புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
53 Posts - 50%
heezulia
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
33 Posts - 31%
Dr.S.Soundarapandian
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
1 Post - 1%
Rutu
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
1 Post - 1%
raajmithun
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
241 Posts - 43%
heezulia
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
221 Posts - 40%
Dr.S.Soundarapandian
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
24 Posts - 4%
i6appar
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதாத்திரியின் தத்துவங்கள் - 2


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 6:58 am

மாங்காயும் தேங்காயும்


மாம்பழத்தை எடுத்துக் கொண்டால் அது பஞ்சாக இருந்து முழுமையாக வளர்வதற்குள் பரிணாமத்தில் ஆறு சுவையும் வந்துவிடும். முதலில் துவர்ப்பு, அதன் பிறகு உப்பு, அதன் பிறகு காரம், அதன் பிறகு புளிப்பு, புளிப்பிலிருந்து இனிப்பு. பழம் அழுகிப் போய்விட்டால் கசப்பு.

இந்த ஆறு சுவையும் ஒரே பழத்தில் அதன் வளர்ச்சிக்குத் தகுந்தவாறு வரும். ஆனால் தேங்காயை எடுத்தால் வழுக்கைப் பிடிப்பதிலிருந்து முழுமையாக முற்றி கீழே விழுந்தால் கூட அது இனிப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் அதற்கு தேன்+காய் = தேங்காய் என்று தமிழில் பெயர் வைத்தார்கள்.




பற்றற்ற நிலை


தேவையுணர்வாலும், தொடர்ந்து வந்த பழக்கத்தாலும், கிடைத்துள்ள சந்தர்ப்ப-சூழ்நிலைகளாலும் அறிவின் வளர்ச்சிக்கேற்றவாறு, தேசம், மதம், ஜாதி, மொழி, இனம், பொருட்கள், பந்துக்கள், என்றவைகள் மீது மனிதன் உரிமை கொண்டாடுகிறான். அவ்வந்த எல்லையில் குறுகியும் நிற்கிறான். இத்தகைய ஞாபக நிலையை (அறிவின் நிலையை) பற்று என்று சொல்லுகிறோம்.

இவ்வகையான பற்றுதல் என்ற ஞாபக நிலையால், சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்ற மக்கள் அனைவரும், ஒவ்வொரு வகையால் ஒவ்வொருவரும் வேறுபட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இந்தக் கற்பனையினால் மனிதரிடம் கர்வம், பொறாமை, பயம், வறுமை, பஞ்ச மகாபாதகங்கள் முதலியன தோன்றுகின்றன. பல விதமான துன்பங்களும் விளைகின்றன.

மனிதனின் அனுபோக அனுபவ ஆராய்ச்சிகளினால் அறிவு வளர்ச்சி பெற்று தன்னிலை விளக்கம் பெறுகின்றபோது, உருவ அளவிலே மனிதர்கள் வேறுபட்டிருந்தாலும் உயிர் என்ற நிலையில் ஒன்றுபட்டே, ஏகமாகவே இருப்பது அறிவுக்குத் தெளிவாக விளங்கி விடுகிறது.

அவனுடைய ஞாபக எல்லை அகண்ட நிலையை அடைகின்றது. அப்போது பிரபஞ்சத்தில் உள்ள சில பொருட்களை மாத்திரம் தனதென்று எண்ணிக்கொள்ளுகின்ற பற்றுதல்கள் தானாகவே விடுபட்டுப் போகின்றன. இவ்விதமாக உயர்நிலையை அறிந்து கொண்ட பேரறிவின் சிகரமே பற்றற்ற நிலையாகும்.




கல்லறை உண்மை


டெல்லியில் ஓர் அன்பர் கேட்டார். பெரிய அரசர்களும் செல்வந்தர்களும் இறந்துபோனால் பெரிய கல்லறை கட்டி, வைக்கிறார்கள். அத்தகைய பெரிய பெரிய கல்லறைக் கட்டடங்கள் டெல்லியில்தான் அதிகமாக உள்ளன. அப்படிக் கட்டுவதற்குக் காரணம் பணத்தின் பெருக்கம்தானே? பணத்தின் மதிப்பை எடுத்துக் காட்டுவதற்குத்தானே கட்டியிருக்கிறார்கள்? என்றார்.

நீங்கள் அப்படி அர்த்தம் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஓர் உண்மையைத் உணர்த்துவதற்காகத் தான் அப்படிக் கட்டியிருக்கிறார்கள் என்றேன்.

அதில் வேறு என்ன உண்மையை உணர முடியும்? என்று கேட்டார்.

அதாவது அரசனாக இருந்தாலும் சரி, மந்திரியாக இருந்தாலும் சரி, புலவனாக இருந்தாலும் சரி, பாடகனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் கடைசியில் மரணம் உண்டு. செத்த பிறகு இந்த உடல் மண்ணாகிறது. இதைப் போல பெரிய பெரிய அரசர்கள் செல்வந்தர்கள் என்று யார் யாரையோ எண்ணிக் கொண்டிருக்கிறோமோ அவர்களையும் எடுத்துக்காட்டி, இவரும் மண்ணாகத்தான் போகிறார் என்பதை உணர்த்துவதற்குக் கட்டியது தான் கல்லறையே தவிர, வேறொன்றுமில்லை.

இன்னும் சொல்லப் போனால் ஒரு நன்மையும் உண்டு. இதன் மூலம் சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு ஒரு பாடம் கொடுக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிற நீயும் எதையெதையோ வைத்துக் கொண்டிருக்கிறாய். உள்ளத்தில் வைத்திருக்கிற கற்பனை மண்ணாகத்தான் போகும் என்ற அளவில் கல்லறைகள் வைத்துள்ளார்கள். அவர் வாழ்ந்த வரைக்கும் அவர் செய்தவற்றில் உள்ள சிறப்பு அனைத்தும் மக்களுக்குத்தான் போகிறது. எல்லாரும் பிறப்பால் ஒன்றுதான்.

ஆனால், அதே நேரத்தில் வேற்றுமையால் இருக்கக்கூடிய சிறப்பு அம்சம் தொழிலால் வேறுபட்டிருக்கிறார்கள். எல்லாருக்கும் ஒருவருடைய சிறப்பு சமுதாய அளவில் பயன்பட வேண்டியதுதான். யாருடைய சிறப்பாக இருந்தாலும் சமுதாயத்திற்குத்தான் போகிறது. ஒருவருடைய சிறப்பு அவரோடு போவதே இல்லை. எந்த செயல் செய்தாலும் அதன் பயன் சமுதாயத்திற்குத்தான் போகிறது.

பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையால்.



மாயை


வேதாந்தத்தில் மாயை என்றொரு வார்த்தையை அடிக்கடி சொல்வதுண்டு. மாயை என்றால் என்ன? மயக்கம் என்று சாதாரணமாகப் பொருள் கொள்ளலாம். உள்ளதைச் சாதாரணமாகத் தெரிந்து கொள்ளாத கற்பனையிலேயே இருப்பது மாயை. உதாரணமாக நாம் இங்கே உட்கார்ந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. முன்பு இருந்த இடத்திலிருந்து இந்த உலகம் ஆயிரம் மைல் நகர்ந்து சென்று விட்டது. ஆனால் நாம் உட்கார்ந்த இடத்திலேயே அப்படியே இருப்பதாக நினைக்கிறோம். இதுதான் மாயை.

இன்னொரு உதாரணம் கூட கொள்ளலாம். பழம் என்பது அணுக்களால் ஆகிய கூட்டு. ஒவ்வொரு அணுவுக்கும் இடைவெளி இருக்கிறது. அணு என்றால் சுழற்சி உண்டு. ஆனாலும் அதற்கு இடையில் உள்ள இடைவெளி நமக்குத் தெரிவதில்லை. அதனால் அது அப்படியே கெட்டிப் பொருளாக இருக்கிறது என்று நினைக்கிறோம். இதுதான் மாயை. பழத்தை நன்றாக எரியும் நெருப்பில் போட்டால் ஒரு நிமிடத்தில் பொலபொலவென்று சாம்பலாகி விடும். ஒவ்வொரு அணுவும் சூடு உண்டாகிறபோது சுழல் விரைவு அதிகமாகி ஒன்றையொன்று தள்ளி நிறுத்துகிறது. அதனால் அணுக்கள் விலகிப் போய்விடுகின்றன. ஆனால் அவை சேர்ந்திருக்கின்றன என்று நினைப்பதுதான் மாயை.



கடவுள் திறக்கும் கதவு


நாம் உலகமீது எத்தனையோ விதமான செடி கொடிகள் தாவரங்களைப் பார்க்கிறோம். இவைதான் முதலில் உலகில் உற்பத்தியானவை. ஊயிரினங்கள் உற்பத்தியாக வேண்டும் என்றால் அவற்றுக்கு உணவு வேண்டும். எல்லாம் உணரவல்ல பேராற்றலாக உள்ள இறைநிலை (Omniscience Consciousness) உயிரினங்களை உற்பத்திச் செய்வதற்கு முன்னதாக அவற்றுக்கு வரவேண்டிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தாவரங்கள் உற்பத்தியானது.

கடவுள் ஒரு கதவை அடைத்துவிட்டால் இன்னொரு கதவைத் திறப்பான் என்று நாம் சொல்லக் கேட்டிருப்போம். அப்படியல்ல, ஒரு கதவைத் திறந்து வைத்துவிட்டுதான் இன்னொரு கதவை மூடுவான். அதுதான் இறைநிலை. குறையில்லாதது. அத்தகைய இறைநிலையை நினைக்கிறபோது அடைகிற ஆனந்தம். மனிதன் அந்த ஆனந்தத்திலேயே அதுவாகவே வாழ்வான்.

ஒரு தாய் குழந்தையை ஏனையில் (தொட்டிலில்) போட்டுவிட்டு கடைக்குப் போனாள். நடந்துபோகும் போதும் சரி, கடைக்குப் போய் பொருட்களைப் பேசி வியாபாரம் வாங்கினபோதும் சரி. அந்தக் குழந்தையை மறக்காமலேயே எல்லா வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறாள். அதுபோல இறைநிலையை உணர்ந்தவர்களுடைய மனமானது இறைநிலையை ஒட்டித்தான் இருக்கும். மோனமாக இருப்பதுதான் அது.

“எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனமிருக்கும் மோனத்தை.”




என் தொண்டு


எனக்கு குரு எத்தனையோ பேர். எங்கெங்கோ போகிறேனோ அங்கே யார் என்னென்ன சொல்கிறார்களோ அவற்றையெல்லாம் எடுத்துச் சேர்த்து வைப்பேன். இப்படிப் பார்த்தால் எனக்குக் குரு என்று எடுத்தீர்களானால் நூறு குரு இருப்பார்கள். பண்பாட்டில் வந்தது, என்னுடைய அனுபவம், சித்தர்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு எடுத்தது, அதற்கு மேலாகச் சொல்லிக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்கள் என்று எனக்கு குரு பலர். முதலில் சித்த மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவ் என்ற குரு இருந்தார். அவர் மைலாப்பூரில் ரொட்டிக்காரத் தெருவில் இருந்தார். மிகச் சிறந்த மருத்துவர். அவரிடம் பனிரெண்டு ஆண்டு காலம் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் பயின்றேன்.

அந்த அடிப்படையிலேயே வாழ்க்கை ஆராய்ச்சியில் வந்தபோது என்னென்ன வேண்டுமோ அவற்றைக் கற்றுக் கொண்டேன். கற்றுக் கொண்டவற்றில் பயனுள்ளவை எல்லாம் மற்றவர்களுக்கும் போகட்டும் என்று சொல்ல ஆரம்பித்தேன். சொல்ல ஆரம்பித்த பிறகு, என் கருத்தை எல்லாரும் எடுத்துக் கொண்டார்கள். பிறகு இதுவே என்னுடைய தொண்டு என்று ஆனது.




எண்ணம் தோல்வி அடையாது


கிராமத்தைச் சேர்ந்த மனிதன் ஒரு மலையைப் பார்க்கிறான். அடுத்த ஊர் இரண்டு மைல் தூரத்தில் கூட இல்லை. அந்த ஊருக்குப் போக வேண்டும் என்றால் இந்த மலையைச் சுற்றிக் கொண்டு பதினைந்து மைல் தூரம் போக வேண்டியதாக இருக்கிறது. இந்த மலையைப் பெயர்த்துப் போட்டுவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். சீக்கிரமாக அந்த ஊருக்குப் போய்விடலாம் என்று இந்த மனிதன் நினைக்கிறான். ஆனால் அவனுடைய எண்ணம் அப்படியே செயல்பட முடியாது. அவனால் அந்த மலையைப் பெயர்த்துப் போட முடியாது.

ஒரு அணு விஞ்ஞானி வருகிறாh. அவர் அந்த மலையைப் பார்க்கிறார். அவருக்கும் அந்த மலைக்கு அந்தப் பக்கம் உள்ள ஊருக்குப் போக வேண்டும். மலையைச் சுற்றிக் கொண்டு போக வேண்டியதாக இருக்கிறது. அணுச் சாதனையால் அந்த மலையைத் துளைத்து, அந்தப் பக்கம் போக ஒரு வழியை ஏற்படுத்தி விட்டால், மலையைக் குடைந்து ஒரு குகைப்பாதையை ஏற்படுத்திவிட்டால் சரியாகிவிடும் என்று எண்ணுகிறார். விஞ்ஞானி நடைமுறையில் எதைச் செய்ய முடியுமோ அதைத் திட்டமிடுகிறார். சிறிது காலத்தில் மலையைக் குடைந்து குகைப்பாதையைப் போட்டு விடுகிறார்.

கிராமத்து மனிதனும், விஞ்ஞானியும் ஒரே எண்ணத்தைத்தான் எண்ணினார்கள். ஆனால் விஞ்ஞானியால் அதைச் செயல்படுத்த முடிந்தது. ஆனால் இருவருடைய எண்ணமும் வெற்றி பெற்றுவிட்டது.

எந்த எண்ணமும் தோல்வி அடைவதில்லை. தோல்வி ஏற்பட்டால் எண்ணுகிற எண்ணத்தில் ஒழுங்கு இல்லை என்பதுதான் பொருள்.

“எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்,
எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் அமைந்திடில்.”





மேல் பதிவு


மேல் பதிவு என்று ஏன் சொல்கிறோம் என்றால் உள்பதிவு இன்னும் இருக்கிறது. உள்பதிவு, இவருக்குப் பிறக்கக்கூடிய குழந்தைக்கு சஞ்சிதப் பதிவாக வரும். அவரும் தொடர்ந்து செயல் செய்து கழிக்க வேண்டும். உள்பதிவு இரண்டு மூன்று தலைமுறைகளுக்குத் தொடரும். சாராயம் குடிப்பவர் தன் பழக்கத்தைவிட வேண்டுமானால் சாராயம் குடிக்கும் நேரத்திற்குச் சற்று முன்னதாக வயிறு நிரம்ப பால் சாப்பிட வேண்டும். சாராயம் குடிக்க முடியாது. பிறகு பால் சாப்பிடுகிற பழக்கம் வந்துவிடும். பால் சாப்பிடுவது மாற்றுப் பழக்கம்.

ஆனால் யாராவது நண்பர்கள் வந்து இவர் பால் சாப்பிடுவதற்கு ஓரிரு நிமிடங்கள் இருக்கிறபோது சாராயக் கடைக்குப் போகலாம் என்று அழைத்துச் சென்று விட்டால், பிறகு இவர் திருந்தவே முடியாது. மேல் பதிவை விழிப்போடு இருந்து கழிக்க வேண்டும். தொடர்ந்து செயல் செய்து கழிக்க வேண்டும். மீண்டும் அப்பதிவின் வழியே தவறு ஏற்படாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மாற்றுப் பழக்கத்திலிருந்து விலகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மேல்பதிவு வெற்றி பெறும். மேல்பதிவு செய்து எந்தப் பழிச்செயல் பதிவுகளையும் மாற்றியமைத்து விடலாம்.




மனிதகுல வாழ்வின் இனிமைக்கும் அமைதிக்கும் காயகல்பக் கலை


உடல் மற்றும் மனநலனுக்கு முக்கியப் பொருளான விந்து - நாதங்களின் பெருமையையும், கற்பு நெறியின் மேன்மையினையும் மனிதகுலம் உணர வேண்டும். விந்து - நாதத்தை இன்பத்துக்குரியதோர் சாதனமாக மட்டும் இன்றைய மனிதர்கள் கருதுகிறார்கள். நோயற்ற உடலுக்கும், தெளிந்த அறிவு மேன்மைக்கும் விந்து நாதந்தான் ஆதாரம். எனவே அவற்றைப் புனிதப் பொருளாகக் கருதி, அவற்றின் தூய்மையைப் பராமரித்து அவற்றுக்கு மேன்மையளிக்கவும் வேண்டும். அதற்கு உதவுவது தான் காயகல்பக் கலை.

உடல்நலமும், மனவளமும் தான் வாழ்வில் வெற்றியையும் நிறைவையும் அளிக்கும். எந்த அளவுக்கு காயகல்பப் பயிற்சியின் மூலம் உடல் வளமும,; அறிவும், உயர்வும் பெறுகிறார்களோ அந்த அளவுக்குத் தான் எதிர்கால சமுதாயத்தில் இனிமையும், அமைதியும் நிலவ முடியும்.





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக