புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பாவை 29 Poll_c10திருப்பாவை 29 Poll_m10திருப்பாவை 29 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
திருப்பாவை 29 Poll_c10திருப்பாவை 29 Poll_m10திருப்பாவை 29 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
திருப்பாவை 29 Poll_c10திருப்பாவை 29 Poll_m10திருப்பாவை 29 Poll_c10 
11 Posts - 4%
prajai
திருப்பாவை 29 Poll_c10திருப்பாவை 29 Poll_m10திருப்பாவை 29 Poll_c10 
9 Posts - 4%
Jenila
திருப்பாவை 29 Poll_c10திருப்பாவை 29 Poll_m10திருப்பாவை 29 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருப்பாவை 29 Poll_c10திருப்பாவை 29 Poll_m10திருப்பாவை 29 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருப்பாவை 29 Poll_c10திருப்பாவை 29 Poll_m10திருப்பாவை 29 Poll_c10 
2 Posts - 1%
jairam
திருப்பாவை 29 Poll_c10திருப்பாவை 29 Poll_m10திருப்பாவை 29 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருப்பாவை 29 Poll_c10திருப்பாவை 29 Poll_m10திருப்பாவை 29 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருப்பாவை 29 Poll_c10திருப்பாவை 29 Poll_m10திருப்பாவை 29 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை 29


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jan 16, 2020 10:45 am



தமிழ் ஆன்மீக செறிவுள்ள மொழி . வள்ளலார் கூட தமிழ் ஆத்மாவை எளிதில் இறைவனுடன் ஐக்கியம் ஏற்படுத்தும் . சமஸ்கிரதம் தாய் மொழி என்றால் தந்தை மொழி தமிழ் என்றுள்ளார்

தமிழ்வார்த்தைகள் ; அதை யார் உச்சரித்தாரோ அவருக்கும் இறைவனுக்கும் உள்ள அருள் தொடர்பை அதிர்வை அப்படியே இழுத்து வைத்துக்கொள்ளும் .

ஞானிகள் பக்தி சுவை உணர்வு சொட்ட பாடிய தேவாரம் , திருவாசகம் , திருப்பாவை , திருவெம்பாவை , திருப்புகழ் , கந்தரலங்காரம் , கந்தர் அநுபூதி , கந்தர்கோட்ட மணிமாலை , திருவருட்பா போன்ற உயர் ஞானிகள் எழுதிய பாடல் வரிகளை இசையோடு கேட்க பழகவேண்டும் . இவை புரிந்து கொள்ள சற்று கடினமாக தோன்றினாலும் கேட்க கேட்க அந்த அருளதிர்வுகள் உணர்வுகள் மெல்ல நம் உடலில் தங்கி மனதில் புகுந்து அதை ஆக்ரமிக்க தொடங்கும் . மெதுவாக உள்ளிருந்து நற்குணமாக வெளிவரும்

தமிழில் உள்ள அளவு பலதரப்பட்ட உணர்வுகளுக்கு ; இயல்புகளுக்கும் – தமோ ; ரஜோ ; சத்வ குணத்தாரையும் ஈர்க்கும் பாடல்களை மற்ற மொழிகளில் கேட்க இயலாது

ரஜோகுணம் மிகுந்த கருப்பசாமி பாடல்களும் கூட அப்படிப்பட்டவர்களை ஈர்த்து பக்தியை வளர்க்கிறது . வாடா கருப்பா போடா கருப்பா என்றால்தான் அவர்களுக்கு கொஞ்சம் பக்தி வரும் . எந்த தரத்திற்கும் இறங்கி வரும் தேவர்களின் வியாபகங்கள் தமிழில் மட்டுமே உண்டு

புற்றீசல் போல ஐயப்ப சீஷன் பாடல்களும் சினிமாக்களும் தமிழைப்போல எங்கும் இல்லை .

சிறு தொழில் செய்யும் ஏழைகள் அன்றாடம் வயிற்றுப்பாடு ; உடல்நோவு தீர குடித்தல் அடித்தல் உதைத்தல் காணா பாட்டுப்பாடி சோகத்தில் சுகம் காணுதல் ; தத்துவம் போல உளறுதல் ; இடுப்பு வலி சுளுக்கு டாண்ஸ் ஆடி அடுத்தவரை வெறுப்பேற்றுதல் போன்றவை அவர்களின் வாழ்நிலையில் தவிர்க்க இயலாதவை .

இப்படிப்பட்டவர்களுக்கு ஐயப்ப சீஷன் பொற்காலம் போல . அந்த குறைந்த கால கடும் விரதம் உடலை தேற்றும் ; காசை மிச்சமாக்கும் . செய்முறையில் வருவது மட்டுமே அந்த வருடத்திற்கு அவர்களுக்கு கிடைக்கும் மிச்சம் ; அப்படியே குடும்ப முன்னேற்றத்திற்கு போய் விடும் .

சினிமா கனவில் வெற்றி காணமுடியாமல் குழு ஆட்டம் ; சண்டை வீரர்களாக பலவேளைகளில் வாயிற்று பிழைப்பிற்காக தரம் தாழ்ந்த வாழ்க்கையில் வாழும் பலரும் உதவி இயக்குனர் தயாரிப்பு பணியாளர்கள் அனைவரும் மாலை போட்டு புற்றீசல் போல ஐயப்ப சீஷன் படங்களால் நன்மை அடைகிறார்கள் .

கிறிஸ்த வட்டாரத்தில் கூட தமிழ் பாதிரிகளைப்போல வித விதமாக சீ.டி போடுபவர்கள் வெளிநாட்டிலும் கூட இல்லை . பாடத்தெரிந்தால் பாஸ்ட்டர் ; ஆடத்தெரிந்தால் அபிஷேகம் உள்ள பெரிய ஊழியக்காரன் என்று ஆளாளுக்கு 1௦௦ பேரை பிடித்து வைத்துக்கொண்டு ஜோராக பிழைப்பவர்கள் தமிழர்களே . உலகளவில் கிறிஸ்த ஊழியம் செய்து கோடிக்கணக்கில் பணம் புரளுவது ஒரு தமிழர்

இதன் பின்னணி தமிழில் உள்ள இயல் ; இசை ; நாடகப்பின்னணி . முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போம் என்று கந்தரலங்கார பாடல் வரி சால உண்மையானது

இறைதொடர்பு கூட கூட தமிழில் வார்த்தை வளம் அதிகரிக்கும் . அந்த வார்த்தை கேட்கப்பட்டாலும் படிக்கப்பட்டாலும் நம் ஆத்மாவில் அருள் கூடும்

அவ்வகையில் அருள் தமிழ் வார்த்தை வளம் ; கவிநயம் ; எதுகை மோனையுடன் கூடிய பொருள் சுவை நமக்குள் வளரவேண்டுமானால் ஆண்டாளின் திருப்பாவை முதலிடம் .

திருப்பாவை 29 அப்படி ஆழ்ந்து ரசிக்கப்படவேண்டிய ஒன்று


நேரடி விண்ணப்பம் இப்பாடலில் மட்டுமே உள்ளது . தன்னை ஏற்றுக்கொள்வானா மாட்டானா என ஆசைப்படும் ஒரு பெண் எவ்வளவு நேர்த்தியாக ; தாழ்மையோடு வின்னப்பிக்கிறாள் பாருங்கள் ;

சிற்றம் சிறுகாலே ; பொற்றாமரை அடி

பிரம்மமுகூர்த்தம் என்பது மட்டுமல்ல அதன் பொருள் ; முதல்மரியாதை துயில் எழுந்தவுடன் உனக்குத்தான் . பொற்றாமரை அடியை நான் போற்றுகிறேன் அதுமட்டுமே எனது வேலை ; சலசலவென பேசி உன்னை வெறுப்பேத்தமாட்டேன் ; ஏன் என்று நீதான் கேட்டுக்கொள்ள வேண்டும் . அப்படி கேட்டால் ஒரு ஒரு வார்த்தை பேசிக்கொள்கிறேன்

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்தவன் நீ . பாலூட்டி என்ற வகை உயிரினத்தை பெற்றம் – எவ்வளவு அழகான வார்த்தை
பாலூட்டிகள் தன் வயிற்றில் கருவை சுமந்து ; பெற்ற பிறகு எனக்கென்ன என இருந்து விடாது . குட்டிகள் ஆளாகி சொந்தக்காலில் நிற்கும் வரை வளர்த்து காக்கும் . தன் குட்டிகள் எவ்வளவு குற்றம் செய்தாலும் தாங்கி திருத்தி பக்குவம் கொடுக்கும் .
பிள்ளை மனம் கல்லாக இருந்தாலும் பெற்ற மனம் பித்தாக இருக்கும் . பிள்ளை பள்ளத்தில் போய் விழுவேன் என மாயையில் அறிவிழந்து போகாத போகாத என கெஞ்சும் பெற்றோர்களை எட்டி உதைக்கும் . போய் விழுந்தால் தாய்க்கா நோவு ? விடு கழுத போகட்டும் என்று பெற்றோர்கள் இருந்து விடுகிறார்களா ?

பாலூட்டும் மிருகங்களே அப்படிப்பட்டவை என்றால் அதை மேய்க்கும் குலத்தில் பிறந்த நீ எங்களை கைவிட்டு விடுவாயா ?

சற்குரு இயேசுவும் கூட தன்னை நல்ல மேய்ப்பன் என்றுதான் சொன்னார் நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக தன் உயிரையும் கொடுப்பான் என்றார் . காணாமல் போகாத 99 ஆடுகள் பத்திரமாயிருப்பதை கண்டு சந்தோசப்படாமல் காணாமல் போன ஒரே ஒரு ஆட்டின் நிமித்தமாக கவலைகொண்டு ராப்பகலாக தேடி அலைவான் என்றார் . ஆம் ஆயர் குலத்தோனின் இயல்பு அது . அவன் தனது கிடையின் மீது அவ்வளவு அக்கறை வைத்திருப்பான் . ஆனாலும் சீடன் எப்படி இருக்கவேண்டும் ?

அதிகாரிகளின் கையை பிடித்து கையெழுத்து போட வைக்கிரவனே சிறந்த நிர்வாகி . அதிகாரியிடம் போய் அதைச்செய் இதைசெய் என்று கேட்டால் ; ம் அப்படியா நான் செய்யமாட்டேன் போ என விரட்டி விடுவார் . அவரது அறிவு தெளிவால் அவர் கண்டுபிடித்து அவர் செய்யச்சொன்னதுபோல சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும் . இதற்கு நாம் பேசும் வார்த்தைகளும் அணுகுமுறையும் மிகவும் முக்கியம் .

ஆண்டாளின் வார்த்தைகளில் அதிகாரியிடம் காட்டுகிற அணுகுமுறை இருக்கிறது . தலை சிறந்த குருபக்தி ஆத்மாவின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் . குருவிடம் இருக்கும்வரை அடிமையைப்போலத்தான் இருக்கவேண்டும் , கெட்ட குருமார்களிடம் கூடவா என்று கேள்வி கேட்குமளவு பல நிகழ்வுகள் தற்போது உள்ளன .

ஆனால் நான் ஒன்றே ஒன்று சொல்வேன் . கடவுளுக்கு கீழ்படிவதாக நினைத்து கெட்ட குருவுக்கும் நாம் சேவை செய்யவேண்டும் . குரு அப்படிப்பட்டவர் ஆகா ஓகோ என குருபெருமை பேசி சேவை செய்தால் அந்த குருவிடம் உள்ள தீய இயல்புக்கும் நாம் கப்பம் கட்டித்தான் ஆகவேண்டும் . மாறாக இறைவனுக்காக குருவிடம் மரியாதை காட்டினால் அவர் கெட்ட குரு என்றால் இறைவன் நம்மை அவரிடமிருந்து கை மாற்றி விட்டுவிடுவார்
இங்கோ பரந்தாமன் ஆண்டாளின் குரு . அவன் கடவுளை அடுத்த நான்கு அதிதேவர்களில் - சற்குருநாதர்களில் ஒருவன் . அதிலும் மூத்தவன் . அவனுக்குள் தான் மற்ற மூவரையும் கடவுள் படைத்துள்ளார் அவன் தவறேதும் இல்லாதவன் . மட்டுமல்ல மணவாளனும் கூட . அவனை சரணடைந்தே முழுமை அடைந்தாக வேண்டும் .

ஆயினும் நம் குறை அவனுடன் கலக்க விடாது தடுக்குமே . குறைகள் நம்மிடமிருந்து களையப்பட ; பரிசுத்தமடைய உள்ள ஒரு வழி குரு சேவை . குருவால் ஏவல் வேலை வாங்கப்பட்டால் பாவம் பல மடங்கு தீர்ந்து பத்து பிறவிகளை ஒரே பிறவியில் கடந்து விட முடியும் . அதற்கும் கொடுப்பினை வேண்டும் .

கசவனம்பட்டி நிர்வாண சாமியாரை பார்க்க ஒரு கூட்டம் உட்கார்ந்திருக்குமாம் . அவர் வெளியே வந்து அந்தப்பக்கம் நிற்பாராம் . அந்தக்கூட்டம் அப்படியே மாறி நம்மை பார்க்கமாட்டாரா என நிற்கும் . வெயிலில் காய விட்டுவிடுவார் . அவரை ஒரு ஒரு முறை பார்த்தால் வந்த காரியம் நிச்சயம் நிறைவேறுமாம் . அல்லது முன்னேற்றம் கட்டாயம் இருக்குமாம் .

என் குருநாதர்களில் ஒருவரான நாமக்கல் மகான் சட்டம் படித்துவிட்டு தொழிலில் சோபிக்க முடியாமல் ; இது பாவம் அது பாவம் என்று உலகத்தோடு ஒட்டி வாழமுடியாமல் தகப்பனுக்கு பிரியமற்ற பிள்ளையாக இருந்தாராம் . அப்போது கசவனம்பட்டியாரை கேள்விப்பட்டு அவரைப்பார்க்க போனாராம் . அவருக்கு முன்ஷிப் உத்தியோகம் கிடைத்ததாம் . மாவட்ட நீதிபதியாகி ஓய்வு பெற்றார் .

ஞானிகளுக்கு நாமாக முன்வந்து சிறு சிறு தொண்டூளியம் செய்யவேண்டும் . அதிலும் அவர்கள் ஏதேனும் ஏவல் செய்தால் இறைவனுக்கு செய்வதாக நினைத்து கையால் இட்ட பணியை நாம் தலையால் செய்து முடிக்கவேண்டும் பல பிறவி பாவம் தீர்ந்து விடும் . ஆண்டாளும் ஆயர் குலத்தில் பிறந்தவனே ; எங்களை குற்றேவல் வாங்காமல் இருந்து விடாதே என்கிறார் . உமக்கு அடிமையானோம் உம்மை சரணடைந்தோம் . இன்னைக்கு அல்ல எழேழு பிறவிக்கு பிறகும்கூட பார்த்துக்கொள் ; உனக்கு நல்ல அடிமையா இல்லையா என்பதை .
நான் செய்ய வேண்டியது எதுவோ அந்த எளிய வழியை கண்டுகொண்டேன் ; அதை நான் செய்தும்விடுவேன் ; மற்றபடியாக எனது காம குரோதாதி மாயைகளை மாற்றி என்னை பக்குவப்படுத்துவது ; முழுமைப்படுத்துவது உனது வேலை ; என் வேலை கிடையாது ; என்னாலும் அவ்வளவு லேசாக விடவேண்டியத்தை விட முடியாது ; ஆனாலும் அதை விடவைப்பது சற்குருவே உமது வேலை ; எப்படியாது என்னை முழுமையாக்கி விடுக .

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் ஆதிசக்தியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக