புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
426 Posts - 48%
heezulia
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
29 Posts - 3%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா


   
   

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 12:51 am

First topic message reminder :

"ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய 'கெட்டகாலம்' அவளை இப்படியாக்கிவிட்டது!" - இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது.

என் நண்பன் நாகசுந்தரம் இதிலே தேறியவன். எங்கெங்கு எழிலுள்ள மங்கையர் உள்ளனர், அவர்களின் நிலைமை என்ன என்ற அட்டவணை அவனிடம் உண்டு. பிரதி தினமும் கோயிலுக்கு அவன் போய் வருவது, தேவ பூஜைக்கா? தேவிகளைத் தரிசிக்கவேதான்! அவன் தான் எனக்கு ரங்கோன் ராதா விஷயமாக முதலிலே கூறினான். வந்து பார்த்தால்தான் என் மனம் திருப்தியாகும் என்று என்னை வற்புறுத்தினான்.

"நான் அவளைக் காண்பதால் உனக்கென்னப்பா திருப்தி?" என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். "இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு? சங்கீத வித்வான் 'சபாஷ்' என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன்? அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம்! அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து 'பேஷ்' என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி" என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன். "அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்" என்று நான் கேட்டேன். "கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி" என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். "போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்" என்று நான் வாக்களித்தேன். நண்பன் வேறு விஷயம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டான். என் மனதிலே அவன் தூவிய எண்ணம், அன்றிரவு, முளைவிட்டு, செடியாகிக் கொடியாகிக் காதற்பூவும் பூத்துவிட்டது. கண்டதும் காதல் என்றனர் கவிகள்! நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான 'ஆசை' பிறந்தது! என்ன சித்தம்! வாலிப சித்தத்தை அடக்கக் கடிவாளம் ஏது? மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது? ரங்கோன் ராதா! ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே! அன்றிரவு அடிக்கடி விழித்துக் கொண்டேன், ராதாவை எண்ணி எண்ணி. என் நண்பனே என்னைக் கேலி செய்வான். அத்தகைய திடீர்க் கொந்தளிப்பு என் மனதில்! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிறாள்; அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? சீச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும்? பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மாற்ற முடியுமா? நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல்! ராதையும் என்னைக் கண்டு 'மோகித்தால்' நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு! இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான்! எழில் ஒன்றும் மட்டல்ல! என்ன குறை ராதாவுக்கு! என்றும் எண்ணினேன்.

ராதையே நீ என்னை நேசிப்பதாலுன்னை - என்ற கீதம் ராதையின் மோகன கோபாலா என்ற பாடல் - ராதாரமணா என்ற பஜனை - ராதா ருக்மணி சமேதா என்ற பாகவத மொழி - ராதாபாய் என்ற நடிகையின் பெயர் - என் மனதிலே ராதா, ராதா என்று பலப்பல விதத்திலே எண்ணம் கூத்தாடிற்று.

காலை மலர்ந்தது. அதற்கு என் கஷ்டம் தெரிகிறதா! கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் - வழக்கமான இடத்துக்கு அல்ல! நாகசுந்தரனின் வீட்டுக்கு.

"விளையாட்டுக்குச் சொன்னாய் என்று எண்ணினேன். நிஜமாகவே வந்துவிட்டாயே" என்று நாகசுந்தரம் கூறினான். கேலி செய்தது போலிருந்தது அவன் பேச்சு. என்ன இருந்தாலும் 'பிகு'வை விட்டுவிடலாமா? "சேச்சே! நான் அதை மறந்தே விட்டேனப்பா! வழக்கப்படி உலவப் புறப்பட்டேன். உன்னையும் அழைத்துப் போகலாமென்றுதான் இங்கு வந்தேன்" என்று சமாதானங் கூறினேன். முதுகைத் தட்டிக் கொடுத்து, "எவ்வளவு பாசாங்கு பேசுகிறாயடா பரந்தாமா!" என்று கூறி என்னைக் கேலி செய்து மாடிக்கு அழைத்துச் சென்று, அந்த மங்கையைக் காட்டுவான் என்று நான் கருதினேன். ஆனால், நாகசுந்தரம், "சரி போவோமா! கோயிலுக்கா, ஆற்றோரமா?" என்று கேட்டுக் கொண்டே, தெருவில் இறங்கி விட்டான். நான் அடைந்த ஏமாற்றத்தை என்னென்பது. என் நண்பனின் திடீர் மாறுதலின் காரணம் எனக்குப் புரியவில்லை. அவனைக் கேட்கவோ மனம் வரவில்லை. 'சரி! ரங்கோன் ராதாவை நான் பார்க்கக்கூடாது என்று இவன் கருதுகிறான். அவளிடம் இவன் எண்ணம் வைத்துவிட்டான் போலிருக்கிறது' என்று எண்ணினேன். கோபந்தான் எனக்கு. எனவே, மனிதனின் சுயநலம், கபடம், மாதரால் உண்டாகும் மயக்கம் ஆகியவற்றைக் காரசாரமாகப் பேசினேன். என் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை, என் செய்வது. ராதாவைக் காணாததால் என் மனதிலே மூண்ட ஆவல் மேலும் அதிகரித்தது. அன்றிரவும் வேதனையை அனுபவித்தேன். அநாவசியமாக அவளைப்பற்றிக் கூறுவானேன். என் உள்ளத்திலே ஏதேதோ நினைப்பு வருமாறு செய்வானேன். பிறகு இவ்விதம் என்னை வாட்டுவானேன். உண்மை நண்பனின் காரியம் இப்படியா இருப்பது! என்று சலித்துக் கொண்டேன். ராதா எப்படி இருப்பாளோ, என்ற எண்ணம் வேறு, எரிமலையிலிருந்து கிளம்பும் நெருப்பெனக் கிளம்பி என்னைத் தகித்தது.

ராதாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அவள் மணமானவளாகக் கூட இருப்பாள் ஒரு சமயம். அவன் தான் "அழகான ஒரு பெண் ஆபத்தான நேரத்தில், பர்மாவிலிருந்து வந்துவிட்டாள்" என்று மட்டுந்தானே என்னிடம் சொன்னான். வேறு தகவல் தெரியாதே. அவனை விசாரிக்கவும் முடியாது போய்விட்டது. அவன், திடீரென மாறியே விட்டான். என்னிடம் பேசுவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். வீட்டிலேயும் அதிகம் தங்குவதில்லை. பிறகு நானே ராதாவைப்பற்றி அவனைக் கேட்க வேண்டி நேரிட்டது. "ஒரு நாளில் கூற முடியாது அப்பா, அந்தக் கதையை! பல நாளாகும். அதிலும், நீ யாரிடமும் அதைக் கூறுவதில்லை என்று உறுதிமொழி தந்தால்தான் சொல்வேன்" என்றான். "சரி! சொல். இப்போது ராதா எங்கே? அடுத்த வீட்டில் தானே?" என்று அவசரமாகக் கேட்டேன். என் நண்பன் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "நீ அவளைக் காதலிக்கிறாயா?" என்று கேட்கவே, நான் சிரித்துவிட்டு "என்ன பித்தம் பிடித்தவன் போலப் பேசுகிறாய். அவளை நான் கண்டதுமில்லை! காதலாம் காதல்" என்று கூறிக் கேலி செய்தேன். என் நண்பனின் முகமோ மிகக் கவலையுடன் இருந்தது. சில விநாடி மௌனமாக இருந்துவிட்டு அவன் என்னை உற்று நோக்கியபடி, "நண்பா! நீ ராதாவிடம், தூய்மையான முறையில் நடந்துகொள்வதாக வாக்குத்தர வேண்டும். பிறகு ராதாவிடம் நீ பழகலாம்" என்றான் சோகக் குரலில்.

என் நண்பனின் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டியது. எவ்வளவு துன்பத்தையும் சகித்துக் கொள்பவன், எவ்வளவு துயரச் செய்தியைக் கூறினாலும், 'சகஜம்' என்று கூறுபவன். அப்படிப்பட்டவன், ராதா யார்? எங்கே இருக்கிறாள்? என்ற சர்வசாதாரண விஷயத்தைப்பற்றி, ஏன் இப்படிக் கவலையும் கலக்கமும் கொண்டவனாகப் பேசுகிறான் என்பது புரியவில்லை. "என்னடா இது, விளையாடுகிறாயா? ராதா, கலியாணமானவளா? எதையோ மறைக்கிறாயே! என்னிடம் கூடச் சொல்லக்கூடாத பிரமாதமான இரகசியம் என்னடாப்பா அது?" என்று நான் கேட்டேன், கொஞ்சம் கோபமாகத்தான்.

நாகசுந்தரம், இதுபோல் நான் எப்போதாவது கொஞ்சம் கோபித்துக் கொண்டால், சிரித்துகொண்டே என் முதுகில் தட்டுவது வழக்கம். அன்று, பின்புறமாகக் கையைக் கட்டிக்கொண்டு, மௌனமாகவே நடந்தான், என் கோபப் பேச்சைக் கேட்ட பிறகும். "சரி, அவ்வளவுதான் உன் சினேகிதத்தின் யோக்யதை. யாரோ ஒரு பெண், ரங்கோன்காரி, அவள் விஷயத்திலே உனக்கு இவ்வளவு..." என்று நான் மேலும் கொஞ்சம் சூடாகப் பேசலானேன். நாகசுந்தரம் என்னைக் கெஞ்சுபவன் போலப் பார்த்து, "ராதா விஷயமாகக் கோபத்திலே கண்டபடி பேசிவிடாதே அப்பா. ராதா என் தங்கை" என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உனக்குத் தங்கை ஏது?" என்று நான் கேட்டேன், திகைப்புடன். நண்பன் பதில் கூறவில்லை. என்னுடைய வற்புறுத்தல், அவனுக்கு வேதனையை உண்டாக்குவதை அவனுடைய முகம் நன்றாகக் காட்டிற்று. அவன் அந்த மர்மத்தை விளக்கிக் கூறாவிட்டாலோ, என் வேதனை குறையாது என்று எனக்குத் தோன்றிற்று. எனவே நான் வாஞ்சையுடன் நாகசுந்தரத்தை அணைத்துக் கொண்டு, "நாகு! என்னடா இது, விடுகதை பேசுகிறாய்! உனக்குத் தங்கை கிடையாதே. ராதா என்பவள் ரங்கோனிலிருந்து வந்த பெண் என்று கூறினாயே. இப்போது 'ராதா என் தங்கை' என்று கூறுகிறாய். இது என்ன வேடிக்கை! விபரீதமாகவும் இருக்கிறதே! என்னிடம் கூடவா நீ மறைத்துப் பேச வேண்டும்" என்று கேட்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:03 am

ஆனந்தம் கொள்" என்று எனக்குக் கூறுவது போலிருந்தது. நான் வெட்கத்தால் தலை குனிந்து கொண்டேன். சபையிலே சிலர், "மாப்பிள்ளே! காலட்சேபத்தைக் கவனியும்" என்று கூட அவரைக் கேலி செய்தார்கள். பெண்களுக்குப் பரிந்து பேசிய காலட்சேபக்காரர், அழகழகாகக் குடும்ப வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டினார். "மலராவது கசக்கினால்தான் கெட்டு விடும்; மங்கையின் மனமோ மணவாளனின் முகம் கொஞ்சம் கடுகடுத்தாலே போதும் நொந்து போகும்; அவ்வளவு மிருதுவானது பெண் மனம். பெண் மனத்தைப் புண்ணாக்கும் ஆண்களைப் பேய் இனத்தில்தான் சேர்க்கவேண்டும்" என்று காலட்சேபக்காரர் கூறினார். உன் அப்பா தனது பார்வையாலும் புன்னகையாலும் அவர் கூறினதையெல்லாம் ஆமோதித்துக் கொண்டு இருந்தார். வருஷம் பல ஆனபோதிலும், எனக்கு அன்று நடந்தவைகள் அவ்வளவும் நன்றாக நினைவிலே இருக்கிறது. நடுநிசிக்குமேல், எனக்குத் தூக்கம் வந்துவிட்டது. தூங்கினால் கேலி செய்வார்களே என்பதற்காக மிகச் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தபடி இருந்தேன். இதனால் தூக்கம் அதிகப்பட்டதே தவிர, குறையவில்லை. என்னையுமறியாமல் கண்களை மூடினேன். பக்கத்திலே இருந்த ஒரு சிநேகிதி மீது சாய்ந்தேன். அவள் "கலியாண பெண்ணுக்கு மயக்கம் வந்துவிட்டது" என்று கூறினாள். ஆளாளுக்கும் கூவினார்கள். நான் கண்களைத் திறந்தேன். அவளோ என்னைத் தன் மீது சாய்த்துக் கொண்டு, "அசையாதே கண்ணு! ஒன்று மில்லை பயப்படாதே!" என்று உபசாரம் செய்தாள். காலட்சேபம் நின்றுவிட்டது. 'கொஞ்சம் பால் கொடுங்கள்' என்றார் ஒருவர். ஒருவர் 'விசிறுங்கள்' என்றார். இன்னொருவர் மெள்ள உள்ளே அழைத்துக் கொண்டு போகும்படி யோசனை சொன்னார். என் கணவர் சாதாரணமாக, கலியாணப் பிள்ளைகள் வெட்கப்படுவார்களே அதுபோலிராமல் "முகத்திலே கொஞ்சம் பன்னீர் தெளியுங்கள்!" என்று உரத்த குரலிலே சொன்னார்.

தூக்க மயக்கத்தைத் தெளிவிக்க என் முகத்திலே பன்னீர் தெளிக்கும்படி பரிவுடன் பேசிய என் கணவர், நான் கர்ப்பவதியாக இருக்கிறேன் என்ற செய்தி கேட்டு ஆனந்தமடைந்திருக்க வேண்டியது முறை. ஆனால், அவரோ என்னைத் தலைமுழுகிவிட்டதாகத் தெரிவித்தார். பெண்ணின் வாழ்க்கை இப்படி ஒரு ஆணின் ஆபாசத்துக்குக் கட்டுப்பட்டு இருக்கும் கொடுமையை யார் எண்ணிப் பார்க்கிறார்கள். மகனே! உன்னைப்போன்ற உத்தமகுணம் படைத்தவர்கள் உலகில் மிகமிகக் குறைவு. உன் மனம் என் அழுகுரல் கேட்டுப் பதைபதைத்தது. உள்ளே ஓடி வந்து, என்னை அடித்த முரடனிடம் சண்டைக்கும் நின்றாய். ஆனால் பொதுவாக ஆடவர்கள் இவ்விதம் செய்யமாட்டார்கள். அதனால், ஆண்கள் இரக்கக் குணமே அற்றவர்கள் என்று நான் கூறுவதாக எண்ணாதே. நாய், பூனை இவைகளிடம்கூட இரக்கம் காட்டும் ஆடவர்களை நான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட கருணாகரர்கள் கூட, மனைவியை புருஷன் அடித்துத் துன்புறுத்தும்பொழுது குறுக்கிட்டுத் தடுக்கமாட்டார்கள்.

அவன் பெண்ஜாதியை அவன் அடிக்கிறான், நாம் எப்படி அவனைத் தடுக்க முடியும்? போடா உன் வேலையைப் பார்த்துக் கொண்டு என்று அவன் சொல்லிவிட்டால், நாம் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வது என்று, இப்படி உப்புச்சப்பற்ற பேச்சைப் பேசிவிட்டுப் போவார்களேயொழிய, பெண்ணை இப்படி இம்சிக்கலாமா என்று கேட்க முன்வர மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலேதான் பெண்கள் வாழ்கிறார்கள்; என் நிலைமையும் அதுதான். உன் அப்பா, கலியாணமான சில காலம்வரை காட்டிய அன்பும் அக்கறையும், எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, ஒரு புது நம்பிக்கையையும் கொடுத்தது. மற்றவர்களைப்போல் இவர் முரடரல்லர்; கண்ணியம் வாய்ந்தவர். நம்மிடம் அமோகமாக அன்பு வைத்திருக்கிறார். ஆகவே, இவர் நம்மை மிகவும் பிரியமாக நடத்துவார்; நம் வாழ்விலே துன்பம் இராது என்று நம்பினேன். மற்றக் குடும்பத்துப் பெண்களைப்போலக் கசங்கிய கண்களாக இராது என்று நினைத்தேன். அவருடைய சொல்லும் செயலும் எனக்கு அவ்விதமான நம்பிக்கையைத் தந்தது. தங்கம், என் வாழ்க்கையிலே குறுக்கிடும் வரையில், அவர் என்னை அன்புடன் தான் நடத்தி வந்தார். பாபம்! தங்கத்தை மட்டும் குறைகூறிப் பயன் என்ன? உன் அப்பா பேராசைக்கு ஆட்படும்வரை என்னை அன்பாகத்தான் நடத்திவந்தார். பேராசை பிடித்ததும் என்னைச் சித்திரவதை செய்யலானார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:03 am

தலைமுழுகிவிட்டேன் என்று அவர் எழுதிய கடிதத்தைப் பற்றி, நானாக என் அப்பாவிடம் கூற முடியுமா? துளசிதான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். அப்பா, துடிதுடித்தார். 'மடையன், முட்டாள்' என்றெல்லாம் திட்டினார். என்னவோ உளறி இருக்கிறான். அவன் எழுதினதற்கு அர்த்தமே இல்லை என்றார். எனக்கு ஆறுதல் தருவதற்காக அவர் அவ்விதமெல்லாம் பேசினாரேயொழிய உண்மையிலேயே அவர் அந்தக் கடிதத்தால் அடைந்த வேதனையை அவருடைய முகம் தெளிவாகக் காட்டிற்று. முடிவில், 'நானே போய் அவனைக் கண்டித்துவிட்டு வருகிறேன்; இரண்டு நாள் நீ இங்கே தனியாக இரு; வந்துவிடுகிறேன்' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். இந்த முறைதான் சரியானது என்று துளசி ஆமோதித்தாள். எனக்கு என்ன செய்வது, எது சிறந்த முறை என்று தெரிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியவில்லை. ஒரே திகைப்பு. இரண்டு நாள் கழித்து, அப்பா திரும்பி வந்தார். "என்னப்பா விஷயம்?" என்று நான் ஆவலுடன் கேட்டேன். 'ஒன்றுமில்லையம்மா! அவன் ஒரு மடையன். என்னவோ ஒரு விதமான பைத்தியக்காரச் சந்தேகம் கொண்டிருக்கிறான். இது என்னடா அசட்டுத்தனம் என்று கேட்டால், விழிக்கிறான். ஒரே குழப்பம். ஒழியட்டும். இப்படிப்பட்ட புத்தியற்றவர்கள் தாமாகத் திருந்தவேண்டுமேயொழிய, நாம் சொல்லித் திருத்த முடியாது என்று விட்டு விட்டேன்.

அவன் கிடக்கிறான்; உனக்கென்னமா கவலை? நீதானே அந்த வீட்டு எஜமானி. என்ன செய்துவிடுவான் அவன்; சும்மா விடுவேனா நான்" என்று என் அப்பா பேசினார். அவர் சொன்னது சமாதானமா, தீர்ப்பா, குற்றச்சாட்டா என்று தெரியவில்லை. உன் அப்பாவிடம் ஏதேதோ பேசிப் பார்த்திருக்கிறார். அவர் ஒரே பிடிவாதமாக இருந்திருக்கிறார். தன்னால் ஒன்றும் சாயாமல் போனதை மறைக்க, என் தகப்பனார் ஏதோ பேசித் தீர்க்கிறார் என்பது தெரிந்தது. என் மனதிலே இருந்த குழப்பத்திலிருந்து ஒரு புது உறுதி பிறந்தது. நேரே வீடு போவது, என்னை அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். தைரியமிருந்தால், "என் மனைவி விபசாரி. அவளை நான் விலக்கி விட்டேன்" என்றும் சொல்லட்டும். என்னை ஊரார் தூற்றுவார்கள்; சகித்துக் கொள்கிறேன். ஆனால், அதேபோது, ஊருக்குப் பெரியவர், கௌரவமான குடும்பம். செல்வமும் செல்வாக்கும் படைத்தவர் என்று புகழப்படும் இவரையும், எதிரே இல்லாவிட்டாலும் தலை மறைவாக ஏளனம் செய்யும். அதனால் வரும் இழிவையும் அவமானத்தையும், என்னை இம்சித்ததற்குத் தண்டனையாக அவர் அடையட்டும் என்று எண்ணினேன். பூஜை, பூஜாரி, பேய், எதையும் பொருட்படுத்தவில்லை. துளசியின் அன்பு மொழிக்கு மட்டும், கொஞ்சம் சிரமத்துடன் சமாதானம் கூற வேண்டியதாயிற்று.


அப்பாவை அழைத்துக் கொண்டு, வீடு வந்தேன். பேயோட்டிக் கொள்வதற்காகவென்று நான் வீட்டிலிருந்து கிராமத்துக்குப் புறப்பட்ட போது, சாதுவாகத்தான் சென்றேன். பிறகு எதற்கும் பயப்படாதவளாக, வீட்டுக்குள் நுழைந்தேன். அடக்கம் பெண்களுக்குப் பூஷணம் என்பார்கள்; நான் அதன் படிதான் நடந்து வந்தேன். கிராமத்தை விட்டு மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்தபோதோ அதிகாரி என்ற முறையிலே புகுந்தேன். இனி, அடக்க ஒடுக்கம், பரிவு, பாசம், இவைகளை நான் ஏன் கொள்ள வேண்டும்? புருஷனின் குரலைக் கேட்டாலே பயந்து, அவர் காலால் இடும் வேலையைத் தலையால் செய்து தீரவேண்டும் என்று நான் இருப்பானேன்? அடங்கி ஒடுங்கி இருந்து பார்த்தாகிவிட்டது. கொடுமைகளைத் தாங்கிக் கொண்டேன். இழிவைப் பொறுத்துக் கொண்டேன்; சித்திரவதை செய்தார், சகித்துக் கொண்டேன். இவ்வளவுக்கும் பிரதிபலன் என்ன பெற்றேன்? தலைமுழுகிவிட்டேன் என்று அவர் எழுதிய கடிதந்தானே?

புருஷனிடம் இடிபட்டு அடிபட்டு, இம்சைகளைப் பெற்றுக் கொண்டு, பெண் எதைப் புகழாகப் பெறுகிறாள்? அவள் உத்தமி, பத்தினி, பதி சொல் கடவாத பாவை என்ற பட்டங்களைத்தானே! எனக்குத்தான் என் கணவர் விபசாரிப் பட்டம் கட்டிவிட்டாரே; இனி பத்தினி, உத்தமி என்ற பட்டம் கிட்டும் என்பதற்காக நான் ஏன் பாடுபடவேண்டும். கொஞ்சமும் இரக்கமின்றி என்னைத் 'தலைமுழுகிவிட' அவருக்கு மனம் இடந்தந்தான பிறகு, நான் ஏன் சாதுவாக இருக்க வேண்டும்? இருந்துதான் நான் என்ன சுகத்தைக் காணப் போகிறேன்? எனவே, ஓர் புதிய உறுதியுடன் வீட்டுக்குள் பிரவேசித்தேன். உலகறிய என்மீது குற்றம் சாட்டி, அதற்கு ருஜு காட்டி, என்னை வீதியிலே விரட்டட்டும். அதுவரையில், இந்த வீட்டில் நான் ஆட்சி செய்வேன். அவரை ஆட்டிப் படைப்பேன் என்று திட்டமிட்டேன். வீட்டுக்குள் நுழைந்ததுமே, புதிய முறையில் வேலை துவங்கினேன். நான் உள்ளே வந்த போது அவர் வீட்டிலே இல்லை. அப்பா, என்னைத் தனியாக விட்டுப் போக விரும்பவில்லை. நானாகவே அவரைப் போகச் சொன்னேன். வேலைக்காரியைக் கூப்பிட்டேன். "எங்கே அவர்? எத்தனை மணிக்கு வெளியே சென்றார்? யார் கூடச் சென்றார்?" என்று மளமளவென்று கேள்விகளை அதிகாரத் தோரணையில் பூட்டினேன். அவ்வளவு உரத்த குரலிலேயும் முடுக்காகவும் நான் அதுவரை பேசி அவள் கேட்டதில்லை. ஆகவே அவள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டாள். ஒரு வேளை "பேய்தான் பேசுகிறது" என்று தான் எண்ணிக்கொண்டிருப்பாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:03 am

"என்னடி சமையல் இன்று?" என்று கேட்டேன். அவள் சொன்ன பண்டங்கள் யாவும் அவருக்குப் பிரியமானவை. உடனே அவைகளை மாற்றினேன். அவருக்குப் பிடிக்காத வெண்டைக்காயைக் குழம்பு வைக்கச் சொன்னேன். அவருக்குக் கொத்தமல்லித் துவையல் பிரியம்; அதைச் செய்யவேண்டாம் என்று உத்தரவு போட்டேன். கீரைத் தண்டு ஒரு பதார்த்தத்திலே சேர்ந்ததா என்று சலித்துக் கொள்வார் அவர். அதைக் கூட்டுச் செய்யச் சொன்னேன். அவருக்கு 'இரசம்' இல்லாவிட்டால் சாப்பாடு பிடிக்காது. அன்று அது தேவையில்லை என்றேன். தயிருக்குப் பதில் மோர், தலைவாழை இலைக்குப் பதில் பொத்தல் ஆல இலை, நெய் வாடை அடிக்கும் 'ரகம்'. இப்படி சமையற்கட்டிலே என் போர் துவக்கப்பட்டது. சாப்பாடு தயாரானதும், வேலைக்காரியைப் பரிமாறச் சொல்லி சாப்பிட்டுவிட்டு, உள்ளே படுத்துக்கொண்டு, "நான் நாலுமணி நேரம் தூங்கி ஆகவேண்டும். இடையிலே எழுப்பாதே. தூங்கி எழுந்திருப்பதற்குள் காப்பி தயாராக இருக்கட்டும்" என்று உத்தரவு போட்டுவிட்டு, மெத்தை மீது வழக்கமாகப் போடுவதைவிட அதிகத் தலையணைகள் போட்டுக்கொண்டு, படுத்துக் கொண்டேன்.

பகல் ஒரு மணிக்குமேல் அவர் வந்தார். கூடத்திலே என் சாமான்கள் கிடந்தன. அதிலிருந்து தெரிந்து கொண்டிருப்பார், நான் வந்திருக்கிறேன் என்பதை. பைத்தியக்கார மனுஷர், நான் எந்தக் கோலத்திலே வந்திருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை.

"எங்கே ரங்கம்?" என்று வேலைக்காரியைக் கேட்டார். எங்கே ரங்கம்? முன்பெல்லாம், எதிரே நிற்பாள். கையில் தண்ணீர்ச் செம்புடன், முகத்தில் சந்தோஷத்துடன்; சாப்பிட்டிருக்க மாட்டாள்! எங்கே ரங்கம்? வந்து பாரேன்; இதோ இருக்கிறாள் ரங்கம்; வெல்வெட்டுத் தலையணை தலைக்கும் காலுக்கும் போட்டுக்கொண்டு, ஒய்யாரமாகக் கண்களைப் பாதி அளவுக்கு மூடிக்கொண்டு வெற்றிப் புன்னகையுடன் கட்டிலின் மீது படுத்துக் கொண்டிருக்கிறாள்! தூக்கம் பூரணமாக வரவில்லை, வரச் செய்கிறாள். பதினோரு மணிக்குச் சாப்பிட்டாள். கொஞ்சநேரம் கதைப் புத்தகம் படித்தாள். படித்தபடி தூக்கம் வருவது போலிருந்தது. புத்தகத்தை கீழே வீசி எறிந்தாள். எவனோ கதாசிரியன், உத்தமிகளின் இலட்சண விளக்கத்தை எழுதி இருந்தான் அதிலே. இதோ, படுத்துக்கொண்டிருக்கிறாள். எங்கே இருப்பாள் ரங்கம் என்று கேட்கிறாயே. எங்கே இருப்பாள்.

ஒரு செல்வக் குடும்பத்திலே பிறந்து, செல்வவானுக்கு வாழ்க்கைப் பட்டவள்? பகல் ஒரு மணிக்குத் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பாளா, நெல் குத்திக் கொண்டிருப்பாளா, அடுப்பு ஊதிக் கொண்டிருப்பாளா? வேலைக்காரி சமைத்தாள்; வேளையோடு சாப்பிட்டாள்; ஓய்வாகப் படுத்துக் கொண்டிருக்கிறாள். நாலு மணிக்கு எழுந்திருப்பாள்; காப்பி சாப்பிடுவாள், ஒரு அரைமணி நேரம் தோட்டத்திலே உலவுவாள்; பிறகு கோயிலுக்கோ, கோமளம், கோகிலம், குந்தளம் போன்ற சிநேகிதி வீட்டுக்கோ போய் வருவாள், பொழுதுபோக்காக! இப்படி எல்லாம் நான் கூறினேன். என் எதிரே இருந்த பெரிய நிலைக் கண்ணாடியில் தெரிந்த என் உருவத்துக்கு. அவர் கூடத்திலே வேலைக்காரியைக் கேட்டார் "எங்கே ரங்கம்!" என்று.

மகனே! முன்பு அவர் 'எங்கே வேலைக்காரி?' என்று என்னைக் கேட்பார். இப்போது வேலைக்காரியைக் கேட்டார், எங்கே ரங்கம் என்று. "அம்மா உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னாள் வேலைக்காரி. பிறகு அவள் தான் சாதம் போட்டாள். சமையற்கட்டிலே நடந்த சம்வாதம் எனக்குச் சங்கீதமாக இருந்தது.

"இதென்ன சனியன். வெண்டைக்காய் ஏன் செய்து தொலைத்தாய்?"

"அம்மாதான்..."

"என்னவாம் அம்மாவுக்கு? அம்மா! துவையல் எங்கே?"

"செய்யவில்லை."

"செய்யவில்லையா?"

"ஆமாம். அம்மா வேண்டாம் என்றார்கள்."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:03 am

"இதென்ன பெரிய இழவு! இது என்ன வீடா, சுடுகாடா?"

"பேஷ்; சபாஷ்! அற்புதம்!" என்று கூறலாமா என்று தோன்றிற்று எனக்கு, அவருடைய பதைப்பான பேச்சைக் கேட்டு, எதையோ தூக்கிக் கீழே வீசுகிற சத்தம் கேட்டது. "நான் என்னங்க செய்வது? அம்மா..." என்று அழுகுரலில் வேலைக்காரி பேசுகிற சப்தம் கேட்டது. பிறகு கூடத்திலே வந்து உலவிக் கொண்டே பேசலானார், உன் அப்பா.

"இந்த வீட்டிலே மனுஷன் எப்படி வாசம் செய்ய முடியும்! பேயைப் பெண்டாகக் கொண்டால் இந்தக் கதிதான்" என்றார். சில விநாடிகள் பேச்சு இல்லை; காலடிச் சத்தம் மட்டும்தான் கேட்டது.

"மங்களம்! இதோ பார், இனி இங்கே இதுபோல நடக்கக்கூடாது!" என்றார். மங்களம் என்ன செய்வாள்? எஜமானி போடும் உத்தரவின்படி நடக்கவேண்டியவள்தானே! "அம்மா சொன்னாள், அம்மா சொன்னாள் என்று வீட்டைக் குட்டிச் சுவராக்கக்கூடாது. அம்மாவுக்கு இங்கே யாரும் இந்த அதிகாரமெல்லாம் தரவில்லை. தெரிகிறதா? இந்த வீட்டிலே என் இஷ்டப்படிதான் சகலமும் நடக்க வேண்டும். ஜாக்ரதை, தோலை உரித்துவிடுவேன்" என்றார் மிரட்டலாக. தோலை உரித்து விடுவேன் என்றாரே தவிர, யாருடைய தோலை என்பதைக் கூறவில்லை. கூறத் தைரியமில்லை. வேலைக்காரி பதில் ஏதாவது பேசினாலாவது அவர் கோபத்தை வெளியே கக்கிவிட்டு நிம்மதி அடைந்திருப்பார். அவள் பேசாமல் இருக்கவே அவருடைய கோபம் வலிவு அதிகரித்தது. அந்தக் கோபத்தை நாற்காலிமேல் காட்டுகிறார், விசிறியின்மேல் காட்டுகிறார், தெருக் கதவின் மீது வீசுகிறார், கடைச் சிறுவன் மீது காட்டுகிறார், தோட்டக்காரன் மீது போடுகிறார்.

கோபத்தை எங்கெங்கோ பாய்ச்சுகிறாரே தவிர, ரங்கத்தின் மீது வீசத் தைரியமில்லை. ரங்கம் உள்ளேதான் சயனித்துக் கொண்டிருக்கிறாள்; கூடத்திலே குதிக்கிறார், கூவுகிறார்; உள்ளே நுழைந்து ஒரு வார்த்தை கேட்க முடியவில்லை. கேட்டிருந்தால் எரிமலை வெடித்திருக்கும். நெடுநேரம் இவருடைய 'திட்டு'களைக் கேட்டுக் கொண்டிருந்த வேலைக்காரி, "நான் யார் பேச்சைக் கேட்பது? அம்மா ஒரு விதமாகச் சொல்லுகிறார்கள், நீங்கள் அதற்கு நேர்மாறாகச் சொல்கிறீர்கள்; நான் யாருடைய அதிகாரத்துக்கென்று அடங்கி நடப்பது" என்று கெஞ்சும் குரலில் பேசினாள். ஐயோ பாவம், நம்மாலே அவளுக்குக் கஷ்டம் வருகிறதே என்று ஒரு விநாடி யோசித்தேன். பிறகு மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். சே! வேண்டுமானால், அவளுக்குத் தனியாகச் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அவள் கஷ்டப்படுகிறாள் என்பதற்காக நமது போர்முறையை மாற்றிக் கொள்ளக்கூடாது. இந்தப் போர் முறை வெற்றி தருகிறது.

ஆகவே இதனைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டேன். தன் கோபத்தை எங்கு காட்டுவது என்று தெரியாது திண்டாடிய என் கணவர், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கடைக்குப் போய் விட்டார். முன்பெல்லாம் சாப்பிட்டானதும் மூன்று மணி வரையில் படுத்துத் தூங்குவார்; நான் காப்பி போட்டுக் கொடுத்தான பிறகுதான் போவார். சாப்பிட்டு அரைமணி நேரமாகவில்லை, ஓடினார் கடைக்கு; நான் ஒய்யாரமாகப் படுத்து உறங்கினேன். அவரும் நானும் பழைய நாட்களிலே ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோமே, அப்போது எனக்கு இருந்த சந்தோஷம் ஒருவிதம். அவருடன் 'போரிடுவது' என்று திட்டமிட்டு, படை எடுப்பின் துவக்கத்திலேயே அவர் தோற்று ஓடினபோது நான் கொண்ட சந்தோஷம் வேறோர் விதமாக இருந்தது. எனக்கு இந்த இரு சந்தோஷங்களின் வகைகளை விளக்கச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இரண்டும் வேறு வேறு வகை என்பதில் மட்டும் சந்தேகமில்லை. இனிப்புப் பண்டங்களிலேயே, இனிப்பளிக்கும் முறையிலும், இனிப்பின் தன்மையிலும் வித்தியாசம் இல்லையா? அதுபோலவே, அந்த இருவகைச் சந்தோஷங்களிலேயும் வித்தியாசம் இருந்தது. காசி அல்வா தின்னும்போதும் இனிப்புதான்; கரும்பைத் கடித்துத் தின்னும்போதும் இனிப்புதான், என்றாலும் வித்தியாசம் இருக்கிறது பார் மகனே! அது போலிருந்தது. உத்தரவின்படி நாலு மணிக்கு வேலைக்காரி காப்பி கொடுத்தாள்; சாப்பிட்டேன்; குளித்தேன்; அதுவும் புது வழக்கம்! அலங்காரம் செய்து கொண்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:05 am

லேடி டாக்டர் லாசரஸ் எனக்கு அடிக்கடி வைத்தியம் பார்ப்பவர். பேய் பிடித்துக்கொண்டது என்று சொன்னபோது கோபித்துக் கொண்டு, வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்ட லாசரஸ், பிறகு பலதடவை கூப்பிட்டு அனுப்பியும் வருவதில்லை. "ஓ! முதலியார் வீட்டு அம்மாவுக்கா! டாக்டர் எதுக்கு? மந்திரக்காரனை அழைக்கட்டும் போ!" என்று கோபமாகக் கூறி அனுப்பிவிடுவார்கள். அதே லாசரசை அழைத்துக் கொண்டு வரும்படியாக, வேலைக்காரிக்குக் கூறினேன். அவள் மேலும் ஆச்சரியப்பட்டாள். "ஏண்டி! ஆந்தைபோல விழிக்கிறாய். அம்மாவுடைய போக்கே மாறிவிட்டதே என்று ஆச்சரியப்படுகிறாயா? இப்போது மாறித்தான் போய்விட்டாள். பழைய அம்மா இல்லை" என்று நான் கூறிவிட்டுச் சிரித்தேன். "அம்மா எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது நீங்கள் அதிகாரம் செய்ய ஆரம்பித்தபோது. ஆனால், பிறகோ எனக்குப் பயமாகிவிட்டது" என்றாள் அந்தப் பேதை. "ஏண்டி, பயம்? ஓஹோ! பிசாசு பயமா?" என்று கேட்டேன். 'ஆமாம்' என்று தலையசைத்தாள். "பைத்தியக்காரி, பேயும் கிடையாது, பூதமும் கிடையாது. லாசரஸ் டாக்டர் சொல்லுகிறதுபோல, எல்லாம் நரம்புக் கோளாறு. மேலும், மனிதர்களின் சுபாவத்தைக் கெடுக்க, மனிதரே போதும்" என்று நான் சொன்னேன். அவள் புரிந்து கொள்ளவில்லை. "மாறிவிட்டேன் என்று கூறுகிறாயே, அதுகூட உண்மை அல்ல; நானாக மாறிவிடவில்லை. மாறுதலை உண்டாக்கி விட்டார்கள்" என்றேன்; அதுவும் அவளுக்குப் புரியவில்லை.

"அடி! உனக்குப் புரிகிறபடி கூறுகிறேன் கேள். சாணி இருக்கிறதே அது எப்படி இருக்கிறது? ஈரமாக, 'கொள கொள' வென்று, பழுப்புக் கலரில் இருக்கிறதல்லவா? பிறகு, அதே சாணி 'வறட்டி' யாகி எரிக்கப்பட்ட பிறகு, எப்படி மாறிவிடுகிறது?" என்று கேட்டேன். "சாம்பலாயிடுது" என்றாள் வேலைக்காரி. "சாணி சாம்பலாவது யாரால்? நம்மால்தானே?" என்று கேட்டேன். "ஆமாம். நாம் அடுப்புக்கு உபயோகப்படுத்துகிறோம்; சாணி வறட்டியாகி, பிறகு சாம்பலாகிறது" என்று கூறினாள். "சாம்பல் வேண்டும் என்ற எண்ணத்துக்காகவா நாம் வறட்டியை எரிக்கிறோம்? இல்லையல்லவா? நாம், எதற்காகவோ ஒரு வஸ்துவை உபயோகிக்கிறோம். நம்முடைய உபயோகத்திற்குப் பிறகு, அந்த வஸ்து வேறு உருவம், வேறு குணம் கொண்ட வேறு வஸ்துவாகி விடுகிறது. இது, நம்மால் நேரிட்ட மாறுதல் என்பது பற்றிக்கூட நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. இப்படி மாறும் என்பது தெரிந்தும், நாம் காரியம் செய்வதில்லை. அதைப்போல, மனிதரை மனிதர் பயன்படுத்தி, மாற்றிவிடுகிறார்கள். இதையே தெரிந்து செய்வதும் உண்டு. பால் தயிராவது எப்படி? நாம்தானே 'புரை' தெளித்து, பாலைத் தயிராக்குகிறோம். அது போலவேதான் மனிதரால் மனிதரின் சுபாவம், உருவம்கூட மாற்றப்படுகிறது இந்தக் காரியம் உலகில் ஒவ்வோர் விநாடியும் நடைபெற்றபடி இருக்கிறது. இவ்விதமாக ஏற்பட்டதே என் மாறுதலும்! இதைப் பேயும் செய்யவில்லை, பூதமும் செய்ததல்ல! என் கணவரேதான் என் மாறுதலுக்குக் காரணம்" என்று நான் விரிவாக விளக்கினேன். அவள் பாவம்; சாணி சாம்பலாவது, பால் மோராவது இவைகளைப் புரிந்துகொண்ட அளவு, என் மாறுதலைப் புரிந்துகொண்டு வரவேண்டும் என்பதை மறுபடியும் அவளுக்குக் கூறிவிட்டு நான் வெளியே புறப்பட்டேன்.

வாடகை வண்டியைக் கூப்பிடுவதற்கு எனக்குக் கூச்சமாக இருந்தது. வண்டிக்காரனின் கூச்சம் எனக்கு இருந்ததைவிட அதிகமாக இருந்தது.

"முதலியார் வீட்டு அம்மாவா? ஏனுங்க? நம்ம வண்டி எங்கேங்க?"

"கடைக்குப் போயிருக்கு."

"போயிருந்தா என்னங்க. நான் போயி கூட்டிக்கொண்டு வருகிறேனுங்க."

"ஏன்? உன் வண்டிக்கு என்ன?"

"ஒண்ணுமில்லைங்க. ஆனா, நீங்க இதிலே வருகிறதுன்னா..."

"ஏன், வேறே எங்காவது நீ போகணுமா?"

"ராமா! ராமா! அதுக்குல்லீங்க. இது, 'வில்' வண்டிகூட இல்லை. ஒரே ஆட்டமா ஆடித் தொலைக்கும். அதுக்குத்தான் பார்க்கிறேன்."

"பரவாயில்லை."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:05 am

இவ்வளவு பேச்சுக்குப் பிறகுதான் வண்டியில் இடம் கிடைத்தது. பெரிய பணக்கார வீட்டு மகள், வாடகை வண்டியிலே போவது கௌரவக் குறைச்சல் என்று அவன் கருதினான்! அந்த எண்ணத்தைப் போக்கவே நான் அவனிடம் அவ்வளவு பேசவேண்டி இருந்தது. என்னைத் தன் வண்டியிலே ஏற்றிக்கொண்டு போவதாலே அவன் ஒருவித 'கௌரவம்' அடைந்தான். வழக்கமாக, வழியிலே வருகிறவர் போகிறவர்களுடன், 'வம்பளப்பவன்' அவன் என்று தெரியவந்தது. ஏனெனில் வழியிலே பலபேர் அவனிடம் பேசினார்கள். பெரும்பாலான பேச்சு அவசியமற்றது. அவனோ ஒவ்வொருவரிடமும் பேச்சை வளர்த்தாதீர்கள் என்று ஜாடை காட்டினான். அவர்களும் வண்டியிலே நான் உட்கார்ந்து கொண்டிருப்பது கண்டு மரியாதையாகப் போயினர்! வண்டிகள் எதுவந்தாலும் இவன் வழி சரியாக விடவே இல்லை. "போப்பா ஓரமாகப் போ" என்று அதட்டிக் கொண்டே சென்றான். அதாவது வண்டியிலே நான் இருக்கும்போது, வழக்கமாகக் காட்டும் பணிவுகூடத் தேவை இல்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். "அம்மா கால் வைத்தது எனக்கு அதிர்ஷ்டம்தான்" என்றான். பாவனைக்கு அல்ல; உண்மையாகப் பூரித்துப் போய்ச் சொன்ன வார்த்தை அது. அவனும் அதுவரை வண்டியை எங்கே ஓட்டவேண்டும் என்று என்னைக் கேட்கவில்லை; நானும் சொன்னவளல்ல. வண்டி மட்டும் போய்க்கொண்டே இருந்தது. அவன் ஏதேதோ தன் குடும்பக் கதையைப் பேசிக்கொண்டே இருந்தான். கொஞ்ச நேரத்தில் வண்டியை நிறுத்திவிட்டான். அப்போதுதான் தெரிந்தது அவன் வண்டியை, என் அப்பா வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறான் என்பது. என்ன செய்வது! அவன், நான் போகக்கூடிய இடம் அதுதான் என்று எண்ணம் கொண்டு அவ்விதம் செய்தான். அவன் மீது தப்பு இல்லை.

"வண்டியை அவிழ்த்துவிடட்டுங்களாம்மா" என்று கேட்டான். "வேண்டாம் இதோ வந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டு, உள்ளே நுழைந்தேன்.

வீட்டிற்குள் நுழைந்தேன், எதிர்பாராத சம்பவம்; ஆனால் ஆச்சரியப்படும்படி, தங்கம் ஓடோ டி வந்தாள். என்னைக் கண்டதும், "அக்கா! வா! நானே வரலாம் என்று இருந்தேன்" என்றாள். எனக்குத் திகைப்பு ஏற்பட்டது. நான் உட்காரப் பாய் விரித்தாள்; இரண்டு தலையணைகளும் போட்டாள். அப்பா வெளியே போயிருக்கிறார் என்று நான் கேளாமல் அவளே சொன்னாள். வண்டியை ஏன் அவிழ்த்து விடவில்லை என்று கேட்டுவிட்டு, வண்டிக்காரனைக் கூப்பிட்டு அவிழ்த்துவிடும்படி உத்தரவிட்டாள். வேலைக்காரியை ஓட்டலுக்கு அனுப்பினாள்!

தங்கமா, துளசியா என்று நான் சந்தேகிக்கவேண்டி இருந்தது, அந்த உபசாரங்களைக் கண்டு. என் வாழ்க்கைக்கு ஒரு முள்ளான அவள், என் கணவரின் மனதை மாற்றிவிட்டவள், எனக்கு இழிவும் பழியும் ஏற்படும்படி செய்த தங்கம், இப்படி என்னை உபசரித்தால் எனக்கு எப்படி இருக்கும். என்னவோ கதை சொல்வார்களே, யாரோ ஒருவன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான், பகல் வேளையில். வெயில் அவன் முகத்தில் பட்டது; அதைக் கண்டு ஒரு நாகப்பாம்பு படமெடுத்து, அவன் பக்கத்தில் இருந்துகொண்டு முகத்திலே வெயில் படாதபடி குடை பிடித்தது என்று சொல்வார்களே, அதைப் போல் இருந்தது தங்கம் எனக்கு உபசாரம் செய்தது. நான் எந்தவிதமாக நடந்து கொள்வது என்று தீர்மானத்துக்கு வரவே சிரமமாக இருந்தது. தங்கம் ஏன் தன்னுடைய போர்முறையை மாற்றிக் கொண்டாள் என்பதே விளங்கவில்லை. கேலி செய்கிறாளா? வெறும் பாவனையா? ஒருவேளை இப்படித்தான் நடக்கவேண்டும் என்று அப்பா கட்டளையிட்டாரோ? அல்லது என் கணவரே ஒரு சமயம், "என்ன இருந்தாலும் அவள் முதல், நீ இரண்டாவது தான். மேலும் அவள் உன் அக்கா; அவளிடம் நீ குரோதம் காட்டக்கூடாது" என்று யோசனை சொன்னாரோ என்று பலப் பல எண்ணங்கள் உண்டாயின.

காலையில் வந்தேன் - பரவாயில்லை - இப்போது மயக்கம் கிடையாது - ஆமாம் மாதம் நாலு - என்று இப்படித் துண்டு துண்டாக என் சேதிகளைச் சொன்னேனேயொழிய, எனக்குக் கலந்து பேசவோ அவளைப் போலக் கொஞ்சிக் குலாவவோ முடியவில்லை. எப்படியோ அவள், அவ்வளவு சாமர்த்தியமாக நடித்தாள். அந்தச் சமயத்திலே யாரேனும் கண்டால், "தங்கம், தங்கமான பெண் - இந்த ரங்கம் ஒரு 'முசடு'; தங்கத்துக்கு அவள் அக்காளிடம் பிராணன்; ரங்கம் மகா கர்வம் பிடித்தவள்" என்று தான் சொல்வார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:05 am

"தங்கம்! உண்மையைக் கூறிவிடு. ஏன் இன்று என்றுமில்லாத் திருக்கூத்தாக இருக்கிறது? என்னை, உன் ஜென்ம விரோதியாக எண்ணியவளாயிற்றே, எதற்காக இன்று என்னிடம் இவ்வளவு கெஞ்சுகிறாய்? இது என்ன தந்திரம்? என்ன விபரீதத்துக்காக இந்த முன் ஏற்பாடு?" என்று கேட்டுவிடலாமா என்று யோசித்தேன். கேட்கும் துணிவு வரவில்லை. தங்கம், எனக்குக் காப்பி தயாரிப்பதாகச் சொல்லிவிட்டு சமையற்கட்டுக்குச் சென்றாள். நான், யோசனையிலாழ்ந்தபடி படுத்துக் கொண்டிருந்தேன். வீட்டிலே யாரும் இல்லை. வேலைக்காரியும் வெளியே போயிருந்தாள். வண்டிக்காரன், மிக மரியாதையாக உள்ளே வந்து தனக்கு அவசர வேலை இருப்பதாகவும், வேறு வண்டி கொண்டு வந்து விட்டுவிட்டுப் போவதாகவும் சொன்னான். "நீ போ அப்பா, நான் வேறு வண்டி கூப்பிட்டுக் கொள்கிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டேன். தங்கம் சமையற்கட்டிலிருந்து வருவதற்குள் அவளிடம் சொல்லாமலேயே வெளியே போய்விடலாமா என்று தோன்றிற்று. மறுபடியும் சே! அவள் என்னை ஒரு பைத்தியக்காரி என்றல்லவா எண்ணிக் கொள்வாள் என்ற எண்ணம் உண்டாயிற்று. என்னால் என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாமல் திண்டாடினேன். ஏன் இங்கே வந்து சிக்கிக் கொண்டோ ம்? 'மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்' என்ற பழமொழியையும் மறந்து இங்கே வந்தோமே. "வலிய வந்தவளை வாவென்று கூட உபசரிக்காமல் எப்படி இருப்பது? அவள் இலச்சை கெட்டு வந்தாள்; நான், வெட்கங் கெட்டவளே! போடி வெளியே என்று எப்படிக் கூறுவது? என்ன இருந்தாலும் கூடப்பிறந்த பிறப்பல்லவா?" என்றெல்லாம் பேசுவாளே இந்தத் தங்கம்.

இதற்கெல்லாம் நாம் இடம் கொடுப்பதா? என்ன பைத்தியக்காரத்தனமான வேலை செய்தோம்? வீட்டிற்குள் நுழைகிற போதே அப்பா இருக்கிறாரா? என்று கேட்டுவிட்டு, அவர் இல்லை என்று தெரிந்ததும், பிறகு வருகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டிருக்கலாகாதா? ஏன் இப்படி விழிக்கவேண்டும் என்று எண்ணி என்னை நானே நொந்துகொண்டேன். எவ்வளவு சாமர்த்தியமாக நடிக்கிறாள் தங்கம்! விரோதத்தைத் துளியும் வெளியே தெரிய ஒட்டாதபடி தானே மூடி வைத்துக்கொண்டு பேசுகிறாள். நம்மால் முடியவில்லையே அதுபோல். 'என்னையே இவ்வளவு திறமையாக மயக்குகிறாளே, இவளிடம் என் புருஷர் எப்படி மயங்காமலிருக்க முடியும்?' என்று எண்ணி வெட்கமடைந்தேன்; பொறாமையும் கொண்டேன். அந்தத் திடீர்ச் சிரிப்பு. எனக்கு வரவில்லை! அவள் பேச்சுடன் கலந்துவரும் ஒருவகை 'நாதம்' என்னிடம் இல்லை. என் கூந்தல் நெற்றியில் புரள்வது எனக்குத் தெரிவதற்குமுன், அவளல்லவா அதைச் சரிப்படுத்துகிறாள்! எங்கிருந்து கற்றுக்கொண்டாள் இந்த வித்தையை! என்னோடு பிறந்தாள். என்னையே வெல்கிறாளே! என்று ஆச்சரியமடைந்தேன். என்னால் இவ்விதமாகவெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடிந்ததேயொழிய, ஒருவிதமான தீர்மானத்துக்கும் வரமுடியவில்லை.

வேலைக்காரி பலகாரப் பொட்டலங்களுடன் வந்தாள். அவளை நிறுத்திக்கொண்டு, என் மனதிலிருந்த பாரத்தைப் போக்க அவளிடம் பேசலானேன்.

"ஏண்டி! என்ன இது, உங்க தங்கம் என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறாளே!" "இல்லாமே போவுங்களா! கூடப் பிறந்த பொறப்பல்லவா? மேலும், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்வாங்களே!"

"அந்தக் கதை கிடக்கட்டும்டீ! இவ என்ன உண்மையாகவே தானா என்னை உபசரிக்கிறாள்?"

"நான் என்னத்தைக் கண்டேனுங்க. நீங்க ரெண்டு பேரும் இப்படி அன்பா வாழணும், நான் என் கண்குளிரப் பார்க்கணும், அவ்வளவுதான் எனக்கு வேண்டியது."

"அது கிடக்கட்டும்டீ! சதா சர்வாகலமும் என்னைத் திட்டிக் கொண்டிருப்பதுதானே தங்கத்தின் வேலை."

"அதெல்லாம் ஏம்மா, இப்போ பேசணும். என்னமோ அது மனசு மாறியிருக்கும். இனிமேலாவது நீங்க ரெண்டு பேரும் சண்டை சச்சரவு இல்லாம இருங்களேன். நல்லதுதானே."

"நல்லது கெட்டது இருக்கட்டும். திடீருன்னு இவளுடைய நடவடிக்கை மாறினது ஏன்? அப்பா ஏதாவது சொல்லி இருப்பாரா?"

"இருக்கும்."

"உனக்குத் தெரியாதா?"

"தெரியாதுங்களே."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:05 am

இதற்குள் தங்கம் காப்பியுடன் வந்துவிட்டாள். சாப்பிட்டாலொழிய விடமுடியாதென்று பலவந்தம் செய்தாள். எனக்குத் திடீரென்று ஒரு பயம் தோன்றிவிட்டது. என்மீது தீராப் பகை கொண்ட இவள், ஒரு சமயம், தனியாக வந்து சிக்கிக் கொண்ட என்னை ஒழித்துவிடுவதற்கே, என்னிடம் தந்திரமாகச் சிரித்துப் பேசி பலகாரத்திலோ, காப்பியிலோ ஏதாவது விஷத்தை வைத்து விடுகிறாளோ என்ற பயம் பிறந்துவிட்டது. தந்திரக்காரத் தங்கம் அதையும் தெரிந்து கொண்டாள் போலிருக்கிறது. "சாப்பிடக்கா! இந்த அல்வா நன்றாக இருக்கும்" என்று கூறிக்கொண்டே, கொஞ்சம் அதிலே எடுத்துத் தின்றாள். அதுபோலவே ஒவ்வொரு பலகாரத்தையும் கொஞ்சம் கொஞ்சம் தின்றாள். எனக்கே வெட்கமாகிவிட்டது. நானும் தின்றேன். காப்பி சாப்பிடும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. உடனே அவள் காப்பியிலேயும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, "அக்கா! சர்க்கரை போதாது போலிருக்கே" என்று கேட்டாள். 'போதும்' என்று கூறிக்கொண்டே நான் அதையும் சாப்பிட்டுவிட்டேன். கை அலம்புவதற்குச் சமையற்கட்டுப் பக்கம் சென்றேன். தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். வெற்றிலைத் தட்டை இழுத்தேன்; அவள் சுண்ணாம்பு தடவி வெற்றிலை மடித்துக் கொடுத்தாள். குறிப்பறிந்து நடந்துகொண்டாள். என்னைக் கொல்வதற்குப் பதில் உபசாரத்துக்குமேல் உபசாரம் செய்தாள். என்ன காரணம்? என்ன சூழ்ச்சி இது? எனக்கொன்றும் புலப்படவே இல்லை. என்னைச் சந்தோஷப்படுத்தி என்ன காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் போகிறாள்! ஒரு வேளை அன்பாக நடந்து கொள்வதன் மூலம், என்னுடைய சம்மதத்தையே பெற்று, கலியாண ஏற்பாட்டை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறாளா என்று எண்ணினேன். பலப்பல எண்ணினேனே யொழிய, வாய் திறந்து அவளை எதுவும் கேட்கத் தோன்றவில்லை. 'போய்விட்டு வருகிறேன்!' என்று பத்துத் தடவைக்கு மேல் சொல்லிப் பார்த்தேன். ஒவ்வொரு தடவையும், "இரு அக்கா! போகலாம் இரு" என்று உபசாரம் பேசிப் பேசி என்னைத் தடுத்துக்கொண்டே இருந்தாள். "நேரமாகிறது தங்கம்..." என்றேன். குழந்தை பாலுக்கு அழுமோ? இப்போது ஏதுக்கா! இன்னம் கொஞ்சம் நாள் கழித்துத்தானே!" என்று கேலியும் பேசினாள்.

"அக்கா! நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் என்னை மன்னித்துவிடு" என்றாள் திடீரென்று. நான் மிரள மிரள விழித்தேன். அவள் கண்களிலே நீர் தளும்பிற்று.

"என்னடி தங்கம்? உன் நடத்தையே இன்று பைத்தியக்காரச் சேஷ்டையாக இருக்கிறதே!" என்று நான் கேட்டேன்.

"அக்கா! நான் தவறு செய்துவிட்டிருக்கிறேன் என்பது எனக்கே தெரியும். இந்த வாழ்க்கையைச் சதம் என்று நம்பி, உலகத்திலே எத்தனை பொய், சூது, வஞ்சனை நடக்கிறது. அதுபோல, நானும் ஏதேதோ மனக்கோட்டை கட்டி, உன் மீது வீணாக விரோதம் கொண்டு கெடுதிகள் செய்தேன்..." என்று கூறிக்கொண்டே விம்மினாள்.

"தங்கம்! என்ன உனக்கு பைத்தியமா? ஏதோ என்னுடைய தலைவிதிக்கு ஏற்றபடி கஷ்டங்கள் நேரிட்டன. நீ என்ன செய்வாய் அதற்கு? உனக்கும் எனக்கும் பகை மூண்டது கூட என் பொல்லாத வேளைதான்" என்று நான் சொன்னேன். எனக்கும் கண்களிலே நீர் கசியலாயிற்று.

"அக்கா! நான் எப்படி என் வாயால் சொல்லுவேன்..."

"என்ன? எதை? இதென்னடி தங்கம் இப்படி விம்முகிறாயே."

"அக்கா! நாம் பிறந்தது இருவர்..."

"என்னடி உளறி...!"

"அக்கா! நாம் இருவர் வாழக் கடவுளுக்கு விருப்பம் இல்லையே..."

"என்னடி அசடே! என்ன சொல்லுகிறாய் இப்போது?"

"அக்கா! நான் இன்னும் ஆறு மாதம்..."

"என்ன ஆறு மாதம்..."

"ஆறாம் மாதம்..."

"யாருக்கு? என்னடி உளறிக்கொட்டுகிறாய்! ஆறாம் மாதமா? உனக்கா?"

"அதல்ல அக்கா! இன்னும் ஆறு மாதத்தில் நான் செத்துவிடுவேனாம்..." என்று கூறிவிட்டுத் தங்கம் கோவென்று அழுதாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:06 am

தங்கம், தனக்குச் சில மாதங்களில் மரணம் சம்பவிக்கும் என்று சோதிடன் எவனோ கூறினது கேட்டு, என்னிடம் கூறிக் கோவென அழத்தொடங்கியதும், அதுவரை மற்போருக்காக ஒருவர் வலிவை, மற்றவர் அறியும் பொருட்டு எதிர் எதிர் நின்று உற்று நோக்கியபடி இருப்பது போல் இருந்து வந்த நான், அவளை அருகே இழுத்து அன்புடன் அணைத்துக் கொண்டு, கண்ணீரைத் துடைத்து, "அடி பேதைப் பெண்ணே! உன்னை நான் மகா புத்திசாலி, தைரியசாலி என்று அல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். என்ன பித்தமடி உனக்கு. எவனோ பிதற்றியதைக் கேட்டுக் கொண்டு அழலாமா? அடி அசடே! யார் அந்த மடையன்? எப்படித் துணிந்து சொன்னான் அந்த வார்த்தையை? அவனிடம் நீ என்ன கேள்வி கேட்டாய்? அவன் வாய்த்துடுக்குக் கொண்டவனாக இருக்கவேண்டும். இல்லையானால் இவ்விதமான அவலட்சணப் பேச்சைக் கூறுவானா? அவன் கூறினதைக் கேட்டுச் சிரித்துவிட்டு, 'போடா மகா பெரிய அறிவாளிதான் நீ' என்று கூறுவதை விட்டு, அவன் பேச்சை உண்மை என்று நம்பி அழலாமா!

தங்கம்! இதோ பார் இப்படி! என்னடி உனக்கு? எவனோ ஒரு மூடன் உரை கேட்டு, இப்படி மதி மயங்குவதா?" என்று பலப்பல கூறி அவளைத் தேற்றினேன். தங்கமோ விம்முவதை விடவில்லை. "அக்கா, நானும் சோதிடர்களின் உரையை நம்புவதில்லை. உனக்கே தெரியுமே, நான் தான் எதற்கும் துருவித் துருவிக் காரணம் கேட்பவளாயிற்றே. எந்தப் புரட்டையும் உடனே நம்பிவிடும் பேதையல்ல. இந்தச் சோதிடன் சொன்னது கேட்டு மட்டும் நான் நம்பினதற்குக் காரணம் இருக்கிறது. ஒன்று சொல்கிறேன், கேள் அக்கா! பெரும்பாலும் இந்தச் சோதிடர்கள், உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களிடம் முகஸ்துதியான வார்த்தை பேசி, மூன்று உலகமும் உங்கள் காலடியில் விழும்! உம்முடைய எதிரிகள் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வழிந்து ஒழிவார்கள்! உங்கள் மனம் கருணை வெள்ளம் கொண்டது! என்றெல்லாம் கூறுவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

அதனாலேயே நான், என் ஜாதகத்தைச் சோதிடனிடம் கொடுத்தபோது வள்ளியின் ஜாதகம் என்றேன். அவன் நம்புவதற்காகவே, என் ஜாதகக் குறிப்பை வேறோர் காகிதத்தில் எழுதி, என் பெயரைப் போடாமல் வள்ளி என்று போட்டுத் தந்தேன். அவன் அந்த ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, இன்னும் ஆறு மாதத்திலே இந்த வள்ளி இறந்துவிடுவாள் என்று கூறினான். நான் நம்பாமல் எப்படி இருக்க முடியும்?" என்று கூறிவிட்டு மறுபடியும் அழ ஆரம்பித்தாள். இதென்னடா சங்கடம் என்று நான் எண்ணினேன். "வள்ளி! யாரவன் அந்த வாயாடி?" என்று கேட்டேன். அவள், "அவர் பெரிய சோதிடர்தானம்மா! வாழ்முனி அவருக்குப் பிரத்யட்சம்" என்றாள். "சரியான மூடத்தனம்! நீயும் சேர்ந்துதான் இப்படி, தங்கத்தின் மனதைக் குழப்பி விட்டிருகிறாய்" என்று அவளையும் கண்டித்தேன். தங்கம் சோகத்துடன், "அக்கா! உனக்கு என் மேல் இருக்கும் ஆசையின் காரணமாக இப்படிப் பேசுகிறாய். எனக்கென்னவோ அவன் சொன்னது முதல், மார்பு கூட அடிக்கடி ஒருவிதமாக வலிக்கிறது. இரவிலே தூக்கம் நிம்மதியாக இருப்பதில்லை. கெட்ட நினைவுகள்! என் மனதிலே ஒரு விதமான திகில் பிடித்துக் கொண்டு விட்டது" என்று சொன்னாள்.

அவளைச் சமாதானப் படித்த நான், சோதிடத்தின் போக்கு, சோதிடர்களின் புரட்டு, அவர்களின் வார்த்தைக்குப் பலவகையான அர்த்தம் இருக்கிற வேடிக்கை ஆகியவற்றைச் சொன்னேன். அவளோ திருப்தியடையவில்லை. "அப்பாவிடம் சொல்லி அவனை நையப் புடைக்கச் சொல்கிறேன்" என்றேன். தங்கம், "அப்பா காதிலே விழுந்தால் அவனை அடிப்பார். ஆனால் அவரும் என்னைப் போலவேதான் வேதனைப்படுவார். ஏனெனில், அவருக்கு அந்தச் சோதிடனிடம் ரொம்ப நம்பிக்கை. நமது மிராசு கேஸ், மேல் கோர்ட்டில் இருந்தபோது அவன் கூறிய சோதிடம் பலித்தது. அதிலிருந்து அப்பாவுக்கு அவன் வார்த்தையிலே அபார நம்பிக்கை. ஆகையாலேதான் நான் அவன் சொன்னதை அப்பாவிடம் சொல்லக்கூட இல்லை. சொன்னால், அவர் இந்த வயோதிகப் பருவத்திலே இதுபற்றி வேறு மனம் கஷ்டப்படுவார். ஏற்கெனவே உன்னால் அவர் ஏக்கம் அனுபவிக்கிறார். இனி என் கதியும் இப்படி ஆகும் என்று தெரிந்துவிட்டால் படுத்த படுக்கையாகிவிடுவார். அக்கா நாம் இருவர் பிறந்து அவரைப் படாதபாடு படுத்திவிட்டோ ம்" என்று கூறித் துக்கித்தாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:07 am

"நீ என்ன சொன்னாலும் சரி; நான் துளிகூட நம்ப மாட்டேன். எனக்கு இப்போது இப்படிப்பட்ட புரட்டர்களின் போக்கு மிக நன்றாகத் தெரிந்துவிட்டது. போகட்டும்! இந்த மாதிரி புரட்டர்கள், ஆபத்து வரும், மரணம் சம்பவிக்கும், கிரஹம் போதாது என்றெல்லாம் கூறிப் பயங்காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டார்களே! இந்த ஆபத்து நீங்க ஆயிரம் கண்ணுடையாளுக்கு அபிஷேகம் செய்யவேண்டும்! இலட்ச தீபம் ஏற்றவேண்டும்! சொர்ணத்தால் சர்ப்பம் செய்து சொக்கநாதன் கோயிலுக்குத் தானம் தரவேண்டும். நூறு பண்டாரங்களுக்குச் சோறு போடவேண்டும் என்று ஏதாவது உளறுவார்களே! அதுபோல இவன் ஒன்றும் சொல்லவில்லையா?" என்று கேட்டேன். "சொன்னான்" என்றாள் தங்கம். "என்ன?" என்று கேட்டேன். தங்கம் அதற்குப் பதில் கூறவில்லை. நெடுநேரம் ஏதேதோ பேச்சை மாற்றியபடி இருந்தாளே தவிர, என் கேள்விக்குப் பதில் கூறவில்லை. நானோ விடவில்லை. சொன்னால்தானாயிற்று என்றேன். "சொல்லி என்ன பயன்?" என்று சோதித்தாள் தங்கம். "சொல்லடி! என்னதான் செய்ய வேண்டுமாம். ஆபத்து போக" என்று கேட்டேன். அவள் அதற்கு நேர்முகமாய்ப் பதில் கூறவில்லை.

"அக்கா! இன்று நாம் இருவரும் எதையும் மறைக்காமல் பேசவேண்டும். அத்தானை நான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது உனக்கு ஆத்திரத்தைத்தானே ஊட்டிவிட்டது" என்று கேட்டாள். இவ்வளவு தைரியமாகச் சிக்கல் நிறைந்த விஷயத்தை மிகச் சாதாரணமாகப் பேசுகிறாள். தங்கத்தின் சாமர்த்தியம் அதுதானே.

"தங்கம்! மனதிலுள்ளதை மறைக்காமல் தானே பேச வேண்டும்? ஆத்திரமா எனக்கு என்று கேட்கிறாய். இருக்காதா? பிறக்காதா?" என்று நான் அவளைக் கேட்டேன்.

"உன்னை ஆத்திரப்படச் செய்வதால் எனக்கென்ன அக்கா இலாபம்? யோசித்துப் பதில் சொல்லு. உன்னுடைய அன்பைப் பெறவேண்டும் என்று நான் எண்ண முடியுமே தவிர, உன் கோபத்தைக் கிளப்பிவிடுவதிலே எனக்கு விருப்பம் இருக்க முடியுமா? நீயே சொல்லு!" என்று அவள் வேறோர் கேள்வி, முன்னதைவிடக் கூர்மையான அம்பு போட்டாள்.

நான் பேசின பேச்சைக் கேட்ட அந்தப் பேயோட்டி என்னை வக்கீல் பேய் பிடித்துக் கொண்டது என்று சொன்னான்; தங்கம் பேசுவதைக் கேட்டால், என்ன சொல்வானோ தெரியவில்லை.

"தங்கம்! வளைத்துப் பேசுவது வம்பில்தான் போய் முடியும். எனக்கு உன் மீது இருந்த அன்பு மாறினதும், நமக்குள் பகை மூண்டதும், உண்மையில் நீ என் கணவரைக் கலியாணம் செய்து கொள்ள ஏற்பாடு நடைபெறுகிறது என்று நான் அறிந்ததால்தான். நான் மட்டுமல்ல! உலகிலே எந்தப் பெண்ணும் ஆத்திரமடையத்தான் செய்வாள். மரக்கட்டையா நான்? என் கணவர் வேறொருத்தியை, அவள் என் கூடப் பிறந்தவளாகக் கூட இருக்கட்டும், எதற்காக இன்னோர் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும்? யாருக்குத்தானடியம்மா, கோபம் வராது!" என்று நான் கேட்டேன். எனக்குக் கொஞ்சம் கோபந்தான். அவளோ சாந்தமாகப் பேசினாள். "அக்கா! நான் பேசுவதைப் புரிந்துகொண்டு பதில் சொல்லு. நான் நீ ஆத்திரப்பட்டது தவறு, ஆத்திரப்படக்கூடாது என்று சொல்லவில்லையே.

அத்தான் என்னைக் கலியாணம் செய்துகொள்ள எண்ணுகிறார் என்று தெரிந்த பிறகுதானே ஆத்திரம் பிறந்தது என்று கேட்டேன். ஆமாம் என்று ஒப்புக் கொண்டாய். அடுத்த கேள்வி நான் கேட்டது உன் ஆத்திரத்தைக் கிளப்பி நான் அடையப் போகும் இலாபம் என்ன என்பது. அதற்குப் பதில் கூற வேண்டிக்கொள்கிறேன். பதில் கூறாவிட்டால் போகிறது! அக்கா கொஞ்சம் யோசித்துப்பார் நீயாக, தனியாக இருக்கும் போதாகிலும்!" என்று தங்கம் சொன்னாள். என் கோபம் அதிகரித்தது. "என்ன இருக்கிறது யோசிக்க! சிறு பிள்ளைகள் தும்பியைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் விளையாட்டு என்று எண்ணுகிறார்கள். அது போல நீ என் வாழ்விலே நஞ்சு கலந்துவிட்டு, அது சர்வ சாதாரண விஷயம் என்று எண்ணுகிறாய். தைரியமாக என்னையே கேள்வி கேட்கிறாய். என் வாழ்வைப் பாழாக்கப் பார்க்கிறாய். என் உள்ளத்திலே இருக்கும் சந்தோஷத்தை அழிக்கிறாய். இது தெரியவில்லையா உனக்கு. இதை யோசித்து வேறே பார்க்க வேண்டுமா நான். நீ சுகப்பட்டு, சந்தோஷப்பட்டு இருக்க எண்ணங்கொண்டு, என் வாழ்வைக் குலைக்கிறாய்" என்று சொன்னேன். தங்கத்தின் புன்னகை, என்னை ஈட்டிபோல் குத்திற்று. அவள் தந்த பதிலோ பளிச்சென்று கன்னத்தில் அறைவது போலிருந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக