புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
6 Posts - 46%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
372 Posts - 49%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
25 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 47 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 47 of 50 Previous  1 ... 25 ... 46, 47, 48, 49, 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 22, 2011 6:49 pm

நன்றி ஐயா
விரைவில் பயிற்சியுடன் வருவேன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Feb 23, 2011 8:44 am

யாதுமானவர்க்கு,

ஏழையவர் ஆற்றுதற்கு யாருள்ளார் இங்கென்று
ஈழத்தில் விம்முகின்றார் எம்தமிழர் - வேழத்தை
ஈன்றவளும் சென்றதனால் இன்று.

இங்கென்று ஈழத்தில் – சேர்த்தெழுதினால்,
இங்கென் றீழத்தில் – மா முன் நேர் ஆகிறது.
திருத்துக.

உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்ற வேதனையில் - மருகி
உளம்பட்ட வேதனை கொடிது.

வேதனையில் மருகி – காய் முன் நிரை உள்ளது.
வேதனை கொடிது. – விளம் முன் நிரை வந்துள்ளது.
இரண்டு இடங்களில் வேதனையைத் தவிர்க்கவும்.


தீக்கொழுந்தைப் பெற்றவளுன் தேகமதைத் தீநாவும்
சுட்டெரிக்கும் காட்சியெண்ணிச் சிந்துகின்றோம் - விட்டகலா
வேதனையை உள்ளிருத்தி நாம்.


இரண்டாம் அடியில் பொருள் சிறக்க,
தாக்கியெரி தற்காணத் தாங்குகிலோம் - நீக்கமிலா
என்றோ, வேறு திறத்திலோ மாற்றல் நன்று.
(சு – வுக்கு சி மோனை ஆகாது என்பதைக் கவனிக்க)

பாடல் எழுதிய பிறகு, தளை சரியாக உள்ளதா என்று ஊன்றிக் காண்க. வெண்பாவில், இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விளம் முன் நேர்), வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்) மட்டுமே இடம்பெற வேண்டும்.

மோனை, எதுகை பற்றிய பகுதியை மீண்டும் ஒருமுறை படித்தால் தெளிவாகும்.

தொடர்ந்து எழுதுக.
எழுதஎழுத வெண்பா செப்பமாகும்.

ஐயமெழுந்தால் தயங்காது கேட்க.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Feb 23, 2011 12:03 pm

வணக்கம் அய்யா, தங்கள் நலம் காக்க!

மீண்டும் மீண்டும் பிழை செய்வது குறித்து மிக வருந்துகின்றேன். அன்புடன் பொருத்துக் கொள்க!

நேரம் கிடைக்காமையே காரணம். கிடைக்கும் ஐந்து நிமிடத்திற்குள் அவசர அவசரமாக எழுதும் சூழலில் தவறுகள் அதிகமாக நடக்கிறது. இனி கவனமுடன் தொடர்கிறேன்.

பிழைகள் திருத்தியுள்ளேன். சரியாக இருக்கும் என நம்புகின்றேன்.

ஏழையவர் ஆற்றுதற்கு யாருள்ளார் இங்கென்றே
ஈழத்தில் விம்முகின்றார் எம்தமிழர் - வேழத்தை
ஈன்றவளும் சென்றதனால் இன்று.

உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்றே ஆற்றாமல் - மருகி
உளம்நொந்த வேளை கொடிது.

தீக்கொழுந்தைப் பெற்றவளுன் தேகமதைத் தீநாவும்
தாக்கிமிக வேகமுடன் தீர்ப்பதையும் -நோக்கினமே
வேதனையை உள்ளிருத்தி நாம்.

அன்புடன்
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Feb 23, 2011 5:40 pm

ஏழையவர் ஆற்றுதற்கு யாருள்ளார் இங்கென்றே
ஈழத்தில் விம்முகின்றார் எம்தமிழர் - வேழத்தை
ஈன்றவளும் சென்றதனால் இன்று.

உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்றே ஆற்றாமல் - மருகி
உளம்நொந்த வேளை கொடிது.

தீக்கொழுந்தைப் பெற்றவளுன் தேகமதைத் தீநாவும்
தாக்கிமிக வேகமுடன் தீர்ப்பதையும் -நோக்கினமே
வேதனையை உள்ளிருத்தி நாம்.

முதற்பாடலும் மூன்றாம் பாடலும் சரியாக உள்ளன. இரண்டாம்பாடலில் ஓரிடத்தில் - முன்பே குறித்த இடத்தில் - தளை தட்டுகிறது. கண்டுபிடித்துத் திருத்துக.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Feb 23, 2011 5:50 pm

வணக்கம் அய்யா,

பிழை புரிந்தது ஆற்றாமல் - மருகி காய் முன் நிரை வந்துள்ளது.

உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்றே ஆற்றா(து) - உருகி
உளம்நொந்த வேளை கொடிது.


இப்போது சரியாக உள்ளதா ஐயா

அன்புடன்,
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Feb 23, 2011 5:54 pm

யாதுமானவள் wrote:வணக்கம் அய்யா,

பிழை புரிந்தது ஆற்றாமல் - மருகி காய் முன் நிரை வந்துள்ளது.

உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்றே ஆற்றா(து) - உருகி
உளம்நொந்த வேளை கொடிது.


இப்போது சரியாக உள்ளதா ஐயா

அன்புடன்,
யாதுமானவள்
அருமை. சரியாகக் கண்டுபிடித்துத் திருத்தியமைக்குப் பாராட்டு.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Feb 23, 2011 6:02 pm

வணக்கம் ஐயா



வெந்தழலே நீயெரிந்து வேகாயோ எங்களுடை
சிந்தையிலே நின்றவளைத் தின்றாயே – அந்தோயான்
என்னதான் செய்வே னினி

மாளாத் துயருடன்
நந்திதா

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Feb 23, 2011 6:11 pm

nandhtiha wrote:வணக்கம் ஐயா



வெந்தழலே நீயெரிந்து வேகாயோ எங்களுடை
சிந்தையிலே நின்றவளைத் தின்றாயே – அந்தோயான்
என்னதான் செய்வே னினி

மாளாத் துயருடன்
நந்திதா
அருமை. சரியாக எழுதியிருக்கிறீர்கள்.எதுகை மோனைகளும் சிறப்பு. பாராட்டு. அழுத்தமான உணர்வு பாடலை உருவாக்கிக் காட்டும். http://thamizhanambi.blogspot.com பார்க்க

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Feb 23, 2011 10:44 pm

30. இன்னிசை வெண்பா

நாம் அடுத்து எழுதப் பயிலவிருப்பது இன்னிசை வெண்பா.
இது, இன்னிசைச் சிந்தியல் வெண்பா போன்றதே. இன்னிசைச் சிந்தியல் வெண்பா மூன்றடிப்பாடல் என்பது நமக்கு நன்கு தெரியும். பொதுவாக, இன்னிசை வெண்பா என்றால் நான்கடிப் பாடலாகும்.

இன்னிசை வெண்பா பற்றிய குறிப்புகள்:

1. நான்கடிப் பாடல். முதல் மூன்றடிகளும் நாற்சீரும் நான்காம் அடி முச்சீரும் பெற்று வரும்.

2. நான்காம் அடியின் இறுதிச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.

3. வெண்டளை பெற்றிருக்க வேண்டும்.

4. முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைய எழுதற் சிறப்பு.

5. முதல் இரண்டு அடிகள் ஓரெதுகையும் மூன்றாம் நான்காம் அடிகளிரண்டும் இன்னொரு எதுகையும் பெற்று வரலாம் (இரு விகற்பம்); அல்லது நான்கடிகளும் ஓரெதுகை பெற்றும் வரலாம்.(ஒரு விகற்பம்) வேறு விகற்பங்களைக் கொண்டும் வரலாம்.

எடுத்துக்காட்டு

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.


இன்னொன்று

ஆண்பிள்ளை தானா அருமையுடன் காத்திடுவான்?
மாண்புள்ள பெண்ணும் மனங்கலங்கி வாடாமல்
பெற்றவரைக்காத்துப்பெருமை அடையாளா?
உற்றஎன் அன்னாய் உரை.
– அரங்க.நடராசனார்.

இனி, எழுதலாமே.






யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Feb 24, 2011 1:09 pm

வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

இன்னிசை வெண்பாவில் எனது முயற்சிகள்.

பிஞ்சுக் குழந்தைவாய் பேசும் மழலையிலும்
பஞ்சுத் தலையுதிர் வார்த்தைச் சுவையிலும்
விஞ்சிட ஏதுஉனை ஓங்காரத் தீந்தமிழே
வஞ்சகரும் ஏற்பார் உனை.

பிறந்தவுடன் தாய்ப்பால் புகட்டி செவியும்
திறந்தவுடன் ஊற்றின செந்தமிழ்ப் பால்தான்
பிறமொழிநோய் தாக்காது பாங்குடனே யாற்றும்
சிறந்தமருந் தானதெனைக் காத்து.

அன்புடன்
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 47 of 50 Previous  1 ... 25 ... 46, 47, 48, 49, 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக