புதிய பதிவுகள்
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10 
43 Posts - 45%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10 
43 Posts - 45%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 18 of 50 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 34 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu 4 Mar 2010 - 0:46

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon 12 Jul 2010 - 17:01

வணக்கம் அய்யா,
தங்கள் நலன் அறியத்தருவீர்.


இன்றும் ஒரு வெண்டாழிசை முயன்றுள்ளேன். சரியாக உள்ளதா எனக் கூறுங்கள்.


காய்ந்தஒரு நிலமதனுள் நுழைந்தஒரு செம்மறியும்
மேய்ந்திடஅங் கெதுவுமின்றி யலைந்துதிரிந் துவருந்தி
ஓய்ந்த(து)அது களைத்தவிதம் கொடிது!





அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon 12 Jul 2010 - 18:18

Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

சொந்தமெனத் தமிழ்மொழியை இறையவனும் அருளியதால்
எந்தையினும் பலமடங்கு எமைநடத்தி வருகின்றீர்
எந்தனது பிறவிப்பயன் இது.

*************

காப்பகநிழ லிலிருக்கும் முதிர்தாயவள் அருமகனைக்
காப்பதுமது கடனெனமன முருகியுருகி தொழுகின்றாள்
முப்பெருந்தே விகளைத்தினந் தினம்.

அன்புடன்
யாதுமானவள்





வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க

தொடர்ந்து செய்யும் தவறுகளை மன்னிப்பீர்



எப்பொழுதும் பிழைகளுடன் கவிதைகளை எழுதியபின்

இப்படியேன் எழுதுகிறாய் எனச்சொல்லி நான்வைத்தேன்

தப்பாமலென் தலையில்ஓர் குட்டு!

*************

சொந்தமெனத் தமிழ்மொழியை இறையவனும் அருளியதால்

எந்தையினும் பலமடங்கு எமைநடத்தி வருகின்றீர்

எந்தனது வணக்கமது உமக்கு!

*************

காப்பகத்தில் முதிர்தாயவள் தனியமர்ந்து அருமகனைக்

காப்பதுஉன் கடனென்று மனமுருகித் தொழுகின்றாள்

ஒப்பில்லா துயரன்பில் தினம்.

(***********

இப்போது சரியாக எழுதியுள்ளேன் என நினைக்கின்றேன்.

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon 12 Jul 2010 - 23:34

யாதுமானவர்க்கு,
உங்கள் ஈடுபாடும் ஆர்வமும் போற்றற்குரியன.


எப்பொழுதும் பிழைகளுடன் கவிதைகளை எழுதியபின்

இப்படியேன் எழுதுகிறாய் எனச்சொல்லி நான்வைத்தேன்

தப்பாமல் தலையினில்ஓர் குட்டு!


*************

சொந்தமெனத் தமிழில்பா சுவையாக எழுதுதற்கே

எந்தையினும் பலமடங்கு எமைப்பயிற்றி வருகின்றீர்

எந்தனது வணக்கமதே உமக்கு!


*************

காப்பகத்தில் முதியதாயள் தனியமர்ந்து அரும்மகனைக்

காப்பதும்உன் கடனென்று மனமுருகித் தொழுகின்றாள்

ஒப்பில்லாத் துயரன்பில் தினம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் பாடலில்...
தப்பாமலென் - தப்/பா/மலென் – கனிச்சீராக உள்ளது.
‘தப்பாமல்’ என்பதே காய்ச்சீராக அமைகிறது.

தலையில்ஓர் – சேர்த்தெழுதினால் தலையிலோர் என்றாகும்.
தலையிலோர் – நிரைநிரை என்று ஈரசைச் சீர் ஆகும். காய்ச்சீராக அமைக்க, ‘தலையினிலோர்’ என்று எழுதலாம்.

இரண்டாம் பாடலில்...
பாடலை யாப்பின்படிச் சரியாக அமைத்து எழுதி இருந்தீர்கள். பொருள் பொருத்தத்திற்காகச் சிறு மாற்றம் செய்தேன். நீங்களே கூட இதைவிட நன்றாக மாற்றி எழுதலாம்.

மூன்றாம் பாடலில்...
முதிர்தாயவள் – முதிர்/தா/யவள் – கனிச்சீராக உள்ளது.
‘முதியதாயள்’ என்பது செப்பச் சொல்லாகவும் காய்ச்சீராகவும் அமையும்.
காப்பதுஉன் – சேர்த்தெழுதினால் காப்பதுன் (காப்/பதுன் – ஈரசைச்சீர்) ஆகும்.
காப்பதும்உன் – காய்ச்சீராகும்.

மூன்று பாடல்களை முழு ஊக்கத்தோடு எழுதியமைக்குப் பாராட்டு! தொடர்ந்து எழுதுக.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue 13 Jul 2010 - 2:17

மிக்க நன்றி அய்யா

தாங்கள் திருத்தியமைத்த பாடல்கள் மூலம் தவறுகள் உணர்கிறேன். தவறுகள் அறவே தவிர்த்திட வேண்டுமென்ற எண்ணம் அதிகம் உள்ளதால்தான் நிறைய எழுதுகிறேன். பிழைகள் ஏற்படும்போதுதான் தெளிவாகிறேன். பழகப் பழக தவறுகள் எனைவிட்டு விலகும் என்ற நம்பிக்கைதான் என்னை அதிகம் எழுதத்தூண்டுகிறது. பொறுமைகாத்து என் தவறுகளைத் திருத்தியமைக்கும் தங்களுக்கு என்றும் எனது நன்றிகள்.

இன்னொரு முயற்சி:

அலுக்காமல் பெற்றெடுத்து அனைத்திற்கும் ஒருமனதாய்
முலைப்பாலைத் தருமந்தத் தெருநாய்தன் உயரன்பை
சலிக்காமல் ரசிக்கின்றேன் தினம்.

அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue 13 Jul 2010 - 10:12

காலை வணக்கம் அய்யா,

கீழுள்ள இக்கவிதையை நான் திருத்தியமைத்தேன்,

காய்ந்தபுல் வெளியினிலே புகுந்திட்ட செம்மறியும்
மேய்ந்திடவங் கெதுவுமின்றி யலைந்துதிரிந் துவருந்தி
ஓய்ந்திட்ட விதமந்தோ கொடிது!

அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue 13 Jul 2010 - 22:51

காய்ந்திருந்த நிலவெளியில் நுழைந்திட்ட செம்மறியும்
மேய்ந்திடவங் கெதுவுமின்றி யலைந்துதிரிந் துவருந்தி
ஓய்ந்திட்ட விதமந்தோ கொடிது!

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 67637

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri 16 Jul 2010 - 10:50




காய்ந்தபுல் வெளியினிலே புகுந்திட்ட மறியதற்கே
மேய்ந்திடவங் கெதுவுமின்றி யலைந்துமிகத் திரிந்தயர்ந்தே
ஓய்ந்திட்ட விதமந்தோ கொடிது!


அருமை. சரியாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு. ( சிறு மாற்றத்தைக் கவனிக்க)

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri 16 Jul 2010 - 10:53

காய்ந்தநில வொளியினிலே கடுகியசெம் மறிதானும்
மேய்ந்திடவங் கெதுவுமின்றி யலைந்துமிகத் திரிந்தயர்ந்தே
ஓய்ந்திட்ட வகையந்தோ கொடிது!


இதுவும் சரியாகவே உள்ளது. (சிறு திருத்தத்தைக் கவனிக்க)

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun 18 Jul 2010 - 13:52

வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க அன்னைத் தமிழாளிடம் வேண்டுகிறேன்.


வண்டூதும் ஒலியாலம் மலரதுவும் மலர்ந்ததுவோ
வெண்கதிரோன் தொடும்வெப்பம் உணர்ந்ததினால் விரிந்ததுவோ
என்னவென்று தெரிந்தவரிங் கெவரோ?


****
யாப்பறிந்த புலவரவர் எழுதியபா கிடைத்தவுடன்
பூப்பறித்தார்ப் பரித்துப்புன் நகைக்குமிளங் குமரியாகி
பாப்பொதிந்த புதுஏட்டால் மலர்ந்தேன்.


************
அடுத்து,கீழுள்ள இக்கவிதை சரியா எனத் தெரியவில்லை. தாங்கள் இது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அன்போடு இக்கவிதையையும் சரிபார்க்கவும்.

அலுக்காமல் பெற்றெடுத்து அனைத்திற்கும் ஒருமனதாய்
முலைப்பாலைத் தருமந்தத் தெருநாய்தன் உயரன்பை
சலிக்காமல் ரசிக்கின்றேன் தினம்.


*********

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun 18 Jul 2010 - 23:27

மூன்றாம் பாடல்…

அலுக்காமல் பெற்றெடுத்து அனைத்திற்கும் ஒருமனமாய்
முலைப்பாலைத் தருமந்தத் தெருநாய்தன் உயரன்பைச்
சலிக்காமல் ரசிக்கின்றேன் தினம்.


சரியாக இருக்கிறது.

முதல் இரண்டு பாடல்களிலும் ஈற்றுச்சீர் ‘மலர்’ அல்லது ‘பிறப்பு’ என்ற வாய்பாட்டில் அமைக்கவும்.


Sponsored content

PostSponsored content



Page 18 of 50 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 34 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக