புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
28 Posts - 53%
heezulia
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
3 Posts - 6%
prajai
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
216 Posts - 43%
heezulia
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
24 Posts - 5%
i6appar
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
5 Posts - 1%
Guna.D
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 21, 2021 1:17 pm

ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Saying-6

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 21, 2021 1:29 pm

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைத் துளிகள்:

கர்மமார்க்கம், ஞானமார்க்கம், பக்திமார்க்கம் இப்படி எந்த வழியிலும் இறைவனை அடைய முடியும்.


இறைவன் ஒரு கற்பவிருட்சம். நாம் அதன் நிழலில் எப்பொழுதும் இருக்க வேண்டும்.


கடவுள் எல்லா மனிதர்கள் இடத்திலும் உள்ளார். ஆனால் எல்லா மனிதர்களும் கடவுள் இல்லை.


நீங்கள் பைத்தியமாய் இருங்கள். உலக சுகங்களுக்காக அல்ல, இறைவனின் அன்பு வேண்டி பைத்தியமாய் இருங்கள்.


கடவுள் தரிசனம் கிடைத்தவருக்கு நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடு இருக்காது.


கடுகளவு தற்பெருமை இருந்தாலும் கடவுளை உணர முடியாது.


நான் வாழும் வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.


அனைத்து மதங்களும் ஒன்றே என உணரவேண்டும்.


இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனை தொழ வேண்டும்.


உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு வாழ்வளிப்பவர் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.


மக்களுள் பெரும்பாலானோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் சுய நலத்தை அடிப்படையாகக் கொண்டவை.


மனத்தூய்மையால் மட்டுமே பிரபஞ்ச உண்மையினை உணர முடியும்.


அறியாமையின் காரணமாகத்தான் அகம்பாவம் மனிதனுக்கு ஏற்படுகின்றது. அந்த அகம்பாவம் மனிதனை அழிக்கின்றது.


உண்மையாய் எளிமையாய் இறைவனிடம் வேண்டினாலே போதும். இறைவனுக்கு கேட்கும்.


இரவில் தெரியும் நட்சத்திரங்கள் பகலில் தெரிவதில்லை என்பதால் நட்சத்திரங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆகவே மனிதா உனக்குக் கடவுள் தெரியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று சொல்லாதே.


சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது.

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை:

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசங்கள் மிகவும் எளிமையாக இருக்கும். சில சமயம் உபதேசங்களைப் புரிந்து கொள்ளும் விதமாக சின்னச் சின்னக் கதைகளையும் அவர் கூறுவதுண்டு. இப்படி ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் நிறைய இருக்கின்றன. இந்தக் கதைகள் அனைத்தும் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எளிமையானவை. ஆனால் அந்தக் கதைகளில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் சிறப்பானது. இறைவன் மீது நம் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க, பகவான் ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை இது:


ஒரு கிராமத்தில் ஏழைப்பெண் ஒருத்திக்கு சொந்தமாக ஒரு பசுமாடு இருந்தது. அவள் அந்தப் பசுமாட்டிலிருந்து பாலைக் கறந்து, ஊர் மக்களுக்கு விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினாள். கிராமத்தின் எல்லையில் உள்ள ஆற்றின் மறுகரையில் ஒரு கோயில் அர்ச்சகர் வாழ்ந்து வந்தார். தினமும் அபிஷேகத்திற்கு ஆற்றின் அக்கரையில் உள்ள பெண்ணிடம் அவர் பால் வாங்குவார். சில நாட்களாக குறித்த நேரத்தில் அந்தப் பெண்மணியால் பால் கொண்டு வர இயலவில்லை. இதனால் கோபம் கொண்ட அர்ச்சகர், ஒரு நாள் அவளைக் கூப்பிட்டு, உன்னுடைய கால தாமத்தால் என்னால் உரிய நேரத்தில் பூஜையை முடிக்க முடியவில்லை’’ என்று கோபமாக கடிந்துகொண்டார்.

“மன்னிக்கவேண்டும் சுவாமி, நான் வீட்டிலிருந்து முன்னதாகவே கிளம்பிவிடுகிறேன். ஆனால். ஆற்றைக் கடந்து வர வேண்டும் என்பதால், கரையில் படகுக்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது” என்றாள்.

“அவனவன் பிறவிப் பெருங்கடலையே ‘கடவுள்’ பெயரைச் சொல்லிக்கொண்டே கடந்து விடுகிறான். நீ என்னடாவென்றால், சிறிய ஆற்றைக் கடப்பதற்கெல்லாம் படகுக்காக நம்பிக்கொண்டிருக்கிறாயே! இனிமேல் சரியான நேரத்துக்கு வரவில்லை என்றால், எனக்கு நீ பால் கொண்டுவர வேண்டாம்” என்று கேலியாக சொன்னார். ஆனால், அதை, அந்த பெண்ணால் புரிந்துக்கொள்ள முடியவில்லை ‘இந்த ஊரிலேயே அதிகமாக பால் வாங்குபவர் இவர் ஒருவர்தான். இவரும் இப்படிச் சொல்லிவிட்டாரே... என்ன செய்வது?’ என வருத்தத்துடன் கிளம்பிச் சென்றாள். அதன் பிறகு, அவள் குறித்த நேரத்துக்குள் வந்து விட்டாள். அந்த அர்ச்சகருக்குஆச்சர்யமாக இருந்தது. ஒரு நாள் “இப்போதெல்லாம் சரியான நேரத்துக்குள் வந்துவிடுகிறாயே... எப்படியம்மா?” என்று கேட்டார். “அது ஒன்றும் பெரிய மந்திரம் இல்லை, சுவாமி. நீங்கள் சொன்னது போலத்தான் செய்கிறேன்.”


“என்னது... நான் சொன்னபடியா! ஆற்றின் தண்ணீர் மேல் நடந்தா வந்தாய்..!” என்றார் கேலியுடன்.


“ஆமாம் சுவாமி! அப்படித்தான் நடந்து வந்தேன்” என்றாள் அந்தப் பெண் உறுதியான குரலில்.

‘இது எப்படிச் சாத்தியம்?’ அர்ச்சகரின் மனதுக்குள் சந்தேகம் இருந்தாலும், அதை அவர் வெளிகாட்டிக் கொள்ளவில்லை. “எங்கே... என் கண்முன்னே நடந்து காட்டுவாயா?” என்று கேட்டார்.


“நீ முன்னே செல், நான் உன்னைப் பின்தொடர்கிறேன்” என்றார் அர்ச்சகர். உடனே அந்தப் பெண்மணி, கை இரண்டையும் கூப்பியபடி, கடவுளின் பெயரைக் கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்தாள். கண்முன்னே நடந்ததை நம்ப முடியாமல் பார்த்த அர்ச்சகருக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி... அதை வெளிக்காட்ட முடியாமல், நீண்ட தயக்கத்துக்குப் பிறகு அவளைப் பின்தொடர்ந்தார்.

‘ஆற்றின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்று தெரியலையே’ என்று பயத்துடன் நினைத்தபடியே கடவுளின் பெயரைக் கூறியபடி, இறங்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு ஓர் எண்ணம்.... ‘தண்ணீரில் நடக்க முடியுமோ முடியாதோ... ஒருவேளை நீரில் விழவேண்டி இருந்தால், குறைந்த பட்சம் ஆடையாவது நனையாமல் இருக்கட்டுமே...’ என நினத்தவர் தன்னுடைய ஆடையைக் கைகளால் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஆற்றில் இறங்கினார். ஆனால், கால் தண்ணீருக்கு உள்ளே சென்றது. அர்ச்சகர் திடுக்கிட்டார். வேறு வழி தெரியாமல் திரும்பி, கரையேறினார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண் திரும்பி அவர் இருக்கும் கரைக்கே வந்தாள்.


“என்னை மன்னித்துவிடம்மா! என்னால் உன்னைப் போல் நீரில் நடக்க முடியவில்லை. உண்மையாகவே நீ நீர் மேல் நடந்து சென்றது எப்படி சாத்தியமானது என்பதை எனக்குச் சொல்லேன்...” என்று கேட்டார்.


அந்தப் பெண் பணிவுடன், “சுவாமி…. உங்கள் உதடுகள் கடவுள் பெயரைச் உச்சரித்தாலும், உங்கள் கைகள் இரண்டும் உங்கள் உடைகள் நனையக் கூடாது என்பதற்காக தூக்கிப் பிடித்துக்கொண்டே இருந்தன. அதன் பிறகு நீங்கள் நீரில் இறங்கினீர்கள். கடவுள் மேல் உண்மையாகவே உங்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், அப்படிச் செய்திருக்க மாட்டீர்கள்” என்ற அந்தப் பெண் சற்றுத் தயங்கி சொன்னாள்...


“மேலும், ஆற்றின் ஆழத்தைப் பரீட்சித்து பார்ப்பது, அந்த ஆண்டவனையே ஆழம் பார்ப்பது போன்றது அல்லவா?” என்றாள்.

அந்தப் பெண் இதைச் சாதாரணமாகச் சொன்னாலும், அதை அந்த இறைவனே நேரில் வந்து சொன்னதுபோல இருந்தது அர்ச்சகருக்கு அவர் வெட்கித் தலைகுனிந்தார்.


பிரார்த்தனை என்பது அந்தப் பெண்ணின் மனநிலையைப் போலத்தான் இருக்கவேண்டும். அந்த அர்ச்சகரைப்போல இருக்கக் கூடாது என்பதுதான் ஸ்ரீராமகிருஷ்ணர் பரமஹம்சர் நமக்கு கூறும் அறிவுரை.

“எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர் இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்” என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார்.


ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு “அனைத்தும் நாராயணன் செயல் தான், அதனை மறந்து விடாதே” என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான். மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே பார்க்க ஆரம்பித்தான்.


ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த அந்தச் சீடன் எதிரே யானை ஒன்று ஆவேசமாக வந்து கொண்டிருந்தது. அங்குள்ள மக்கள் “யானைக்கு மதம் பிடித்து விட்டது” ஓடிப்போய் உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்” என்று கூறினர். ஆனால் அந்தச் சீடனோ, “யானையிலும் நாராயணன்தான் இருக்கிறார். அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறிக் கொண்டு நடந்து சென்றான். எதிரில் வந்த யானை பிளிறிக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தது. அதனைத் துரத்திக்கொண்டு வந்த அதன் பாகன், சீடனை விலகிச் செல்லுமாறு பலமுறை கூக்குரலிட்டான். ஆனால் சீடனோ, ‘நாராயணன் என்னைக் கைவிட மாட்டான்’ என்று கூறி ஒதுங்காமல் நேர் எதிராக அப்படியே நின்று கொண்டிருந்தான். எதிரில் வந்து கொண்டிருந்த யானை, தன் துதிக்கையால் சீடனைத் தூக்கியது. தூர வீசி எறிந்தது. பலத்த காயங்களோடு சீடன் உயிர் பிழைத்தான். உடல் நலமான பின் தன் குருவிடம் சென்று, “எல்லாம் நாராயணன்தான், கடவுள் கைவிட மாட்டான் என்று கூறினீர்களே, எனக்கு ஏன் இப்படி ஆயிற்று? யானையில் இருந்த நாராயணன் ஏன் என்னைக் காப்பாற்றாமல் தண்டித்தார்?” என்று அழுகையுடனும் ஆத்திரத்துடனும் கேட்டான்.

அதற்கு குருநாதர், “யானையில் நாராயணன் இருந்தது உண்மைதான். ஆனால் அதற்கு முன் பாகன் வடிவத்தில் நாராயணன் உன்னை ஒதுங்கச் சொல்லி எச்சரித்தாரே, ஏன் நீஒதுங்கவில்லை? அதனால் தான் இப்படி ஆனது” என்றார். சீடன் பதில் பேச முடியாமல் நகர்ந்தான்.


“ஆகவே தீயவர்களிடம் விலகி இருத்தலே நல்லது” என்று சொல்லிக் கதையை குருதேவர் முடித்தார்.


ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி:

தானறிந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தது மட்டுமல்லாமல், எப்படி பக்தி கொள்வது என்றும், அவற்றைத் தானும் பின்பற்றி அதன்படி வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், கடைசி நாட்களில் அவரை தொண்டைப் புற்றுநோய் தாக்கியது. இருந்தாலும் தன்னைத் தேடி வருபவர்களுக்கும், தன் உபதேசங்களைக் கேட்க வருபவர்களுக்கும் தன்னுடைய பேச்சுதான் ஆறுதலாக இருக்கும் என்றார். தன்னைத் தேடி வரும் மக்களைத் திருப்பிப் போகச் சொல்ல அவருக்கு விருப்பமில்லை. தன் தொண்டை புண்ணாக இருந்த நிலையிலும், திரவ நிலையிலான உணவைக் கூட உட்கொள்ள முடியாத நிலையிலும் அவர் உபதேசத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். பின்பு அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம், மற்றும் சேவை செய்தனர். ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று மகா சமாதி அடைந்தார். இவர் எந்த சமய வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல், மற்றவர்களின் ஆன்மிகக் கருத்துக்களை பற்றி குறை சொல்லாமல், அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் இந்த உலகை விட்டு மறைந்து விட்டாலும் அவரின் உபதேசங்களும், அவர் சொன்ன கதைகளும் இன்றும் சிந்திக்கக் கூடியதாக இருக்கின்றன. இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும் மகானாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக