புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
75 Posts - 36%
i6appar
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
2 Posts - 1%
prajai
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
75 Posts - 36%
i6appar
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
2 Posts - 1%
prajai
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_m10தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sat Jun 26, 2010 6:38 pm

இக்கால நாகரீக உலகில் மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளும், உபயோகிக்கும் பொருள்களும் ஏராளமாகப் பெருகியிருக்கின்றன. விதவிதமான ஆயத்த ஆடைகள், (Ready mades); கலைநயம் மிக்க சேலைகள்! கண்கவரும் ஆபரணங்கள்! கவர்ச்சிகரமான அலங்காரப் பொருட்கள், பலவகையான வீட்டு உபயோக சாதனங்கள், பெண்களின் அழகை மெருகூட்டும் பொருட்கள்! இன்னும் விதவிதமான வாகனங்கள், இருசக்கர ஊர்திகள், கணிணி வகைகள், புதிது புதிதாக விற்பனைக்கு வரும் அலைபேசிகள்! ஆக இப்படி லட்சக்கணக்கான பொருட்களை மக்கள் பெரும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பெரும் கடைகளிலும் மற்றும் சிறிய கடைகளிலும் தினந்தோரும் வாங்கிச் செல்கிறார்கள். இப்படி குவித்தும், அடுக்கியும், ஷோ கேஸ்களில் அலங்கரித்தும் வைக்கப்பட்டுள்ள பொருள்களில் மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுபனவற்றையும், அவசியமானவற்றையும்தான் வாங்குகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அமெரிக்காவில் 20 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி தேவையில்லாமலேயே எண்ணற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனோநிலையை உடையவர்களாக இருக்கிறார்கள். இன்னுமொரு புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் 17 மில்லியன் நபர்கள் இப்படிப்பட்ட பொருட்களை தேவையின்றி வாங்கிக் குவிக்கும் கட்டுப்பாடற்ற மனோயிச்சையால் துன்பமும் அவதியும் படுகிறார்கள். இம்மனநிலையை ‘வாங்கிக் குவிக்கும் மனஅழுத்த சீர்கேடு’ (compulsive shoping disorder) என்றும், ‘பொருள் வாங்குதலில் தேட்டமுடையவன்’ (shopaholic) என்றும் அழைக்கிறார்கள். ‘Shopaholic’ என்னும் சொல் ‘alcoholic’ என்ற ஆங்கில சொல்லின் பொருள்படும் ‘நிறுத்தாத குடிகாரன்’ மற்றும் ‘workaholic’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் கொண்ட ‘இடைவிடாது பணிசெய்து கொண்டிருப்பவன்’ என்பது போன்றவையே! இப்படிப்பட்ட மனக்கட்டுப்பாடற்ற நிலை மக்களுக்கு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை ஆராய்வோமானால் அதற்குப் பல காரணங்களைக் கூறமுடியும். முதலாவது காரணம்: மக்கள் உலக இன்பங்களில் மூழ்கி சுவைத்து மறுமை இன்பங்களை மறந்திருக்கிறார்கள். உலக மக்கள் பலமதங்களை பின்பற்றுபவர்களாக இருந்தும் இறைநம்பிக்கையும், மறுமைப்பற்றிய சிந்தனையும், இவ்வுலக வாழ்வு மிகக்குறுகிய, நிலையற்ற வாழ்வு என்னும் உண்ணமையும் மனதில் ஆழப்பதியாததே! அதிலும் இளைஞர்களின் எண்ணங்கள் இன்னும் விபரீதமாய் இருக்கின்றன. “வாழ்க்கை வாழ்வது ஒருமுறையே; அதனால் அவ்வாழ்க்கையில் எல்லாவிதமான இன்பங்களையும், சாதனங்களையும் அனுபவித்து மகிழ வேண்டும்” என்பது தான். இப்படிப்பட்ட மனநிலையிலுள்ள ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களுக்கு தேவையான பொருட்களை மற்றுமின்றி தேவையில்லாத பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இவர்களில் பொருளாதார வசதியுடையவர்கள் தான் இப்படி ‘ஷாப்பஹாலிக்காக’ (shopaholic) இருக்கிறார்களா என்றால் அவர்கள் மட்டுமல்லாது நடுத்தர வசதியுடையவர்களும் (middle class) இப்படிப்பட்ட மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்பு எடுக்கப்ட்ட புள்ளிவிபரப்படி, 10 ஷாப்பஹாலிக்குகளில் 9 பேர் பெண்களாகவும் ஒருவர் ஆணாகவும் இருந்தார். தற்பொழுது ஆண்களிலும் இம்மனோநிலை கொண்டவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இரண்டாவது காரணம்: பெருமையடிப்பது. மற்றவர்களிடம் இல்லாத புதுப்புதுவகையான பொருட்கள் தன்னிடம் உள்ளது என்று தனது தோழர்கள் மற்றும் தோழியர்களிடம் காட்டுவது. இதில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். கடைகளில் ஏதாவது புதிய மாடல் நகை விற்பனைக்கு வந்திருந்தால், பழைய நகைகளை விற்றுவிற்று அப்புதிய மாடல் நகையை உடனே வாங்கி அணிந்து கொள்கிறார்கள். பெருமையோடு தம் உறவினர்களிடமும், தோழிகளிடமும் காட்டுகிறார்கள். இதுபோல் ஒவ்வொரு முறையும் நகைகளை மாற்றும்பொழுது எந்த அளவுக்கு பணம் வீணாக செலவாகிறது என்பதை இப்பெண்கள் உணர்வதில்லை. இம்மனநிலையை ஆய்வுசெய்யும் நிபுணர்கள் இது ஒருவகையான ‘நாகரீகத்தின் மேல்படியில் நிற்பவர்கள் நான்தான் என்று காட்டும் மனநிலை’ என வர்ணிக்கிறார்கள். மூன்றாவது காரணம்: பொருட்களை தேவையில்லாமல் ஆசைப்பட்டவற்றையெல்லாம் வாங்கிக்குவிப்பது. ஒரு பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு எத்தனை ஆடைகள் தேவைப்படும்? ஒரு நடுத்தர வர்க்கத்தில் உள்ள பெண்ணாயிருந்தால் அவருக்கு 5 முதல் 10 சேலைகள் தேவைப்படலாம். செல்வந்தர்களாக இருந்தால் 10 முதல் 20 சேலைகள் வாங்கி அணியலாம். இவையெல்லாம் மிதமான தேவைகள். ஆனால் தற்காலத்தில் என்ன நடக்கிறது? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்! ஒரு மாப்பிள்ளை வீட்டார் கல்யாணப் பெண்ணுக்கு 100 முதல் 120 புடவைகளும் அதற்கு ஏற்றார்போல் சட்டை துண்டுகளும் வாங்கி ஒரு பெரிய பெட்டியில் (suit case) வைத்து கொடுக்க்க வேண்டுமாம். அதுமட்டுமல்லாமல், ஒருவர் வளைகுடா நாடுகளில் பணிபுரிபவராய் இருந்தால் ஒவ்வொரு தடவையும் தான் தாயகம் திரும்பும்போது தன் மனைவிக்கு 50 முதல் 60 சேலைகள் வரையில் வாங்கிக் கொண்டுபோய் கொடுக்கிறார். இவ்வளவு ஆடைகள் ஒரு பெண்ணிற்கு தேவையானதா? நிச்சயமாக இல்லை! மேலும் சில பெண்கள் திருமணத்திற்கு அழைப்பின்பால் செல்லும் போது ஒரு புதிய சேலையை அணிந்துக் கொண்டுதான் செல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு ஊரில் ஒருவருடத்தில் 25 திருமணங்கள் நடைபெறுவதாக வைத்துக்கொண்டால், ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு புதுப்புடவை வீதம் 25 புடவைகளை வாங்கிக் குவிக்கிறார்கள். பெரும் செல்வந்தர்கள் கூட இப்படிபட்ட வீண்விரயத்தை செய்யக்கூடாது என்று இருக்கும் போது நடுத்தரவர்க்க மக்கள் இப்படிப்பட்ட வீண்விரயத்தை செய்து பொருளாதாரத்தை அழிக்கலாமா? இதை இறைவன் மறுமையில் விசாரிக்க மாட்டான் என்று இப்பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? நான்காவது காரணம்: பெண்களிலும் சரி, ஆண்களிலும் சரி, தனது வீட்டை மற்றவர்களைவிட அலங்கரிக்க வேண்டும் என்ற மனஉந்தல் மிகுதமாய் இருக்கிறது. வீடுகட்டும் பொழுது அவ்வீடு அங்கு குடியிருக்கப்போகும் குடும்பத்தினருக்குப் போதுமான வசதியுடையதாகவும், போதுமான அறைகள் உடையதாகவும் இருக்கவேண்டும் என்பது தான் எல்லோரின் விருப்பமும். ஆனால் வீட்டின் உட்புறம் செய்யக்கூடிய வசதியைவிட வீட்டிற்கு வெளிப்புறமும் முகப்பிலும் பெரும் அலங்காரங்களை செய்தும், தூண்களை கட்டியும், மேலும் மார்பில் (marble) போன்ற சலவைக்கற்களை சுவரெங்கும் பதித்தும் அலங்காரம் செய்வது வீண்விரயமாய் ஆகாதா? அதிலும் முஸ்லிம் அல்லாதவர்களின் வீடுகளைவிட முஸ்லிம்களின் வீடுகள் வீண் அலங்காரங்களின் உறைவிடமாக காட்சி அளிக்கின்றன. எனக்குத் தெரிந்த ஒருவர் – என்னுடன் சிறுவயதில் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர் – ஒரு மிகப்பெரிய அலங்காரமான வீட்டைக் கட்டியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே அவருடைய தகப்பனார் கற்கோட்டையைப் போன்ற ஒரு பெரிய வீட்டை கட்டிவைத்துவிட்டுத் தான் மரணம் அடைந்தார். மகனுக்கு அந்த பழைய மாடல் வீடு பிடிக்கவில்லை. ஊரில் மதிப்பாகவும், அலங்காரமாகவும் புதிய வீட்டில் வாழ ஆசைப்பட்டார். ஆகையால் பழைய வீட்டை முற்றாக இடித்துவிட்டு அதே இடத்தில் பல லட்ச ரூபாய் செலவில் புதிய வீட்டை கட்டிவிட்டார். இச்செயலை என்னவென்று கூறுவது? தன் தகப்பனார் கட்டிய வீட்டில் சிறுசிறு திருத்தங்களைச் செய்து அவர் நினைவாக தன் குடும்பத்தினரோடு வாழ்ந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்? அல்லது வேறொரு இடத்தில் ஒரு புதிய வீட்டைக் கட்டியிருந்தாலும் பரவாயில்லை! தற்காலத்தில் முஸ்லிம்களின் ஆடம்பரம் எல்லைக் கடந்து விட்டதை மேற்கூறிய ஒரு உதாரணத்தைக் கொண்டே அறியலாம். முதலில் ஒவ்வொரு முஸ்லிமும் – ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் – தனது ஆசையென்ன? வாழ்க்கைக்கு தேவையானவை என்னென்ன? என்று உணர்ந்துக் கொள்ளவேண்டும். மறுமை நாளை நம்பிக்கைக் கொண்டுள்ள ஒரு முஸ்லிம் இந்த ஒன்றை மட்டும் நன்கு உணர்ந்துக் கொண்டால் இவ்வுலகில் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டும், அதேசமயம் வீண்விரயமும் செய்யாமலும் இறைவனுடைய உவப்பைப் பெற்று வாழலாம். நமது ஆசைகள் எவை, தேவைகள் எவை என்பதை எப்படி அறிந்துக் கொள்வது? இன்ஷா அல்லாஹ் காண்போம்


இத்தொடர் ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியில் பொதுவாக மக்கள், குறிப்பாக பொருள்களை வாங்கிக் குவிக்கும் அடங்கா ஆசை கொண்டவர்கள் (compulsive shopping nature), பொருள்களின் மீது மிகுந்த ஆசையுடையவர்களாகவும், அதற்கான பொருளாதார வசதியில்லாதவர்கள் கூட கடன் வாங்கியோ அல்லது தவனை முறையிலோ பொருள்களை வாங்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை அறிந்தோம்.

மேலும் பணிகளுக்கு செல்லும் ஆண்களும் பெண்களும் ரொக்கமாக கொடுத்து பொருள்களை வாங்க முடியாவிட்டால் தங்களது கிரெடிட் கார்டு (credit card) மூலம் பொருள்களை வாங்க முற்படுகிறார்கள். கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருள்களுக்கு உண்டான தொகையை அடுத்த மாதத்திற்குள் கிரெடிட் கார்டு பெற்றுக் கொண்ட வங்கியில் செலுத்தத் தவறினால் அதற்கு மிக அதிக சதவீதம் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். அமெரிக்காவில் கிரெடிட் கார்டுகள் மூலம் பொருள்களை கணக்குவழக்கில்லாமல் வாங்கிக் குவித்து முழுமையாக திவாலானவர்கள் (Bankrupcy) பல லட்சம் பேர்கள்! இருப்பினும் உடனே ரொக்கத்தை கொடுக்காமல் நினைத்த பொருள்களை வாங்க முடிகிறதே என்ற எண்ணத்தில் பொருள்களை தேவைப்படாவிட்டாலும் வாங்கிவைத்துக் கொள்பவர்கள் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றார்கள்.

மிகப்பெரும் செல்வந்தர்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் தங்களுக்குப் பிடித்தமான பொருள்களை வாங்கி அனுபவிக்க எத்தகைய செலவையும் செய்யத்தயாராக இருக்கிறார்கள். உலகப்புகழ் (?) ஷாப்பஹாலிக்குகளில் சிலருடைய பெயர்கள் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அவர்களின் பெயர்கள் – மேரி ஆன்டாய்னெட் (Marie Antoinette), மேரி டோட் லிங்கன் (Mary Todd Lincon), வில்லியம் ரண்டால்ப் ஹீஸ்ட் (William Randolph Hearst), ஜாக்குலின் கென்னடி ஒனாயிஸ் (Jacqualine Kennedy Onasis), இமால்டா மார்கோஸ் (Imelda Marcos) மற்றும் இளவரசி டயானா (Princess Diana) என்பவர்களாகும்.

இவர்களின் விபரீத ஆசைகள் (addiction), விதவிதமான உடைகள் (ஜாக்குலின், டயானா), கலைப்பொருள்களும், பழங்காலப் பொருட்களும் (art & antiques) – (ஹீஸ்ட்), காலனிகளும் (shoes) – இமால்டா – பிலிப்பைன்ஸ் (Philiphines) நாட்டு சர்வாதிகாரி மார்கோஸின் மனைவி இமால்டா மார்கோஸ் வசித்த மாளிகையில் சோதனையிட்ட காவலர்கள், (மார்கோஸை புரட்சியின் மூலம் நாட்டைவிட்டு துரத்திவிட்டு) இமால்டாவின் காலனிகளின் மொத்த எண்ணிக்கையாக 8000 ஜோடிகள் இருந்ததாகக் கண்டார்கள் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதையெல்லாம் பார்க்கும் போதும் இப்படிப்பட்ட வாங்கும் பைத்தியங்கள் கூட உலகில் இருந்திருக்கிறார்களா என்று நாம் வியப்புறத் தோன்றும்.

இன்றும் சில கொழுத்த பணக்காரர்கள் உலகில் பலநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு விஷேசமான பொருட்களை (rare items) சேகரித்து வைத்துக் கொண்டு அழகுபார்ப்பது ஒரு பொழுது போக்கு அல்லது ஓய்வு நேரப்பணி (hobby) ஆகும். இப்படி சேகரிப்பவர்களிடம் உள்ள பொருள்களின் வகைகளுக்கு அளவே இல்லை. சிலர் பழையகாலத்து மோட்டார் வாகனங்களை (antique cars) சேகரிக்கிறார்கள்! சிலர் பழைமை கால கைக்கடிகாரங்களையும், சுவர் கடிகாரங்களையும் மேலும் சிலர் வகைவகையான மோட்டார் சைக்கிள்களையும், இன்னும் சிலர் தங்கம், வைரங்கள் பதிக்கப்பட்ட முட்டையையும் (நிஜ முட்டையல்ல – அலங்காரப் பொருள்) (Eggs), மேலும் சிலர் பழங்காலம் முதல் நிகழ்காலம் வரை வெளியிடப்பட்ட கரண்ஸி நோட்டுகள் மற்றும் நாணயங்களையும், சேகரித்து வருகிறார்கள். இன்னும் சிலருக்கு புத்தகங்கள் , சிலைகள், இசைக் கருவிகள், ரிக்காட்டுகள் என்று எண்ணிலடங்காத சேகரிக்கும் பொருள்கள் (collector’s items) உள்ளன. சிகெரெட் லைட்டர்ஸ் (cigarette lighters) முதல், தீப்பெட்டிவரை (match boxes) சேகரிக்கும் பொருள்களாக உள்ளது. இப்பொருட்கள் சிலசமயம் மிகப்பெரும் தொகைக்கு இன்னொரு சேகரிப்போரால் (collector) வாங்கிக்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் இப்படிப்பட்ட சேகரிப்போருக்கு மனஉள்திருப்தியைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. பொருளாதார நஷ்டம் ஏற்பட்டதுதான் கைமேல் கண்டபலன்.

இப்படிப்பட்ட ஷாப்பஹாலிக்குகளாய் இருந்தாலும், மற்றும் ஒரே வகையானவைகளை சேகரிப்பவராக இருந்தாலும் இஸ்லாம் இவர்களுக்கு என்ன அறிவுரை வழங்குகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

திருக்குர்ஆனில் வல்ல இறைவன் தன் உண்மையான அடியார்களைப் பற்றி கூறும் பொழுது பின்வருமாறு கூறுகிறான்:

“மேலும் அவர்கள் (உண்மையான அடியார்கள்) செலவு செய்யும் போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்” (அல்-குர்ஆன், அல்-ஃபுர்கான் 25:67)

இத்திருவசனத்திலிருந்து இறைவன் ‘வீண்விரயம் செய்வோரையும்’ ‘கஞ்சத்தனம் செய்வோரையும்’ தன் உண்மையான இறை நம்பிக்கையாளராய் ஏற்றுக்கொள்வதில்லை என்று கண்டோம்.

இன்னொரு திருவசனத்தில் அல்லாஹ் (சுப்ஹா…) கூறுகிறான்:

“உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டிவிடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும், இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர்” (அல்-குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)

‘ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களை’ குறிப்பிடும் பொழுது அல்லாஹ் (சுப்ஹா…), ‘கையை முற்றிலும் விரித்துவிட்டவர்’ என்று உவமானத்தோடு குறிப்பிடுகின்றான். இவர்கள் முதலில் பழிப்பிற்குரியவர்களாகவும், பின்னர் எதுவும் கொடுக்க அல்லது வாங்க இயலாதவராகவும் ஆகிவிடுவார் என்பது கண்கூடாக காண்பதாகும்.

பிறிதொரு இறைவசனத்தில் ‘வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்’ என்று குறிப்பிட்டு ஷைத்தானாகவே அடையாளம் காட்டுகின்றான். அத்திருவசனம் பின்வருமாறு உள்ளது:

“உறவினர்களுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடும். ஆனால் வீண் செலவு செய்யாதீர்! நிச்சயமாக வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான்” (அல்-குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)

வீண் விரயம் செய்யாதீர்கள், அப்படி செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவர் என்று கூறுவதற்கு முன்னர், இறைவன் தன் அடியானுக்கு கொடுத்திருக்கும் பொருளாதாரத்திலிருந்து உறவினர்களுக்கும், வரியவர்களுக்கும், மேலும் வழிப்போக்கர்களுக்கும் உரிய பங்கினை வழங்கிவிடுமாறு அறிவுரை பகர்கின்றான். இதில் கடமையாக்கப்பட்ட ஜக்காத்தும், உபரியாக செய்யும் தான தர்மங்களும் (ஸதகாவும்) அடங்கும். ஒவ்வொரு முஸ்லிமும் தனது செல்வ நிலைக்கேற்ப கணக்குப் பார்த்து ஜகாத்தும், அதற்கு மேலாக சதகாவும் வருடாவருடம் கொடுத்து வருவாரேயானால் அவரை இறைவன் வீண் செலவுகள் செய்து ஷைத்தானின் சகோதரனாக ஆவதைவிட்டும் பாதுகாப்பான்.

ஆனால் நிலைமை இன்று எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தால், அதிகமாக வீண் செலவு செய்பவர்கள் ஜக்காத் கொடுக்காதவர்களாகவும், மற்ற தானதர்மங்களைச் செய்யாதவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் செல்வங்களையெல்லாம் தனது ஆடம்பர வாழ்க்கைக்கும், அலங்கார பொருட்களுக்கும் தேவைக்குமேல் வாங்கிக் குவிக்கும் சாதனங்களுக்கும் செலவிடப்படுவதால் சேமிப்பு என்பது பூஜ்ஜியமாக இருக்கிறது. ஒரு முஸ்லிமுக்கு தனது செலவுக்குப் போக மீதம் சேமித்த தொகை அவனிடம் ஒரு வருடம் பணமாகவோ அல்லது விற்பனைக்கு இருக்கும் நிலம் போன்றவைகளாகவோ இருந்தால் தான் ஜக்காத் கடமையாகிறது. ஆனால் தன் ஆடம்பரச் செலவுகளாலும் வீண் செலவுகளாலும் பணத்தை அழிக்கும் ஒருவர் ஜக்காத் கொடுக்க எப்படி முடியும்? அப்படி கொடுத்தாலும் மிகக்குறைவாகவே கொடுப்பார்; கணக்குப் பார்த்துக் கொடுக்கமாட்டார். ஆகையால் தான் அவரை ‘ஷைத்தானின் சகோதரராய்’ இறைவன் வர்ணிக்கின்றான்.

இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறியாக இருப்பதால் இறைவன் தனது அடியானுக்கு – தன்மேல் நம்பிக்கை கொண்ட இறைநம்பிக்கையாளனுக்கு – வீண் செலவு செய்தல் மற்றும் பொருள்களை வீண் விரயம் செய்வதை முற்றாக தடுத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுரை பகர்கின்றான். ஒரு முஸ்லிம் வீண்செலவை கட்டுப்படுத்திக் கொள்ள இந்த ஒரு அறிவுரையே போதும். ஒரு முஸ்லிம் ஊதாரித்தனமாய் வீண் செலவு செய்யாமலும், கஞ்சத்தனமாய் செலவு எதுவும் செய்யாமலும் இருக்கக்கூடாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் – மிதமாக செலவு செய்வதுதான் ஒரு முஸ்லிம் தனக்கும், தன் குடும்பத்திற்கும், ஏன் தன் நாட்டிற்கும் நன்மைகளை பெறமுடியும்.

வீண் செலவு செய்து தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஒருவனின் பொருளாதாரம் மட்டும் அழிவதில்லை. மாறாக இப்படிப்பட்ட மக்கள் பல ஆயிரம் பேர்கள் இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்



From Suvanthenral.com

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 26, 2010 8:53 pm

மிகவும் நல்ல பயனுள்ள ஹதீஸ் நன்றி.



தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ammuraji
ammuraji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 27/06/2010

Postammuraji Sun Jun 27, 2010 6:04 pm

good informetion thank
asksulthan

by
ammuraji தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை 678642 தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் விபரீத ஆசை 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 29, 2010 10:13 am

நீண்ட அருமையான விளங்கிருக்கவேண்டிய தகவல் நன்றி தோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக