புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
19 Posts - 3%
prajai
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 22, 2023 5:19 pm

கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் 15475010

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:


நீர்=85%
மாவுப்பொருள்=9.2%
புரதம்=4.4%
கொழுப்பு=0.8%
கால்சியம்=62 யூனிட்
இரும்புத் தாது=8.9 யூனிட்
பாஸ்பரஸ்=4.62%

இவை அனைத்தும் 100 கிராம் #கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.

‘ஒரு மூலிகையில் இரும்பு விளையும்’ என்று சொல்லுமளவுக்கு இரும்புச் சத்தை வாரி வழங்கும் ‘#மூலிகை இயந்திரம்’ கரிசாலை!

முதுமைக்கான அறிகுறிகளை எட்டிப்பார்க்க விடாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வலிமையான மூலிகை இது.

வயலோரங்களிலும் நீர்ப்பாங்கான இடங்களிலும் நிறைவாய்த் தென்படும் இந்தக் கற்ப மூலிகையைப் பற்றிய வள்ளலாரின் பதிவுகள் அதிகம். கரிசாலையிலிருந்து பிறப்பெடுக்கும் ‘#கரிசாலை மை’ கண்களுக்கு அழகூட்டுவது மட்டுமல்லாமல், தலைவலியையும் கண் நோய்களையும் நீக்கும் ‘அஞ்சனமாக’ வழக்கத்திலிருந்தது!

பெயர்க்காரணம்:


கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உடையது.

கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர்.

அடையாளம்:


படர்ந்தும் சற்று நிமிர்ந்தும் வளரக்கூடிய சிறுசெடி. இலைகளின் மேற்பரப்பு சொரசொரப்பாக இருக்கும். வெள்ளை, மஞ்சள் நிற மலர்கள், இனத்தைப் பிரித்துக் காட்டும். ‘அஸ்டரேசியே’ (Asteraceae) குடும்பத்தைச் சார்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘எக்லிப்டா புரோஸ்ட்ரேடா’ (Eclipta prostrata). ‘விடிலோலேக்டோன்’ (Wedelolactone), ‘பீட்டா அமைரின்’ (Beta-amyrin), ‘லுடியோலின்’ (Luteolin) போன்ற முக்கியத் தாவர வேதிப்பொருட்கள் இதிலுள்ளன.

உணவாக:


கோடைக்கால மதிய வேளைகளில், நீர்மோரோடு கரிசாலை இலைச் சாற்றைச் சிறிதளவு கலந்து பருக, உடல் குளிர்ச்சியடைவதோடு, வெப்பச் சோர்வைச் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் கிடைக்கும். துவரம் பருப்பு சேர்த்து சமைத்த ‘கரிசாலை-பருப்புக் கடையலை’ அவ்வப்போது சுவைத்துவர, உடல் தளர்வடையாமல் தேவைக்கேற்ப உழைப்பதோடு கண்பார்வையும் கூர்மையடையும்.

பசியை அதிகரித்து ஊட்டங்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படவும் கரிசாலை உதவுகிறது. இதன் சாற்றுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து விழுங்க, தொண்டைவலி குணமாகும்; குடற் கிருமிகளையும் வெளியேற்றும். சுவாசப் பிரச்சினைகளுக்கான உணவாகக் கரிசாலையைப் பயன்படுத்தலாம். கரிசாலையின் பலன்களைப் பெற, இதன் சாற்றுடன் பனைவெல்லம் சேர்த்து, லேகிய பதத்தில் செய்து சுவையாகவும் சாப்பிடலாம். கொடம்புளியும் கரிசாலையையும் சம அளவு எடுத்து புன்னைக் காயளவு சாப்பிட்டுவர, மூல நோயின் தாக்கம் குறையும்.

மருந்தாக:



#கல்லீரல் செல்களுக்குப் புத்துயிர் அளித்து, ‘கல்லீரல் பாதுகாவலனாக’ செயல்படும் முக்கிய மூலிகை கரிசாலை என்று ஆய்வுகள் பதிவிடுகின்றன. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை முடுக்கிவிடும் ஆற்றல் (Immuno-stimulatory) படைத்தது கரிசாலை. புற்று செல்களுக்கு எதிரியாகச் செயல்படும் நுண்கூறுகளைக் கொண்டிருக்கிறது. ரத்தத்தில் #கொழுப்பு_வகைகள் அதிகரித்து விடாமல் கட்டுப்படுத்தும் ஆதாரமாகக் கரிசாலை செயல்படுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது. எதிர்-ஆக்ஸிகரணி தன்மை உடையதால், கரிசாலையை வைத்து பல்வேறு கற்ப மருந்துகள் வழக்கத்தில் உள்ளன. பொற்றலை கையாந்தக்கரை பொன்னிறமாக்கும் உடலை…’ எனும் அகத்தியர் பாடலின் மூலம், மஞ்சள் கரிசாலை யின் மேன்மையை அறியலாம்.

வீட்டு மருந்தாக:


குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலுக்கு, இதன் இலைச் சாறு இரண்டு துளியோடு தேன் சேர்த்துக் குழப்பி நாவில் தடவ, இயற்கையாய் இருமல் தணியும். இலைச் சாறு, #நல்லெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்தே, அக்கால கிராமங்களில் இருமலுக் கான டானிக்! கரிசாலையை #சூரணம் செய்து, இளநீரில் ஒரு மாதமும் தேனில் ஒரு மாதமும் உட்கொள்ள நரைதிரை மாறும் என்கிறது ‘தேரன் யமக வெண்பா’. இதன் இலைகளை மென்று சாப்பிட்டு வாய் கொப்பளிக்க, பல் ஈறு பலமடையும்.

‘அயச் செந்தூரம்’ எனும் சித்த மருந்தைக் கரிசலாங்கண்ணி சாற்றின் அனுபானத்தில் கொடுக்க, ரத்தக் குறைவு, உடல் வீக்கம் குணமாகும். ‘அயபிருங்கராஜ கற்பம்’ எனும் சித்த மருந்து, ரத்த சோகையில் சிறப்பாகச் செயல்படக் கூடியது. கரிசாலை, மிளகின் உதவியுடன் உருவாக்கப்படும் மாத்திரைகள், #காமாலை, உடல் வீக்கத்துக்கான பாரம்பரிய மருந்து.

கரிசாலை சூரணத்தோடு #திப்பிலி சூரணத்தைத் தேனில் குழைத்துக் கொடுக்க, சளி, இருமல் அமைதியடையும். கரிசாலை கற்ப மாத்திரை, கையான் எண்ணெய் என சித்த மருத்துவத்தில் பல்வேறு வகைகளில் பயன்படும் கரிசாலை, சில வகையான காமாலைக்கான அற்புத மருந்து.

#ஆமணக்கெண்ணெய், கரிசாலைச் சாறு, சிறிது பூண்டு சேர்த்து பதமாய்க் காய்ச்சி தயாரிக்கப்படும் மருந்து, பித்த நோய்களின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது. கரிசாலைச் சாறு, நெல்லிக்காய்ச் சாற்றின் உதவியுடன், நல்லெண்ணெய்யை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படும் தலைமுழுகும் எண்ணெய்யை அவ்வப்போது பயன்படுத்த, உடலில் அதிகரித்திருக்கும் பித்தம் சாந்தமடையும்.

கண், காது நோய்களுக்கான மருத்துவ எண்ணெய்யும்கூட! உள்ளுக்கு மருந்தாகப் பயன்படும் ‘கரிசாலை மடக்குத் தைலம்’, தோல் முதல் உள்ளுறுப்புகள்வரை வலுவைக் கொடுக்கக்கூடியது. கரிசாலைச் சாறு, செம்பரத்தை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்த, கூந்தல் ஆரோக்கியத்துக்கு நீண்ட நாள் உத்தரவாதம் கிடைக்கும்.

#கரிசாலை, #அம்மான்பச்சரிசி, #தும்பை, #மிளகு, ஆகியவற்றை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலக்கி, பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்க, சிறுநீர் எரிச்சல் குறைந்து, உடல் வீக்கம் வற்றும்.

கரிசாலை… உடல் நலமோடு பயணிக்க தேவையான இரும்புச்சாலை..!



[thanks]டாக்டர் வி.விக்ரம்குமார்
அரசு சித்த மருத்துவர் [/thanks]

#சித்த_மருத்துவம் #கரிசாலை #கரிசலாங்கண்ணி #இரும்புச்_சத்து #இயற்கை_மருத்துவம்





கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:25 pm

கரிசாலையிலிருந்து பிறப்பெடுக்கும் ‘கரிசாலை மை’ கண்களுக்கு அழகூட்டுவது மட்டுமல்லாமல், தலைவலியையும் கண் நோய்களையும் நீக்கும் ‘அஞ்சனமாக’ வழக்கத்திலிருந்தது!



உண்மைதான் சிவா. எனக்கு இன்றும் நினைவில் உள்ளது.எனது அந்த காலங்களில் ( 1948) 
கரிசலாங்கண்ணி கீரை வாங்கி அதை சாறெடுத்து, புதிதாக வாங்கிய மண் சட்டியில் 
அதன் வெளிப்புறத்தில் அந்த சாறை தடவி, சிறிய அகல் விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு 
பஞ்சு திரி கொண்டு பற்ற வைத்து படியும் கரும் புகை தூளை எடுத்து கண்ணுக்கு மை தயாரிப்பார்கள் .

இப்போது அதெல்லாம் கனவாகி போச்சு. 

ஏதாவது இது போல் பதிவுகள் வந்தால் மட்டும் நினைவுக்கு வருகிறது. அநியாயம் அநியாயம்

@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக