புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் !
இதெல்லாம் ஒருகாலத்தில் வடஇந்திய உணவுகளாக பார்க்கப்பட்டன. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் நிறைய வீடுகளில் இரவு உணவு சப்பாத்தி என்று ஆகிவிட்டது. அதில் பல்வேறு வகைகளை இங்கு பார்க்கலாம். அத்துடன் அனைவருக்கும் பிடித்தமான, all time hit என்று சொல்லக்கூடிய பூரி வகைகள் மற்றும் பரோட்டா வகைகளையும் இங்கு பார்க்கலாம்
சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் !
இதெல்லாம் ஒருகாலத்தில் வடஇந்திய உணவுகளாக பார்க்கப்பட்டன. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் நிறைய வீடுகளில் இரவு உணவு சப்பாத்தி என்று ஆகிவிட்டது. அதில் பல்வேறு வகைகளை இங்கு பார்க்கலாம். அத்துடன் அனைவருக்கும் பிடித்தமான, all time hit என்று சொல்லக்கூடிய பூரி வகைகள் மற்றும் பரோட்டா வகைகளையும் இங்கு பார்க்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உருளைக்கிழங்கு / ஆலு பரோட்டா !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு - 2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
அதில் இப்பொழுது வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
சுவையான, அருமையான ஆலு பரோட்டா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.
குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு - 2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
அதில் இப்பொழுது வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
சுவையான, அருமையான ஆலு பரோட்டா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.
குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரோட்டா !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
வேகவைத்து துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி அரை ஸ்பூன்
உப்பு - ஒரே ஒரு சிட்டிகை
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உப்பு வேகவைத்து துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு , ஏலப்பொடி போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
சுவையான, அருமையான, இனிப்பான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரோட்டா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் தேன் விட்டுக்கொள்ளலாம் அல்லது நெய் விட்டுக்கலாம்.
குறிப்பு:
1 ) இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தனியே மசித்து வைத்துக் கொண்டு, சப்பாத்திக்குள் பூரணம் போல் வைத்து ஸ்டஃப்டு பரோட்டாவாகவும் செய்யாலாம் .
2 ) எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
வேகவைத்து துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி அரை ஸ்பூன்
உப்பு - ஒரே ஒரு சிட்டிகை
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உப்பு வேகவைத்து துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு , ஏலப்பொடி போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
சுவையான, அருமையான, இனிப்பான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரோட்டா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் தேன் விட்டுக்கொள்ளலாம் அல்லது நெய் விட்டுக்கலாம்.
குறிப்பு:
1 ) இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தனியே மசித்து வைத்துக் கொண்டு, சப்பாத்திக்குள் பூரணம் போல் வைத்து ஸ்டஃப்டு பரோட்டாவாகவும் செய்யாலாம் .
2 ) எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சோயா சங் பரோட்டா !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
சோயா சங் / உருண்டைகள் 20 / 30 அல்லது சோயா க்ரானுல்ஸ் - 1 /2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, பச்சை தண்ணீரில் இரு முறை நன்கு அலசவும்.
நன்கு பிழிந்து, மிக்ஸியில் அடித்து உதிர்த்துக் கொள்ளவும்.
கரம் மசாலா போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
சுவையான, அருமையான சோயா சங் பரோட்டா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.
குறிப்பு:
1 ) சோயா சங் இல்லாமல் தூளாக கிடைத்தால், அதை அப்படியே தண்ணீரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து நன்கு பிழிந்து உபயோகிக்கவும்.
2 ) ஒருவேளை பச்சை வாசனை வருமே என்று நீங்கள் நினைத்தால், வாணலி இல் ஒருமுறை புரட்டி எடுத்து பின் உபயோகிக்கவும்.
3 ) இந்த சங்கை தனியே பொடித்து வைத்துக் கொண்டு, கரம் மசாலா கலந்து, சப்பாத்திக்குள் பூரணம் போல் வைத்து ஸ்டஃப்டு பரோட்டாவாகவும் செய்யாலாம் .
4 ) எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
சோயா சங் / உருண்டைகள் 20 / 30 அல்லது சோயா க்ரானுல்ஸ் - 1 /2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, பச்சை தண்ணீரில் இரு முறை நன்கு அலசவும்.
நன்கு பிழிந்து, மிக்ஸியில் அடித்து உதிர்த்துக் கொள்ளவும்.
கரம் மசாலா போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
சுவையான, அருமையான சோயா சங் பரோட்டா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.
குறிப்பு:
1 ) சோயா சங் இல்லாமல் தூளாக கிடைத்தால், அதை அப்படியே தண்ணீரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து நன்கு பிழிந்து உபயோகிக்கவும்.
2 ) ஒருவேளை பச்சை வாசனை வருமே என்று நீங்கள் நினைத்தால், வாணலி இல் ஒருமுறை புரட்டி எடுத்து பின் உபயோகிக்கவும்.
3 ) இந்த சங்கை தனியே பொடித்து வைத்துக் கொண்டு, கரம் மசாலா கலந்து, சப்பாத்திக்குள் பூரணம் போல் வைத்து ஸ்டஃப்டு பரோட்டாவாகவும் செய்யாலாம் .
4 ) எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
க்ரீன் மசாலா சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
நெய் - எண்ணெய் கலவை - தேவையான அளவு.
மசாலாவிற்கு :
புதினா - 2 கைப்பிடி
மல்லித்தழை - 2 கைப்பிடி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3 - 5 பல்
பச்சை மிளகாய் - 3 - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.
தண்ணீர் மட்டா விடுங்கள்.
மாவுடன் நெய், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு அரைத்த விழுதை போட்டு நன்கு மென்மையாக பிசையுங்கள்.
தேவையானால் மட்டுமே தண்ணீர் சேர்க்கவும்.
மெல்லிய சப்பாத்திகளாக இட்டு , தோசை தவாவில் எண்ணெய்-நெய் கலவை சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.
கண்ணுக்குக் குளுமையான பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான க்ரீன் மசாலா சப்பாத்தி ரெடி.
எப்பொழுதும் போல் இதற்கும் தயிர் தான் சூப்பர் ஆக இருக்கும்
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
நெய் - எண்ணெய் கலவை - தேவையான அளவு.
மசாலாவிற்கு :
புதினா - 2 கைப்பிடி
மல்லித்தழை - 2 கைப்பிடி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3 - 5 பல்
பச்சை மிளகாய் - 3 - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.
தண்ணீர் மட்டா விடுங்கள்.
மாவுடன் நெய், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு அரைத்த விழுதை போட்டு நன்கு மென்மையாக பிசையுங்கள்.
தேவையானால் மட்டுமே தண்ணீர் சேர்க்கவும்.
மெல்லிய சப்பாத்திகளாக இட்டு , தோசை தவாவில் எண்ணெய்-நெய் கலவை சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.
கண்ணுக்குக் குளுமையான பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான க்ரீன் மசாலா சப்பாத்தி ரெடி.
எப்பொழுதும் போல் இதற்கும் தயிர் தான் சூப்பர் ஆக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பனீர் ஸ்டஃப்டு பரோட்டா !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
துருவிய பனீர் - 2 கப்
மிளகு சீரகம் பொடித்தது 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
துருவிய பனீரை வாணலி இல் போட்டு, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகு சீரகப்பொடி போட்டு நன்கு கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைத்துக் கொள்ளவும்.
கிளறிக்கொண்டே இருக்கவேண்டும், ஓரிரு நிமிடங்களில், எல்லாமாக சேர்ந்து உருண்டை போல திரண்டு வரும்; அப்பொழுது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
தட்டில் கொட்டி பரத்திவிடவும்; அது நன்கு ஆறட்டும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல பனீர் கலவையை வைத்து ) முடிவிடவும்.
பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
துருவிய பனீர் - 2 கப்
மிளகு சீரகம் பொடித்தது 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
துருவிய பனீரை வாணலி இல் போட்டு, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகு சீரகப்பொடி போட்டு நன்கு கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைத்துக் கொள்ளவும்.
கிளறிக்கொண்டே இருக்கவேண்டும், ஓரிரு நிமிடங்களில், எல்லாமாக சேர்ந்து உருண்டை போல திரண்டு வரும்; அப்பொழுது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
தட்டில் கொட்டி பரத்திவிடவும்; அது நன்கு ஆறட்டும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல பனீர் கலவையை வைத்து ) முடிவிடவும்.
பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸ்வீட் ஸ்டஃப்டு பரோட்டா !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
ஸ்டஃப் செய்யும் பூரணத்துக்கு:
தேங்காய் துருவல் - அரை கப்
முந்திரிப்பருப்பு - 50 கிராம் அல்லது ஒரு கைப்பிடி அளவு
சர்க்கரை - அரை கப் பொடித்து வைத்துக் கொள்ளவும்
ஏலக்காய் பொடி அல்லது வெனிலா எசன்ஸ் - சிறிதளவு.
செய்முறை:
தேங்காயுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தண்ணீர் விடவேண்டாம்.
அதனுடன் சர்க்கரை சேர்த்து வெனிலா எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
சிறிதளவு மாவு எடுத்து கிண்ணம் போல செய்து, பூரணத்தை உள்ளே வைத்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும் .
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு வேகவிட்டு எடுக்கவும் .
குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள் இதை
குறிப்பு: தித்திப்பு என்பதால் ஓட்டும் , இடும்பொழுது கவனம் தேவை. மிகவும் கஷ்டமாக இருந்தால், ஒரு போலாஸ்டிக் கவரில் வைத்து கைகளால் தட்டி சின்ன சின்ன பூரி சைசில் செய்து தோசை கல்லில் போட்டு எடுத்து பரிமாறுங்கள்
அப்படி சின்ன சின்னதாக செய்வதானால், கொதிக்கும் பாலில் போட்டு பால் போளி போலவும் பரிமாறலாம்
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
ஸ்டஃப் செய்யும் பூரணத்துக்கு:
தேங்காய் துருவல் - அரை கப்
முந்திரிப்பருப்பு - 50 கிராம் அல்லது ஒரு கைப்பிடி அளவு
சர்க்கரை - அரை கப் பொடித்து வைத்துக் கொள்ளவும்
ஏலக்காய் பொடி அல்லது வெனிலா எசன்ஸ் - சிறிதளவு.
செய்முறை:
தேங்காயுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தண்ணீர் விடவேண்டாம்.
அதனுடன் சர்க்கரை சேர்த்து வெனிலா எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
சிறிதளவு மாவு எடுத்து கிண்ணம் போல செய்து, பூரணத்தை உள்ளே வைத்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும் .
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு வேகவிட்டு எடுக்கவும் .
குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள் இதை
குறிப்பு: தித்திப்பு என்பதால் ஓட்டும் , இடும்பொழுது கவனம் தேவை. மிகவும் கஷ்டமாக இருந்தால், ஒரு போலாஸ்டிக் கவரில் வைத்து கைகளால் தட்டி சின்ன சின்ன பூரி சைசில் செய்து தோசை கல்லில் போட்டு எடுத்து பரிமாறுங்கள்
அப்படி சின்ன சின்னதாக செய்வதானால், கொதிக்கும் பாலில் போட்டு பால் போளி போலவும் பரிமாறலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கார சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
மிளகாய் பொடி - அரை டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் உப்பு, நெய் சேர்த்துநன்கு கலக்கவும்.
அதில் மிளகாய் பொடி போட்டு தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு எடுக்கவும்.
கொஞ்சம் காரத்துடன் இந்த சப்பாத்தி நன்றாக இருக்கும்.
காரம் குறைவான 'தால்' இதற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
மிளகாய் பொடி - அரை டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் உப்பு, நெய் சேர்த்துநன்கு கலக்கவும்.
அதில் மிளகாய் பொடி போட்டு தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு எடுக்கவும்.
கொஞ்சம் காரத்துடன் இந்த சப்பாத்தி நன்றாக இருக்கும்.
காரம் குறைவான 'தால்' இதற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கார மசாலா சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
மிளகாய் பொடி - அரை டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - அரை ஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் உப்பு, நெய் சேர்த்துநன்கு கலக்கவும்.
அதில் மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி போட்டு தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு எடுக்கவும்.
கொஞ்சம் காரத்துடன் இந்த சப்பாத்தி நன்றாக இருக்கும்.
காரம் குறைவான 'தால்' இதற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
குறிப்பு: இதில் மிளகாய் பொடிக்கு பதில் இஞ்சி பச்சை மிளகாய் அரைத்து விட்டும் மசாலா சப்பாத்தி செய்யலாம்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
மிளகாய் பொடி - அரை டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - அரை ஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் உப்பு, நெய் சேர்த்துநன்கு கலக்கவும்.
அதில் மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி போட்டு தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு எடுக்கவும்.
கொஞ்சம் காரத்துடன் இந்த சப்பாத்தி நன்றாக இருக்கும்.
காரம் குறைவான 'தால்' இதற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
குறிப்பு: இதில் மிளகாய் பொடிக்கு பதில் இஞ்சி பச்சை மிளகாய் அரைத்து விட்டும் மசாலா சப்பாத்தி செய்யலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பீட்ரூட் சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
அரைக்க:
வேகவைத்த பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1
இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
அரைக்க:
வேகவைத்த பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1
இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பீட்ரூட் இனிப்பு சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
அரைக்க:
வேகவைத்த பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1
வெல்லம் அல்லது கருப்பட்டி நாலு டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி அரை டீ ஸ்பூன்
செய்முறை:
பீட்ருட்டை வெல்லத்த்துடன் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு, ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
தித்திப்பாக இருப்பதாலும் குழந்தைகள் விரும்புவர்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
அரைக்க:
வேகவைத்த பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1
வெல்லம் அல்லது கருப்பட்டி நாலு டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி அரை டீ ஸ்பூன்
செய்முறை:
பீட்ருட்டை வெல்லத்த்துடன் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு, ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
தித்திப்பாக இருப்பதாலும் குழந்தைகள் விரும்புவர்.
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|