புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச் சொற்கள் அறிவோம்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 05, 2023 4:57 am

First topic message reminder :

அப்பாவை குறிக்கும் வேறு சொற்கள்



  • அச்சன்
    அண்ணல்
    அண்ணா
    அத்தன்
    அப்பன்
    அப்பு
    அய்யா
    அவிச்சன்

    ஆச்சாள்
    ஆஞா
    ஆஞான்
    ஆஞன்
    இறைவன்
    ஈன்றவன்
    எம்மான்

    ஐயன்
    ஐயா
    குரவன்
    கோ
    ஞாதி
    சன்னியன்
    தந்தை
    தாதிரு
    பெற்றவன்
    போத்து
    முதல்வன்
    ஈரி
    போய்
    அம்மான்


எந்தை, எம்மான், தகப்பன் - என் தந்தை.
தம்+அப்பன் = தமப்பன் → தகப்பன்
நுந்தை- உன் தந்தை.
கொப்பா, கொப்பர்- பிறர் ஒருவர் எனது தந்தையைக் குறிப்பிடுதல் .
ஆஞி - தந்தையை விளிக்கும் சொல்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 05, 2023 8:21 pm

இப்போதுதான் தமிழ் பட இயக்குனர் கஜேந்திரன் மறைந்த   செய்தி டிவியில் ஓடியது .

அவர் இயக்கிய சில படங்களை காண்பித்தார்கள்.

பம்மல் சம்பந்தம் என்ற படம் என்று நினைக்கிறேன் .

கமல சிவனாக ஒரு மாட்டின் மேல் உட்கார்ந்து இருப்பார் .

பக்கத்தில் பார்வதியாக சென்னை தமிழில் பேச்சு.

இயக்குனராக வந்த கஜேந்திரன் பொறுமை இழந்து 

நீங்கள் பேசவே வேண்டாம் .வாயில் சுவிங்கம் சுவைத்து கொண்டு இருங்கள்.

நான் 'டப்பிங்' இல் சரி பண்ணிக்கொள்கிறேன் என்பார்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 06, 2023 12:57 pm

அருமை சிவா அவர்களே! பயனுள்ளது! #சொல்லாராய்ச்சி , திகட்டாத இன்பம் நல்குவது! அவசியமானது! #தமிழ்- #வடமொழிப் #பூசல்       ஏற்பட்டதே ஒழுங்கான சொல்லாராய்ச்சி நடக்காததால்தன்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:10 pm

அய்யா --



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2023 4:34 pm

T.N.Balasubramanian wrote:அய்யா --
மேற்கோள் செய்த பதிவு: undefined

அய்யா, ஆத்தா என் தலைமுறையுடன் அழிந்து போன சொல்.

எங்கள் பகுதியில் அய்யா ஆத்தா என்றுதான் அழைப்போம்.

இளம் தலைமையில் இந்த சொல் வழக்கொழிந்து விட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 5:16 pm

பிழையற தமிழை எழுதுவோம்



#கருப்பா_கறுப்பா? எதுசரி?

     கறுப்பு  என எழுதுவது தவறு. எந்தச் சொல்லையும் பிரித்து அதன் வேர்ச் சொல்  எதுவெனப் பார்க்க வேண்டும். "கரிய" என்பதே கருப்பு  என்று வருகிறது. எனவே கருமை,  கருப்பு, கரும் பலகை, கருப்பு நிறம் _ என்றே  எழுத வேண்டும்.

    ஆனால்  நாம் உச்சரிக்கும் போது இடையின "ரகரத்தை"  வல்லின "றகரமாக" தவறாக  உச்சரிக்கிறோம். எனவே தான் நமக்கு  எழுதும்போதும், கருப்பா? கறுப்பா? என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது.

    #ஒரு,   #ஓர்

_இரண்டையும் எங்கே பயன்படுத்த வேண்டும் என்றால்

உயிரெழுத்துகளுக்கு முன்பு மட்டுமே "ஓர்"   வரவேண்டும்.

  #ஓர்_ஆடு,   #ஓர்_இல்லம்

பிற இடங்களில் "ஒரு" வரவேண்டும். - ஒரு வீடு, ஒரு  பெண்.

 இனி #ந என்ற எழுத்து,  எப்பொழுதும் த விற்குப் பக்கத்திலேயே வரும்.

உ.ம் - பந்து

இனி  #ண_ எங்கே வரும் என்றால், "ட"எழுத்தின் அருகில் ண வரும்.

உ.ம் - மண்டபம்.

#ன  என்ற எழுத்தோ ற அருகில் வரும்.

உ.ம் - மன்றம்.

இனி  யாருக்கேனும் ஒரு பொருளைக் கொடுப்பதை, "அளிப்பது" என எழுதவேண்டும்.

"அழிப்பது" என்றால் சேதப்படுத்துவது எனப் பொருளாகும்.

இனி வல்லின றகரத்திற்குப் பிறகு மெய்யெழுத்து வரக்கூடாது.

உ.ம் - முயற்சி

முயற்ச்சி என எழுதினால் தவறு.
 
திருமண அழைப்பிதழ்களில் பெரும்பாலும்  திருநிறைச்செல்வி எனப் போடுகின்றனர். இதில்  #திருநிறை   என்பதற்குப் பிறகு மெய்யெழுத்து வருவது தவறு.

இப்பொழுது ஊடகங்களில் கூட சிலவற்றை வேண்டுமென்றே தவறாக எழுதுகின்றனர். அதாவது அய்யா,
அய்யனார், அய்யப்பன் என எழுதுவது தவறு.

#ஐ என   ஓர்  உயிரெழுத்து  தனியே  இருக்க,  "அய்"  என  எழுதுவது  தமிழ்க் கொலை.  

அதுமட்டுமின்றி
__அவ்__ எனவும்  எழுதுவதும்  தவறு.
அவ்வையார் என  எழுதுவது  தவறு.

இப்பொழுது #ஔவையார் மட்டும் வாழ்ந்திருந்தால் தனது எழுத்தாணியாலேயே, அவ்வாறு  தவறாக  எழுதுபவர்களைத்  தண்டித்திருப்பார்.

 #ஐ , #ஔ என்ற ஒலிகளுக்குத் தனியே உயிரெழுத்துக்கள் இருக்க, அவற்றை ஒதுக்குவது அதர்மம். நாளடைவில்  தமிழ்  உயிரெழுத்துக்களில் இவ்விரண்டும் அழிந்து போய்விடாதா?

அதுமட்டுமின்றி #ஐயா  என்ற சொல்லைப் பிரித்தால் ஐ+யா என  வரும்போது  #ஐ என்றால் #தலைவன் எனப் பொருள்.

ஆனால்  அய்யா என்பதைப்  பிரித்தால் அய்+யா என வரும்.  இந்த  *அய் என்பதற்கு எந்தப் பொருளும்  கிடையாது.

எனவேதான் #தலைவன் என்ற பொருளில் #ஐயா என எழுதினர்.

ஆனால்  இன்றோ  #அய்யா   என  எழுதி  தமிழைக்  கொல்கின்றனர்.

ஆனால் இன்று வஞ்சகர்களால் #ஐ, #ஔ என்ற இரு உயிரெழுத்துக்களையும்  சிதைக்கவே *அய்,  *அவ் என *ஐ, *ஔ  எழுதப்படுகின்றன.  

எனவே #ஐயா, #ஐயனார், #ஔவையார் என்றே எழுத வேண்டும்.  நாம் நம் தாய்மொழியை வளர்க்காவிட்டாலும், அதைத்  தவறாக  எழுதி அழிக்காதிருப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 11, 2023 4:56 am


காக்கை கறி சமைத்து கருவாடு மென்று
உண்பர் சைவர் என்கிறார் நாலடியார்.



ஆச்சரியம் உங்களுக்கு காக்கா கறி சமைச்சி கருவாடு உண்பவர்களா சைவர்கள்.?

இங்குதான் தமிழின்இனிமை மணம் வீசும்.

இதன் உட்பொருள் வியக்க வைக்கும்.

காக்கை = கால் கை அளவு
கறி சமைத்து = காய்கறி சமைத்து
கரு வாடுமென்று= கரு என்பதான
உயிர் வாடும் என்று உண்பர் சைவர் = உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்!



இன்னும் விளக்கி கூறவேண்டுமானால்..

சிவனை மட்டும் வழிபாடு செய்யும்
சைவ சமயத்தைச் சேர்ந்த பக்தர்கள்,
ஒரு கை அளவிலான காய் கறிகளை
எடுத்து அதில் நான்கில் ஒரு பாகத்தை மட்டுமே சமைத்து.

இந்த உடலில்உயிர் தங்கவேண்டும் என்பதற்காக வெறும்கால் வயிறு
மட்டுமே உண்டு காலத்தை ஓட்டுவார்கள்" என்றும் தெளிவுபடுத்தலாம்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 11, 2023 7:27 pm

மனைவி  "காக்கை கறி சமைத்ததை மதியம் உண்டேன்"



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 15, 2023 4:27 am

நாற்றம் எனும் சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.

அந்தக்காலத்தில் #நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது.

'நாற்ற மிலாத மலரி னழகின்னா தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா'

கபிலர் எழுதிய, இன்னா நாற்பது பாடலில் வரும் இரண்டு வரிகள் இவை. மணமில்லாத பூவின் அழகானது துன்பமாகும். (இன்னா என்பது துன்பம்)

மனத் தெளிவு இல்லாதவன், ஒரு செயலை செய்யத் துணிவது துன்பமாகும், என்பது இதன் பொருள். மணம் என்பதை நாற்றம் என்ற பொருளில் பயன்படுத்தி இருக்கிறார் கபிலர்.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு


என்ற குறளிலும் மலரின் நறுமணத்தை, நாற்றம் என்ற சொல்லில்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

நாற்றம் - நறுமணம்
துர்நாற்றம் - கெட்ட வாசனை



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 15, 2023 4:35 am

பொள்ளாங்குழல் - புல்லாங்குழல்


மூங்கில் குழல், துளையிட்ட பின்பே இசைக் கருவியாகிறது.
துளையிடப்படுவதை "பொள்ளுதல்" என்பர்.

"பொள்ளுதல்" மருவி, "பொல்லுதல்" ஆனது.

சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை
   வாளா தொழும்புகந்து
கடைபட் டேனை ஆண்டு கொண்ட
   கருணா லயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத்
   தன்னைத் தந்த என்னா ரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல் லோஎன்
   பொல்லா மணியைப் புணர்ந்தே

திருவாசகம்: புணர்ச்சிப்பத்து.

திருவாசகம் புணர்ச்சிப்பத்துத் திருப்பதிகம் முழுவதும் என் "பொல்லா மணியைப் புணர்ந்தே" (பொள்ளா மணி - துளையிடப்படாத மணி - தூய வடிவம் ) - என்றே முடிவதால் புணர்ச்சிப்பத்து என்ற பெயரை அத்திருப்பதிகம் பெற்றது.

மாணிக்க மணிகள் துளையிடப்பட்டே மாலையாகக் கோர்க்கப்படுகிறது.

மூங்கில் குழல் துளையிடப்பட்டே (பொள்ளப்பட்டே), இசைக்கருவியாகிறது.

மூங்கில் குழலில் துளைகள் என்பவை இல்லை என்றால், புல்லாங்குழல் ஆகாது; வெறும் மூங்கில் குழல்தான்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக