புதிய பதிவுகள்
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
75 Posts - 46%
heezulia
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
70 Posts - 43%
mohamed nizamudeen
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
4 Posts - 2%
M. Priya
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
1 Post - 1%
eraeravi
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
1 Post - 1%
Kavithas
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
1 Post - 1%
சிவா
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
1 Post - 1%
bala_t
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
306 Posts - 43%
heezulia
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
6 Posts - 1%
prajai
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
4 Posts - 1%
manikavi
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு


   
   

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 03, 2023 1:34 pm

First topic message reminder :

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 6 Healthy-food

விழிப்புணர்வு என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிற இதுமாதிரியான செய்திகளில் பெரும்பாலானவை கற்பனையாகவும் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன



தலைப்பைப் பார்த்தவுடன், ‘இதைத்தான் தினம்தினம் வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும் பார்க்கிறோமே... நீங்க என்ன புதுசாச் சொல்லப்போறீங்க’ என்று நீங்கள் கேட்கலாம்.

* இந்த உணவைச் சாப்பிட்டால் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் சீராகும்!

* இதை எங்கே பார்த்தாலும் உடனடியாக வாங்கிச் சாப்பிடுங்கள்... உங்கள் வம்சத்துக்கே சர்க்கரை நோய் வராது!

* இந்த நான்கையும் அரைத்துச் சாப்பிட்டால் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம், இதய பலவீனம் எல்லாமே சரியாகிவிடும்!

* இறைவனின் அரிய படைப்பான இந்த விதையை மட்டும் அரைத்துச் சாப்பிட்டால் 48 மணி நேரத்தில் புற்றுநோய் குணமாகிவிடும்!

வாட்ஸப்பைத் திறந்தாலே இப்படியான செய்திகள் வந்து கொட்டுகின்றன. எதையுமே யோசிக்காமல் இதையெல்லாம் பத்து குரூப்களுக்கு ஃபார்வர்டு செய்துவிட்டு, ஏதோ பெரும் சேவை செய்ததாகத் திருப்தி அடையும் வாட்ஸப் டாக்டர்கள் அதிகம் உண்டு நம்மிடையே!

உணவு பற்றிக் காலம் காலமாகப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். இன்று யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு இளைஞர்கள் சவர்மா, பக்லாவா பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்றால், சங்க காலக் கவிஞர்கள் ஊன்சோறு எனப்படும் பிரியாணி வரைகூட நிறைய பாடியிருக்கிறார்கள். திருவள்ளுவர்கூட, ‘சரியான உணவைச் சாப்பிட்டால் உடலுக்கு மருந்தே தேவையில்லை’ என்று சொல்கிறார். உடல் ஆரோக்கியமாக இயங்கவும், மனம் உற்சாகமாகச் செயல்படவும் உணவே அடிப்படையாக இருப்பதால்தான் அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை உணவு பற்றிப் பேசிக்கொண்டேயிருக்கிறோம். சமீப காலங்களில் அடுத்தடுத்து வந்து தாக்குகிற வைரஸ் நோய்களில் இருந்து மீளவும் தற்காத்துக்கொள்ளவும் ஆயுதமாகவும் கேடயமாகவும் இருக்கிறது உணவு. அதனால்தான் வாட்ஸப்பிலும் சமூக ஊடகங்களிலும் வருகிற உணவு பற்றிய செய்திகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே நம்புகிறோம்.

பிரச்னை என்னவென்றால், விழிப்புணர்வு என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிற இதுமாதிரியான செய்திகளில் பெரும்பாலானவை கற்பனையாகவும் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன. அதுபற்றி விழிப்புணர்வு ஊட்டுவதற்காகத்தான் இந்தத் தொடர்.

புதிது புதிதாக உணவுப்பொருள்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் கிரீன் டீ; இன்னொரு பக்கம் நாம் பார்த்தும் சுவைத்தும் அறிந்திராத வண்ண வண்ணப் பழங்கள்; வெளிநாடுகளிருந்து வந்திறங்கும் ஓட்ஸ், பெனோவா, கிரனோலா போன்ற பேக்கிங் உணவுகள்; புரோட்டீன் பவுடர்கள், வைட்டமின் மாத்திரைகள் என உணவு, உணவு சார்ந்த பொருள்கள் சந்தைகளில் விதவிதமாகக் குவிகின்றன. இவற்றைப் பற்றி வசீகரமாகவும், ஆரோக்கியம் பற்றிய ஆசை அல்லது அச்சத்தைத் தூண்டும் விதத்திலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இன்னொரு தரப்பினர், மரபு சார்ந்த நம் பாரம்பர்ய உணவுகளைத் தேடிச்சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களும், ‘இந்த உணவில் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறது’, ‘இந்த உணவைச் சாப்பிட்டால் இந்த நோயெல்லாம் வராது’ என்றெல்லாம் சொல்கிறார்கள்.

ஒருபக்கம் நவீன உணவுகள், இன்னொரு பக்கம் பாரம்பர்ய உணவுகள்... இவற்றைப் பற்றி வெளிவரும் செய்திகள் உண்மைதானா என்று அறிவியல்பூர்வமாக அலசி ஆராய்வதும் இந்தத் தொடரின் நோக்கம்.

‘டாக்டர், சரியோ தவறோ... எல்லாமே உணவுகள்தானே! அவற்றைச் சாப்பிடுவதால் என்ன பாதிப்பு வரப்போகிறது’ என்று நீங்கள் கேட்கலாம். ஓர் உணவு ஒரு நோய்க்கு மருந்தாகும் என்ற நம்பிக்கையில், அது மருந்தாக இல்லாவிட்டாலும்கூட சாப்பிடுவதால் எந்த பாதிப்புமில்லைதான். பிரச்னை எங்கேயென்றால், ஒரு நோய் இருக்கிறது. அதற்காக மருந்து சாப்பிடும் ஒருவர், அந்த மருந்தையே கைவிட்டுவிட்டு இந்த உணவுக்கு மாறுவது கண்டிப்பாக உடலியக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மலை விளிம்பில் தொங்கியபடி உயிர்ப் போராட்டம் நடத்தும் ஒருவர், வலுவான கிளையை விட்டுவிட்டு செடியைப் பிடித்துக்கொண்டு தப்பிக்க நினைப்பது போன்ற அபத்தம் இது!

நம் உடல் பற்றிய கற்பிதங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. அதற்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். கூடுதலாக ஒரு உணவை எடுத்துக்கொண்டால் நோய் குணமாகிவிடும் என்று நம்புகிறார். அதற்காக புதிய உணவுப்பழக்கத்துக்கு மாறுகிறார் என்றால் பெரிய பாதிப்பு இல்லை.

தீவிரமான இதய நோய் இருக்கும் ஒருவர், வாட்ஸப்பில் ‘இந்த உணவைச் சாப்பிட்டால் இதய நோய் குணமாகிவிடும்’ என்று ஒரு தகவலைப் பார்க்கிறார். அதுகுறித்த உண்மைத்தன்மையை ஆராயாமல் நோய்க்கு இதுவரை எடுத்து வந்த சிகிச்சையை நிறுத்திவிட்டு வாட்ஸப்பில் வந்த பரிந்துரையைப் பார்த்துப் புதிய உணவு அல்லது டயட்டுக்கு மாறுகிறார் என்றால், அவர் விபரீதமான பாதையில் செல்கிறார் என்று அர்த்தம். ஒருவேளை, அந்த உணவோ டயட்டோ அந்த நோயைக் குணமாக்கும் தன்மை கொண்டிருந்தால் பிரச்னையில்லை. அவை அந்த நோய்க்கு பலனளிக்காமல்போனால் அவரது இதயநோய் தீவிரமாகலாம். இறப்புகூட நேரலாம்.

சிலர், தான் கேள்விப்பட்ட, படித்த செய்திகளை எல்லாம் மற்றவர்களுக்குப் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். உறுதியாக நோய் குணமாகும் என்று சில உதாரணங்களையெல்லாம் சொல்லி மற்றவர்களின் உணவுப்பழக்கத்தை மாற்றிவிடுவார்கள். எதையும் தன்னளவில் பரிசீலித்துப் பார்க்காமல் மற்றவர்களுக்கு அள்ளிவிடுவார்கள். இந்த மூன்றாவது வகையினர்தான் இருப்பதிலேயே ஆபத்தானவர்கள். இது மிகப்பெரிய சமூகப் பிரச்னை.

உதாரணத்துக்கு நாட்டுச் சர்க்கரையை எடுத்துக்கொள்ளலாம். ‘வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோய் வருகிறது. அதை முற்றிலும் தவிர்த்துவிட்டு நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்துங்கள். நாட்டுச்சர்க்கரை எவ்வளவு சாப்பிட்டாலும் எதுவும் ஆகாது. ஐந்து டீஸ்பூன் போட்டு டீ குடிக்கலாம்’ என்று ஒரு கருத்து நம் மக்கள் மத்தியில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

வெள்ளைச் சர்க்கரை கொஞ்சம் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுகிறது; நாட்டுச் சர்க்கரை சற்று இயற்கையானது என்பதைத்தவிர, சுக்ரோஸ் என்று சொல்லப்படுகிற மூலக்கூறு இரண்டிலும் ஒரேயளவுதான் இருக்கிறது. பாலீஷ் செய்யப்படுவதுதான் வித்தியாசம். ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுவதால் வெள்ளைச் சர்க்கரை 100 சதவிகிதம் கெடுதல் என்றால் நாட்டுச் சர்க்கரை 90 சதவிகிதம் கெடுதல். இதுதான் உண்மை.

இதுமாதிரி பல உணவுப்பொருள்கள் பற்றி மக்கள் மத்தியில் தவறான நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உணவையே மருந்தாக நினைக்கும் மனநிலை அதிகரித்து வரும் இந்தத் தருணத்தில் இதைப் பற்றிப் பேசியாக வேண்டும்.

நம் உணவு வரலாற்றைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால், இப்போது பயிற்றுவிக்கப்படுகிற உணவுப்பழக்கங்கள், நம்பிக்கைகள், டயட்கள் எல்லாம் எவ்வளவு அபத்தமானவை என்பது தெரியவரும். உணவு என்பது, உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்துக்கான சக்திக்கும் உதவும் பொருள். அவ்வளவுதான்.

கற்கால மனிதர்களுக்கு உணவு என்பது ஆடம்பரம். தினம் தினமெல்லாம் அவர்களுக்கு உணவு கிடைக்காது. காட்டுக்குப் போய் உயிரைப் பணயம் வைத்து வேட்டையாடினால்தான் உணவு. அல்லது விலங்குகள் நடமாடும் காட்டில் கிழங்குகள், பழங்களைத் தேடித் திரிந்து பறித்துவந்து சாப்பிட வேண்டும். ஒவ்வொரு நாளும் தேடல்தான். அன்று உணவு கிடைக்கவில்லையென்றால் பட்டினி. ‘இந்த உணவு விஷம்; இந்த உணவைச் சாப்பிட்டால் உயிர் போகாது’ என்ற அளவில்தான் அவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. உணவுக்கான தேடல்தான் மனிதர்களை நாகரிகமடையச் செய்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்கள் வேளாண்மையைக் கண்டறிந்தார்கள். ஆற்றங்கரையோரங்களில்தான் அறிந்த உணவுகளைத் தன் தேவைக்கு விளைவித்துக்கொண்டார்கள்.

இப்போது உணவில் நமக்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. தமிழ்நாட்டின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு, வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிட முடிகிறது. உணவுப் பொருள்கள் பதப்படுத்தப்பட்டு கப்பலில் வந்திறங்குகின்றன. உலகத்தின் வகைவகையான உணவுகள் நம் வீட்டுக்கு அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக்கிங் செய்யப்பட்டுக் கிடைக்கின்றன.

அடித்தட்டு மக்கள் முதல் ஆடி காரில் பயணிப்போர் வரை எல்லோருமே உணவு விஷயத்தில் தேடல் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் தேர்வு செய்ய இங்கே விதவிதமான உணவுகள் இருக்கின்றன. யூடியூபில் வரும் வீடியோக்கள் தினம் தினம் புதுப்புது உணவுகளை அறிமுகம் செய்கின்றன. இந்தச் சூழலில் உணவு குறித்த சரியான விழிப்புணர்வு ரொம்பவே முக்கியம்.

இன்னொரு பக்கம், ‘இதெல்லாம் நம் பாரம்பரிய உணவுகள். இதைச் சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் பலசாலிகளாக இருந்தார்கள்’ என்றெல்லாம் சொல்லப்பட்டுப் பரிந்துரைக்கப்படும் பல உணவுகள் எளிய மக்கள் வாங்கமுடியாத விலையில் இருக்கின்றன.

உணவு என்பது தனி மனிதர்களின் பொருளாதாரத்தை மட்டுமன்றி, தேசத்தின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறது. புதிதாக ஒரு சமையல் எண்ணெய் அறிமுகமாகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘அது இந்த இந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாகும், இதயத்தைப் பாதுகாக்கும்’ என்றெல்லாம் விளம்பரம் செய்யப்படுகிறது. அதனால் மக்கள் அதைத் தேடி வாங்குகிறார்கள். ஆனால், அந்த எண்ணெய் தயாரிப்பதற்கான விதை இந்தியாவில் விளைவதில்லை என்றால் இன்னொரு நாட்டிலிருந்து அதை இறக்குமதி செய்யவேண்டியிருக்கும். நம் நாட்டில் கிடைக்கும் வளங்களையெல்லாம் விட்டுவிட்டு வெளிநாட்டில் இருந்து வாங்கிப் பயன்படுத்துவதால் நம்மூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவது ஒரு பக்கம். அந்நியச் செலாவணி இழப்பு இன்னொரு பெரிய பாதிப்பு.

இந்தியாவில் 135 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும். அதற்கான உணவுச்சந்தை என்பது பிரமாண்டமானது. அதேபோல உணவைச் சார்ந்த மருத்துவச் சந்தையும் மிகப்பெரியது. உணவுக்குப் பின்னால் மிகப்பெரிய வணிகமும் சர்வதேச அளவிலான அரசியலும் இருக்கிறது. அதனால் உணவைப்பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

‘ட்ரெயிலர் எல்லாம் ஓகே... படம், பார்க்கும்படி இருக்குமா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் இந்தத் தொடரில் எதையெல்லாம் பேசப்போகிறோம் என்பதை இந்த இடத்திலேயே சொல்லிவிடுகிறேன். இது நல்லது, இது கெட்டது, இது ஆரோக்கியமானது என்று எதையும் ஒற்றை வரியில் உங்களுக்குப் பரிந்துரைக்கப் போவதில்லை. உணவு குறித்த நம்பிக்கைகள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

சர்க்கரை நோய் ஏன் சிலருக்கு வருகிறது; ஏன் சிலருக்கு வருவதில்லை; அந்த நோயின் உண்மையான இயல்பு என்ன; எந்தெந்த உணவில் சர்க்கரை நோய்க்கான ஊக்கிகள் அதிக அளவில் இருக்கின்றன; எவற்றையெல்லாம் குறைவாக உட்கொண்டால் சர்க்கரையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்?

புதிது புதிதாக உப்புகள் அறிமுகமாகின்றன. பொதுவாக உப்பில் என்னதான் இருக்கிறது?

எண்ணெய்களில் என்ன இருக்கிறது; அவற்றை உட்கொள்வதால் என்ன பயன்; என்ன இழப்பு?

இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப்பொருள்களையும் பகுத்தறியப்போகிறோம். நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்த புரட்டுகளையும்கூட நாம் பேசலாம். உணவின் அறிவியலை மட்டுமல்ல, வரலாறு, புவியியல், கணிதம், அரசியல் என எல்லாவற்றையும் பேசுவோம்.

ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் அருண்குமார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். குழந்தைகள் நலன், வாழ்வியல் நோய்கள், உணவுப்பழக்கங்கள் குறித்து சர்வதேச இதழ்களில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். இயல்பிலே உணவு குறித்துத் தேடல் கொண்ட இவர், உடல் பருமன், சர்க்கரை, அதீத ரத்தக் கொழுப்பு, குழந்தையின்மை போன்ற நோய்களை உணவுமுறை மூலமாகவே கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கிவருகிறார். சர்வதேச அளவில் உணவு அறிவியல், அரசியல் குறித்து மருத்துவர்களுக்கான பல்வேறு மாநாடுகளில் உரையாற்றியுள்ள இவர், பொதுவெளியில் இருக்கும் உணவு பற்றிய தவறான நம்பிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்.


விகடன்


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:08 am

நம் எலும்புகள் கற்களைப் போல உறுதியாக இருந்தாலும், அதிலும் சுமார் 30% தண்ணீரே நிறைந்திருக்கிறது. எதற்காக எலும்புகளில் தண்ணீர் என்ற சந்தேகம் வரக்கூடும்

குளிர்ச்சி பற்றி கடந்த வாரம் பேசியபோது தண்ணீரின் மகத்துவம் குறித்துப் பல விஷயங்களை அலசினோம். அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கக்கூடிய பொதுவான விஷயம், தண்ணீர் குடிப்பது. தண்ணீர் குடிப்பதைப் பற்றி நிறைய காணொலிகள், கட்டுரைகள், செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

‘நீங்கள் தண்ணீர் குடிப்பதில் என்னென்ன தவறுகளைச் செய்கிறீர்கள்?', ‘இந்த நோய்களுக்கெல்லாம் இப்படித் தண்ணீ்ர் குடிப்பதுதான் காரணம்' என நிறைய அறிவுரைகளை வீடியோக்களில் தோன்றும் மனிதர்கள் வாரி வழங்குவார்கள். அதையெல்லாம் பார்த்தால் தண்ணீரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்று தோன்றும். அதனால் தண்ணீரைப் பற்றியும், அதுகுறித்த மாயைகள் மற்றும் தவறான புரிதல்கள் பற்றியும் விரிவாகப் பேசவேண்டியுள்ளது.

அதற்கு முன்னர் சில அடிப்படையான விஷயங்களைப் பார்த்துவிடலாம். நம் உடலில் சுமார் 60% தண்ணீர் இருக்கிறது. 60 கிலோ எடையுள்ள ஒரு நபரின் உடலில் சுமார் 36 கிலோ அளவுக்குத் தண்ணீர் மட்டுமே இருக்கும். பெரியவர்களுக்குத்தான் இந்த அளவு. குழந்தைகளுக்கு இன்னும் அதிகம். ஒரு கைக்குழந்தையின் உடலில் சுமார் 75% தண்ணீர் மட்டுமே இருக்கும். அதாவது 10 கிலோ எடையுள்ள ஒரு கைக்குழந்தையின் உடலில் 7.5 கிலோ வெறும் தண்ணீர்தான். மீதமுள்ள தசைகள், எலும்புகள் வெறும் 2.5 கிலோதான். இந்த அளவுக்கு தண்ணீர் நம் உடலின் உயிர்நாடியாக விளங்குகிறது.

சரி, தண்ணீர் நம் உடலில் என்ன வடிவத்தில் எந்தப் பகுதிகளில் இருக்கிறது என்பதைப் பார்ப்போம். கோடானுகோடி செல்களால் ஆனதே நம் உடல். முன் சொன்ன 60% தண்ணீரில் 40% இந்த செல்களுக்கு உள்ளிருப்பவைதான். மீதமுள்ள 20% செல்களுக்கு வெளியே இருப்பவை. செல்களுக்கு வெளியே என்றால் நடுவேயும் இருக்கலாம், ரத்தக் குழாய்களுக்குள்ளும் இருக்கலாம். இவ்வளவுக்கு நம் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் நிறைந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், நம் உடல் உறுப்புகள் சில, 60 சதவிகிதத்திற்கும் மேல் தண்ணீரால் நிரம்பியிருக்கின்றன. உதாரணத்துக்கு, நம் நுரையீரல் 83% தண்ணீரால் ஆனது. சிறுநீரகத்தில் 79%, மூளையில் 73% தண்ணீரே இருக்கிறது. நம் கண்களின் எடையில் 95% தண்ணீர் மட்டுமே. இதேபோல நம் தசைகள், இதயம் ஆகியவற்றில் 75% தண்ணீர்தான்.

இன்னொரு ஆச்சர்யமூட்டும் விஷயமும் இருக்கிறது. அதாவது நம் எலும்புகள் கற்களைப் போல உறுதியாக இருந்தாலும், அதிலும் சுமார் 30% தண்ணீரே நிறைந்திருக்கிறது. எதற்காக எலும்புகளில் தண்ணீர் என்ற சந்தேகம் வரக்கூடும். நம் உடலின் மெட்டபாலிசம் அனைத்திலும், அதாவது நாம் சாப்பிடும் உணவு எரிசக்தியாவதில் தொடங்கி எல்லாப்பணிகளிலுமே தண்ணீர் மிகமுக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல நம் உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம் ஆகியவற்றுக்கும் தண்ணீர் அவசியம். நம் உடல் வெப்பநிலையை சரியான அளவில் பராமரிப்பது தண்ணீர்தான் என்று சென்ற வாரமே பார்த்தோம். எலும்புகளின் இடைப்பகுதியில் இருக்கும் தண்ணீர், வாகனங்களுக்கு ‘ஷாக் அப்சர்பர்' இருப்பதுபோல நம் உடலில் செயல்படும். உடலின் சில முக்கியப் படலங்கள், உதாரணத்திற்கு கண் விழிகள் முதலியவை நீர்ச்சத்தின் உதவியால்தான் செயல்படுகின்றன. அதேபோல நம் உடலிலிருந்து சிறுநீராக வெளியேறும் கழிவுகளுக்கும் தண்ணீரே உதவுகிறது. இப்படி உடலின் மிக முக்கியச் செயல்பாடுகள் அனைத்திலும் தண்ணீரின் பங்கு மிக முக்கியம்.

பலர் அறியாத இன்னொரு செய்தியும் உண்டு. நாம் குடிக்கும் தண்ணீர் மட்டுமே உடலுக்கு உதவுகிறது என்றில்லை. நம் உடலில் தண்ணீர் உருவாகவும் செய்யும். உணவு ஜீரணமாகும்போது அந்த உயிர் வேதியியல் பிராசஸில் சிறிதளவு தண்ணீரும் உருவாகிறது. அதை Endogenous water என்று சொல்வோம். இப்படிப் பல்வேறு வழிகளால் உடலுக்குள் வரும் தண்ணீர், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. இதன்மூலம் நம் உடலின் நீர்ச்சமநிலை சரியான அளவில் பார்த்துக் கொள்ளப்படுகிறது.

நாம் சரியான அளவு தண்ணீரை எடுத்துக் கொண்டால்தான் நம் உடலுக்குத் தேவையான அளவில் அது பராமரிக்கப்படும். காரணம், உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உயிரிழப்புகூட ஏற்படும். அதே நேரத்தில், நம் உடலில் நீரின் அளவு அதிகமானாலும் பிரச்னைதான். சிறுநீரக, இதய மற்றும் கல்லீரல் செயலிழப்பு முதலிய நோய்களில் தண்ணீர் அளவு உடலில் அதிகமாகி அதனால் பல பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. எனவே, உடலில் தண்ணீரைச் சமநிலையில் வைப்பது அவசியம்.

பொதுவாக, நாம் தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். ஒன்று, இரண்டு என்று எண்ணிக்கை வைத்துக் குடிப்பவர்களெல்லாம் உண்டு. இப்படி தண்ணீரை எண்ணிக்கை வைத்துக் குடிக்கத்தான் வேண்டுமா? சிலபேர் இன்னும் அதிகமாகக் குடிக்கிறார்களே... அது சரியா? இந்தக் கேள்விகளுக்கு விடைகாண, நம் உடலில் தண்ணீரின் அளவு எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:09 am


நம் உடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதை அறிய மூளையில் ஏகப்பட்ட மெக்கானிசங்கள் உண்டு. Osmoreceptor, Baroreceptor எனச் சொல்லப்படும் இவை நம் உடலில் நீர்ச்சத்து குறைந்தாலோ, அதிகரித்தாலோ சில சிக்னல்களை உருவாக்கும். தண்ணீரின் அளவு குறைந்தால் Antidiuretic ஹார்மோனைத் தூண்டிவிட்டு, சிறுநீரகத்திலிருந்து நீர் வெளியேறுவதைக் குறைக்கும். நம் தாகத்தை அதிகரிக்கச்செய்து நம்மைத் தண்ணீர் குடிக்கவைக்கும். இதை Self-Regulation என்று சொல்வோம். இதுவே, உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருந்தால் அதற்கு நேர்மாறான ஒரு செயல்பாடு உடலில் நடக்கும். கூடுதல் நீர்ச்சத்தைச் சிறுநீரில் வெளியேற்றி, தாகத்தையும் குறைக்கும். இதுபோன்ற செயல்பாடுகளைச் சில முக்கிய ஹார்மோன்கள் நிர்ணயிக்கின்றன. இவை நம் உடலில் தானாகவே நிகழ்கின்றன. உடலின் நீர்ச்சத்து அளவைப் பொறுத்து தாகத்தைக் கூட்டிக் குறைத்துத் தண்ணீர்த் தேவையை நம் உடலே பேலன்ஸ் செய்யும். வெயில் காலத்தில் அதிக தாகம் எடுப்பதும், குளிர்காலத்தில் குறைவான தாகம் எடுப்பதும் இதனால்தான். எனவே, உடலுக்குத் தேவையான தண்ணீரை அதுவே நிர்ணயித்துக்கொள்ளும். இத்தனை கிளாஸ் தண்ணீர்தான் வேண்டும் என்று அளந்து குடிப்பது அவசியமே இல்லை. மேலும், நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின்படி நமக்கு வேண்டிய தண்ணீரின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறும்.

எனவே, நீங்கள் கவனிக்க வேண்டியது ஒன்றை மட்டும்தான். உங்கள் சிறுநீர் நல்ல வெள்ளை நிறத்தில் அல்லது இள மஞ்சள் நிறத்தில் இருந்து உங்களுக்கு அதிக தாகம் எடுக்காமல் இருந்தால் உங்கள் உடலில் தேவையான நீர்ச்சத்து இருக்கிறது என்று அர்த்தம். அப்படி இல்லாமல், வெளியேறும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்தில் இருந்து, தாகமும் எடுத்துக்கொண்டே இருந்தால், நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம். எனவே, கணக்குப்போட்டுத் தண்ணீர் குடிக்கவேண்டிய அவசியமே இல்லை. ஒரு படி மேலே போய், இப்போது எலெக்ட்ரானிக் வாட்டர் பாட்டில் சந்தைக்கு வந்துவிட்டது. இந்த பாட்டிலை நம் ஸ்மார்ட் போனோடு இணைத்துவிட்டால் நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று கண்காணிக்கப்படும். அதாவது, ஒரு தவறான கான்செப்டைச் சரியாகப் பின்பற்ற எவ்வளவு காஸ்ட்லியான உபகரணங்கள் வந்திருக்கின்றன என்பதைப் பாருங்கள்.

இதைப்போல தண்ணீர் குறித்த இன்னொரு நம்பிக்கையையும் அலசிவிடுவோம். ‘சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காதீர்கள். ஜீரணம் என்பது உஷ்ண சக்தி, தண்ணீர் குளிர்ச்சி சக்தி. எனவே அந்த உஷ்ணத்தைக் குளிர்ச்சி அடக்கிவிடுகிறது' என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் ‘தண்ணீர் நிறைய குடித்தால் நம் வயிற்றில் இருக்கும் அமிலங்கள் நீர்த்துப் போய்விடும். அதனால் ஜீரணம் சரியாக நடக்காது' என்று சொல்கிறார்கள். லாஜிக்படி பார்த்தால் இது சரியானதுதானே என்று நமக்குத் தோன்றும். ஆனால் ஜீரணம் பற்றிய அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டு இந்த விஷயத்தை அணுகவேண்டும்.

உடலில் உணவானது பல்வேறு Enzyme-களால் ஜீரணம் செய்யப்படுகிறது. உணவை எச்சிலோடு சேர்த்து மெல்லத் தொடங்கும்போதே ஜீரணம் தொடங்கிவிடுகிறது. நம் எச்சிலில் இருக்கக்கூடிய Amylase முதலிய என்சைம்கள் அங்கேயே மாவுச்சத்தை உடைக்கத் தொடங்கிவிடுகின்றன. அதன்பிறகு நம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், Pepsin போன்ற முக்கிய என்சைம்களைத் தூண்டிவிட்டு ஜீரணத்திற்கு உதவி செய்யும். அந்த உணவு நம் வயிற்றில் 3-4 மணி நேரம் தங்கி இருக்கும். அதற்கு அடுத்தகட்டமாக நம் கணையத்திலிருந்து Amylase, lipase, trypsin போன்ற என்சைம்கள் சுரக்கும். அவையும் நம் ஜீரணத்துக்கு உதவிசெய்யும். அந்த அளவுக்கு ஜீரணமானது ஒரு காம்ப்ளெக்ஸ் செயல்பாடு. நாம் தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள அமிலங்கள் நீர்த்துப்போய்விடும் என்பது உண்மையல்ல. இதை ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள். நாம் குடிக்கும் தண்ணீர் வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறதா, ஜீரணத்தை மெதுவாக நடக்க வைக்கிறதா, வாந்தி பேதி போன்றவற்றை ஏற்படுத்துகிறதா என்றெல்லாம் ஆராய்ந்தபோது அனைத்திலும் இதற்கு எதிரான முடிவுகளே வந்துள்ளன. மாறாக, அதிக தண்ணீர் குடிப்பது நம் ஜீரணத்திற்கு உதவும் என்பதே மருத்துவ உண்மை. அதனால், உணவு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்டு முடித்த பிறகோ தேவையான அளவு தண்ணீரை தாராளமாகக் குடிக்கலாம். மேலும் நாம் சாப்பிடும் உணவுகளே பெரும்பாலும் நீர்ச் சத்துக்களால் ஆனதுதான். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே பிராதன உணவு. தாய்ப்பாலில் 85% தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இப்படி இருக்க, தண்ணீர் குடிப்பது நம் ஜீரணத்தை பாதிக்கும் என்று கூறுவது அறிவியலுக்குப் புறம்பானது. உணவு சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்காமல் விக்கி விக்கிக் கஷ்டப்படுவதற்கு பதிலாக, தேவையான அளவு தண்ணீரை தாராளமாகக் குடியுங்கள்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:09 am

இன்னொருபுறம், ‘நிறைய தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றிவிடும்' என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கலாம். இதைப் பின்பற்றி சிலர் தினமும் 5-6 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் நச்சுப்பொருளை வெளியேற்றும் என்பது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கான்செப்ட். நச்சுப்பொருளை வெளியேற்றுவதற்கென்று நம் உடல் சில வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதில் நம் கல்லீரல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நம் சிறுநீரகமும் இப்பணியை மேற்கொள்கிறது.

சிங்க் தொட்டியில் அடைப்பு இருந்தால் அதை நீக்குவதற்கு நிறைய தண்ணீரை ஊற்றிக் கழுவுவோம். அதுபோல நிறைய தண்ணீர் குடித்தால் உடலில் இருக்கும் கழிவுகள் அடித்துக்கொண்டு போய்விடும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், இந்தக் கழிவை நீக்குதல் என்பது Molecular லெவலில் நடக்கக்கூடிய ஒரு காம்ப்ளெக்ஸ் வேலை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் சிறுநீரகம் பாதிப்படைந்த ஒருவரால் அதிக அளவிலான தண்ணீரை பிராசஸ் செய்ய இயலாது. அவர் அதிக தண்ணீரைக் குடித்தால் அவருக்குப் பிரச்னைகள்தான் அதிகமாகும். இந்தப் பிரச்னைகள் இருப்பவர்கள் குறைவான தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் இதுதான். எனவே, தண்ணீரை அதிகமாகக் குடித்தால் நம் உடலிலிருந்து நச்சுப்பொருள் வெளியேறிவிடும் என்று நினைப்பது தவறு.

சில விஷயங்களுக்கு வேண்டுமானால் இக்கூற்று சரியானதாக இருக்கும். உதாரணத்திற்கு, சிறுநீரகக் கற்கள் இருப்பவர்களுக்கு Oxalate, கால்சியம் முதலிய உப்புகள் சிறுநீரில் இயற்கையாய் வெளியேறும். அதனால் கற்கள் உருவாகும். அவர்களுக்கு அந்த உப்பு படியாமல் இருக்க கூடுதலாகத் தண்ணீர் குடிக்கச் சொல்வோம். இதுபோன்ற ஒரு சில விஷயங்களில் மட்டும் தண்ணீர் அதிகமாகக் குடிப்பது நச்சுப்பொருள்களின் வெளியேற்றத்திற்கு உதவியாக இருக்குமே தவிர, இக்கூற்று எல்லோருக்கும் பொருந்தாது. எனவே, கஷ்டப்பட்டு இவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. தோராயமாக 2-3 லிட்டர், அதையும் கணக்குப் பார்க்காமல் குடித்தாலே போதுமானது.

அதேபோல, நார்மலாக இருப்பவர்கள் 7-8 லிட்டர் தண்ணீர் குடிப்பதைப் பார்க்கமுடிகிறது. இது Dilutional Hyponatremia என்ற பிரச்னைக்கு வித்திடும். அதாவது நிறைய தண்ணீர் குடிக்கையில் நம் உடலில் உள்ள உப்புச்சத்து குறையத் தொடங்கிவிடும். அதனால், நமக்குக் குழப்பமான மனநிலை தொடங்கி வலிப்பு வரைகூட ஏற்படலாம். அதேபோல நிறைய தண்ணீர் குடித்தால் முகம் பொலிவடையும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். நம் தோலின் ஆரோக்கியம், தோலில் சுரக்கக்கூடிய சுரப்பிகளின் செயல்பாடு, நாம் உட்கொள்ளும் நுண்சத்துகள், கிருமிகள் வராமல் தடுப்பது என முகப்பொலிவுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தண்ணீரால் பெரிய மாற்றம் ஏதும் நிகழாது. ஒருவேளை வெயில் காலங்களில் நீர்ச்சத்து குறைந்தால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தண்ணீர் தடுக்குமே தவிர மற்றபடி வேறெதுவும் கிடையாது.

தண்ணீர் பற்றி இன்னும் பல கேள்விகள், நம்பிக்கைகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஆதாரபூர்வமாக அறிவியல்பூர்வமாக பதிலைத் தேடுவோம்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:10 am

அதேபோல காலை எழுந் தவுடன் முதல் வேலையாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. இதிலும் பெரிய பயன்கள் இல்லை.

தண்ணீர் சார்ந்து அதிகம் கேட்கப்படும் இன்னும் இரு கேள்விகள்: வெயில் காலங்களில் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா? உணவு ஜீரணமாகும் செயல் பாடுகளின் வேகத்தை அது குறைக்குமா?

‘குளிர்ந்த நீர் நம் ஜீரணத்தைக் குறைப்ப தில்லை' என்பதே பதில். நாம் குடிக்கும் நீர் உணவுக்குழாய் மூலமாக இரைப்பைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களிலேயே அது நம் உடலின் வெப்பமான 37 டிகிரி செல்சியஸுக்கு மாறிவிடும். நாம் நினைப்பது போல அது 2-3 மணி நேரம் உடலில் அப்படியே இருந்து நம்மைக் குளிர வைக்காது. நாம் அதிகபட்சம் குடிப்பது 200 மி.லி. ஆனால் 60 கிலோ எடையுள்ள நபரின் உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு 36 கிலோ. எனவே இந்தக் குளிர்ந்த நீரால் ஜீரணம் குறையாது.

இந்தியா போன்ற நாடுகளில் குளிர்ந்த நீரைக் குடிப்பது, குளிர்ப்பிரதேசத்தில் வெந்நீர் குடிப்பதெல்லாம் பல காலமாகப் பின்பற்றப்படுவது தான். எனவே, ஃப்ரிட்ஜ் தண்ணீரை தாராளமாகக் குடிக்கலாம். ஆனால், மிகவும் குளிராக, அதாவது ஐஸ் போன்ற நிலையில் தண்ணீரைக் குடிப்பது பற்களில் பிரச்னை உள்ளவர்களுக்கு நல்லதல்ல.

சூடான தண்ணீரை அடிக்கடி குடித்தால் உடல் எடை குறையும் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். குளிர்ந்த நீரைக் குடித்தால் உடல் எடை கூடும் என்றும் சிலர் சொல்லக் கேட்டுள்ளேன். இவை யெல்லாம் உண்மை கிடையாது. உடல் பருமனைப் பற்றி அடுத்த சில வாரங்களில் விரிவாகப் பேசுவோம். அது ஒரு காம்ப்ளெக்ஸ் ப்ராசஸ். சூடான தண்ணீர் குடித்தால் நம் உடலின் கொழுப்பு அனைத்தும் கரைந்துவிடாது. இது ஒரு தவறான புரிதல். அதேபோல சாதாரண தண்ணீரை அதிகம் குடித்தாலும் உடல் எடை கூடும் என்று சிலர் நம்புகிறார்கள். ஜிம்களில் பயிற்சி செய்யும் சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று தண்ணீர்கூடக் குடிக்க மாட்டார்கள். அதற்குப் பெயர், எடைகுறைப்பு அல்ல, Dehydration. நீர்ச்சத்து குறைவதால் சிலருக்கு உடல் எடையும் குறையும். அது உண்மையான எடைகுறைப்பு கிடையாது. உண்மையைச் சொல்வ தென்றால், எடையைக் குறைக்க விரும்புவோர் நல்ல உணவுகளைச் சாப்பிட்டு, நன்கு உடற்பயிற்சிகள் செய்து, அதிக தண்ணீர் குடிப்பது நல்லது.

அதேபோல காலை எழுந் தவுடன் முதல் வேலையாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. இதிலும் பெரிய பயன்கள் இல்லை. சிலருக்கு எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது Gastro Colic Reflex-ஐ ஆக்டிவேட் செய்யும். இதனால் மலம் கழிக்கும் உணர்வு உண்டாகும். மற்றபடி நாம் குடிக்கும் தண்ணீர் நச்சுகளை உடனடியாக வெளியேற்றும் என்றெல்லாம் கிடையாது. நாம் தூங்கும் நேரத்தில் நம் உடலின் மெட்டபாலிசம் சற்று குறைவாக நடப்பதால் பகலில் உருவாகும் அளவுக்கு இரவில் சிறுநீர் உருவாகாது. அதனால் தான், காலை எழுந்தவுடன் கழிக்கும் சிறுநீர் அதிகம் மஞ்சளாகக் காணப்படும். இரவு முழுவதும் உடலை விட்டு நீர் வெளியேறாமல் இருந்ததே இதற்கான காரணம். இவையெல்லாம், இயற்கையாய் நடப்பதுதான். எனவே, இந்த 8 மணிநேரம் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் ஒன்றும் ஆகாது. நாம் வழக்கம் போல எழுந்து நம் வேலைகளைத் தொடங்கினால் போதுமானது. எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது தவறில்லை. ஆனால் அதைக் கஷ்டப்பட்டுப் பின்பற்ற வேண்டியதில்லை.

சிக்ஸ்பேக் போன்றவற்றை முயற்சி செய்பவர்கள் உடலில் உள்ள கொழுப்பின் சதவிகிதத்தை நன்கு குறைத்து தசைகள் அனைத்தும் கட்டுக் கட்டாகத் தெரிய போட்டிக்கு முன்தினம் தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இந்த Dehydration ஓர் ஆபத்தான முறை. இதனால் நிறைய பேருக்கு சிறுநீரக பாதிப்புகூட ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்தால் நிறைய வியர்வை வெளியேறும்; நீர் மற்றும் உப்புச்சத்துக் குறைபாடு உண்டாகும். எனவே, தண்ணீரையும், நீர்ச்சத்துள்ள உணவுகளையும் போதிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகளால் நம் கொழுப்புதான் குறைய வேண்டுமே தவிர, தண்ணீரின் அளவைக் குறைத்துவிட்டு உடல் எடை குறைந்துவிட்டது என்று சொல்வது மிகவும் தவறான எண்ணம்.

இன்று தண்ணீர் என்றால் RO தண்ணீர்தான் என்றாகி விட்டது. முன்பெல்லாம் மண்ணின் தன்மைக்கேற்ப ஊருக்கு ஒரு சுவையில் தண்ணீர் இருக்கும். இப்போது எல்லா ஊர்களிலும் ஒரே சுவை. கேன் தண்ணீர்தான். மினரல் வாட்டர் என்று சொல்லப்படும் கேன் வாட்டர், பானைத் தண்ணீர், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர், ஃப்ரிட்ஜ் தண்ணீர், செம்புப் பாத்திரத் தண்ணீர்... இவற்றில் எது நல்லது?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:11 am


அந்தக்காலத்தில் வீட்டுக்குப் பின்புறம் அல்லது ஊருக்குப் பொதுவாகக் கிணறு இருக்கும். அந்தத் தண்ணீரைத்தான் குடித்தோம். வாய்க்கால், ஆறுகளில் இருந்தும் தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்தி னோம். நகரங்கள் விரிவானபோது கிணறுகள் தூர்ந்துபோயின. பிறகு ஆற்றுத் தண்ணீர் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது. இந்தத் தண்ணீரின் உப்புத்தன்மை குறைவாக இருந்தாலும், கிணற்று நீருடன் ஒப்பிட்டால் சுத்தம் குறைவாகத்தான் இருக்கும். எனவே, வாந்தி, பேதி, காலரா முதலிய நோய்களைத் தடுக்க நாம் எப்போதும் சொல்லும் அறிவுரை, ‘தண்ணீரை நன்கு காய்ச்சிய பிறகே குடிக்கவேண்டும்.'

காய்ச்சிக் குடிக்கவேண்டும் என்பதைப் பலரும் ‘சூடாகக் குடிக்கவேண்டும்' என்று நினைத்துக்கொள்கிறார்கள். அப்படி இல்லை. தண்ணீரில் உள்ள பாக்டீரியா, வைரஸை அழிக்க வேண்டுமென்றால் அதை நன்கு கொதிக்க வைக்கவேண்டும். கொதிநிலையிலே 10 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அதன்பின் அதைப் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் குடிக்கலாம். இருப்பதிலேயே சுத்தமான தண்ணீரை ‘கோல்டு ஸ்டாண்டர்டு’ என்று சொல்வோம். இந்த நன்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீர்தான் சிறந்தது.

RO தண்ணீர் எப்படி வந்தது? RO என்றால் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (Reverse Osmosis). அதாவது தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்கும் தொழில்நுட்பம். பெரிய தொழிற்சாலைகள் பலவற்றிலும் பிரமாண்ட இயந்திரங்கள் இருக்கும். அவர்களின் பயன்பாட்டுக்கு போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்படும். அந்தத் தண்ணீரின் உப்புத்தன்மை காரணமாக இயந்திரங்கள் பழுதாக வாய்ப்பிருக்கிறது. அந்த உப்புத்தன்மையை நீக்கக் கண்டுபிடிக்கப்பட்டதே RO தொழில்நுட்பம். மக்கள் அருந்துவதற்காக உருவானதல்ல.

ஆஸ்மாசிஸ் என்பது ஓர் அடிப்படை உயிரியல் பிராசஸ். அதாவது நம் ஒவ்வொரு செல்லிலும் நடக்கும் ஒரு விஷயம். செல் ஜவ்வுக்கு இருபுறமும் தண்ணீர் மற்றும் உப்புச்சத்துகள் இருக்கின்றன. உப்புச்சத்து குறைவாக இருக்கும் பக்கத்திலிருந்து உப்புச்சத்து அதிகமாக உள்ள பக்கத்துக்கு அந்த ஜவ்வு வழியாகத் தண்ணீர் மட்டும் செல்லும். அதை ‘ஆஸ்மாசிஸ்' என்போம்.

ரிவர்ஸ் ஆஸ்மாசிஸில் ‘Semi permeable membrane’ என்ற ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். அதாவது சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை மட்டும் வெளியே விடக்கூடிய ஜவ்வு இது. இங்கு துளைகள் மிகச் சிறிய அளவில் இருக்கும். அதில் உப்புத் தண்ணீரை அதிக அழுத்தத்தில் செலுத்துகையில் உப்புகள் அனைத்தும் ஒருபுறம் தங்கிவிட்டு மீதமுள்ள சிறு Molecules மறுபுறம் வந்துவிடும். எனவேதான் போர் தண்ணீர் போன்ற அதிக உப்புத்தன்மையுடைய தண்ணீரை RO செய்தால் உப்புச்சத்து இல்லாத சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் கிடைக்கக்கூடிய தண்ணீரின் உண்மையான பெயர் ‘Demineralised water.’ அதாவது, உப்புச்சத்துகள் அனைத்தும் நீக்கப்பட்ட நீர். இது மிகவும் சுவையாக இருக்கும். தண்ணீரில் எவ்வளவுக்கு உப்புச்சத்து அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அதன் சுவை குறையும். நாம் சமையலுக்குப் பயன்படுத்துவதைப் போன்ற உப்பு வகைகள் தண்ணீரில் இருப்பதில்லை. கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகள் அதில் அதிகம் இருக்கும். இவைதான் தண்ணீருக்கான கனத்தன்மையை (Hardness) அளிக்கிறது. ஆற்று நீரில் சோப் போட்டால் நுரை வருவதற்கும், போர் தண்ணீரில் வராததற்குமான காரணம் இந்த கனத்தன்மைதான்.

RO செய்யப்பட்ட தண்ணீரை எதேச்சையாக ருசி பார்த்த ஒருவருக்கு, ‘இதை ஏன் நாம் குடிநீராகப் பயன்படுத்தக்கூடாது’ என்ற யோசனை வந்திருக்கிறது. அதன்பிறகு பாட்டிலில் அடைத்து மினரல் வாட்டர் என்று விற்கத் தொடங்குகிறார்கள். என்ன முரண் பாருங்கள், உப்புச்சத்து அனைத்தும் நீக்கப்பட்ட Demineralised தண்ணீர்தான் இங்கே ‘மினரல் வாட்டர்' என்ற பெயரில் விற்கப்படுகிறது. மக்களும் இதில் நிறைய சத்துகள் இருக்கின்றதென்று நம்பி வாங்கி அருந்துகிறார்கள்.

தண்ணீரில் உப்புச்சத்து அதிகரிப்பு, தொற்று நோய்கள் பரவல் போன்றவை காரணமாக மினரல் வாட்டரின் பயன்பாடு அதிகரித்து, அதைத் தயாரிக்கப் பெரும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. தற்போது நாம் சர்வசாதாரணமாக வீடுகளில் வாங்கிப் பயன்படுத்துகிற கேன் வாட்டரும் RO செய்யப்பட்டதுதான். நம்மில் பலர் வீடுகளில்கூட RO மெஷின் அமைத்திருக்கிறோம்.

சரி, சுவை தாண்டி இதில் என்னென்ன பயன்கள் இருக்கின்றன என்பதையும் பார்த்துவிடுவோம். இந்த RO முறைக்கு கிருமிகளை நீக்கக்கூடிய தன்மை இருக்கிறது. அதன் Membrane சரியாக இருக்கும் பட்சத்தில் 99.99 சதவிகித பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க் கிருமிகளை நீக்கிவிடுவதாகச் சொல்கிறார்கள். சுவையாகவும் சுத்தமாகவும் இருக்கிறது என்பதால் இதைக் குடிக்கலாம் என்று மக்கள் மனதில் ஆழமாய்ப் பதிந்துவிட்டது.

இத்தண்ணீரில் உப்புச்சத்து சிறிதும் இல்லாததால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? எலும்புச்சத்துக் குறைபாடு ஏற்படுமா, கிட்னியில் கல் வந்துவிடுமா, மாரடைப்பு வருமா எனப் பல கேள்விகள் இருக்கின்றன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:11 am


தண்ணீரில் உப்புச்சத்தின் அளவை அறிந்துகொள்வதற்கு Total Dissolved Solutes (TDS) என்ற அளவீட்டு எண்ணைப் பயன்படுத்துவோம். பொதுவாக போர் தண்ணீரின் TDS அளவு 500, 1000, 2000 என இருக்கும். RO தண்ணீரின் அளவு 50 என இருக்கும். அத்தண்ணீரை மேலும் சுத்திகரித்தால் TDS அளவு இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய ஆற்று நீர் 50-100 வரை இருக்கும். இதே கடல்நீரின் TDS 30,000-40,000 வரை இருக்கும். மழைநீரின் TDS அளவு 6-7 தான். TDS-ன் அளவு 50-க்குக் கீழிருக்கும் தண்ணீரை தினசரி குடிப்பது நல்லதல்ல. ஆற்று நீரின் TDS அளவுக்கு இணையான தண்ணீரை RO அளிக்குமானால் அதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். அதன் அமிலத்தன்மையும் குறைவாக இருக்கும். உப்புச்சத்துகளும் மிகச்சிறிய அளவில் இருக்கும்.

இந்த Demineralised தண்ணீர் குறித்து உலக சுகாதார நிறுவனம் 1970-80-களில் இருந்தே ஆராய்ச்சி செய்துவருகிறது. 2005-ம் ஆண்டில் ‘Nutrients in Drinking water’ என்ற பெயரில் ஓர் புகழ்பெற்ற ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள். அதில், Demineralised தண்ணீர் குறித்த நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஓரளவுக்கு உப்புச்சத்தைக் கொண்ட தண்ணீரைக் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு குறைவாக ஏற்படுகிறது என்றும் உப்புச்சத்து நீக்கிய இந்த நீரைக் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது என்றும் இதில் சொல்லப்பட்டது. மேலும், குழந்தைகளுக்கு எலும்புகள் பலவீனம் அடைந்து அதனால் எளிதில் எலும்புமுறிவு ஏற்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டது. ஒட்டுமொத்தமாக RO தண்ணீரால் நம் உடலில் உப்புச்சத்துக் குறைபாடு ஏற்படலாம் என்று ஆய்வு முடிவுகள் கூறின.

மாரடைப்பு குறித்தான இம்முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மெக்னீசியம் சத்துகள் நாம் குடிக்கும் தண்ணீரில் குறைந்து ரத்தத்திலும் குறைந்தால் Atherosclerosis ஏற்பட்டு ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் என்பதுதான் இந்த ஆய்வு சொல்லும் தியரி. காலங்காலமாக TDS குறைவாக உள்ள ஆற்று நீரைத்தான் நாம் பயன்படுத்திவருகிறோம். மேற்சொன்ன காரணத்தால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்றால் அப்போதிலிருந்தே மாரடைப்பு அதிகமாக இருக்க வேண்டுமல்லவா? இது தவிர உப்புச்சத்துக் குறைபாடு ஏற்படுதல் மற்றும் குழந்தைகளின் எலும்பு பலவீனமாதல் ஆகியவையும் நிரூபிக்கப்படவில்லை. காரணம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகள் நாம் குடிக்கும் தண்ணீரில் இருக்கும் அளவைவிடப் பல மடங்கு நாம் சாப்பிடும் உணவு வழியாகக் கிடைக்கின்றன. எனவே உப்புச்சத்து இல்லாத தண்ணீரைக் குடித்தால் உடலில் உப்புச்சத்துக் குறைபாடு ஏற்படும் என்பது அறிவியலுக்கு சற்று அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.

2017-ம் ஆண்டு ‘Guidelines for Drinking Water Quality’ என்ற பெயரில் மற்றுமொரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம். அதில் TDS-ன் அளவு 50-க்கு மேல் இருக்கும்பட்சத்தில் Demineralised தண்ணீரை எடுத்துக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தது. முன் சொன்ன குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்க முடியவில்லை என்றும் கூறியது.

தற்போது TDS அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய RO யூனிட்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இவை தண்ணீரின் TDS அளவை 100-150 வரை பார்த்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது, RO யூனிட்களைப் பராமரிப்பது மிகவும் அவசியம். சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் கிருமிகள் நீங்காமல் இருக்கக்கூடும். UV எனப்படும் ultraviolet சுத்திகரிப்பு முறை இந்த RO யூனிட்களில் இருந்தால் இன்னும் நல்லது. மேற்சொன்னவற்றை சரியாகப் பின்பற்றினால் RO தண்ணீரை தாராளமாகக் குடிக்கலாம். வீடுகளில் பயன்படு்த்தும் கேன் வாட்டர்கள் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறது என்பது தெரியாது. நம்பகமான இடங்களில் வாங்குங்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கார்ப்பரேஷன் குடிநீர். அதை நன்கு காய்ச்சிக் குடித்தால் எந்தப் பிரச்னையும் இல்லை.

சரி, தண்ணீரை சுத்தம் செய்தாயிற்று, அதை எதில் வைத்துப் பயன்படுத்துவது? அந்தக்காலத்தில் பானையில் சேமித்துத் தண்ணீரை உபயோகித்தோம். பின்னர் செம்பு, எவர்சில்வர், பித்தளைப் பாத்திரங்களில் வைத்துப் பயன்படுத்தினோம். தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களைப் பெருமளவு பயன்படுத்திவருகிறோம்.

பானைத் தண்ணீர் நல்லது. ஆனால், தண்ணீரைப் பானையில் வைத்துக் குடித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. எவர்சில்வர் என்று சொல்லக்கூடிய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. மிகவும் நல்லது என்று சொல்லப்படும் செம்புப் பாத்திரங்கள் குறித்து இரண்டு விஷயங்கள் உண்டு. அதில் தண்ணீரை சேமித்துக் குடிக்கையில் அச்செம்பு தண்ணீரில் கலந்து நமக்குச் சில நல்ல விஷயங்களைக் கொடுக்கிறது என்று சொல்லப்படுகிறது. இது உண்மையில்லை. காரணம், அத்தனை எளிதில் பாத்திரத்திலிருந்து தண்ணீரில் கலக்கும் தன்மை செம்புக்குக் கிடையாது. இரண்டாவது, செம்புத் தட்டுப்பாடு என்ற ஒன்று நமக்கு இயற்கையிலேயே கிடையாது. நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் கிடைக்கக்கூடிய ஓர் உப்புச்சத்து அது. எனவே, செம்புப்பானைகள் மற்றும் பாட்டில்கள் மூலமாகத்தான் அச்சத்து நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதில்லை.

ஆனால், Direct Oxidising effect, Direct Antibacterial effect போன்ற சில நல்ல குணங்களும் செம்புக்கு உண்டு. அதாவது, செம்பின் மீது வேறொரு பொருள் படும்போது அங்கு எளிதில் கிருமிகள் உருவாகாது. அல்லது கிருமிகள் இருப்பினும் அதை அழிக்கக்கூடிய தன்மை செம்புக்கு இருக்கிறது. அதனால்தான், முக்கிய ஆய்வகங்களில் உள்ள கைப்பிடிகள் செம்பால் செய்யப்பட்டிருக்கும். இதைக் காரணமாக வைத்துதான் தண்ணீரை செம்பில் வைத்துப் பயன்படுத்தும்போது கிருமிகள் அழிக்கப்படும் என்கிறார்கள். ஆனால், செம்பு எந்த அளவுக்குக் கிருமிகளை அழிக்கும் என்பது குறித்தும் எந்த ஆராய்ச்சி ரீதியான நிரூபணமும் இல்லை. அசுத்தமான தண்ணீரைக் கொதிக்க வைத்து அல்லது UV ஃபில்டரேஷன் மூலம் சுத்தப்படுத்தும் அளவுக்குச் செம்பினால் முடியுமா என்றால் நிச்சயம் இல்லை. சிறிய அளவில் உருவாகும் கிருமிகளை வேண்டுமானால் அழிக்கும் தன்மை அதற்கு இருக்கலாம். ஆனால் மிகைப்படுத்திக் கூறும் அளவுக்கு அது பெரிய விஷயம் கிடையாது. அதேநேரத்தில், விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

அடுத்து, பிளாஸ்டிக் பாட்டில்கள். இவற்றைப் பொறுத்தவரையில் 1, 2, 3, 4 போன்ற Grading இருக்கிறது. அதில் டைப்-1 என்று சொல்லப்படுகிற PET பாட்டில்களைப் பயன்படுத்துவது பிரச்னை இல்லை. சில பாட்டில்கள் ஒருதடவை மட்டுமே பயன்படுத்த உகந்தவை. உதாரணத்துக்கு ரயில் நிலையங்களில் விற்கப்படுகிறதல்லவா... அவற்றை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். HDPE என்று சொல்லப்படும் Grade-2 பாட்டில்களை நாம் வீட்டு உபயோகத்துக்குக்கூடப் பயன்படுத்தலாம். அதில் எந்தக் கெடுதலும் கிடையாது. அதேநேரத்தில், மிக சூடான தண்ணீரை இந்த HDPE பாட்டிலில் ஊற்றக்கூடாது. சூடான தண்ணீர்பட்டால் ஆவியாகும் தன்மையை அப்பிளாஸ்டிக் கொண்டிருப்பதால் அதை முழுவதுமாகத் தவிர்ப்பது நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:12 am

தண்ணீர் பற்றி நிறைய அலசிவிட்டோம். ‘காற்று, தண்ணீருக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு மிக முக்கியத் தேவை உப்பு' என்று மகாத்மா காந்தியே ஒருமுறை கூறியிருக்கிறார். இப்போது உப்பைப் பற்றிப் பார்த்துவிடலாம். இவ்வுலகில் மனிதன் கண்டறிந்த முதல் சுவை, அனேகமாக உப்பாகத்தான் இருக்கும். மனிதன் பல கண்டங்கள் தாண்டிப் புதிய நிலங்களைத் தேடிச் சென்றதற்குத் தங்கமும் உப்புமே முக்கிய காரணம். சில இடங்களில் தங்கத்துக்கு இணையாக உப்பு பரிமாறிக்கொள்ளப்பட்ட வரலாறும் உண்டு.

அதேநேரத்தில் மருத்துவ உலகில் உப்பு பற்றி நிறைய தவறான எண்ணங்கள் இருக்கின்றன. மருத்துவர் ஒரு அர்த்தத்தில் சொல்வார், நோயாளி வேறு ஒரு அர்த்தத்தில் புரிந்துகொள்வார். அதேபோல பெரும்பாலான நோய்களை உப்போடு சம்பந்தப்படுத்துவார்கள். அரிப்பு வந்தால் உடலில் உப்பு அதிகமாகிவிட்டது; சிறுநீரகம் பாதிப்படைந்துவிட்டால் அதற்கு உப்புதான் காரணம்; அதேபோல மூட்டுவலி, முதுகுப் பிடிப்பு, ரத்த அழுத்தம் என அனைத்துக்கும் உப்புமீதுதான் பழி போடப்படுகிறது. இவை எந்த அளவு உண்மை?

முதலில் ஓர் அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, உப்பு என்று கூறியவுடன் நம் நினைவுக்கு வருவது நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் ‘டேபிள் சால்ட்’ (சோடியம் குளோரைடு). ஆனால் வேதியியலில் பல பொருள்கள் உப்பின்கீழ்தான் வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணத்துக்கு, சிறுநீரகச் செயலிழப்பின்போது நம் ரத்தத்தில் அதிகமாகும் யூரியா, கிரியாடினின் ஆகியவை உப்புக்களே. அதேபோல மூட்டு வலியின்போது ரத்தத்தில் அதிகம் இருப்பது, யூரிக் ஆசிட் எனும் உப்பு. தசைப்பிடிப்பு வந்தால் தட்டுப்பாடு ஏற்படுவது பொட்டாசியம் எனும் உப்பு. இப்படி ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு உப்பு வகை காரணமாக இருக்கையில், அனைத்துக்கும் காரணமாக சமையல் உப்பை நினைத்துக்கொண்டு அதைக் குறைக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம். இது அறியாமையால் செய்யும் செயல்.

உயர் ரத்த அழுத்தத்துக்காக சிகிச்சைக்குச் செல்லும்போது ‘உப்பைக் குறைக்க வேண்டும்' என்று மருத்துவர்கள் பொதுவாக அறிவுரை சொல்வார்கள். சிலர் ‘உப்பை அதிகம் சேர்த்துக்கொள்வதால்தான் ரத்த அழுத்தமே வருகிறது' என்றுகூட நினைக்கிறார்கள். அதேபோல உப்பு சாப்பிடுவதால்தான் இதயத்தில் பிரச்னை வருகிறது என்றும் சிலர் நம்புகிறார்கள்.

‘மனிதன் மட்டுமே தனியே உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறான்... விலங்குகள் உப்பில்லாமல்தானே உணவு உண்கின்றன’ என்பது ஓர் அடிப்படை வாதம். கடல் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் விலங்குகளுக்கு பெரிதாக உப்புப் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. அதேநேரத்தில் விலங்குண்ணிகளுக்கும் உப்புப் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. காரணம், பிற மிருகங்களைச் சாப்பிடும்போது அந்த இரையின் உடலில் இருக்கும் உப்பு இவ்விலங்குகளுக்கும் கிடைத்துவிடுகிறது. ஆனால் தாவர உண்ணிகளுக்கு உப்புப் பற்றாக்குறை உண்டு. வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு உப்புப் பற்றாக்குறை ஏற்படுகையில் உப்புக் கல்லைச் சாப்பிடத்தரும் வழக்கம்கூட இங்கு உண்டு. இதை Salt Lick என்று சொல்வார்கள். எனவே, மறைமுகமாக அவற்றுக்கும் உப்புச்சத்து தேவைதான். மேலும் சில எறும்பு வகைகளை ஆராய்ச்சி செய்து பார்க்கையில் இந்த உப்புப் பற்றாக்குறை காலத்தில் அவை விலங்குண்ணிகளாக மாறி மற்ற எறும்புகளைச் சாப்பிடும் நிலைகூட ஏற்படுகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே, விலங்குகளுக்கும் உப்பு மிக அவசியத் தேவை.

அவை எடுத்துக்கொள்ளும் உணவின் வழியாகவே அந்த உப்பு அவற்றுக்கு மறைமுகமாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால் மனிதனுக்கு, பேலியோலித்திக் காலத்தில் உணவில் உப்பு சேர்த்து சாப்பிடும் வழக்கம் கிடையாது. காரணம், அப்போது வேட்டையாடிச் சாப்பிடும் உணவிலிருந்தே அவர்களுக்கான உப்பு கிடைத்துவிட்டது. விவசாயம் செய்து, தாவர உணவை அதிகமாக சாப்பிடத் தொடங்கிய பின்புதான் தனியாக உப்பு சாப்பிடும் சூழ்நிலை உருவானது. அதனால்தான், பழைமையான ஆசியப் பழங்குடியினர் பேசும் மொழியில் உப்பு என்ற பொருளுக்கு வார்த்தையே கிடையாது. காரணம், அதை அவர்கள் பயன்படுத்தியதே கிடையாது. அதாவது விலங்குகளைப் போலவே, உப்பு அவர்களுக்குத் தனியாகத் தேவைப்பட வில்லை. ஆனால், சில பழங்குடிச் சமூகங்கள் உப்புக்காக விலங்குகளின் ரத்தத்தைக் குடிப்பது, அவற்றின் சிறுநீரைக் குடிப்பது என சில அதிர்ச்சியளிக்கும் பழக்கங்களைப் பின்பற்றியிருக்கிறார்கள்.

உப்பு சார்ந்து இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. சம்பளம் என்பதற்கான ஆங்கில சொல் ‘Salary.’ இந்த வார்த்தை Salarium என்ற சொல்லில் இருந்து வந்தது. அதன் உண்மையான பொருள் ‘Salt Money.’ ஏனென்றால் அக்காலத்தில் உப்பு மிகவும் மதிப்பு மிக்க விஷயமாகக் கருதப்பட்டது. உப்பு விற்பனையும் அது சார்ந்த வணிகமும் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. அதுமட்டுமல்லாமல், உப்புக்கு வரிபோட்டதுதான் பிரெஞ்சுப் புரட்சிக்கே காரணம். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி தொடங்கிய ஒத்துழையாமைப் போராட்டத்துக்கும் இதுதான் காரணம். எனவே, மனிதகுல வரலாற்றில் உப்புக்கு மிக முக்கிய இடம் உண்டு.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:12 am


வரலாற்றைத் தாண்டி இப்போது அறிவியலுக்குச் செல்வோம். நாம் உணவில் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு நம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது உண்மையா?

இந்தக் கேள்விக்கு விடைதேட சோடியம் மற்றும் குளோரைடு ஆகிய இரண்டின் பண்புகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். ‘நம் ரத்தத்தில் Osmolarity என்று சொல்லக்கூடிய ரத்தத்தின் அடர்த்தியை சீராக வைப்பதில் உப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால், ரத்தத்தில் சோடியம் அளவு அதிகரிக்கையில் அது நீரை ஈர்த்துக்கொள்ளும். அது நீரின் அளவை அதிகரித்து ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும்' என்று நம்பினார்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கையில் இதயம் துடிக்க சிரமப்பட்டு இதயக் கோளாறுக்கு வழிவகுக்கும். ‘நாம் தினசரி சோடியம் குளோரைடு உப்பை எடுத்துக் கொள்வதால் அது ரத்தத்தில் சோடியத்தின் அளவை அதிகரிக்கச்செய்யும். எனவே ரத்த அழுத்தம் மற்றும் இதயப் பிரச்னைகள் உள்ளவர்கள் குறைவான உப்பையே எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது.

1980-90களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளிலும் உப்புக்கும் ரத்த அழுத்தத்துக்கும் சிறிது சம்மந்தம் இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல், உப்பைக் குறைக்கும்போது ரத்த அழுத்தமும் சற்று குறைவது போன்ற முடிவுகளும் கிடைக்கப்பெற்றதால் அனைத்து மருத்துவக் கூட்டமைப்புகளும் சேர்ந்து, ‘உணவில் உப்பின் அளவைக் குறைக்கவேண்டும். அப்படிச் செய்தால் மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் குறைகிறது' என்றார்கள்.

இதன் அறிவியலை இன்னும் சிறிது ஆழமாகப் பார்ப்போம். நாம் சாப்பிடும் உப்பு நேரே ரத்தத்துக்குச் சென்று அங்கிருக்கும் தண்ணீரை ஈர்த்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வது கிடையாது. நம் ரத்தத்தில் சோடியத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு ‘Renin', ‘Aldosterone' போன்ற சில முக்கிய ஹார்மோன்கள் நம் சிறுநீரகத்தில் உண்டு. ரத்தத்தில் உப்பு அதிகரிக்கையில் இந்த ஹார்மோன்கள் வேலை செய்யத் தொடங்கி அதை நம் சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். ஒருவேளை, ரத்தத்தில் உப்பு குறைந்தாலும் இதே ஹார்மோன்கள் உதவியுடன் உப்பு வெளியேற்றத்தைக் குறைத்து பேலன்ஸ் செய்துவிடும். எனவே, நாம் நினைப்பதுபோல உப்பானது நேரே போய் நம் ரத்தத்தில் படிவது கிடையாது.

இதில், இரண்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். நான் நிறைய ஆராய்ச்சிகள் பற்றிக் கூறினேன். அதில் முக்கியமான ஆராய்ச்சி யாளர்களின் கூட்டமைப்பால் நிறுவப்பட்ட ஒன்று ‘Intersalt’ என்ற ஆராய்ச்சி. அந்த ஆராய்ச்சியில் இதுபற்றிய எந்த வலுவான முடிவுகளும் கிடைக்கவில்லை. இறுதி முடிவாக, உப்பைக் குறைப்பதால் சுமார் 4 பாயின்ட் வரை ரத்த அழுத்தம் குறைவதாக அவர்கள் கூறினர். இந்த முடிவுகள் ரத்த அழுத்தம் அதிகம் உள்ளோருக்கு மட்டுமே பொருந்தும். மேலும் cochrane review போன்ற பல்வேறு உயர்தர ஆராய்ச்சிகளும், ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் உப்பு எடுத்துக்கொள்வதை நன்கு குறைத்தால் 4 பாயின்ட் வரை குறைவதாகக் கூறுகின்றன. ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும் மக்கள் உப்பின் அளவைக் குறைத்தால் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை. அது, சிலமுறை ரத்த அழுத்தத்தின் அளவை அதிகமாக்கவும் செய்கிறது என்று அறியப்பட்டது.

நார்மலான ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பின் அளவைக் குறைத்தால் ‘Secondary Aldosterone' ஆக்டிவேட் ஆகும். அதாவது உப்பின் அளவு குறையும்போது நம் சிறுநீரகம் Aldosterone-ஐ தூண்டிவிட்டு உப்பை வெளியேற்றாமல் சோடியத்தின் அளவை அதிகரிக்க முயல்கிறது. அப்போது சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூட செய்கிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. உப்பை வெவ்வேறு அளவுகளில் எடுத்துக்கொள்ளும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மக்கள் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர். உதாரணத்துக்கு சீனாவின் டையான்ஜின் (Tianjin) மாகாணத்தில் 16-20 கிராம் உப்பு சாப்பிடுகிறார்கள். இதே அமெரிக்காவின் சிகாகோவில் குறைவாகவே உப்பு எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த இருவேறு மக்களின் ரத்த அழுத்தமும் ஒரே அளவில்தான் இருக்கிறது. சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளின் உணவுகளில் மிக அதிக உப்பு இருக்கும். ஆனால் அங்கே உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற இருதயக் கோளாறு பிரச்னைகள் குறைவாகவே இருக்கின்றன. பெரிதாக உப்பு எடுத்துக்கொள்ளாத பபுவா நியூ கினியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பிரச்னைகள் சற்று அதிகமாக காணப்படுகின்றன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:13 am


இந்த உப்பால் ஏற்படும் பிரச்னைகளை ‘J-Shaped curve' என்று சொல்வோம். உப்பை நல்லது என்று நான் கூறவில்லை, மிகவும் அதிக அளவில் எடுத்துக்கொண்டால் ரத்தக்குழாய் சார்ந்த பாதிப்புகள் மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்பதிலும் மாற்றமில்லை. மீடியமான அளவில் உப்பு எடுத்துக்கொள்பவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்பட பெரிதாக வாய்ப்பில்லை.ஆனால் உப்பின் அளவை ரொம்பவும் குறைத்தாலும் இறப்புகள் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். மிக அதிகமாகவும் இல்லாமல், மிகக் குறைவாகவும் இல்லாமல் ஓரளவுக்கு உப்பு எடுத்துக்கொள்வதே நல்லது. ஒரு நாளைக்கு 5 கிராம் அளவுக்கு உப்பு பயன்படுத்தவேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை. அப்படிச் செய்தால் 2.5 கிராம் அளவு சோடியம் நம் உடலுக்குக் கிடைக்கும் என்பது கணக்கு. அதன்மூலம் 4 பாயின்ட் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது. ஆனால், யோகா செய்தால் 5 பாயின்ட் வரை ரத்த அழுத்தம் குறைகிறது. இதே உடற்பயிற்சி செய்தால் 7-8 பாயின்ட் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது. உடல் எடையைக் குறைத்தால் 10-15 பாயின்ட் குறைகிறது. பழங்கள் சாப்பிட்டால் 7-8, மது அருந்தும் பழக்கத்தை விட்டால் 5 பாயின்ட் குறைகிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

கஷ்டப்பட்டு உப்பைத் தவிர்த்து 3-4 பாயின்டாகக் குறையும் ரத்த அழுத்தத்தின் அளவு, அதைவிட எளிதான வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுகையில் 10-15 பாயின்ட் வரை மிக எளிதாகக் குறைகிறது. இதைப் பார்க்கும்போது வாட்ஸ்அப்பில் படித்த ஒரு காமெடிதான் என் நினைவுக்கு வருகிறது. அதாவது அமெரிக்காகாரன் விண்வெளியில் எழுதுவதற்கு 100 கோடி ரூபாய் செலவு செய்து பேனா கண்டுபிடித்தானாம். வேறொரு நாட்டுக்காரன் இரண்டே ரூபாய் பென்சிலில் வேலையை முடித்தானாம். அப்படித்தான் இருக்கிறது இந்தக் கதை.

140 பாயின்டில் இருந்து 137-க்குக் கொண்டு வர உப்புச்சப்பு இல்லாத உணவுகளை தினமும் எடுத்துக்கொள்வதைவிட, மிக எளிதாக பழங்கள் சிலவற்றை எடுத்து மாவுச்சத்தைக் குறைத்து உடற்பயிற்சியை மேற்கொண்டால் ரத்த அழுத்தம் 20 பாயின்ட் வரைகூட குறைய வாய்ப்பிருக்கிறது.

என்ன டாக்டர், மாவுச்சத்தை இங்கேயும் கொண்டு வந்துவிட்டீர்களா என்கிறீர்களா? ஆம், கட்டாயம் தொடர்பிருக்கிறது. உடல் பருமன், சர்க்கரை நோய் முதலிய இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உடலில் அதிகம் இருக்கையில் ‘Renin', ‘Aldosterone' முதலிய ஹார்மோன்கள் அளவு பாதிப்பு அடைகிறது. இதுமட்டுமல்லாமல் நம் உடலின் ‘Sympathetic system' அதிகம் வேலை பார்க்கிறது. நிறைய உள்காயங்கள் ஏற்படுகின்றன. இவையெல்லாம் சேர்த்து உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமாக அமைகின்றன. அதனால்தான் மாவுச்சத்தைக் குறைத்து, உடல் எடையைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவருவது, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உப்பைக் குறைப்பதைவிடச் சிறந்த வழி. இது ரத்தக்குழாயில் உள்ள உப்பின் அளவை நேரடியாகக் குறைக்கும். உப்பை நேரடியாகக் குறைத்தால்கூட அதன் வெளியேற்றத்தைத் தடுக்க சில ஹார்மோன்கள் தூண்டப்பட்டு அதைத் தேக்கிவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் மாவுச்சத்தை ஓரளவுக்குக் குறைத்தால் இன்சுலின் அளவு ரத்தத்தில் குறைந்து, ஹார்மோன்களும் கட்டுக்குள் வந்து, ரத்தத்தில் உள்ள உப்பின் அளவும் குறைந்து, உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

உப்பைக் குறைப்பதைவிட, இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைக் குறைப்பதற்கு மாவுச்சத்துகளைக் குறைத்தால் அது அதிகபட்ச பலனைத் தருகிறது. பல உயரிய ஆராய்ச்சிகளின் முடிவுகளே இவை. இதை மருத்துவ உலகம் சீக்கிரம் புரிந்துகொள்ள வேண்டும். உப்பு பற்றிய பயம் எதுவும் தேவையில்லை. மிதமான அளவு உப்பை நாம் தினசரி உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அதிகமாக சேர்க்கவேண்டாம். அதற்காக உப்புச் சப்பில்லாத உணவுகளைச் சாப்பிடுவதும் தேவையில்லை. இதய மற்றும் சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களுக்கு உடலில் சீக்கிரம் நீர் கோத்துவிடும் என்பதால் அவர்கள் மட்டும் மருத்துவர்களின் அறிவுரைப்படி உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். அதேநேரத்தில் உடற்பயிற்சி செய்து தொப்பையைக் குறையுங்கள். ரத்த அழுத்தமும் மற்ற பிரச்னைகளும் தானாகக் குறைந்துவிடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:14 am

உப்பு பற்றிய பல கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் கடந்த வாரம் பார்த்தோம். இப்போது உப்பின் வகைகளைப் பார்க்கலாம். நாம் பயன்படுத்தக்கூடிய டேபிள் சால்ட் தொடங்கி நிறைய உப்புகள் இங்குண்டு. நாம் வழக்கமாகப் பயன்படுத்துவது கல்லுப்பு. இந்துப்பு என்ற வாசனையான ரோஸ் நிற உப்பு ஒன்றும் கிடைக்கிறது. வட இந்தியாவில் ‘காலா நமக்’ என்ற கறுப்பு உப்பு உள்ளது.

இப்படியான உப்புகளுக்கெல்லாம் என்ன வித்தியாசம்? எது நல்லது, எது கெட்டது? ‘தூளாக நாம் பயன்படுத்தும் உப்பு அதிகம் சுத்திகரிக்கப்படுவதால் அது கெடுதல், மற்ற உப்பு வகைகள் மிகவும் நல்லது' என்கிறார்கள். இன்னொரு பக்கம் ‘தூள் உப்பில் அயோடின் இருப்பதால் அது மிகவும் நல்லது. மற்றவற்றில் அது கிடையாது' என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எதுதான் உண்மை? உப்பில் நிறைய சத்துகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நுரையீரலுக்கு நல்லது என்பதில் தொடங்கி மூப்பைக் குறைக்கும், தூக்கத்தை வரவழைக்கும், எலும்புகளை வலுவாக்கும் என்றெல்லாம் நிறைய சொல்கிறார்கள். இதில் எதெல்லாம் உண்மை, எதெல்லாம் கற்பனை?

முதலில் இந்த உப்புகள் எங்கிருந்து வருகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் காலங்காலமாகப் பயன்படுத்துவது கல்லுப்பு. இது கடலிலிருந்து வருகிறது. பாத்தி கட்டி வைக்கப்பட்ட கடல் நீர் வெயிலில் காய்ந்து கல்லுப்பு கிடைக்கிறது. சோடியம் குளோரைடே அதில் பெரும்பான்மையான அளவில் இருக்கும். மேலும் 1% முதல் 10% வரை கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துகள் அதில் இருக்கின்றன. கடல் எப்போதும் வற்றாது என்பதால் பெட்ரோல், டீசல் தீர்ந்துபோனாலும் உப்புக்குப் பஞ்சம் இருக்காது. பெரும்பாலும் கடல் இருக்கும் எல்லா நாடுகளிலும் உப்பு உற்பத்தி நடக்கிறது.

இந்தக் கல்லுப்பு தவிர, இமாலயன் இந்துப்பு என்ற வகை பாகிஸ்தானிலிருந்து வருகிறது. இதற்கென அங்கு ‘கேவ்ரா சால்ட் மைன்’ என்ற மிகப்பெரிய உப்புச் சுரங்கம் இருக்கிறது. அதுவும் கடல் உப்புதான். இமயமலை எப்படி உருவானது என்று புரிந்தவர்களுக்கு இதுவும் புரியும். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயும் கடல் இருந்தது. கண்டங்கள் நகர்ந்து இரண்டும் ஒன்று சேர்கையில் அங்கிருக்கும் தண்ணீர் பனிக்கட்டிகளாக மாறி இமயமலை உருவானதாகப் படித்திருப்போம். எனவே, கேவ்ரா சால்ட் மைனில் கிடைப்பதும் கடல் உப்புதான். ஆனால் ஐஸ் கட்டியாக மாறி இருப்பதால் இதையும் சுரங்கத்தில் இருந்து எடுத்துப் பயன்படுத்துகிறோம். இதை ‘ஹேலைட்' (Halite) என்று சொல்வோம். அந்த உப்பு சற்று பிங்க் நிறத்தில் இருப்பதற்கான காரணம், அதில் உள்ள இரும்பு ஆக்சைடு. மேலும் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியமும் அதில் சற்று கலந்திருக்கின்றன. மேலும் கடல் உப்பைவிட இதில் சோடியத்தின் தன்மை சற்று குறைவாக இருக்கும். இப்படியொரு உப்பு இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தவர் மாவீரர் அலெக்சாண்டர். ‘காலா நமக்' என்ற பெயருடைய வடஇந்தியாவில் பயன்படுத்தப்படும் உப்பு, இங்கு அதிக அளவில் பழக்கத்தில் இல்லை. இது தயாரிக்கப்படும் ஒருவகை உப்பு. உப்பில் நெல்லிக்காய் தொடங்கி வேறு சில விதைகள், இலைகள், மூலிகைகள் சேர்த்து வறுத்துத் தயாரிக்கப்படுவது. கறுப்பு அல்லது அடர் ஊதா நிறத்தில் இருக்கும் இந்த உப்பு அழுகிய முட்டை வாசனையைக் கொடுக்கும். இந்த உப்பு ஆயுர்வேத மருத்துவம், சாட் கடைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இப்போது நாம் தினமும் பயன்படுத்தும் தூள் உப்புக்கு வருவோம். தூள் உப்பைத் தொழிற்சாலைகளில் கெமிக்கல் போட்டுத் தயாரிப்பதாக நிறைய பேர் நினைக்கிறார்கள். நான் முன்பு கூறிய இமாலயன் உப்பு மற்றும் கல்லுப்பு ஆகிய இரண்டில் இருந்துமே இந்தத் தூள் உப்பைத் தயாரிக்க முடியும். நாட்டுச் சர்க்கரையிலிருந்து வெள்ளைச் சர்க்கரை தயாரிக்கப்படுகிறதல்லவா, அதைப்போல!

நாம் பயன்படுத்துகிற தூள் உப்பு, கடலில் இருந்து கிடைக்கும் உப்பைச் சுத்தப்படுத்துவதன் மூலம் கிடைக்கிறது. Centrifugation, Evaporation முதலிய நிறைய ப்ராசஸ்கள் இதில் உள்ளன. இதில் அயோடினைச் சேர்க்க தற்போது அரசு வலியுறுத்தியிருக்கிறது. இதெல்லாம் சேர்த்தே இந்த உப்பு தயாரிக்கப்படுகிறது. 99.5% இந்த உப்பில் சோடியம் குளோரைடுதான் உள்ளது. மற்ற உப்புகளில் இயற்கையிலேயே சுமார் 10% வேறு சில விஷயங்கள் நிறைந்திருக்கும். ஆனால், இந்தத் தூள் உப்பில் மற்ற அனைத்தும் நீக்கப்படுவதால் பெரும்பான்மை அளவு சோடியம் குளோரைடே இருக்கிறது. இந்த உப்பில் அதிக உப்புத்தன்மை இருக்கக் காரணம் இதுவே. மற்றபடி மற்ற உப்புகளைப் போன்றதே இதுவும்.


Sponsored content

PostSponsored content



Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக