புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
73 Posts - 46%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
49 Posts - 31%
i6appar
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
1 Post - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
73 Posts - 46%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
49 Posts - 31%
i6appar
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
1 Post - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 20 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 20 of 50 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 35 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Jul 20, 2010 10:20 am

Yaadhumanaval wrote:காலை வணக்கம் அய்யா. தங்கள் நலன் காப்பீர்!

தங்களிடம் தமிழ்த்தேன் பருக வந்துள்ள சகோதரர்கள் கண்டு மிக ஆனந்தம் கொள்கிறேன்.

விழியாகிய மொழிபோற்றும் எமதாசான் தமிழநம்பி
தமிழென்ற அமுதூட்டி நமையிங்கு வளர்த்திடவே
வழிதிறந்து உளரேயிக்(ஈ) ரையில்.

சகோதரர் கிரி அவர்களே!

எம்மைப்போல் தமிழார்வம் உளமுழுதும் பரவியவோர்
செம்மார்ந்த தமையனுனை மனமார்ந்து வழுத்துகிறேன்
உம்மெழுத்து பொலிவுற்று சிறக்க!

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவர்க்கு,
வணக்கம்.
அன்புகூர்ந்து என்னைப்பற்றி எழுதுவதைத் தவிருங்கள்.
தமிழைப்பற்றி, தமிழர்களைப்பற்றி, தமிழ்நாட்டைப்பற்றி, தமிழீழம் பற்றி, இயற்கை எழில்பற்றி, மாந்தநேயம்பற்றி, சமன்மைபற்றி எழுதுங்கள்.

விழியாகிய மொழிபோற்றும் எமதாசான் தமிழநம்பி
தமிழென்ற அமுதூட்டி நமையிங்கு வளர்த்திடவே
வழிதிறந்தே உளதேஈ கரை.



எம்மைப்போல் தமிழார்வம் உளமுழுதும் பரவியவோர்
செம்மார்ந்த தமையனுனை மனமார்ந்து வழுத்துகிறேன்
உம்மெழுத்துப் பொலிவுறுக சிறந்து!

நன்றாக எழுதி இருக்கின்றீர்கள். பாராட்டு.

வழிதிறந்து உளரே - என்பது சேர்த்தெழுதுகையில் (புணர்ச்சியில்) விழிதிறந் துளரே – என்று ஆகும். ‘விழிதிறந்’ – என்பது ஈரசைச்சீர் ஆகிவிடும். கவனத்தில் கொள்க.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 20, 2010 11:05 am

ஐயா, ஐயம் திரிபுறக் கற்கவேண்டு மென்பதால் இதை கேட்கிறேன் எனது தவறுகளை தயை கூர்ந்த்து சுட்டிக்காட்டுவீர்களா? எனக்கு எது என்பதில் சந்தேகமாக உள்ளது. என் குழப்பம் தீர வேண்டும். நன்றி



தமிழநம்பி wrote:
kirikasan wrote:ஐயா தமிழநம்பி அவர்களுக்கு என் பணிவான வணக்கம்



தேன்தமிழைக் கோவையிடுந் திறமையினைப் பயிலவென
நான்குதிசை தேடியுமே நான்சோர்ந்து போயிருக்க
பூந்தமிழோ பூத்திருந்த திங்கு


நல்லகவி கூறுமொரு நயனறிய உள்ளதொரு
சொல்லரிய இடம்மேவி துணிவுடனே வந்தவனை
நல்லறிவு ஊட்டுவீர் நயந்து


வருக, வருக கிரி!

உங்கள் ஆர்வமும் ஊக்கமும் உங்களை நல்ல பாவலராக்கும் என்று நம்புகிறேன்.
இதற்கு முன் எழுதிய பயிலரங்கப் பகுதிகளைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
வெண்தாழிசை – 4 என்ற தலைப்பில் இப்போது பாடல் எழுதுகிறோம். எப்படி எழுத வேண்டும் என்பதைப் படித்துவிட்டிருப்பீர்கள்.

சில திருத்தங்களோடு உங்கள் பாடல்களைக் கீழே தருகின்றேன்.
அந்தத் திருத்தங்கள் ஏன் செய்யப்பட்டன என்பது புரியாவிட்டால் தயங்காது கேளுங்கள். விளக்கிக் கூறுகின்றேன்.

தேன்தமிழைக் குழைத்தெழுதும் திறமையினைப் பயிலவென
நான்குதிசை அலைந்துதிரிந் தயர்ந்தநிலை அழகுறவே
பூந்தமிழோ மலர்ந்ததிங்கேப் பொலிந்து.



நல்லகவி இயற்றுமொரு நயனறிய உளமேங்கச்
சொல்லரிய இடம்மேவி துணிவுடனே வருகின்றேன்
நல்லறிவு தருவீரே நயந்து.


மீண்டும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். தொடர்ந்து படித்துக் கவனத்தோடு எழுதுங்கள்.

எளிதில் நம் தமிழில் எவ்வகைப் பாக்களையும் நம்மால் எழுத முடியும். நன்றி.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Jul 21, 2010 10:47 pm

கிரி,
நீங்கள் சொன்னது சரி.
காய் முன் நிரை வரவேண்டும் என்பதால் அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டன.

முதற்பாடலின் இறுதிச்சீர் ‘திங்கு’ என்று ‘காசு’ என்ற வாய்பாட்டில் அமைந்த ஓரசைச் சீராக இருந்தது.

நாம் இப்போது எழுதும் பாடலில் இறுதிச் சீர் ‘மலர்’ அல்லது ‘பிறப்பு’ என்ற வாய்பாட்டில் அமைந்த ஓரசைச் சீராக இருக்க வேண்டும்.
எனவே, ‘பொலிந்து’ என்று - பிறப்பு என்ற வாய்பாட்டில் இறுதிச்சீர் வருமாறு – மாற்றப்பட்டுள்ளது


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 22, 2010 12:31 am

நன்றி ஐயா, தொடர்ந்து பயிற்சி நிறைய செய்ய உள்ளேன்.


ஒருவரி யாதுமாவள் சகோதரிக்கு,

உங்கள் வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இப்போதுதான் கற்கத்தொடங்கியுள்ளேன். பாட்டாக வரவில்லை. போகப்போக பார்ப்போமே!

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Jul 22, 2010 8:22 am

வழிப்போக்கனாரும் மற்றவர்களும் எங்கே? உங்கள் பாடல்கள் வந்ததும் அடுத்தவகைப் பாடல் எழுதும் பயிற்சிக்குச் செல்வோம். விரைந்து வருக, பாடலைத் தருக!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 24, 2010 11:56 am

ஐயா

சற்று தெளிந்ததுபோல் மனதுக்கு தோன்றுகிறது. இரண்டு கவிகள் எழுதினேன்.

மதுவுண்ணும் வண்டெனவே மனதின்பச் சுவைகாணும்
மெதுவாத தமிழாலொரு இனிதாகிய கவிதோன்றும்
புதுயாப்பின் விதிபுரியும் பொழுது


அலையாடிடுங் கடலாயொரு அதிநூறெனக் கவிபாடிடும்
நிலையானது வருமாவென நினைந்தேயடி தொழுதேனினி
கலைவாணியே அருள்தாமனங் கனிந்து

இதில் 'பொழுது' பிறப்பு வாய்பாட்டில் வருமா எனும் சந்தேகம். அசையின் படி சரிதானே என்கிறது மனது.
குற்று இடையில் வரவேண்டுமா? இது என் சந்தேகம்.

அன்புடன்
கிரிகாசன்

பிற்சேர்ப்பு :
இவை பிழையாக எழுதிவிட்டேன் இரண்டாவது கவி கனிச்சீரில் எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். கீழேதிருத்தியுள்ளேன்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 24, 2010 12:02 pm

ஐயா.

நிறையப் பிழைவிட்டு திருத்திவிட்டேன். மன்னிக்கவும். இப்ப்போது சரியென்று நினைக்கிறேன்

மதுவுண்ணும் கருவண்டாய் மனதின்பச் சுவைகாணும்
மெதுவாகத் தமிழாலோர் இனிதாகக் கவிதோன்றும்
புதுயாப்பின் விதிபுரியும் பொழுது


அலையாடும் கடல்போலும் அளவாகும் கவிபாடும்
நிலையாகும் வகைசெய்வாய் நினைந்தேயுன் அடிதொழுதேன்
கலைவாணி அருள்தாராய் கனிந்து

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Jul 24, 2010 9:30 pm

kirikasan wrote:
மதுவுண்ணும் கருவண்டாய் மனதின்பச் சுவைகாணும்
மெதுவாகத் தமிழாலோர் இனிதான கவிதோன்றும்
புதுயாப்பின் விதிபுரியும் பொழுது.


அலையாடும் கடல்போலும் அளவாகும் கவிபாடும்
நிலையாகும் வகைசெய்வாய் நினைந்தேயுன் அடிதொழுதேன்
கலைவாணி அருள்தாராய் கனிந்து
அருமை. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 25, 2010 10:50 am

ஐயா காலையில் எழுந்து வந்தேன். ஒரு எலி ஒன்று ஓடுவதைக் கண்டேன். கற்பனை வந்தது எழுதினேன். எதற்கும் அவசரம் எனக்கு. உடன் தருகிறேன். பிழை இல்லையென்றுதான் நாம்புகிறேன். (கிரிகாசன்)


தறிகெட்டுப் பாயுதுதடா தலைகெட்டோர் எலியொன்று
நெறிகெட்டு வீடெல்லாம் நிலைகெட்டே ஓடுதெனப்
பொறிவைத்துப் பிடியென்றார் சிலர்

அலைவுற்றேன் பொறிவாங்க அதுவென்றும் இதுவென்றும்
விலைமட்டும் பெரிதாயும் விழுபொறியோ சிறிதாயும்
நிலைகண்டும் கொண்டேனொன் றெனக்கு

கலிவிட்டுப் போகுமெலி கதைமுடியப் போகுதெனப்
பொலிவுற்ற இளநீரும் புகுந்தகாய் வெளிர்சொட்டு
வலிந்திறுகிப் பொறிசெய்தேன் வரித்து

இருள்போகும் விடியலுறும் இனிவாழ்வு செழிக்குமென
உருளும்மோர் தலையெண்ணி உள்ளத்துவ கைக்கொள்ளத்
திருநாளாய் மலர்ந்ததொரு தினம்

மெதுவாக நுழையுமெலி மிரண்டேயீர் விழிகொண்டு
இதுவாவுன் வேலையென இழிகண்ணாற் குறுநோக்கி
அதுதள்ளப் பொறிவெடித்த தெழுந்து

என்னவென உரைப்பீர்நம் எலிகூட வெல்லவென
சின்னதொரு பொறியியலைச் சிறப்பாகக் கற்றதுண்டோ
முன்னதுவென் றிலையின்று சமத்து

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Jul 25, 2010 5:41 pm

கிரி,
இவ்வகைப் பாடலை எழுதப் பயிற்சி பெற்று விட்டீர்கள்.

தறிகெட்டுக் குதிக்குதடா தலைகெட்டோர் எலியிங்கே
நெறிகெட்டுத் துணிந்தில்லம் நிலைகெடவே அதுஓட
பொறிவைத்துப் பிடியென்றார் சிலர்.

அலைவுற்றேன் பொறிவாங்க அதுவென்றும் இதுவென்றும்
விலைமட்டும் பெரிதாயும் விழுபொறியோ சிறிதாயும்
நிலைகண்டும் கொண்டேனொன் றெனக்கு.

கலிவிட்டு விலகுமெலிக் கதைமுடிய இதுபோழ்தே
பொலிவுற்ற இளநீரும் புகுந்தகாய் வெளிர்சொட்டு
வலிந்திறுக்கிப் பொறிசெய்தேன் வரித்து.

இருள்போகும் விடியலுறும் இனித்தொல்லைத் தொலையுமென
உருளும்மோர் தலையெண்ணி உளத்தில்மிக் குவகையுற
திருநாளாய் மலர்ந்ததொரு தினம்.

மெதுவாக நுழையுமெலி மிரண்டேயீர் விழிகொண்டு
இதுவாவுன் உளவெனவே இழிவுறவே குறுநோக்கி
அதுதள்ளப் பொறிவெடித்த தெழுந்து.

என்னவென உரைப்பீர்நம் எலிகூட நனியெண்ணிச்
சின்னதொரு பொறியியலைச் சிறப்பாகக் கற்றதுண்டோ
முன்னதுவென் றிலையின்று சமர்த்து.

சிறு மாற்றங்களைக் கவனிக்க.
இனி, அடுத்தவகைப் பாடல் எழுதப் பயில்வோம்.


Sponsored content

PostSponsored content



Page 20 of 50 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 35 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக