புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சாமியார் உருவாகிறார்..........


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 6:37 pm

(வீரபாண்டியன் ஒரு பிரம்மச்சாரி. தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் அவன் லாட்ஜ் வாடகை கட்டுப்படியாகாமல்.. தனக்குத் தெரிந்த தரகர் ஒருவரிடம் சிறிய வீடொன்று பார்க்கச் சொல்லியிருக்க... அது பற்றி விசாரிக்க அந்த தரகர் வீட்டிற்குச் செல்கிறான்)

காட்சி - 1


இடம்: தரகர் வீடு

பாத்திரங்கள்: அண்டா, குண்டா.. ச்சே.. தரகர் தங்கமணி, வீரபாண்டி.

தரகர்: அடடே! வாங்க வீரபாண்டித்தம்பி!



வீ.பா: நான் வீரபாண்டி தம்பி இல்ல. வீரபாண்டியே நாந்தான்.

தரகர்: கடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா! சும்மா பாசமா தம்பி'ன்னு கூப்பீட்டேன்..

வீ.பா: வேணாம். கூப்பிடாதீங்க. சொத்துல பங்கு கேட்டுடுவேன்.. (சுற்றிலும் பார்த்து) எங்க உங்க சம்சாரத்தைக் காணோம்?

தரகர்: ஐ! என் சம்சாரத்தைக் காணோமா! ஹைய்யா..! ஜாலி!

வீ.பா: யோவ்.. வீட்ல இல்லியான்னு கேட்டேன். சரி.. வீடு பாக்கச் சொன்னேனே.. என்னாச்சு?

தரகர்: வீடு இருக்கு தம்பி. சின்னதா ஒரு ரூம். பாத்ரூம்.. டாய்லெட்.. அவ்ளோதான். பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன்லேர்ந்து நேராப் போய் ரைட்ல கட் பண்ணினா வீடு வந்துடும்..

வீ.பா: வீடு வந்துடுமா? என்னய்யா.. நடமாடும் வீடா? வாடகை எவ்ளோ? வீட்டுக்க்காரர் யாரு?

தரகர்: வாடகை ரொம்பக் கம்மிதான். ஹவுஸ் ஓனர் கவர்மெண்ட் வேலைல இருக்காரு. ரொம்ப நல்லவரு. கறை படியாத கைக்காரர்!

வீ.பா: ஏன்.. இங்க் பேனாவே யூஸ் பண்ண மாட்டாரா?

தரகர்: லஞ்சமே வாங்க மாட்டாருன்னேன்பா..

வீ.பா: இப்ப யாருமே லஞ்சம் வாங்கறதில்ல.. ஒன்லி `அன்பளிப்பு'தான்!

தரகர்: எல்லாத்தையும் விட தண்ணி கஷ்டமே இல்ல..

வீ.பா: பககத்துலயே டாஸ்மாக்கா? சரி.. எப்ப அங்க போலாம்?

தரகர்: கிளம்புங்க.. இப்பவே போலாம்.


காட்சி - 2



இடம்: புதிய வீடு

பாத்திரங்கள்: வீட்டுக்காரர், அவரது மகள், வீரபாண்டி & தரகர்



(தரகர் கதவைத் தட்டுகிறார்)

தரகர்: என்னங்க.. சார்.. ஹலோ..

வீ.பா: போதும்யா.. விட்டா மைக் டெஸ்டிங் மாதிரி பேசிட்டே போற..? பொறு.. வருவாங்க..
(கதவு திறந்து ஒரு கையில் ருத்திராட்ச மாலையுடன் நிற்கிறாள் ஒரு இளம்பெண்)

பெண்: யாருங்க வேணும்?

வீ.பா: வீட்டுக்காரர் இல்லையா?

(அவள் வெட்கமாய் நெளிகிறாள்)

வீ.பா: நெளிஞ்சது போதுங்க.. உடைஞ்சிடப் போறீங்க..

பெண்: எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலீங்க..

வீ.பா: அதுக்கு நான் என்னங்க பண்றது?

தரகர்: (இடைமறித்து) உங்க வீட்டுக்காரர் இல்லீங்க.. ஹவுஸ் ஓனரைக் கேட்டோம்..

பெண்: ஓ! அப்பாவா?

வீ.பா: அது எனக்கெப்படிங்க தெரியும்?

தரகர்: (வீரபாண்டியிடம்) அடி வாங்காம போகமாட்ட போல..

பெண்: உள்ள வந்து உட்காருங்க.. (சொல்லிவிட்டு அவள் வீட்டினுள் செல்ல, இருவரும் சோபாவில் அமர்கிறார்கள்)

வீ.பா: யாருய்யா இந்தப் பொண்ணு? மாதாஜி திவ்யாதேவி மாதிரி?

தரகர்: ஐயோ.. அந்த மாதிரி இல்லிங்க.. கொஞ்சம் பக்தி ஜாஸ்தி.

(வீட்டு ஓனர் வருகிறார்)

ஓனர்: வீட்டைப் பாத்தீங்களா?

வீ.பா: பாத்துட்டோங்க.. அதுசரி.. ஏன் வீட்டு வெளி சுவத்துல பூரா காவி அடிச்சிருக்கு?

ஓனர்: அதுவா? மொதல்ல அங்க ஒரு சாமியார் இருந்தார்..

வீ.பா: சாமியாரா? அப்ப இந்நேரம் வீட்டுக்கு போலீஸ் சீல் வெச்சிருக்குமே?

ஓனர்: அந்த மாதிரி இல்ல. ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தின ஒரிஜினல் சாமியார்.. சரி.. எப்ப பால் காய்ச்சுவீங்க?

வீ.பா: தினமும் காலைல பால்காரன் வந்ததும் பால் காய்ச்சுவோம்

ஓனர்: யோவ்.. வீட்டுக்கு எப்ப குடி வர்ற-ன்னு கேட்டேன்..

வீ.பா: நாளைக்கே வந்துட்டா போச்சு!


காட்சி: 3


(புதிய வீட்டிற்கு குடி போன ஒரு வாரத்தில் வீரபாண்டியின் வேலை போய்விடுகிறது. வெறுத்துப் போய் அவன் அமர்ந்திருக்க கமிஷன் பணத்திற்காக தரகர் வருகிறார்)

தரகர்: தம்பி.. உங்க கம்பெனிக்கு போயிருந்தேன்.. வேலையை விட்டு நிறுத்தீட்டாங்களாமே.. ஏன் தம்பி?

வீ.பா: ஆங்? எல்லாரும் தூங்கும்போது, நான் மட்டும் வேலை செஞ்சேன்னுதான். நீ வேற ஏன்யா! டெம்பரவரி தானே.. வேணாம்னதும் வீட்டுக்குப் போடான்னுடாங்க..

தரகர்: சாப்பாடு, வாடகையெல்லாம் எப்படி சமாளிக்கப் போறீங்க?

வீ.பா: அதான் யோசிக்கறேன். இருக்கறத வெச்சு ஒருமாசம் ஓட்டிடுவேன்.. (இந்த நேரத்தில் வெளியே ஒரு கிராமவசியின் குரல் கேட்கிறது)

கி.வாசி: சாமி.. சாமி..

வீ.பா: (வெளியே வந்து) யாரு வேணும்?

கி.வாசி: சாமி.. நீங்கதான் இந்த வீட்ல இருக்கற சாமியாரா? சாமி.. என் பசுமாடு ஒண்ணு காணல.. எப்படியாச்சும் கண்டுபிடிச்சு குடுங்க சாமீ..

வீ.பா: யோவ்.. என்னய்யா இது என்னை பேச விடாம.. நானே வேலை தேடீட்டு இருக்கேன்.. இதுல இவன் மாட்டை வேற தேடணுமாம்.

கி.வாசி: சாமி.. எப்படியாச்சும் மனசு வைங்க சாமி..

வீ.பா: (எரிச்சலோடு) போய்யா மொதல்ல.. (என்று கிராமவாசியைத் துரத்த அவன் தயங்கித் தயங்கி நடக்கிறான்) போய்யான்னா.. (என்று கத்தியபடி கீழே இருக்கும் கல் ஒன்றை எடுத்து எறிகிறான் வீரபாண்டி) இனிமே இந்தப் பக்கம் வந்தே... அவ்வளவுதான்..

தரகர்: தம்பி.. நம்ம கமிஷன்...

வீ.பா: நீ வேற கமிஷன், கமிஷன்னுகிட்டு.. என் ஃப்ரண்டு ஒருத்தன் எனக்குப் பணம் தரணும். ரெண்டு பேருமா போலாம். அதை வாங்கி உனக்குத் தர்றேன்
(மறுபடி வெளியே கிராமவாசியின் குரல் கேட்கிறது)

கி.வாசி: சாமீ.. சாமீ..

வீ.பா: இன்னும் போகலியா இவன்.. இவனை... (கோபமாய் வெளியே வர கிராமவாசி பசுமாட்டுடன் நிற்கிறார்)

கி.வாசி: சாமீ... எங்க கிராமத்துல சொன்னாங்க.. சாமியார் எதையுமே குறிப்பாத்தான் சொல்லுவாருன்னு. நீங்க கல்லைத்தூக்கி எறிஞ்சீங்களா.. சரீன்னு அந்த திசைலயே போனனா, என் பசுமாடு கெடச்சுடுச்சு! என் கூட வந்த பயலுக எல்லாம் உங்களைப் பாத்ததே இல்லியாமே.. பஸ் ஸ்டாண்டுலதான் இருக்கானுவ.. உங்களுக்கு பூஜை போடணுமில்லா.. இருங்க கூட்டியாரேன்.. (சொல்லிவிட்டு ஓடுகிறான். வீரபாண்டி தலையிலடித்தபடி உள்ளே போகிறான்)

தரகர்: தம்பி.. போலாமா உங்க ஃபிரண்ட் வீட்டுக்கு?

வீ.பா: இருய்யா.. குளிச்சுட்டு வரேன்


காட்சி: 4


(குளித்துவிட்டு வந்த வீரபாண்டி தலைசீவி விட்டு, விபூதியை எடுத்து நெற்றியில் வைக்கப் போக, வெளியே ஏதோ குரல் கேட்கிறது. விபூதிக் கையுடன் வெளியே வருகிறான். அங்கே கிராமவாசியும், அவன் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் சிறு கூட்டமாய் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு முன் தரகர் அமர்ந்திருக்கிறார்)

தரகர்: நம்ம வீரபாண்டிச் சாமி ரொம்ப அடக்கமானவரு.. தான் கடவுளோட மறு அவதாரம்கிற கர்வமே இல்ல..

வீ.பா; (கோபமாய்) கர்வப்பட இதென்ன கலெக்டர் வேலையா? போங்கய்யா.. நான் சாமியாருமில்ல.. ஒண்ணுமில்ல...

கூட்டத்தில் ஒருவர்: என்னா அடக்கம்.. என்னா அடக்கம்..

மற்றொருவர்: `நான்' கிறது ஒண்ணுமில்ல ன்னு எவ்ளோ எளிமையா சொல்றாரு!!

கி.வாசி: வீரபாண்டிசாமிக்கு..

கூட்டம்: ஜே!

கி.வாசி: வீரபாண்டிசாமிக்கு..

கூட்டம்: ஜே!

வீ.பா: சும்மா கத்தாதீங்க. நான் சாமியாரே (அதற்குள் தரகர் அவனது வாயைப் பொத்தி, காதில் கிசுகிசுப்பாய்..)

தரகர்: தம்பி.. சும்மா இருங்க.. இதை விட்டா சூப்பர் பிஸினசே இல்ல! (கூட்டத்திடம்) நீங்க சொல்லுங்க..

கூட்டம்: வீரபாண்டி சாமிக்கு.. ஜே! ஜே!

(இந்த நேரத்தில் வீட்டு ஓனரின் மகள் கையில் ருத்திராட்ச மாலையுடன்
வர.. கூட்டம் அவளப் பார்த்து..)

“சிஷ்யாதேவிக்கு ஜே! ஜே!”

வீரபாண்டி வெறுப்புற்றவனாய் `என்னமோ பண்ணுங்க' என்று கையை உதற கையிலிருந்த விபூதி சிதறுகிறது.. அதைப் பார்த்த தரகரும், வீட்டு ஓனரின் மகளும் கூட்டத்தினரோடு சேர்ந்து கோஷமிடுகிறார்கள்..

“வீரபாண்டி சாமிக்கு.. ஜே! ஜே!”

(வீரபாண்டி திகைத்து நிற்கிறான்)
ஒரு சாமியார் உருவாகிறார்.......... 838572 ஒரு சாமியார் உருவாகிறார்.......... 838572 ஒரு சாமியார் உருவாகிறார்.......... 838572





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 01, 2010 1:07 pm

கதை நல்லா நகைச்சுவையாக இருக்கிறது....
VIJAY
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் VIJAY



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 1:13 pm

ஒரு சாமியார் உருவாகிறார்.......... 677196 ஒரு சாமியார் உருவாகிறார்.......... 677196 ஒரு சாமியார் உருவாகிறார்.......... 677196



ஒரு சாமியார் உருவாகிறார்.......... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக