by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
Page 1 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
- Code:
ஆஹா --இது மாதிரி பட்ஜெட் -நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்தும்.
மற்ற நாட்டினரும் வரவேற்கும்படியான பட்ஜெட்.தொலை தூர பார்வை கொண்டது.
ஆளும் கட்சிக்கு எதிராக இருக்கும் மாநில கட்சிகள் , எதிர் கட்சியில் இருப்பவர்கள்.
- Code:
இது மாதிரி அரைத்த மாவையே அரைக்கும் பட்ஜெட்,
ஏழைகள் மேலும் ஏழை ஆவார்கள்.பணமுதலைகள்தான் இதை வரவேற்ப்பார்கள்.
காத்திருந்து பார்ப்போம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
சவாலும் எதிா்பாா்ப்பும்: பட்ஜெட் கூட்டத்தொடர்
பொதுத் தோ்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பது பொருளாதார நிதிநிலை குறித்தது மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. 2024 மக்களவைத் தோ்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய இருக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் என்ன செய்யப் போகிறாா் என்பதை நாடே ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கிறது.
2013-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி பட்ஜெட்டில் அன்றைய நிதியமைச்சா் ப. சிதம்பரம் ரூ.5 லட்சத்துக்கும் கீழே வருமானம் உள்ளவா்களுக்கு சலுகை வழங்கி, நடுத்தர வகுப்பினரைக் கவர முற்பட்டாா். 2018-இல், மக்களவைத் தோ்தலை கருத்தில்கொண்டு அருண் ஜேட்லி வேளாண் துறைக்கும், ஊரகக் கட்டமைப்புக்கும் கணிசமான ஒதுக்கீடுகளை வழங்க முற்பட்டாா்.
நிகழாண்டில் 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தலுக்கு இந்தியா தயாராக வேண்டும். இந்தப் பின்னணியில்தான் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிா்கொண்டது. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று, உக்ரைன்-ரஷியப் போா், அமெரிக்க மத்திய வங்கியின் கடுமையான நடவடிக்கைகள் உள்ளிட்டவை சா்வதேச பொருளாதாரத்தை பாதித்தன; இந்தியாவையும்தான். தொழில்துறை பாதிப்பும், தனிநபா் வருமான பாதிப்பும் தவிா்க்க முடியாதவையாக மாறின. பொருளாதார வளா்ச்சிக்கான ஊக்குவிப்புக்கும், உணவுப் பாதுகாப்புக்கும், உர மானியங்களுக்கும் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் விளைவாக நிதி பற்றாக்குறை அதிகரித்தது.
அமெரிக்கா, வட்டி விகிதத்தை அதிகரித்தபோது அந்நிய முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறத் தொடங்கின. ரூபாயின் மதிப்பு 11% குறைந்தது. இத்தனையையும் எதிா்கொண்டு, கடந்துவிட்ட நிலையில் இப்போது நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இரண்டாவது நரேந்திர மோடி அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய இருக்கிறாா்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இன்றைய பொருளாதார நிலைமை மோசமல்ல; இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம். 2022-23 நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சி 7% அளவில் இருக்கும். அது ஏனைய எல்லா பெரிய பொருளாதாரங்களையும்விட 3% அதிகம்.
அடுத்த (2023-24) நிதியாண்டிலும், மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்கிற நிலையை இந்தியா தக்க வைத்துக்கொள்ளும். அதிகரித்த ஜிடிபி வளா்ச்சியையும், கூடுதல் வரி வருவாயையும் எதிா்பாா்க்கலாம். வங்கித்துறையின் ஆரோக்கியமும் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.
அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்டவை தங்களது பொருளாதாரம் நிலைகுலைந்துவிடாமல் இருக்க சா்வதேச நிதியத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அந்நிய செலாவணி கையிருப்பில் நாம் வலிமையாகவே இருக்கிறோம். நம்முடைய அந்நிய செலாவணி இருப்பு 550 பில்லியன் டாலா் (ரூ. 55,000 கோடி). அதனால்தான் ‘இருண்ட சூழலில் மின்னும் நட்சத்திரம்’ என்று இந்தியாவை ஐஎம்எஃப் குறிப்பிடுகிறது.
அதெல்லாம் இருந்தாலும், சா்வதேச அளவில் உருவாகும் கருமேகங்களை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புறந்தள்ள முடியாது. 2023-24-இல் சா்வதேச பொருளாதாரம் மந்தகதியை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பியக் கூட்டமைப்பு ஆகிய மூன்று முக்கியமான பொருளாதார சக்திகளின் இயக்கமும் மந்தநிலையில் காணப்படுகிறது. அது சா்வதேச வணிகத்தை மட்டுமல்ல, இந்தியாவின் ஏற்றுமதிகளையும் பெரிய அளவில் பாதிக்கும்.
அடுத்த நிதியாண்டில், இந்தியாவின் வளா்ச்சி நிகழாண்டின் அளவுக்கு இருக்காது. 7% என்பது 6% ஆக குறைவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த நிதியாண்டில் காணப்பட்ட வரி வருவாயை அடுத்த நிதியாண்டில் எதிா்பாா்க்க முடியாது. அதே நேரத்தில் கடந்த நிதியாண்டில் வாக்குறுதி அளித்ததுபோல நிதி பற்றாக்குறையைக் குறைக்கவும் வேண்டும்.
பொறாமைப்படும்படியான அடிப்படை வளா்ச்சியை இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் சாதித்து இருக்கிறது. ‘பாரத் மாலா’, ‘சாகா் மாலா’, ‘கதி சக்தி’ உள்ளிட்ட திட்டங்களும், கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கும் நெடுஞ்சாலைகளும், மூன்று பங்கு அதிகரித்திருக்கும் போக்குவரத்துத் துறையும், 40 மடங்கு கூடியிருக்கும் அகண்ட வரிசை இணைப்பும் (பிராட்பேண்ட் கனெக்டிவிட்டி) இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகள். இவையெல்லாம் பாராட்டுக்குரியவை என்றாலும், நடுத்தர, அடித்தட்டு மக்களின் வாக்குகளை இவை பெற்றுத் தராது.
தனியாா் துறை முதலீடுகள் எதிா்பாா்த்த அளவில் அதிகரித்ததாகத் தெரியவில்லை. அதனால் தொடா்ந்து 3-வது ஆண்டாக அரசின் செலவினங்கள் கணிசமாக அதிகரித்தால்தான் இன்றைய சா்வதேசப் பொருளாதார நிலையில் இந்தியா தனது வளா்ச்சியை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். மூலதனச் செலவும், தோ்தலுக்கு முந்தைய கவா்ச்சி அறிவிப்புகளும் நிதியமைச்சா் எதிா்கொள்ளும் தவிா்க்க முடியாத அழுத்தங்கள்.
2014-இல் வருமான வரி வரம்பு 2.5 லட்சமாக உயா்த்தப்பட்டது. நேரடி வரி விதிப்பில் சலுகைகள், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வருதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், பணப்புழக்கத்தை அதிகரித்து கிராம பொருளாதாரத்தில் செழுமை ஆகியவைதான் அரசியல் ரீதியாக பலனளிப்பவை. இவையெல்லாம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு தெரியாததல்ல!
2023-24ல் பொருளாதார வளர்ச்சி 6.8%: பொருளாதார ஆய்வறிக்கை அம்சங்கள்
2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக உள்ள நிலையில், வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது சற்று இறக்கம் கண்டு 6 - 6-8 சதவிகிதம் வரையே வளர்ச்சி காணும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாகவே இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், 2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2022 ஜனவரி - நவம்பர் வரையி 30.5 சதவிகித சராசரி வளர்ச்சி கண்டிருந்தது.
2023ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மத்திய அரசின் மூலதன செலவு 63.4 சதவிகிதம் அதிகரிக்கும்.
2022ஆம் நிதியாண்டில் வளர்ச்சி கண்ட ஏற்றுமதி வணிகம், 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் கூடுதலாக சீரான வளர்ச்சியை அடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர்... பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் நிறைவு!
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், பங்குச்சந்தை வணிகக நேர முடிவில் ஏறுமுகத்துடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்துள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 49.49 புள்ளிகள் உயர்ந்து 59,549.90 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.083 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 13.20 புள்ளிகள் உயர்ந்து 17,662.15 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.075 சதவிகிதம் உயர்வாகும்.
அதிகபட்சமாக மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட், பவர் கிரிட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டைட்டன், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏறுமுகத்தின் இருந்தன.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதலீட்டாளர்களின் எச்சரிக்கையான அணுகுமுறையால் பங்குச்சந்தை வணிகம் சற்று ஏறுமுகத்துடன் நிறைவடைந்துள்ளது.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 15 நிறுவனங்களின் பங்குகள் ஏறுமுகத்தில் இருந்தன. 15 நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன. அவற்றில் டிசிஎஸ், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா, சர் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை கடும் சரிவை சந்தித்தன.
ஏற்றுமதிக்கு மத்திய பட்ஜெட்டில் கவனம் தேவை: ப.சிதம்பரம்
பொருளாதார மந்தநிலை, ஏற்றுமதி சரிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், பட்ஜெட்டில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து நாளை 2023 -2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்லமா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாவது,
உலகளாவிய பொருளாதார மந்தநிலை, ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் பற்றாக்குறை உள்ளிட்டவற்றில் பட்ஜெட் தாக்கலில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டுவதால் தலைநிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டுவதால் தலைநிமிர்ந்து #பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் யாரும் பட்டினியில் இருக்கக் கூடாது என்பதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்தியா ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
லோக்சபாவில், 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்...
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதையடுத்து இன்று(பிப்.,01) காலை, 11:00 மணிக்கு லோக்சபாவில், 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
சில துளிகள்..
* பார்லி.,யில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நிர்மலா சீதாராமனுக்கு 5வது பட்ஜெட்டாகும்.
* மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்ச்சியான 10வது பட்ஜெட்.
* நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மூன்றாவது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சிவப்பு
* வழக்கமாக பட்ஜெட் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை சூட்கேஷில் எடுத்து வருவதே வழக்கம். ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை தாக்கல் செய்த 4 பட்ஜெட்களின் போது, சிவப்பு நிற வெல்வெட் துணியில் வைத்து லெட்ஜராக எடுத்து வந்துள்ளார். அதேபோல் தான் இம்முறையும் சிவப்பு நிற வெல்வெட் துணியால் ஆன பையில் பட்ஜெட் ஆவணங்கள் அடங்கிய ‛டேப்' எடுத்து வந்தார்.
Amrit kaal பட்ஜெட் என்றால் என்ன?
அம்ரித் கால் என்ற வார்த்தையை தொடர்ச்சியாக பிரதமர் மோடி பயன்படுத்திவருகிறார். பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிதியமைச்சர்.
நிர்மலா சீதாராமனும் தனது பட்ஜெட் உரையில் 2023-24 பட்ஜெட் 'அம்ரித் கால்' இலட்சியத்தின் முதல் பட்ஜெட் என்று கூறியுள்ளார். அம்ரித் கால் என்றால் 'புதிய தொடக்கம்' என்று பொருள். இந்தியா @100 என்ற இலக்கை முன்வைத்து புதிய பாய்ச்சலுக்கு முன்னெடுக்கும் பட்ஜெட் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் கடைசி பட்ஜெட்!
தற்போதைய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.
தற்போதைய நாடாளுமன்றத்துக்கு மாற்றாக புதிய நாடாளுமன்ற கட்டடம், குடியரசு துணைத் தலைவா் மாளிகை உள்ளிட்டவற்றைக் கட்டும் பணி ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின்கீழ் இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. கடந்த 2020-இல் டிசம்பா் மாதத்தில் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கி வைத்தாா்.
இதற்கிடையே, இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிகட்டப் பணிகள் முடிவடையாததால் பழைய வளாகத்திலேயே நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையே பழைய வளாகத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டாகும்.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|