புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னடச் சிறுவர் கதைகள் (50)
Page 8 of 8 •
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
கன்னடச் சிறுவர் கதைகள் (1)
தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !
“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!
“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.
ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!
ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!
முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.
தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!
“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***
கன்னடச் சிறுவர் கதைகள் (1)
தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !
“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!
“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.
ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!
ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!
முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.
தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!
“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
- Code:
இதற்குத்தான் சொல்வது, யாருக்கு என்ன சக்தி உள்ளதோ அதற்குத் தகுந்தாற் போலக் காரியங்களில் ஈடுபட வேண்டும்
முற்றிலும் உண்மை,நல்ல நீதி போதனை.
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னடச் சிறுவர் கதைகள் (48)
பூசாரியும் முதலையும் !
ஒரு சின்னக் குளத்தில் ஒரு முதலை இருந்தது!
அதற்கு ஓர் ஆசை வந்தது!
கங்கையில் வாழவேண்டும் என்பதே அந்த ஆசை!
அப்படி இருக்கும்போது, அந்தக் குளத்தருகே ஒரு பிராமணன் வந்துகொண்டிருந்தான்! அப்போது முதலை, “பிராமணனே! இப்படி வாரும்! என்னைக் கங்கைக் கரையில் கொண்டுபோய் விடு! உனக்குப் பெரும் புண்ணியம் வரும்! நான் கங்கை வழியே காசிக்குச் சென்று மீண்டும் பிறக்காத நிலையை அடைய வேண்டும்! அவ்வளவுதான்!” என்றது.
முதலையின் பேச்சை நம்பி அதற்கு உதவி செய்யப் பிராமணன் நினைத்தான்!
ஒரு சாக்குப் பையில் முதலையைப் போட்டுத் தோளில் சுமந்தபடி சென்று,கங்கை அருகே இறக்கி வைத்தான்! முதலையைச் சாக்கிலிருந்து விடுவித்தான்!
ஆனால் முதலை, திடீரென்று பிராமணன் காலைக் கவ்வியது! “உன்னைத் தின்னப் போகிறேன்!”என்றது!
“ஐயோ! நீ இப்படிச் செய்யலாமா? உனக்கு உதவியதற்கு எனக்கு இதுதான் பலனா? ” என்றான் பிராமணன்!
“நியாயம் பேசாதே! நானா நன்றி கெட்டவன்? வேண்டுமானால் மூன்று நியாயவாதிகளிடம் போய்ச் சொல்லலாம்! முதலை மனிதனைத் தின்பது பழக்கம்தான் என்று சொல்வார்கள்!” என்று மூன்று பேரிடம் பஞ்சாயத்திற்குச் செல்ல இருவரும் சென்றனர்!
முதலில் பிராமணனும் முதலையும் ஒரு மாமரம் அருகே சென்று , நடந்ததைக் கூறி நியாயம் கேட்டனர்!
அதற்கு மாமரம், “மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்! நான் பழம் தருவேன்! எனது நிழலில் தங்கிக் கொள்வார்கள்! ஆனால் கடைசியில் என்னையே ஒரு நாள் வெட்டிவிடுவார்கள்!” என்றது கோபமாக!
அடுத்து, ஒரு பசுவிடம் போனார்கள் நியாயம் கேட்க!
வழக்கைக் கேட்ட பசு, “மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்! நான் பால் தருவேன் தினமும்! ஆனால் எனக்கு வயதானால் என்னை இறைச்சிக்கடைக் காரனுக்குத் தள்ளிவிடுவார்கள்! ” என்றது!
மூன்றாவதாக நரியிடம் போனார்கள் நியாயம் கேட்க!
“சரி! முதலில் நீங்கள் இருவரும் குளத்திலிருந்து எப்படிக் கங்கை வரை பயணம் செய்தீர்கள்? அதைச் சொல்லுங்கள்” எனக் கேட்டது நரி!
“இதோ இப்படித்தான் முதலையைச் சாக்குக்குள் போட்டுக்கொண்டு, தோளில் தூக்கி வந்தேன்” என்ற பிராமணன், சாக்குக்குள் முதலையைப் புகவிட்டான்!
முதலை சாக்குக்குள் போனதும், நரி சட்டென்று சாக்கின் வாயைக் காலால் அழுத்தி மூடிவிட்டது!
பிராமணனும் சாக்கைக் கட்டிப் போட்டுவிட்டுத் தன் வழியே நடக்கலானான்!
நன்றியில்லாமல் யாரும் இருக்கக் கூடாது! உதவி செய்தவருகே தீங்கு செய்யக் கூடாது!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***
பூசாரியும் முதலையும் !
ஒரு சின்னக் குளத்தில் ஒரு முதலை இருந்தது!
அதற்கு ஓர் ஆசை வந்தது!
கங்கையில் வாழவேண்டும் என்பதே அந்த ஆசை!
அப்படி இருக்கும்போது, அந்தக் குளத்தருகே ஒரு பிராமணன் வந்துகொண்டிருந்தான்! அப்போது முதலை, “பிராமணனே! இப்படி வாரும்! என்னைக் கங்கைக் கரையில் கொண்டுபோய் விடு! உனக்குப் பெரும் புண்ணியம் வரும்! நான் கங்கை வழியே காசிக்குச் சென்று மீண்டும் பிறக்காத நிலையை அடைய வேண்டும்! அவ்வளவுதான்!” என்றது.
முதலையின் பேச்சை நம்பி அதற்கு உதவி செய்யப் பிராமணன் நினைத்தான்!
ஒரு சாக்குப் பையில் முதலையைப் போட்டுத் தோளில் சுமந்தபடி சென்று,கங்கை அருகே இறக்கி வைத்தான்! முதலையைச் சாக்கிலிருந்து விடுவித்தான்!
ஆனால் முதலை, திடீரென்று பிராமணன் காலைக் கவ்வியது! “உன்னைத் தின்னப் போகிறேன்!”என்றது!
“ஐயோ! நீ இப்படிச் செய்யலாமா? உனக்கு உதவியதற்கு எனக்கு இதுதான் பலனா? ” என்றான் பிராமணன்!
“நியாயம் பேசாதே! நானா நன்றி கெட்டவன்? வேண்டுமானால் மூன்று நியாயவாதிகளிடம் போய்ச் சொல்லலாம்! முதலை மனிதனைத் தின்பது பழக்கம்தான் என்று சொல்வார்கள்!” என்று மூன்று பேரிடம் பஞ்சாயத்திற்குச் செல்ல இருவரும் சென்றனர்!
முதலில் பிராமணனும் முதலையும் ஒரு மாமரம் அருகே சென்று , நடந்ததைக் கூறி நியாயம் கேட்டனர்!
அதற்கு மாமரம், “மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்! நான் பழம் தருவேன்! எனது நிழலில் தங்கிக் கொள்வார்கள்! ஆனால் கடைசியில் என்னையே ஒரு நாள் வெட்டிவிடுவார்கள்!” என்றது கோபமாக!
அடுத்து, ஒரு பசுவிடம் போனார்கள் நியாயம் கேட்க!
வழக்கைக் கேட்ட பசு, “மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்! நான் பால் தருவேன் தினமும்! ஆனால் எனக்கு வயதானால் என்னை இறைச்சிக்கடைக் காரனுக்குத் தள்ளிவிடுவார்கள்! ” என்றது!
மூன்றாவதாக நரியிடம் போனார்கள் நியாயம் கேட்க!
“சரி! முதலில் நீங்கள் இருவரும் குளத்திலிருந்து எப்படிக் கங்கை வரை பயணம் செய்தீர்கள்? அதைச் சொல்லுங்கள்” எனக் கேட்டது நரி!
“இதோ இப்படித்தான் முதலையைச் சாக்குக்குள் போட்டுக்கொண்டு, தோளில் தூக்கி வந்தேன்” என்ற பிராமணன், சாக்குக்குள் முதலையைப் புகவிட்டான்!
முதலை சாக்குக்குள் போனதும், நரி சட்டென்று சாக்கின் வாயைக் காலால் அழுத்தி மூடிவிட்டது!
பிராமணனும் சாக்கைக் கட்டிப் போட்டுவிட்டுத் தன் வழியே நடக்கலானான்!
நன்றியில்லாமல் யாரும் இருக்கக் கூடாது! உதவி செய்தவருகே தீங்கு செய்யக் கூடாது!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி ,அருமை.
அன்றே சொன்னார் திருவள்ளுவர் --நன்றி மறப்பது நன்றன்று.
அன்றே சொன்னார் திருவள்ளுவர் --நன்றி மறப்பது நன்றன்று.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னடச் சிறுவர் கதைகள் (49)
மச்சக் கன்னியர் இருவர் !
கடலுக்கு அடியில் ஒரு அரண்மனை! அதன் ராஜா, ஜல ராஜா!
ஜல ராஜாவுக்கு இரு மகள்கள்-பாயல் மற்றும் பிரீத்தி!
இருவரும் இரட்டைக் குழந்தைகள்!
ஒருவரைப் போலவே இன்னொருவர் இருப்பார்! வேறுபாடு காணவே முடியாது!
பல நேரங்களில் ஜல ராஜாவே இது பாயலா? பிரீத்தியா? என்று குழம்புவார்!
பாயல் நல்லவள்! இரக்கக் குணம் கொண்டவள்!
பிரீத்தி முற்றிலும் மாறுபட்டவள்!
பிறரைத் துன்புறுத்தித் தான் மகிழ்பவள்!
ஒரு நாள் பிரீத்தி, ஆக்டோபசை வம்புகிழுத்து, அதன் கைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டிவிட்டாள்! செய்வதறியாது ஆக்டோபஸ் முழித்தது!
பிறகு, அவ் வழியே வந்த பாயல் அதனைப் பார்த்து வருத்தப்பட்டு, உடனே கட்டவிழ்த்துவிட்டாள்!
இம்மாதிரி அநேகச் சம்பவங்கள்!
ஒரு நாள் மீன்பிடிப் படகு ஒன்று வந்தது! அதன் வலையில் , பாயல் மற்றும் பிரீத்தி இருவரும் சிக்கிக்கொண்டனர்!
“காப்பாற்றுங்கள் அப்பா! காப்பாற்றுங்கள் அப்பா!” எனக் கத்தினர்.
ஜல ராஜா வந்து எவ்வளவோ முயன்றும் வலையிலிருந்து இரு மகள்களையும் விடுவிக்க இயலவில்லை!
பாயல் வலையில் சிக்கிகொண்டதைக் கண்ட ஆக்டோபஸ், நண்டுகள் முதலிய யாவும் தவித்தன! “எப்படியாவது பாயலைக் காப்பாற்ற வேண்டும்”என்று பேசிக்கொண்டன!
எல்லாக் கடல் உயிரினங்களும் ஒன்று சேர்ந்து , வலையைச் சிதைத்தன!
பாயலும் பிரீத்தியும் வெளிவந்தனர்!
இதற்குத்தான் சொல்வது – பிறரிடம் அன்பு காட்டி, அவர்களிடம் நன்மதிப்பையும் அன்பையும் பெறவேண்டும் என்று!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***
மச்சக் கன்னியர் இருவர் !
கடலுக்கு அடியில் ஒரு அரண்மனை! அதன் ராஜா, ஜல ராஜா!
ஜல ராஜாவுக்கு இரு மகள்கள்-பாயல் மற்றும் பிரீத்தி!
இருவரும் இரட்டைக் குழந்தைகள்!
ஒருவரைப் போலவே இன்னொருவர் இருப்பார்! வேறுபாடு காணவே முடியாது!
பல நேரங்களில் ஜல ராஜாவே இது பாயலா? பிரீத்தியா? என்று குழம்புவார்!
பாயல் நல்லவள்! இரக்கக் குணம் கொண்டவள்!
பிரீத்தி முற்றிலும் மாறுபட்டவள்!
பிறரைத் துன்புறுத்தித் தான் மகிழ்பவள்!
ஒரு நாள் பிரீத்தி, ஆக்டோபசை வம்புகிழுத்து, அதன் கைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டிவிட்டாள்! செய்வதறியாது ஆக்டோபஸ் முழித்தது!
பிறகு, அவ் வழியே வந்த பாயல் அதனைப் பார்த்து வருத்தப்பட்டு, உடனே கட்டவிழ்த்துவிட்டாள்!
இம்மாதிரி அநேகச் சம்பவங்கள்!
ஒரு நாள் மீன்பிடிப் படகு ஒன்று வந்தது! அதன் வலையில் , பாயல் மற்றும் பிரீத்தி இருவரும் சிக்கிக்கொண்டனர்!
“காப்பாற்றுங்கள் அப்பா! காப்பாற்றுங்கள் அப்பா!” எனக் கத்தினர்.
ஜல ராஜா வந்து எவ்வளவோ முயன்றும் வலையிலிருந்து இரு மகள்களையும் விடுவிக்க இயலவில்லை!
பாயல் வலையில் சிக்கிகொண்டதைக் கண்ட ஆக்டோபஸ், நண்டுகள் முதலிய யாவும் தவித்தன! “எப்படியாவது பாயலைக் காப்பாற்ற வேண்டும்”என்று பேசிக்கொண்டன!
எல்லாக் கடல் உயிரினங்களும் ஒன்று சேர்ந்து , வலையைச் சிதைத்தன!
பாயலும் பிரீத்தியும் வெளிவந்தனர்!
இதற்குத்தான் சொல்வது – பிறரிடம் அன்பு காட்டி, அவர்களிடம் நன்மதிப்பையும் அன்பையும் பெறவேண்டும் என்று!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னடச் சிறுவர் கதைகள் (50)
மச்சக் கன்னி ஒருத்தி !
கடலுக்கு அடியில் மச்சக்கன்னி ஒருத்தி வாழ்ந்துவந்தாள்! அவள் பெரிய முத்துச் சிப்பியில் படுத்துறங்குவாள்!
ஒரு நாள் ஒரு சத்தம் கேட்டது!
“என்ன சத்தம்?” என்று கேட்டபடி, கடலுக்கு மேற் பகுதியில் வந்து பார்த்தாள்!
அப்போது, ரூபி என்ற இளைஞன் கடலில் சில பொருட்களை வீசிவிட வந்தான்!
வந்த ரூபி, மச்சக்கன்னியின் அழகைப் பார்த்து அசந்துபோனான்!
“யார் இவள்?” என்று யோசித்தபடி ,மச்சக்கன்னியிடம், “ஏ பெண்ணே! யார் நீ? கடலில் என்ன செய்கிறாய்?’’ எனக் கேட்டான்.
“நான் மச்சக்கன்னி! இங்கேயே வசிப்பவள்! நீ யார்?” என்று கேட்டாள்.
“நான் மனிதன்! ரூபி என்று பெயர்!”எனப் பதில் சொன்னான்.
“மனிதனா? மனிதன் என்றால் என்ன? உனக்கு இறக்கை இல்லையா? நீ எப்படி இங்கு வந்தாய் இறக்கை இல்லாமல்?’எனக் கேட்டாள் மச்சக்கன்னி.
“மனிதர்களுக்கு இறக்கை இல்லை!
உங்களைப் போல நீந்தத் தெரியாது! நான் ஒரு படகு மூலமாக இங்கு வந்துள்ளேன்!” – என ரூபி பதில் சொன்னான்!
“படகா? படகில் எதற்கு வருகிறீர்கள்? இங்கு என்ன வேலை உங்களுக்கு?”- மச்சக் கன்னி கேட்டாள்!
“நான் என் சிற்றப்பாவுடன் வந்துள்ளேன்! சிற்றப்பா ஒரு கடற் கொள்ளைக்காரர்! கப்பலில் வருபவர்களிடம் கொள்ளையடிப்பார்!” என்றான் ரூபி.
“அப்படியா? கொள்ளையடிப்பது நல்லதல்லவே? நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்?”என மச்சக்கன்னி கேட்டாள்.
“என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை! செலவுக்குப் பணம் இல்லை! அதனால் கொள்ளையடிக்கிறோம்” என்றான் ரூபி.
“ஏன்? உங்க அம்மாவுக்கு என்ன?”என்று கேட்டாள் மச்சக்கன்னி.
“நான், என் அப்பா மற்றும் சிலர் மீன் பிடித்து நன்றாக வாழ்ந்துவந்தோம்! ஒரு நாள் சுனாமி வந்து எங்களை அழித்துவிட்டது! வீடு, வாசல் இழந்தோம்! சுனாமியில் என் அப்பா இறந்தார்! என் அம்மா நோஇல் விழுந்தார்! மீன் படகு, வலைகள் நாசமாயின!
அன்றிலிருந்து என் சிற்றப்பா யோசனைப்படி, பணத்துக்காகக் கொள்ளையடிக்கிறோம்! தங்கம், வெள்ளி, நகைகள்முதலிய எல்லாவற்றையும் கொள்ளையடித்து, அவற்றை விற்றுப் பணம் பெறுவோம்!” என்றான் ரூபி.
“நகைகளை விற்றால் பணம் கிடைக்குமா? உன் அம்மா குணம் ஆவாரா?” எனக் கேட்டாள் மச்சக்கன்னி.
“ஆமாம்’’ என்றான் ரூபி.
“அப்படியானால் என்னோடு வா!’’ என்று கையைப் பிடித்து ரூபியைக் கடலுக்கு அடியில் கூட்டிச் சென்றாள் மச்சக்கன்னி.
“இதோ பார்! எல்லாம் நகைகள்! நீ வேண்டியவற்றை எடுத்துக்கொள்!”என்று நகைப் பெட்டிகளைக் காட்டினாள் மச்சக்கன்னி.
ரூபி ஒரு நகைப் பெட்டியை எடுத்துக்கொண்டான்!
இருவரும் கடலின் மேற்பகுதியில் அவர்கள் வந்த படகின் அருகில் வந்து சேர்ந்தனர்!
“இந்த நகைகளைக் கொண்டு , உன் அம்மாவைக் காப்பாற்று! மறுபடியும் இங்கு வந்தால் என்னைப் பார்!”என்று ரூபியை வழியனுப்பி வைத்தாள் மச்சக்கன்னி.
நிலப் பரப்பில் மட்டுமல்லாது, நீருக்குள்ளும் அன்பே போற்றத் தக்கதாகப் பெருமையுடன் நிற்கிறது! அன்பே,பிறரை வசப்படுத்துகிறது!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***
மச்சக் கன்னி ஒருத்தி !
கடலுக்கு அடியில் மச்சக்கன்னி ஒருத்தி வாழ்ந்துவந்தாள்! அவள் பெரிய முத்துச் சிப்பியில் படுத்துறங்குவாள்!
ஒரு நாள் ஒரு சத்தம் கேட்டது!
“என்ன சத்தம்?” என்று கேட்டபடி, கடலுக்கு மேற் பகுதியில் வந்து பார்த்தாள்!
அப்போது, ரூபி என்ற இளைஞன் கடலில் சில பொருட்களை வீசிவிட வந்தான்!
வந்த ரூபி, மச்சக்கன்னியின் அழகைப் பார்த்து அசந்துபோனான்!
“யார் இவள்?” என்று யோசித்தபடி ,மச்சக்கன்னியிடம், “ஏ பெண்ணே! யார் நீ? கடலில் என்ன செய்கிறாய்?’’ எனக் கேட்டான்.
“நான் மச்சக்கன்னி! இங்கேயே வசிப்பவள்! நீ யார்?” என்று கேட்டாள்.
“நான் மனிதன்! ரூபி என்று பெயர்!”எனப் பதில் சொன்னான்.
“மனிதனா? மனிதன் என்றால் என்ன? உனக்கு இறக்கை இல்லையா? நீ எப்படி இங்கு வந்தாய் இறக்கை இல்லாமல்?’எனக் கேட்டாள் மச்சக்கன்னி.
“மனிதர்களுக்கு இறக்கை இல்லை!
உங்களைப் போல நீந்தத் தெரியாது! நான் ஒரு படகு மூலமாக இங்கு வந்துள்ளேன்!” – என ரூபி பதில் சொன்னான்!
“படகா? படகில் எதற்கு வருகிறீர்கள்? இங்கு என்ன வேலை உங்களுக்கு?”- மச்சக் கன்னி கேட்டாள்!
“நான் என் சிற்றப்பாவுடன் வந்துள்ளேன்! சிற்றப்பா ஒரு கடற் கொள்ளைக்காரர்! கப்பலில் வருபவர்களிடம் கொள்ளையடிப்பார்!” என்றான் ரூபி.
“அப்படியா? கொள்ளையடிப்பது நல்லதல்லவே? நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்?”என மச்சக்கன்னி கேட்டாள்.
“என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை! செலவுக்குப் பணம் இல்லை! அதனால் கொள்ளையடிக்கிறோம்” என்றான் ரூபி.
“ஏன்? உங்க அம்மாவுக்கு என்ன?”என்று கேட்டாள் மச்சக்கன்னி.
“நான், என் அப்பா மற்றும் சிலர் மீன் பிடித்து நன்றாக வாழ்ந்துவந்தோம்! ஒரு நாள் சுனாமி வந்து எங்களை அழித்துவிட்டது! வீடு, வாசல் இழந்தோம்! சுனாமியில் என் அப்பா இறந்தார்! என் அம்மா நோஇல் விழுந்தார்! மீன் படகு, வலைகள் நாசமாயின!
அன்றிலிருந்து என் சிற்றப்பா யோசனைப்படி, பணத்துக்காகக் கொள்ளையடிக்கிறோம்! தங்கம், வெள்ளி, நகைகள்முதலிய எல்லாவற்றையும் கொள்ளையடித்து, அவற்றை விற்றுப் பணம் பெறுவோம்!” என்றான் ரூபி.
“நகைகளை விற்றால் பணம் கிடைக்குமா? உன் அம்மா குணம் ஆவாரா?” எனக் கேட்டாள் மச்சக்கன்னி.
“ஆமாம்’’ என்றான் ரூபி.
“அப்படியானால் என்னோடு வா!’’ என்று கையைப் பிடித்து ரூபியைக் கடலுக்கு அடியில் கூட்டிச் சென்றாள் மச்சக்கன்னி.
“இதோ பார்! எல்லாம் நகைகள்! நீ வேண்டியவற்றை எடுத்துக்கொள்!”என்று நகைப் பெட்டிகளைக் காட்டினாள் மச்சக்கன்னி.
ரூபி ஒரு நகைப் பெட்டியை எடுத்துக்கொண்டான்!
இருவரும் கடலின் மேற்பகுதியில் அவர்கள் வந்த படகின் அருகில் வந்து சேர்ந்தனர்!
“இந்த நகைகளைக் கொண்டு , உன் அம்மாவைக் காப்பாற்று! மறுபடியும் இங்கு வந்தால் என்னைப் பார்!”என்று ரூபியை வழியனுப்பி வைத்தாள் மச்சக்கன்னி.
நிலப் பரப்பில் மட்டுமல்லாது, நீருக்குள்ளும் அன்பே போற்றத் தக்கதாகப் பெருமையுடன் நிற்கிறது! அன்பே,பிறரை வசப்படுத்துகிறது!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
தேவதைகள் என்றுமே மற்றவர்க்கு நன்மை செய்பவைதான். மச்சக்கன்னியும் ஒரு தேவதைத்தானோ?
மச்சக்கன்னிக்கும் ஒரு பெயரை வைத்திருக்கலாம்.
'ரூபி கடல் கொள்ளை தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ்ந்தான்' எனக் கடைசியில் ஒரு வரியை சேர்த்திருக்கலாம்!!!
.
மச்சக்கன்னிக்கும் ஒரு பெயரை வைத்திருக்கலாம்.
'ரூபி கடல் கொள்ளை தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ்ந்தான்' எனக் கடைசியில் ஒரு வரியை சேர்த்திருக்கலாம்!!!
.
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி நிஜாமுதீன் அவர்களே!
உன்னிப்பான தங்களின் வாசிப்பு அருமை! தாங்கள் சொல்வது சரியே! ஆனால், கன்னடத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நான் தரமுடியும்; நானாக ஒன்றைச் சேர்க்கக் கூடாது; மொழிபெயர்ப்பு நெறி இது.
உன்னிப்பான தங்களின் வாசிப்பு அருமை! தாங்கள் சொல்வது சரியே! ஆனால், கன்னடத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நான் தரமுடியும்; நானாக ஒன்றைச் சேர்க்கக் கூடாது; மொழிபெயர்ப்பு நெறி இது.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
@Dr.S.Soundarapandian...
தங்களின் நெறி பற்றிய கருத்து உண்மையே!
மேலும் எனது இவ்விமர்சனம்
கன்னட மூலக் கதைக்கானதாக எடுத்துக் கொள்ளவும்!
அங்கே, பதிவிட முடியாததாகையால் இங்கு பதிவிட்டேன்!
நன்றி முனைவர் அவர்களே!
தங்களின் நெறி பற்றிய கருத்து உண்மையே!
மேலும் எனது இவ்விமர்சனம்
கன்னட மூலக் கதைக்கானதாக எடுத்துக் கொள்ளவும்!
அங்கே, பதிவிட முடியாததாகையால் இங்கு பதிவிட்டேன்!
நன்றி முனைவர் அவர்களே!
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 8
|
|