புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Pampu | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
Page 1 of 1 •
கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:
நீர்=85%
மாவுப்பொருள்=9.2%
புரதம்=4.4%
கொழுப்பு=0.8%
கால்சியம்=62 யூனிட்
இரும்புத் தாது=8.9 யூனிட்
பாஸ்பரஸ்=4.62%
இவை அனைத்தும் 100 கிராம் #கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
‘ஒரு மூலிகையில் இரும்பு விளையும்’ என்று சொல்லுமளவுக்கு இரும்புச் சத்தை வாரி வழங்கும் ‘#மூலிகை இயந்திரம்’ கரிசாலை!
முதுமைக்கான அறிகுறிகளை எட்டிப்பார்க்க விடாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வலிமையான மூலிகை இது.
வயலோரங்களிலும் நீர்ப்பாங்கான இடங்களிலும் நிறைவாய்த் தென்படும் இந்தக் கற்ப மூலிகையைப் பற்றிய வள்ளலாரின் பதிவுகள் அதிகம். கரிசாலையிலிருந்து பிறப்பெடுக்கும் ‘#கரிசாலை மை’ கண்களுக்கு அழகூட்டுவது மட்டுமல்லாமல், தலைவலியையும் கண் நோய்களையும் நீக்கும் ‘அஞ்சனமாக’ வழக்கத்திலிருந்தது!
பெயர்க்காரணம்:
கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உடையது.
கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர்.
அடையாளம்:
படர்ந்தும் சற்று நிமிர்ந்தும் வளரக்கூடிய சிறுசெடி. இலைகளின் மேற்பரப்பு சொரசொரப்பாக இருக்கும். வெள்ளை, மஞ்சள் நிற மலர்கள், இனத்தைப் பிரித்துக் காட்டும். ‘அஸ்டரேசியே’ (Asteraceae) குடும்பத்தைச் சார்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘எக்லிப்டா புரோஸ்ட்ரேடா’ (Eclipta prostrata). ‘விடிலோலேக்டோன்’ (Wedelolactone), ‘பீட்டா அமைரின்’ (Beta-amyrin), ‘லுடியோலின்’ (Luteolin) போன்ற முக்கியத் தாவர வேதிப்பொருட்கள் இதிலுள்ளன.
உணவாக:
கோடைக்கால மதிய வேளைகளில், நீர்மோரோடு கரிசாலை இலைச் சாற்றைச் சிறிதளவு கலந்து பருக, உடல் குளிர்ச்சியடைவதோடு, வெப்பச் சோர்வைச் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் கிடைக்கும். துவரம் பருப்பு சேர்த்து சமைத்த ‘கரிசாலை-பருப்புக் கடையலை’ அவ்வப்போது சுவைத்துவர, உடல் தளர்வடையாமல் தேவைக்கேற்ப உழைப்பதோடு கண்பார்வையும் கூர்மையடையும்.
பசியை அதிகரித்து ஊட்டங்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படவும் கரிசாலை உதவுகிறது. இதன் சாற்றுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து விழுங்க, தொண்டைவலி குணமாகும்; குடற் கிருமிகளையும் வெளியேற்றும். சுவாசப் பிரச்சினைகளுக்கான உணவாகக் கரிசாலையைப் பயன்படுத்தலாம். கரிசாலையின் பலன்களைப் பெற, இதன் சாற்றுடன் பனைவெல்லம் சேர்த்து, லேகிய பதத்தில் செய்து சுவையாகவும் சாப்பிடலாம். கொடம்புளியும் கரிசாலையையும் சம அளவு எடுத்து புன்னைக் காயளவு சாப்பிட்டுவர, மூல நோயின் தாக்கம் குறையும்.
மருந்தாக:
#கல்லீரல் செல்களுக்குப் புத்துயிர் அளித்து, ‘கல்லீரல் பாதுகாவலனாக’ செயல்படும் முக்கிய மூலிகை கரிசாலை என்று ஆய்வுகள் பதிவிடுகின்றன. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை முடுக்கிவிடும் ஆற்றல் (Immuno-stimulatory) படைத்தது கரிசாலை. புற்று செல்களுக்கு எதிரியாகச் செயல்படும் நுண்கூறுகளைக் கொண்டிருக்கிறது. ரத்தத்தில் #கொழுப்பு_வகைகள் அதிகரித்து விடாமல் கட்டுப்படுத்தும் ஆதாரமாகக் கரிசாலை செயல்படுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது. எதிர்-ஆக்ஸிகரணி தன்மை உடையதால், கரிசாலையை வைத்து பல்வேறு கற்ப மருந்துகள் வழக்கத்தில் உள்ளன. ‘பொற்றலை கையாந்தக்கரை பொன்னிறமாக்கும் உடலை…’ எனும் அகத்தியர் பாடலின் மூலம், மஞ்சள் கரிசாலை யின் மேன்மையை அறியலாம்.
வீட்டு மருந்தாக:
குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலுக்கு, இதன் இலைச் சாறு இரண்டு துளியோடு தேன் சேர்த்துக் குழப்பி நாவில் தடவ, இயற்கையாய் இருமல் தணியும். இலைச் சாறு, #நல்லெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்தே, அக்கால கிராமங்களில் இருமலுக் கான டானிக்! கரிசாலையை #சூரணம் செய்து, இளநீரில் ஒரு மாதமும் தேனில் ஒரு மாதமும் உட்கொள்ள நரைதிரை மாறும் என்கிறது ‘தேரன் யமக வெண்பா’. இதன் இலைகளை மென்று சாப்பிட்டு வாய் கொப்பளிக்க, பல் ஈறு பலமடையும்.
‘அயச் செந்தூரம்’ எனும் சித்த மருந்தைக் கரிசலாங்கண்ணி சாற்றின் அனுபானத்தில் கொடுக்க, ரத்தக் குறைவு, உடல் வீக்கம் குணமாகும். ‘அயபிருங்கராஜ கற்பம்’ எனும் சித்த மருந்து, ரத்த சோகையில் சிறப்பாகச் செயல்படக் கூடியது. கரிசாலை, மிளகின் உதவியுடன் உருவாக்கப்படும் மாத்திரைகள், #காமாலை, உடல் வீக்கத்துக்கான பாரம்பரிய மருந்து.
கரிசாலை சூரணத்தோடு #திப்பிலி சூரணத்தைத் தேனில் குழைத்துக் கொடுக்க, சளி, இருமல் அமைதியடையும். கரிசாலை கற்ப மாத்திரை, கையான் எண்ணெய் என சித்த மருத்துவத்தில் பல்வேறு வகைகளில் பயன்படும் கரிசாலை, சில வகையான காமாலைக்கான அற்புத மருந்து.
#ஆமணக்கெண்ணெய், கரிசாலைச் சாறு, சிறிது பூண்டு சேர்த்து பதமாய்க் காய்ச்சி தயாரிக்கப்படும் மருந்து, பித்த நோய்களின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது. கரிசாலைச் சாறு, நெல்லிக்காய்ச் சாற்றின் உதவியுடன், நல்லெண்ணெய்யை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படும் தலைமுழுகும் எண்ணெய்யை அவ்வப்போது பயன்படுத்த, உடலில் அதிகரித்திருக்கும் பித்தம் சாந்தமடையும்.
கண், காது நோய்களுக்கான மருத்துவ எண்ணெய்யும்கூட! உள்ளுக்கு மருந்தாகப் பயன்படும் ‘கரிசாலை மடக்குத் தைலம்’, தோல் முதல் உள்ளுறுப்புகள்வரை வலுவைக் கொடுக்கக்கூடியது. கரிசாலைச் சாறு, செம்பரத்தை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்த, கூந்தல் ஆரோக்கியத்துக்கு நீண்ட நாள் உத்தரவாதம் கிடைக்கும்.
#கரிசாலை, #அம்மான்பச்சரிசி, #தும்பை, #மிளகு, ஆகியவற்றை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலக்கி, பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்க, சிறுநீர் எரிச்சல் குறைந்து, உடல் வீக்கம் வற்றும்.
கரிசாலை… உடல் நலமோடு பயணிக்க தேவையான இரும்புச்சாலை..!
[thanks]டாக்டர் வி.விக்ரம்குமார்
அரசு சித்த மருத்துவர் [/thanks]
#சித்த_மருத்துவம் #கரிசாலை #கரிசலாங்கண்ணி #இரும்புச்_சத்து #இயற்கை_மருத்துவம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கரிசாலையிலிருந்து பிறப்பெடுக்கும் ‘கரிசாலை மை’ கண்களுக்கு அழகூட்டுவது மட்டுமல்லாமல், தலைவலியையும் கண் நோய்களையும் நீக்கும் ‘அஞ்சனமாக’ வழக்கத்திலிருந்தது!
உண்மைதான் சிவா. எனக்கு இன்றும் நினைவில் உள்ளது.எனது அந்த காலங்களில் ( 1948)
கரிசலாங்கண்ணி கீரை வாங்கி அதை சாறெடுத்து, புதிதாக வாங்கிய மண் சட்டியில்
அதன் வெளிப்புறத்தில் அந்த சாறை தடவி, சிறிய அகல் விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு
பஞ்சு திரி கொண்டு பற்ற வைத்து படியும் கரும் புகை தூளை எடுத்து கண்ணுக்கு மை தயாரிப்பார்கள் .
இப்போது அதெல்லாம் கனவாகி போச்சு.
ஏதாவது இது போல் பதிவுகள் வந்தால் மட்டும் நினைவுக்கு வருகிறது.
@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|