புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_vote_lcapஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_voting_barஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
உருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_vote_lcapஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_voting_barஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
உருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_vote_lcapஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_voting_barஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
உருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_vote_lcapஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_voting_barஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
உருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_vote_lcapஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_voting_barஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 20, 2021 6:55 am

உருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா? 728015
-
திரையரங்குகளில் மட்டுமே வெளியான திரைப்படங்கள் இப்போது ஓடிடி தளங்கள் வழியாக வீட்டுக்கே வந்துவிட்டன. ஆனால், படத்தில் பேசப்படும் கருத்துகள் மாறவேயில்லை. திரைக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் உருவக் கேலிகளை வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சக மனிதரின் குறைபாடுகளைக் கேலிசெய்து இன்பம் காணும் குரூர மனநிலை வந்துவிட்டது, கசப்பான உண்மை.

கண்ணியம் மீறிய கவுண்டமணி

‘கட்டபொம்மன்’ திரைப்படத்தில் மில்லில் வேலை கேட்டு வரும் நடுத்தர வயதைத் தாண்டிய பெண்ணின் பெயரைக் கேட்டதும், “சங்கு ஊதுற வயசுல சங்கீதாவா?” என கவுண்டமணி அலட்சியம் செய்வார். அங்கு வேலை தேடி வரும் திருநங்கையை கிண்டல் செய்து, வேலை தராமல் துரத்துவார். ஏன், அவர்கள் எல்லாம் வேலை செய்யத் தகுதியற்றவர்களா?

காலம் மாறிவிட்டாலும் பிற்போக்குத்தனங்களுக்கு இன்னும் முடிவுகட்டப்படாததுதான் சோகம். ஒருவரின் நிறம், வயது, உடல் எடை, தோற்றத்தை வைத்துக் கிண்டல் செய்வது இன்றும் தொடர்கிறது. சமீபத்தில் வெளிவந்த படங்களே அதற்கான சாட்சி.

சந்தானத்தின் பொறுப்பற்றதனம்

ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் விஞ்ஞானியை சர்வ சாதாரணமாக சைடு ஸ்டேண்ட் என்று ‘டிக்கிலோனா’ படத்தில் கேவலப்படுத்தியுள்ளார் சந்தானம். பெண்களைப் பற்றி அவர் எல்லை மீறிப் பேசுவதும், ஆபாச அர்ச்சனை செய்வதும், அறிவுரை என்ற பெயரில் வகுப்பெடுப்பதும் ஆணாதிக்கத்தின் உச்சம்.

‘என்றென்றும் புன்னகை’ படத்தில் “5.10-க்குப் போறேன்” என ஒரு பெண் கூற, “ஏன் நல்லாத்தானே இருக்கே 500, 1000-க்குக்கூடப் போலாமே” என்று சந்தானம் கூறுவார். அந்தப் பெண் சொல்வது அலுவலகப் பணி முடித்து வீட்டுக்குச் செல்லும் நேரத்தை… சந்தானம் சொல்வது என்ன? கண்டனங்களுக்கு எதிரொலியாக அந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது.

யோகி பாபு மீதான கேலி

நடிகர்கள் யோகி பாபுவை எல்லா படங்களிலும் இழிவுசெய்வதையே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள். பன்னிவாயன், காட்டெருமை, பன்னிமூஞ்சி வாயன், பித்தளை சொம்பு என்று கிண்டல் செய்தும், அவரின் தலை முடியை வைத்துக் கிண்டல் செய்தும் தொடர்ந்து அவமானப்படுத்திவருகிறார்கள்.

‘மான் கராத்தே’, ‘யாமிருக்க பயமே’ படங்களில் தொடங்கிய இந்த மோசமான முன்னுதாரணம், அவர் பிரபல நடிகராகி, திறமையை நிரூபித்து, தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்த பிறகும் தொடர்கிறது. ‘அனபெல் சேதுபதி’ படத்தில் ஒரு குழந்தை கதாபாத்திரம், “கரடி பொம்மை சேர்ல உக்கார்ந்து இப்போதான் பார்க்கிறேன்” என்று யோகி பாபுவிடம் சொல்லிச் சிரிப்பதன் மூலம், இந்த ஆபத்தான போக்கை அறிந்துகொள்ளலாம்.

இன்னொரு பக்கம், உருவக் கேலிக்கு உள்ளாகும் யோகி பாபுவே, ‘அரண்மனை – 3’ படத்தில் “பல்லி மூஞ்சி” என்று மனோபாலாவைக் கலாய்க்கிறார். ஆக, அறம் தவறும் இச்செயல்களில் காமெடி நடிகர்கள், இயக்குநர்கள், வசனம் எழுதியவர்கள் என அத்தனை பேருக்கும் பங்கு இருக்கிறது.

திரைக்கு வெளியே

திரைக்கு வெளியேயும் இப்படி உருவக் கேலிக்கு ஆளானவர்களைச் சொல்ல முடியும். உயரம் குறைந்தவர் என சூர்யாவும், ஒல்லியான தேகத்தால் தனுஷும், குண்டாக இருப்பதாக அஜித்தும், தோற்றத்தை வைத்து விஜய்யும் உருவக் கேலிக்கு ஆளாகியுள்ளனர்.

நடிகைகளில் உடல் எடை காரணமாக ஸ்ரீப்ரியா, குஷ்பு, ஹன்சிகா, சமீரா ரெட்டி, சனுஷா, சுவாதி, வித்யுலேகா, பிரியங்கா போன்றோரும், நிறம் காரணமாக குணச்சித்திர நடிகை தீபாவும், உருவம் காரணமாக தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலையும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளனர். உலக அழகி ஐஸ்வர்யா ராயையும் உருவக் கேலி விட்டுவைக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 20, 2021 6:56 am

ஆணாதிக்க மனோபாவம்

“பொண்ணுங்களை கன்ட்ரோல் பண்றதுதான் கஷ்டம்… கன்ஃபியூஸ் பண்றது ஈஸி”, “பார்த்தா லூஸு மாதிரி தெரியலை… ஆனா, பேசினா தெரியுது” என்று சிவகார்த்திகேயன் போன்ற நாயக நடிகர்களும் பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவதை மன்னிக்க முடியாது. ‘டாக்டர்’ படத்திலும் இது தொடர்ந்துள்ளது.

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் சிங்கப் பெண்களின் கதை என்று விளம்பரம் செய்தார்கள். ஆனால், அதில் பாண்டியம்மா எனும் வீராங்கனைக்குப் பயிற்சியாளராக நடித்த விஜய், ‘ஓடச்சொன்னா உருள்றே… குண்டம்மா குண்டம்மா’ என்று திட்டிக் காயப்படுத்தியது உளவியல் தாக்குதல்தானே. இதுவா பெண்களைக் கொண்டாடிய படம்?

‘ருத்ர தாண்டவம்’ படத்தில், “போதை மருந்து கொடுத்து நிர்வாணப்படுத்தி மிரட்டுவது என்பதெல்லாம் பப், கிளப்புக்குப் போகும் பெண்களுக்கு வழக்கமா நடக்கிறதுதான்” என்று அதை நியாயப்படுத்தும் விதத்தில் காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி பேசியது ஆணாதிக்க மனோபாவமே.

இதைவிட மோசமான ஒரு காட்சி. “மீசையை எடுத்துவிட்டு வந்தால் உன் பெண்ணை விட்டுவிடுகிறேன்” என்று ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் உள்ளூர் ரவுடி நிபந்தனை விதிக்கிறார். “மீசை எடுத்தா கவுரவம் என்னாகுறது? பொண்ணு போனாப் போகுது” என்று ஒரு காவலர் சொல்கிறார்.

மீசை என்பது வெறும் முடிதான் என்பதை அறியாமல், கடத்தப்பட்ட பெண்ணின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், காக்கிச் சட்டையின் கம்பீரத்துக்குக் கஞ்சி போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இயக்குநர்கள்.

பிம்பம் உடையுமா?

‘டாக்டர்’ படத்தில், ஒரு போட்டியில் தோற்ற அடியாளுக்கு நைட்டி அணிவித்து, பூச் சூட்டி, ‘கோமதி’ என்று பெயர் வைத்து மகிழ்கிறார்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி ஆண்களை இழிவுபடுத்த பெண்களின் உடையையும், பெயரையும் பயன்படுத்துவார்கள்? ‘

சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் இயக்குநர் சசி, “ஆண்கள் ஏன் பெண்கள் வசதிக்காகப் போடும் உடையைக் கேவலமாகப் பார்க்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியிருப்பார். அந்த முற்போக்குச் சிந்தனையுடன், அறத்துடன் திரைத் துறையில் இருப்பவர்கள் செயல்பட வேண்டும்.

சமூகக் குற்றவாளிகள்

பிறரின் நிறத்தை, உருவத்தை, உடல் எடையைக் கிண்டல் செய்வது மனிதம் அல்ல. அப்படிக் கேலி செய்பவர்கள் சமூகத்தின் பார்வையில் குற்றவாளிகளே. அண்ணனோ, தம்பியோ, காதலனோ, கணவனோ, நண்பனோ, அலுவலக மேலாளரோ, சக ஊழியரோ, யாராக இருந்தாலும் உங்களை, உங்கள் உருவத்தைக் கேலி செய்ய விடாதீர்கள்.

மனித மாண்பைச் சிதைக்காததுதான் நகைச்சுவை. புகைபிடிக்கும் காட்சி, வன்முறைக் காட்சி, ஆபாசக் காட்சிகளுக்குத் தடை போடும் தணிக்கை வாரியம், உருவக் கேலியையும் கவனத்தில் கொண்டு தடைபோடட்டும்.

– க.நாகப்பன்,

இந்து தமிழ் திசை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1768
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Oct 20, 2021 8:26 am

உருவ கேலி செய்தல், செய்பவருக்கும் சுற்றியுள்ள அவரது குழுவினருக்கும் சந்தோஷம் தரும்; ஆனால், கேலி செய்யப்படுபவருக்கு அவமான உணர்வை, மன தாழ்வு நிலையை ஏற்படுத்தும்!

உருவ கேலியை எங்கும் எப்போதும் தவிர்ப்போம்!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 20, 2021 5:21 pm

இரட்டைப் பொருளில் பேசும் சந்தானம் கண்டனத்திற் குரியவர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக