புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_m10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_m10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_m10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_m10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_m10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10 
19 Posts - 3%
prajai
நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_m10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_m10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_m10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_m10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_m10நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்?


   
   
avatar
rsrayan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 04/11/2008

Postrsrayan Tue Jul 27, 2021 12:28 pm

நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்?*
*திருஞானசம்பந்தருக்கு* ஒரு ரகசிய விண்ணப்பம் வந்திருந்தது. மதுரையில் பாண்டியன் ஆட்சியில் இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகியிருந்தது. அவர்களுடைய சில செயல்களைத் தாங்க இயலாமல் மன்னனின் மனைவியே *திருஞானசம்பந்தருக்கு* எழுதியிருந்தார்:
அரசரை மீண்டும் சைவநெறியின்பால் திருப்பவேண்டும். அதற்குத் தாங்கள் இங்கே எழுந்தருளவேண்டுகிறேன்.
’ *திருஞானசம்பந்தர்* உடனே புறப்படத் தயாராகிவிட்டார். ஆனால், அவரோடு இருந்த *அப்பர்* தடுத்தார். ‘அங்கே சென்றால் உங்களுக்கு ஏதேனும் ஊறு விளையுமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது.’

‘ *இறைவன் துணையிருக்கும்போது யார்தான் என்ன செய்ய இயலும்?* ’ என்றார் திருஞானசம்பந்தர். ‘இதற்கு அஞ்சிப் பயணத்தை நிறுத்துவதா?’அப்பர் யோசித்தார். ‘நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள், குறைந்தபட்சம் இன்றைக்குப் புறப்படாமல் இன்னொருநாள் கிளம்பலாமே’ என்றார்.
‘ஏன்? இன்றைக்கு என்ன பிரச்னை?’

*‘நாள் சரியில்லை’ என்றார் அப்பர். ‘பொறுத்திருந்து பின்னர் செல்லலாமே!’
திருஞானசம்பந்தர் சிரித்தார். ‘அப்பரே, தாங்கள் அறியாததா? எம்பெருமான்
துணையிருக்கும்போது எல்லா நாளும் நல்ல நாள்தானே? அனைத்துக் கிரகங்களும்
அடியவர்களுக்கு நல்லதை மட்டும்தானே செய்யும்? தீமைகள் எதிரே நிற்க இயலாமல் ஓடிவிடுமே!’ என்றார்.*

*அப்போது திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள்தான் ‘கோளறு திருப்பதிகம்’.* இறைவன் இதயத்தினுள் இருக்கும்போது, அடியவர்களை எந்தத் துயரமும் நெருங்காது என்பதை உறுதியாகச் சொல்லும் இந்தப் பாடல்களைப் படிப்பவர்களுக்கு எல்லா மனத்துயரும் விலகி நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

வேயுறு தோளிபங்கன், விடம்உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசுஅறு திங்கள், கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்,
*ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி,* *சனி,* பாம்பு இரண்டும்உடனே
ஆசுஅறு நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

மூங்கில் போன்ற தோள்களை உடைய எங்கள் அன்னையை உடலின் ஒரு பகுதியாகக் கொண்டவன், நஞ்சுண்ட கழுத்தன், இனிதாக வீணை இசைக்கிறவன், குற்றமில்லாத நிலாவையும் கங்கையாற்றையும் முடிமேல் அணிந்தவன் என் உள்ளத்தில் புகுந்திருக்கிறான். அதனால், *ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்,
வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற பாம்புகள் ஆகிய ஒன்பது* கோள்களும் என்போன்ற அடியவர்களுக்குக் குற்றமில்லாதபடி நல்லவையாகத் திகழும்; நல்லதையே செய்யும்!

கோள்களைப் போலவே, நட்சத்திரங்களும் அடியவர்களுக்கு நல்லதையே செய்யும் என்கிறார் திருஞானசம்பந்தர். அதுவே இரண்டாவது பாடல்:
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்புஇலங்க எருது ஏறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை, புனல் சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

எலும்பு, கொம்பு, ஆமை ஆகியவை மார்பில் திகழ, எருதின்மீது ஏறி, அன்னையுடன் வருகை தரும் எம்பெருமான், தலையில் பொன்னாலான குளிர்ச்சியான மாலையையும் கங்கை ஆற்றையும் சூடியவன் என் உள்ளத்தில் புகுந்திருக்கிறான். அதனால், ஒன்பது, ஒன்று, ஏழு, பதினெட்டு, அதிலிருந்து ஆறு என எண்ணிக் குறிப்பிடப்படுகிற பூரம், கிருத்திகை, ஆயில்யம், பூராடம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் அனைத்தும் அடியவர்களுக்குக் குற்ற மில்லாதபடி நல்லவையாகத் திகழும்; நல்லதையே செய்யும்!

எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கும்போது திருஞானசம்பந்தர் இவற்றைக் குறிப்பிடக் காரணம், பொதுவாக சில நட்சத்திர நாட்களில் பயணம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதால்தான். இறைவன் துணையிருந்தால் எந்த நட்சத்திரமும் நல்லதையே செய்யும் என்று வலியுறுத்துகிறது இந்தப் பாடல்.
*திருச்சிற்றம்பலம்*

(Thanks to Mr. Nararajan.S shared via Telegram)

T.N.Balasubramanian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 27, 2021 1:42 pm

நன்றி ராயன் அவர்களே.
நற்பதிவு.
நீண்ட வருடங்களுக்கு பிறகு நேற்றுதான்  வந்துள்ளீர்.
உடல் நலம்தானே?
வேலை பளுவோ?
இப்பதிவை மின்னூல் பதிவிறக்கத்தில் இருந்து சரியான பகுதியான 
ஆன்மீகத்திற்கு மாற்றிவிடுகிறேன். 

(Thanks to Mr. Nararajan.S shared via Telegram) ஆங்கிலத்தை தவிர்த்து 
தமிழில் நன்றி கூறலாமே. 

@rsrayan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 27, 2021 9:00 pm

கோளறு பதிகம் தோன்றிய வரலாற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி

கோளறு பதிகம் விளக்கத்துடன்



நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக