புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
32 Posts - 42%
heezulia
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
1 Post - 1%
jothi64
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
398 Posts - 49%
heezulia
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
26 Posts - 3%
prajai
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_m10ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 22, 2017 3:54 pm

ஆமையிடம் தோற்றதிலிருந்து முயல் கடுகடுவென்று இருந்தது . தனக்குத்தானே புலம்ப ஆரம்பித்துவிட்டது .

" சே ! ஒரு சோம்பேறிப் பயலிடம் போய் தோற்றுவிட்டோமே ! எல்லா மிருகங்களும் என்னைக் கேலிசெய்ய ஆரம்பித்துவிட்டன . நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துவிடலாம் என்று இருக்கிறது . பேசாமல் அவன்பாட்டுக்கு சென்றுகொண்டிருந்தான் . நான்தான் வலியப்போய் வம்புக்கு இழுத்தேன் . என்னோடு ஓட்டப்பந்தயத்துக்கு வருகிறாயா ? என்று கேட்டேன் . முதலில் அவன் மறுத்தான் . நான்தான் விடாமல் அவனை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தேன் .  நான் ஓடுகின்ற ஓட்டத்திற்கு நானல்லவா ஜெயித்திருக்கவேண்டும் ! எல்லாம் என்னுடைய திமிர் , ஆணவம் , கர்வம் என்னைத் தோற்கடித்துவிட்டது . அந்தப் பாழாய்ப்போன தூக்கம் வந்திருக்காவிட்டால் நான்தான் ஜெயித்திருப்பேன் . காட்டு ராஜா சிங்கத்தையே கிணற்றில் தள்ளிக் கொன்றவன் நான் ! கேவலம் ஒரு ஆமையிடம் தோற்றுவிட்டேன் . எனக்கு ஏற்பட்ட இந்தக் களங்கத்தை நான் துடைத்தே ஆகவேண்டும் .

மீண்டும் அவனைப் போட்டிக்கு அழைத்து வென்று காட்டுவேன் . அப்போதுதான் போன மானம் திரும்ப வரும் . அதுவும் இன்றே போட்டிக்கு அழைப்பேன் ! "

என்று சொல்லிய முயல் ஆமையின் வீட்டுக்குச் சென்றது .

" அடேய் ! வெளியே வா ! உன்னுடன் கொஞ்சம் பேசவேண்டும் ! "

" யாரது ? "

" நான்தான் முயல் பேசுகிறேன் ; கொஞ்சம் வெளியில் வா ! உன்னுடன் பேசவேண்டும் ! "

ஆமை , மெதுவாக வெளியில் வந்து எட்டிப்பார்த்தது . முயலைக் கண்டதும்

" வாங்க ! முயலண்ணா ! என்ன இந்தப் பக்கம் ? "

" மறுபடியும் நாம் இருவரும் ஓட்டப்பந்தயம்  ஓடுவோம் ! அதுவும் இன்றே ஓடவேண்டும் ; தயாரா இரு ! '

" நேற்றுதானே ஓடினோம் ; மறுபடியும் ஏன் ஓடவேண்டும் ? இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்ளலாமே ! "

" அதெல்லாம் முடியாது ; இன்றே ஓடவேண்டும் ! நரியே நடுவராக இருக்கட்டும் ! வா ! நரி வீட்டுக்குப் போவோம் . "

" இல்லை ; முயலண்ணா ! நேற்று பந்தயம் ஓடியது காலெல்லாம் வலிக்கிறது ; இன்று என்னால் முடியாது ; எனக்கு ஓய்வு தேவை . மேலும் இன்று மழை வரும்போல் இருக்கிறது . ஆகவே பந்தயத்தை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் ."

" அதெல்லாம் முடியாது ; இன்றே பந்தயத்தை வைத்துக் கொள்வோம் ! வா ! நரியண்ணா வீட்டுக்குப் போவோம் . அவரே நடுவராக இருந்து பந்தயத்தை நடத்தட்டும் .

வேறு வழியின்றி , ஆமை வீட்டைப் பூட்டிவிட்டு முயலுடன் கிளம்பியது . இருவரும் நரியின் வீட்டை அடைந்தார்கள் .நரியிடம் பந்தயம் நடத்துவது பற்றி முயல் பேசியது .

அதற்கு நரி , " நேற்று நடந்த பந்தயத்தில் நீ தோற்றுப் போனாய் ! மறுபடியும் இன்று எதற்காகப் பந்தயம் நடத்தவேண்டும் ? "

" அதெல்லாம் முடியாது ; இன்று கண்டிப்பாக பந்தயத்தை நடத்தவேண்டும் . பந்தயத்தில் நான் ஆமையை வென்றால்தான் எனக்கு ஏற்பட்ட அவமானத்தை நான் போக்கிக் கொள்ளமுடியும் . மற்ற மிருகங்களிடம் தலை நிமிர்ந்து பேசமுடியும் ." என்றது முயல் .

நான் சொல்வதைக்கேள் ! இன்று மழை வரும்போல் இருக்கிறது ; நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் " என்றது நரி.

வேறு வழியின்றி முயல் ஒத்துக்கொண்டது .

' காலை 10 மணிக்கு வந்துவிடுங்கள் ; நேற்று ஓடிய இடத்திலேயே பந்தயத்தை வைத்துக்கொள்வோம் . எல்லா மிருகங்களுக்கும் சொல்லிவிடுகிறேன் ' என்றது நரி .
மறுநாள் காலை 10 மணி .

முயலுக்கும் , ஆமைக்கும் நடக்கும் ஓட்டப் பந்தயத்தைக் காண எல்லா மிருகங்களும் கூடிவிட்டன .
நடுவராக இருந்த நரி , ஊளையிட்டு ஓட்டப் பந்தயத்தை தொடங்கி வைத்தார் .

அவ்வளவுதான் ! முயல் பிய்த்துக்கொண்டு ஒடத் தொடங்கியது . ஆமை மெதுவாக நகரத் தொடங்கியது . ஆனாலும் நம்பிக்கையை இழக்கவில்லை . முயல் மிகவும் கர்வமாக திரும்பிப் பார்த்தது . ஆமை கிளம்பிய இடத்திலேயே இருந்தது . தன் வெற்றி உறுதி என்று நினைத்த முயல் கெக்கலி கொட்டி சிரித்தது . முயலுக்கு இன்னும் சில அடி தூரமே பாக்கியிருந்தது .  வெற்றிக்கம்பத்தைத் தொட்டுவிடுவோம் என்று முயல் நினைத்த மாத்திரத்தில் , அதற்கு அங்கே பேரிடி காத்திருந்தது . ஆம் ! முந்தாநாள் பெய்த மழையில் , வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடிக்கொண்டிருந்தது .அந்த ஆற்றைக் கடந்தால்தான் வெற்றிக் கம்பத்தைத் தொடமுடியும் . முயலுக்கு என்னசெய்வதென்று தெரியவில்லை . வேறுவழி ஏதாகிலும் இருக்கிறதா என்று சுற்றி சுற்றிப் பார்த்தது . எந்த வழியும் தென்படவில்லை .

இதற்கிடையில் ஆமை மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது . நேரம் சென்றுகொண்டே இருந்தது . முயலால் ஆற்றைக் கடக்கமுடியவில்லை . இதற்கிடையில் ஆமை ஆற்றின் அருகில் வந்துவிட்டது . எதிரே ஓடும் ஆற்றைப் பார்த்த ஆமை , கொஞ்சமும் அஞ்சாமல் , ஆற்றில் இறங்கி மறு கரையை  அடைந்தது . மிக எளிதாக வெற்றிக் கம்பத்தைத் தொட்டது . ஆமை மீண்டும் வெற்றி பெற்றதாக நரி அறிவித்தது .

முயலுக்கு அவமானம் தாங்க முடியவில்லை . எல்லா  மிருகங்களும் முயலைப் பார்த்து , " இது உனக்குத் தேவையா ? " என்று கேட்டன .

முயல் தனக்குள்ளே , " ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது " என்று முணு முணுத்துக் கொண்டது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 22, 2017 6:33 pm

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது 103459460 ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது 3838410834
-

இதன் மூலம் நாம் அறிவது :
நம்முடைய போட்டியாளரின் பலமறிந்து,
பிறகு தன்னுடைய பலத்திற்கேற்ப போட்டியிடும்
களத்தை முடிவு செய்ய வேண்டும்.
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 22, 2017 7:39 pm

முதலைக்கு நீரிலே பலம் அதிகம் ; யானைக்கு நிலத்திலே பலம் அதிகம் . நீரிலுள்ள முதலையுடன் யானை போரிட்டால் தோற்றுத்தான் போகும் . நிலத்திலே போரிட்டால் யானை வென்றுவிடும் .எனவே  போரிடுவதில் பலத்தைக் காட்டிலும் , போரிடும் களம் முக்கியம் .

நெடும்புனலுள் வெல்லும் முதலை , அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற .

என்பார் ஐயன் வள்ளுவர் .

இந்தக் கதையைப் பொறுத்தவரையில் ஓடுகளம்  ஆமைக்கு சாதகமாக இருந்தது ; எனவே போட்டியில் வென்றுவிட்டது . முயலுக்குப் பாதகமாக இருந்தது ; அதனால் தோற்றுவிட்டது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 22, 2017 8:26 pm

நல்ல கற்பனை M ஜெகதீசன்.
உங்கள் சிறு கதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள்.
வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 22, 2017 8:32 pm

ஐயா !

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 18, 2021 11:43 pm

மிக அருமையான கதை ஐயா புன்னகை.... சூப்பருங்க ,,,நான் கொஞ்சம் வேறு மாதிரி என் வீடியோவில் சொல்லி இருக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக