புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
4 Posts - 3%
bala_t
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%
prajai
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
5 Posts - 1%
manikavi
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Mon Feb 10, 2014 9:14 pm

1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
 
 
(எம்பெருமான்மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு 
தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன்ஆலகால விடத்தை 
உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் 
தாங்கியவன்இனிமையான இசையை எழுப்பும் வீணையை 
வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்களங்கமில்லாத பிறையையும்
கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டுஎன் உளம்
முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில்
இருப்பதால்சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிமற்றும் 
பாம்பாகிய ராகுகேது என்னும் ஒன்பது கோள்களும்
ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்றசிவனடியாருக்கு
என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!
 
 
2. என்பொடு கொம்பொ(டுஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
 
 
திருமாலின் வாமனபன்றிகூர்ம அவதாரங்களின் ஆணவத்தை 
அடக்கி அணிந்துநிற்கும்எலும்புகொம்புஆமை ஓடு முதலானவை
 தன் திருமார்பில் விளங்கஉமையவளுடன் எருதின் மேல் ஏறி 
,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து
தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,
ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்;
ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்பதினெட்டாவது விண்மீனான 
கேட்டை;ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும்சிவனடியார் 
மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!
 
 
3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
 
 
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை 
அணிந்துசிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது 
ஏறி வந்துஅழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் 
முடிமேல் அணிந்து சிவபெருமான்உமையம்மையாரோடு வெள்ளை
 எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்அதனால்,
 இலக்குமிகலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள்
வெற்றித்தெய்வமான துர்க்கைபூமாதுதிசைத் தெய்வங்கள் ஆன பலரும் 
அரிய செல்வம் போல நன்மை அளிப்பர்அடியவர்களுக்கு மிக 
நல்லதையே செய்வர்.
 
 
4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
 
 
பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்
கீழ் இருந்து (வடம் – ஆலமரம்வேதங்களை அருளிய எங்கள் பரமன்கங்கைநதியையும் 
கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து
தங்கியுள்ளான்அதனால்ஆத்திரமுடையதான காலம்அக்கினியமன்
யமதூதர்கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன 
ஆகி நல்லனவே செய்யும்அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
 
தொடரும் 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Mon Feb 10, 2014 9:18 pm

 கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 B of 2

5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
 
 
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும்என் தந்தையும்
உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் 
ஆகிய சிவபெருமான்அடர்ந்து கறுத்த வன்னிமலரையும்கொன்றை 
மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து
 தங்கியுள்ளான்அதனால்கொடிய சினத்தை உடைய அசுரர்கள்
முழங்குகிற இடிமின்னல்துன்பந்தரும் பஞ்சபூதங்கள்
முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டுஅஞ்சி நல்லனவே செய்யும்
 அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
 
 
6.வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
 
 
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி – 
அதள் – அது -ஆடைஅதள் - புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் 
அன்றலர்ந்த மலர்கள்வன்னி இலைகொன்றைப்பூகங்கை நதி 
ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடிஉமையம்மையாரோடும் 
வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்அதனால்கொல்லும்
வலிய புலி(கோளரி உழுவை), கொலையானைபன்றி(கேழல்), 
கொடிய பாம்புகரடிசிங்கம்ஆகியன நல்லனவே செய்யும்
அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
 
 
7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
 
 
செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் 
ஒரு பாகமாகக் கொண்டுஇடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய 
சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும்
கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய்என் உள்ளத்துள் 
புகுந்து தங்கியுள்ளான்அதனால்காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல்
வாதம்மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் 
நம்மை வந்து அடையாஅப்படி அவை நல்லனவே செய்யும்அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
 
 
8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
 
 
அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த 
சிவபெருமான்இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய் 
இருந்துதன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன்
வன்னி இலைகொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் 
உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்
அதனால்ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன 
இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டதுபோன்ற இடர்களும் 
வந்து நம்மைத் துன்புறுத்தாஆழமான கடலும் நமக்கு நல்லனவே 
செய்யும்அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
தொடரும் 


 

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Mon Feb 10, 2014 9:19 pm

எனக்கு பிடித்த பாடல்கள் ...தொடருக..



jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Mon Feb 10, 2014 9:28 pm

 கோளறு பதிகம் அர்த்தமுடன் - part  2 of 2


9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே


 
பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும்மாதொரு
பாகனும்எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான்
தன் முடிமேல் கங்கைஎருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து 
என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்அதனால்தாமரைமலர்மேல்
 உறையும் பிரமன்திருமால்வேதங்கள்தேவர்கள் ஆகியோரும்
எதிர்காலம்அலையுடைய கடல்மேருமுதலான மலைகள் ஆகியவையும் 
நமக்கு நல்லனவே செய்வர்அடியவர்களுக்கு அவை மிகவும் 
நல்லனவே செய்யும். 
 
10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே! 
 
கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட 
வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட 
சிவபெருமான்தன் முடிமேல் ஊமத்தை மலர்பிறைச்சந்திரன்பாம்பு 
ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்
அதனால்புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் 
தோற்றோடச் செய்யும்அதன் பெருமை நிச்சயமேஎல்லாம் அப்படிச்
சிறந்த நல்லனவற்றையே செய்யும்அவை மிகவும் நல்லனவே 
செய்யும்.
  
11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் 
எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. 
 
தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும்கரும்பும்(ஆலை), விளைகிற
செந்நெல்லும் நிறைந்துள்ளதும்பொன் போல் ஒளிர்வதும்நான்முகன் 
(வழிபட்டகாரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் 
பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய 
யான்தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள்நாள் நட்சத்திரம்போன்றன
 எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும்
 அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர்இது நமது ஆணை.


திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

 

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 11:32 pm

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே. செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

திருச்சிற்றம்பலம்



கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 11:33 pm



http://eegarai.opendrive.com/files/MzlfMzIwMTU3X29Sd00wXzQxNzY/Kolaru_Pathigam.mp3



கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 22, 2015 3:54 pm

மிக நல்ல பதிவு, மிக்க நன்றி மாமா அங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக