புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
56 Posts - 46%
heezulia
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
prajai
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
12 Posts - 2%
prajai
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
9 Posts - 2%
Jenila
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
jairam
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
அப்பா – சிறுகதை Poll_c10அப்பா – சிறுகதை Poll_m10அப்பா – சிறுகதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா – சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 27, 2020 7:04 pm

அப்பா – சிறுகதை 4
-
சமையற்கட்டில் மிக்ஸி ஓடும் சத்தம் கேட்டது.
முதலில் சீராக ஆரம்பித்து சில வினாடிகளிலேயே
வினோத சப்த ஜாலங்கள்.

‘‘என்னம்மா...’’எழுந்து போய்ப் பார்த்தால்
அதற்குள் ஸ்விட்சை அணைத்திருந்தாள்.
மிக்ஸியைத் திறந்து பார்த்தால் உள்ளிருந்த
பிளேடு வளைந்திருந்தது.

‘‘ரெண்டு நாளாவே தொல்லை பண்ணுச்சு.

இன்னிக்கு வாயைப் பொளந்துருச்சு...’’எதுவும்
பேசாமல் சட்டையை மாட்டிக் கொண்டேன்.
இரவு டிபனுக்கு சட்னி அரைக்கும்போதுதான்
இந்த சிக்கல்.

மிக்சி சரியில்லை என்கிற ஒரே பதில் டிபனுக்கு
ஆப்பு வைத்து விடும். இன்னொரு ஜார் ஏற்கெனவே
வாயைப் பிளந்திருந்தது. எதையும் தள்ளிப் போடும்
சாமர்த்திய வாழ்க்கையில் ‘அதான் இன்னொரு
ஜார் இருக்கே... வச்சு சமாளி...’ என்று இத்தனை
நாட்கள் ஓட்டியாச்சு.

கைபேசி சிணுங்கியது. எடுத்தால் அப்பா என்கிற
எழுத்துக்கள் ஒளிர்ந்தன. இப்போது பேச
ஆரம்பித்தால் மிக்சி வேலை தடைப்படும்.
போய் விட்டு வந்து பேசலாம் என்று ரிங் டோனை
ஒலிக்க விட்டேன்.

ஷாப்பர் பையில் மிக்சி, ஜார்களைப் போட்டுக்
கொடுத்தாள். முன் ஜாக்கிரதையில் கில்லாடி.
சரி செய்யும்போது ‘எல்லாவற்றையும் சேர்த்தே
பார்த்துருங்க’ என சொல்லாமல் சொன்ன
புத்திசாலி.

‘‘எவ்வளவு கேட்பார்னு தெரியலியே...’’
‘‘இந்தாங்க...’’எட்டாய் மடித்த ஐநூறு ரூபாய்
தன் ரகசிய பதுங்குமிடத்திலிருந்து வெளிப்பட்ட
குஷியில் உடம்பை விரித்து முழுக் காற்றையும்
ஆழ்ந்து சுவாசித்தது.

டூ வீலர் ஏற்கெனவே ரிசர்வில் ஓடிக் கொண்டிருந்தது.
வண்டியில் சாவியை சொருகியதுமே ஞாபக
சவுக்கு சொடுக்கியது.

தெரு முனையில் சர்வீஸ் சென்டர்.
ராகா எலக்ட்ரானிக்ஸ். ‘உரிமை: மனோகர்.
எல்லாவித எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் இங்கே
பழுது நீக்கப்படும்’. இந்த வரியில்தான் நான் முதன்
முதலில் விழுந்தேன். பிற இடங்களில் பழுது
‘பார்க்கப்படும்’ என்றிருக்கும். இங்கே ‘நீக்கப்படும்’.
மெக்கானிக்கிடம் அதைச் சொல்லி சிலாகித்த
போது பெருமையாகச் சிரித்துக் கொண்டான்.
என்னில் பாதி வயசு.

இன்று நல்ல வேளையாகக் கடை திறந்திருந்தது.
கடைக்குள் ஒரு பெரியவர் மட்டும்
உட்கார்ந்திருந்தார். மனோகரைக் காணோம்.

மிக்ஸி பையை வைத்தேன். எடுத்துப் பார்த்த
வேகத்தில் அவரே சரி செய்து விடுவார் போலிருந்தது.
பிளேடைச் சுழற்றி... மிக்சியைத் தலை
கீழாய்க் கவிழ்த்து... உச்சு கொட்டினார்.

‘‘பார்த்தீங்களா... பாட்டம் போயிருச்சு...’’
‘‘ம்ம்... சத்தம் வரவும் எடுத்துகிட்டு வந்தேன்...’’
‘‘பையன் இப்ப வந்துருவான்...’’
ஒரு ஸ்டூலை எடுத்து ஓரமாய்ப் போட்டார்.
‘‘உட்காருங்க...’’

‘ஓ... அப்போ இவர் சரி செய்ய மாட்டார்’ என்று
புரிந்தது. கடைக்குள் ஷெல்பில் ரேடியோ.
எஃப்எம்மில் இளையராஜா இசையில் பாடல்கள்.
ரேடியோ கேட்டு எவ்ளோ நாளாச்சு. வீட்டை விட்டு
வெளியில் எவ்வித நெருக்கடியும் உணராத
நேரத்திற்கு மனம் உண்மையிலேயே ஏங்கி
இருந்திருக்கிறது.

இல்லாவிட்டால் இப்படி நாலைந்து பாடல்கள்
ஒலிபரப்பாகும் வரை ஏன் என்னிடம் எவ்வித
பதற்றமும் இல்லை?

பிறகுதான் புத்தி விழித்துக் கொண்டது.
இது என் இடம் இல்லை. நான் கிளம்ப வேண்டும்.

எழுந்து நின்றேன் என் அதிருப்தியைக் காட்டும்
விதமாய்.‘‘என்னங்க... எப்போ வருவாரு..?’’
பெரியவர் அசரவில்லை. மொபைலை எடுத்தார்.
அழைப்பு போனது. ‘‘தம்பி... கஸ்டமர்
காத்திருக்கார்ப்பா...’’

‘‘சரிப்பா...’’ என்னிடம் திரும்பினார்.‘‘சர்வீசுக்குப்
போன இடத்துல இன்னும் வேலை முடியலியாம்.
கொடுத்துட்டு போகச் சொல்றான்...’’அப்போது
இன்றைய தேவைக்கு உதவாது. இந்த நினைப்பில்
முகம் சுளித்து விட்டேன் என்னையும் மீறி.

‘‘வந்த உடனே மொத வேலை உங்களுதுதான்.
ஃபோன் நம்பர் கொடுத்துட்டு போங்க...’’என்
பெயரை விசாரித்து ஜார்களில் எழுதிக் கொண்டார்.
உள் பக்கமாய் பத்திரப்படுத்தினார். இதற்குள்
இன்னொருவர் வர அவரிடமும் அதேபோல்
விசாரிப்பு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 27, 2020 7:05 pm



வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து
விட்டேன். போன வேலை முடியவில்லை என்று
தெரிந்ததும் அவள் ‘எதிர்பார்த்த ரிசல்ட்தான்’
என்கிற பாவனையைக் காட்டினாள்.

‘இதே எதிர் வீட்டுக்காரன் என்றால் கையோடு
ரிப்பேர் செய்து வாங்கி வந்திருப்பான்’ என்கிற
தகவலும் அதில் ஒளிந்திருந்தது.

மொபைலுடன் மொட்டை மாடிக்கு வந்து விட்டேன்.
எதிரே கோபுரங்களின் வரிசை. பக்கத்து வீட்டில்
வளர்க்கும் புறாக்களின் சிறகடிப்பு. தோப்புகள்
அழிக்கப்பட்ட பூமியில் எங்கிருந்தோ வரும் காற்று.

கைபேசி ஒலித்தது.
‘‘மிக்ஸி ரிப்பேருக்கு கொடுத்தீங்களா..?’’
‘‘ஆமா...’’
‘‘உங்களுக்காகத்தான் இப்போ கடைக்கு வரேன்.
வந்து வாங்கிட்டு போயிருங்க...’’

கீழிறங்கி வந்து வண்டியை எடுத்துக்கொண்டு
கிளம்பினேன். சட்னி நிச்சயம் என்று மனம்
குதூகலித்தது.

கடைக்குப் போனால் அதே பெரியவர்தான்
இருந்தார்.

‘‘பையன் ஃபோன் பண்ணாப்ல. கடைக்கு வரச்
சொன்னாரே...’’
‘‘வந்துருவான்... ஒக்காருங்க...’’
மறுபடி ஸ்டூலை எடுத்துப் போட்டார்.

‘‘இதா... பக்கத்துல ஒரு காப்பி குடிச்சுட்டு வரேன்...’’
லேசான கெஞ்சல் அவர் குரலில் தெரிந்தது.

‘‘போயிட்டு வாங்க...’’
‘‘ஆள் இல்லாம கடையை விட்டுப் போக முடியல...’’

என்ன வைத்தாலும் எழுபது வயசிருக்கும்.
ஆனால், அஞ்சு பத்து வயசு குறைத்துச் சொல்கிற
மாதிரி உருவம். அவர் நடந்து போனபோது தளர்ச்சி
தெரிந்தது. எத்தனை நேரமாய் உட்கார்ந்திருந்தாரோ.

பைக் வந்து நின்றது. மனோகர்.
‘‘எங்கே இவர் போயிட்டாரு..?’’ என்றான்.
‘‘பக்கத்துலதான். சொல்லிட்டுத்தான் போனாரு...’’ என்றேன்.
மிக்சியை எடுத்துப் பார்த்தான். உதட்டைப் பிதுக்கினான்.
‘‘நல்லா அடி வாங்கிருச்சு. முதல்லியே கொண்டு
வந்துருக்கலாம். இப்போ முழுசா மாத்தணும்...’’

‘‘மாத்திருங்க...’’

ஏதோ கணக்கு போட்டு தோராயமாய் ஒரு தொகை
சொன்னான். நான் சம்மதமாய்த் தலை அசைக்கவும்
வேலையை ஆரம்பித்தான்.

பெரியவர் திரும்பி விட்டார். மகனைப் பார்த்தும்
பார்க்காத மாதிரி மையமாய் நின்றார்.
‘‘வேற யாரும் தேடுனாங்களா..?’’
‘‘இல்லை...’’
‘‘கெளம்பணுமா..?’’
‘‘பரவால்ல... இருக்கேன்...’’

‘‘இவருக்காகத்தான் வேகமா வந்தேன். இருந்து
கடையைப் பூட்டிக்கிட்டு போகலாம்...’’

சரி என்று தலையாட்டினார். இருந்தது ஒரு
ஸ்டூல்தான். அவர் நிற்பது சங்கடமாய் இருந்தது.

‘‘அரை மணி ஆவுமா..?’’ என்றேன் மனோகரிடம்.
‘‘முடிஞ்சிரும் சார்...’’‘‘நீங்க ஒக்காருங்க. அந்தக்
கடை வரைக்கும் போயிட்டு வரேன்...’’ என்றேன்
பெரியவரிடம்.

அலுவலகம், வீடு என்று திரும்பத் திரும்ப செக்கு
மாட்டு வாழ்க்கை. இதே தெருவின் இன்னொரு
பாதியில் பூக்கடைகள் வரிசையாய் இருக்கும்.
கீழே பூக்கள் சிதறிக் கிடக்கும். இருவாட்சி, முல்லை,
மல்லிகை, ரோஜா, சம்பங்கி, செவ்வந்தி...
வினோதமான மணம் காற்றில்.

இலக்கில்லாமல் இப்படி நடக்கும்போது உடம்பே
லேசாகி விடுகிறது. புத்தி எதையும்
ஆராய்வதில்லை. சிந்தனை ஓய்வெடுக்கிறது.
வாழ்வில் சில சமரசங்களுக்கு மனம் தயாராகி
விடுகிறது.

திரும்பி நடந்தேன். மனோகர் இன்னமும்
மிக்சியோடு போராடிக் கொண்டு இருந்தான்.
என்னைப் பார்த்ததும் பெரியவர் சமாதானமாய்
சொன்னார்.

‘‘இதோ முடிஞ்சிரும். டைட்டா புடிச்சிருக்கு...’’
எழுந்திருந்தார் எனக்கு அமர இடம் கொடுக்க.
கவனிக்காத மாதிரி நின்றவாறே வேடிக்கை
பார்த்தேன்.

அரை மணி நேரத்திற்குப் பின் மிக்சி ரெடியானது.
ஜாரை வைத்து ஓட்டிக் காட்டினான். உடைந்த
பகுதியைக் கொடுத்தான்.

‘‘நல்லா வேலை வாங்கிருச்சு...’’ என்றான்
பெருமூச்சுடன்.

ரூபாய் நோட்டை நீட்டினேன். மீதியைக் கொடுத்து
விட்டு பெரியவரிடம் திரும்பினான்.
‘‘பார்த்துக்குங்க. வீடு வரைக்கும் போயிட்டு வரேன்...’’
பைக்கில் ஏறிப் போய் விட்டான்.

‘‘இவர் ஒரு மகன்தானா..?’’ என்றேன்.
‘‘ரெண்டு பொண்ணு. இவன்...’’
‘‘கட்டிக் கொடுத்தாச்சா..?’’
‘‘ம்ம்ம்...’’
‘‘பேரப் புள்ளைங்க கூட பொழுது போவும்...’’ என்றேன்
சிரித்தபடி.பெரியவர் வாயிலிருந்து வார்த்தைகளைப்
பிடுங்க வேண்டியிருந்தது. விமர்சனங்கள் அற்ற முகம்
அவருக்கு.

‘‘அவரு வெளியே போற நேரத்துல கடையைப்
பார்த்துக்கிறீங்க பொறுப்பா...’’ என்றேன் கூடுதல்
பாராட்டாய்.சிக்கனமாய் புன்னகைத்தார்.

மிக்சி பையை மாட்டிக் கொண்டு கிளம்ப யத்தனித்த
போது பெரியவர் கேட்டார்.‘‘அப்பா அம்மா உங்க கூட
இருக்காங்களா தம்பி..?’’

திரும்பி அவரைப் பார்த்தேன். இப்போதும் நிதானமான
முகம். ‘நீ கேட்டில்ல... நானும் ஒரே ஒரு கேள்வி
கேட்டுக்கிறேங்’கிற மாதிரி.

‘‘ஊர்ல இருக்காங்க...’’

சரி என்பது போல் தலையாட்டினார். வேறு எவ்வித
விசாரணையும் இல்லை. வீட்டுக்கு வந்து மிக்சியைக்
கொடுத்ததும் கேட்டாள்.

‘‘என்னவாம்... எவ்ளோ வாங்கினான்..?’’

அவளுக்கு பதில் சொல்லத் தோன்றாமல் மொபைலை
எடுத்துக் கொண்டு நகர்ந்தேன். மிஸ்டு அழைப்பில்
அப்பா நம்பரைத் தேடி அழைக்க.

இதுவரை அமைதியாய் இருந்த மனசு பிறாண்ட
ஆரம்பித்திருந்தது.‘ச்சே, தப்பு பண்ணிட்டேன்.
அப்பவே பேசி இருக்கணும்...’

ரிங் போக ஆரம்பித்தது. அப்பாவின் குரல் கேட்க
தவிக்க ஆரம்பித்தேன் அப்போது.
-
----------------------------------ரிஷபன்
நன்றி- குங்குமம்





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக