by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள். - Page 5 YmKjb69](https://i.imgur.com/YmKjb69.jpg)
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு சரியான காரணம் இல்லாமல் இருந்தாலும், உடல் பருமன் மற்றும் உடல் பயிற்சி இன்மை இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம் என்ற அறிகுறியை சர்க்கரை நோய் தருகிறது.
இந்நிலையில் பொதுவாக சுகர் நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நாம் செய்யும் முக்கிய தவறுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது. இந்நிலையில் நாம் அதிக இனிப்பான உணவை சாப்பிடும்போது, அது நேரடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். மேலும் இது இன்சுலினை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படும்.
அதிகமான கார்போஹைட்ரேட் அல்லது அரோக்கியம் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்வு செய்வது. மைதா பிரட், பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ். இந்நிலையில் இந்த உணவுகள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும்.
நார்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது. நார்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், அதிகம் பசிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்நிலையில் நார்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
காலை உணவை தவிர்ப்பது, சிலர் சரியாக பசிக்கவில்லை என்று நாம் காலை உணவை தவிர்க்க கூடாது. காலை உணவுதான் அன்றைய நாளின் சர்க்கரை அளவை சீராக தொடங்க உதவும். காலை உணவை நாம் தவிர்க்கும்போது இன்சுலின் செயல்பாடை பாதிக்கலாம். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, அது கொலஸ்ட்ரால் ஆக மாறலாம். இதனால் இதயம் மற்றும் ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.
குறிச்சொற்கள் #நீரிழிவு #சர்க்கரை_நோய் #diabetic #diabetes |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்
அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்நோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப்–2 நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள். அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப்–2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது.
அதன்மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இதெல்லாம் செய்தால் சர்க்கரை நோய் வரலாம்
சர்க்கரை நோயை தடுப்பதற்கு நமது முன்னோர்கள் மற்றும் மருத்துவர்கள் சில வழிமுறைகளை கூறியுள்ளனர். அதன்படி நடந்தால் சர்க்கரை நோயை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக தினசரி தயிர் சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தினசரி தயிர் சாப்பிடுவதால் உடல் பருமனுக்கும் வழி வகுக்கும்.
அதேபோல் இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கத்தை பின்பற்ற வேண்டாம். இதனால் செரிமான அமைப்புக்கு போதுமான நேரம் கிடைக்காததால் செரிமானம் தாமதமாக நடைபெறும். இதனால் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு.
உணவை அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும் வயிற்றுக்கு போதுமான அளவு அல்லது அரை வயிறு தான் உணவை உண்ண வேண்டும். வயிறு நிறைய அல்லது அளவுக்கு மீறி சாப்பிட்டால் சர்க்கரை நோய் உருவாவது நிச்சயம்
பசியெடுத்தவுடன் தான் சாப்பிட வேண்டும், பசி இல்லாத நேரத்தில் நொறுக்கு தீனி, ஜூஸ் பலகாரம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்தால் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சப்போட்டா பழம் சாப்பிடலாமா ?
#சப்போட்டா பழம் நிச்சயமாக சுவையான ஒன்று. இந்நிலையில் இதில் நாம் வியக்கும் வகையில் அதிக சத்துகள் உள்ளது. இதில் வைட்டமின் சி, நார் சத்து உள்ளது. இது ஜீரணத்தை அதிகப்படுத்தும். கூடுதலாக எலும்பை வலுப்பெறச் செய்யும். இதில் இருக்கும் நார்சத்து மற்றும் பொட்டாஷியம், இதய ஆரோக்கியத்தையும் ஆரோக்கியமான ரத்த அழுத்த அளவுகளை வைத்துகொள்ள உதவும்.
இந்நிலையில் 100 கிராம் சப்போட்டாவில் இருக்கும் சத்தை தெரிந்துகொள்வோம். கலோரிகள் : 88 , கார்போஹைட்ரேட்- 19.96 கிராம், நார்சத்து- 5.3 கிராம், புரத சத்து: 0.44 கிராம், கொழுப்பு சத்து: 1.1கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், நார்சத்து, பொட்டாஷியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் உள்ளது.
இதில் இருக்கும் நார்சத்து ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதனால் மலசிக்கல் ஏற்படாது.
இந்நிலையில் இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சாதாரண நோய் தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றும். இதில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் இயற்கையாகவே இனிப்பு இருப்பதால், இது புத்துணர்வு வழங்கும்.
இதில் இருக்கும் பாஸ்பரஸ், கால்சியம் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி நமது செல்களை பாதிப்பிலிருந்து பாதுகாப்பதால், புற்றுநோய் கூட வரமால் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதில் அதிக கொழுப்பு சத்து இல்லை. குடுதலாக இதில் இருக்கும் நார்சத்து கொலஸ்ராலை குறைக்க உதவும். இந்நிலையில் இதில் இயற்கையான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவு சற்று கூடுதலாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வெங்காயம் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையுமா?
வெங்காயம் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையுமா என்ற கேள்விக்கு மருத்துவர்கள் கண்டிப்பாக குறையும் என்று பதில் கூறியுள்ளனர்.
இந்தியாவின் மிக எளிதில் சகாயமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம். வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் ஆகியவை இருப்பதால் சர்க்கரை உயர்தலை கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் தாராளமாக வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் வெங்காயத்தை சாப்பிடுவதால் உடல் சூடு ஆகாது என்றும் வெப்பத்தை ஏற்படுத்தாது என்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை நிலையான வைத்திருக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
வெங்காயத்தில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் அதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் இருந்து கூறப்பட்டுள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சர்க்கரை நோய் வந்தால் முடி அதிகமாக உதிருமா?
சர்க்கரை நோயாளிகளுக்கு பல்வேறு இணை நோய்கள் வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு முடி உதிருவதும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சர்க்கரை நோயினால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபட்டால் முடி உதிர்தல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் பாக்டீரியா தொற்று காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படும் என்று தெரிகிறது. எனவே முடி உதிர்வதை தடுப்பதற்கு சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
சர்க்கரை நோய் காரணமாக அலர்ஜி ஏற்பட்டு அதன் காரணமாகவும் முடியின் வேர்கள் சேதமாகும். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் புரதச்சத்துக்களை அதிகம் சேர்த்து முடியை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பாகற்காய் சாப்பிடுங்கள், சர்க்கரை நோயை விரட்டுங்கள்..!
பாகற்காயை அவ்வப்போது சாப்பிட்டால் சர்க்கரை நோயை விரட்டி விடலாம் என கூறப்படுகிறது.
சர்க்கரை நோய் தற்போது அதிக அளவில் பரவி வரும் நிலையில் பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, பி 2, கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து ஆகியவையும் உள்ளன
பாகற்காயில் கொழுப்பு சத்து கார்போஹைட் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காயில் உள்ள விதைகள் கசப்பு தன்மை அதிகமாக இருந்தாலும் அந்த விதையை சாப்பிடுவதால் வயிற்று வலி வயிற்றுப்போக்கு தலைவலி போன்ற நோய் தீரும்
ஆனால் அதே நேரத்தில் பாகற்காயை அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் பாகற்காயை தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் #பாகற்காய் சாற்றை குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
![நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள். - Page 5 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள். - Page 5 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
தவிர்க்கும் சர்க்கரை கலந்த உணவு பொருட்கள் /
அறிவுரைக்கப்பட்ட உணவுகள் /.காய்கறிகள்
குறிப்பிட்ட காலத்தில் மருத்துவ சோதனைகள்
நீரிழிவை கட்டுப்படுத்தும்.
நண்பர் ஒருவர் மிகவும் கண்டிப்புடன் மேற்கண்ட யாவற்றையும் வீட்டில் கடைபிடிப்பார்.
ஆனால் கல்யாண விருந்து என வந்துவிட்டால் ஒரு வெட்டு வெட்டுவார் .
அதிக அளவு பாயசம் /இனிப்பு பண்டங்கள் /பழ ரசங்கள் என உண்ணுவார் .
நீரிழிவு பற்றி ஞாபகப்படுத்தினால் , இதெல்லாம் எப்போதோ ஒரு முறை .
வீட்டில் கறார் என்பார்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலமா?
சர்க்கரை நோயாளிகளுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் அவர்கள் #இளநீர் குடிக்கலாமா என்ற சந்தேகத்திற்கு பதிலை தற்போது பார்ப்போம்.
இளநீரில் சர்க்கரை மட்டுமின்றி கார்போஹைட்ரேட் கொழுப்புகள் சோடியம் பொட்டாசியம் ஆகியவை உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே கிடைக்கக்கூடியது என்பதால் இளநீர் குடிப்பதில் எந்த விதமான தீமையும் இல்லை.
மேலும் இளநீரில் கலோரிகள் அதிகம் உள்ளது என்றும் அது மட்டுமின்றி 10 கிராம் சர்க்கரை மட்டுமே இளநீரில் இருப்பதால் தாராளமாக சர்க்கரை நோயாளிகள் இளநீரை குடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இளநீரில் வேறு சில நன்மைகளை இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை குடிக்கலாம் என்றும் ஆனால் அதிகம் குடித்தால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
![நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள். - Page 5 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|