புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மண் என் மக்கள் யாத்திரை Poll_c10என் மண் என் மக்கள் யாத்திரை Poll_m10என் மண் என் மக்கள் யாத்திரை Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
என் மண் என் மக்கள் யாத்திரை Poll_c10என் மண் என் மக்கள் யாத்திரை Poll_m10என் மண் என் மக்கள் யாத்திரை Poll_c10 
2 Posts - 6%
heezulia
என் மண் என் மக்கள் யாத்திரை Poll_c10என் மண் என் மக்கள் யாத்திரை Poll_m10என் மண் என் மக்கள் யாத்திரை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
என் மண் என் மக்கள் யாத்திரை Poll_c10என் மண் என் மக்கள் யாத்திரை Poll_m10என் மண் என் மக்கள் யாத்திரை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மண் என் மக்கள் யாத்திரை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 13, 2023 7:42 pm

என் மண் என் மக்கள் யாத்திரை En-mann-en-makkal

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற கருப்பொருளில் மாநிலம் தழுவிய பாதயாத்திரையை தொடர உள்ளார். இந்தப் பாதயாத்திரை நிகழ்வானது இராமநாதபுரத்தில் தொடங்கி, மதுரை விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி வழியாக முதல்கட்டமாக கன்னியாகுமரி வந்தடைகிறது.

இந்தப் பாத யாத்திரையை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைப்பார் என்று தெரிகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் இன்று வடசேரி, கோட்டார், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, மாவட்டத் தலைவர் தர்ம ராஜ், பொருளாளர் முத்து ராமன், மீனா தேவ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். மேலும் யாத்திரை பொறுப்பாளர்கள் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் நரேந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

அண்ணாமலை தனது பாத யாத்திரையின் ஒருபகுதியாக ஆகஸ்ட் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். இவர் ராதாபுரம் தாலுகா வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் நுழைய உள்ளார். அப்போது கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

#என்_மண்_என்_மக்கள்
#அண்ணாமலை


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 21, 2023 3:47 pm

என் மண் என் மக்கள் யாத்திரை Vidiyala-mudiyala
விடியல, முடியல’ என்ற பெயரில் புகார் பெட்டி: அண்ணாமலை பாதயாத்திரையில் பா.ஜ.க ஏற்பாடு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள பாத யாத்திரை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு, சென்னை, மயிலாப்பூரில் நேற்று நடந்தது. அப்போது, பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது பின்வருமாறு:-

தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். அதை வரும், 28ம் தேதி மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் துவக்கி வைக்கிறார். அன்று, ராமேஸ்வரத்தில் பொதுக்கூட்டம் நடக்கும். அதில், ராமேஸ்வர தீர்மானங்கள் வெளியிடப்படும். அதில், தமிழக பா.ஜ., வரும் ஆண்டுகளில் எந்த திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற நோக்கம் இடம்பெறும்.

முதல் கட்டமாக, ராமேஸ்வரத்தில் துவங்கும் பாதயாத்திரை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளில் ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும். ஐந்து கட்டங்களாக நடக்கும் யாத்திரை, ஜனவரியில் சென்னையில் முடிவடையும். தி.மு.க.,வின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் சேர்க்கப்படும். பாத யாத்திரை, 39 லோக்சபா தொகுதிகளில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அண்ணாமலை நடந்தும், வாகனத்தில் சென்றும் மக்களை சந்திப்பார்.

பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு செய்த சாதனைகள் அடங்கிய, 10 லட்சம் புத்தகங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். அண்ணாமலை எழுதிய கடிதம், 1 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும். யாத்திரையின் போது, 11 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும். அதில் மத்திய அமைச்சர்கள், மேலிட தலைவர்கள் பங்கேற்பர்.

மேலும், 100 தெருமுனை கூட்டங்கள், கிராம சபை கூட்டங்களில் அண்ணாமலை பேசுவார். முக்கிய நகரங்களில் இருந்து புனித மண் சேகரித்து, அதில் தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை அமைக்கப்படும். பாத யாத்திரை நிறைவு நாளில் பிரதமர் மோடி பங்கேற்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

‘விடியல, முடியல’ புகார் பெட்டி


அண்ணாமலை பாத யாத்திரையின் போது பொது மக்களிடம் இருந்து புகார் பெற, மக்கள் புகார் பெட்டி என்ற பெயரில் ஒரு பெட்டி எடுத்து செல்லப்பட உள்ளது. அதில் மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம். புகார் பெட்டியின் மேல், ‘விடியல, முடியல!’ என்றும், நில அபகரிப்பு, ரவுடியிசம், மணல் கடத்தல், ஊழல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

புண்ணிய பூமியாம் ராமேஸ்வரத்தில், வரும் ஜூலை 28 அன்று தொடங்கவிருக்கும் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் குறித்த முதற்கட்ட பயண விவரங்களை, @BJP4Tamilnadu மூத்த தலைவர்கள் திரு @ponnaarrbjp அவர்கள், திரு @nainarbjp அவர்கள், @hrajabjp அவர்கள், திருமதி @vanathibjp அவர்கள், திரு… pic.twitter.com/IKupfY4gMx

— K.Annamalai (@annamalai_k) July 20, 2023


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 21, 2023 8:42 pm

பல லக்ஷ கணக்கில் குறைகள் கூறி மனுக்கள் வந்ததாகவும்
ஆட்சியில் ஏறிய 2 மாதங்களில் குறைகள் தீர்க்கப்பட்டதாக செய்தி வந்ததே
யார் யாருக்கு என்ன குறைகள் எப்பிடி தீர்க்கப்பட்டன என்று எதிர் கட்சிகள்
கேட்காமல் மௌனமாக இருப்பதின் அர்த்தம் என்ன?

ஒ ...கு......ஊ -----ம -------??????




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 22, 2023 11:03 pm

அண்ணாமலையின் ''என் மண் என் மக்கள் யாத்திரையின்'' ஊடக பிரிவு பற்றி அறிவிப்பு



தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் ’என் மண் என் மக்கள்' பாதயாத்திரை, வரும் ஜூலை 28, வெள்ளிக்கிழமை அன்று ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது! இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஊடக பிரிவு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இன்று பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைவருக்கும் வணக்கம்!

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை EX-IPS அவர்களின் ’என் மண் என் மக்கள்' பாதயாத்திரையானது, வரும் ஜூலை 28, வெள்ளிக்கிழமை அன்று ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது! இதனை மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தொடங்கி வைக்கிறார் என்பது தாங்கள் அறிந்ததே !

இந்திய நாட்டை வளமான வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி எடுத்துச் சென்று கொண்டிருக்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் மீண்டும் 2024ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவும், தமிழகமெங்கும் தாமரை மலரவும், தூய அரசியலை முன்னெடுக்கவும் இந்த யாத்திரையை எங்கள் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மேற்கொள்கிறார்!

இந்த பாதயாத்திரையின் ஊடக ஒருங்கிணைப்பாளரான திரு.ரெங்கநாயகலு, (தலைவர்,தமிழக பாஜக மாநில ஊடகப் பிரிவு) அவர்களுடன் இணைந்து,திரு.ராஜவேல் நாகராஜன் (நிறுவனர், பேசு தமிழா பேசு) அவர்கள் ஊடக இணை ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்!

வாருங்கள், கை கோர்ப்போம், லஞ்சம் ஊழல் இல்லா தமிழகம் படைப்போம்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



என் மண் என் மக்கள் யாத்திரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 23, 2023 7:36 pm

எண் மண் என் மக்களின் யாத்திரை தொடங்கும் மேடை தயாராகிறது....


என் மண் என் மக்கள் யாத்திரை 72uFBiP


என் மண் என் மக்கள் யாத்திரை KoqpsVK


என் மண் என் மக்கள் யாத்திரை CPNULfs





என் மண் என் மக்கள் யாத்திரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 28, 2023 9:17 pm

என் மண் என் மக்கள் யாத்திரை F02U2vo

நடைபயண யாத்திரையின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதில் கலந்து கொள்ள அவர் மறுத்துள்ளார்.

அவர் மட்டுமா, பாஜகவில் உள்ளவர்களே சிலர் அந்த மன நிலையில் தான் இருக்கிறார்கள், ஆனால் வாய் விட்டு சொல்ல முடியாத நிலை.

ஏனென்றால் யாத்திரை முழுக்க முழுக்க தேசிய பாஜக தலைமை ஆதரவு மற்றும் வழிகாட்டலுடன் அண்ணாமலை ஒருவரை மட்டுமே மையப்படுத்தி முன்னிலைப் படுத்தி திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணாமலைக்கு உருவாகி இருக்கும், இன்னும் உருவாகி கொண்டே இருக்கும் மாஸ் அட்ராக்க்ஷனை சரியாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறது தேசிய தலைமை. அதற்கான முன்னெடுப்புதான் இந்த யாத்திரை.

மோடியின் செயல் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று சொல்ல பட்டாலும், உண்மை என்னவோ அண்ணாமலையை கடைக்கோடி தமிழனுக்கும் அறிமுகம் செய்யும் நிகழ்வே இந்த யாத்திரை.

இது அண்ணாமலை வெறுப்பாளர்களுக்கு எப்படி பிடிக்கும்? அமித்ஷாவே முன்னின்று தொடங்கி வைக்க வரும்போது எப்படி குறை சொல்ல முடியும்?

ஆக இந்த யாத்திரை திமுக அதிமுகவினரை விட திராவிட பாஜகவினருக்கே அதிகம் எரிச்சலை கிளப்பும் என்பது மட்டும் உண்மை...




என் மண் என் மக்கள் யாத்திரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 28, 2023 9:31 pm

தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை ஒழிக்கவே அண்ணாமலை நடைபயணம்: அமித் ஷா



மத்திய பாஜக அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முதல் நடைபயணம் மேற்கொள்கிறார். 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.

விழாவில் மத்திய மந்திரி அமித் ஷா பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். ராமநாத சுவாமி அருளாசியால் நம்முடைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் செல்லவிருக்கிறார். என் மண் என் மக்கள் என்ற இந்த நடைபயணமானது வெறும் அரசியல் சார்ந்த நடைபயணம் மட்டும் அல்ல. இந்த நடைபயணம் இந்த பழமையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நடைபயணம். தமிழகத்தின் இந்த கலாச்சாரத்தை பண்பாட்டை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, கல்கத்தாவில் இருந்து சோம்நாத் வரை கொண்டு செல்லும் ஒரு நடைபயணமாகும்.

இந்திய நாட்டின் 130 கோடி மக்களின் மனதிலே மரியாதையை ஏற்படுத்தும் நடைபயணம். தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக செய்யப்படும் நடைபயணம். தமிழ்நாட்டை ஊழல் இருந்து விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடைபயணம். இந்த பயணம் தமிழ்நாட்டில் இருக்கும் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்காக செய்யப்படும் நடைபயணம். ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலத்தினை பேணுகின்ற ஒரு அரசை உருவாக்குவதற்காக நடத்தப்படும் யாத்திரை.

இன்று தொடங்கி 700 கிமீ 234 தொகுதிகளிலும் நமது மாநில தலைவர் அண்ணாமலை நடக்கவிருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் நமது பிரதமரின் செய்திகளை கொண்டு செல்லவிருக்கிறார்.

புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த ஏழைகளின் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வருவதற்காக இந்த நடைபயணத்தை நடத்துகிறார்.

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது நடைபயணத்தின் மூலமாக பாரம்பரியம் மிக்க தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை மேலும் பலப்படுத்த பிரதமரின் செய்தியை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கவிருக்கிறார்.

பிரதமர் மோடி தமிழ் மொழியின் பழமையை, சிறப்பினை உலகின் பல்வேறு மேடைகளில் முழங்கியிருக்கிறார். ஐநா சபையில் உலகின் பழமையான தமிழ்மொழி பற்றி பேசியது நம்முடைய பிரதமர் மோடி. இப்போது ஜி20 கூட்டங்கள் எல்லாம் நாட்டிலே நடந்துகொண்டிருக்கின்றன. அதன் முத்திரை வாசகமான யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வாசகத்தை ஐநா சபையில் பிரதமர் மோடி முழங்கினார்.

இவ்வாறு அவர் பேசினார்.



என் மண் என் மக்கள் யாத்திரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 28, 2023 9:42 pm


பாதயாத்திரை தொடக்க விழா: ‘ஊழலில் திளைத்துள்ள தி.மு.க-வை வீழ்த்தும் பயணம்தான் இது’ - அண்ணாமலை



மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் விளக்கி கூறும் வகையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

இந்த பாதயாத்திரை தொடக்க விழா ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே இன்று நடந்தது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ‘தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க ஆட்சியை அகற்றுவதுதான் நம்முடைய பணி. வருகின்ற 2024ல் மத்தியில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார்.

பா.ஜ.க-வை சேர்ந்த 400 எம்.பி-க்கள் வெற்றி பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க சார்பில் 40 எம்.பி-க்கள் டெல்லி செல்வார்கள்.

எனது யாத்திரை ஒரு வேள்வியாகவும், தவமாகவும் இருக்கப் போகிறது. பாதயாத்திரை தொடக்க விழாவுக்கு வந்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி. வரும் காலத்தில் நாம் நிறைய பேசுவோம்.

மேலும் இந்த பாதயாத்திரையிலும் நிறைய விஷயங்கள் குறித்து பேசுவோம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.பி.உதயகுமாருக்கு நன்றி.

பா.ஜ.க-வின் வளர்ச்சியையும், வெற்றியையும் உறுதி செய்யும் நடைபயணமாக இந்த பாதயாத்திரை இருக்க போகின்றது. பா.ஜ.க மக்களுக்கான கட்சி. பாரத மாதா உறக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் என விவேகானந்தர் கூறியிருந்தார்.

கடந்த 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், உறக்கத்தில் இருந்து பாரத் மாதா எழுந்தார். உலக நாடுகளும் கூட இதை ஒப்புக் கொள்கின்றன. இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகளே பார்க்கின்றன.

கோடிக்கணக்கான மக்களுக்கு சொந்த வீடு, கேஸ் சிலிண்டர், தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவர் மோடி. அவர் ஒரு சாமானியர். அவர் நடத்தும் ஆட்சி சாமானியர்கள் ஆட்சி. 9 ஆண்டுகளில் இந்தியாவை பெருமையின் உச்சிக்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார்.

பாரத மாதா விழித்துவிட்டாள். தமிழ் தாய் விழிக்கவில்லை. அவரை விழிக்க வைக்கும் பயணமே ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை. மேலும் தமிழ்த்தாயை மீட்டு எடுக்கும் பயணம் இது.

ஊழலில் திளைத்துள்ள தி.மு.க-வை வீழ்த்தும் பயணம் இது. அதை உணர்ந்துதான் கூட்டணிக் கட்சிகள் இங்கே வந்துள்ளன. இது ஒரு நீண்ட நெடிய வேள்வி இது. இந்த யாத்திரை ஒரு தவம் போல நடக்கப் போகிறது.

நான், பட்டி.. தொட்டி எல்லாம் செல்ல போகிறேன். மக்களிடம் பேசப் போகிறேன். பிரதமர் மோடி இதயப்பூர்வமாக தமிழராக தன்னை காட்டிக் கொண்டுள்ளார். தமிழர்களின் புகழை இந்த அளவிற்கு எந்த பிரதமரும் தூக்கிப் பிடித்ததே கிடையாது.

மேலும் ஐ.நா சபை முதல் உலகம் வரை திருக்குறளை கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. அதை மறுக்கவே முடியாது. தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது. பயனடைந்த ஒவ்வொருவரின் முகவரிதான் பிரதமரின் முகவரி’ என்றார்.



என் மண் என் மக்கள் யாத்திரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 28, 2023 9:44 pm

என் மண் என் மக்கள் யாத்திரை ZvRLNNP

"என் மண், என் மக்கள்" யாத்திரை மொத்தம் 1,700 கிலோ மீட்டர் கால்நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் நடைபெறுகிறது.



என் மண் என் மக்கள் யாத்திரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 29, 2023 10:55 am

ஊழல் மாடல் ஆட்சிக்கு இந்த யாத்திரை முற்றுப்புள்ளி வைக்கும்: கூட்டணி கட்சி தலைவர்கள் உறுதி



ராமேஸ்வரம்,---ராமேஸ்வரத்தில் பா.ஜ., துவங்கியுள்ள 'என் மண் என் மக்கள்' யாத்திரை தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினர்.

ராமேஸ்வரத்தில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரை துவக்க விழாவில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசியதாவது:

அரசியலில் மாற்த்தை ஏற்படுத்தும்


உதயகுமார், முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க.,: தமிழகத்தின் ஆன்மிக நடைப்பயணத்துக்கு இடையே அரசியல் நடைப்பயணத்தை அண்ணாமலை துவக்கியுள்ளார். பிரிந்து கிடந்த மாகாணங்களை ஒன்றிணைத்த இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலை போல் தற்போது வாழும் இரும்பு மனிதரான அமித்ஷா இதை துவக்கி வைத்துள்ளார்.

இந்த இரும்பு மனிதரும் கரும்பு மனிதரும் (அண்ணாமலை) பங்கேற்கும் இந்த யாத்திரை தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவது நிச்சயம். இந்தியாவை வல்லரசு நாடுகளில் தலை நிமிர செய்துள்ளார்.தமிழகத்திற்கு எய்ம்ஸ் உள்ளிட்ட 17 மருத்துவ கல்லுாரிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அரசியல் அதிகாரம் கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே இருக்கக்கூடாது என்பதை மாற்றிக்காட்டும் சக்தியாக இந்த யாத்திரை இருக்கும்.

தேர்தலில் எதிரொலிக்கும்


வாசன், தலைவர், த.மா.கா.,: இந்த யாத்திரையின் விளைவு 2024 லோக்சபா தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். புதிய பார்லிமென்டில் தமிழகத்தின் பாரம்பரிய செங்கோலை நிறுவிய மத்திய அரசுக்கு எட்டரை கோடி தமிழர்களும் நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளனர். தற்போது ராமேஸ்வரத்திற்கு அமித்ஷா வந்து துவக்கிய யாத்திரை தேர்தலுக்கு வலு சேர்க்கும்.

ஊழல் மாடல் நோய்


டாக்டர் கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம் கட்சி: தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சியை அகற்றும் நோக்கத்தில் இந்த யாத்திரை துவக்கப்பட்டுள்ளது. 2021 ல் பொறுப்பேற்ற தி.மு.க., அரசு 505 வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தது. அதில் 20 வது வாக்குறுதி, தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை தருவோம் என்பது. ஆனால் அதை காப்பாற்றினார்களா. டாஸ்மாக்கில் மட்டும் 27 மாதங்களில் 1 லட்சம் கோடிக்கு மேல் ஊழல். அனைத்து கனிம வளங்களும் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன.

போக்குவரத்து, கூட்டுறவு, உணவு என அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. தமிழகத்திற்கு பிடித்துள்ள ஊழல் மாடல் நோயை அகற்ற வேண்டும்.

விரைவில் ஆட்சி மாற்றம்


ஏ.சி சண்முகம், தலைவர், புதிய நீதி கட்சி: தமிழகத்தில் பா.ஜ., என்ற ரயில் நிலக்கரியில் ஓடி பின் டீசல், மின்சாரத்தில் ஓடியது. தற்போது புல்லட் ரயிலாக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றியுள்ளார். விரைவில் தமிழத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

வலுவாக பா.ஜ.,


ரவி பச்சமுத்து, தலைவர், இந்திய ஜனநாயக கட்சி: தமிழகத்தில் தற்போது பா.ஜ., வலுவாக காலுான்றியுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் மோடியை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தி.மு.க., ஆட்சிக்கு முடிவு


தேவநாதன், தலைவர், இந்திய கல்வி மக்கள் முன்னேற்ற கழகம்: தமிழகத்தில் 60 ஆண்டுகால திராவிட கழக ஆட்சி அண்ணாமலை மூலம் முடிவுக்கு வரவுள்ளது. அண்ணாமலை என்றால் முதல்வர் ஸ்டாலின் அலறுகிறார். அவரது பேட்டி என்றால் 'தங்கள் ஊழல் வெளியாகிவிடுமோ' என தி.மு.க., அமைச்சர்கள் பதறுகின்றனர். விரைவில் தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வரும். இவ்வாறு பேசினர்.



என் மண் என் மக்கள் யாத்திரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக