புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 18%
i6appar
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 3%
Jenila
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
88 Posts - 35%
i6appar
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 1:56 am

First topic message reminder :

Arabian Nights - كتاب ألف ليلة وليلة - அரேபியன் இரவுகள்

பழங்காலத்தில் பெர்ஷியா என்ற பெரிய நகரத்தை தலைநகராகக் கொண்டு ஒரு அரேபியப் பேரரசு இருந்தது. அந்த ராஜ்ஜியம் நல்ல செழிப்புள்ளதாக இருந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

அந்த நாட்டு அரசருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அரசரின் மரணத்திற்குப் பின் அவரது மூத்த மகன் ஷாகிரியார் அரசரானார். அவரது தம்பி பெர்ஷிய பேரரசின் மற்றொரு பகுதியை ஆண்டு வந்தார். பேரரசர் ஷாகிரியார் பொது மக்களுக்கு நல்ல ஒரு அரசராக விளங்கினார். ஆனால் அவர் மனைவி தீய குணம் கொண்ட பெண்மணி. இது அரசருக்குத் தெரியாமல் இருந்தது. தன் மனைவியின் தீய குணத்தை அறியாத பேரரசர் அவளை மிகவும் நேசித்தார். தன் மனைவிக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆடை ஆபரணங்கள் கொடுத்து மகிழ்வித்தார்.

ஒரு நாள் தன் மனைவியின் கொடிய குணம் அவருக்குத் தெரிய வந்தது. அரசர் அதிர்ந்து போனார். மிகவும் ஆத்திரப்பட்டார். அந்த நாட்டு சட்டப்படி தன் மனைவியை கொலை செய்ய ஆணையிட்டார். மனைவி இறந்த பின்னாலும் அரசரின் கோபம் அடங்கவில்லை. உலகில் உள்ள எல்லாப் பெண்களும் தன் மனைவியைப் போலவே தீய குணம் கொண்டவர்கள் என்று எண்ணினார். அதனால் எல்லாப் பெண்களையும் கொல்லத் திட்டமிட்டார். எனவே நாட்டில் உள்ள இளம் பெண்களைத் திருமணம் செய்து, மறு நாளே கொல்ல எண்ணம் கொண்டார்.

தன்னுடைய மந்திரியிடம் தனது யோசனையைத் தெரிவித்து அதற்குரிய ஆணையைப் பிறப்பித்தார். மகா மந்திரிக்கு, அரசரின் ஆணை தவறு என்று அவசருக்குப் புரிய வைக்க முடியவில்லை. அரசர் அந்த அளவுக்குப் பெண்களின் மேல் ஆத்திரம் கொண்டிருந்தார். அதனால் தினப்படி, அரசர் ஒரு இளம் பெண்ணை மணப்பதும் மறுநாள் புது மணப் பெண்ணைக் கொல்வதுமாக இருந்தார்.

ஒரு நல்ல அரசர் இப்படி கொடும் செயலைச் செய்வது கண்டு மக்கள் வேதனைப் பட்டனர். தங்களுக்கு அரசரால் இழைக்கப்படும் கொடுமைக்கு நீதி கிடைக்காமல் பரிதவித்தனர்.

பெர்ஷியா நாட்டு மந்திரிக்கு இரண்டு புதல்விகள் இருந்தார்கள். மூத்தவள் ஷஹரஜாத். இளையவள் தினார்ஜாத். ஷஹரஜாத் மிகவும் புத்திசாலி. பல நாட்டு வரலாறு, தத்துவங்கள் அறிந்தவள். அவள் தன் தந்தையை அணுகி "தந்தையே, நான் அரசரின் இந்த கொடும் செயலை நிறுத்தப் போகிறேன்" என்றாள்.

அதற்கு மந்திரி "மகளே நீ செய்ய நினைப்பது நல்ல காரியம் தான்!. ஆனால் அதை எப்படிச் செய்யப் போகிறாய்?"என்று கேட்டார்.

"நான் சுல்தானை மணக்கப் போகிறேன்" என்றாள் ஷஹரஜாத்.

மந்திரி அதிர்ச்சியடைந்தார். மகளை எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். ஷஹரஜாத் தன் முடிவில் திடமாக இருந்ததினால் மனம் நொந்து போய் மன்னரிடம் ஷஹரஜாதின் விருப்பத்தைத் கூறினார். ஆச்சிரியமடைந்த மன்னர், திருமணத்திற்கு சம்மதித்தார்.

இதற்கிடையில் ஷஹரஜாத் தன் தங்கையிடம் "தங்கையே! மன்னரிடம் என்னுடைய கடைசி ஆசையாக நான் உன்னையும் என்னுடன் வைத்துக் கொள்ள வேண்டுவேன். அவர் அதற்கு ஒத்துக் கொண்டால், நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்" என்றாள்.

"அக்கா உனக்கு என்ன உதவி வேண்டும், சொல்! தயங்காமல் செய்கிறேன்" என்று தங்கையும் உறுதி கூறினாள்.

விடிவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக நீ என்னை எழுப்பி, 'அக்கா நீ, உன்னுடைய அற்புதமான கதைகளில் ஒன்றை இறப்பதற்கு முன் சொல்வாயா என்று கேட்க வேண்டும்' என்றாள். தங்கையும் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்தாள்.

மன்னருக்கும் ஷஹரஜாதிற்கும் திருமணம் நடந்தது. அன்று இரவு ஷஹரஜாத் மன்னரிடம் சென்று "அரசே நான் என் தங்கையை எந்நாளும் பிரிந்ததில்லை. நாளை காலையோ எனக்கு மரணம் அதனால் இன்று இரவு மட்டும் என் தங்கை என்னுடன் தங்க அனுமதிக்க வேண்டும்" என்று கெஞ்சினாள். இரக்கப்பட்ட மன்னரும் அதற்கு இணங்கினார்.

திட்டமிட்டது போலவே பொழுது விடிவதற்கு ஒரு மணி நேரம் இருக்கும் போது தினார்ஜாத் தமக்கையை எழுப்பினாள். "அக்கா தயவு செய்து, நீ எனக்கு உன்னுடைய அற்புதமான கதைகளிலிருந்து ஒரு கதையைச் சொல்!. இன்னும் சில மணி நேரத்தில் நீ இறந்து விடுவாய், உன் குரலைக் கேட்க எனக்கு ஆவலாக உள்ளது!" என்றாள். ஷஹரஜாதும் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:06 am

“அந்த வணிகன் ஒரு ஊரில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான்“ என்று அரசர் யூனான் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். தன் வாணிபத்தின் காரணமாக அவன் ஊர் ஊராகச் செல்ல வேண்டியிருந்தது. அவனுக்குத் தன் மனைவியை விட்டுச் செல்ல மனம் இல்லை. அதனால் பல விதமான பறவைகள் விற்கும் சந்தைக்குச் சென்று ஒருக் கிளியை வாங்கி வந்தான்.அந்தக் கிளி பேசுவதில் சிறந்து விளங்கியதோடு, தன் முன்னால் நடக்கும் விஷயங்களையும் சரியான முறையில் சொல்லியது. கிளியைக் கூண்டில் வைத்துத் தன் மனைவியிடம் கொடுத்தான் வணிகன்.

அடுத்த நாள் அவன் வியாபரத்திற்காக வேறு ஊர் செல்ல வேண்டியதிருந்தது. தன் வேலை முடிந்ததும் கிளியிடம் வந்து தான் இல்லாத நேரத்தில் என்ன நடந்தது என்று கேட்டான்.

உடனே கிளி அதன் எஜமானி நடந்து கொண்ட விதத்தைக் கூறியது.அவள் கெட்ட நோக்கத்தோடு செய்த செயல்கள் அனைத்தையும் அந்தக் கிளி சொல்லியது. விஷயங்களைக் கேள்விப்பட்ட வணிகன் தன் மனைவி மேல் கோபப்பட்டான். தன் வீட்டு அடிமைகளே தன் நடத்தை பற்றி எஜமானனிடம் சொல்வதாக மனைவி எண்ணினாள். ஆனால் விஷயங்களைச் சொல்வதுக் கிளி என்று தெரிந்ததும் கிளியைக் கொல்லத் திட்டமிட்டாள்.

வணிகன் ஊரிலில்லாத வேளையில் தன் அடிமைகளிடம் தன் திட்டத்தைச் சொல்லி கட்டளைகள் இட்டாள். அன்று இரவில் கிளியின் கூண்டுக்கடியில் ஒருத்தி கல் அரவையில் மாவைத் திரித்தாள். இன்னொருத்தி கூண்டின் மேலிருந்து நீரை மெல்ல ஊற்றிக் கொண்டே இருந்தாள். இன்னும் ஒரு அடிமை கிளியின் கண்களுக்கு முன்னால் கண்ணாடியை விளக்கு ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து அப்படியும் இப்படியுமாக ஆட்டினாள். பாதி இரவு வரை இந்த வேலை மிகச் செவ்வனே நடந்தது.

மறுநாள் வணிகன் இரவில் நடந்தது பற்றிக் கிளியைக் கேள்விக் கேட்கையில் கிளி, “எஜமானே இரவு முழுவதும் இடி மின்னலுடன் மழைபெய்து கொண்டே இருந்தது. நான் வேறு எதையும் கவனிக்கவில்லை“ என்றது. அன்று இரவு மழை எதுவும் பெய்யவில்லை என்று அறிந்திருந்த வணிகன் கிளி உளறுகிறது என்று எண்ணினான்.

கிளி உளறுவதைக் கேட்டுத் தன் மனைவி மேல் கோபம் கொண்டோமே என்று வருத்தப்பட்ட வணிகன் ஆத்திரத்தில் அந்தக் கிளியை தரையில் வீசிக் கொன்றான். ஆனால் ஒரு சில நாட்களில் தன் மனைவி கிளியைக் கொல்ல செய்த சதியைத் தெரிந்து கொண்டான். கிளி உண்மையையே பேசியிருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டான். தேவையில்லாமல் ஒரு உயிரைக் கொன்று விட்டோமே என்று மிகவும் வேதனைப் பட்டான்.

தன் கதையைக் கூறிய கிரேக்க மன்னன் மந்திரியிடம் தான் அவர் அறிவுரைப் படி நடக்கப் போவதில்லை என்று கூறினான். அதற்கு மந்திரி, “அரசரின் உயிரைக் காப்பதற்காக இதனைச் செய்வதில் தவறில்லை . இந்த மருத்துவர் நல்லவர் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. என் கணிப்புத் தவறானால் தவறு செய்த மந்திரி சரியான முறையில் தண்டிக்கப் பட்டதைப் போல என்னையும் தண்டியுங்கள்“ என்று சொல்லித் தன் கதையைக் கூற ஆரம்பித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:17 am

தூர தேசத்தில் ஒரு இளவரசன் இருந்தான். அவனுக்கு வேட்டையாடுதல் என்றால் மிகப் பிரியம். அவன் வேட்டைக்குக் கிளம்பிப் போகும்போதெல்லாம் மன்னன் தன் மந்திரியை மகனுக்குத் துணையாய் அனுப்பி வைப்பார்.

ஒரு நாள் அப்படித்தான் வேட்டைக்குச் சென்ற போது மந்திரி தன் பின்னாலேயே வருகிறார் என்று எண்ணி இளவரசன் அதி வேகமாத் தன் குதிரையைச் செலுத்தினான். வெகு தூரம் போன பின்னால்தான் மந்திரியும் அவருடன் வந்த வேட்டைக் குழுவும் தன்னோடு வரவில்லை என்பது இளவரசனுக்குத் தெரிந்தது.

தான் வந்த வழியை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதும் தெரிந்தது. மெல்ல, தான் திரும்பி வந்த வழியே செல்லலானான். தனியாக அவன் திரும்பிச் செல்லும் வழியில் ஒரு அழகிய பெண் அழுது கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான். அவளுக்கு உதவ விரும்பி அந்தப் பெண்ணை அணுகினான்.

“பெண்ணே நீ யார்?" என்று அவளைக் கேட்டான்.

"ஐயா, தங்களைப் பார்த்தால் ஒரு நாட்டின் இளவரசர் போலத் தெரிகிறது. நானும் இந்திய நாட்டு இளவரசி தான். நான் எங்கள் வர்த்தகக் கூட்டத்தோடு வந்த போது என்னுடைய குதிரையிலிருந்து மயங்கி விழுந்து விட்டேன் என்று நினைக்கிறேன். என் குதிரையும் ஓடிவிட்டது. நான் இப்போது வழி தெரியாமல் தவிக்கிறேன்" என்றாள்.

அந்தப் பெண் மேல் இரக்கம் கொண்ட இளவரசன் அவளைத் தன் குதிரை மேல் ஏற்றி உட்கார வைத்து வழி நடத்தி வந்தான். சிறிது தொலைவு சென்றதும் ஒரு இடிந்த மண்டபத்தைக் கண்டார்கள். அதைக் கண்ட இளவரசி, “இளவரசே, நான் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்” என்று சொல்லி அந்த மண்டபத்திற்குள் நுழைந்தாள். இளவரசனும் இளவரசி வெகு நேரம் தூங்கி விடப் போகிறாளே என்று நினைத்து அவளைத் தொடர்ந்தான். உள்ளே சென்றதும் தான் தெரிந்தது, அவள் பெண் அல்ல, மானுடர்களைத் தின்னும் ஒரு அரக்கி என்று.

மண்டபத்திற்குள் நுழைந்த அந்த அரக்கி, “குழந்தைகளே, உங்களுக்கு உணவாக ஒரு பருத்த மனிதனைக் கொண்டு வந்திருக்கிறேன் பாருங்கள்” என்று கூவினாள். அவளுடைய குழந்தைகளும், "அம்மா சீக்கிரம் அந்த மனிதனை எங்களுக்குத் தின்னத் தாருங்கள், எங்களுக்குப் பசிக்கிறது" என்று கத்தினர். இதை எல்லாம் கண்ட இளவரசன் பயந்து போனான். உடனே வெளியே ஓடி வந்து விட்டான். இந்த அரக்கியிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. பயத்தில் அவன் உடல் வெலவெலத்து நடுங்கியது.

நடுங்கிய படி நின்றிருக்கும் இளவரசனைப் பார்த்த பெண் வடிவில் இருந்த அரக்கி, “இளவரசே, ஏன் பயத்தில் நடுங்குகிறீர்கள்?" என்று கேட்டாள். "ஒ, நா.. நான் என் எதிரிக்காக பயப்படுகி§றேன்" என்றான் இளவரசன்.

"இளவரசரான தாங்கள் எதற்குப் பயப்பட வேண்டும்? உங்களுடைய பணப் பையை எதிரிகளிடம் காட்டினாலே எதிரி அதை எடுத்துக் கொண்டு ஓடி விடப் போகிறான்" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

"ஐயோ! நான் இளவரசனாக இருந்தால் என்ன? என் எதிரி என்னை விட மிக பலசாலி அவனுக்கு எனது பணம் தேவையில்லை. என் உயிர் ஒன்றுதான் அவனது குறிக்கோள்" என்று சொல்லி நடுங்கினான்.

உடனே அந்த இளவரசி, "அப்படியானால் உங்கள் எதிரியை வெல்ல ஒரே வழி தான் இருக்கிறது உங்கள் எதிரியைத் திரும்பிப் போக வைக்கும் படி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுங்கள்" என்றாள். இளவரசனும் அதை ஒத்துக் கொண்டு, "அல்லாவே, எதிரி என்னிடம் இரக்கப்பட்டு என்னைத் தாக்காமல் திரும்பிப் போகும் படி செய்" என்று உரக்க வேண்டினான். இளவரசனின் பிராத்தனையைப் புரிந்து கொண்ட அரக்கி அவன் மேல் இரக்கம் கொண்டு அவனை விட்டு விட்டாள். அவனுக்கு ஊர் திரும்பும் வழியையும் காட்டிக் கொடுத்தாள்.

"உயிர் தப்பி ஊர் போய் சேர்ந்த இளவரசன் தன் தந்தையிடம் நடந்த விஷயங்களைக் கூறினான். மந்திரி மேல் கோபம் கொண்ட அரசன் அவரைக் கொல்ல ஆணையிட்டான்" என்று கிரேக்க மன்னனிடம் தன் கதையை முடித்தார்

கிரேக்க மந்திரி. மந்திரி சொன்னதை யோசித்தார் கிரேக்க மன்னர், "மந்திரி நீங்கள் சொல்வது நியாயம் தான், இந்த மருத்துவர் என்னைக் கொல்லத் திட்டம் தீட்டினாலும் தீட்டலாம், எனவே அவரை என்ன செய்வது என்று சொல்லுங்கள்" என்று மந்திரியைக் கேட்டார். "மருத்துவரைக் கொல்வது தான் சரி" என்றார் மந்திரி. மந்திரி சொல்வதை ஆமோதித்த அரசர் மருத்துவரை அழைத்து வரச் செய்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:17 am

கிரேக்க அரசன் யூனான் தன் மந்திரியின் யோசனையைக் கேட்டு மனம் மாறினான். தன்னை குணப்படுத்திய மருத்துவரைக் கொல்வதே சரி என்று பட்டது மன்னனுக்கு. தான் கையால் பிடிக்கும் ஒரு கைத்தடியால் தன்னை குணப்படுத்திய ஒருவன் முகர்ந்து பார்க்க ஒரு பொருளைக் கொடுத்து எளிதாகத் தன்னைக் கொல்ல முடியும் என்று நம்பினான். எனவே மந்திரியின் ஆலோசனைப் படி மருத்துவரை அரசவைக்கு வரவழைத்தான்.

அரசரின் எண்ணம் தெரியாத மருத்துவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அரசரைக் காண ஆவலுடன் வந்தார். அரசரைக் கண்டதும் அவரைப் புகழந்து கவிதைகள் பாடினார்.

மருத்துவரைப் பார்த்து அரசன் கேட்டான், "மருத்துவரே, நான் உங்களை அரசவைக்கு அழைத்த காரணம் தெரியுமா?"

"அரசே, நீங்கள் சொன்னால் அதை நான் தெரிந்து கொள்கிறேன்" என்று பணிவாகச் சொன்னார் மருத்துவர்.

"மருத்துவரே, நான் உங்கள் உயிரைக் குடித்து ஒரேடியாக உங்களை அழிக்கவே உங்களை இங்கு அழைத்தேன்" என்று ஆணவமாகச் சொன்னான் அரசன்.

அரசர் சொல்வதைக் கேட்டு மருத்துவர் மலைத்துப் போனார். மிகுந்த ஆச்சரியத்தோடும் திகைப்போடும் அவர் அரசரைப் பார்த்து, "அரசே, நீங்கள் எனக்கு இத்தகைய கொடிய தண்டனை கொடுப்பதற்கு நான் என்ன தவறு செய்தேன்?" என்று கேட்டார்.

அதற்கு அரசன் மருத்துவரை நோக்கி, "மருத்துவரே, நீங்கள் என்னைக் கொல்வதற்காகவே அனுப்பப் பட்ட ஒரு ஒற்றன் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. நான் உங்களைக் கொல்ல வேண்டும், அல்லது உங்களால் கொல்லப் பட வேண்டும். நான் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் நீங்கள் உயிரிழக்க வேண்டும். அதனாலேயே உங்களுக்கு இந்தத் தண்டனை வழங்குகிறேன்." என்று கூறினான்.

அதிகாரத் தோரணையோடு பேசிய அரசனை மருத்துவர் கெஞ்சினார், "அரசே, நீங்கள் என்னிடம் கருணை காட்டினால் அல்லா உங்களுக்குக் கருணை காட்டுவார். நான் உங்களுக்கு நன்மையே செய்திருக்கிறேன். என்னைக் கொல்லாதீர்கள்."

அரசன் மருத்துவரின் கெஞ்சலுக்கு செவிசாய்க்கவில்லை. மருத்துவருக்கு அளிக்கப் பட்ட மரண தண்டனை நியாயமானதே என்று கருதினான். அரசவையில் பல சபையோர் அரசனுக்கு புத்திமதி கூறினார்கள். மருத்துவர் எந்தவிதத் தவறும் செய்யவில்லை என்று அரசனுக்கு உணர்த்த முயன்றார்கள். எதுவும் பலனளிக்கவில்லை. அரசன் மருத்துவரின் உயிரை மாய்ப்பதிலேயே குறியாக இருந்தான்.

அரசனின் மனம் தன்னை தண்டிப்பதில் திடமாக இருப்பதைக் கண்ட மருத்துவர், "அரசே, நீங்கள் என்னை தண்டிக்க வேண்டும் என்று உறுதியாய் இருக்கிறீர்கள். அப்படி என்னைத் தண்டிப்பதானால் அதை நாளை செய்யுங்கள். இன்று என்னுடைய கடமைகளைச் செய்து முடிக்க ஒரு நாள் கொடுங்கள். என்னை எங்கு புதைக்க வேண்டும் என் மருத்துவப் புத்தகங்களை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய நேரம் கொடுங்கள். என் கடமைகளை முடிக்க எனக்கு இரக்கம் காட்டுங்கள். அது மட்டுமல்ல என்னுடைய நூல்களிலேயே மிக அரியதிலும் அரியதான ஒரு நூல் என்னிடம் இருக்கிறது அதை உங்களுக்கு அன்பளிப்பாக அளிக்க நான் விரும்புகிறேன்." என்றார்.

"அப்படி என்ன அந்தப் புத்தகத்தில் அதிசயம் இருக்கிறது?" என்று வினவினான் அரசன்.

"அரசே, அந்தப் புத்தகத்தில் பல அதிசயங்கள் உள்ளன. அதில் ஒன்று நீங்கள் நாளை என் தலையை வெட்டியவுடன் அந்தப் புத்தகத்தில் ஆறாம் பக்கத்தில் உங்கள் இடப் பக்கத்தில் இருக்கும் மூன்று வரிகளைப் படித்து வெட்டுப்பட்ட என் தலையிடம் அது பற்றிக் கேள்வி கேட்டால் என் தலை உங்களுக்கு பதில் சொல்லும்" என்றார் மருத்துவர்.

"நிஜமாகவே உன்னுடைய வெட்டுப்பட்ட தலை பேசுமா?" என்று ஆச்சரியப்பட்ட அரசர், அந்த அதிசயத்தைத் தன் கண்ணால் பார்க்கப் பாதுகாவலருடன் மருத்துவரை அனுப்பி வைத்தார். மருத்துவரும் தன் கடமைகளையும் அலுவல்களையும் முடித்துக் கொண்டு அரசவைக்கு மறுநாள் வந்தார். அவர் கையில் ஒரு பெரிய பழைய புத்தகம் இருந்தது. ஒரு சிறிய குடுவையில் ஒருவித மருந்துப் பொடியும் கொண்டு வந்திருந்தார். அரசர் முன்னால் வந்து வணங்கிய அவர், அரசர் முன்னால் உட்கார்ந்தார். ஒரு தாம்பாளத்தைக் கொண்டு வரும் படி சொன்னார்.

கொண்டு வந்து கொடுக்கப்பட்ட தாம்பாளாத்தில் தான் கொண்டு வந்திருந்த பொடியைப் போட்டுப் பரப்பி அரசரிடம் புத்தகத்தைக் கொடுத்தார். அரசே, என் தலை வெட்டப்படும் வரை இந்தப் புத்தகத்தைத் திறக்க வேண்டாம். என் தலை வெட்டப் பட்டவுடன் அதை இந்தத் தாம்பாளத்தில் உள்ள பொடியில் அழுத்தி வையுங்கள். இரத்தப் போக்கு நின்றதும் இந்தப் புத்தகத்தைத் திறக்கலாம் என்றார்.

அதன் பின் அரசன் கை அசைக்க மருத்துவரின் தலை வெட்டப்பட்டது. அவர் சொன்னபடியே அவரது தலை தாம்பாளத்தில் வைக்கப்பட்டது. வெட்டப்பட்ட தலையிலிருந்து இரத்தம் வருவது நின்றதும் மருத்துவர் தன் கண்களைத் திறந்து, "அரசே இப்போது புத்தகத்தைத் திறங்கள்" என்றார்.

அரசனும் புத்தகத்தைத் திறந்தான். பக்கங்கள் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொண்டிருந்ததால் தன் எச்சிலை விரல்களால் தொட்டுப் பக்கங்களைப் புரட்டினான் ஆறாவது பக்கத்திற்கு வந்த மன்னர், "மருத்துவரே, இந்தப் பக்கத்தில் ஒன்றுமே எழுதியிருக்கவில்லையே" என்றான். "இன்னும் மூன்று பக்கங்கள் திருப்புங்கள் மன்னா" என்றது வெட்டப்பட்ட மருத்துவரின் தலை.

புத்தகங்களின் பக்க ஓரங்களில் கொடிய விஷம் தடவப்பட்டிருந்ததால் அது இதற்குள்ளாக அரசரின் விரல் மூலம் அவர் உடலில் பரவியது, "கொடிய அரசர்களுக்கு இது தான் கொடிய தண்டனை. நல்லவர்களுக்குத் தீமை விளைவிக்க எண்ணினால் தீமையே விளையும்" என்று மருத்துவரின் தலை சொல்லச் சொல்ல மன்னன் விஷத்தின் வீரியம் தாங்காமல் உருண்டு விழுந்து மாண்டான். அடுத்த வினாடியே மருத்துவரின் உயிரும் போனது என்று பூதத்திற்குத் தன் கதையை முடித்தான் மீனவன்.

"ஏ பூதமே, இந்த மருத்துவருக்கு இரக்கம் காட்டியிருந்தால் இந்த மன்னன் உயிர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் மருத்துவர் இரக்கம் காட்டியதால் இருவர் உயிரும் பறி போனது" என்றான் மீனவன்.

பொழுது புலரும் வேளை வந்ததால் தன் கதையை நிறுத்தினாள் ஷஹரஜாத். அவள் இன்னொரு கதை சொல்ல அனுமதிப்பாரா மன்னர்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:25 am

ஆறாவது நாள் இரவும் வந்தது.

தினார்ஜாத் தன் தமக்கையை நோக்கி, "அக்கா, கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் மீனவன் கதை என்ன ஆயிற்று?" என்று கேட்டாள். மன்னரின் அனுமதியுடன் ஷஹரஜாத் தன் கதையைத் தொடர்ந்தாள்.

ஜாடிக்குள் இருந்த பூதத்தை நோக்கி மீனவன் சொன்னான், "ஏய் பூதமே, நீ என்னை உயிர் வாழ விட்டிருந்தால் இப்போது நீயும் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கலாம், ஆனால் இப்போது நீயோ முன்போல ஒரு சிறைக் கைதி. நானோ என்றும் போல ஏழை" என்றான்.

அதைக் கேட்ட பூதம், "மீனவனே உன் சொல் சரிதான். நீ என்னை விடுவித்துவிடு, நான் உன்னைப் பெரிய செல்வந்தனாக்குகிறேன்" என்றது. மீனவன் பூதத்தை நம்பவில்லை. ஆனால் பூதம் மீண்டும் மீண்டும் மீனவனைக் கெஞ்சியது. அவனுக்கு அளவில்லாப் பொருள் தருவதாக வாக்களித்தது. மீனவனுக்கும் பணத்தின் தேவை இருந்ததால் பூதத்தை விடுவித்தான்.

பூதம் வெளிவந்தபின்னும் பூதத்தின் மேலிருந்த பயம் மீனவனுக்குப் போகவில்லை. தயக்கத்துடனும் பயத்துடனும் பூதத்தைப் பார்த்தான்.

"என்னுடன் வா" என்ற பூதம் நடக்கத் தொடங்கியது. பயத்துடன் பூதத்தைச் சில அடிகள் தள்ளியே பின் தொடர்ந்தான் மீனவன். பூதம் தன்னைத் தாக்கினால் தப்பியோட வசதியாக இருக்கும் என்று எண்ணினானோ என்னவோ!

இருவரும் கடற்கரையைத் தாண்டி வெகுதூரம் நடந்தார்கள். நகரத்தையும் தாண்டி ஒரு அடர்ந்த காட்டுக்குள் வந்தார்கள். அங்கே ஒரு தெளிவான ஏரியைக் கண்டார்கள்.

அந்த ஏரியின் அதிசயம் என்னவென்றால் அங்கே வெள்ளை, சிகப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அந்த ஏரியின் மையத்திற்குச் சென்ற பூதம் மீனவனையும் உள்ளே அழைத்தது.
தயக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் மீனவன் ஏரியில் இறங்கினான். பூதத்தின் கட்டளைப் படி வலையை வீசினான்.

அவன் வலையில் ஒவ்வொரு நிறத்திலும் ஒவ்வொரு மீன் என நான்கு மீன்கள் சிக்கின.மீனவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

"மீனவனே, இந்த மீன்களை சுல்தானிடம் கொண்டு கொடு. அவர் இந்த அதிசய மீன்களுக்காக உனக்கு நல்ல பரிசுகளைத் தருவார். நீ தினமும் இங்கு வந்து மீன் பிடிக்கலாம். ஆனால் ஒரு நாளுக்கு ஒரு முறைதான் இந்த ஏரியில் நீ வலை வீசலாம்." என்றது பூதம்.

பூதத்தின் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டான் மீனவன். மீனவனிடம் விடை பெற்ற பூதம் காலால் பூமியை உதைக்க, பூமி பிளந்து பூதம் பாதாளலோகத்திற்குச் செல்ல வழி ஏற்பட்டது. பூதம் நிபந்தனையை மீண்டும் ஒரு முறை சொல்லி விட்டுத் தன் வழி சென்றது.

தான் பிடித்த அதிசய மீன்களை எடுத்துக் கொண்டு சுல்தானின் அரண்மனைக்குச் சென்றான் மீனவன். அதிசய மீன்களைப் பார்த்த சுல்தான் வியந்து போனார். அவர் இது வரை இது போன்ற மீன்களைப் பார்த்தது இல்லை. சுல்தானிடம் மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு புதிய அடிமைப் பெண் வந்திருந்தாள். அவளின் சமையல் திறமையைப் பரிசோதிக்க எண்ணிய சுல்தான் மந்திரியை அழைத்து மீன்களை அந்தப் பெண்ணிடம் கொடுத்துச் சமைக்கும் படி சொன்னார்.

மீன்களைக் கொண்டு வந்த மீனவனுக்குப் பரிசாக ரத்தினங்களைக் கொடுத்து அனுப்பினார். பரிசுகளைப் பெற்ற மீன்வன் ஆனந்தத்தோடு தன் இல்லம் திரும்பினான்.

மந்திரி சுல்தானின் ஆணைப்படி மீன்களை அடிமைப் பெண்ணிடம் தந்து சமைக்கச் சொன்னார். மீன்களை வாங்கிய அடிமைப் பெண் அவைகளைக் கழுவி சமைப்பதற்காகத் தயார் செய்து எண்ணெயில் போட்டுப் பொரிக்கலானாள். மீன்கள் ஒரு புறம் வெந்தவுடன் அவற்றைத் திருப்பிப் போடும் போது சமையலறையிலிருந்த சுவர் திறந்தது. அதிலிருந்து ஒரு அழகிய நங்கை வெளிப்பட்டாள். அழகான அலங்காரத்துடன் இருந்த அவளைக் கண்ட அடிமைப் பெண் மயங்கி விழுந்தாள்.

மீன்களை அணுகிய அந்த நங்கை தன் கையிலிருந்த மந்திரக் கோலை நீட்டி, "மீன்களே, உங்கள் வாக்கைக் காப்பாற்றுவீர்களா?" என்று மூன்று முறை கேட்டாள். மூன்றாம் முறை அவள் கேட்கும் போது வாணலியிலிருந்த மீன்கள் துள்ளிக் குதித்து, "ஆமாம், ஆமாம்" என்று குரல் கொடுத்தன.

"அப்படியானால் நீங்கள் என்னிடம் திரும்பி வாருங்கள் என்று சொல்லி அங்கிருந்து தான் வந்த வழியே மறைந்தாள் அந்த நங்கை. மயக்கம் தெளிந்து எழுந்த அடிமைப் பெண் மீன்கள் கரிக்கட்டையாய்க் கருகி இருப்பதைக் கண்டவுடன் மீண்டும் மயங்கி விழுந்தாள்.

சுல்தானுக்கு மீன் தயாராகிவிட்டதா என்று பார்க்க வந்த மந்திரி நடந்ததைக் கேள்விப் பட்டு மீனவனை அணுகினார். மீனவன் அந்த மாய ஏரிக்குச் சென்று நான்கு மீன்களை மீண்டும் பிடித்து வந்து மந்திரியிடம் கொடுத்தான்.

மீண்டும் ஒரு முறை அந்த அழகிய நங்கை வந்து மீன்களிடம் பேசினாள் என்று சொல்லித் தன் கதையை நிறுத்தினாள் ஷஹரஜாத்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:26 am

அழகிய நங்கை ஒருத்தி வந்து அரசருக்காய் சமைக்கப்பட்ட மீன்களை தினமும் கரிக் கட்டையைப் போல கருகச் செய்து மறைந்து போனாள். இதைத் தன் கண்ணால் கண்ட மந்திரி தான் பார்த்த அதிசயத்தை சுல்தானிடம் போய் சொன்னார்.

வண்ண மீன்களை உண்ண விரும்பிய அரசர் இந்த விநோதத்தைக் கேட்டு வியப்படைந்தார். அதில் ஏதோ மாயம் இருப்பதாக அவருக்குப் பட்டது. என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் அரசரைத் தூண்டியது.

அரசருக்கு மீண்டும் வண்ண மீன்கள் கொண்டு வரும்படி மீனவனுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த மீனவன் கொண்டு வந்த மீன்களை முன் போலவே அடிமைப் பெண் சமைக்க ஆரம்பித்தாள். அரசரும் மந்திரியும் ஒரு திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

மீன்கள் பாதி வெந்து கொண்டிருக்கையில் எப்போதும் போலவே ஒரு அழகிய நங்கை மதிலைப் பிளந்து வந்து மீன்களிடம் பேசினாள். அவளுக்குப் பதில் சொன்ன மீன்கள் உடனே கரிக்கட்டையாகிக் கீழே விழுந்தன. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசர் தன் மந்திரியை நோக்கி, “மகா மந்திரி இந்த மீன்களைச் சுற்றி ஏதோ மாயம் இருக்கிறது. அது என்னவென்று அறிய வேண்டும். உடனே அந்த மீனவனை வரவழையுங்கள்” என்று ஆணையிட்டார்.

சுல்தானின் ஆணைப்படி வந்த மீனவனிடம் அவனுக்கு வண்ண மீன்கள் கிடைக்கும் விவரத்தைக் கேட்டார். மீனவனும் தான் கடலில் மீன் பிடிக்கப் போனதையும், மாய பூதம் வந்து அவனுக்கு ஒரு ஏரியைக் காட்டியதையும் சொன்னான். “ஏரி எங்கே இருக்கிறது சொல் அங்கே சென்று நான் இந்த மாய மீன்களைக் காணவேண்டும்" என்றார் சுல்தான்.

மீனவன் வழிகாட்ட சுல்தான் தன் படை பரிவாரங்களுடன் மாய ஏரிக்கு வந்து முகாமிட்டார். தன்னுடன் வந்திருந்தவர்களை நோக்கி நீங்கள் இந்த ஏரிய¨ இதற்கு முன்பு பார்த்ததுண்டா என்று கேட்டார். அங்கிருந்த அனைவரும், “அரசே, இப்படி ஒரு ஏரி இருப்பதை நாங்கள் இதுவரை அறியோம்" என்றனர். இவ்வளவு அழகான சூழ்நிலையில் இருந்த ஒரு தெளிவான ஒரு நீர்நிலையைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்றால் அதிசயமாகப் பட்டது சுல்தானுக்கு. அதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் அவருக்கு அதிகமாயிற்று.அதனால் அன்று இரவு மந்திரியை அழைத்தார்.

“மந்திரி இந்த ஏரியில் ஏதோ மர்மம் இருக்கிறது. அதை நான் கண்டுபிடிக்க வேண்டும். அதனால் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டதாக் கூறுங்கள். யாரையும் இந்தக் கூடாரத்தின் உள்ளே அனுமதிக்காதீர்கள்” என்று சொல்லித் தன் பாசறையை விட்டுக் கிளம்பினார்.

இரவில் அனைவரும் உறங்கிய பிறகுஅரச உடையைக் களைந்து விட்டு தன் வாளை மட்டும் துணையாகக் கொண்டு மலைமீது ஏறினார் சுல்தான். இரண்டு நாட்கள் கழித்து தூரத்தில் ஒரு கரும் புள்ளி தெரிந்தது. அதன் அருகில் சென்றவுடன் தான் அது ஒரு அரண்மனை என்று தெரிந்தது.

கருங்கல்லாலும் இரும்பாலும் கட்டப்பட்டிருந்த அந்த அரண்மனையின் ஒரு சிறு கதவு மட்டும் திறந்திருந்தது. மாய மீன்களின் மர்மம் இந்த அரண்மனைக்குள் நுழைந்தால் தெரிந்து விடும் என்று நினைத்த அரசர் ஆவலுடன் அந்த அரண்மனை வாயிலுக்கு வந்தார்.

“ஐயா, நான் ஒரு வழிப்போக்கன், நான் உள்ளே நுழைய அனுமதி கொடுங்கள்" என்று மிகச் சத்தமாகப் பேசினார். மூன்று முறை இவ்வாறு கூவி அழைத்தும் பதில் இல்லாமல் போகவே அரண்மனைக்குள் நுழைந்தார்.

அரண்மனை பட்டாலும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தங்கத்தால் செய்த நான்கு சிங்கங்களின் வாயிலிருந்து தெளிந்த நீர் ஊற்று அரண்மனைக்கு அழகூட்டியது. ஆனால் மனித நடமாட்டமே இல்லாமலிருப்பது ஒரு பெரிய விந்தையாய் இருந்தது சுல்தானுக்கு. அப்படியே சென்று ஒரு படியில் உட்கார்ந்தார். ஒரு சோகமான கீதம் அவர் காதில் விழுந்தது.

மாயமீனின் அதிசயத்தைக் காணவந்த தான் இன்னும் ஏதேதோ அதிசயங்களைப் பார்க்கப் போவது உறுதி என்று எண்ணிய சுல்தான் கீதம் வந்த திசையை நோக்கி நடந்தார்.

அரண்மனையின் ஒரு அறையில் தரையில் உட்கார்ந்து ஒரு இளவரசன் பாடிக் கொண்டிருந்தான். அவன் முகம் சோகமாய் இருந்தது. சுல்தான் அவனை அணுகினார்.

சுல்தானைப் பார்த்த அந்த இளவரசன், “ஐயா நான் உங்களைக் கண்டும் எழுந்து வணங்காததற்கு மன்னிக்கவும் ஏனென்றால் என் கால்கள் கல்லால் ஆனவை” என்று சொல்லி தன் உடைகளை விலக்கிக் காட்டினான்.

பாதி உடல் கல்லும் மீதி உடல் மனிதனுமாய் இருந்த இளவரசனைக் கண்ட சுல்தான் அதிசயப் பட்டார். “இளைஞனே நான் மாய மீன்களைப் பற்றி ஆராய வந்தேன். ஆனால் உன் தோற்றம் அதை விட மர்மமாக இருக்கிறதே உன் கதையைச் சொல்வாயா?" என்று கேட்டார்.

RAM. KATHIRVELU இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:27 am

பாதிக் கல்லாகவும் மீதி மனிதனாகவும் அமர்ந்திருந்த இளவரசன் சுல்தானை நோக்கிப் பேசினான், "மதிப்பிற்குரிய சுல்தானே, என் தந்தை பெயர் முகமது. கருப்புத் தீவுகள் என்று அழைக்கபடும் இந்த நாட்டுக்கு அரசர். அந்தத் தீவுகள் தான் இன்று இந்த நான்கு மலைகளாய் மாறி இருக்கின்றன. நான் அவருக்குப் பின் இந்த நாட்டிற்கு அரசனானேன். எனது சொந்தத்திலேயே ஒரு அழகான பெண்ணை என் மனைவியாகக் கொண்டேன். நான் அவளை மிகவும் நேசித்தேன். எங்கள் மண வாழ்வு ஐந்து ஆண்டுகள் அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.

ஓரு நாள் மதியம் என் மனைவி இல்லாத வேளையில் நான் என் மஞ்சத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் தூங்கிவிட்டதாக எண்ணி எனது பணிப் பெண்கள் இருவர் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது.

`நம் அரசரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவர் நம் அரசியின் மேல் மிகுந்த பிரியம் கொண்டிருக்கிறார். நமது அரசி ஒரு சூனியக்காரி என்று தெரிந்தால் எவ்வளவு மனம் வேதனைப் படுவார்' என்று சொன்னாள். எனக்கு விசிறிக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண், `அதாவது பரவாயில்லை.இந்த சூனியக்காரி இரவில் குடிக்கக் கொடுக்கும் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவரை மயங்கச் செய்து விட்டு தன் உண்மைக் கணவனான எத்தியோப்பிய அடிமையிடம் சென்று வருவது தெரிந்தால் இன்னும் எவ்வளவு மனம் வருந்துவார்.' என்று அடுத்த பணிப்பெண் சொல்ல நான் திடுக்கிட்டேன். அவர்கள் சொல்வது உண்மையா என்று தெரிந்து கொள்ள ஆசைப் பட்டேன்.

எனவே இரவு என் மனைவி நான் அருந்த பானம் கொடுத்த போது அதைக் குடிப்பது போல நடித்து என் மார்பிலேயே கொட்டிக் கொண்டேன். நான் தூங்கியதாக எண்ணிக் கொண்டு சென்ற என் மனைவியைப் பின் தொடர்ந்தேன். பணிப்பெண்கள் சொன்ன படியே அவள் என் அடிமை ஒருவனின் மனைவியாய் இருந்தாள்.

இதைக் கண்டு கோபம் கொண்ட நான் என் வாளால் அந்த அடிமையி‎ன் தலையை வெட்டினேன். ஆனால் தலை அவன் உடலிலேயே ஒட்டிக் கொண்டிருந்தது. என்னைக் கண்ட என் மனைவி என் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினாள். தன் கணவனுக்காக துக்கம் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று கதறினாள். அவள் மேல் இரக்கம் கொண்ட நான் அதற்கு அனுமதித்தேன். அவளும் தன் கணவனுக்கு ஒரு கல்லறை கட்டி அதைச் சுற்றி ஒரு மாளிகை கட்டி அதில் வாழ்ந்து வந்தாள். தனது மந்திர சக்தியால் அந்த அடிமையின் உயிரை நிறுத்தி வைத்திருந்தாள். ஆனால் அவனால் படுத்தபடி பேச மட்டுமே முடிந்தது. இது எனக்குத் தெரியாது. இரண்டு ஆண்டுகள் முடிந்த பின் என் மனைவியை நான் மீண்டும் அணுகினேன். அவள் கணவன் உயிரோடு இருப்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது.

என் மனைவி என்னைக் கண்டதும் அழுது கெஞ்சினாள். தன் கணவன் உயிர் பிரியும் வரை அவனோடு இருக்க அனுமதி கேட்டாள். அவள் மேல் இரக்கப்பட்டு நானும் அனுமதி அளித்தேன். மூன்றாம் ஆண்டும் வந்து போனது. நான் என் மனைவியை அணுகினேன். அவள் அந்த அடிமையுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு என் மனம் கொதித்தது. என் வாளை உருவிக் கொண்டு கோபமாக அவளை வெட்ட வேகமாகப் போனேன். என்னைப் பார்த்து சிரித்த அந்த சூனியக்காரி தன் கைகளை வீசினாள். நான் அந்த இடத்திலேயே என் இடுப்புக்குக் கீழே கல்லாக அப்படியே விழுந்தேன். அவள் மீண்டும் சில மந்திரங்களை உச்சரித்தாள். என் நாடு முழுவதும் ஏரியாகி விட்டது. என் நாட்டில் வாழ்ந்த மக்கள் நான்கு வண்ண மீன்களாக மாறி விட்டார்கள். குற்றுயிராய்க் கிடந்த தன் கணவனைத் தூக்கிக் கொண்டு அவள் இங்கிருந்து சென்றுவிட்டாள்." என்று சொல்லித் கதையை நிறுத்தினாள் ஷெஹரஜாத்.

பொழுது புலர்ந்தது. அவள் கதையை முடிக்க இரவு வரை காத்திருக்க வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:27 am

சூரியன் மறையவும் ஷெகரஜாதின் கதையைக் கேட்க மன்னர் ஷாகிரியார் அந்தப்புரம் நாடி ஆவலாய் வந்தார். பாதி கல்லும் மீதி மனிதனுமாய் இருந்த பாவப்பட்ட இளவரசனின் விதி பற்றி அறிந்து கொள்ள இரவுக்காக அதிக நேரம் காத்திருந்தார்.

"கல்லாய்ப் போன இளவரசன் தன் கதையை அழுது புலம்பிய படி சொல்ல சுல்தான் இரக்கத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்" என்று ஷெகரஜாத் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

தன் சூனியக்கார மனைவி தன்னையும் தன் நாட்டு மக்களையும் தனது சுயநலத்திற்காக மந்திரத்தால் மாற்றிவிட்டதைச் சொல்லிப் புலம்பிய இளவரசனின் துன்பத்தைத் துடைக்க எண்ணி சுல்தான் அவனை நோக்கி, “இளவரசனே, உன் மனைவி எங்கே இருக்கிறாள்? அவளின் அடிமை எங்கே இருக்கிறான்?” என்று கேட்டார். அதற்கு அந்த இளவரசன் “என் மனைவி பொழுது விடியும் வேளையில் தினமும் வந்து என்னை ஆயிரம் கசையடிகள் கொடுத்துத் துன்புறுத்துகிறாள். அதன் பின் அவளுடைய அடிமை இருக்கும் இடத்திற்குச் சென்று அவனுக்கு உணவு ஊட்டுவாள். பின் அந்த அறையின் வாசலிலேயே உட்கார்ந்து அழுவாள்” என்று கூறினான்.

இளவரசனுக்கு இரவு முழுவதும் ஆறுதல் சொன்ன சுல்தான், பொழுது விடியும் முன் குற்றுயிரும் குலையுயிருமாய் இருக்கும் அடிமையைத் தேடிச் சென்றார். அரண்மனையின் ஒருபகுதியில் அடிமை படுத்திருப்பதைக் கண்ட அவர் தன் வாளால் அவனை ஒரே வெட்டாக வெட்டிக் கொன்றார். அடிமையின் உடைகளைத் தான் அணிந்து கொண்டு பிணத்தை அரண்மனைக் கிணற்றில் தூக்கிப் போட்டார். அதன் பின் அடிமை படுத்திருந்த இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டு ஆடாமல் அசையாமல் சூனியக்காரிக்காகக் காத்திருந்தார். தனது வாளையும் உடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் அந்தச் சூனியக்காரி வந்து இளவரசனைக் கோபத்தோடு அடிக்கும் சத்தமும், இளவரசன் வேதனையால் அழும் சத்தமும் கேட்டது. தன் மூச்சை அடக்கிப் பிணம் போல காத்திருந்தார் சுல்தான்.

வழக்கம் போல தனது அடிமைக் கணவனுக்கு உணவு கொண்டு வந்த சூனியக்காரி சுல்தான் அருகில் வந்ததும், "என் கணவனே நீ எப்போது என்னிடம் முன்பு போல் அன்பாய் இருப்பாய்?" என்று துயரத்தோடு கேட்டாள். அதற்கு சுல்தான் "அன்பே என்னைக் கொஞ்சம் தூக்கி விடு. நாள் முழுவதும் இப்படியே படுத்து இருப்பதால்தான் நான் இன்னும் குணமாகாமலிருக்கிறேன்" என்று முனகினார்.

என்றும் இல்லாமல் இன்று வாய் பேசிய தன் கணவனை நினைத்து மகிழ்ந்த சூனியக்காரி, குதூகலத்துடன் அவர் குடிக்க நீரைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு சுல்தானை அணுகினாள் என்று சொல்லி ஷெகரஜாத் தன் கதையை நிறுத்தினாள்.

"மன்னர் மன்னா இரவு முடிந்து பொழுது புலர்ந்து விட்டது. கதையை நிறுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றாள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:28 am

"தன்னை நோக்கி ஆவலாய் வரும் சூனியக்காரிக்காக தயாராய்க் காத்திருந்தார் சுல்தான்" என்று சொல்லித் தன் கதையைத் தொடர்ந்தாள் ஷெகரஜாத்.

ஆசையாய் சுல்தானை அணுகினாள் சூனியக்காரி.

அவள் எதிர்பார்க்கும் முன் தன் வாளை அவளுடைய இதயத்தில் பாய்ச்சினார் சுல்தான். அதன்பின் அவளை இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டார்.

சூனியக்காரி இறந்தவுடனேயே இளவரசன் மாய சக்தியிலிருந்து விடுபட்டு புத்துணர்வு பெற்று எழுந்தான். அவனுடைய நாடும் நாட்டு மக்களும் பழைய நிலைக்குத் திரும்பினர்.

சுல்தானை மகிழ்வுடன் கட்டிக் கொண்ட இளவரசன், "என்னையும் என் நாட்டையும் காப்பாறிய சுல்தான் அவர்களே, நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?" என்று கேட்டான்

அதற்கு சுல்தான், "இளவரசே எனது நாடு இங்கிருந்து இரண்டு நாள் பயணத்தில் உள்ளது" என்றார்

அதைக் கேட்ட இளவரசர், "முன்பு மாய சக்தி சூழ்ந்திருந்ததினால் உங்களுக்கு அவ்வாறு தெரிந்தது. ஆனால் உண்மையில் உங்கள் தேசம் இங்கிருந்து ஏறக்குறைய ஒரு ஆண்டு பயணிக்க வேண்டிய தூரத்தில் இருக்கிறது" என்றான்

"எனக்கு உதவி செய்த உங்களை விட்டு என்னால் பிரிந்திருக்கவே முடியாது" என்றும் கூறினான். சுல்தான் இளவரசனுடன் சில நாட்கள் தங்க ஒப்புக் கொண்டார்.

அவர் இளவரசனைத் தன்னுடைய மகனாகவும் வரித்துக் கொண்டார். ஆனால் அவர் மனம் தன்னுடைய தேசத்திற்குச் செல்ல விழைந்தது. எனவே தன்னுடன் இளவரசனையும் கூட்டிக் கொண்டு ஒரு ஆண்டு காலம் பயணம் செய்து தன் தேசத்தை அடைந்தார்.

அவரைக் காணாமல் கலங்கிக் கொண்டிருந்த மந்திரி பிரதானிகளும் மிக மகிழ்ச்சி அடைந்தனர்.

தன் பிரதான மந்திரியை அழைத்த சுல்தான் தான் இளவரசரைக் காப்பாற்றிய கதையைக் கூறி தன்னுடைய மகனாக இளவரசரை அறிவித்து விட்டார்.

பின் வண்ண மீன்களைப் பிடித்துத் தந்த மீனவனை அழைத்து வரச் சொன்னார்.

சுல்தானைக் காண வந்த மீனவன் வண்ண மீன்களின் உண்மைக் கதையைக் கேட்டு அதிசயித்தான். மீனவனுக்குப் பல பரிசுகள் அளித்த சுல்தான், மீனவனுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பதைக் அறிந்து கொண்டார். மீனவனுடைய மகனுக்கு அரசாங்க கருவூலத்தை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்தார். மீனவனின் ஒரு மகளைத் தான் மணம் முடித்துக் கொண்டு இன்னொரு மகளைத் தன் மகனான இளவரசனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

சாபத்திலிருந்து விடுபட்ட இளவரசனும் தன்னுடைய தந்தையின் உதவியோடு படை பலத்தை அதிகரித்துக் கொண்டு தன் நாடு வந்து சேர்ந்தான்.

தன் நாட்டை அமைதியாகவும் ஆனந்தமாகவும் ஆண்டு வந்தான் என்று கதையை முடித்த ஷெகரஜாத்

"அரசே நான் அடுத்து சொல்ல வரும் கதையைக் கேளுங்கள். அது இந்தக் கதையை விட மிக சுவாரசியமாக இருக்கும்" என்றபடி தன் அடுத்த கதையை ஆரம்பித்தாள்.

நிலாச்சாரல்

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jun 13, 2009 1:38 pm

நன்றி சிவா,

ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் படிக்க சுவையாக இருக்கும், ஆனால் குழந்தைகளுக்கு பொருந்தாத கதைகள் கொஞ்சம் இருக்கும்.

நீங்க தொடர்ந்து கொடுங்க.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 1:46 pm

பரஞ்சோதியா௫க்கு நன்றி. கதைதள் நன்றாக இ௫ந்தது. 8)

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக