துரையிடம் கொடுத்துவிட்டேன் என்ற பெரியார் அறிவித்தது அந்த மாநாட்டில்தான்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக