புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பாவை 22 Poll_c10திருப்பாவை 22 Poll_m10திருப்பாவை 22 Poll_c10 
3 Posts - 75%
Manimegala
திருப்பாவை 22 Poll_c10திருப்பாவை 22 Poll_m10திருப்பாவை 22 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பாவை 22 Poll_c10திருப்பாவை 22 Poll_m10திருப்பாவை 22 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
திருப்பாவை 22 Poll_c10திருப்பாவை 22 Poll_m10திருப்பாவை 22 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
திருப்பாவை 22 Poll_c10திருப்பாவை 22 Poll_m10திருப்பாவை 22 Poll_c10 
11 Posts - 4%
prajai
திருப்பாவை 22 Poll_c10திருப்பாவை 22 Poll_m10திருப்பாவை 22 Poll_c10 
9 Posts - 4%
Jenila
திருப்பாவை 22 Poll_c10திருப்பாவை 22 Poll_m10திருப்பாவை 22 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருப்பாவை 22 Poll_c10திருப்பாவை 22 Poll_m10திருப்பாவை 22 Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருப்பாவை 22 Poll_c10திருப்பாவை 22 Poll_m10திருப்பாவை 22 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருப்பாவை 22 Poll_c10திருப்பாவை 22 Poll_m10திருப்பாவை 22 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருப்பாவை 22 Poll_c10திருப்பாவை 22 Poll_m10திருப்பாவை 22 Poll_c10 
2 Posts - 1%
jairam
திருப்பாவை 22 Poll_c10திருப்பாவை 22 Poll_m10திருப்பாவை 22 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை 22


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Jan 06, 2020 10:46 pm


அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்


தமிழச்சி கோதை அக்காவின் உள்ளத்திலிருந்து பொங்கி வந்த திருப்பாவையை கேட்டுக்கொண்டிருந்தாலே போதும் ; தமிழ் புலமை தானே வந்துவிடும்


இவ்வளவு எளிமையாக எவ்வளவு அற்புதமான கருத்துகளை அள்ளிதெளித்துள்ளார்கள் . அதனால் மெய்மறப்பதொடு சரி எழுதலாம் என்றே தோன்றுவதில்லை .


திருப்பாவை முழுதும் ஒவ்வொரு பாடலாக ஒவ்வொருவரை துயிலெழுப்பும் அக்கா ; இப்போது தனது இதயம் ஆக்கிரமித்த காதலனிடம் வந்து விட்டாள் .


எந்த அக்கறையும் இல்லாமல் அவனோ துயின்று கொண்டிருக்கிறான்


பொதுவாக நான் காதலை ஆதரிப்பதில்லை . அதில் வரும் இம்சைகள் இருக்கிறதே கொஞ்ச நஞ்சமல்ல . பல ரூபத்தில் வித விதமாக நம்மை அடித்து அலைக்களிக்கும் . இந்த இம்சைகள் ; கற்பனைகள் எல்லாமே நமக்குள்ளே இருக்கும் மாயைகளாக இருக்கும் ; அது நம் எதிராளி அப்படிப்பட்ட நபர் என்பதாக நம்மை நம்ப வைக்கும் . ஆனால் முடிவில் அது அனைத்தும் பொய் ; நாமாக கற்பனை செய்து கொண்டதில் கால் பங்கு கூட அந்த நபரிடம் தகுதியோ ; அன்போ ; அக்கறையோ இல்லை ; ஏமாந்துவிட்டோம் என்பதாகவே முடியும் . 99 % காதல்கள் ஏமாறுவதாகத்தான் இருக்கிறது

பெண்கள் அவ்வளவு ஈசியாக யாரையும் காதலிப்பதில்லை . எப்படியோ எந்தெந்த சுழ்நிலையில் விழுந்து விட்டால் ; தான் எதோ ரெம்ப திறமையாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து இந்த காதலில் விழுந்ததாக கொஞ்சம் ஈகொவோடு பிடிவாதம் வேறு பிடிப்பார்கள் . கொஞ்சம் ஆய்வு மனப்பான்மையோடு எதிராளியை எடை போடமாட்டார்கள் ; அதற்கு பதிலாக தனக்கு தானே எவ்வளவு அன்பு செழுத்துவார்களோ நம்பிக்கை வைப்பார்களோ அவ்வளவு நம்பிக்கை அன்பு செழுத்துவார்கள் . குருட்டு அன்பு வைத்துக்கொள்வார்கள் . எச்சரிக்கையோடு கொஞ்சம் நிதானிப்போம் யோசிப்போம் என இருக்கமாட்டார்கள் . அதனால்தான் தமிழ் ; பெண்களை பேதை என்று அழைக்கிறது . நம்பமாட்டாள் ; எப்படியோ நம்பிவிட்டால் குருட்டு நம்பிக்கையாகவே பேதையாக இருப்பாள்

அப்போது அந்த காதலன் அதை உணர்ந்துகொள்ளாமல் உதாசீனமாக இருக்கிறான் என்றால் அவர்கள் படும் அவஸ்த்தை வாயினால் விவரிக்க இயலுமா ?


தன் காதலின் மீதுள்ள அன்பினால் ; நம்பிக்கையால் நீ எந்திரி நீ எந்திரி என ஒவ்வொருவாராக ரவுசு செய்து எழுப்பிக்கொண்டு அழைத்துக்கொண்டு காதலனிடம் அக்கா வந்து விட்டாள் . அவன் இப்படிப்பட்டவன் அப்படிப்பட்டவன் என்றெல்லாம் பெருமை வேறு நிறைய சொல்லிவிட்டாள் ; இவ்வளவு அவனைப்பற்றி சொல்கிறாளே ; அவனுக்கும் இவளுக்கும் ஒரு இது இல்லாமல் இப்படி பிதற்றமாட்டாள் என்று ஊருக்கே தெரிந்திருக்கும் ; அவனிடம் சென்றவுடன் அவன் அப்படியே அந்த இதை ஊரறிய காட்டும்படி அன்பை வெளிப்படுத்துகிரானா இல்லையா பார் என்றெல்லாம் எதிர்பார்ப்பு அக்காவிடம் இல்லாமலா இருந்திருக்கும் .

அது மட்டும் அல்லாமல் அக்கா செய்த ரவுசால் எரிச்சல் பட்ட ரெண்டு கிளடு கட்டைகள் ; இவ வகுசிய பாத்திருவோம்டி இன்னக்கு என கருவிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள்

அங்கு போனவுடன் அது புஸ்வானம் என்றாகி விட்டது . அவன் எதையும் காட்டிக்கொள்ளவில்லை ; அலட்டலுமில்லை ; அக்கறையுமில்லை ; அவன் பாட்டுக்கு தூங்கிக்கொண்டு இருக்கிறான் .

இப்படி ஒரு நிலைமையில் மனித காதலாக இருந்தால் என்ன நடக்கும் . அப்படியே அவமானத்தில் கூனி ; இந்த ஆளையா நாம் காதலித்தோம் ; ஏமாந்தது போதுமடா சாமி ; தூக்கிஎறிந்து விட்டு நிம்மதியாக இருப்பதுமேல் என்றாகி விடும் .

ஆனால் அக்கா என்ன செய்கிறார்கள் . இவன் மனிதனல்லவே ; பரமாத்மா ; நாராயணன் ; கடவுளின் சகல வெளிப்பாடுகளையும் தன்னுளே அடக்கியவன் . மொத்த குத்தகைதாரன் . இவனை விட்டால் கடவுளிடம் செல்லமுடியாது .


இவன் மரணமில்லாதவன் . ஒளி சரீரம் உள்ளவன் . தேவைப்பட்டால் பூமிக்கு அவதாரமாக வருவான் . அல்லது வராமல் நித்தியஜீவனோடு பரலோகத்தில் இருந்து கொள்வான் .


ஆனால் பிறப்பெடுத்த நான் இவனின் மூலமாக அல்லாது ஒளிசரீரமோ ; மரணமில்லா பெருவாழ்வோ பெற முடியாது .


அவன் அக்கறை இல்லாமல் இருந்தாலும் இவனை இளக்கியே நான் பரலோகம் போகமுடியும் .


அக்கறையிலாமல் இல்லாமல் இருப்பது இன்று நேற்றா ?


ராமாவதராத்திலும் சீதையாக கொஞ்ச நஞ்ச அவஸ்த்தையா ?


வருவான் வருவான் என காத்துக்கிடந்தேன் . வந்த உடன் அக்கினி பிரவேசம் செய்யசொன்னான் .


அப்புறம் கொஞ்ச நாள்தான் நிம்மதியாக வாழ்ந்தது . உண்மை என்பது என்னவாக இருந்தாலும் ராஜநீதி என்பது வேறு . அவன் பொதுமக்களுக்காக சந்தேகம் இல்லாத வெளிப்படையான வாழ்வு வாழவேண்டும் என்று என்னை காட்டில் விட்டு விட்டு பிரிந்தேதானே வாழ்ந்தான் .


ஆனாலும் பரந்தாமன் . மனித பிறவியால் வந்த பாவங்கள் ; சாபங்கள் தீராமல் பரலோகம் போகமுடியாது . அதற்கு இவன் கருணை வைத்து பார்த்தால் அன்றி வேறு வழி கிடையாது


ஆகவே அக்கா எந்த மான அவமானமும் அடையாமல் ; சரணாகதி ஒன்றையே ஆபரணமாக கொண்டு எப்படி வேண்டுகிறாள் பாருங்கள் .


பிரபஞ்சத்தின் அருள்மையமான அரங்கத்தின் அரசனே .


நீ தூங்குகிற கட்டிலின் கீழே உன் அருளை வேண்டி ; சத்சங்கம் கூடி எங்கள் தலையை சாய்த்து கிடக்கிறோம் .


கிங்கிணி வாயழகா . நீ பேச மாட்டாய் ; ஆனால் பேசினாலோ ஞானமும் தத்துவமும் கலகலவென உதிரத்தொடங்கி விடும் .


நீ பேசவே வேண்டியதில்லை . தாமரை மொட்டு போல மூடிகிடக்கிற அந்த ரெண்டு கண்ணையும் திறந்து எங்களைப்பார்த்தாலே போதுமே


சூரியனும் சந்திரனும் உலகத்தின் மீது உதித்தவுடன் இருள் அகன்று விடுகிறதல்லவா ?


அப்படி அந்த இரண்டு கண்களும் எங்களைபார்த்தாலே போதும் எங்களின் பிறவி நீளுவதற்கான சாபம் அழிந்து விடுமல்லவா ?


அக்கா உண்மையில் நிலைமையை திறமையாக சமாளிக்கிறாளோ ; இல்லை , சரணாகதி தத்துவத்தின் உச்சத்திலே நின்றுதான் இப்படி பாடமுடியும்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

ஆதிசக்தியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசக்தியாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2020 7:29 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக