புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
3 Posts - 3%
Sathiyarajan
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 29 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 29 of 50 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 39 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Oct 11, 2010 9:29 am

யாதுமானவர்க்கு,

தம்மொழித மிழ்மீது மோகமிக கொண்டவன் - எம்மரசன்
தம்குலமக் கள்தனைஇரு கண்ணெனவே காத்தவன்தான் - எம்மரசன்
எம்குலத்து வேந்தர்களில் ஈடில்லா ஓர்தோன்றல்-எம்மரசன்
எம்குலமே கேளீரது யாருமல்ல இராவணன்தான் – எம்மரசன்

உங்கள் பாடல் பெரும்பான்மையும் சரியாகவே உள்ளது.
கள்தனைஇரு – கூவிளங்கனி ஆகும். கனிச்சீர் வந்தால் வெண்டளை அமையாதன்றோ?
இயன்றவரை சொற்களைப் பிரிக்காமல் (வகையுளி தவிர்த்து) எழுதுதல் சிறப்பு.

உங்கள் பாடலைக் கீழே பாருங்கள்.
நீங்கள் விரும்பும் வகையில் வேறு சொற்களிலும் திருத்தலாம்.

தம்மொழி யாம்தமிழ்த் தாய்ப்பற்று மிக்கவன் - எம்மரசன்
தம்குல மக்கள் தமைஇரு கண்ணெனக் காத்தவன் - எம்மரசன்
எம்குல வேந்தரில் ஈடில்லா ஓர்தோன்றல்-எம்மரசன்
எம்குலக் கேளிர் இராவணன் ஆவான் – எம்மரசன்

தொடர்ந்து எழுதுக.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Oct 11, 2010 9:38 am

அன்பார்ந்த கிரி மற்றும் அனைவர்க்கும், நாம் எழுதும் இவ்வகைப் பாடலில், நான்காம் சீருக்கும் தனிச்சொல்லுக்கும் இடையிலும்கூட வெண்டளை வருமாறு அமைக்க வேண்டும். தனிச்சொல்லுக்கும் அடுத்த வரியின் முதல் சீருக்கும் இடையே வெண்டளை அமைய வேண்டிய கட்டாய மில்லை. இவற்றைக் கவனத்தில் கொள்க. இனி, அடுத்தவகைப் பாடல் எழுதப் பயில்வோம்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Oct 11, 2010 10:39 am

.

24. வெளிமண்டிலம் – 3

அடுத்தவகைப் பாடல்:

1. மூன்றடி கொண்ட வெளிமண்டிலப் பாடல்.
2. மூன்றடிகளிலும் நான்கு சீர்கள் – இறுதியில் மூன்றடிகளிலும் ஒரே தனிச்சொல்.
3. பாடல் முழுமையும் (மா முன் நேர், விளம் முன் நிரை) ஆசிரியத் தளைகள்.
4. மூன்றடிகளிலும் ஓரெதுகை.
5. இயன்றவரை முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை.

இவ்வாறமைந்த பாடலை ஆசிரியத்தளையால் வந்த மூன்றடி வெளிமண்டிலம் என்பர்.

எடுத்துக்காட்டு:

நன்றே செய்யின் நல்லதே விளையும் – என்றறிக
நன்றல் லாதவை நலிக்கும் நம்மை – என்றறிக
வென்றே நிற்போம் வீறுயர் செயலால் - என்றறிக.


- புதுவை அரங்க.நடராசன் ஐயா.

இப்பாடலில் தனிச்சொல் தவிர்த்த எல்லாச் சீரும் ஈரசைச் சீர்கள் என்பதை அறிக. தனிச்சொல், ஈரசைச் சீராகவோ மூவசைச் சீராகவோ இருக்கலாம்.

இன்னொரு எடுத்துக்காட்டு :

தன்னலம் முதன்மையாய்த் தகவறத் தெரிந்திவன் – இனங்கொன்றான்
தன்னினம் அழிக்கத் தான்துணை இருந்திவன் – இனங்கொன்றான்
என்னினும் இனமெழும்! இழிபழி இவனுறும்! – இனங்கொன்றான்!


இவ்வாறான பாடல் ஒன்றை விரும்பிய பொருளில் எழுதுக. தருக.




kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 11, 2010 1:34 pm

தமிழநம்பி ஐயா அவர்களுக்கு,
என்னுடைய பயிற்சியை தருகிறேன்.


நீருண் மேகமும் நிறைந்திடப் பொழியும் - மீளவரும்
ஊரும் வான்நிலா ஒளியெடுத் தொளிர்ந்திடும் - மீளவரும்
வேருண் தெங்கதும் விளைத்திடும் இளநீர் - மீளவரும்

ஊரதும் எரிந்திட உயிர்களைக் கொடுத்தோம் - ஏதுபயன்
போரில் செம்புனல் புழுதியில் இறைத்தோம் - ஏதுபயன்
தீரமும் தியாகமும் தருமமும் இழைத்தோம் - ஏதுபயன்

அன்புடன்
கிரிகாசன்

பிற்சேர்க்கை:
(இங்கே மீளவரும் என்பதை எடுத்ததை மீண்டும்தரும் என்றபொருள்பட எழுதினேன்.சரியான சொல்லென எண்ணுகிறேன்)


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Oct 11, 2010 1:58 pm

அருமை, கிரி!
உடனே புரிந்துகொண்டு எழுதியுள்ள இரண்டு மண்டிலங்களும் சரியே.
தொளிர்ந்திடும் – மீளவரும் என்பதில் விளம் முன் நேர் வந்துள்ளதைக் கவனிக்க!
நீங்களே தகுந்தவாறு இதைத் திருத்தலாம்.
பாராட்டுகிறேன்.
கருத்தாழமும் உவமை போலும் அணி நலன்களும் அமைத்து எழுதப் பயிலுங்கள்.
இயன்றவரை அயற்சொற்களைத் தவிர்த்து எழுதினால் பாட்டின் மதிப்புக் கூடும்.
தொடர்ந்து எழுதுக.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 11, 2010 3:20 pm

நன்றி ஐயா,

சரியாக தர முடிந்ததில் மகிழ்ச்சி கொண்டேன்.

திருத்தமாக

நீருண் மேகமும் நிறைந்திடப் பொழியும் - மீளவரும்
ஊரும் வான்நிலா ஒளியெடுத் தொளிரும் - மீளவரும்
வேருண் தெங்கதும் விளைத்திடும் இளநீர் - மீளவரும்

இப்படி மாற்றிக் கொள்கிறேன். இன்னமும் பயிற்சி செய்யலாமென எண்ணியுள்ளேன்.

அன்புடன்
கிரிகாசன்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Oct 11, 2010 8:37 pm

கற்றுத்தருவதற்கு மிக்க நன்றி ஐயா!
இது எனது முயற்சி

கண்பாவை காத்திடும் இமைகளும் துடித்திடும் - கணப்போதும்
என்பாவை காணாது தூங்காது கண்களும் -கணப்போதும்
உன்பார்வை இல்லாது கொள்ளாது நிம்மதி -கணப்போதும்


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Oct 12, 2010 4:45 pm

வழிப்போக்கன் wrote:கற்றுத்தருவதற்கு மிக்க நன்றி ஐயா!
இது எனது முயற்சி

கண்பாவை காத்திடும் இமைகளும் துடித்திடும் - கணப்போதும்
என்பாவை காணாது தூங்காது கண்களும் -கணப்போதும்
உன்பார்வை இல்லாது கொள்ளாது நிம்மதி -கணப்போதும்

வழிப்போக்கனார்க்கு,
உடனே புரிந்துகொண்டு எழுதியதற்குப் பாராட்டு.
நாம் இப்போது எழுதும் இவ்வகைப் பாடலில், மா முன் நேர், விளம் முன் நிரை வருதல் வேண்டும்.
மூன்று அடிகளிலும் முதல் இரண்டு சீர்கள் காய் முன் நேர் –ஆக அமைந்துள்ளதைக் காண்க.
வேறு இடங்களிலும் காய்ச்சீர்கள் உள.
நீங்களே திருத்தி எழுதிக் காட்டுங்கள்.
உங்களால் முடியும். உதவி தேவையென்றால் தயங்காது கேட்க.
தொடர்ந்து எழுதுக.




வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Oct 12, 2010 10:29 pm

தமிழநம்பி wrote:
வழிப்போக்கன் wrote:கற்றுத்தருவதற்கு மிக்க நன்றி ஐயா!
இது எனது முயற்சி

கண்பாவை காத்திடும் இமைகளும் துடித்திடும் - கணப்போதும்
என்பாவை காணாது தூங்காது கண்களும் -கணப்போதும்
உன்பார்வை இல்லாது கொள்ளாது நிம்மதி -கணப்போதும்

வழிப்போக்கனார்க்கு,
உடனே புரிந்துகொண்டு எழுதியதற்குப் பாராட்டு.
நாம் இப்போது எழுதும் இவ்வகைப் பாடலில், மா முன் நேர், விளம் முன் நிரை வருதல் வேண்டும்.
மூன்று அடிகளிலும் முதல் இரண்டு சீர்கள் காய் முன் நேர் –ஆக அமைந்துள்ளதைக் காண்க.
வேறு இடங்களிலும் காய்ச்சீர்கள் உள.
நீங்களே திருத்தி எழுதிக் காட்டுங்கள்.
உங்களால் முடியும். உதவி தேவையென்றால் தயங்காது கேட்க.
தொடர்ந்து எழுதுக.

நன்றி ஐயா! ஆசிரியத் தளைகள் என்பதனை கவனத்தில் கொள்கின்றேன்,

இப்போது சரியாக முயற்சித்துள்ளேன் என நினைக்கின்றேன், தவறாயின் சுட்டிட மகிழ்வேன்.

போர்வை போர்த்திடும் முகிலுடன் மயங்கும் - வெண்ணிலாவே!
ஊர்போய்ச் சேர்ந்திட வழித்துணை வருமென் - வெண்ணிலாவே!
பால்போல் வெண்மையாய் படைத்தவன் உனையார்- வெண்ணிலாவே!


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Oct 13, 2010 9:04 am

போர்வை போர்த்திடும் முகிலுடன் மயங்கும் - வெண்ணிலாவே!
ஊர்போய்ச் சேர்ந்திட வழித்துணை வருமென் - வெண்ணிலாவே!
பால்போல் வெண்மையாய்ப் படைத்தவன் உனையார் – வெண்ணிலாவே!


சரியாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு.
தொடர்ந்து எழுதுக.


Sponsored content

PostSponsored content



Page 29 of 50 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 39 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக