உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கோடைக்கேற்ற குளு குளு நுங்கு லஸ்ஸிby ayyasamy ram Today at 11:46 am
» வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்!
by ayyasamy ram Today at 11:41 am
» வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை....
by ayyasamy ram Today at 11:24 am
» தூது சென்ற தூதுவளை!
by ayyasamy ram Today at 11:17 am
» அடையாள மையை நெற்றியில் வைத்தால் நல்லது!
by ayyasamy ram Today at 8:54 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by ayyasamy ram Today at 8:24 am
» உலகில் அதிகமாக பொய் பேசப்படும் இடம்!
by T.N.Balasubramanian Today at 7:32 am
» மன அழுத்தம் வராமல் தடுங்க!
by ayyasamy ram Today at 4:30 am
» வாட்ஸ்-அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 4:22 am
» பொண்ணு கண்டிப்பா ஸ்மார்ட் போன் வெச்சிருக்கணும்...!
by ayyasamy ram Today at 4:20 am
» குழந்தை பேறு கிடைக்க...
by ayyasamy ram Today at 4:08 am
» ஏழு ஜென்ம பாவங்கள் நீங்க...
by ayyasamy ram Today at 4:06 am
» தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா?
by ayyasamy ram Today at 4:00 am
» ஆயிரம் பிரியாணிக்கு ஆர்டர்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:18 pm
» தெரிகின்றதா...?
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm
» தொழில் வளமே நாட்டுயர்வு! – வ.உ.சி.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:39 pm
» குச்சி ஐஸ்க்ரீம்
by krishnaamma Yesterday at 7:52 pm
» பேய்களுக்கு கால்கள் கிடையாது! - சிங்கிள் வரி சிறுகதைகள்
by krishnaamma Yesterday at 7:41 pm
» முகநூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» இசையென்னும் பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வனச்சித்திரம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» மதுரம்- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» தலைவர் சொன்ன குட்டிக்கதை
by ayyasamy ram Yesterday at 7:35 pm
» ரெய்டு பயம்….
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ஆசைக்கோர் அளவில்லை
by krishnaamma Yesterday at 6:46 pm
» தண்டுவடத்தில் பூத்த தாமரைகள்
by krishnaamma Yesterday at 6:44 pm
» தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by krishnaamma Yesterday at 6:38 pm
» வாழத்தான் பிறந்தோம்...
by krishnaamma Yesterday at 6:37 pm
» அனைத்து பொருட்களும் அபேஸ்.. வடமாநில இளைஞர்கள் தப்பியோட்டம்!
by krishnaamma Yesterday at 6:35 pm
» 77 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை கோடை காலத்தில் திறப்பு
by krishnaamma Yesterday at 6:19 pm
» இந்தியில் பேசிய ஜப்பான் சிறுவன்
by krishnaamma Yesterday at 6:18 pm
» வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழுங்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 24/05/2022
by mohamed nizamudeen Yesterday at 10:03 am
» அமுத மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:04 am
» வாழைப்பழ கிரேப் கேக்
by ayyasamy ram Yesterday at 6:22 am
» நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பா.இரஞ்சித் படம்
by ayyasamy ram Yesterday at 6:16 am
» உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு: 3 மாதங்களில் 15 ஆயிரம் வீரர்கள் பலி
by ayyasamy ram Yesterday at 6:09 am
» குடிமகன்கள் போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 4:09 am
» ஒன்று தான் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:05 am
» என் இதயத்தின் ஒளிவட்டம் நீ! - கவிதை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:04 am
» வித்தியாசமான கைத்தடி!
by ayyasamy ram Yesterday at 3:55 am
» தைவானை தாக்கினால் தலையிடுவோம்: சீனாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 3:49 am
» சரத் பவாரின் சரணாகதி.
by Dr.S.Soundarapandian Mon May 23, 2022 6:08 pm
» சிவாஜி கணேசன் குடும்பத்தில் அடுத்த ஹீரோ
by Dr.S.Soundarapandian Mon May 23, 2022 6:01 pm
» சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’
by Dr.S.Soundarapandian Mon May 23, 2022 5:53 pm
» 2022 இன் 7 சிறந்த இந்திய வெப் தொடர்கள் இதுவரை நம்மை கவர்ந்தவை
by sncivil57 Mon May 23, 2022 2:58 pm
» இரண்டாம் ஜாமங்களின் கதை -சல்மா
by sncivil57 Mon May 23, 2022 2:40 pm
» புத்தகப்பிரியன் - புத்தகங்கள் - 01.05.2919
by Rajana3480 Mon May 23, 2022 6:41 am
» னக்கு இது கவுரவம் அளிக்கிறது.. பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி
by ayyasamy ram Mon May 23, 2022 5:15 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
krishnaamma |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
Meenatchikaliyaperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலம்பம் தமிழர்களின் வீரத்தின் அடையாளம்
2 posters
சிலம்பம் தமிழர்களின் வீரத்தின் அடையாளம்

சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது.
"சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு.
எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட் டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.
சிலம்பம், தமிழர்களின் வீரவிளையாட்டு. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடியில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கிறது.
"இருவென்று அமிர்தாரசங் கொள்ளும் போது
இன்பமுடன் சிலம்பிருக்கும் வகையைச் சொல்லி
கருவென்ற பட்சியுட வீச்சுங் காட்டி
கால்பிலமும், புஜப்பிலமும் கலந்து சொல்லி
திருவென்ற மந்திரத்தின் தீர்க்கம் சொல்லி
சிவகைலை பொதிகையில் போய் இரு என்றார்கள்.
குருவென்ற பொதிகையில் இருந்து கொண்டு
குருவொன குருவெடுத்து ஆடினேனே;
ஆடினேன் அதன் பிறகு கோடி கோடி
அளவற்ற வித்தையெல்லாம் ஆடிக்கண்டு
நாடிநேன் சுழிமுனையில் நாட்டங்கொண்டு
நாதாந்த மனோன் மணியைக் கண்டுத் தேறி;
பாடினேன் வெகுகோடி சாத்திரங்கள் பக்தியுடன்'
- என சூத்திரம் பாடல் தெரிவிக்கிறது.
அகத்தியர் தமிழகத்திற்குள் நுழைந்த காலம், ராமனின் வருகைக்கு முன்பாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். சுக்ரீவன் தென் பகுதியில் சீதையைத் தேட, வானரங்களை அனுப்பும் போது பொதிகை மலையில் இருக்கும் அகத்திய முனிவரை வணங்கிச் செல்லுமாறு கட்டளையிடுகிறான். எனவே, கி.மு., 2000க்கும் முன்பாக சிலம்பக் கலைக்கு, பொதிகை மலை அடிவாரத்தில் ஒரு பயிற்சிக்கூடம் இருந்து வந்துள்ளது என தெரிகிறது.
ஆனால், சிலம்பக் கலை பற்றிய அகழாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன.
சிப்பி வளையல்கள், உலோகத் தொழிற்கலையில் வல்லவரும், ஜப்பானியத் தீவுகளை ஆய்வு செய்தவருமான பேராசிரியர் கௌலாண்ட், ""பெரும் எண்ணிக்கையிலான இரும்புப் படைக்கலங்கள், கருவிகள் மற்றும் இரும்பை உருக்கும் ஆழ்ந்த அறிவு ஆகியவை இருப்பதிலிருந்து இரும்பை உருக்குதல் என்ற எதிர்பாரா நிகழ்ச்சி, இரும்புத் தொழில் ஐரோப்பாவைக் காட்டிலும், பழைய இரும்புக் காலத்தில் இடம் பெற்றிருந்த இந்திய தீபகற்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்றவை அடங்கும்.
கராத்தே என்ற வீர விளையாட்டின் "கடா' என்ற போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப வரிசையைக் காரணமாக ஏற்கலாம். இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றே.
"கராத்தே' என்ற பெயரிலும் "கரம்' என்ற சொல் மூலமாக உள்ளது. கராத்தே வீரக் கலையின் தாய் குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார்.
சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.
சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திரைப்படங்களின் வாயிலாக சிலம்பக்கலைக்குப் புத்துயிர் ஊட்டினார். சிலம்பத்தில் "வளரி' என்ற எறி ஆயுதம் மருதுபாண்டியர் காலத்தில் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட மருது பண்டியர், வளரி வீசுவதில் வல்லவராய் விளங்கினார்.
சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட கர்னல் வெல்ஸ் என்பவர் எனது ராணுவ நினைவுகள் என்னும் நூலில், ""சின்ன மருது தான் எனக்கு ஈட்டி எறியவும், வளரி வீசவும் கற்றுக் கொடுத்தான். வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும், திறமையுமிக்க ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச முடிகிறது'' என்று கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிலம்பம் தமிழர்களின் வீரத்தின் அடையாளம்
இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பொதுவானது. தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய பழங்குடியினர், அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு உருவ அமைப்பு முழுவதும் தமிழரோடு ஒப்புமை உடையது எனவும் கூறியுள்ளனர்.
தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது, வளரியின் அமைப்பு பற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
""வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்) இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும். இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.
ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோ, ஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள் உண்டெனத் தெரிகிறது. ஆனால், தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம் முயல், குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறது. இருந்த போதிலும், வளரியின் வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்'' எனக் கூறியுள்ளார். சிவகங்கை சரித்திரம் கும்மியும், அம்மானையும் என்ற நூல்
சீரான வண்டியூர்த் தெப்பக் குளந்தாண்டிக்
குளங்கீழ்க் கரையாலின் கொப்புகளைக் கத்தரித்து
முழங்கி வளரி முனைகொண்டு வேகமுண்டு
வித்தார மான வெளிகடந்து தான்வளரி
முத்தீ சுபுரத்த மேட்டில் விழுந்திலையோ
என்று விவரித்துள்ளது. பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்து எறிந்த வளரி, அதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்; அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்து, அதைக் கடந்து வீழ்ந்ததாம். இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிக தூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் "மருதுபாண்டிய மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார்.
வீரபாண்டிக் கட்டபொம்மனும் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தி வந்துள்ளதை
கொட்டுக் கொட்டென்று மேல் பொட்டிப் பகடையும்
கொல்வேன் என்றான் தடிக்கம்பாலே;
சட்டுச் சட்டென்று சிலம்ப வரிசைகள்
தட்டி விட்டான் அங்கே பாதர் வெள்ளை.
என்ற கும்மிப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் பெரும் முயற்சியால் தமிழக அரசு சிலம்பாட்டத்தை பள்ளிகளில் விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. பூ.திருமாறன் அவர்களின் பெரும் முயற்சியால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாகவும் நடத்தப்படுகிறது.
பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், நான் எழுதிய தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' மற்றும் குடிடூச்ட்ஞச்ட் ஞூணூணிட் கூச்ட்டிடூணச்ஞீத என்ற ஆங்கில நூலையும் வெளியிட்டுள்ளது. எனவே,சீரும் சிறப்புமிக்க சிலம்பக் கலையை அனைவரும் பயின்று தமிழகத்தை மீண்டும் வீரத்தின் விளைநிலமாக மாற்றுவோம்.
- கலை நன்மணி அ.அருணாசலம்.
தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது, வளரியின் அமைப்பு பற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
""வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்) இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும். இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.
ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோ, ஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள் உண்டெனத் தெரிகிறது. ஆனால், தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம் முயல், குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறது. இருந்த போதிலும், வளரியின் வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்'' எனக் கூறியுள்ளார். சிவகங்கை சரித்திரம் கும்மியும், அம்மானையும் என்ற நூல்
சீரான வண்டியூர்த் தெப்பக் குளந்தாண்டிக்
குளங்கீழ்க் கரையாலின் கொப்புகளைக் கத்தரித்து
முழங்கி வளரி முனைகொண்டு வேகமுண்டு
வித்தார மான வெளிகடந்து தான்வளரி
முத்தீ சுபுரத்த மேட்டில் விழுந்திலையோ
என்று விவரித்துள்ளது. பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்து எறிந்த வளரி, அதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்; அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்து, அதைக் கடந்து வீழ்ந்ததாம். இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிக தூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் "மருதுபாண்டிய மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார்.
வீரபாண்டிக் கட்டபொம்மனும் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தி வந்துள்ளதை
கொட்டுக் கொட்டென்று மேல் பொட்டிப் பகடையும்
கொல்வேன் என்றான் தடிக்கம்பாலே;
சட்டுச் சட்டென்று சிலம்ப வரிசைகள்
தட்டி விட்டான் அங்கே பாதர் வெள்ளை.
என்ற கும்மிப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் பெரும் முயற்சியால் தமிழக அரசு சிலம்பாட்டத்தை பள்ளிகளில் விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. பூ.திருமாறன் அவர்களின் பெரும் முயற்சியால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாகவும் நடத்தப்படுகிறது.
பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், நான் எழுதிய தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' மற்றும் குடிடூச்ட்ஞச்ட் ஞூணூணிட் கூச்ட்டிடூணச்ஞீத என்ற ஆங்கில நூலையும் வெளியிட்டுள்ளது. எனவே,சீரும் சிறப்புமிக்க சிலம்பக் கலையை அனைவரும் பயின்று தமிழகத்தை மீண்டும் வீரத்தின் விளைநிலமாக மாற்றுவோம்.
- கலை நன்மணி அ.அருணாசலம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிலம்பம் தமிழர்களின் வீரத்தின் அடையாளம்
சிலம்பம் பற்றிய வரலாறு எனக்கு வேண்டும் யாராவது உதவுங்கள்...................
kuttythara- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 02/02/2015
மதிப்பீடுகள் : 10
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|