புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 21, 2022 12:12 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’

1 . தமிழ் எழுத்தாளர்களுக்கும் , புத்தகப் பதிப்பாசிரியர்களுக்கும் இடையே நடந்த அமைதிப் பூசல்தான் கதைக் கரு!

2 .வி.பி. (விக்ரமசிங்கபுரம் பலவேசம்பிள்ளை) , நல்ல தமிழ் எழுத்தாளர்; நாட்டுப் பற்று மிக்கவர். சிதம்பரலிங்கம் , ஆங்கிலப் பேராசிரியர்; ஆங்கிலத்தில் கதை எழுதியுள்ளவர். ’ ராம பத்மா பிரசுரகர்த்தர்கள் லிமிடெட்’ முதலாளி பத்மநாப ஐயர் (எல்.எஸ்.பி.) ; இவரது பங்காளி என்.பி.இராமலிங்கம். இந்த இரு பதிப்பக உரிமையாளர்களுக்கும், மேல் இரு எழுத்தாளர்களுக்கும் நடந்த உரசல்கள்தான் கதை! மோதல்கள் , இந்திய விடுதலைக்கு முன் 1945 காலக் கட்டத்தில் நடந்தவை; ஆனாலும் இன்றும் பொருந்துவதை அனுபவம் கொண்டோர் அறிவர்!

3 . பதிப்பாளர்கள் ‘நிசத்தில்’ , லேலோட்டமாக, எழுத்தாளர்களைப் புகழ்வார்கள்! ஆனால் , உள் நினைப்பில் கறுவுவார்கள்; கேலி பேசுவார்கள்; இழிவான பிறவியாக நினைப்பார்கள்! இதுதான் , ‘நிசமும் நினைப்பும்’!

4 . அன்று எதற்காகப் பதிப்பகத்திற்கு வந்தார் எழுத்தாளர் வி.பி.?:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Xp4LaYx

ஐந்து ரூபாய்க்காக எழுத்தாளர் , முதலாளிகள் முன்னால் எப்படி நின்றார்கள் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு! இப்போது ஐந்து ரூபாய் சிறிய தொகை; அன்று கணிசமான தொகை!
காங்கிரஸ் தியாகிகளாகத் , தமிழகம் முழுதும் மேடைகளில் முழங்கியோர் , தன் மகள்கள் திருமணத்திற்காகப் பதிப்பகத்தார்களிடம் எவ்வளவு கெஞ்சியுள்ளார்கள் என்பதை நான் அறிவேன்!
பணம் கடன் கேட்கும்போது , முழங்காலைத் தேய்த்துவிட்டார் பாருங்கள்! இதை இந்நாள் இளைய திரைப்பட இயக்குநர்கள் கவனிக்கவேண்டும்!

5 . எழுத்தாளர் வி.பி. கேட்ட ஐந்து ரூபாய் கிடைத்ததா?
அவ்வளவு எளிதாகக் கொடுத்துவிடுவார்களா? அப்படிக் கொடுத்தால் , ‘முதலாளி வர்க்கம்’ சிதைந்துவிடாது? என்ன சொன்னார் பதிப்பாளர் இராமலிங்கம்? :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ ERPTFxI

முதலில் , தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவிக்கிறார்! இது முதல் உத்தி! பிறகு, கடன் கேட்டவரைப் புகழ்ந்து, அவரின் சினத்தைத் தணிக்கிறார்! இஃது இரண்டாவது உத்தி!

6. சிதம்பரலிங்கத்தின் புகழ்ச்சியில் தான் மயங்கவில்லை , தனது வருத்தம் குறையவில்லை என்பதை எப்படிக் காட்டினார் எழுத்தாளர் வி.பி.?:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ 5xU3zAz

சக எழுத்தாளர் என்பதற்காகவாவது , சிதம்பலிங்கத்தைத் திட்டாமல் இருந்திருக்கலாம்! ஆனால் அவருக்குக் குறி பதிப்பாளர் இராமலிங்கம்தான்!

7 . பதிப்பாளர் இராமலிங்கம் , ‘என்ன சார்? சரி! உங்களையாவது உங்களுக்குப் பிடிக்குமா?’ என்று கேட்டதற்கு, எழுத்தாளர் வி.பி. , சூடாகச், சொன்னது!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ 66kInkU

ஓர் எழுத்தாளரின் மனக் கொதிப்பு இப் படம்!
8 . பதிப்பக முதலாளி எல்.எஸ்.பி. , அங்கு அப்போது வந்த ஆங்கிலப் பேராசிரியர் சிதம்பரலிங்கத்திடம், எழுத்தாளர் வி.பி.யைப் பற்றி வானளாவப் புகழ்ந்து தள்ளுகிறார்! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Ls7L9Uo

இப் புகழ்ச்சிக்கு என்ன பொருள்? ‘இதுதானப்பா எல்லை! இதற்கு மீறிப் பணம் அது இது என்று கேட்டுவிடாதீர்கள்! ’ என்பதே! இதுதான் ‘நினைப்பு’!

9 . ஆங்கிலப் பேராசிரியர் சிதம்பரலிங்கம், எழுத்தாளர் வி.பி.யைப் பார்த்ததும் என்ன கேட்டார்? :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ DRF6afl

எடுத்த எடுப்பிலேயே சாதியைக் கேட்கிறார் பாருங்கள்! கேட்கப்பட்டவரும் எந்தக் கோபமும் காட்டாமல் இயல்பாகப் பதில் சொல்கிறார் பாருங்கள்! 1945 நிலை இது!
இவ்வகையில் , புதுமைபித்தன் கதைகள் , நற்றும் பிறர் கதைகள் நல்ல வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன!

10 . ஒரு கட்டத்தில், ‘நான் உங்கள் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிநாட்டில் அச்சிடுகிறேன்’ என அந்த ஆங்கிலப் பேராசிரியர் சொன்னதும், என்ன நிலை வி.பி.க்கு?:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ 8GE3BUx

ஊத்தப்ப உருசியும் ஆங்கிலப் பேராசிரியர் மேதைத்தனமும் வி.பி. மனதுக்குள் போட்டி போட்டனவாம்!

மனிதனின் மன நிலைக்கும் நாக்கு உருசிக்கும் உள்ள நுணுக்கமான தொடர்பை நமக்குச் சொல்லித் தருகிறார் புதுமைப்பித்தன் இங்கே!

11 . பதிப்பக முதலாளி எல்.எஸ்.பி , ‘வி.பி. , ஆங்கிலப் பேராசிரியர், இலக்கியத் திறனாய்வு (Literary criticism) பற்றி ஒரு நூல் எழுதப்போறார்!’ என்றார். அதற்கு வி.பி. , ‘சபாஷ்! இப்போது அதுதான் தேவை! இது தெரியாமல்தான் எல்லோரும் மாடு பருத்திக் கொட்டையைத் தின்பது போல ஏதோ வாசிக்கிறா!’ என்றார்! சொன்னது யார்? சற்று முன்பு , ‘அவனுக்குத் தமிழைப் பற்றி என்ன தெரியும்? இங்கிலீசைப் பற்றித்தான் என்ன தெரியும்?’ என்ற அதே வி.பி.தான்!
இங்கே புதுமைப்பிததன் என்ன சொல்ல வருகிறார்?
‘ஐயா! பதிப்பகத்தார்தான் எழுத்தாளர்களை நசுக்குகிறார்கள்! ஆனால் எழுத்தாளர்களாவது மொழியைப் பொருட்படுத்தாமல் ஒற்றுமையாக இருக்கக் கூடாதா?’ என்பதையே!

12 . பதிப்பகத்தை விட்டு வெளியே கிளம்புகையில் , தமிழ் எழுத்தாளர் வி.பி., பதிப்பக முதலாளி எல்.எஸ்.பி.யிடம் , என்ன கேட்டார்?:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ BzAehgB

தமிழ் படித்தவர் அனைவருமே கூனிக் குறுகவேண்டிய இடம் இது! ஆனால் உண்மை இது! துளியும் கற்பனை இல்லை! இப்படிப்பட்ட காட்சிகளை நானே நேரில் கண்டு வேதனைப்பட்டுள்ளேன் 1980களில்!
அதிலும் பாருங்கள் , தமிழ் எழுத்தாளர் வி.பி. , ஆங்கிலத்தில் ‘எயிட் அனாஸ்’ என்கிறார்! ‘எட்டணா’ என்று தமிழில் சொன்னால் கேவலமாம்! வேறொரு மொழியில் கேட்டால், கேவலம் கொஞ்சம் மட்டுப்படுமாம்! இது மக்களின் ஓர் உளவியல்தான்!

13 . தமிழ் எழுத்தாளரும் ஆங்கில எழுத்தாளரும் போனபின், பதிப்பகப் பங்காளி இராமலிங்கம் இப்படிச் சொல்லலானார் முதலாளி எல்.எஸ்.பி.யிடம்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ XlE12Ae

‘பித்துக்குளி’, ‘நாய்’, ‘பயகள்’ – தமிழ் எழுத்தாளர்களைப் பதிப்பாளர்கள் ‘அழைத்த’ பட்டங்கள்!
பதிப்பாளர்கள், ஒரு துருப்புச் சீட்டு வைத்திருப்பார்கள்! எழுத்தாளர்கள் , பணம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக, ‘ இப்போ எல்லாம் யாரு புத்தகம் வாசிக்கிறா? உங்க புத்தகம் அந்தா கட்டிக்கட்டி அப்படியே கெடக்குது!’ என்று ஒரு போடு போடுவார்கள்!

14 . ஆங்கிலப் பேராசிரியர் பற்றிப் பதிப்பக முதலாளி எல்.எஸ்.பி. :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ L4YhQox

ஆங்கிலப் பேராசிரியர் புத்தகம் வந்தால் பாடப் புத்தகமாக வைக்கலாம் என்ற திட்டத்துடன் அவர்தான் ஐநூறு ரூபாய்க்குக் காசோலை கொடுத்தார்! அது நிசம்! ஆனால், நினைப்பு ? மேலே பார்த்தோம்!

15 . புதுமைப்பித்தன் உண்மையை எப்படிப் போட்டு உடைக்கிறார் பாருங்கள்! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Tgq6TlA

பதிப்பாளர்களின் மன ஆவணம் இது! அவர்களின் ‘நினைப்பு’!

16 . தமிழ் எழுத்தாளர் வி.பி. தன் அறைக்குத் திரும்புவதற்கு முள் அவருள் ஓடிய கற்பனை நிகழ்வை வரைகிறார் ஆசிரியர்! இதன்மூலம் அத் தமிழ் எழுத்தாளரின் நொறுங்கிய இதயத்தை நமக்குப் புலப்படுத்தி விடுகிறார் அவர்! எழுத்தாளரின் கருத்துகளை வரைவதற்காக அந்த எழுத்தாளர் ஒதுக்கிக்கொள்ளும் இடம் (spce) இது!

17 . பதிப்பக முதலாளி எல்.எஸ்.பி. , பத்து ரூபாயையும் , ஐந்துநாட்கள் கழித்துத் தேதியிட்ட காசோலை ஒன்றையும் பங்காளி மூலம் அனுப்பி , வி.பி.யிடம் கொடுக்கச் செய்தார். அந்தக் காசோலையைப் பெருமையாக வீட்டுக்காரருக்கு அனுப்ப, அது பணமாகாமல் வங்கியிலிருந்து திரும்பி வந்துவிட்டது! எப்படி இருக்கும் எழுத்தாளர் வி.பி.க்கு?

18 . காசோலை திரும்பியதைப் பற்றிப் பதிப்பகத்தார் கவலைப்படவே இல்லை! இந்த இடத்தில் நையாண்டியாக எழுதுகிறார் புதுமைப்பித்தன்! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ LBx6PhY

19 . முதலாளி எல்.எஸ்.பி. , வி.பி. அறைக்கு வந்து , ‘உங்கள் புத்தகம் நேர்த்தியாக வந்துள்ளது’ எனக் கூறிப் புகழ்ந்தார்! அப்போது, வி.பி. , ‘வீட்டுக்காரன் அறையைக் காலி செய்ய நோட்டீஸ் கொடுத்துட்டான்!’ என்று கூறவே, முதலாளி, சொன்னது:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ Ju9Dyl4

எப்படி?
தன் பதிப்பகத்திற்கு நிரந்தரமாகப் ‘புரூப்’ திருத்த , சம்பளம் கொடுக்கத் தேவையில்லாத ஒரு கொத்தடிமையைக் கண்டு , கூடவே கூட்டிக்கொண்டு போகும் முதலாளித்துவப் பொருளாதாரம்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 21, 2022 1:24 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ 103459460 சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ 3838410834
-
புதுமைப் பித்தனின் ‘நிசமும் நினைப்பும்’ சிறுகதை, கல்கி இதழில்
(ஏப்ரல்,1945) பிரசுரம் ஆகியுள்ளது.
-
இக்கதைதை முழுமையாக தினமணி 10-07-2020 ல் மீள் பதிப்பாக
பிரசுரம் செய்துள்ளது.
-
புதுமைப் பித்தனின் 108 சிறுகதைகளை சென்னை நூலகம் வலையில்
ஆன்லைனில் படிக்க இயலும்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக