புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
59 Posts - 47%
heezulia
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
54 Posts - 43%
T.N.Balasubramanian
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
1 Post - 1%
prajai
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
200 Posts - 39%
mohamed nizamudeen
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
12 Posts - 2%
prajai
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
9 Posts - 2%
Jenila
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
4 Posts - 1%
jairam
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தூண்டுகோல் Poll_c10தூண்டுகோல் Poll_m10தூண்டுகோல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்டுகோல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 25 Jan 2010 - 4:07

சித்ரா டீச்சர் அந்தப் பள்ளியில் பணியேற்று ஆறு மாதங்கள்தான் ஆகின்றன.​ அதற்குள் அவரது பெருமை பள்ளிக்குள் மட்டுமல்ல,​​ வெளியிலேயும் விரைந்து பரவி வருகிறது.​ காரணம்,​​ ஆசிரியப் பணியில் அவர் மேற்கொண்ட புதுமையான பல செயல்முறைகள்தான்.

மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிப்பதோடு தன் வேலை முடிந்து விட்டது என்று அவர் நின்றுவிட வில்லை.​ மாணாக்கருக்குள் புதைந்து கிடக்கும் தனித்திறமைகளைக் கண்டறிந்து,​​ அவற்றை வெளியே கொண்டு வந்து வளர்ப்பதையும் தனது தலையாய கடமை என்று செயல்பட்டார்.

கற்பனைத் திறமை கொண்டோரைக் கதை,​​ கட்டுரை,​​ கவிதை என்று எழுத வைத்து,​​ அவர்களது படைப்பாற்றலைப் பலருக்கும் காட்டினார்.​ குரல் வளம் கொண்டோரின் பாடும் திறமையை வளர்த்து மேடை ஏற்றிப் பரிசு பெற வைத்தார்.​ அவைக் கூச்சம் இல்லாமல் பேசும் பயிற்சியை அவரிடம் பெற்ற மாணவர்கள் பலர்.​ மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்கள்.​ வரையும் திறமை கொண்ட மாணவர்களின் பிஞ்சுக் கைவண்ணங்கள்,​​ அவர் முயற்சியால் பள்ளியின் பெயரோடு பத்திரிகைகளில் வெளிவர ஆரம்பித்து விட்டன.

இவ்வளவும் சாதித்த சித்ரா டீச்சருக்கு,​​ ஒரே ஒரு மாணவன் மட்டும் சவாலாக அமைந்து விட்டான்.​ அவன் பெயர் வேலன்.​ பிளஸ் ஒன் வகுப்பில் தொழில் பாடப் பிரிவில் வேளாண்மைப் பாடம் படிப்பவன்.​ அவனுக்குள் கற்பனையாற்றல்,​​ மொழித்திறன்,​​ பொது அறிவு போன்ற அம்சங்கள் பொதிந்து கிடப்பது டீச்சருக்குத் தெரிய வந்தது.​ ஆனால்,​​ அவற்றை வளர்த்துக் கொண்டு வெளிப்படுத்தும் ஆர்வம்தான் அவனிடம் அறவே இல்லை.​ ஆனாலும்,​​ டீச்சர் மனம் தளரவில்லை.

அவற்றை எப்படியாவது வளர்த்து,​​ அவனை ஊருக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்ற தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.​ அப்போதுதான் அந்த அறிவிப்பு வெளியானது.

"தண்ணீரின் சிக்கனமும் சேமிப்பும்' பற்றி சுலோகன் எழுதும் போட்டியை வேளாண்துறை அறிவித்திருந்தது.​ உடனே சித்ரா டீச்சர் வேலனை அழைத்து அந்தப் போட்டியைப் பற்றி அவனிடம் விளக்கினார்.

""வேலா,​​ இந்தப் போட்டியில் வேளாண்மைப் பாடம் கற்க்கும் நீ, கட்டாயம் பங்கேற்றே ஆக வேண்டும்.​ உன்னைத் தவிர,​​ உன் வகுப்பில் பொருத்தமான ஆள் வேறு யாரும் இல்லை.​ ஏனென்றால்,​​ நம் பள்ளி நூலகத்தில் நிறையப் புத்தகங்களை எடுத்துப் படிப்பவன் நீ என்பதை நூலகப் பதிவேட்டில் பார்த்து விட்டேன்.​ உனது மொழித் திறமை,​​ பொது அறிவு,​​ கற்பனையாற்றலை உன் தேர்வு விடைத்தாள்களைத் திருத்திய எனக்கு நன்றாகத் தெரியும்.​ இன்னும் ரெண்டு நாட்களில் மூன்று சுலோகன்களை எழுதிக் கொடுத்து விட வேண்டும்.''

ஆசிரியை தன் மீது வைத்துள்ள நம்பிக்கையும்,​​ அக்கறையும் அவன் மனதை நெகிழ வைத்து விட்டன.​ ""ஆகட்டும் டீச்சர்'' என்று அவரது அன்புக் கட்டளையை ஏற்றுக் கொண்டான்.

​ ஒரு மாதம் ஓடி மறைந்தது.​ அன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தை ஆரம்பித்த தலைமையாசிரியர்,​​ வேலனை மேடைக்கு வரவழைத்து விட்டுப் பேச ஆரம்பித்தார்.

""ஒரு மகிழ்ச்சியான செய்தி.​ நமது பள்ளியின் பிளஸ் ஒன் மாணவர் வேலன் எழுதிய மூன்று சுலோகன்கள் மாநில அளவில் முதல் பரிசைப் பெற்றுள்ளன.​ அதற்கான காசோலையையும்,​​ சான்றிதழையும் வேலனுக்கு வழங்குமுன் அந்த சுலோகன்களை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.​ இதோ வாசிக்கிறேன் கேளுங்கள்!

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ""தாகம் தீர்க்கும் மேகக் கொடையே
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ தரணி காக்கும் ஏகக் குடையாம்!''
​​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ""எதிர்வரும் தலைமுறை ஏற்றமாய் வாழ
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ நிதிபோல் பேணுவோம் நீரில் சிக்கனம்!''
​​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ""பாத்திரம் கழுவிய நீரும் -​ பள்ளியின்
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ பாத்தியில் பாய்ந்தால் பன்மலர் பூக்கும்!''

கேட்டு முடித்த மாணவர்களின் கை தட்டல் ஒலியால் வழிபாட்டு அரங்கமே அதிர்ந்தது.

""அம்மாணவருக்குத் தூண்டுகோலாக அமைந்த சித்ரா டீச்சர்,​​ தம் கைப்படப் பரிசை வழங்குவார்.''

தலைமையாசிரியரின் வேண்டுகோளின்படி சித்ரா டீச்சர் பரிசுகளை அவனுக்கு வழங்கினார்.​ பரிசைப் பெற்ற வேலன் நன்றியுடன் அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.
பாத்திரம் கழுவும் நீரைப் பயன்படுத்தும் வேலனின் சுலோகம் சித்ரா டீச்சரை சிந்திக்க வைத்தது.

மறுநாள் காலையிலேயே தலைமையாசிரியரின் அனுமதியுடன் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த முனைந்தார்.

வேளாண்மை பாடத்தைப் பயிலும் பிளஸ் ஒன் மாணவர்கள் இருபது பேர்களுக்கும் பள்ளித் தோட்டத்தில் ஆளுக்கொரு பாத்தியை ஒதுக்கினார்.​ பிள்ளைகள் மதிய உணவு சாப்பிட்டு விட்டுப் பாத்திரங்கள் கழுவும் நீர்த் தொட்டியிலிருந்து வாய்க்கால் அமைத்து,​​ வீணாகும் நீர் அந்தப் பாத்திகளில் பாய ஏற்பாடு செய்யப்பட்டது.​ வேளாண் மாணவர்கள் இருபது பேரும் தமக்கு ஒதுக்கப்பட்ட பாத்திகளில் அவரவர் விருப்பம் போல பூச்செடிகள்,​​ காய்கறிச் செடிகள் எதையும் வளர்த்துக் கொள்ளலாம்.​ சிறந்த பாத்திக்குப் பள்ளி ஆண்டு விழாவின் போது நல்ல பரிசு வழங்கப்படும்'' என்று புதிய போட்டியை அறிவித்தார்.

மறுநாளே மாணவர்களின் செயல்பாடு தீவிரமாகி விட்டது.​ ஒரு மாதம் கழித்து விவசாயப் பாட ஆசிரியருடன் சித்ரா டீச்சர் பள்ளித் தோட்டத்தில் அமைந்த போட்டிப் பாத்திகளை மேற்பார்வை செய்தார்.​ மற்ற மாணவர்களின் பாத்திகளில் மலர்ச் செடிகளும்,​​ காய்கறிப் பயிர்களும் பசுமையைப் பரப்பி புன்னகைப் பூத்து நின்றன.​ ஆனால்,​​ வேலனின் பாத்தி மட்டும் எதுவுமின்றி வெறுமையாகக் காட்சித் தந்தது.​ அவனைத் தனியாக அழைத்த டீச்சர் மிகவும் வருத்தப்பட்டார்.

""நீ எழுதிய சுலோகம்தான் இந்த ஏற்பாட்டைச் செய்ய என்னைத் தூண்டியது.​ ஆனால்,​​ உனக்கு ஒதுக்கிய பாத்தியில் நீ ஒன்றும் செய்யவில்லையே?​ வார்த்தைகள் அளவில் சுலோகம் எழுதிப் பரிசு பெற்றால் மட்டும் போதுமா?​ சொற்களைச் செயலாக்கிக் காட்ட வேண்டாமா?​ சுலோகத்துக்கு உயிர் கொடுப்பது உன் கடமை அல்லவா?''

வேலன் அலட்டிக் கொள்ளவே இல்லை.​ ""டீச்சர்,​​ பொறுத்திருந்து பாருங்க!​ நான் செய்யப் போற புதுமைக்கான பொருள்களைத் தேடிக்கிட்டிருக்கேன்.​ நிச்சயம் நீங்க விரும்புற மாதிரி சாதிச்சுக் காட்டுவேன்!'' -​ அவனது பேச்சில் தொனித்த உறுதி டீச்சரின் மனதில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.​ அவனுக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தார் அவர்.

அன்று அந்தப் பள்ளியின் ஆண்டு விழா.​ மற்ற எல்லாப் போட்டிகளும் முடிவுற்று,​​ பரிசு பெறுவோர் பட்டியல் தயாராகி விட்டது.​ வேளாண்மைப் பிரிவு மாணவர்களின் தோட்டக்கலைப் போட்டியில் பரிசுக்குரியோரைத் தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டுமே பாக்கி.

விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த கௌரவ விருந்தினர் குழுவினர்,​​ மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையில் போட்டியின் நடுவர்களாகப் புறப்பட்டனர்.

ஒவ்வொரு பாத்தியாகப் பார்வையிட்டனர்.​ வழக்கமாக எல்லா இடங்களிலும் காணப்படும் மலர்ச் செடிகள்,​​ காய்கறிச் செடிகள் வளர்க்கப்பட்ட அந்தப் பாத்தியும் அவர்களது மனங்களைப் பெரிதாகக் கவரவில்லை.​ கடைசியாக அமைந்திருந்தது வேலனுக்கு ஒதுக்கப்பட்ட பாத்தி.​ அதைப் பார்த்ததுமே வியப்பிலும்,​​ குழப்பத்திலும் ஆழ்ந்து போய் நின்றது நடுவர் குழு.​ அவனது பாத்தியில் வளர்ந்து கிடந்தவை அனைத்துமே உயிர்காக்கும் அரிய வகை மூலிகைகள்.​ அவை ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டிப் பயன்களை விவரிக்க ஆரம்பித்தான் வேலன்.

""இந்த மூலிகையின் பேரு வெள்ளருகு.​ விஷம் தீண்டினவங்களுக்கு முதலுதவி மாதிரி.​ உடனே இதைக் கொடுத்தா விஷம் வேகமா ஏறாது.​ துளசி,​​ தூதுவளை,​​ கண்டங்கத்தரி இந்த மூனும் கபத்தை முறிக்கும்;​ ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும்.​ இது கீழ்வாய் நெல்லி.​ இது சிறு குறிஞ்சான்.​ இது பெருங்குறிஞ்சான்.​ இந்த மூணுமே சர்க்கரை நோயைத் தணிக்கிறவை..!''

இப்படி எத்தனையோ மூலிகைகளை காட்டிக் கொண்டே போனான் வேலன்.​ அவனது புதுமையான முயற்சியைப் பாராட்டிய குழுவினர்,​​ மூக்கின் மேல் விரலை வைத்து நின்றனர்.​ வேலனைத் தட்டிக் கொடுத்த மாவட்டக் கல்வி அலுவலர்,​​ தோட்டக்கலைப் போட்டியின் முதல் பரிசுக்கு அவன் பெயரையே குறித்துக் கொண்டார்.

அப்போது தலைமையாசிரியர் சுலோகன் போட்டியில் வேலன் வெற்றி பெற்றதையும்,​​ அவனது சுலோகம்தான் இந்தப் புதுமையான போட்டிக்கே தூண்டுகோல் என்பதையும் எடுத்துக் கூறினார்.​ ஆனால் வேலனோ,​​ ""எனக்குத் தூண்டுகோல் சித்ரா டீச்சர்தான் சார்!'' என்று அடக்கத்தோடு கூறினான்.



தூண்டுகோல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 25 Jan 2010 - 4:14

​ ​ ""தாகம் தீர்க்கும் மேகக் கொடையே
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ தரணி காக்கும் ஏகக் குடையாம்!''
​​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ""எதிர்வரும் தலைமுறை ஏற்றமாய் வாழ
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ நிதிபோல் பேணுவோம் நீரில் சிக்கனம்!''
​​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ""பாத்திரம் கழுவிய நீரும் -​ பள்ளியின்
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ பாத்தியில் பாய்ந்தால் பன்மலர் பூக்கும்! மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்லதோர் தகவல் நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக