புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
21 Posts - 70%
heezulia
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
1 Post - 3%
viyasan
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
குட்டிக்கதைகள் Poll_c10குட்டிக்கதைகள் Poll_m10குட்டிக்கதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக்கதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 20, 2010 5:41 pm

1

ஒரு ஊரில் நான்கு வேலையில்லாத வெட்டிப்பேர்வழிகள் எங்கேயாவது அமர்ந்துகொண்டு எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருந்தனர்.

அதே ஊர்க்காரன் வேறு ஒருவன் அவர்களிடம் வந்து உங்களில் யார் பேசாமல் இருக்கிறீர்களோ,அவர்களுக்கு நான் ஒரு பெரிய பரிசு தரப்போகிறேன் என்றான்.

நால்வரும் அமைதியாயினர். சொன்னபடியே யாரும் வாய் திறக்கவில்லை.

‘ஏன் நீங்கள் யாருமே பேசவில்லையா’ பேசாமல் இருந்தால் மட்டுமே அவர்கட்குப் பரிசுதருவதாய்ச்சொன்ன அவனே அவர்களிடம் ஒர் கேள்வி வைத்தான்.

முதலாமவன் பதில் சொன்னான்.

‘ நீங்க தானே சார் எங்களை ப்பேசாமல் இருக்குணுண்ணு சொன்னது’ என்று சொல்லி ப் பேசிவிட்டான்.

இரண்டாமவன் குறுக்கே பாய்ந்து நியாயம் சொன்னான்’ நீங்க கேட்ட கேள்விக்கு ஒரு பதிலு மட்டுமே சொன்னான். அவன் ஒண்ணும் உங்ககிட்ட பேசிடல’

இப்படிச்சொல்லிப் பேசி முடித்தான்.

மூன்றாமவன் வெடுக்கென்று, ‘ நீங்க ரெண்டு பேருமே இப்ப பேசிட்டிங்க’

என்று சொல்லிய தானும் தன் பங்குக்குப்பேசிவிட.

இதனைப்பார்த்துக்கொன்டிருந்த நாலாமவன்,

‘நான் தான் தப்பிச்சேன் வாயத்தொறந்துப்பேசிட்டு ஒண்ணும் மாட்டிகில’ சொல்லி முடித்துவைத்தான்..

பரிசு தருவதாக சொன்னவன் ‘ அடுத்த ஊர் சந்தைக்குப்போயி உதைக்காத கழுதையா பாத்து ஒண்ணு வாங்கியாங்க உங்கள்ள ஆரு முதல்ல அந்தக்கழுதய இங்க வாங்கி வந்தாலும் கட்டாட்யம் ஒரு பரிசு உண்டு’ மீண்டும் சொன்னான்.

இன்னும் நால்வரும் அந்த உதைக்காத ஒரு கழுதைக்காகத்தான் இன்னும் சந்தை முழுவதும் அலைந்து திரிகின்றனர்.



குட்டிக்கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 20, 2010 5:42 pm

2

ஒருவன் வீட்டுத்தோட்டத்தின் இரவு நேரத்தில் மட்டும் கதவைத்திறந்தால் உடனே பெரிய பெரிய கற்கள் வானத்திலிருந்து பொத் பொதென்று வீழ்ந்தன. எத்தனை நாள் இதே துன்பம். அவனால்

ஒன்றும் சமாளிக்கவே முடியவில்லை. ஒரு சாமியாரிடம் சென்று யோசனை கேட்டான்.

சாமியார் சொன்னார் ‘உன் வீட்டுத்தோட்டத்தில் ஒரு மினி இருக்கிறது. அதனை வீட்டுத்தோட்டத்தில் கிடக்கும் பெரிய கல் உரலில் மந்திர சக்தியால் பிணைத்து க்கட்டி விடுகிறேன். ஒரு நூறு ருபாய் மட்டும் செலவாகும் நீ வீட்டைக்காலி செய்துகொண்டு அடுத்த ஊருக்கு போய் விடு அது தான் சரி’

என்றான். குடியிருந்த வீட்டுத் தோட்டத்துக்கதவை அவன் திறக்காமலே தன் வீட்டைக்காலி செய்து கொண்டு சாமியாரிடம் ஒரு நூறு ருபாய் பணம் கொடுத்து விட்டு மாட்டு வண்டியில் வீட்டு ஜாமான்களை ஏற்ரிக்கொண்டு புறப்பட்டான்.

அடுத்த ஊரில் ஒரு வாடகை வீடு பார்த்து கொண்டுபோன தன் ஜாமான்களை இறக்கிமுடித்தான்.

அன்று இரவு தன் புதிய வீட்டுக்கதவைத்திறந்து பார்த்தான்.

பொத்தென்று ஏதோ வீழும் ஒலி மீண்டும் கேட்டது. தன் பழைய வீட்டு கல் உரல் தான் கீழே வந்து இறங்கியது.

‘ கல் உரலை விட்டு விட்டு வந்துவிட்டாய், நீ என்ன செய்வாய் அதான் பார்த்தேன் அந்தகல் உரலையும் பேர்த்து எடுத்துக்கொண்டு நான் வரவேண்டும் அல்லவா அதான் கொஞ்சம் தாமதம் இப்போதுதான் வந்தேன்’ அதே மினிதான் பதில் சொன்னது.

‘ போச்சி மோசம் ஏ பாழாய்ப்போன மினியே இங்கயும் வந்துட்டயா நீ’’’ ‘ அலறினான் அவன்.

‘ இந்த ஊருலயும் உனக்கு ஒரு சாமியாரு இல்லாமலா உடனே போய் பாரு ஒரு நல்ல யோசனை சொல்லுவாரு ‘

மினி கச்சிதமாய்ப்பதில் சொன்னது.

------------------------------------------------------------------------------------------------



குட்டிக்கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Feb 20, 2010 5:43 pm

யாரு தல நீங்க தானே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 20, 2010 5:43 pm

3

நான்கு மூடர்கள் ஊர் ஊராக சுற்றி ச்சுற்றி வந்தனர். ஒரு நாள் மாலை நேரம் நன்கு இருட்டியும் விட்டது.

நால்வரும் அப்படியே பாதையில் கொஞ்சம் ஒரமாய்ப் படுத்து உறங்க ஆரம்பித்தனர்.

திருடர்கள் இருவர் அப்போது அந்த வழியே வந்தனர். ஒரே கும்மி இருட்டு.

ஒரு திருடன் சொன்னான், ‘ வழியில கருப்பா கட்டைவ சிலது கிடக்கும் போல பாத்துவா’

என்றான் மற்றொருவனிடம்.

நான்கு மூடர்களில் ஒருவனிடம் மட்டும் ஒரு கால் ரூபாய் திட்டு இருந்தது. அதை அவன் கோவணத்தில் முடித்து

வைத்திருந்தான்

எல்லா மூடர்களும் உறங்குவது போல் பாசாங்கு செய்தனர்

எல்லாரையும் தாண்டித்தாண்டி இரு திருடர்களும் சென்றனர்.

‘ பாத்து வா இங்க பெரியகட்ட ஒண்ணும் கிடக்கு’ முதலில் சென்ற திருடன் மீண்டும் எச்சரிக்கை செய்தான்..

கோவணத்தில் காசு முடிந்து வைத்திருந்த அந்தத் திருடனுக்கு சும்மா இருக்க முடியவில்லை.

‘ இந்த பெரிய கட்டயும் ஒண்ணும் சும்மா கெடக்கவில்லை. ஒரு நாலணா பணத்தை கோமணத்துல முடிஞ்சிகினுதான் படுத்து இருக்கு’ என்று தன் பெருமை பேசினான்.

‘ ஆகா கட்டை இல்ல இதுவ. எல்லாம் ஆளுவதான் . ’ சொல்லிய திருடர்கள் நால்வருக்கும் தலா ரெண்டு உதை சரி வாட்டமாய்க் கொடுத்தனர். அந்தக் கால் ரூபாய் பணத்தையும் பிடுங்கிக்கொண்டு திருடர்கள் அங்கிருந்து புறப்பட்டார்கள்.



குட்டிக்கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 20, 2010 5:44 pm

4


ஒரு குடியானவன் வயலில் நெல் பயிர் செய்திருந்தான். அவ்வயலின் ஒரு வரப்பின் மீது ஒரு கருவேல் மரம் ஒங்கி வளர்ந்திருந்தது.. அதன் மீது பறவைகள் சில அமர்ந்திருந்தன

மரத்தின் நிழலால் அதன் அடியிலிருந்த நெற்பயிர்கள் சரியாக வளரவில்லை. ஆக அக்குடியானவன் மரத்தை வெட்டிவிடுவதாக முடிவு செய்தான் அதைக் கேட்டுவிட்ட அந்தமரம் பறவைகளிடம் சொல்லிப் புலம்பியது.

‘ நிழல் என்னாலா வந்தது நீங்களே சொல்லுங்கள் குடியானவன் என்னை ஏன் வேட்டவேண்டும்’

மரத்தில் அமர்ந்திருந்த பறவைகள் கூறின,

‘ உன்னை வெட்டிவிட்டால் எங்களுக்கு வேறு ஒரு மரம் கிடைக்கும்

ஆனால் நீ’ ‘

மரம் சொன்னது

‘ உங்களுக்கு அமர இடம் தந்தேன். நீங்கள் எனக்காக பேசி என்னைக்காப்பாற்றக்கூடாதா’

பறவைகள் யோசித்தன. அக்குடியானவன் வரும் சமயம் பார்த்து,

‘ குடியானவனே பதில் சொல். உனக்கு உன் நிழல் தரைமீது விழுகிறதானே’ வினா வைத்தன

‘ விழுகிறது அதற்கென்ன’’

‘ நீ இரவில் வந்து பார் மரத்திற்கு நிழல் விழுகிறதா’

‘ இரவில் எப்படி நிழல் விழும்’

‘ இரவிலும் விழும் நிலா ஒளி வீசும்போது’

‘ ஆமாம் லேசாக ஒரு நிழுல் விழும், நானும் பார்த்திருக்கிறேன்’

‘ ஆக நிழலுக்கு க்காரணம் மரம் இல்லைதானே’

‘ ஆமாம் மரம் காரணமில்லை’

‘’ பிறகு ஏன் மரத்தை வெட்டப்போகிறாய்’

‘ சரி வெட்டவில்லை’

‘ உன் வீட்டு அருகால் சட்டத்திற்காகத்தான் இந்த மரமே வளர்கிறது’

‘ அப்படியா’

‘ ஆமாம் மரம் முற்றிய பின் நாங்களே உன்னிடம் வந்து சேதி சொல்லுவோம்’

‘ ஆமாம் ஆமாம் புதிய வீடொன்று கட்டவேண்டும்தான் என் மனைவி சொன்னாள்’

‘ ஆக அதுதான் விஷயம் அதைச் சொல்லிவிட்டுபோகவே நாங்ககள் உன்னிடம் வந்தோம்’

பறவைகள் கோஷமிட்டன.

எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தது அம்மரம் மரத்தின் கீழே ஒரு நரிக்குறவன் நாட்டுத்துப்பாக்கியோடு

பறவைக்கூட்டத்தைப்பார்த்து

’ ஆகா ,நம்ம நல்ல நேரம் இண்ணைக்கு’ சொல்லிக்கொண்டே

டுமீல் என்று சுட்டான்.

ஒருபறவை மட்டும் கீழே நிலை தடுமாறி கீழே சுழன்று சுழன்று வீழ்ந்தது.

நெல்பயிர், மரம். பறவை, குடியானவன், குறவன், கதிரவன் எல்லாமே இப்போது ஒரினமாககத் தெரிகிறது அம்மரத்திற்கு..



குட்டிக்கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 20, 2010 5:45 pm

5


ஒரு குடியானவனின் வயலில் நெற்பயிர்கள் இருந்தன

அவ் வயலில் சில பயிர்கள் மட்டும் ஒங்கி பச்சைப்பசேல் என வளர்ந்திருந்தன. அந்த வயலில் இருந்த உண்மையான நெற்பயிர்கள் இப்படிப் பேசிக்கொண்டன.

‘ நம்மால் முடியவில்லை இவை மட்டும் எப்படி இவ்வளவு உயரம் பச்சைப்பசேல் என வளர்ந்துள்ளன’

‘ இவை நெல் மிரட்டிகள் நம் போல் தோற்றத்தில் மட்டுமே இருப்பவை. நாம் முற்றிய நெல் மணிகள் தரவேண்டும் நமக்கு பொறுப்புண்டு. அவைகட்கு அந்தபொறுப்பு இல்லை அவை உயரமாய் வளரும். வளர்வதோடு சரி நல்ல விவசாயிக்கு உண்மை புரிந்து விடும் அவன் அவைகளை ப்பிடுங்கி எறிந்து விடுவான்’

நெற்பயிர்கள் பேசிக்கொண்டன.

‘நெல் மிரட்டிகள் தமக்குள் பேசிக்கொண்டன,

‘ இந்தப்புலம்பல் எப்போதும் உண்டு. அன்று தேவ அசுரர்கள் பாற்கடலைக்கடைந்தபோதே துவங்கியது இந்த வேலை. அப்போது அக் கடவுளையே எமாற்றியவர்கள் நம் முன்னோர்கள். இவைகள் என்ன அந்த கீதை ஓதிய கிருட்டினனை விடவுமா’

‘ எப்போதும் நெல் மிரட்டிகள் பேசும் பாஷை நெற்பயிர்களாகிய நமக்கு மட்டும் விளங்குவதில்லை. ஆனால் நாம் பேசும் பாஷையை மட்டும் அவை எப்படி அறிகின்றன’ என்றன நெற்பயிர்கள்.

‘ அதுதான் இன்னும் எங்களுக்கும் பிடிபடவில்லை’ கடவுள் தான் குறுக்கிட்டுப்பேசி முடித்துவைத்தார்.



குட்டிக்கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 20, 2010 5:49 pm

6


சீவூரில் ஒரு கணக்குப்பில்ளை இல்லாத பொல்லாத பிரச்சனைகளைக் கொடுத்து வந்தான்.

ஊர் மக்கள் அவனால் பட்ட இம்சைகள் சொல்ல முடியாமல் இருந்தன.

கரம்பாகக்கிடப்பதை கரும்பு பயிர் செய்யப்பட்டதாக எழுதுவான். பொரம்போக்கு நிலம் உபயோகித்தில் இருப்பதை பட்டா என்பான். பட்டா உள்ள நிலத்தை பொரம்பொக்கு என்பான். வெள்ளப்பாழ் என்றால் வயலில் வெள்ளாமை சபாஷ்

என்பான். மேயாத மாட்டை பட்டியில் அடைப்பான். பட்டியில் அடைத்த மாட்டை விற்றும் விடுவான்

கொஞ்சமா இம்சைகள்.

அவனுக்கு வயதாகிக்கொண்டே வந்தது. அந்திமக்காலம் நெருந்கிக்கொன்டிருந்தது. தன் சாவிலும் ஊருக்கு ஒரு பிரச்சனையை கொடுத்துவிட்டுத்தான் சொர்க்கமோ இல்லை இல்லை அந் நரகமோ போய்ச்சேரவேண்டும். என்று முடிவு செய்தான்.

ஆக அயலூர் சென்று அந்த ஊர் மக்களிடம். சீவூர் கணக்குப்பிள்ளை, நான் இறக்கப்போகிறேன். இறந்த பிறகு என் சவத்தை என் பிறந்து வாழ்ந்த சீவூரில் புதைக்கமால் உங்கள் ஊர் சுடுகாட்டில் கொண்டு வந்து புதைக்க முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். நான் அங்கு செய்து விட்ட கொடுமைகளுக்கு செத்த பிறாகாவது அங்கு புதைக்காமல் என் உடலை வெளியூரில் புதைத்தால் தான் அவர்களது அந்த ஆத்திரம் தீருமாம். ஆக நீங்கள் சாக்கிரதையாக இருங்கள் எச்சரிக்கை செய்யவே வந்தேன்,’.

கனக்குப்பிள்ளை இப்படித் தன் வேலை முடித்துவிட்டு சீவூருக்குத் திரும்பினார். தன் ஊர் மக்களிடம், எனக்கு வயதாகி விட்டது. அந்திமக்காலமும் வந்துவிட்டது. நான் இந்த ஊருக்கு ஒரு நல்லதும் செய்யவே இல்லை. ஆக என் சவத்தை இந்த சீவூரில் புதைக்க வேண்டாம்.

அசலூரில் கொண்டுபோய் புதைத்துவிடுங்கள்’ என சொல்லிவிட்டுப்பின் சில தினங்களில் இறந்துபோனான். சீவூர் கணக்குப்பிள்ளையின்

பிணத்தைப் பாடையில் வைத்துத்தூக்கிகொண்டு அசலூருக்குப்போனார்கள். சீவூர் மக்கள் கணக்குப்பிள்ளையின் பிணத்தைச் சுமந்து கொண்டு வருவதைப்பார்த்த அசலூர் கிராம மக்கள் சண்டக்குத்தயார் ஆனார்கள்.

சீவூர் மக்கள் பிணத்தைத்தரையில் வைக்கபோனார்கள்!

‘ பிணத்தை பாடையில்வைத்துத் தூக்கினால் சுடுகாட்டில் தான் இறக்கிவைக்கவேண்டும் ‘

எனக்கூறித்தடுத்து பிரச்சனை பெரிய சண்டையில் முடிந்தது.

சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் எனச்சொல்லிக்கொண்டே சீவூர் மக்கள்

பிணத்தோடு ஊர் திரும்பினர்.

இன்றுவரை சீவூருக்கும் அந்த அசலூருக்கும் பிரச்சனை இருந்துகொண்டுதானே இருக்கிறது.



குட்டிக்கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 20, 2010 5:51 pm

7


ஒரு காகம் சொன்னது. நான் தான் இந்தக் காட்டிற்கே தலைவன்

என்னைக்கண்டால் எல்லா காட்டு மிருகங்களும் ஒட்டமாய் ஒடுகின்றன என்றது.

எல்லா பறவைகளுக்கும் ஒரே ஆச்சரியம்.

‘ எப்படிச்சாத்தியம் இது என்றன’ பிற பறவைகள்.

‘ நீங்களே கண்ணால் பாருங்கள் அப்புறம் என்னை நம்புங்கள்’ என்றது காகம்

எல்லா பறவைகளும் ஒரு மரத்தில் அமர்ந்து கொண்டன.

காட்டில் அந்தப்பக்கமாய் வந்த ஒரு சிங்கம் ஒன்றின் முதுகின் மீது இப்போது அந்தக் காகம் அமர்ந்து கொண்டது.

சிங்கம் கம்பீரமாய் காட்டில் கர்ஜித்துக்கொண்டே நடக்க நடக்க, எல்லா மிருகங்களும் ஒட்டம் பித்தன’ மரத்தின் மீது அமர்ந்திருந்த

பறவகள் எல்லாம் காகத்தின் முட்டாள்தனத்தை ப்பார்த்து நகைத்தன.

திரும்பிய அந்த காகம்’ ‘ பார்த்தீர்கள் அல்லவா மிருகங்கள் எல்லாம் அலறி அடித்துக்கொண்டு ஒடுவதை’ என்றது

பறவைகள் கூறின

‘ இப்போதும் சிங்கம் தன் பாதையில் சென்றுகொண்டேதான் இருக்கிறது. காட்டு மிருகங்கள் அலறி அடித்துக்கொண்டு ஒடிக்கொண்டேதான்னை இருக்கின்றன நீயே பார்’

காகம் கூர்ந்து சிங்கம் செல்லும் வழியைப்பார்த்தது. பார்த்தது

வெட்கத்தில் காகம் திண்டாட எல்லாப் பறவைகளும்

அதன் அதன் கூட்டிற்குக்கிளம்பின.



குட்டிக்கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக