புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 17 of 50 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 33 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Jul 07, 2010 11:09 pm

17. வெண்டாழிசை – 4.

நாம் அடுத்து எழுத இருக்கும் வெண்தாழிசை...

1. மூன்றடிப் பாடல்; முதல் இரண்டடிகள் நாற்சீரடிகள்; மூன்றாம் அடி முச்சீரடி.
2. கடைசிச் சீர் தவிர எல்லாச்சீர்களும் காய்ச்சீர்கள் (மூன்றசைச் சீர்கள்).
3. ஒவ்வொரு அடியிலும் முதல் காய்ச் சீரை அடுத்து வரும் காய்ச் சீர் நிரையில் தொடங்க வேண்டும் (காய் முன் நிரை).
4. மூன்றடிகளிலும் ஒரே எதுகை அமைய வேண்டும்.
5. கடைசிச் சீர் ஓரசைச் சீர்; 'மலர்' அல்லது 'பிறப்பு' என்ற வாய்பாட்டில் அமைய வேண்டும்.


எடுத்துக்காட்டு :

பெற்றவளின் உரிமைகளைப் பிடுங்கிவிட்டு விரட்டியவன்
மற்றவரின் குறையுரையை மறைப்பதற்கு முயலுவதால்
உற்றபழி ஒழிந்திடுமோ ஒருங்கு.
- அரங்க.நடராசனார்

இப் பாடலில், முதல் அடியில் முதல்சீர் – பெற்றவளின் > கூவிளங்காய்; முதல் சீர் நிரையில் தொடங்கவேண்டிய கட்டாயம் இல்லை.
இரண்டாம் சீர் – உரிமைகளைப் > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
மூன்றாம் சீர் – பிடுங்கிவிட்டு > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
நான்காம் சீர் – விரட்டியவன் > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
இவ்வாறே, மற்ற அடிகளிலும் உள்ளதைக் காண்க.

கடைசிச் சீர், ஒருங்கு > ஓரசைச் சீர் ‘பிறப்பு’ என்ற வாய்பாட்டில் உள்ளது.

இன்னொரு எடுத்துக்காட்டு :

செந்தமிழ இனந்தன்னைச் சிறுமதியர் அழித்தொழிக்கப்
பந்தமிலா திவண்இருந்தே பழிசேரத் துணைபோனார்
எந்தமிழர் தலைவரெனல் இழிவு.


இவ்வாறமைந்த வெண்டாழிசைப் பாடலை எழுதுங்கள்.
எந்த ஐயம் தோன்றினாலும் தயங்காது கேளுங்கள்.
நீங்கள் விரும்பும் நல்ல கருத்தமைத்து எழுதுங்கள்.


(உதவியாக இருந்த ‘நற்றமிழ்’ மாத இதழுக்கு நன்றி.)


avatar
குணமதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010

Postகுணமதி Wed Jul 07, 2010 11:37 pm

asdf

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Jul 08, 2010 8:00 am

காலை வணக்கம் அய்யா. தங்கள் நலன் காக்க! வெண்தாழிசை- 4 ல் முதல் முயற்சி

தூங்குகின்ற அறிவிலியை நாகப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் விட்டுவிடு
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.

அன்புடன்
யாதுமானவள்.

(குணமதி அவர்களுக்கு, தங்கள் வாழ்த்திற்கு நன்றி)

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Jul 08, 2010 9:05 am

திருத்தம்: அய்யா மன்னிக்க! எழுதும்போது சரியாக இருப்பதாகவே தோன்றுகிறது.பிறகுதான் தவறுகள் புரிகிறது,


தூங்குகின்ற அறிவிலியை விஷப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் விட்டுவிடு
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.

அன்புடன்
யாதுமானவள்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Jul 08, 2010 1:29 pm

தூங்குகின்ற அறிவிலியை விஷப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் எழுப்பாதே
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.

அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Jul 08, 2010 6:16 pm

வணக்கம் அய்யா, எப்போதும் தங்கள் நலம் காக்க!


எப்போதும் பிழையில்லாக் கவியெழுத முயல்கின்றேன்
தப்பாமல் தொடர்கின்ற தவறுகளைத் தடுத்திடவே
எப்போது தமிழன்னை வருவாள்?


நான் எழுதும் கவிதைகளில் நிறய தவறுகள் ஏற்படுவது குறித்து மிகவும் வருத்தமாக உள்ளது சோகம்

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Jul 08, 2010 6:39 pm

Yaadhumanaval wrote:தூங்குகின்ற அறிவிலியை விஷப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் எழுப்பாதே
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.

அன்புடன்
யாதுமானவள்

உங்கள் ஆர்வமும் முயற்சியும் பாராட்டிற்குரியன!
தூங்குகின்ற அறிவிலியைக் கொடும்பாம்பை எழுப்புவதால்
ஈங்குபயன் விளைவதில்லை எழுப்பாதே உறங்கட்டும்
தீங்கதனால் வருமென்றே தெரிந்து.

ஈங்கொருபயன் - கூவிளங்கனி அல்லவா? காய்ச்சீர் தானே வரவேண்டும்.
இறுதிச்சீர் அரசன் - மலர், பிறப்பு வாய்பாட்டில் அமையாமல் ஈரசைச்சீராக இருந்ததால் மாற்றி உள்ளேன்.

ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் பாராட்டு.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Jul 08, 2010 6:54 pm

Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா, எப்போதும் தங்கள் நலம் காக்க!


எப்போதும் பிழையில்லாக் கவியெழுத முயல்கின்றேன்
தப்பாமல் தொடர்கின்ற தவறுகளைத் தடுத்திடவே
எப்போது தமிழன்னை வருவாள்?

நான் எழுதும் கவிதைகளில் நிறய தவறுகள் ஏற்படுவது குறித்து மிகவும் வருத்தமாக உள்ளது சோகம்
அன்புடன்
யாதுமானவள்
எப்போதும் பிழையில்லாக் கவியெழுத முயல்கின்றேன்
தப்பாமல் தொடர்கின்ற தவறுகளைத் தடுத்திடவே
எப்போது துணைத்தமிழாம் எனக்கு?


பாடல் சிறப்பாக உள்ளது.

பாராட்டு.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jul 09, 2010 11:20 am

காலை வணக்கம் அய்யா. தங்கள் நலன் காப்பீர்!

தங்கள் பாராட்டு கண்டு மகிழ்கிறேன். நன்றிகள் பல


எந்தையினும் பலமடங்கு எனைநடத்தி வருகின்றீர்
சொந்தமென தமிழ்மொழியை இறையவனும் அருளியதால்
எந்தனது வணக்கமது உமக்கே!

அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Jul 10, 2010 3:55 am

வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

சொந்தமெனத் தமிழ்மொழியை இறையவனும் அருளியதால்
எந்தையினும் பலமடங்கு எமைநடத்தி வருகின்றீர்
எந்தனது பிறவிப்பயன் இது.

*************

காப்பகநிழ லிலிருக்கும் முதிர்தாயவள் அருமகனைக்
காப்பதுமது கடனெனமன முருகியுருகி தொழுகின்றாள்
முப்பெருந்தே விகளைத்தினந் தினம்.

அன்புடன்
யாதுமானவள்

Sponsored content

PostSponsored content



Page 17 of 50 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 33 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக