புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_lcapகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_voting_barகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_lcapகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_voting_barகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_lcapகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_voting_barகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_lcapகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_voting_barகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_lcapகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_voting_barகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_lcapகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_voting_barகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_lcapகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_voting_barகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_lcapகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_voting_barகன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )


   
   

Page 2 of 2 Previous  1, 2

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 24, 2021 12:36 pm

First topic message reminder :

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (1 -3 )

1 . ஒன்று ,இரண்டு !

ஒன்று இரண்டு
வாழை இலை போடு !
மூன்று நான்கு
அன்னம் போடு
ஐந்து ஆறு
குழம்பு ஊற்று
ஏழு எட்டு
வெஞ்சனம் கூட்டு
ஒன்பது பத்து
உண்ட இலையை மூடு !

2. நாட் கடன் !

தினமும் வேகமா எழவேண்டும்
பல்லைச் சுத்தமாத் துலக்க வேண்டும்
முகத்தை நன்றாய்க் கழுவ வேண்டும்
தினமும் குளித்து முடிக்க வேண்டும்
தேவனையே நன்கு கும்பிட வேண்டும்
காலை உணவை உன்ண வேண்டும்
ஆசிரிய ருக்கு வணக்கம் சொல்லிப்
பள்ளிக் கூடத்தில் கற்க வேண்டும்!

3 . மழை இராசா !

வாவா மழை இராசா
மழை இராசா வாவாவா
வாவாவா மழை இராசா
வராமல் இருக்காதே மழைராசா
மேகத்தில் ஆடும் மழைராசா
தேன்துளி தேன்துளி மழைராசா
வா வா மழைராசா !

- (கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர்
சு. சௌந்தரபாண்டியன்.
கன்னட ஒலி மூலம் : infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 29, 2021 9:04 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (13 - 15 )

13 . குரங்கு இராயன் !
மாமா வீட்டுக்குப் போனானே
குரங்கு இராயன் !
அந்த வீட்டுச் சாப்பாட்டு
மேசை முன்னே அமர்ந்து
பலகாரம் தின்னத் தொடங்கிவிட் டானே!
அவன் காதைப் பிடித்துத் திருகியேதான்
கண்டித்தாளே அத்தை!:
‘முதலில் வீட்டிலுள்ள பெரியோர்களுக்கு
வணக்கம் சொன்ன பின்னாலே நீ
தின்னத் தொடங்கு!’ என்றாளே
குரங்கு இராயன் வணக்கமும் சொன்னானே
சொன்ன பின்னே அத்தையுமே
பலகாரங்கள் எல்லாம் கொடுத்தாளே!
வயிறு முட்டத் தின்றானே
குரங்கு இராயன்!

14 . பாட்டி ! பாட்டி!

பாட்டி ! பாட்டி!
நம்ம முத்துப் பாட்டி !
எல்லோரும் விரும்பும் நம்ம பாட்டி!
குழந்தைகளின் பெருமையே
நம்ம பாட்டி!
பாட்டி! பாட்டி!
நாள்தோறும் கதைகள் கூறித்
தூங்க வைப்பாள் பாட்டி!
வீடுகளுக்கு வைத்தியராய்
நோய் நீக்கும் பாட்டி!
பாட்டி ! பாட்டி !பாட்டி!
நம்ம முத்துப் பாட்டி!

15 . வார நாட்கள் ஏழு !

வரத்துக்கு ஏழே ஏழு நாள்!
ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள்
திங்கட் கிழமை கிட்டிப்புள் ஆட்டம்
செவ்வாய்க் கிழமை வாலி பாலு
புதன் கிழமை துள்ளிவிளை யாட்டு
உடற் பயிற்சி வீட்டினுள் வியாழக் கிழமை
வெள்ளிக் கிழமை பம்பரம் விடுவோம்
சனிக் கிழமை கிரிக்கெட் ஆட்டம்!
வாரத்துக்கு ஏழே ஏழு நாட்கள்!
விளையாடப் போதாது விடுமுறை நாட்கள்!

- (கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் : infobells.com)


***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 30, 2021 7:14 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (16 - 18 )

16 . நான் விரும்பும் வண்டி !

வண்டி இது வண்டி இது
நல்ல வண்டி இது
சின்ன வண்டி இது
எங்கு விட்டாலும் ஓடுவது
வேகமாய் ஓடும் வண்டி இது
நான் விரும்பும் வண்டி இது
வண்டி இது வண்டி இது
சிவப்பு வண்ண வண்டி இது
சாவி கொடுத்தால் ஓடும் வண்டி!
அழகான வண்டி இது
நான் விரும்பும் வண்டி இது!

17 . நாங்கள் போவது சந்தைக்கு!
வண்டியின் சக்கரம் சுழல்கிறது
நாங்கள் போவது சந்தைக்கே
டுர் … டுர் …டுர்ரார்
அப்பா வாயில் மாடு விரட்டுறார்
நாங்கள் போவது சந்தைக்கே
அம்மா கொடுத்த முறுக்கு
ருசியோ ருசி !
நாங்கள் போவது சந்தைக்கே
வண்டி கல்லுப் பாதையிலே
நாங்கள் போவது சந்தைக்கே
பக்கத்தில் போகும் சைக்கிள் பையா
வழிவிடு வழிவிடு!
நாங்கள் போவது சந்தைக்கே!

18 . பம்பரம்!

குர்ரு குர்ருனு சுத்தும் பம்பரம்
கயிற்றையும் சுற்றிக் கையை உயர்த்தித்
தரையில் வீசினால் சுத்தும் பம்பரம் !
உள்ளங் கையிலும் சுற்றும் பம்பரம் !
ஆகாயத்துக் காமன் வில்லைப்
பூமிக்குக் கொண்டுவரும் வண்ணப் பம்பரம் !
குர்ரு குர்ருனு சுத்தும் பம்பரம் !

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் : infobells.com)

**




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 01, 2021 3:53 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (19 - 21 )

19 . பப்புவின் பிறந்த நாள்!
பப்புவின் பிரந்த நாளன்றுமே
வந்தார்களே நண்பர்கள் ஜோராகவே
கன்று வந்து பப்புவிடம்
மாவ் … ..மாவ் என்றது!
வாத்தொன்று வந்துமே பப்புவிடம்
குவாக் … குவாக்…. என்றதுவே!
சேவலும் பப்பருகே பாசத்துடனே
கொக்கரக்கோ கொக்கரக்கோ என்றது!
பூனையும் தானே ஓடிவந்து
மியாவ் ….. மியாவ் என்றதே!
நாயொன்றும் பப்புவிடம்
பாசமாய் லொள்லொள் என்றதே!
பால்கொடுக்கும் பசுவும் வந்து
அம்மா….அம்மா…என்றது!
அழகான ஆடொன்றும் வந்து
மேய்…மேய்.. என்றதே!

20 . ரொட்டிக் கடைக் கிட்டப்பா!

ரொட்டிக் கடைக் கட்டப்பா! - எனக்கு
ரொட்டி வேண்டும் தட்டப்பா!
ஒன்பது காசு இருக்கப்பா
இரண்டு ரொட்டி தட்டப்பா!
சின்ன ரொட்டி இரண்டப்பா
ரொட்டிக் கடைக் கிட்டப்பா!
இந்த ரொட்டி வேண்டாம்பா
கருகிப்போய் உள்ளதப்பா!
வேறே ரொட்டி தட்டப்பா
ரொட்டிக் கடைக் கிட்டப்பா!
நன்றாய்த் தின்றோம் நாமப்பா!

21 . குட்டிப் பையன் பாபு !

பத்துச் சிறுவர்கள் ஒரு கட்டிலில்
தூங்கு வதற்குப் படுத்திருந் தார்கள்
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி ஒன்பது பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி எட்டுப் பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி ஏழு பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி ஆறு பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி ஆறு பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி ஐந்து பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி நான்கு பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி மூன்று பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி இரண்டு பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி பாபு!
‘கட்டிலில் நான்மட்டும் மிஞ்சிவிட் டேனே
கட்டிலில் மிஞ்சியது நானே!
கீழே விழுந்த சிறுவர்கள் சொன்னது:
‘குட்டிப் பாபு, நீதான் இங்கு
துட்டப் பாபு ! துட்டப் பாபு!’

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் : infobells.com & ChuChuTV)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 02, 2021 12:19 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (22 - 24 )

22 . உண்டாடிக் குண்டன்!

உண்டாடிக் குண்டன் ஒருநாள்
கல்யாண விருந்தில் உட்கார்ந்தான்!
பத்து இலட்டுத் தின்றுவிட்டு
இன்னும் வேண்டும் என்றான்!
அம்மாவும் இனிப்பொன்றைத்
தட்டில் வைத்துப் போனாளே!
அப்பா வந்து பார்த்தவர் உடனே
பிரம்பை எடுத்து முன்னே காட்டி,
‘கை கட்டு! வாய் மூடு!
போதும் எழுந்திரு’ என்றாரே!
உண்டாடிக் குண்டப்பன் எழுந்திருந்து
வீடு சென்றானே!

23 . கரடி வேட்டை!

கரடி ஒன்று வேட்டைக்குப்
புறப்பட்டது இரு குட்டிகளுடனே!
கரடி வேட்டைக்குப் போனது!
அங்கும் இங்கும் பார்த்தது!
கரடி மரங்களை நோட்ட மிட்டுப்
பலா மரத்தில் ஏறியே
பலாப் பழத்தைக் கொணர்ந்தது!
தானும் பழத்தைத் தின்று
குட்டிகளுக்கும் கொடுத்ததே!
கரடி வேட்டைக்குப் போனது!
கரடி வேட்டைக்குப் போனது!

24 . இது குளியல் நேரம் !

இந்தப் பொம்மைப் பாப்பாவுக்கு
அம்மாவைப் போல நானும் தானே!
குளிப்பாட்டி விடுவேனே!
ஷாம்பூ தலையில் தேய்த்து
நீரால் நன்றாய்க் கழுவுவேனே!
சோப்பை உடம்பில் தேய்த்து
நன்றாய்க் குளிப்பாட்டு வேனே !
குளிப்பாட்டி முடித்த பின்னே
துணியால் உடலைத் துடைப்பேனே!
உடம்பில் பௌடர் போட்டு
சட்டையை மாட்டி விடுவேனே!
பாலைக் குடிக்கவும் தருவேனே
கட்டிலில் என்னோடு உன்னையும்தானே
படுக்க வைப்பேனே!
ஹாஹா….ஹாஹா !
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் : infobells.com & KidsTVIndia)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 02, 2021 5:49 pm

பதிவு #14ம் #15ம் ஒன்றென்பதால் 

#15 நீக்கப்படுகிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 04, 2021 12:53 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 04, 2021 1:50 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (25 - 27 )

25 . பகிர்ந்து கொள்வது!

பகிர்ந்து கொள்வதே நல்லது!
பகிர்ந்து கொள்வதே ஆனந்தம்!
எல்லோ ருக்கும்
பகிர்ந்து கொடுப்பதே ஆனந்தம்!
பகிர்ந்து கொள்வதே ஆனந்தம்!
இல்லா தோர்க்கே
பகிர்ந்து கொடுக்க வேண்டும்!
எல்லோ ருடனும் அன்பாகவே
பகிர்ந்து கொள்ள வேண்டும்!
மேலும் கீழும் பாராமல்
உயர்வு தாழ்வு பார்க்காமல்
பகிர்ந்து கொள்ள வேண்டும்!

26 . காய்கறி வேண்டுமா காய்கறி!

காய்கறி வேண்டுமா?
காய்கறி வேண்டுமா?
பலவகை யான காய்கறிகள்!
விரல் போன்ற வெண்டைக் காயி
பாம்பு போன்ற புடலங் காயி
காய்கறி வேண்டுமா?
காய்கறி வேண்டுமா?
விதவித மான காய்கறிகள்!
பஜ்ஜிக்கு ஏற்ற கத்தரிக்காய்!
நீர்குடிக்க வைக்கும் பச்சை மிளகாய்!
கோலைப் போன்ற முருங்கைக் காய்!
முண்டுத் தோலின் பாகற்காய்!
வரிவரியாய் இருக்கும் பீர்க்கங்காய்!
காய்கறி வேண்டுமா?
காய்கறி வேண்டுமா?

[/b]27 . அணிலே ! அணிலே![b]

அணிலே ! அணிலே!
வாவா அணிலே!
மரத்தில் இருந்து இறங்கித் தானே
வாவா அணிலே!
சர்க்கரைப் பொங்கல் தருவேன் அணிலே!
இறங்கி வந்தால் தருவேனே!
இல்லாவிட்டால் நானே உண்பேனே!
அணிலே! அணிலே!
வாவா அணிலே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம்
: infobells.com & KidsTVKannada)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 05, 2021 12:38 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (28 - 30 )

28 . ஆனை வந்தது!

ஆனை வந்தது ஒன்று!
ஆனை வந்தது ஒன்று!
எந்த ஊரு ஆனை?
பிஜப்பூரின் ஆனை!
இங்கு எப்படி வந்தது?
வழி தப்பி வந்ததோ?
ஆனை வந்தது ஒன்று!
தேங்காய் வெல்லம் தின்ற பின்னே
திரும்பிப் போனது ஆனை!

29 . இரகசியம்!

இரகசியம் ! இரகசியம்!
இதை எப்படிச் சொல்லவேண்டும்?
பிறந்த நாள் கொண்டாட் டத்தில்
அனைவரும் சேர்ந்தே மகிழ வேண்டும்!
இது அவசியம்! அவசியம்!
ஆட்டத்தில் தப்பாட்டம் கூடாது!
இது அவசியம்! அவசியம்!
உதவி வேண்டு வோர்க்கு
உதவுவது அவசியம்! அவசியம்!

30 . கோழியம்மா!

தாய்க் கோழி-
‘முதலாம் குஞ்சு ஓடி வா!
உனக்கு மஞ்சள் பந்து
நான் தருவேன்!’
‘பந்தின் நிறம் என்ன?’
‘சூரியகாந்திப் பூவின்
மஞ்சள் வண்ணம்!’
‘இரண்டாம் குஞ்சு ஓடி வா!
உனக்குப் பச்சை பந்து
நான் தருவேன்!’
‘பந்தின் நிறம் என்ன?’
‘இலைகளின் பச்சை வண்ணம்!’
‘மூன்றாம் குஞ்சு ஓடி வா!
உனக்கு வெள்ளைப் பந்து
நான் தருவேன்!’
‘பந்தின் நிறம் என்ன?’
‘தும்பைப் பூவின் வெள்ளை வண்ணம்!’
‘நான்காம் குஞ்சு ஓடி வா!
உனக்குச் சிவப்புப் பந்து
நான் தருவேன்!’
‘பந்தின் நிறம் என்ன?’
‘பருத்திப் பூவின் சிவப்பு வண்ணம்!’
‘ஐந்தாம் குஞ்சு ஓடி வா!
உனக்கு நீலப் பந்து
நான் தருவேன்!’
‘பந்தின் நிறம் என்ன?’
‘ஆகா யத்தின் நீல வண்ணம்!’
‘ஆட்டம் ஆடுங்கள் ஜாக்ரதை!’

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com ; theteamscifi;Sargam Kids Kannada)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 05, 2021 3:43 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (31 - 33 )

31 . அஞ்சல் அண்ணா !

அஞ்சல் அண்ணா வந்தார்!
அஞ்சல் அண்ணா வந்தார்!
எனக்கு அஞ்சல் ஒன்று தந்தார்!
திருமண அழைப் பொன்றைத் தந்தார்!
அஞ்சல் அண்ணா வந்தார்!
தூர ஊரில் இருக்கும் எங்கள்
அண்ணன் வருவதைச் சொன்னார்!
அஞ்சல் அண்ணா வந்தார்!

32 . கிளியே வாவா !

கிளியே கிளியே!
வண்ணக் கிளியே!
வா … வா…வா!
ஆட்டம் ஆடலாம் வா கிளியே!
பச்சை நிறக் கிளியே
வா…வா…வா!
பழம் தருவேன் வாகிளியே!
பால் கொடுப்பேன்!
நீர் கொடுப்பேன்!
வாவா கிளியே!
வண்ணக் கிளியே!
வாவா வாவா கிளியே!

33 . நான் இராணுவத்தில் சேருவேன் !

நானு இராணுவத்தில் சேருவேன்!
யூனிபார்ம் போட்டுக்கொள்வேன்!
காலில் பூட்சும் அணிவேனே!
நானு இராணுவத்தில் சேருவேன்!
தலையில் தொப்பி அணிவேன்!
கையினில் துப்பாக்கி தூக்குவேன்!
லெப்ட் ..ரைட்.. லெப்ட்..ரைட்!
நானு இராணுவத்தில் சேருவேன்!
நாட்டையுமே பாதுகாப்பேன்!
வீரப் பதக்கம் வாங்குவேன்!

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com )

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 06, 2021 7:19 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )

34 . கள்ளப் பூனை!

கள்ளப் பூனை வந்தது!
அங்கும் இங்கும் பார்த்தது
அப்புறம் இப்புறம் நோட்டமிட்டது!
அடுப்படிக் குள்ளே சென்றது!
பாலுச் சட்டியைக் கண்டறிந்து
பாலை நக்கிநக்கிக் குடித்தது!
அம்மா வந்து பார்த்தாளே!
கோலை எடுத்துப் படார்படார் !
கள்ளப் பூனையை அடித்தளே!
பசியுடன் பூனையும் ஓட்டம் பிடித்தது!
திருடுவது தப்பு என்றே நினைத்தது!
கள்ளப் பூனை வந்தது!

35 . கடலைப் பொரி!

குட்டியே ! குட்டியே !
நாய்க் குட்டியே!
தேங்காயைத் துருவிக்
கொட்டலாம் கொட்டலாம்!
கடலை இங்கே இருக்கு!
அடுப்பில் வைத்துப் பொரி! பொரி!
அதனுடன் தக்க பண்டம் சேர்த்தால்
கடலைப் பொரி! கடலைப் பொரி!
குட்டியே குட்டியே!
நாய்க் குட்டியே!

36 . உருளைக் கிழங்கின் விளையாட்டு!

இரண்டு உருளைக் கிழங்குகள்!
அண்ணனும் தங்கையும் அவர்களாம்!
இரண்டு பேருக்கும் பொம்மையொன்று கிடைத்தது!
பொம்மையைத் தூக்கியே மேலே போட்டு
இரு கிழங்குகளும் விளையாடின!
பொம்மை சட்டென்று உடைந்து போனது!
அழத் தொடங்கினவே!
இரு கிழங்குகளுமே!
அப்பாக் கிழங்கு அங்கே வந்தது!
உடைந்த பொம்மையை ஒட்டிக் கொடுத்தது!
பொம்மை ஆட்டத்தைத் தொடங்கினவே!
இரண்டு உருளைக் கிழங்குகளுமே!

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com&KidsTVKannada )
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக