புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_m10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10 
74 Posts - 59%
heezulia
300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_m10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10 
41 Posts - 33%
T.N.Balasubramanian
300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_m10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_m10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_m10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10 
116 Posts - 60%
heezulia
300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_m10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_m10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_m10300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 10, 2023 2:51 pm

300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Boxer-deepak

இந்தியாவின் தலைவர் டெல்லியில் பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த கேங்ஸ்டர் தீபக் பஹல் என்ற குத்துச்சண்டை வீரர் டெல்லி போலீசார் மற்றும் புலனாய்வுத்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு மெக்சிகோவில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த தீபக் பஹல் என்ற குத்துச்சண்டை வீரர் இந்தியாவுக்காக தேசிய குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். தீபக் பாக்ஸர் என்று அழைக்கப்படும் இவர், கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி ரோஹினி நீதிமன்ற வளாகத்தில் தாதா கோகியை 2 பேரை சுட்டு கொலை செய்தார். இந்த வழக்கில் அவரை கைது செய்ய 2 போலீசார் முயன்றபோது அவர்களையும் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தாதா கோகியை கேங்கை தன்வசப்படுத்திய தீபக் பஹல், கட்டுமான அதிகர் அமித் குப்தாவுடன் ஏற்பட்ட மோதலில் அவரையும் சுட்டு கொன்றுள்ளார். மேலும் இந்த கொலைக்கு காரணம் தான்தான் என்று தீபக் தனது சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீபக்கை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த அவர், கொல்கத்தாவிற்கு தப்பி சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை பற்றி தகவல் அளித்தால் அவர்களுக்கு 3 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனிடையே தீபக் மெக்சிகோவில் உள்ள கேன்கன் நகரில் பதுங்கியுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையின் சிறப்பு குழு அவரை கைது செய்தது.

300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Image-140

மெக்சிகோவுக்கு தப்பிச்சென்ற தீபக் பஹல், தனது கூட்டாளிக்கு போன் செய்து, “என்னை விரைவில் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லுங்கள். இன்னும் எவ்வளவு நேரம் நான் காத்திருக்க வேண்டும்?” என்று பேசியுள்ளார். இதனை வைத்து மெக்சிகோ சென்ற காவல்துறையின் சிறப்பு குழு கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, மெக்சிகோவின் கேன்கனில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து தீபக் பஹலை கைது செய்தனர்.

இந்த நடவடிக்கைக்கு டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், அமெரிக்க மற்றும் மெக்சிகன் ஏஜென்சிகளின் உதவியுடன் அவரைப் பிடித்தனர். வேறு நாட்டில் ஒரு கும்பலை டெல்லி போலீசார் கைது செய்வது இதுவே முதல் முறை. இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் இருந்து வெளியான தகவலின்படி,

கடந்த ஜனவரி மாதம் தீபக் இந்தியாவை விட்டு வெளியேறினார், அவர் மெக்சிகோவுக்கு தப்பிச் சென்றதைக் கண்டுபிடிக்க சில நாட்கள் மட்டுமே ஆனது. இந்தியாவில் இருந்து அவரது இருப்பிடத்தை கண்டுபிடிப்பதே சவாலாக இருந்தது. ஒரு மாதத்திற்குள், அவர் யுகாடன் பகுதியில் இருப்பதைக் கண்டோம். இந்தியாவிலுள்ள தனது கூட்டாளிக்கு தீபக் போன் செய்தது எங்களுக்கு முக்கிய வழி கிடைத்தது போன்று இருந்தது.

அவர் மெக்சிகோவில் இருந்து தப்பி அமெரிக்கா செல்ல விரும்பினார். இதற்கிடையில், அவர் தப்பிக்க உதவிய முகவர் உட்பட அவரது கூட்டாளிகள் சுமார் 7 பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். அவரது பயணத்தை பற்றி தெரிந்துகொள்ள பல நாட்களாக தீவிரமாக கண்கானித்து வந்தோம். இதற்காக பல ஆதாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, அவரைக் கண்டுபிடித்தோம் என்று கூறியுள்ளார்.

தீபக் தப்பித்த வழியை பற்றி விவரித்த போலீசார், ஜனவரி 6 ஆம் தேதி, அவர் முதலில் கொல்கத்தாவில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் துபாய்க்கு சென்றுள்ளார். அவர் அங்கு சில நாட்கள் தங்கியிருந்த பின் அல்மாட்டிக்கு பறந்தார், அங்கு அவர் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கினார். பின்னர் அவர் இஸ்தான்புல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், பனாமா சிட்டி, எல் சால்வடார் மற்றும் குவாத்தமாலா ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியாக கான்கன் சென்றடைந்தார்.

இந்த கும்பலை போலீசார் சிறிது காலமாக தேடி வந்தனர். கடந்த ஆண்டு வடக்கு டெல்லியில் ஹோட்டல் உரிமையாளர் / ரியல் எஸ்டேட் உரிமையாளர் அமித் குப்தா கொலை உட்பட 10 க்கும் மேற்பட்ட கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தீபக் கடந்த ஆண்டு பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் கொலையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளி என்று போலீசார் கூறினர்.

இந்த கொலை வழக்கில், தீபக் தனிப்பட்ட முறையில் குப்தாவைக் கொலை செய்யுமாறு தனது கும்பலுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் அமித் குப்தா தனது எதிராளியான தில்லு தாஜ்பூரியாவுடன் “தொடர்பு” இருப்பதாகவும், குல்தீப் ஃபஜ்ஜா பற்றிய தகவல்களை கசியவிட உதவியதால் அவரை தீபக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டில் ஜிடிபி மருத்துவமனையில் இருந்து ஃபஜ்ஜா தப்பிக்க உதவியவர்களில் தீபக்கும் ஒருவர். சில நாட்களுக்குப் பிறகு போலீஸ் என்கவுண்டரில் ஃபஜ்ஜா கொல்லப்பட்டார்.

டெல்லியின் மோஸ்ட் வாண்டட் கேங்க்ஸ்டர் என்று அழைக்கபப்டும் அவர், பேருந்துகளில் பயணம் செய்து, ஹிமாச்சல பிரதேசம், உ.பி., உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கோவா போன்ற சிறிய நகரங்களில் தங்கி போலீசாரிடம் இருந்து தப்பித்து வந்தார். மேலும் காவல்துறையினர் தன்னை பின் தொடராமல் இருக்க தனது போனை அதிகம் பயன்படுத்தாமல் இருந்துள்ளார். கடந்த அக்டோபரில், குப்தாவின் கொலைக்குப் பிறகு பல குழுக்கள் தன்னை தேடி வருவதை தெரிந்துகொண்ட தீபக் பஹல், தான் பிடிபடுவோம் என்பதை உணர்ந்து நாட்டை விட்டு தப்பிச் செல்வதே ஒரே வழி என்று யோசித்தாக போலீஸ் வட்டாரம் தெரிவித்தது.

இங்கிலாந்தில் இருந்து தனது கும்பலை நடத்தும் பிராரால் ஈர்க்கப்பட்டு, தீபக் தப்பிக்கத் திட்டமிடத் தொடங்கினார். அவரது கும்பல் உறுப்பினர்கள் அவருக்கு உதவ அலி என்ற பாகிஸ்தானியர் உட்பட பல முகவர்களைத் தொடர்பு கொண்டனர். அலி மெக்சிகோவில் வசிப்பதாகவும், தீபக்கை கான்குனில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சேசிங்


கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் கோகி கும்பலைச் சேர்ந்த 6 பேர் மற்றும் பிற முகவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, சிறப்புப் பிரிவு தீபக் கான்கனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து பரேலியில் தயாரிக்கப்பட்ட அவரது போலி பாஸ்போர்ட்டின் நகல் போலீசாரிடம் இருந்தது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள சில “முக்கிய” குண்டர்கள் அவருக்கு தளவாடங்கள் மற்றும் பணத்துடன் உதவுவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து அவரை கைது செய்ய 20 நாட்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, மார்ச் 23 அன்று தீபக்கிற்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. விரைவில், லுக்-அவுட் சுற்றறிக்கை திறக்கப்பட்டது மற்றும் சிபிஐ பச்சை, நீலம் மற்றும் சிவப்பு கார்னர் நோட்டீஸ்களை வெளியிட்டது.

மார்ச் 28-29 தேதிகளில் இன்ஸ்பெக்டர்கள் ககன் பாஸ்கர் மற்றும் மணீஷ் யாதவ் ஆகியோர் கொண்ட காவல்துறை சிறப்பு குழு மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்டனர். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, தீபக்கின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்ததாக அவருக்கு தகவல் கசிந்தது. அவர் தனது ஹோட்டலை விட்டு வெளியேறி, மெரிடா, கான்கன் மற்றும் தெஹுவான் வழியாக பயணம் செய்தார். நாங்கள் மெக்சிகோவை அடைந்தோம், தூதரக அதிகாரிகள் எங்களுக்கு உதவினார்கள்.

நாங்கள் எஃப்.பி.ஐ (FBI) அதிகாரிகள் மற்றும் மெக்சிகன் காவல்துறையினரிடம் உதவி கேட்டோம். அவர்களும் எங்களுக்கு உதவி செய்தனர். இதன் மூலம் தீபக்கை நாங்கள் கைது செய்தோம். கைது செய்யப்பட்ட போது அவர் கான்குனில் இருந்தார்.

காவல்துறையின் சிறப்பு ஆணையர் (சிறப்புப் பிரிவு) எச்.ஜி.எஸ்.தலிவால் கூறும்போது, “கடந்த ஆண்டு உள்துறை அமைச்சரின் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தப்பியோடிய நபர்களைப் பின்தொடர்ந்து அவர்களை நீதியின் முன் நிறுத்த சிறப்புப் பிரிவு பணிக்கப்பட்டது. அதன்படி, டெல்லி காவல்துறை ஆணையரின் வழிகாட்டுதலின் கீழ், சிறப்புப் பிரிவு, வெளிநாடுகளில் உள்ளவர்களைக் கொண்டு செயல்படும் இந்தியாவில் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களில் வேலை செய்தது.

இதன் விளைவாக, கோகி கும்பலின் செயல்பாட்டுக் கட்டளை மற்றும் மோஸ்ட் வாண்டட் கேங்க்ஸ்டர் தீபக் பாக்ஸர், எஃப்.பி.ஐ, இன்டர்போல், மெக்சிகன் காவல்துறை மற்றும் தொடர்புடைய புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் கான்கனில் இருந்து கைது செய்யப்பட்டார். இது கடந்த சில மாதங்களில் 300க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளின் சிறப்பாக தேடுதல் பணிக்கு கிடைத்த வெற்றியாகும். இது பல நேர மண்டலங்களில் கண்டம் தாண்டிய முயற்சிகளை உள்ளடக்கியது. அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அனைவரும் துருக்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு உடனடியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, அவர் டெல்லிக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

300 போலீசார், 6 புலனாய்வு அமைப்புகள், 20 நாள் கண்காணிப்பு : கேங்க்ஸ்டர் தீபக்கை கைது செய்தது எப்படி? Image-141

எஃப்.பி.ஐ (FBI) இணைப்பு


டெல்லி காவல்துறையைப் பொறுத்தவரை, குற்றவாளிகளைப் பிடிக்க எஃப்.பி.ஐ (FBI) உடன் பணிபுரிவது இது முதல் முறை அல்ல. கடந்த டிசம்பரில், சிபிஐ (CBI) மற்றும் டெல்லி காவல்துறை எஃப்.பி.ஐ (FBI) க்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதாகக் கூறி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை, பெரும்பாலும் மூத்த குடிமக்களை, மில்லியன் கணக்கான டாலர்களை ஏமாற்றிய ஒரு பெரிய நாடுகடந்த ஊழலை முறியடிக்க உதவியது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், முக்கியமாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு, பிசிக்களில் தோன்றும் போலி பாப்-அப் விண்டோக்களை உருவாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சாதனங்கள் மால்வேர்/ஸ்பேம் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டதாக நினைத்து பாப்-அப்களில் தோன்றும் உதவி எண்களை தொடர்புகொள்வார்கள். குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவர்களை சிக்கலைச் சரிசெய்வதற்காக பணம் செலுத்தச் செய்வார். இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் 10 ஆண்டுகளாக அமெரிக்காவிலும் கனடாவிலும் 20,000 பேரை ஏமாற்றியதாக அமெரிக்க வழக்கறிஞர் பிலிப் ஆர் செல்லிங்கர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

சிறப்புப் பிரிவு, சிபிஐயுடன் இணைந்து, எஃப்.பி.ஐ.க்கு உதவியது மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவரை கைது செய்தது. மார்ச் மாதம், ஏஜென்சிகள் எஃப்.பி.ஐ-யை அணுகியபோது, அவர்களது அதிகாரிகள் செயல்முறையை துரிதப்படுத்தி, தீபக்கைப் பிடிக்க உதவினார்கள். தீபக் கைது செய்யப்பட்டதற்கு பதிலளித்த எஃப்.பி.ஐ (FBI), “புது டெல்லி மற்றும் மெக்சிகோ நகரத்தில் உள்ள எஃப்.பி.ஐ (FBI) சட்ட இணைப்பாளர் அலுவலகங்கள், தீபக் பாக்ஸர் என்றழைக்கப்படும் தீபக் பஹாலை கைது செய்ததில் நமது வெளிநாட்டு சகாக்களான டெல்லி சிறப்பு பிரிவு மற்றும் மெக்சிகன் இன்ஸ்டிடியூட்டோ நேஷனல் டி மைக்ரேசியன் ஆகியோருடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டதற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

எஃப்.பி.ஐ வெளிநாட்டு உறவுகளை மதிக்கிறது மற்றும் இந்த விஷயத்தில் எங்கள் சர்வதேச சட்ட அமலாக்க உறவினர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பிற்கு நன்றியுடன் உள்ளது, ஏனெனில் நீதிக்கான வலுவான உறுதிப்பாட்டை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் மற்றும் அந்தந்த குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்போம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸின்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக