புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10 
48 Posts - 45%
heezulia
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10 
48 Posts - 45%
mohamed nizamudeen
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10 
48 Posts - 45%
heezulia
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10 
48 Posts - 45%
mohamed nizamudeen
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்


   
   

Page 4 of 18 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 1:06 am

First topic message reminder :

வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?


வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.

எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.

அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.

மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 10:09 pm

வெற்றிலை போடுவது ஏன்?


நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வெற்றிலை, பாக்கு போடுவது பழக்கமாக இருந்து வருகிறது. வெறுமனே மெல்லும் பொருளாக மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களை கொண்டது வெற்றிலை.

வெற்றிலையில் அயோடின். பொட்டாசியம், விட்டமின் ஏ, பி1, பி2 உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. பல நிகழ்ச்சிகளிலும் சாப்பிட்ட பின் வெற்றிலை போடுவதை பார்த்திருப்போம். சாதாரண நாட்களை விட விஷேச நாட்களில் மக்கள் பல வகை உணவுகளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகின்றனர். அதனால் ஏற்படும் செரிமான பிரச்சினைகளை சரிசெய்வதற்காகதான் #வெற்றிலை தாம்பூலம் தொடங்கியது.

உடல் எடை குறைய 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து மென்று சாப்பிடலாம். வெற்றிலையை சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி பிரச்சினைகள் குணமாகும்.

கடுகு எண்ணெய்யில் வெற்றிலையை லேசாக வதக்கி நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். வெற்றிலையை விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து பற்று போட்டு வர கீழ்வாதம் சரியாகும். வாய்ப்புண், வாய் துர்நாற்றம் குறைய வெற்றிலையில் குறைவாக பாக்கு சேர்த்து மெல்லலாம்.

எப்போதாவது 2 வெற்றிலை இலைகளை மெல்லுவதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது.

வெற்றிலையுடன் பாக்கு கலந்து சாப்பிடுவது நல்லது. ஆனால் வெற்றிலையுடன் சுண்ணாம்பு கலந்து சாப்பிடுவது வாயில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சிலர் வெற்றிலையுடன் புகையிலை பயன்படுத்துவது உண்டு. புகையிலை பயன்பாடு ஆபதானதும், தவிர்க்க வேண்றியதும் ஆகும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 3:20 pm

தக்காளி தரும் அற்புதமான சரும பலன்கள்!


கோடை காலம் வந்தாலே பலருக்கும் சரும பிரச்சினைகள் வந்து விடுகிறது. கோடைகால சரும பிரச்சினைகளில் இருந்து காக்கும் தக்காளியின் அவசியமான பயன்களை குறித்து தெரிந்துக் கொள்வோம்.

தோல் பராமரிப்புக்கு தேவையான கரோட்டின் மற்றும் லுடீன் உள்ளிட்டவை தக்காளியில் செறிவாக உள்ளது.

#தக்காளியை சாறு பிழிந்து முகத்தில் பூசி வந்தால் கோடைக்காலத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் நீங்கும்.

தக்காளி சாறுடன் அரை ஸ்பூன் தேன், பப்பாளி துண்டுகள் சேர்த்து பிசைந்து தோலில் தடவினால் பொலிவடையும்.

தக்காளிச் சாறு சருமத் துளைகளை இறுக்கமாக்கி நல்ல நிறத்தை தருகிறது.

தக்காளியுடன் பால், முல்தானி சேர்த்து பிசைந்து தடவி வந்தால் இறந்த செல்கள் நீங்கி வெண்மையான முகமாக மாறும்.

கோடைக்கால வறண்ட சருமத்தை பளபளப்பாக்க தக்காளி சாறுடன் வாழைப்பழம், ஆலிவ் ஆயில் சேர்த்து தடவி வரலாம்.

தக்காளி சாறுடன் புதினா இலைகளை சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி வர முகப்பருக்கள் நீங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 3:21 pm

நாவல்பழம்


#நாவல்_பழம் என்பது சீசனில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில் நாவல்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தற்போது பார்ப்போம்.

இதய நோய் வராமல் தடுப்பதில் நாவல் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் இனிப்பின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த பழத்தில் புரோட்டின் மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் ஆகியவை உள்ளன.

மிக அதிகமான மருத்துவ குணங்கள் கொண்ட நாவல் பழத்தை சாப்பிடுவதால் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். அதேபோல் ஈறுகள் மற்றும் பற்கள் பிரச்சனை உள்ளவர்களும் நாவல் பழத்தை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

நாவல் பழத்தின் இலையை பொடி செய்து பற்களைத் துலக்கினால் பற்கள் மற்றும் ஈறுகள் பளிச்சென்று இருக்கும். கல்லீரல் பிரச்சனை, சிறுநீர் பிரச்சனை, வயிற்றுப்போக்கு பிரச்சனை ஆகியவையும் நாவல் பழம் சாப்பிட்டால் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 3:22 pm

வறண்ட உதடுகளை பளபளப்பாக்க இயற்கையான வழிகள்


கோடை காலத்தில் உதடுகள் வறட்சியடைவது, வெடிப்பு ஏற்படுவதை சில வீட்டு மருத்துவத்தின் மூலம் சரிசெய்ய முடியும். அதுகுறித்து பார்ப்போம்.

தினமும் குளித்து முடித்த பின்னர் ஆலிவ் ஆயிலால் உதடுகளை மசாஜ் செய்து வந்தால் உதடு வெடிப்புகள் குறையும்.

அவ்வபோது தேங்காய் எண்ணெய்யை உதடுகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் UV கதிர்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

கற்றாழை ஜெல்களை உதடுகளில் தடவி வந்தால் உதடு வறட்சி, சுருக்கம் மறையும்.

எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரஸ் அமிலம் உதடுகளின் இறந்த செல்களை நீக்கி உதடுகளை பொலிவுற செய்யும்.

அன்னாசி பழச்சாறில் உள்ள ப்ரோமலைன் உதடு சுருக்கங்கள் மறைய உதவுகிறது.

திராட்சை பழச்சாறில் உள்ள விட்டமின் இ உதடு சுருக்கங்கள், வறட்சி சரியாக உதவுகிறது.

ஆமணக்கு எண்ணெய்யை உதடுகளில் தடவி வர உதட்டில் உள்ள சுருகங்கள் மறைந்து மென்மையாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 3:54 pm

மாவிலையின் மகத்துவம்


மாமரத்தின் பூர்வீகம் இந்தியா. இதன் இலை, பூ. பிஞ்சு, காய், பழம், வித்து மரப்பட்டை, வேர், பிசின் போன்ற அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது. மாஇலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.

கொழுந்து இலையை வதக்கி, தேனில் கலந்து குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீருடன் கலந்து அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசிவந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.

மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்புநீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஜீரணசக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும். மாம்பட்டையைக் குடிநீர்செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது.

மா வேர்பட்டை வயிற்றுப்புண் குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மாம்பழம் அதிக வைட்டமின் சத்துகள் நிறைந்தது. இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம்.

மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால் , அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப் போக்கு குணமாகும். மாம்பருப்பை பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 3:55 pm

நட்சத்திரப் பழத்தின் நன்மைகள்!


தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது நட்சத்திரப்பழம். இது தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது.இந்தப் பழத்தின் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது, இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது.

நட்சத்திரப் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள கசடுகளையும் மலக்கட்டுகளையும் வெளியேற்றும். அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது, இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட நட்சத்திர பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.

#நட்சத்திரப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.நட்சத்திரப் பழம் குறைந்த அளவிலான கலோரியைக் கொண்டது. எனவே, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்ததாகும். ஒரு நடுத்தர அளவிலான நட்சத்திரப் பழத்தில் 28 கலோரிகள் மட்டுமே உள்ளன.

நட்சத்திர பழத்தில் பல அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் நோயெதிர்ப்பு திறன் அதிகம் கொண்டது. எனவே, நட்சத்திரப் பழத்தை கிடைக்கும் காலங்களில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும்.நட்சத்திரப் பழம் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும், நடுத்தர அளவிலான பழத்தில் 3 கிராம் வரை நார்ச்சத்து உள்ளது.

ஆரோக்கியமான குடல் இயக்கத்தை பராமரிக்கவும், இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் நார்ச்சத்து முக்கியமானது.ஆனால், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நட்சத்திரப் பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் அதில் அதிக அளவு ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது, இது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். எனவே, அவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 3:55 pm

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!


*#வாழைப்பூ ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியாததால், அதனை சமைப்பது இல்லை. எனவே, வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

*வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும்.

*ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்தமானது அதிக ஆக்ஸிஜனை உட்கிரகித்து தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

*சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. மேலும், கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கிறது.

*வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும். வாய்ப்புண், வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றலும் வாழைப் பூவிற்கு உண்டு.

*மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள் மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக் கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

*வாழைப் பூவிற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுள்ளது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.

*பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

*வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.

*உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம். இதில் கொழுப்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 3:57 pm

திப்பிலி


சுக்கு, மிளகோடு திப்பிலியும் சேர்த்து தயாரிக்கிறதுதான் திரிகடுகம். இது செரிமானக் கோளாறுல தொடங்கி நுரையீரல்ல சளி, வயிறு உப்புசம், தலைவலின்னு பல பிரச்னைகளை சரி செய்கிறது. சொறி, சிரங்கு, படர்தாமரை இவற்றை குணப்படுத்துகிறது.

ஆஸ்துமா, மூச்சுக்குழாய்ல ஏற்படும் அழற்சி, தொண்டைல வரக்கூடிய புண் எல்லாத்தையும் திப்பிலி சரிபண்ணும்.திப்பிலியில் உள்ள பைப்ரின், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கக்கூடியது. உடல் எடையைக் குறைக்கவும் இது துணை நிற்கிறது.

திப்பிலிப் பழத்தை டூத் பேஸ்ட்டா மாற்றி பல்வலி, வாய் நாற்றத்திற்கு பயன்படுத்தலாம். பாக்டீரியாக்களை எதிர்க்கிறதோடு வலிகளை விரட்டுறதுக்கும் இந்த #திப்பிலி பழ பேஸ்ட் நல்ல மருந்தா செயல்படுகிறது.திப்பிலி பழத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தூக்கமின்மையை அகற்றும். பொதுவான சளித்தொல்லை, இருமல் இருந்தால் திப்பிலிப் பொடியை சூடான பாலில் கலந்து குடித்தால் குணம் கிடைக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 4:00 pm

ப்ரோக்கோலி


#ப்ரோக்கோலி காலிஃபிளவர் வகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்று. ஆனால் இது எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டது. குறிப்பாக புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. ப்ரோக்கோலியில் ‘சல்போரபேன்’ எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. குடல் ஈரல், சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்று நோய்களை குணப்படுத்தும் சக்தியை ப்ரோக்கோலி கொண்டிருக்கிறது.

கண்பார்வை: அதிகம் நீர்த்தன்மை வாய்ந்த திசுக்களால் ஆன உறுப்பாக கண்கள் இருக்கிறது. முதுமையை நெருங்கும் பெரும்பாலான மனிதர்கள் அனைவருக்கும் கண்களில் இருக்கும் ‘மேகுலார்’ திசுக்களின் வளர்ச்சிக் குறைகிறது. ப்ரோக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் ‘சல்போரலன்’ சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் எதிர் காலங்களில் கண்பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் வராமல் தடுக்கின்றன.

இதயம்: இதயப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு பிரதானக் காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே ஆகும். ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் ‘ஓமேகா-3’ கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கும்.

எலும்புகள் வலிமைப் பெற: நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது எலும்புகள்தான். எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் கே சத்து அதிகம் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் கே சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு எதிர் காலங்களில் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனப்படும் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவுப் போன்ற குறைகள் ஏற்பட காரணமாகிறது. ப்ரோக்கோலியை வாரத்திற்கு 2 முறை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள், பற்கள் போன்றவை வலிமைப் பெறும். மேலும் வைட்டமின் கே சத்து எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்து, சிறுநீர் வழியாக வெளியேறுவதையும் தடுக்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 4:02 pm

நிலக்கடலை


*பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் நிலக்கடலையும். மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச்சத்து அதிகம். இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் வேர்க்கடலைக்கு உண்டு. நிலக்கடலையில் போலிக் அமிலம் அதிகம் என்பதால், கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

*நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைந்துள்ளது. இது நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.

*நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.

*உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் உள்ள சத்து இதய வால்வுகளை பாதுகாத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

*நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடென்ட், நோய் வராமல் தடுப்பதுடன், இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

*மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக். இதில் உள்ள வைட்டமின் 3 நியாசின் ஞாபக சக்திக்கு பெரிதும் பயனளிக்கிறது.

*பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் மூளையை உற்சாகப்படுத்தும் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. இது மன அழுத்தத்தைப் போக்குகிறது.

*தாமிரம் மற்றும் துத்தநாகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள ஒமேகா-3 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

*பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது. பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதனால் பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*பாதாம், பிஸ்தா, முந்திரியினை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதில் அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன.

குறிச்சொற்கள் #வேர்க்கடலை #நிலக்கடலை


Sponsored content

PostSponsored content



Page 4 of 18 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக