புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
68 Posts - 45%
heezulia
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
5 Posts - 3%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
4 Posts - 3%
Jenila
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
2 Posts - 1%
jairam
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
1 Post - 1%
kargan86
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
9 Posts - 4%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
6 Posts - 3%
Jenila
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Rutu
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
2 Posts - 1%
jairam
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
2 Posts - 1%
viyasan
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 6 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா


   
   

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 12:51 am

First topic message reminder :

"ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய 'கெட்டகாலம்' அவளை இப்படியாக்கிவிட்டது!" - இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது.

என் நண்பன் நாகசுந்தரம் இதிலே தேறியவன். எங்கெங்கு எழிலுள்ள மங்கையர் உள்ளனர், அவர்களின் நிலைமை என்ன என்ற அட்டவணை அவனிடம் உண்டு. பிரதி தினமும் கோயிலுக்கு அவன் போய் வருவது, தேவ பூஜைக்கா? தேவிகளைத் தரிசிக்கவேதான்! அவன் தான் எனக்கு ரங்கோன் ராதா விஷயமாக முதலிலே கூறினான். வந்து பார்த்தால்தான் என் மனம் திருப்தியாகும் என்று என்னை வற்புறுத்தினான்.

"நான் அவளைக் காண்பதால் உனக்கென்னப்பா திருப்தி?" என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். "இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு? சங்கீத வித்வான் 'சபாஷ்' என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன்? அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம்! அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து 'பேஷ்' என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி" என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன். "அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்" என்று நான் கேட்டேன். "கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி" என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். "போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்" என்று நான் வாக்களித்தேன். நண்பன் வேறு விஷயம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டான். என் மனதிலே அவன் தூவிய எண்ணம், அன்றிரவு, முளைவிட்டு, செடியாகிக் கொடியாகிக் காதற்பூவும் பூத்துவிட்டது. கண்டதும் காதல் என்றனர் கவிகள்! நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான 'ஆசை' பிறந்தது! என்ன சித்தம்! வாலிப சித்தத்தை அடக்கக் கடிவாளம் ஏது? மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது? ரங்கோன் ராதா! ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே! அன்றிரவு அடிக்கடி விழித்துக் கொண்டேன், ராதாவை எண்ணி எண்ணி. என் நண்பனே என்னைக் கேலி செய்வான். அத்தகைய திடீர்க் கொந்தளிப்பு என் மனதில்! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிறாள்; அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? சீச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும்? பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மாற்ற முடியுமா? நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல்! ராதையும் என்னைக் கண்டு 'மோகித்தால்' நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு! இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான்! எழில் ஒன்றும் மட்டல்ல! என்ன குறை ராதாவுக்கு! என்றும் எண்ணினேன்.

ராதையே நீ என்னை நேசிப்பதாலுன்னை - என்ற கீதம் ராதையின் மோகன கோபாலா என்ற பாடல் - ராதாரமணா என்ற பஜனை - ராதா ருக்மணி சமேதா என்ற பாகவத மொழி - ராதாபாய் என்ற நடிகையின் பெயர் - என் மனதிலே ராதா, ராதா என்று பலப்பல விதத்திலே எண்ணம் கூத்தாடிற்று.

காலை மலர்ந்தது. அதற்கு என் கஷ்டம் தெரிகிறதா! கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் - வழக்கமான இடத்துக்கு அல்ல! நாகசுந்தரனின் வீட்டுக்கு.

"விளையாட்டுக்குச் சொன்னாய் என்று எண்ணினேன். நிஜமாகவே வந்துவிட்டாயே" என்று நாகசுந்தரம் கூறினான். கேலி செய்தது போலிருந்தது அவன் பேச்சு. என்ன இருந்தாலும் 'பிகு'வை விட்டுவிடலாமா? "சேச்சே! நான் அதை மறந்தே விட்டேனப்பா! வழக்கப்படி உலவப் புறப்பட்டேன். உன்னையும் அழைத்துப் போகலாமென்றுதான் இங்கு வந்தேன்" என்று சமாதானங் கூறினேன். முதுகைத் தட்டிக் கொடுத்து, "எவ்வளவு பாசாங்கு பேசுகிறாயடா பரந்தாமா!" என்று கூறி என்னைக் கேலி செய்து மாடிக்கு அழைத்துச் சென்று, அந்த மங்கையைக் காட்டுவான் என்று நான் கருதினேன். ஆனால், நாகசுந்தரம், "சரி போவோமா! கோயிலுக்கா, ஆற்றோரமா?" என்று கேட்டுக் கொண்டே, தெருவில் இறங்கி விட்டான். நான் அடைந்த ஏமாற்றத்தை என்னென்பது. என் நண்பனின் திடீர் மாறுதலின் காரணம் எனக்குப் புரியவில்லை. அவனைக் கேட்கவோ மனம் வரவில்லை. 'சரி! ரங்கோன் ராதாவை நான் பார்க்கக்கூடாது என்று இவன் கருதுகிறான். அவளிடம் இவன் எண்ணம் வைத்துவிட்டான் போலிருக்கிறது' என்று எண்ணினேன். கோபந்தான் எனக்கு. எனவே, மனிதனின் சுயநலம், கபடம், மாதரால் உண்டாகும் மயக்கம் ஆகியவற்றைக் காரசாரமாகப் பேசினேன். என் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை, என் செய்வது. ராதாவைக் காணாததால் என் மனதிலே மூண்ட ஆவல் மேலும் அதிகரித்தது. அன்றிரவும் வேதனையை அனுபவித்தேன். அநாவசியமாக அவளைப்பற்றிக் கூறுவானேன். என் உள்ளத்திலே ஏதேதோ நினைப்பு வருமாறு செய்வானேன். பிறகு இவ்விதம் என்னை வாட்டுவானேன். உண்மை நண்பனின் காரியம் இப்படியா இருப்பது! என்று சலித்துக் கொண்டேன். ராதா எப்படி இருப்பாளோ, என்ற எண்ணம் வேறு, எரிமலையிலிருந்து கிளம்பும் நெருப்பெனக் கிளம்பி என்னைத் தகித்தது.

ராதாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அவள் மணமானவளாகக் கூட இருப்பாள் ஒரு சமயம். அவன் தான் "அழகான ஒரு பெண் ஆபத்தான நேரத்தில், பர்மாவிலிருந்து வந்துவிட்டாள்" என்று மட்டுந்தானே என்னிடம் சொன்னான். வேறு தகவல் தெரியாதே. அவனை விசாரிக்கவும் முடியாது போய்விட்டது. அவன், திடீரென மாறியே விட்டான். என்னிடம் பேசுவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். வீட்டிலேயும் அதிகம் தங்குவதில்லை. பிறகு நானே ராதாவைப்பற்றி அவனைக் கேட்க வேண்டி நேரிட்டது. "ஒரு நாளில் கூற முடியாது அப்பா, அந்தக் கதையை! பல நாளாகும். அதிலும், நீ யாரிடமும் அதைக் கூறுவதில்லை என்று உறுதிமொழி தந்தால்தான் சொல்வேன்" என்றான். "சரி! சொல். இப்போது ராதா எங்கே? அடுத்த வீட்டில் தானே?" என்று அவசரமாகக் கேட்டேன். என் நண்பன் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "நீ அவளைக் காதலிக்கிறாயா?" என்று கேட்கவே, நான் சிரித்துவிட்டு "என்ன பித்தம் பிடித்தவன் போலப் பேசுகிறாய். அவளை நான் கண்டதுமில்லை! காதலாம் காதல்" என்று கூறிக் கேலி செய்தேன். என் நண்பனின் முகமோ மிகக் கவலையுடன் இருந்தது. சில விநாடி மௌனமாக இருந்துவிட்டு அவன் என்னை உற்று நோக்கியபடி, "நண்பா! நீ ராதாவிடம், தூய்மையான முறையில் நடந்துகொள்வதாக வாக்குத்தர வேண்டும். பிறகு ராதாவிடம் நீ பழகலாம்" என்றான் சோகக் குரலில்.

என் நண்பனின் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டியது. எவ்வளவு துன்பத்தையும் சகித்துக் கொள்பவன், எவ்வளவு துயரச் செய்தியைக் கூறினாலும், 'சகஜம்' என்று கூறுபவன். அப்படிப்பட்டவன், ராதா யார்? எங்கே இருக்கிறாள்? என்ற சர்வசாதாரண விஷயத்தைப்பற்றி, ஏன் இப்படிக் கவலையும் கலக்கமும் கொண்டவனாகப் பேசுகிறான் என்பது புரியவில்லை. "என்னடா இது, விளையாடுகிறாயா? ராதா, கலியாணமானவளா? எதையோ மறைக்கிறாயே! என்னிடம் கூடச் சொல்லக்கூடாத பிரமாதமான இரகசியம் என்னடாப்பா அது?" என்று நான் கேட்டேன், கொஞ்சம் கோபமாகத்தான்.

நாகசுந்தரம், இதுபோல் நான் எப்போதாவது கொஞ்சம் கோபித்துக் கொண்டால், சிரித்துகொண்டே என் முதுகில் தட்டுவது வழக்கம். அன்று, பின்புறமாகக் கையைக் கட்டிக்கொண்டு, மௌனமாகவே நடந்தான், என் கோபப் பேச்சைக் கேட்ட பிறகும். "சரி, அவ்வளவுதான் உன் சினேகிதத்தின் யோக்யதை. யாரோ ஒரு பெண், ரங்கோன்காரி, அவள் விஷயத்திலே உனக்கு இவ்வளவு..." என்று நான் மேலும் கொஞ்சம் சூடாகப் பேசலானேன். நாகசுந்தரம் என்னைக் கெஞ்சுபவன் போலப் பார்த்து, "ராதா விஷயமாகக் கோபத்திலே கண்டபடி பேசிவிடாதே அப்பா. ராதா என் தங்கை" என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உனக்குத் தங்கை ஏது?" என்று நான் கேட்டேன், திகைப்புடன். நண்பன் பதில் கூறவில்லை. என்னுடைய வற்புறுத்தல், அவனுக்கு வேதனையை உண்டாக்குவதை அவனுடைய முகம் நன்றாகக் காட்டிற்று. அவன் அந்த மர்மத்தை விளக்கிக் கூறாவிட்டாலோ, என் வேதனை குறையாது என்று எனக்குத் தோன்றிற்று. எனவே நான் வாஞ்சையுடன் நாகசுந்தரத்தை அணைத்துக் கொண்டு, "நாகு! என்னடா இது, விடுகதை பேசுகிறாய்! உனக்குத் தங்கை கிடையாதே. ராதா என்பவள் ரங்கோனிலிருந்து வந்த பெண் என்று கூறினாயே. இப்போது 'ராதா என் தங்கை' என்று கூறுகிறாய். இது என்ன வேடிக்கை! விபரீதமாகவும் இருக்கிறதே! என்னிடம் கூடவா நீ மறைத்துப் பேச வேண்டும்" என்று கேட்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:12 am

மகனே! என் கஷ்டங்களை விவரமாகக் கூறிக் கொண்டே இருக்கக் காலம் போதாது. ஆனால், என்றைக்கேனும் ஓர் நாள் யாரிடமேனும் முழுக்கதையையும் கூறாவிட்டால், மனதிலுள்ள பாரம் தொலையாது. ஆகவேதான், நான் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிடம் இவ்வளவு விவரமாகக் கூறி வருகிறேன். மற்றத் தாய்மார்களைப்போல நானும் உன்னைப் பிறந்தது முதல் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வரும் சேவை செய்திருந்தால், உன்னிடம் எவ்வளவு பேசியிருப்பேன், அவ்வளவும் இப்போது பேசிவிடுகிறேன் என்று வைத்துக்கொள். என் வேதனையைக் குறைத்துக் கொள்ள வேறு வழி இல்லை.

எனக்கும் என் கணவருக்கும் இடையே இருந்து வந்த பேத உணர்ச்சி நாளுக்கு நாள், நிமிஷத்துக்கு நிமிஷம் விரிந்து கொண்டே வரலாயிற்று. கொடுமை செய்வதன் மூலம் என்னை அடக்கிவிடலாம் என்று அவர் எண்ணினார். நானோ கொடுமை தாளமாட்டாமல் எதிர்க்கத் தொடங்கினேன். என் சக்தி அவருக்கு மட்டுமல்ல, எனக்கே அப்போதுதான் சரியாகத் தெரிந்தது. எங்கே ஒளிந்து கொண்டிருந்ததோ அவ்வளவு சக்தியும் அதுவரையில். என்னைக் கண்டு அவர் நடுநடுங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது கண்டு நான் களிப்படைந்தேன். என் ஆர்ப்பாட்டம், நான் சின்ன வயதிலே பார்த்த அல்லி நாடகத்தை எனக்குக் கவனமூட்டிற்று. அதனால் நான் பெருமையும் அடைந்தேன். தர்பார் நடத்துகிறோமல்லவா என்று எண்ணிப் பூரித்தேன். அல்லி நாடகமே, ஆண்களைப் பெண்கள், இஷ்டப் பட்டால் அடக்கியாள முடியும் என்பதை எடுத்துக்காட்டவே எழுதப்பட்டதோ என்று கூட நினைத்தேன். ஆனால், சில நிமிஷங்களிலே எனக்குப் பயம் பிறந்துவிட்டது. ஏனெனில், அல்லி நாடகத்தின்படி, இவ்வளவு தர்பார் நடத்தி ஆண்களை நெருங்க விடாமல் மிரட்டி ஆட்சி செய்து வந்த அதே அல்லி ராணியை, தந்திரத்தாலே, அர்ஜுனன் தோற்கடித்துவிட்டான் - தாலி கட்டிவிட்டான் - அந்தத் தாலி கட்டியான பிறகு, அல்லியின் தர்பார் நின்று விட்டது. அதுபோல, நாமும் எவ்வளவோ ஆர்ப்பாட்டம் செய்கிறோம், என்ன செய்வதென்று தெரியாமல், அவர் திண்டாடும் அளவுக்கு அவரை ஆட்டிப் படைக்கிறோம் என்றபோதிலும், கடைசியில், அப்படிப்பட்ட அல்லிக்கே தோல்வி நேரிட்டதுபோல நமக்கும் நேரிட்டுவிடுமோ என்ற எண்ணம் உண்டாயிற்று, பயமும் பிறந்தது. அவரை மிரட்டுவதிலே ஏற்பட்ட சந்தோஷத்தை இந்த எண்ணம் குறைக்கத் தொடங்கிற்று. மேலும், அவர் என்ன விதமான நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்போகிறார் என்பது தெரியாததால் பயம் மேலும் கொஞ்சம் அதிகரித்தது.

ராதா எப்போதாவது என்னிடம் பேசும்போது ஒரு விஷயம் சொல்லுவாள். இப்போது எண்ணிப் பார்த்தால் அவள் சொன்னது முற்றிலும் சரி என்று தோன்றுகிறது. "அம்மா! மக்களின் குணமும், நடவடிக்கைகளும் இயற்கையாக உள்ள சில குணாதிசயங்கள் நீங்கலாக, மற்றவைகள் அவரவர்களின் வாழ்க்கை முறை, அந்த வாழ்க்கை முறையினால் ஏற்படும் சில நடவடிக்கைகள் இவைகளைப் பொறுத்தே ஏற்படுகின்றன" என்பாள். என் வரையில் பார் தம்பி! எனக்கும் அவருக்கும் போர் மூண்ட பிறகு, புதுப் புதுக் குணங்கள் எனக்கு ஏற்பட்டுவிட்டன. அவருடன் வேறு யாராவது பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், நாங்கள் சந்தோஷமாக இருந்த காலத்திலே, நான், யார், என்ன பேசுகிறார்கள் என்று கவனம் செலுத்தமாட்டேன். சில நேரத்தில் பெருமை அடைவேன். என் புருஷரிடம் யாராரோ பெரிய மனுஷர்கள் ஏதேதோ முக்கியமான விஷயங்களைப் பேச வருகிறார்களே என்பதால். என்ன பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல்கூட அதிகம் இராது. அப்படிப்பட்ட நான், அவரிடம் வெறுப்படைந்து, எதிர்த்து நடக்க ஆரம்பித்த பிறகு, யாராவது அவரிடம் பேசவந்தால் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று துடிக்க ஆரம்பித்தேன்.

கொடுமை புரிபவரும், பேராசைக்காரரும், நயவஞ்சகருமான இவரை ஒரு பெரிய மனிதர் என்று எண்ணிக் கொண்டு ஊரிலே சில பைத்தியக்காரர்கள் இவரிடம் நியாயம் கேட்கவும் வருகிறார்களே! குடும்பத்துக்குள்ளேயே வஞ்சகச் செயல் புரியும் இவரிடம் ஊர்ப் பஞ்சாயத்தை ஒப்படைக்கிறார்களே! இது என்ன அநியாயம்? சொந்த மனைவிக்குத் துரோகம் செய்யத் துணிந்து, கட்டுப்பாடாகக் கபட நாடகமாடுகிறார். ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு வேதனைப்படச் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்கிறார். ஊரார் பழிக்கவும், தூற்றவும் இழிவாகப் பேசவுமான நிலைமையைக் கூட எனக்கு ஏற்படுத்தத் துணிந்தார். இப்படிப்பட்டவருக்கு, ஊரிலே யோக்கியர் என்ற பட்டம்! இவரிடம் ஊராருக்கு மதிப்பு! இவரிடம் ஊரார் தங்கள் விவகாரங்களைக் கூறிப் பரிகாரம் தேடுகிறார்கள்! பார் தம்பி! இந்த ஊராருக்கு, அவரிடம் மதிப்பு ஏற்பட்டதற்கு ஏதாவது தக்க காரணம் உண்டா? பணம் இருக்கிறது அவரிடம் என்பது தவிர! அவர் செய்த கொடுமைகளுக்காக, ஊரார் அவரைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும்; திருத்தி இருக்கவேண்டும். தண்டித்துக்கூட இருக்கவேண்டும். ஆனால் இந்தப் பைத்தியக்காரர்கள், குற்றம் பல செய்தவரை, நியாயாதிபதியாக்கினார்கள்! அவர்கள், ஒரு மனைவியை அவளுடைய கணவன், எவ்வளவு கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம்; அது சகஜம் என்று எண்ணுகிறார்கள் போலிருக்கிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:13 am

ஊராரின் போக்குக் கண்டு நான் கொதிப்படைந்தேன். இனி என் சார்பில் நின்று வாதிடவோ, நீதி கேட்கவோ, நான் தவிர வேறு யாரும் இல்லை என்று திட்டமாகத் தெரிந்து கொண்டேன். என் கண்ணீரையும் பெருமூச்சையும் யார் கவனித்தார்கள்! நீயோ கருவில் இருந்தாய், உன் தாய் தணலிலே நின்றபோது! உலகில் நான் நிர்க்கதியாக நின்றேன். விரோதிகளால் சூழப்பட்டு இருப்பதுபோலவே எனக்குத் தோன்றிற்று. இந்நிலையில் அவருடைய கட்டுக்கு அடங்க மறுப்பது தவிர, எனக்கு வேறு மார்க்கமே தெரியவில்லை. ஆகவேதான் நான், ஆர்ப்பட்டக்காரியானேன். அநேகம் பெண்கள், வாயாடி, போக்கிரி, கட்டுக்கு அடங்காதவள், புருஷனையே எதிர்த்துப் பேசுபவள் என்றெல்லாம் கண்டிக்கப்படுகிறார்களல்லவா! அவர்களெல்லாம், என்னைப் போலக் கொடுமைக்கு ஆளானவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அன்பும் ஆதரவும் தேடுகிறாள் பெண். அதற்கு மாறாக, வஞ்சனையால் அவளைத் தாக்கினால், தம்பி! அவள் எப்படிப்பட்ட உத்தமியாக இருந்தாலும், என் நிலைக்கு வந்துவிடுவாள். பெரும்பாலான பெண்கள் கேவல நிலைமைக்கு வந்ததற்கே காரணம் இதுதான்.

கருவிலே நீ உருவாகிக்கொண்டிருந்த நாட்களிலே நான் இப்படிக் கதறிக் கொண்டிருந்தேன். கடைசியில், அவருடைய இஷ்டந்தான் நிறைவேறிற்று. திருத்தணி என்ற திவ்யக்ஷேத்திரம் கிளம்பினார்கள். தங்கத்தின் திருமண ஏற்பாட்டை ஓரளவு இரகசியமாகவே வைத்துக் கொண்டிருந்தார்கள். எனக்குக் காவலுக்கு வீட்டிலே ஆட்களை நியமித்துவிட்டு, அவர்கள் 'க்ஷேத்திரம்' சென்றார்கள்; திருமணம் முடிந்தது. புது மனைவியுடன், அவர் மைசூர் சென்றாராம். புது நாடகங்களைக் கண்டாராம். ஆனந்தமான வாழ்க்கையாம். இதை எல்லாம் கூடச் சென்றிருந்த ஒரு வேலையாள் எனக்கு விவரமாகப் பிறகு கூறினான். நான் கர்ப்பவதியாக இருக்கும் விஷயத்தைப் பற்றிக்கூட, அவரும் தங்கமும் பேசிக் கொண்டார்களாம். மகனே! இப்போது நினைத்தாலும் வயிறு எரிகிறது. அந்தச் சம்பவத்தை - அவள் சொன்னாளாம், என்ன இருந்தாலும் அக்காவுக்குக் குழந்தை பிறந்தால், உங்களுக்கு அவளிடம் உள்ள கோபமெல்லாம் போய்விடும் என்று. அதற்கு அந்த மகானுபாவர் சொன்னாராம், "சனியன்! என் தலைக்குக் கொள்ளியாக இருப்பதோடு விடவில்லையே! கர்ப்பம் வேறு இந்த இலட்சணத்திலே. இந்தப் பைத்தியக்காரிக்குப் பிறக்கும் குழந்தை எப்படி பிழைத்திருக்கும்! பைத்தியத்திலே அவளே கூடக் கொன்று விடவும் கூடும் - தப்பித் தவறிக் குழந்தை பிழைத்துக் கொண்டாலும், பைத்தியக்காரிக்குப் பிறந்தது பைத்தியமாகத்தானே இருந்து தொலைக்கும்" என்றாராம். தங்கம் சிரித்தாளாம். எப்படியடா மகனே இருக்கும் எனக்கு! கலியாணத்தை முடித்துவிட்டுச் சில நாள் கூட இருந்துவிட்டு உன் அப்பா வீடு வந்தார். நான் அவரிடம் பேசவில்லை. வீட்டிலே உட்கார்ந்திருந்தார் நெடுநேரம்; நான் சட்டை செய்யவில்லை. எப்படி என் மனம் இடங்கொடுக்கும்?

என் வேதனையும் முற்றிற்று. நீயும் பிறந்தாய்!

நீ பிறந்த சமயம் உன் அப்பா தங்கத்துடன் குலவிக் கொண்டிருந்தார் மைசூரில். உன்னைக் கண்டவுடன், நான் களிப்புக் கடலில் மூழ்கினேன் - என் பொருட்டு வாதாட ஒரு வீரன் பிறந்தான் - என்று களித்தேன். நீ, நிமிஷத்துக்கு நிமிஷம் வளர்ச்சி அடைந்து, திடீரென்று வாலிபனாகி, மீசை கருக்கிடும் பருவமடைந்து, என்னைக் கொடுமை செய்யும் உன் அப்பாவை கண்டிக்கமாட்டாயா, அதைக் கேட்டு நாம் ஆனந்தப்பட மாட்டோ மோ என்று கூடப் பேதை நான் நினைத்தேன். உன்னை வளர்ப்பது தவிர, வாழ்க்கையிலே வேறு இன்பமான இலட்சியம் ஏது! உன்னை என் மகனாக மட்டுமல்ல, எனக்காக வாதிட வேண்டிய பொறுப்பை மேற்கொண்ட வீரனாக மதித்து வளர்த்து வந்தேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:13 am

இரண்டு மாதங்கள் கழித்தே அவர் வந்தார் தனியாகத் தான் - தங்கம் தனிக் குடித்தனம் நடத்தத்தானே முன்னாலேயே திட்டமிட்டிருந்தாள். வந்ததும், தோட்டம் சென்றார் பயிர் பச்சையைக் கவனிக்க. மாட்டுத் தொழுவத்திலே ஒரு கால் முறிந்து போயிருந்தது கண்டு, வேலையாளைக் கண்டித்தார் - பசு இளைத்துக் கிடந்ததாம்; அதற்காக உருகினார் - பாகற்கொடி வாடிவிட்டதாம்; அதற்காகப் பதைத்தார் - தோட்டத்துக் கிணற்று நீர் ஏதோ வாடை வீசுகிறது என்பதைக் கூடக் கண்டுபிடித்தார் - நீ தொட்டிலிலேதான் தங்கவிக்ரகம் போல் இருந்தாய் - நான் பக்கத்திலே இருந்துகொண்டு உனக்கு பணிவிடை செய்து கொண்டுதான் இருந்தேன் - அவர் - உன் அப்பா - என் புருஷர் - தொட்டில் பக்கம் கூட வரவில்லை! மகனே! உன்னைப் பார்க்கவேண்டுமென்று அவருக்கு எண்ணமே வரவில்லை. பெண், தாயாவது என்றால் மரணத்தின் வாசற்படி போய்த் திரும்புவது என்றல்லவா பொருள். அந்த நெருக்கடியிலிருந்து மீண்ட என்னை, அவர் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மாட்டுத் தொழுவத்தைப் பார்த்துவிட்டு, கூடத்துப் பக்கமாக வந்து கொண்டிருந்தார்; அப்போது நீ வீறிட்டு அழுதாய் - அவர் அப்போதும் தொட்டிலண்டை வரவில்லை - என்னால் அந்தக் காட்சியைக் கண்டு சகிக்க முடியவில்லை.

"என்ன இது பெரிய சனியன்!" என்று வேறு கடுமையான குரலிலே கூறினார். உன்னையுமல்ல - என்னையுமல்ல - நம்மை மனதிலே வைத்துக்கொண்டு, வேலையாளைத் திட்டினார் அதுபோல. எனக்கு அதுகூடவா புரியாது மகனே! நாம் இருவரும் வெறும் ஜடங்களாக அவருக்கு ஆகிவிட்டோ ம். இதைவிட வேறு வேதனை என்ன வேண்டும். என் துக்கமனைத்தையும் போக்கிக் கொள்ள எனக்கு, ஒரே வழிதானடா இருந்தது - உன்னைத் தொட்டிலிலே இருந்து வாரி எடுத்து, அணைத்துக் கொண்டு, உச்சிமோந்து முத்தமிட்டேன். உன் அழகிய புருவங்களிலே நான் தீட்டியிருந்த மையும், என் கண்ணீரும் சேர்ந்து குழைந்து, உன் தங்கநிற மேனியைக் கறுப்பாக்கிற்று! அவர், தெருத்திண்ணையிலே உட்கார்ந்துகொண்டு, பெங்களூரிலிருந்து வாங்கிக் கொண்டு வந்த கலர்ச் சுண்ணாம்பைத் தடவி வெற்றிலை மடித்துப் போட்டுக்கொண்டு, எதிர் வீட்டுக்காரர்களிடம், மைசூர் மிருகக் காட்சிச் சாலையிலே தான் கண்ட அற்புதங்களைக் கூறிக்கொண்டிருந்தார்.

குடிசைகளிலும், மரத்தடியிலும், சாவடிகளிலும்கூட குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தந்தை உண்டு. இங்கோ என் செல்வம் தொட்டிலிலே இருக்க, என் கணவர் ஏறெடுத்தும் பாராமல், எதிர்வீட்டுக்காரருடன் மிருகக் காட்சிச்சாலையிலே கண்ட காட்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். கொல்லும் புலியும் கூட, இவர் போல் இருக்காது; என் நிலை எப்படியடா மகனே இருந்திருக்கும். அந்தஸ்து, ஐஸ்வரியம் எல்லாம் இருந்தும் நாம் இருவரும் அனாதைகளானோம்! அனாதைகள் கூடச் சுதந்திரமாகவாவது இருப்பார்கள், நமக்கு அதுவுமில்லை மகனே! அழாதே நீ!

தற்கொலை செய்து கொள்வது, அல்லது எதிர்த்துப் புரட்சி செய்வது என்ற எண்ணமெல்லாம் நீ பிறந்த உடனே மாயமாய் மறைந்துவிட்டன. எனக்கு வேலை இருக்கிறது; வாழ்ந்தாக வேண்டும்! தொட்டுத் தாலி கட்டியவனால் அலட்சியப்படுத்தப் பட்டாலும், நான் மனம் உடைந்துவிடக் கூடாது என்று தீர்மானித்துவிட்டேன் - உன்னை வளர்க்கும் சேவைக்காக என்னை நான் அர்ப்பணித்துவிட்டேன். சாக நேரம் இல்லை. உன்னை வாலிபனாகுமளவு வளர்க்க வேண்டும். யுத்தத்துக்காகத் தயாராக்கப்படும் வாளை, வீரன் எவ்வளவு ஆசையுடன் பார்ப்பானோ, அப்படி உன்னை நான் பார்த்துப் பூரித்தேன்.

தங்கத்துடன் தனிக் குடித்தனம் செய்ய ஆரம்பித்தார் உன் தந்தை. பகல் வேளைகளில் இங்கு இருப்பார் - பண்ணைச் செய்தி விசாரிக்க, கடை ஆட்களிடம் பேச, கிராமத்து விவகாரத்தைக் கவனிக்க, ஒவ்வோர் சமயம் சாப்பாட்டுக்கும் இருப்பார் - மாலை ஆனதும் புது மனைவியின் மனைக்குச் செல்வார். என்னிடம் பேசுவது கிடையாது - உன்னைக் கவனிப்பதும் கிடையாது. அவர் என்னை அலட்சியமாக நடத்திவரும் விஷயம் ஊராருக்குத் தெரியும்; தெருக்கோடியிலும் வம்பர் சபைகளிலும், "முதலியார் காரணமின்றி இந்த மாதிரி நடந்து கொள்ள மாட்டார், அவளை நோயும் பேயும் பிடித்தாட்டி, குணத்தையே கெடுத்துவிட்டது. அவர் மனம் முறிந்துவிட்டது. அதனால்தான், வீட்டிலே அவருக்கு நிம்மதியில்லை. வேறு கலியாணம் செய்து கொண்டார். அப்போதும் அவருடைய பெரிய மனது போன போக்கைப் பாருங்கள், ரங்கத்தின் சொந்தத் தங்கையைத்தான் கலியாணம் செய்து கொண்டார்" என்று பேசினர். என் எதிரிலேயே, என் வீட்டுக்கே வந்து, இதுபோல் அவருடன் சிலர் பேசுவார்கள். அவ்வளவையும் நான் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டேன். எல்லாம் உன் பொருட்டுத்தாண்டா கண்ணே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:13 am

உனக்கு அழகான அலங்கார ஆடைகளை அணிவித்து நான் ஆசைப்படுவேன். நீ சிரிக்கும்போது கன்னத்திலே குழி விழும். அதைக் கண்டால் எனக்குப் பிரமாதமான சந்தோஷம்; பெருமையாகவும் இருக்கும்; ஏனெனில், எனக்கும் சிரித்தால் அப்படித்தான். உனக்குப் பொட்டிட்டு, தொட்டிலிலிட்டு நான் பாடுவேன். எப்போதோ சின்ன வயதிலே காதிலே கேட்ட பாட்டுகள் எல்லாம் தொட்டிலருகே வந்ததும் என் நினைவிற்கு வந்தன. இப்படி நான், உன்னை வளர்த்துக் கொண்டு, வீடு வாசல், நகை நட்டு, சொத்து இருந்தும், அனாதை போலிருக்கும் நிலையில், ஒருநாள் நடுப்பகலில் தள்ளாடியபடி ஒரு கிழவி, நம் வீட்டு வாசற்படியண்டை வந்தாள் - "அம்மா! தாயே" என்று ஈனக் குரலில் கூப்பிட்டாள். யார் என்று போய்ப் பார்த்தேன். தரித்திரத்தால் தாக்கப்பட்டு, பட்டினியால் பாதிப் பிராணனை இழந்தவள்; யாரோ பாவம் பிச்சைக்காரி. வயது நாற்பது இருக்கும். ஆனால், மரணம் அவளைக் கூவி அழைத்துக் கொண்டிருக்கும் நிலைமை. அவளுடயை பரிதாபமான நிலையைக் கண்டு, நான் கொஞ்சம் நீரும் சோறும் கலந்து அளித்தேன். நாலைந்து பிடியை அவள் அவசர அவசரமாகச் சாப்பிட்டு, சுவரிலே கொஞ்சம் சாய்ந்தபடி, "அம்மா! உயிர் வந்தது.

நீ புண்ணியவதி, உன் பிள்ளை குட்டிகளோடு நீ தீர்க்க சுமங்கலியாக இருக்க வேணும்" என்றாள். அப்போதுதான் நான் அவள் கழுத்தைக் கவனித்தேன். கயிறு இருந்தது. அவள் மேலும் கொஞ்சம் சோறும் நீரும் சாப்பிட்டுவிட்டுத் தன் சோகக் கதையைக் கூறினாள். அவள் கணவன் உயிரோடுதான் இருக்கிறானாம், எங்கேயோ, தெரியாதாம்; அவளுக்குக் குழந்தை குட்டி கிடையாதாம். பாடுபட்டுப் பிழைத்துக்கொண்டு கொஞ்சம் நிம்மதியாகவும் புருஷனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாளாம். ஒருநாள் கழைக்கூத்தாடும் கூட்டம் ஒன்று வந்ததாம். அதிலே இருந்த ஒரு மைக்காரியிடம், இவள் புருஷனுக்கு மோகம் பிறந்ததாம் - இவளையும் கைவிட்டு விட்டு அவள் பின்னோடு போய் விட்டானாம்; திரும்பவே இல்லை - இவளுக்கும் திக்கு இல்லை. திக்கற்ற நிலையிலே விடப்பட்ட இவள், கொஞ்ச காலம் ஊரிலேயே, சிறு நகைகளை விற்று ஜீவித்தாளாம் - பிறகு ஆப்பக் கடை வைத்தாளாம் - அதுவும் முடியாமற்போன பிறகு வீடு கூட்டுவது தண்ணீர் தெளிப்பது போன்ற ஊழியம் செய்து பிழைத்து வந்தாளாம்; அப்போது ஆண்களின் சேஷ்டைக்கு இணங்க மறுத்து, அதனால் வேறு தொல்லைப்பட்டாளாம். விபசாரத்துக்கு இணங்காததால் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, கடைசியில் ஊரைவிட்டே வெளியேறவேண்டி நேரிட்டதாம்.

கடைசியில் பிச்சைக்காரியே ஆகிவிட்டாளாம். இதுவரை ஒரு கெட்ட நினைப்பு, கெட்ட நடவடிக்கை கிடையாது என்றும் சொன்னாள். அவள் கழுத்திலே அந்தக் கயிறு மட்டும் இருந்தது. கயிறு கொஞ்சம் நீளமும் கனமும் அதிகமாக இருந்தாலாவாது தூக்கிட்டுக் கொள்ள உதவும். அதற்கும் பயனற்று அந்தக் கயிறு இருந்தது. அவளுடைய கதையைக் கேட்டதும், எனக்கு என் இனத்தில் ஒருத்தியைக் கண்டதாக எண்ணம் வந்து, நான் மனம் உருகி அழுதேன். ஆண்களின் கல் மனதினால் அவதிக்கு ஆளான அபலைகளைக் கொண்டு நீதி வழங்கச் சொன்னால், எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆண்கள் ஊரிலே யோக்யர், நாணயஸ்தர், கண்ணியமானவர், தர்மவான் என்றெல்லாம் புகழப்படுபவர்கள் கடுந்தண்டனை பெறவேண்டி நேரிடும். என்ன செய்வது! ஆண்களிடமே நீதி வழங்கும் உரிமை விடப்பட்டிருக்கிறது. குற்றவாளிக்கே நீதிபதி உத்யோகம்.

பிச்சை எடுத்து இனிப் பிழைக்க வேண்டாம். இங்கே இருந்துகொண்டு எனக்கு உதவி செய்துகொண்டிரு என்று கூறினேன். போன வாழ்வு திரும்பி வந்ததுபோல் ஆனந்தமடைந்தாள். அன்று முதல் அவள் சாகும்வரை - சாகடிக்கப்படும் வரையில் - என் வீட்டில் தான் இருந்தாள். தன் சக்திக்கேற்ற மட்டுமல்ல, சக்திக்கு மீறிய அளவு கூட வேலை செய்தாள். தன்னிடம் நன்றி காட்டும் எனக்கு என்னென்ன வகையாலே உபசாரம் செய்து திருப்தி செய்விக்கலாம் என்பதில் அவள் விசேஷ அக்கறை கொண்டாள். உலகிலே காப்பாற்றுவாரற்று உருக்குலையும் ஏழைக்கு, எதிர்பாராதவிதமாக உதவி கிடைத்தால், எவ்வளவு மனக் குளிர்ச்சி ஏற்படும் என்பதை நான் அப்போதுதான் நன்றாகத் தெரிந்துகொண்டேன். அவளிடம் நான் கொஞ்சம், கொஞ்சமாக என் கதையைக் கூறினேன். அவளும் என் கணவரின் போக்கைப் பார்த்து, விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பெருமூச்செறிந்தாள், தன்னைக் கைவிட்ட கணவனை முன்பு பேசியதைவிட அதிகக் கொடுமையாகக் கண்டித்தாள் - அவள் மனப்பான்மை எனக்குப் புரிந்தது. என் கணவரின் கண்மூடிப் போக்கையே அவள் மறைமுகமாகக் கண்டித்தாள் - எனக்குத் திருப்தியாக இருக்குமென்று. 'கழைக் கூத்தாடியுடன் ஓடிவிட்டான் என் புருஷன்; நானாவது ஒண்டிக்கட்டை. உன் அழகுக்கும் குணத்துக்கும் எதற்காக அம்மா அவர் உன்னை இப்படி இம்சைப்படுத்துகிறார். தங்கவிக்ரகம் போலக் குழந்தை இருக்கிறது; இதைப் பார்த்துக்கூட அவருடைய மனம் இளகவில்லையே. என்ன மனம்மா அவருக்கு" என்று கூறி ஆயாசப்பட்டாள். கிராமத்தில் மந்திரவாதியிடம் சிகிச்சை பெறச் சென்ற இடத்திலே, தன் இன்மொழியாலும் சமர்த்தாலும், என் மனதுக்குச் சந்தோஷமூட்டிய துளசி, எனக்குத் தாயார்போல வந்து சேர்ந்தவள் இருவரையும் நான் என்றும் மறக்கமுடியாது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:14 am

மகனே! என்னைப் போலவே, அந்தக் கிழவியும் உன்னிடம் மிகுந்த ஆசை கொண்டிருந்தாள். எப்படியாவது இந்தக் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்படி செய்யவேண்டும் என்று அவள் என்னென்னவோ செய்து பார்த்தாள். என் பொருட்டு அவரிடம் இதமாகப் பேசியும் பார்த்தாள். அவள் பத்து நிமிஷம் பேசுவாள். அவர் அரை நிமிஷத்தில் அலட்சியமாக ஏதாவது பதில் கூறி விடுவார். "கிரஹம் போறாது" என்று எண்ணி அவள் காத்துக் கொண்டிருந்தாள்.

இந்தச் சமயத்திலே, உருட்டும் கண்களும், மிரட்டும் மீசையும் கொண்ட ஒரு முரடன், அவரிடம் அடிக்கடி வந்து ஏதோ குசுகுசுவென்று பேசிக் கொண்டிருக்கக் கண்டேன். ஆரம்பத்தில் அவன் அவரிடம் அடக்கமாக நடந்து கொண்டான். பிறகு சமத்துவமாக நடந்து கொண்டான். ஒரு வார காலத்திலே, அவர் அவனிடம் அடக்கமாக நடந்து கொண்டார். அவனுக்கு, அவர் காப்பி ஆற்றிக் கொடுப்பார்; வெற்றிலைத் தட்டை எடுத்துக் கொண்டு வந்து தருவார்; "வாங்க! உட்காருங்க!" என்று மரியாதையாகப் பேச ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "இதென்னவோ வேடிக்கை! எவனோ, வெறியன் போலிருக்கிறான். இவனிடம் ஏன் இவர் இப்படிப் பாசம் காட்டுகிறார்" என்று நான் கேட்டேன். "இதிலே என்னம்மா ஆச்சரியம்! என் வீட்டுக்காரர், கழைக்கூத்தாடும் "பொம்பளை" கூட ஓடி விட்டாரே, என்ன இருந்தது அவளிடம்; மைக் கண்; காவி ஏறிய பல்லு; கந்தல் துணி; கையிலே புண்கூட இருந்தது; இருந்தும் அவள் பின்னாடி ஓடிவிட்டாரே, என்னை மறந்து, கௌரவத்தை, நிம்மதியான வாழ்வை மறந்து.

இந்த ஆண்களின் சுபாவத்தை நம்மால் கண்டறிய முடியாதம்மா. சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று பேசுவார்கள். பெண்ணின் மன ஆழத்தைக் கண்டறிய முடியாது என்று பேசுவார்கள். ஆனால் உண்மையிலே பெண்ணின் மனதிலே ஆண்களிடம் தோன்றக் கூடிய சூது, சூழ்ச்சி, வஞ்சனை இவை அவ்வளவு சுலபத்திலே தோன்றாதம்மா. பெண்ணைக் கைவிட்ட ஆண்கள், பெண்ணைத் துரோகம் செய்த ஆண்கள், பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்தவர்கள் - ஆகியோரின் தொகை ஏராளம். ஆனால் வெளியே தெரிய ஒட்டாதபடி அவர்கள் திரை போட்டுவிடுவார்கள். உன் புருஷனும், இந்த ஆசாமியிடம் நேசம் கொண்டாடுவது வேறோர் பெண்ணுக்காகத்தான் இருக்குமென்று எண்ணுகிறேன். அதனால்தான் அவ்வளவு குழைகிறார்" என்றாள்.

இருக்குமா? இருக்கவிட மாட்டாளே தங்கம்! என்னிடமிருந்து அவரைப் பிரித்தவள், அவரை வேறு ஒருத்தியிடம் பறிகொடுக்க இசைவாளா? அவளுடயை சாமர்த்தியத்தினால் தடுத்துவிடுவாளே என்று எண்ணினேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:14 am

புதியவனிடம் பேசும்போதெல்லாம், அநேகமாக, சாமி கதை, தேவி மகாத்மியம், வரப்பிரசாதம், அருள் இப்படிப்பட்ட வார்த்தைகளே அதிகமாக இருந்தன. சத்விஷயமாகவே பேசுவதாகத் தோன்றிற்று. ஆனால் எப்படி நம்புவது? ஆண்களின் மனதை எப்படிக் கண்டறிய முடியும்? சாமியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். தபசு செய்பவர்களாகக்கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஜபதபமெல்லாம், பெண்ணைக் கண்டதும் பஞ்சாகப் பறக்கிறதே. ரிஷிகளும் முனீஸ்வரர்களுமேகூட இந்த மோகத்திலிருந்து தப்பவில்லை என்று கதை படிக்கிறார்களே, அப்படி இருக்க, நயவஞ்சகரான என் கணவர் பேச்சிலே சாமி கதை இருந்தாலும், மனம் உண்மையில் வேறோர் மாதிடம் தாவி விடவில்லை என்று நான் எப்படி நம்ப முடியும். அன்பால் அவரை அபிஷேகித்த என்னைத் தவிக்கச் செய்துவிட்டுத் தங்கத்தைத் தேடிக் கொண்டவர், இப்போது தங்கம் கிடைத்துவிட்டாள், இனி ஒரு முத்துவைத் தேடுவோம் என்று எண்ணியிருக்கக் கூடுமல்லவா? யாராக இருக்கும்? எவள் மீது வலை வீசுகிறார்கள்? இதை அறிய நான் வெகு பாடுபட்டேன்.

அவர்கள் இருவரும் பேசுகிற பேச்சிலே மறைந்துதான் அந்த ரகசியம் இருக்கவேண்டுமென்று எண்ணி, வெகு ஜாக்கிரதையாக அவர்கள் சம்பாஷணையைக் கவனிக்கலானேன். ஒரு துப்புக்கூடக் கிடைக்கவில்லை. ஒரு தடவை மட்டும் "சிந்தாமணிக்காக என்ன செலவிடவும் நான் தயார்" என்று உன் அப்பா, புதியவரிடம் கூறிடக் கேட்டேன். சிந்தாமணி! ஒரு சமயம் அந்தப் பெயர் கொண்ட ஒருத்தியைப் பெறத்தான் முயற்சி நடக்கிறதோ என்று யோசித்தேன். இருக்கும், ஏன் இருக்கக்கூடாது! ரங்கம் - பிறகு தங்கம் - பிறகு சிந்தாமணி - மல்லிகை, ரோஜா, மருக்கொழுந்து! வண்டுக்கு வித்யாசமோ திருப்தியோ ஏது? மலருக்கு மலர் தாவிக்கொண்டுதானே இருக்கும். அதுபோலவே இவர் சிந்தாமணியைத் தேடுகிறார் என்று தீர்மானித்தேன். யார் அவள்? எங்கிருப்பவள்? என்ற கேள்வி என் மனதிலே புகுந்து குடைந்தன.

கிழவியாலும் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. "இந்த ஊரிலேயே சிந்தாமணி என்ற பெயர் கொண்டவள் ஒருத்தியும் இல்லையே அம்மா!" என்று கிழவி கூறினாள். வெளி ஊரோ? நாடகக்காரியோ! பாட்டுப் பாடுபவளோ! சீமான் மகளோ! யார் இந்தச் சிந்தாமணி என்று அறிய நான் துடியாய்த் துடித்தேன். இந்தத் துடிப்பை அதிகப்படுத்திற்று, இன்னோர் நாள் அவர்கள் பேசிய பேச்சு. "முதலியார்! கொஞ்சங்கூடக் கவலை வேண்டாம். எப்படியும் இன்னுமோர் பதினைந்து நாட்களில், தவறினால் ஒரு மாதத்துக்குள் சிந்தாமணி உமக்குக் கிடைக்கும் படியாகச் செய்கிறேன். இது தேவி மீது ஆணையாக நான் கூறுவது. சிந்தாமணி கிடைத்ததும், உமது வீட்டிலே, தனி அறை தயாராக வேண்டும். அந்த அறைப் பக்கம் நீர் தவிர வேறு யாரும் போகக் கூடாது. சதா சர்வகாலமும் பரிமளத் தூபம் இருக்க வேண்டும். சிந்தாமணி நிச்சயம் உமக்குத்தான், பயப்படாதீர்" என்று அந்த உருட்டுக் கண்ணன் உரைத்தான். இன்னும் என்ன சந்தேகம்? சிந்தாமணி என்ற எவளோ ஒருத்தியை, வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்துவிடச் சதி நடக்கிறது. ரங்கமும் தங்கமும் போதவில்லை! சிந்தாமணி வரப்போகிறாளாம். ஒன்று இரண்டல்ல, மூன்று! இந்த ஆண்களென்ன, கணக்கையா கவனிப்பார்கள்! உத்தம தசரதனுக்கு அறுபதினாயிரம் தேவிமார்களாமே! இந்த உதவாக்கரையார் மூன்றாவது இல்லாமல் எப்படிக் கௌரவம் பெற முடியும்!

சிந்தாமணி வரப்போகிறாள்! எனக்கு மற்றுமோர் சக்களத்தி! வரட்டும் அவளும். சிந்தாமணியின் கோலத்தையும் பார்த்துவிடுவோம் என்று எண்ணிக்கொண்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:16 am

சாதாரணமாக, ஆடவர்கள், கலியாணமாவதற்கு முன்பு கெட்டு அலைவதுண்டு; பருவச்சேஷ்டை காரணமாக ஏதோ விதங்களிலே உடலையும் மனதையும் பாழாக்கிக் கொள்வதுண்டு; பித்தளையைப் பொன்னென்றும், காடியைக் கனிரசமென்றும் கொள்வதுண்டு. அப்படிப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டோ , கேட்டோ , வீட்டிலே பெரியவர்கள், சரிசரி, பையனுக்கு வயதாகிவிட்டது, ஒரு கால்கட்டுக் கட்டிப்போட்டால்தான், வாழ்க்கையில் படிந்து இருப்பான்; இந்தச் சமயத்திலே அவனைக் கண்டிப்பதோடு மட்டும் விட்டுவிட்டால், அவன், நமது கண்ணிலே மண்ணைத் தூவிவிட்டு, கண்டபடி ஆடிக் கெடுவான்; ஆகவே, அவனுக்கு விரைவில் ஒரு கலியாணத்தைச் செய்துவிடவேண்டும். காலாகாலத்திலே செய்ய வேண்டிய காரியத்தைச் செய்தால்தான் எதுவும் வழியாக வரும் என்று பேசுவார்கள்.

பையனுக்கு நல்வார்த்தை கூறிக்கொண்டிருக்கும்போதே, நல்ல இடமும் பார்த்துக் கொண்டிருப்பார்கள், கப்பலுக்கு நங்கூரம் போடுவதுபோல. வாழ்க்கைப் படகை வழி தவறிச் செலுத்தாமலிருக்க, ஒரு கட்டுத் திட்டம் என்று தானே கலியாணத்தைக் கூறுவர். அதேபோல, பெரும்பாலும் ஆடவர்கள், கல்யாணமானதும், எப்படியாவது தமது பழைய நடவடிக்கைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு, பழைய சிநேகிதர்களிலே கூடச் சிலரை ஒதுக்கிவிட்டு, புதிய முறையை ஆரம்பிப்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். பெட்டியிலிட்ட பாம்பு போலாகிவிட்டான் பார்த்தாயா, மாலை வேளைகளிலே மரகதத்தின் வீட்டிலேயே கிடப்பானே, இப்போது பார்த்தாயா, எவ்வளவு அடக்க ஒடுக்கமாகிவிட்டான். அந்தத் தெருப்பக்கமே கூடப் போவதில்லை என்றெல்லாம் பேசுவார்கள். "எங்கே சார், உங்களைப் பார்க்க முடியவில்லை இப்போதெல்லாம்!" என்று நண்பர் கேட்டால், புதிதாக மணமானவர் புன்சிரிப்புடன், பதில் என்ன கூறுவதென்று தெரியாமல் நிற்பார். வேறோர் நண்பர், "அவர் எப்படி முன் போல் இருக்க முடியும்! நம்மைப்போல் அவர் என்ன ஒண்டிக் கட்டையா? அவருக்குக் கலியாணம் ஆகிவிட்டது; இனி எப்படி அவர், நம் கண்ணிலே படமுடியும்" என்று கேலி பேசுவார்.

கலியாணம் செய்து கொள்ளுமுன், கண்ணையும் கருத்தையும் கெடுத்துக் கொள்ளும் ஆண்களே அதிகம். மணவறையில் வரும் வரை பிரம்மசாரியாகவே இருந்தவர் என்று உறுதியாகக் கூறக்கூடிய நிலையில், ஆயிரத்திலொரு ஆடவர் தேறுவாரோ என்னவோ! ஆனால், எப்படிப்பட்ட அலைச்சல்காரரும், கலியாணமானதும், கொஞ்சம் திருந்திவிடுவதைத்தான் சாதாரணமாகப் பார்க்க முடியும். சிலது உண்டு. கலியாணமான பிறகும் பழைய குருடியாக உள்ளதுகள். உன் அப்பாவின் போக்கோ தனி ரகமாக இருந்தது. அவருக்கு மோக வெறி, பருவம் கடந்து ஏற்பட்டது. எனவேதான் அளவுக்கு மீறிப் போகலாயிற்று. ஆகவே தான், சிந்தாமணி - சிந்தாமணி - என்று சதா பஜனை செய்து கொண்டிருந்தார். நம்ம ராதா ஒரு கதை சொல்லுவாள்; யாரோ ஒரு வீராதி வீரனாம், உலகையே ஜெயித்து ஒரு குடைக்கீழ் ஆளவேண்டும் என்று எண்ணினானாம்.

பல தேசங்களையும் ஜெயித்தவனாம்; புகழ் ஓங்கி வளர்ந்ததாம். அப்படிப்பட்டவனுக்கு, முதிய பருவம் வருகிற நேரத்தில், ஒரு அழகு ராணியிடம் அமோகமாக ஆசை பிறந்ததாம். அதனை அறிந்து கொண்ட அந்த ராணி அசகாய சூரனைத் தன் அடிமையாக்கிக் கொண்டாளாம். கடைசியில் அவன் ராஜ்யம், ரணகளம், கீர்த்தி முதலியவற்றை எல்லாம் மறந்து அவளிடம் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருப்பதே வேலையாகக் கொண்டு, அதன் பயனாக செல்வாக்கையும் மதிப்பையும் இழந்தானாம். பெயர் என்னவோ ஜுலியஸ் சீசர் என்று சொல்வாள். அதுபோலக் கொஞ்சம் வயதான பிறகு, இந்தக் காதல் நோய் ஏற்பட்டால், அதைத் தீர்த்துக் கொள்ளும் மருந்தும் கிடைப்பது கஷ்டம். மருந்து கிடைத்தாலும், சுலபத்திலே வேலை செய்யாது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:16 am

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே, அதுபோல முதிய பருவத்திலே மோகம் பிறந்தால் அதன் வேகத்தைத் தாங்க மாட்டாமல், அவர்கள் நிலையையே இழந்துவிடுமளவு ஆடுவர். உன் அப்பாவுக்கும் அந்தக் கதிதானோ என்று நான் அஞ்சினேன். இவளெவளோ சிந்தாமணியாம்! தங்கத்திடம் கொண்ட ஆசையால் அவர் என்னை இவ்வளவு பாடுபடுத்தினார். இன்னும் சிந்தாமணியும் வந்து சேர்ந்தால், தீர்ந்தது. என் கையில் திருவோடு கொடுத்துத் துரத்தியும் விடுவார்கள் என்று பயந்தேன். சொல்லமுடியாது, மகனே! மோகத்தால் பிடிதாட்டப்படும் ஆடவர்கள் எவ்வளவு மோசமாக நடக்க ஆரம்பிப்பார்கள் என்பதை அளவறிந்து கூற முடியாது - சொந்த மகன், மகள், அண்ணன், தம்பி ஆகியோரையும் தன்னிடம் பிரியமுள்ள ஊழியர்களையும் உதாசீனம் செய்யத் துணிவார்கள். பழைய பாசம், நேசம் அவ்வளவும் பாழாகும். கவலைப்பட மாட்டார்கள். எது வந்தாலும் சரி, எது போனாலும் சரி என்று துணிந்து விடுவார்கள். யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், எண்ணிக் கொள்ளட்டும் என்று மனதை மரக்கடித்துக் கொள்வார்கள். மகனே! இரண்டாந்தாரம் செய்து கொண்ட குடும்பத்திலே வளரும் பிள்ளைகளிலே பல கொடுமைக்கு ஆளாவதைப் பார்க்கிறோமே, மாற்றாந்தாய்க் கொடுமை என்று அதனைக் கூறுவார்கள். ஆனால் குற்றம், அந்த இரண்டாம் மனைவி மீது அதிகம் இராது; ஆடவன் மீது தான் இருக்கும். அதைக் கூர்ந்து கவனித்தால்தான் தெரியும், புரியும்.


ரங்கோனில் அப்படித்தான். எங்கள் பக்கத்து வீட்டிலே, ஒரு பிள்ளை இருந்தார். அவருக்கு வயது வந்த ஒரு பெண்; மனைவி இறந்துவிட்டாள். மறு கலியாணம் செய்து கொண்டார். கொஞ்ச நாட்களுக்குள், அவருடைய மகள் கண்ணீர் விடலானாள். மாற்றாந்தாய்க் கொடுமை என்றுதான் நான் எண்ணிக் கொண்டேன். படுபாவி, எங்கிருந்தோ ஒருத்தி வந்து சேர்ந்தாளே, குழந்தையின் வாழ்க்கையைப் பாழ்படுத்த என்று கூடச் சபித்தேன். ராதாதான் சூட்சமத்தைக் கண்டறிந்து சொன்னாள். கொடுமை அவளால் உண்டாகவில்லை, அந்த ஆடவனாலேதான். ஒரு சம்பவம் கேள்; ராதாதான் சொன்னாள். ஒரு நாள் அவன் ரோஜாச் செண்டு வாங்கி அனுப்பினானாம் வீட்டுக்கு, வேலைக்காரனிடம். அதனை யார் எடுத்துக் கொள்வது என்ற சிக்கல் வந்து விட்டது. மாற்றாந்தாய் கொடுமைக்காரி என்கிறோமே அவள் தான், அன்புடன் அந்தச் செண்டைப் பெண்ணுக்குக் கொடுத்தாளாம். பெண் பயந்துகொண்டே அதைப் பெற்றுக் கொண்டாள்.

பிறகு அவன் வீட்டுக்கு வந்திருக்கிறான். பெண்ணின் ஜடையிலே ரோஜா இருந்திடக் கண்டான் - முகம் மாறிவிட்டது. அவ்வளவு விரைவிலே அவன் மனம் கெட்டு விட்டது. பெண்கள் விஷயந்தானே என்று விட்டுவிட்டானா? அதுவுமில்லை; கிளறத் தொடங்கினான். இரண்டாந்தாரமாக வந்த பெண் ரோஜாவையும் மறந்துவிட்டாள், அதை யார் வைத்துக் கொள்வது என்று சர்ச்சை நடந்ததையும் மறந்து விட்டாள். ஏதோ வேறு நினைவில் இருந்தாள். புருஷனோடு பேசவில்லை. இந்தப் புருஷன், நாடகத்திலே கதையிலே வருவது போல, தன் மனைவி சிரித்துக் கொண்டே தன் எதிரில் வந்து நின்று, "பிராணநாதா! தாங்கள் அன்புடன் எனக்களித்த மலரை நான் பிரியத்துடன் என் பின்னலிலே வைத்துக் கொண்டிருக்கிறேன் பாரீர்" என்று கூறிக் கொஞ்சுவாள் என்று நினைத்தான் போலும். கடையிலே ரோஜா மலர் வாங்கும்போதே அவனுக்கு அந்த நினைப்பு இருந்திருக்கும். வயதானவனல்லவா! தான் வாங்கி அனுப்பிய ரோஜாவை, தன் மகள் சண்டை போட்டுத் தனக்கென்று எடுத்துக் கொண்டாள்; அதனாலேயே தன் மனைவி தன்னிடம் சரியாகப் பேசக்கூட இல்லை என்று இவன் தவறாக எண்ணிக் கொண்டான்.

மனதிலே இந்தத் தப்பெண்ணம் கொண்டதும், கோபிக்கவும் ஆரம்பித்தான். தன் மனைவியின் மனதை மகிழச் செய்ய வேண்டுமானால், மகளை அவள் எதிரில் கண்டித்தாக வேண்டும் என்று இவனாகத் தீர்மானித்துக் கொண்டான். பாவம், அந்தப் பெண்! இவனுடைய இரண்டாந்தாரம், இவனுக்குக் கலகமூட்டவுமில்லை; அவளுடைய மனதிலே, அவ்விதமான களங்கமே கிடையாது. இவனாக அவளுக்கு இன்னதுதான் திருப்தியாக இருக்குமென்று எண்ணிக் கொண்டான். உடனே, தன் மகளிடம், அனாவசியமாகக் கோபித்துக் கொண்டான். ஏன் இப்படிக் கத்துகிறாய் - கழுதை மாதிரி. நாய்களுக்குப் புத்தியே கிடையாது. சனியனை தொலைத்து விடலாம் என்றால், எந்தத் தடியனும் கிடைக்கவில்லை என்று இப்படிப் பேசினான். அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடுபடும். தன்னிடம் தன் தகப்பனார், ஏன் இப்படிக் கோபித்துக் கொள்கிறார். நாம் ஒரு தவறும் செய்யவில்லையே என்று அந்தப் பெண் யோசித்தாள். ஒரு காரணமும் தெரியவில்லை. தெரியாததால், அவளுக்கு ஒரு சந்தேகம் பிறந்தது. ஒரு வேளை, மாற்றாந்தாய் ஏதாவது கலகமூட்டி விட்டார்களோ என்று எண்ணினாள். அப்படியும் அவளுக்குக் கோபம் வரும்படியான காரியமும் ஒன்றும் செய்யவில்லை; ஏன் கலகமூட்டப் போகிறாள் என்றும் எண்ணிப் பார்த்தாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:18 am

அதே யோசனையில் ஈடுபட்டிருந்தபோது, ரோஜா ஜாடையிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. உடனே அதை எடுத்து மறுபடியும் செருகிக் கொள்ளலானாள். செருகுவதற்கு முன்பு ரோஜாவில் இரண்டோ ர் இதழ்களைக் கிள்ளி வாயில் போட்டு மென்றாள் - சின்னப் பெண்தானே விளையாட்டாகச் செய்தாள். எங்கள் ராதா, ரோஜா, ரோஜாவாகவே கூடத் தின்று விடுவாள். இந்தப் பெண் இரண்டு இதழைக் கிள்ளினதுதான், பார்த்துக் கொண்டே இருந்த தகப்பன், பளார் பளார் என்று அடித்துவிட்டானாம். அந்த அடி கூட அல்ல அந்தப் பெண்ணுக்குத் துக்கம் தந்தது; அடித்துக் கொண்டே அவன் சொன்ன வார்த்தைதான் அவள் உயிரையே துடிக்கச் செய்தது. "சனியனே! ஆடு தழையைத் தின்பதுபோல ரோஜா புஷ்பத்தைத் தின்றாயே, ரோஜாவின் அருமை தெரிந்தால் செய்வாயா இப்படி? உனக்கு ஏது அந்த யோக்யதை! நான் அந்தத் தடிக் கழுதையிடம் சொன்னேன், ரோஜாவை அம்மாவிடம் கொடடா என்றால், கழுதை உன்னிடம் கொடுத்துத் தொலைத்தான் போலிருக்கு. நீ அதை இப்படிப் பாழாக்குகிறாய். இப்படிப் பாழாக்கினாலும் ஆக்குவது, சின்னம்மாவுக்குத் தருவதில்லை என்ற அளவுக்குக் கெட்ட எண்ணம், இந்த வயதில்" என்று கூறினான். பாவம் அந்தப் பெண் பதறினாள், கதறினாள். அது முதல் தகப்பனுக்கும் மகளுக்கும் சரியானபடி பேச்சு வார்த்தை கிடையாது. அந்தப் பெண் அழுதபடி கிடந்தாள். பலர், இது மாற்றாந்தாய்க் கொடுமை என்று எண்ணினார்கள். நான் கூட அப்படித்தான் எண்ணிக்கொண்டேன். ராதாதான், நடந்தது என்ன என்று அந்தப் பெண்ணிடம் பேசி, இந்தச் சூட்சமத்தைத் தெரிந்து எனக்குக் கூறினாள்.

என்மீதுதானே, உன் அப்பாவுக்குக் கோபம், வெறுப்பு, விரோதம் எல்லாம். தங்கத்திடம் பிரமையோடுதானே இருக்கிறார். அவளிடம் அடங்கிக் கிடப்பார். ஆகவே அவளுக்கு இரகசியத்தைக் கூறி அனுப்பினால், அவள், அவரைத் தடுப்பாள், கோபத்தால் முடியாவிட்டால், புன் சிரிப்பால்; இரண்டினாலும் முடியாவிட்டால் கண்ணீரால் என்று நினைத்தேன். ஆனால் மறுபடியும் ஒரு சந்தேகம் வந்தது. தனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமையைக் கெடுப்பதற்காக நான் ஏதோ சூது செய்கிறேன் என்று அவள் நினைத்து விடுவாளோ என்று நினைத்தேன். உண்மையாகவே, யாருக்கும் அம்மாதிரியான நினைப்புத்தானே தோன்றும். தங்கத்தினிடம் அன்பு கொண்டா, நான் சிந்தாமணியைப் பற்றி அவளுக்குக் கூறவேண்டுமென்று எண்ணினேன். எனக்கு இருந்த செல்வாக்குத் தங்கத்தால் பறிக்கப்பட்டுப் போய் விட்டது. அதனைப் பறித்துக் கொள்ளச் சிந்தாமணி வருகிறாள், எனவே சிந்தாமணியைப் பற்றித் தங்கத்துக்கு எச்சரிக்கை செய்வோம் என்று நான் நினைத்தேன். அவள் எப்படி நான் நல்ல கருத்தோடு இக்காரியம் செய்கிறேன் என்பதை நம்புவாள். சந்தேகப்பட்டால்? நம்ப மறுத்தால்! இவ்விதம் எண்ணிக் குழம்பினேன்.

இவ்வளவும் செய்தது, என் பொருட்டு அல்லடா மகனே! நான் அவரால் வெறுக்கப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்டு, ஒதுக்கித் தள்ளப்பட்டுப் போனேன். நான் குடியிருந்த அவருடைய மனதிலே தங்கம் குடி ஏறிவிட்டாள். அவளைத் தள்ளிவிட்டு, சிந்தாமணியாவது வரட்டும் காந்தாமணியாவது வரட்டும் என்று நான் இருந்துவிடக் கூடும். எனக்கு அது இலாப நஷ்டம் அற்ற விஷயம். ஒருவிதத்திலே பார்த்தால் இலாபமுங் கூட. சிந்தாமணியுடன் அவர் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கையிலே, தங்கம் அழுது கொண்டிருப்பாளல்லவா! என்னை அழவைத்தவளே! இதோ உன் முறை வந்துவிட்டது அழு! அறிவற்றவளே! அன்பால் பிணைக்கப்பட்டிருந்த எங்களைப் பிரித்தாய், உன் சாகசத்தால். பார்த்தாயா, உன் சந்தோஷம் நிலைத்ததா? வந்துவிட்டாள் பாரடி உனக்கொரு சக்களத்தி! என்று கூறிக் கேலி செய்யலாம். நான் ஏதோ கெட்ட சுபாவக்காரி, ஆகவேதான், அவர் என்னை வெறுத்துத் தள்ளி விட்டுத் தங்கத்தைக் கலியாணம் செய்து கொண்டார் என்று பேசுகிறார்களே ஊரார்; இப்போது என்ன சொல்வார்கள்! தங்கம், மகா அழகி, என்னைப்போல அவளுக்கொன்றும் பேயும் இல்லை, நோயும் இல்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:19 am

அன்பு கொண்டுதானே அவளை மணந்துகொண்டார். அப்படி இருந்தும் அவளை விட்டு வேறோர் மாதைத் தேடிக் கொண்டாரே என்று பேசும்போது என்னைப் பற்றி கொண்டுள்ள தவறான கருத்தை நீக்கி விடுவார்கள். குற்றம் அவர்மீதுதான், என்மீதல்ல என்று உணருவார்களல்லவா. அதுகேட்டு நான் ஆனந்தமடையலாம்; பெருமையுமடையலாம். சிந்தாமணியின் பிரவேசம், எனக்கு அந்த விதத்திலே கவனித்தால் இலாபந்தான். ஆனால் மகனே! நான், என்னை மறந்துவிட்டேன். நீ பிறந்ததும் என் சுகம், அந்தஸ்து இவைகளைப் பற்றிய எண்ணமே எனக்குப் போய் விட்டது. நான் வாழ்வது என்று தீர்மானித்ததே உன் பொருட்டு. உனக்காக என் சபதத்தைக்கூட நான் கைவிட்டுவிட்டேன். இந்தக் காரியத்தின்போதும், நான் உன்னைப் பற்றித்தான் எண்ணினேன். உனக்காகத்தான், சிந்தாமணி வரக்கூடாது என்று தீர்மானித்தேன்.

அவளும் வந்து சேர்ந்துவிட்டால் என் வாழ்வு மேலும் சீரழியுமே என்று இலேசாக என் மனதிலே பயம் தோன்றிய போதுங்கூட, ஒரு கணம் என்னைப் பற்றிய நினைப்பு வரும். மறுகணம் உன்னைப் பற்றியே எண்ணுவேன். நான் சீரழிந்தால், சீந்துவாரற்றுப் போனால், என் செல்வம் என்னாவது? என் நிலை என்ன ஆகும்; தந்தை காமவெறி தலைக்கேறி, குடும்பத்தை மறந்து திரிய, தாய் அழுதுகொண்டிருப்பாளானால், குழந்தையின் நிலை என்ன ஆகும்! தெருக்கோடியில் கூவும் சிறு பிள்ளைகள், சுவரேறிக் குதிக்கும் பையன்கள், சிறு பொருளைத் திருடிவிட்டு அடிபடும் பாலர்கள், எல்லாம் குடும்பத்திலே உள்ள கோணலின் விளைவுகள்தானே. சிறுவயதிலேயே, கடைவீதிகளிலும், சந்தைகளிலும், இரயிலிலும் பாடிக்கொண்டு வரும் பிச்சைக்காரப் பயல்களை நான் பார்த்திருக்கிறேன்; வயிற்றிலடித்துக் கொண்டு, வறண்ட குரலிலே வாய்க்கு வந்ததைப் பாடிக் கொண்டு, வௌவால்போல, ரயிலுக்கு ரயில் தாவி, ரயில்வே அதிகாரிகளிடம் உதைப்பட்டு ரயிலில் போகிறவர்களிடம் அடிபட்டுக் கிடக்கும் அந்தச் சிறுவர்களின் முகத்திலே காணப்படும் சோகமும், உடலிலே உள்ள புண்ணும், காணச் சகியாததாக இல்லையா? அந்தச் சிறுவர்கள், குடும்ப ஒழுங்கு இல்லாததால், ஏற்பட்ட கேடுகளின் பயனாகத்தானே இங்ஙனமானார்கள் என்று நான் பல தடவை எண்ணியதுண்டு.

அணைத்து ஆதரிக்க அன்னையும், தகாதவழி போகாமல் தடுத்து நல்வழி காட்டத் தந்தையும் இருந்திருந்தால் இவ்வளவு சிறுவயதிலே இந்தப் பயல்கள், இப்படி அலையவேண்டி நேரிடாதல்லவா என்று எண்ணி வருத்தமடைந்திருக்கிறேன். அதனாலே அந்தச் சிறுவர்களுக்குக் காலணா கொடுக்கலாம் என்று எண்ணுபவள், அரையணாவாகக் கொடுப்பேன். "இந்தத் திருட்டுப் பயல்களுக்குச் சோத்துக்கு என்று நீ கொடுக்கிறாயம்மா, இதுகள் பீடி வாங்கிப் பிடித்துப் பிடித்து மாரை உலர வைத்துக் கொள்கின்றன. இதுகளுக்குக் காசு கொடுப்பதே தவறு" என்று எனக்குப் புத்தி கூறுவார்கள். அவர்கள் சொல்வதுபோல அந்தப் பயல்களும், கெட்ட வழக்கத்தைக் கொண்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஆனாலும் முதலிலே அவர்கள் அந்தக் கதியானதற்குக் காரணம், குடும்பம் சரிவர இல்லாததுதான் என்பதே என் எண்ணம். யாரோ ஒரு பெரிய பிரசங்கியாம். சீமையிலே இருந்து வந்தாராம். அவர் கூட, இதுபோலத்தான் பேசினாரென்று, ஒரு தினம் எங்க ராதா கூடச் சொன்னாள்.

சிந்தாமணியின் பிரவேசத்தால் உன் அப்பாவின் சுபாவம் அடியோடு மாறிவிடுவதுடன், சொத்தும் போய்விட்டால் உன் கதி என்ன ஆகும் என்பதை எண்ணியே நான் ஏங்கினேன். குடும்பத்தை மறந்து, சொத்தை இழந்து, சிந்தாமணியின் பொம்மையாகிவிட்டால், பிறகு உன்னைக் கவனிக்க முடியுமா அவரால்! சொத்து முழுதும் பாழாகிவிட்டால், பிறகு உனக்கு என்ன நிலை இருக்க முடியும். அதனாலே நான் பயந்தேன். சிந்தாமணியால் உன் வாழ்வு கெட்டுவிடுமே என்று அஞ்சினேன். உன்னைப் பராரியாக்கிவிடுவாரே அந்தப் பாவி என்று பயந்தேன். அதனாலேயே தங்கத்துக்காவது விஷயத்தைச் சொல்லி அனுப்பி, இந்த ஆபத்தைத் தடுக்கவேண்டுமென்று நினைத்தேன். அந்த எண்ணம், வேகமாக வளர்ந்தது. கிழவியிடம் யோசனை கேட்டேன். அவளும் அது சரியான யோசனைதான் என்றாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக