புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புன்முறுவலே அனைத்திற்கும் தோற்றுவாய்.
Page 1 of 1 •
எட்டுவகை மெய்ப்பாடுகள் பற்றிப் பேசும் தொல்காப்பியர், "நகை' எனப்பெறும் மகிழ்ச்சிக்கே முதலிடம் கொடுக்கிறார்.
இந்த "நகை' மகிழ்ச்சியின் வெளிப்பாடான புன்சிரிப்பாகவும், வாய்விட்டுச் சிரிக்கும் பெருஞ்சிரிப்பாகவும், சில சமயம் பிறரைக்குறித்து நகுகின்ற கேலிச்சிரிப்பாகவும் அமையும். புன்முறுவலே இவையனைத்துக்கும் தோற்றுவாய்.
எனும் குறட்பாவில் வாய்ப்பேச்சுக்கே இடமின்றித் தன்னைப் பார்த்துப் புன்னகை புரிந்த காதலி குறித்துப் பேசுகிறான் தலைவன். அவளின் காதல் விருப்பத்தைக் குறிப்பால் உணர்த்தும் கருவியாக அவளின் மென்சிரிப்பு அமைந்தது.
இனிக் காதல் இருவரைப் பற்றிய ஒரு கம்பசித்திரம்: இராமனும் சீதையும் கோதாவரிக்கரையில் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழும்போது சீதையின் நடையைப் பார்த்து ஒதுங்கிச் செல்லும் அன்னத்தைப் பார்த்தான் இராமன்; மறுகணமே தன் பார்வையைத் திருப்பிச் சீதையின் மேல் செலுத்திச் "சிறியதோர் முறுவல் செய்தா'னாம்.
சீதையும் தன் பங்குக்கு அங்கு வந்து நீர்பருகிச் செல்லும் ஆண் யானையின் நடையைப் பார்த்து அடுத்த நொடியே இராமனைப் பார்த்துப் "புதியதோர் முறுவல்' பூத்தாளாம்.
என்பது பாடல் (2736).
இங்கு இவ்விருவரிடையே உரையாடலாக ஒரு சொல் கூட இடம் பெறவில்லை. அதே சமயம் ஒருவர் மீது ஒருவர்க்குள்ள தீராக்காதலை அவர்களின் புன்சிரிப்பே நமக்கு உணர்த்திவிடுகிறது. இராமனின் சிறியதோர் முறுவலைக் காட்டிலும் உவகை மேல் உவகையாக எழுந்த சீதையின் புன்சிரிப்பைப் "புதியதோர் முறுவல்' என்று பாடும் கம்பன் வாக்கில் புதுமை பொலிகிறது.
இனி இவ்வின்பப் புன்முறுவல் நண்பர்கள் மற்றும் அறிந்தவர்களுக்கிடையே கேலிச் சிரிப்பாக மாறுவதுண்டு. பிறருடைய ஏளனத்துக்கு ஒருவர் ஆளாதலும் இளமையால் மடம்பட நடத்தலும் அறிவின்மையால் பிறர் சிரிக்கும்படி நேர்தலும் ஒன்றை மற்றொன்றாக மாறி உணர்தலும் ஆகிய இந்நான்கினாலும் நகைபிறக்கும் என்கிறார் (1198) தொல்காப்பியர்.
நகையா கின்றே தோழி என்னும் நற்றிணைப் பாடல் (245) இதற்கு நல்ல சான்று. தலைவன் குறையைத் தலைவி ஏற்கும் வண்ணம் தலைவியிடம் சாதுரியமாகப் பேசுகிறாள் தோழி. ""சேர்ப்பன் (கடற்கரைத் தலைவன்) ஒருவன் நம்மை நோக்கி "என்னுயிரைக் கைக்கொண்ட நீ யாரோ' என்று, அவனால் நாம் வருந்துவது அறியாமல் நம்மால் அவன் வருந்தினதாகக் கூறி நம்மை நோக்கிக் கை கூப்பி வணங்கிநின்றான். இதை நினைக்குந்தோறும் எனக்குச் சிரிப்புண்டாகிறது'' என்கிறாள்.
இது பிறரிடத்துத் தோன்றிய பேதைமை காரணமாகப் பிறந்த நகை என்பர் உரைகாரர்.
மைத்துன முறைமையும் உரிமையும் உடையவர்களிடையே நிகழும் கேலிப் பேச்சினை நாமறிவோம். "வெட்கங் கெட்டவனே! மாட்டுத் தொழுவத்தில் விளையாடியதால் புழுதிபடிந்த உன் கோலத்தைப் பார்த்து உன் மாமன் மகளான நப்பின்னை சிரிக்க மாட்டாளா? எனவே மறுக்காமல் நீராடுதற்கு வா' என்று சொல்லித் தன் மகனான கண்ணனை அழைத்தாளாம் யசோதை.
என்பது பெரியாழ்வார் பாசுரம் (2-4-9
"தன்னைத்தானே வியந்து தற்புகழ்ச்சி செய்து கொள்வாருக்கு மைத்துனர்மார் பலர் உண்டாவர்' என்று கேலி பேசுகிறது நாலடியார்.
பகைவர்களை மதியாது எள்ளுவது இயல்பு. நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் எனப் பாண்டியனின் பகைவர் கூற்றாக வரும் புறநானூற்றுப் பாடலடி (72:1) இங்கு நினைக்கத்தக்கது. "நகுதக்கனர்' எனில் நம்மால் சிரிக்கத்தக்கவர் என்று பொருள்.
வடபுலத்து அரசராகிய கனகவிசயர்கள் காவா நாவினராய்த் தமிழர் வீரத்தை இகழ்ந்து நகையாடினர். அதனால் சேரனின் சீற்றத்துக்கு ஆளாகிக் கல் சுமந்த கதையைச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.
தான் இகழ்ந்து சிரித்த பகைவரெல்லாம் தன்னைக் கண்டு சிரிக்கும் நிலை உண்டாயிற்றே என்று இராவணன் வருந்துவதாகக் கம்பன் கவிதை காட்டுகிறது. முதல் நாள் போரில் இராமனிடம் தோல்வியுற்று அவனால் அபயம் அளிக்கப்பெற்று ஏறெடுத்து எதையும் பாராதவனாய்த் தரைபார்த்தே நடந்து வருகிறான் இராவணன்.
அந்நிலையில் "தன்பகைவர்கள் சிரிப்பார்களே' என்று அவன் வருந்தவில்லையாம். பிறகு எதை நினைத்து அவனுக்கு வருத்தமாம்?
கம்பன் பாட்டிலேயே அதற்கான பதிலைப் பார்க்கலாம்.
பகைவரது எள்ளல் சிரிப்பைக் காட்டிலும் சீதையின் பரிகாசச் சிரிப்பால் உண்டாகும் அவமானத்தைப் பற்றியே அவன் அதிகம் வருந்துகிறான்.
இங்குக் காட்டியவை போலன்றி தமக்குத்தாமே நகுவது பற்றிய ஓர் அரிய குறிப்பினைக் காலிங்கர் உரையிற் காணலாம்.
என்னும் குறளுக்குப் பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகிய மூவரும் தன்கைவேலைக் களிற்றின் மீதெறிந்து வெறுங்கையனாய் நின்றபோது தன்மெய்யின் மேல் பாய்ந்த வேலினைப் பறித்து "கருவிபெற்றோம்' என்று மகிழ்ந்ததாக உரை கூறியுள்ளனர்.
வேலினை இழந்த நிலையில் மார்பில் பாய்ந்த வேலால் அவன் மகிழ்ச்சியடைந்தான் என்பது கருத்து. பரிதியாரும் சற்றொப்ப இதே கருத்தினராய் ""மதயானை கூடப் போர் செய்து கைவேல் பறிகொடுத்த வீரன் மெய்யிலே தைத்த வேலைப்பறித்து "இந்தத் தறுவாயில் வேல் நேர்பட்டது' என்று சிரித்துச் சலிப்பிலன் ஆனான்'' என்று எழுதுகிறார்.
காலிங்கரோ அவ்வீரன் சிரித்ததற்குப் பின்வருமாறு இரண்டு காரணம் கூறுகிறார்:
""நகும் என்றது "வெறுங்கையாளனை எறிந்தவன் என்ன வீரனோ' என்று ஒரு நகையும் "வெறுங்கைக்கு அம்மா! ஒரு வேல்வந்ததே' என்று ஒரு நகையும் என அறிக'' என்பது அவர் தரும் விளக்கம். இவையிரண்டும் முறையே கேலிச்சிரிப்பும் உவகைச் சிரிப்புமாதலை உணரலாம்.
காலிங்கரின் இவ்வரிய உரைக்குறிப்பு சில சமயங்களில் சிலர் செயல் குறித்து நமக்கு நாமே சிரித்துக் கொள்வதை நினைவூட்டுகிறது இல்லையா?
கதைமாந்தர் பலர் இடம் பெறுகின்ற சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்ற காப்பியங்களில் கதை நிகழ்ச்சிக்கு ஏற்பப் பிறக்கும் நகையாடல்கள் பலவுண்டு.
நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப என்பது நூற்பா (1197). |
இந்த "நகை' மகிழ்ச்சியின் வெளிப்பாடான புன்சிரிப்பாகவும், வாய்விட்டுச் சிரிக்கும் பெருஞ்சிரிப்பாகவும், சில சமயம் பிறரைக்குறித்து நகுகின்ற கேலிச்சிரிப்பாகவும் அமையும். புன்முறுவலே இவையனைத்துக்கும் தோற்றுவாய்.
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் (1094) |
எனும் குறட்பாவில் வாய்ப்பேச்சுக்கே இடமின்றித் தன்னைப் பார்த்துப் புன்னகை புரிந்த காதலி குறித்துப் பேசுகிறான் தலைவன். அவளின் காதல் விருப்பத்தைக் குறிப்பால் உணர்த்தும் கருவியாக அவளின் மென்சிரிப்பு அமைந்தது.
இனிக் காதல் இருவரைப் பற்றிய ஒரு கம்பசித்திரம்: இராமனும் சீதையும் கோதாவரிக்கரையில் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழும்போது சீதையின் நடையைப் பார்த்து ஒதுங்கிச் செல்லும் அன்னத்தைப் பார்த்தான் இராமன்; மறுகணமே தன் பார்வையைத் திருப்பிச் சீதையின் மேல் செலுத்திச் "சிறியதோர் முறுவல் செய்தா'னாம்.
சீதையும் தன் பங்குக்கு அங்கு வந்து நீர்பருகிச் செல்லும் ஆண் யானையின் நடையைப் பார்த்து அடுத்த நொடியே இராமனைப் பார்த்துப் "புதியதோர் முறுவல்' பூத்தாளாம்.
ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும் சீதையின் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்; மாதுஅவள் தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள் |
என்பது பாடல் (2736).
இங்கு இவ்விருவரிடையே உரையாடலாக ஒரு சொல் கூட இடம் பெறவில்லை. அதே சமயம் ஒருவர் மீது ஒருவர்க்குள்ள தீராக்காதலை அவர்களின் புன்சிரிப்பே நமக்கு உணர்த்திவிடுகிறது. இராமனின் சிறியதோர் முறுவலைக் காட்டிலும் உவகை மேல் உவகையாக எழுந்த சீதையின் புன்சிரிப்பைப் "புதியதோர் முறுவல்' என்று பாடும் கம்பன் வாக்கில் புதுமை பொலிகிறது.
இனி இவ்வின்பப் புன்முறுவல் நண்பர்கள் மற்றும் அறிந்தவர்களுக்கிடையே கேலிச் சிரிப்பாக மாறுவதுண்டு. பிறருடைய ஏளனத்துக்கு ஒருவர் ஆளாதலும் இளமையால் மடம்பட நடத்தலும் அறிவின்மையால் பிறர் சிரிக்கும்படி நேர்தலும் ஒன்றை மற்றொன்றாக மாறி உணர்தலும் ஆகிய இந்நான்கினாலும் நகைபிறக்கும் என்கிறார் (1198) தொல்காப்பியர்.
நகையா கின்றே தோழி என்னும் நற்றிணைப் பாடல் (245) இதற்கு நல்ல சான்று. தலைவன் குறையைத் தலைவி ஏற்கும் வண்ணம் தலைவியிடம் சாதுரியமாகப் பேசுகிறாள் தோழி. ""சேர்ப்பன் (கடற்கரைத் தலைவன்) ஒருவன் நம்மை நோக்கி "என்னுயிரைக் கைக்கொண்ட நீ யாரோ' என்று, அவனால் நாம் வருந்துவது அறியாமல் நம்மால் அவன் வருந்தினதாகக் கூறி நம்மை நோக்கிக் கை கூப்பி வணங்கிநின்றான். இதை நினைக்குந்தோறும் எனக்குச் சிரிப்புண்டாகிறது'' என்கிறாள்.
இது பிறரிடத்துத் தோன்றிய பேதைமை காரணமாகப் பிறந்த நகை என்பர் உரைகாரர்.
மைத்துன முறைமையும் உரிமையும் உடையவர்களிடையே நிகழும் கேலிப் பேச்சினை நாமறிவோம். "வெட்கங் கெட்டவனே! மாட்டுத் தொழுவத்தில் விளையாடியதால் புழுதிபடிந்த உன் கோலத்தைப் பார்த்து உன் மாமன் மகளான நப்பின்னை சிரிக்க மாட்டாளா? எனவே மறுக்காமல் நீராடுதற்கு வா' என்று சொல்லித் தன் மகனான கண்ணனை அழைத்தாளாம் யசோதை.
நாண் இத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்; மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் |
என்பது பெரியாழ்வார் பாசுரம் (2-4-9
"தன்னைத்தானே வியந்து தற்புகழ்ச்சி செய்து கொள்வாருக்கு மைத்துனர்மார் பலர் உண்டாவர்' என்று கேலி பேசுகிறது நாலடியார்.
பகைவர்களை மதியாது எள்ளுவது இயல்பு. நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் எனப் பாண்டியனின் பகைவர் கூற்றாக வரும் புறநானூற்றுப் பாடலடி (72:1) இங்கு நினைக்கத்தக்கது. "நகுதக்கனர்' எனில் நம்மால் சிரிக்கத்தக்கவர் என்று பொருள்.
வடபுலத்து அரசராகிய கனகவிசயர்கள் காவா நாவினராய்த் தமிழர் வீரத்தை இகழ்ந்து நகையாடினர். அதனால் சேரனின் சீற்றத்துக்கு ஆளாகிக் கல் சுமந்த கதையைச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.
தான் இகழ்ந்து சிரித்த பகைவரெல்லாம் தன்னைக் கண்டு சிரிக்கும் நிலை உண்டாயிற்றே என்று இராவணன் வருந்துவதாகக் கம்பன் கவிதை காட்டுகிறது. முதல் நாள் போரில் இராமனிடம் தோல்வியுற்று அவனால் அபயம் அளிக்கப்பெற்று ஏறெடுத்து எதையும் பாராதவனாய்த் தரைபார்த்தே நடந்து வருகிறான் இராவணன்.
அந்நிலையில் "தன்பகைவர்கள் சிரிப்பார்களே' என்று அவன் வருந்தவில்லையாம். பிறகு எதை நினைத்து அவனுக்கு வருத்தமாம்?
கம்பன் பாட்டிலேயே அதற்கான பதிலைப் பார்க்கலாம்.
வான்நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிரத் தோளான் நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த சானகி நகுவள் என்றே நாணத்தாற் சாம்பு கின்றான் (7282) |
பகைவரது எள்ளல் சிரிப்பைக் காட்டிலும் சீதையின் பரிகாசச் சிரிப்பால் உண்டாகும் அவமானத்தைப் பற்றியே அவன் அதிகம் வருந்துகிறான்.
இங்குக் காட்டியவை போலன்றி தமக்குத்தாமே நகுவது பற்றிய ஓர் அரிய குறிப்பினைக் காலிங்கர் உரையிற் காணலாம்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் (774) |
என்னும் குறளுக்குப் பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகிய மூவரும் தன்கைவேலைக் களிற்றின் மீதெறிந்து வெறுங்கையனாய் நின்றபோது தன்மெய்யின் மேல் பாய்ந்த வேலினைப் பறித்து "கருவிபெற்றோம்' என்று மகிழ்ந்ததாக உரை கூறியுள்ளனர்.
வேலினை இழந்த நிலையில் மார்பில் பாய்ந்த வேலால் அவன் மகிழ்ச்சியடைந்தான் என்பது கருத்து. பரிதியாரும் சற்றொப்ப இதே கருத்தினராய் ""மதயானை கூடப் போர் செய்து கைவேல் பறிகொடுத்த வீரன் மெய்யிலே தைத்த வேலைப்பறித்து "இந்தத் தறுவாயில் வேல் நேர்பட்டது' என்று சிரித்துச் சலிப்பிலன் ஆனான்'' என்று எழுதுகிறார்.
காலிங்கரோ அவ்வீரன் சிரித்ததற்குப் பின்வருமாறு இரண்டு காரணம் கூறுகிறார்:
""நகும் என்றது "வெறுங்கையாளனை எறிந்தவன் என்ன வீரனோ' என்று ஒரு நகையும் "வெறுங்கைக்கு அம்மா! ஒரு வேல்வந்ததே' என்று ஒரு நகையும் என அறிக'' என்பது அவர் தரும் விளக்கம். இவையிரண்டும் முறையே கேலிச்சிரிப்பும் உவகைச் சிரிப்புமாதலை உணரலாம்.
காலிங்கரின் இவ்வரிய உரைக்குறிப்பு சில சமயங்களில் சிலர் செயல் குறித்து நமக்கு நாமே சிரித்துக் கொள்வதை நினைவூட்டுகிறது இல்லையா?
கதைமாந்தர் பலர் இடம் பெறுகின்ற சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்ற காப்பியங்களில் கதை நிகழ்ச்சிக்கு ஏற்பப் பிறக்கும் நகையாடல்கள் பலவுண்டு.
ம.பெ.சீனிவாசன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|