புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_lcapநான் திருநெல்வேலிக்காரன்.  I_voting_barநான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
நான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_lcapநான் திருநெல்வேலிக்காரன்.  I_voting_barநான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
நான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_lcapநான் திருநெல்வேலிக்காரன்.  I_voting_barநான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
நான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_lcapநான் திருநெல்வேலிக்காரன்.  I_voting_barநான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_lcapநான் திருநெல்வேலிக்காரன்.  I_voting_barநான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
நான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_lcapநான் திருநெல்வேலிக்காரன்.  I_voting_barநான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
நான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_lcapநான் திருநெல்வேலிக்காரன்.  I_voting_barநான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
நான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_lcapநான் திருநெல்வேலிக்காரன்.  I_voting_barநான் திருநெல்வேலிக்காரன்.  I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் திருநெல்வேலிக்காரன்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 09, 2020 9:15 pm

நான் திருநெல்வேலிக்காரன். 

சீனியும் சர்க்கரையும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. ஆனால், எது சீனி? எது சர்க்கரை? என்பது நீங்கள் எந்த மாவட்டத்துக்காரர் என்பதைப் பொறுத்தது.

முதல் முதலில் (1953) சென்னை வந்தபோது ஒரு ஹோட்டலில் போய் ஒரு கப் காப்பி ஆர்டர் பண்ணினேன். சர்வரிடம் கொஞ்சம் அதிகமாகச் சீனி போட்டுக் கொண்டுவரச் சொன்னேன். (அது அந்தக் காலம். இப்பொழுது sugarless தான் - டயபிடிஸ் இல்லை) அவன் ஒரு முழி முழித்தான். நான் ஆங்கிலத்தில் sugar என்றேன். உடனே, புரிந்துகொண்டு, வெள்ளை பொடிச் சர்க்கரையைப் போட்டு கொண்டுவந்தான். மேலும், என்னிடம் “சார், இனிமேல், சர்க்கரை என்று சொல்லுங்கள்” என்று அட்வைஸ் பண்ணினான். 

நான் மனதுக்குள் “வா, மகனே, எங்கள் ஊர்ப் பக்கம். சாதாரண ஹோட்டலில் போய், சர்க்கரை என்று சொல்லிப்பார். கருப்பட்டித் தண்ணீர்தான் கொண்டு வருவான். 

பெரிய ஹோட்டல்களில் அச்சு வெல்லத்தை (கோபுரம் மாதிரி இருக்கும்) 
உடைத்துப் பொடியாகக் கொண்டுவருவார்கள். சீனி என்று சொன்னால் மட்டும்தான் வெள்ளைப் பொடி சர்க்கரைக் கிடைக்கும்” என்று கருவிக்கொண்டேன். 

400 மைல் தூரம்தான். நெல்லைக்கும் சென்னைக்கும் இதற்கு நடுவில் எத்தனை விதமான 
‘டமில்ஸ்’. வாழ்க தமிழ்.

புலவரைச் சந்திப்போம். சீனிச் சர்க்கரைப் புலவர்

‘சர்க்கரைக் கட்டி’ என்று செல்லமாகக் குழந்தைகளைக் கொஞ்சுவது உண்டு. 
பெயராகவே வைப்பது இதுதான், முதல் தடவை என்று நினைக்கிறேன். 
இந்தப் புலவர், ரொம்பவே இனிமையானவராக இருந்திருக்க வேண்டும். இவருடைய பெற்றோர், ஒரு double emphasisக்காக சீனியையும் சர்க்கரையும் 
சேர்த்து சீனிக் சர்க்கரை என்று பெயர் வைத்துள்ளார்கள். 

இவ்வளவு இனிமையான பெயர் வைத்துக்கொண்ட இந்தப் புலவர் பிரபலமானது, ஒரு காதல் காவியம் எழுதியோ, வீரக் கவிதை எழுதியோ அல்ல. இப்பொழுது உலகத்தில் உள்ள எல்லா நாடுகளாலும் வெறுக்கப்படும் ஒரு பொருளைப் 
பற்றி எழுதிப் பிலபலமடைந்திருக்கிறார். அதுதான் விளம்பரதாரர்கள் அடிக்கடி 
‘காரம், மணம், குணம், சுவை’ என்று விளம்பரம் செய்யும் ‘புகையிலை.’

இவர் எழுதிப் பிரபலமானது - ‘புகையிலை விடு தூது’ என்ற தூது இலக்கியம்.

சீனிச் சர்க்கரைப் புலவர் பரம்பரைப் புலமை வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். 
இவருடைய தகப்பனார் சர்க்கரைப் புலவர்.சாந்துப் புலவரின் தம்பி, 
இவர் காலம், 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி - 19ஆம் நூற்றாண்டின் 
முற்பகுதி.

தூது இலக்கியங்கள் - பிரபந்தங்கள் - எல்லா இலக்கிய மொழிகளிலும் உண்டு. 
எல்லோருக்கும் பரிச்சயமானது காளிதாசனின் ‘மேக சந்தேசம்’ என்ற நூல். 
மேகத்தை தூதாக அனுப்பித் தன் தாபத்தை வெளிபடுத்துவதாக அமைந்தது.

தமிழிலும் நிறைய தூது இலக்கியங்கள் பிரபலமாக இருக்கின்றன. இளம் வயதில் கவிதை என்றால் என்ன என்று தெரியாமலேயேப் பாடிப் பரிசுப் பெற்றது 
“நாராய் நாராய் செங்கல் நாராய்” என்று தொடங்கும் சத்திமுற்றத்துப் புலவர் 
எழுதிய ‘நாரை விடு தூது.’

SMS, twitter, email, skype இல்லாத காலம். எது கிடைத்தாலும் அதைத் தூதுவனாகக் கற்பனை பண்ணித் தான் சொல்ல வேண்டிய செய்தியைக் கவிநயத்துடன் எழுதினார்கள்  அந்தக் காலத்துப் புலவர்கள். முதலில் பத்து தூது காவியங்கள்தான் இருந்ததாம்.

எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல்-, வண்டு என்று. பிறகு பணம், தமிழ், மான், சவ்வாது, நெல், விறலி என்று நிறைய வந்தன.

கழுதையையும், செருப்பையும்கூட தூதுவனாக அனுப்பியிருக்கிறார்கள்.

நம்முடைய புலவர் புகையிலையைத்தூதுவனாக ஆக்கிக் கவிதை எழுதியிருக்கிறார். ‘புகையிலை விடு தூது’ இப்புலவரால் பழனி ஆண்டவர் மீது இயற்றப்பெற்றது. ஒரு தலைவி புகையிலையை அக்கடவுள் பால் 
தூதனுப்புவதாக அமைந்திருக்கிறது.

பாட்டுடைய தலைவரான பழனி ஆண்டவருக்குப் புகையிலை சுருட்டு நிவேதனமுண்டு என்று சிலர் சொல்வதுண்டு. விராலி மலை முருகனுக்கு 
அப்படியொரு நிவேதனம் உண்டென்று சொல்கிறார்கள்.

இந்தத் தூது 59 கண்ணிகள் கொண்ட பாட்டு. முதல் 53 கண்ணிகளில் 
புகையிலையின் பெருமைகளை விளக்குகிறார். தூது விடும் செய்தியைக் கடைசி 6 கண்ணிகளில் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாட்டில் புகையிலையின் பெருமையையும்-, புகையிலையை வைத்துச் 
செய்யும் சுருட்டு, பொடி போன்ற பொருள்களையும் பாராட்டியிருக்கிறார்.

புகையிலையை - திருமால், சிவன், பிரம்மன், தமிழ், முருகக் கடவுள் இவர்களுடன் சிலேடை வகையில் ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார். புகையிலை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த பொருள் என்றாலும் இவர் 
மும்மூர்த்திகளையும் புகையிலையையும் இணைத்து ஒரு கற்பனைக் கதையைச் சொல்லியிருக்கிறார்.

ஒருமுறை மும்மூர்த்திகளுக்குள் ஒரு வழக்கு உண்டாயிற்று. தேவ சபை கூடியது. தேவர்கள் வழக்கைக் கேட்டவுடன், “உங்கள் வழக்கைப் பிறகு கவனித்து 
பதில் சொல்கிறோம்” என்று சொல்லி சிவன், பிரம்மா, விஷ்ணுவிடம் முறையே 
வில்வம்-, புகையிலை, திருத்துழாய் (துளசி) கொடுத்து மறுநாள் அவற்றைக் 
கொண்டுவரச் சொன்னார்கள்.

சிவபெருமான் வாங்கிய வில்வத்தை கங்கையின் அலை கொண்டுபோயிற்று. 
அதே மாதிரி, விஷ்ணுவின் திருத்துழாய் பாற்கடலில் விழுந்துவிட்டது. பிரம்மா தன்னிடமுள்ள புகையிலையைக் கலைமகளிடம் கொடுத்திருந்ததால் அது பத்திரமாக இருந்தது.

மறுநாள், தேவ சபையில், சிவனும் விஷ்ணுவும்தங்கள் பத்திரங்கள் போயின என்றார்கள். பிரம்மா, கலைமகளிடமிருந்து புகையிலையை வாங்கி “இதோ, என் பத்திரம்; என்னுடையது போகையிலை” என்று கூறினார். பிரம்மா தேவர் வழக்கில் வென்றார். அன்று முதல் இதற்கு பிரம்ம பத்திரம் என்ற பெயர் வந்தடைந்தது. 
இந்தக் காவியத்தைப் படித்தால், சுருட்டை ஒரு தரமாவது இழுத்துபார்க்கலாமே 
என்று தோன்றும். சுருட்டு, புகையுடையது,  அனலேந்துவது, நுனியிற் சாம்பலுடையது. ஆகாயம் சுருட்டுப் புகை போல இருப்பதால் இறைவன் ஆகாயமும் திருமேனியாக ஆனாரென்பர்.

“கற்றுத் தெளிந்த கனப்ரபல வான்களுமுன்சுற்றுக்கு ளாவதென்ன சூழ்ச்சியோ” 
என்று சுருட்டை நினைத்துப் பாராட்டியிருக்கிறார்.

பொடியின் மகிமை இன்னொரு கண்ணியில்“வாடைப் பொடிகதம்ப மானவெல்லா முன்னுடைய சாடிப் பொடிக்குச் சரியுண்டோ”

ஒரு சிட்டிகை பொடிக்காக மனிதரை ஏங்கவைப்பதால், அதை“சொற்காட்டு நல்ல துடிகார ராரையும்போய்ப்பற்காட்ட விட்ட பழிகாரா” நிந்திக்கிறார்.

புகையிலை விளையும் இடங்களைப் பற்றிப் பாடியிருக்கும் இவர், பரத்தை வயலில் விளையும் புகையிலையே உசத்தி என்கிறார்.

தயவுசெய்து இதை Tobacco lobbyக்கு சொல்லிவிடாதீர்கள்.

ஆதாரம்..
சீனிச் சக்கரைப் புலவர் இயற்றிய “புகையிலை விடு தூது (1939) விலை: இரண்டணா. பதித்தவர் -உ.வே.சா.
..............
(டி.எஸ்.நாகராஜன் -Marketing/Advertising Research Consultant (ஓய்வு) அம்மா வைத்த பெயர் -குப்பை.)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 09, 2020 10:22 pm

சக்கரை என்று கூற திருநெல்வேலிகாரர்கள் நகைத்தது உண்டு .
அர்த்தமே வேறுதான்.
எனது மைத்துனர் கூறிய கதை.
வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி.
வேகமாக ஒரு இளைஞர் வீட்டு உள்பக்கத்தில் இருந்து வெளியே
கோபத்துடன் வருகிறார்.
வாசலில் அவரை நிறுத்திய வேறொரு உறவுக்காரர்
ஏலே ....என்ன ஜோலி ...அவசரமா போறே !
இளைஞர் .....இந்த வாத்யார் (பூஜை செய்யும் அய்யர் --அவர் வடக்கத்தி சீமை )ரொம்ப மோசம். சபைலே எல்லாருக்கும்சக்கரையை காட்டு! சக்கரையை காட்டு! என்கிறார்.

புரிந்ததா? திருநெல்வேலி காரர்கள் புரிந்திருக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jan 09, 2020 11:00 pm

ஐயா திருப்பரங்குன்றத்தில் கோவில் நிறுத்தத்தில் உள்ள ஒரு வீட்டில் பாலசுப்ரமணியன் B.E. என பெயர்ப்பலகை பார்த்தேன்

எப்போது திருநெல்வேலி ஆளானீர்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 10, 2020 5:06 pm

திருநெல்வேலி ஆளாகவில்லை:
திருபரங்குன்றத்தில் கோவில் நிறுத்தத்தில் பெயர்ப்பலகை நீர் பார்த்தாலும்,
திருச்சிதான் எந்தன் சொந்த ஊர்.
திருமதி திருநெல்வேலி.
திரு  கிருபா அவர்களே!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 10, 2020 6:24 pm

T.N.Balasubramanian wrote:திருநெல்வேலி ஆளாகவில்லை:
திருபரங்குன்றத்தில் கோவில் நிறுத்தத்தில் பெயர்ப்பலகை நீர் பார்த்தாலும்,
திருச்சிதான் எந்தன் சொந்த ஊர்.
திருமதி திருநெல்வேலி.
திரு  கிருபா அவர்களே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1311407

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக