புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:19

» இவ்வளவுதாங்க வாழ்க்கை பயணம்!
by ayyasamy ram Today at 10:01

» ஒரு கப் பாலுக்காக- (இணையத்தில் ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:45

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 22:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:34

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:07

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:50

» கருத்துப்படம் 23/10/2024
by mohamed nizamudeen Yesterday at 18:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:31

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:28

» வணக்கம் உறவுகளே
by Anthony raj Tue 22 Oct 2024 - 18:21

» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 15:38

» சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 5:05

» மாசற்ற உலகு
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:43

» துளிப்பாக்கள்
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:40

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:33

» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Sun 20 Oct 2024 - 16:02

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sun 20 Oct 2024 - 15:28

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun 20 Oct 2024 - 10:44

» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sun 20 Oct 2024 - 0:12

» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat 19 Oct 2024 - 2:18

» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 22:04

» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 22:01

» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 21:54

» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:51

» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:47

» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:44

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 12:49

» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 23:03

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 22:52

» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 22:41

» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 20:56

» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 20:44

» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:44

» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:43

» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:42

» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:41

» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:40

» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:38

» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
27 Posts - 57%
heezulia
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
16 Posts - 34%
mohamed nizamudeen
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
228 Posts - 53%
heezulia
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
163 Posts - 38%
mohamed nizamudeen
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
rameshema12
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
dhilipdsp
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_m10ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 30 May 2023 - 22:54

ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Linges10

உலக உயிர்களின் ஒவ்வோர் அசைவையும் நிர்ணயிப்பவை நவகோள்கள். உலகின் இயக்கத்துக்குச் சூரிய-சந்திரரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கிறது அறிவியல். ஜோதிடமோ சூரியனை ஆத்மகாரகன் என்றும் சந்திர பகவானை மனோகாரகன் என்றும் போற்றுகிறது.

இதைப்போலவே ஜாதகரீதியாக செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது போன்ற கிரகங்களும் மனிதரின் வினைகளுக்கு ஏற்ப நன்மையையும் தீமையும் வழங்குகின்றன என்கின்றன ஜோதிடநூல்கள். விதிப்படி கிரகங்கள் தரும் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். அதேநேரம், சகல படைப்புகளின் தலைவனான ஈசனின் திருவருள் இருந்தால் வினைகளில் இருந்து விடுபடலாம்; கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும் என்பது நிஜம். அவ்வகையில் சிவனருள் நிறைந்த, கிரக தோஷங்களைப் பொசுக்கும் ஆலயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றுதான் நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம்!

நவகோள்கள் தனித்தனியே ஈசனை வணங்கி அருள்பெற்ற தலங்கள் அந்தந்த கிரகங்களுக்கான பரிகாரத் தலங்களாக வணங்கப்படுகின்றன. அந்த வகையில் தொண்டைநாட்டு நவகிரகத் தலங்கள், கும்ப கோணம் நவகிரகத் தலங்கள் போன்றவை பிரசித்திபெற்றுத் திகழ்கின்றன.

அபூர்வமாக சில தலங்களில்... ஒன்பது கிரகங்களும் ஒன்றிணைந்து ஈசனை வழிபட்டு அருள்பெற்றுள்ளார்கள். அந்தத் தலங்கள் ஒன்பது கிரகங்களால் ஏற்படும் தோஷங்களுக் கும் விமோசனம் வழங்குவதாகத் திகழ்கின்றன.

திருக்குவளை எனும் கோளிலி, நவகிரகங் களும் வணங்கி அருள் பெற்ற தலமாகும். இங்கு வந்து வேண்டும் அன்பர்களுக்குக் கோள்கள் எந்தத் தீமையும் புரியாது என்பதால் கோள்-இலி என்றானதாம்.

இதைப்போலவே மற்றுமோர் அற்புதமான தலம் ஒன்று நடுநாட்டில் உள்ளது.

புதுச்சேரியை அடுத்துள்ள கண்டமங்கலம்ஒன்றியம், பங்கூர் அருகே அமைந்திருக்கும் `நவம்மாள் காப்பேர்' என்ற கிராமம்தான் அந்தத் தலம். இங்கே கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு நவாம்பிகை சமேத நவகோள் லிங்கேஸ்வரரை நவகிரகங்களும் வழிபட்டு அருள்பெற்றுள்ளார்கள் என்கிறது தலபுராணம்.

உலகிலேயே இந்தக் கோயிலில் மட்டும்தான் கருவறையிலேயே ஈசனை நவகிரகங்களும் வணங்கி நிற்கிறார்கள். அதனாலேயே இந்தப் பரமன், `நவகோள் லிங்கேஸ்வரர்' எனும் திருப்பெயர் கொண்டு அருள் புரிகிறார். இங்கே நவகிரகங்கள் வழிபடக் காரணம்?

ஒருமுறை நவகிரகங்களுக்குள் `தானே பெரியவன்' என்ற போட்டி யும் பொறாமையும் உண்டாயின. இதனால் கோள்கள் தங்களுடைய பராக்கிரமத்தைக் காட்டத் தொடங் கின. கோள்களின் இந்தப் போக்கி னால் மாற்றத்தால் இயற்கை பிழை யானது. இதனால் மண்ணுலகில் பஞ்சமும் பசியும் உருவாயின.

அதுமட்டுமா? வேள்விகள், அறங் கள் குறைப்பட்டு நிற்க, தர்மம் வீழ்ந்து அதர்மம் மேலோங்கியது. இந்திரன், திருமால், பிரம்மன் முதலானோர் சமரசம் பேசியும் பயனில்லாமல் போனது. நவ கோள்களும் ஆணவத்தால் தங்களுக் குள் மோதலை வளர்த்து வந்தன.

இதனால் சகலரும் சர்வேஸ்வர னிடம் சென்று முறையிட்டார்கள். விளைவு... `சித்தர் காடு' என்று வழங்கப்பட்ட புதுச்சேரி கண்ட மங்கலம் பகுதியில் அடர்ந்த வேணு வனத்தில் ஈசன் சுயம்புவாகத் தோன் றினார். நவகோள்கள் அனைத்தையும் அங்கு வரச்செய்து கண்டித்தார்.

``பிரபஞ்ச நலனுக்காகவே இங்கு சகலமும் இயங்குகின்றன. பிரம்மாதி தேவர்கள் அனைவரும் அவரவர் பொறுப்பு உணர்ந்து எமது கட்டளைக்கு இணங்கி இயங்கும்போது, கோள்களாகிய நீங்கள் இப்படிப் பொறாமை கொண்டு அலைவதா!'' என்று ஈசன் நவகோள்களைக் கண்டித்தார்.

தங்கள் தவற்றை உணர்ந்த நவகோள்களும் ``இனி உயிர்களின் நன்மைக்காக இணைந்து செயல்பட்டு பிரபஞ்சத்தின் நலம் காப்போம்'' என உறுதி அளித்தன. அதுமட்டுமன்றி ஈசனிடம் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தன.

``ஸ்வாமி! எங்களை ஒருங்கிணைத்துப் பாடம் நடத்திய இந்தத் தலத்தில், எங்களுக்குக் காட்சி தந்த இதே கோலத்தில் தாங்களும் இங்கேயே எங்களுடன் வீற்றிருக்க வேண்டும். இங்கு வந்து தங்களை வழிபடும் அன்பர் களுக்குக் கோள்களாகிய நாங்கள் ஒன்பது பேரும் எல்லாவித நன்மைகளையும் அருள் வோம்!' என்றும் உறுதி கூறின.

`அப்படியே ஆகுக' என்று ஆமோதித்தார் பரமன். அவரின் திருவருளால் அந்த இடம் புண்ணிய க்ஷேத்திரமானது. பரமனுக்கும் அற்புதமாய் ஆலயம் எழும்பியது!

நவகிரகங்கள் தாங்கள் கூறியபடியே, இந்தத் தலத்துக்கு வந்து வழிபடும் அன்பர் களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் வழங்கி வருகிறார்கள்.

புராணச் சிறப்புமிக்க இந்த ஆலயம், சோழர்கள் காலத்தில் திருப்பணிகள் செய்யப் பட்டு, வழிபாடுகளும் சிறப்புற நடந்து வந்தனவாம். பின்னர், காலப்போக்கில் ஏதோ காரணங்களால் ஆலயம் சிதைந்து போனது. எல்லாம் வல்ல சிவமும் தன்னை மறைத்துக் கொண்டது. ஊரும் புராணப் பெருமைகளை இழந்து கிராமமாகச் சுருங்கிப் போனது.

`நவகோள் காப்பேறு' என்ற பெயர் மருவி `நவம்மாள் காப்பேர்' என்றானது. காலம் கனிய, காலமறிய முடியாத ஈசன் தன்னை மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டார். அவரை, ஊர் மக்கள் சேர்ந்து தங்களுக்குத் தெரிந்த வகையில் பூஜைகள் செய்து கொண் டாடி வந்தனர்.

இந்த நிலையில் ஈசனின் கருணையால் திருவண்ணாமலையில் வாழும் சித்தர் ஒருவர் இவ்வூரைப் பற்றி அறிந்தார். தன் அடியார்களை இவ்வூர் கோயிலைப் பற்றித் தெரிந்து வர அனுப்பினார்.

அதன்படி இங்கு வந்த அடியார்கள் இந்த ஊரில் உள்ள ஈசன், ஆலயம் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சித்தர் அளித்தத் தகவல்களால் இவ்வூர் புராண மகிமைகள் தெரியவந்தன.

இங்குள்ள அம்பாள் மற்றும் மூல மூர்த்தி யின் திருப்பெயர்கள் நவாம்பிகை உடனுறை நவகோள் லிங்கேஸ்வரர் என்பதையும் உள்ளூர் அன்பர்கள் அறிந்தனர். கோயில் திருப்பணிக்கான முயற்சிகள் தொடங்கின.

புதுவை சிவனடியார்கள் திருக்கூட்டமும் இவ்வூர் மக்களும் இணைய, ஆலயம் அழகுற எழும்பியது; 2018-ம் ஆண்டு தை மாதம் குட முழுக்கு நடைபெற்றது.

சிறிய ஆலயமாக இருந்தாலும் மிகுந்த சாந்நியத்துடன் சிறப்பாக வழிபடப்பட்டு வருகிறது. நவகோள்களும் கருவறையில் ஈசனுடன் வீற்றிருக்க, நவாம்பிகை தனிச் சந்நிதியில் அருள்கிறாள்.

`இங்கு வந்து ஈசனை மனமுருக வணங் கினால் சகல தோஷங்களும் பாவங்களும் நீங்குகின்றன' என்கிறார்கள் பெரியோர்கள். வரப் பிரசாதியான அம்பிகையை வணங்கி வழிபட்டால், மங்கல வாழ்வு நிலைக்கும் என்கிறார்கள் பெண்கள்.

இங்கு நவகிரக பரிகார பூஜை, குருப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற வைபவங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நவகோள் லிங்கேஸ்வரர் சேவை அறக்கட்டளையின் கீழ் அன்னதானம், கோசாலை, ஏழை மாணவ மாணவிகளுக்குக் கல்வி போன்ற தரும காரியங்கள் செய்யப் படுகின்றன.

`க்ஷண நேரம் இங்கு வந்து பிரார்த்தித்தாலும் ஏழேழ் ஜன்மங்களுக்குத் தொடர்ந்து வரும் கிரக தோஷங்கள் யாவும் தீரும்' என்பது இத்தலத்தின் நம்பிக்கை. நீங்களும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று வாருங்கள்; நவகோள் லிங்கேஸ்வரரின் திருவருளால், கிரக தோஷங்கள் நீங்கும் நன்மைகள் யாவும் உண்டாகும்!

விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக