புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_m10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10 
9 Posts - 90%
mruthun
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_m10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_m10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_m10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_m10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_m10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_m10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_m10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_m10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10 
2 Posts - 1%
manikavi
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_m10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10 
2 Posts - 1%
mruthun
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_m10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_m10200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 14, 2019 6:18 am

200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் Cm1

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில் பாலசரஸ்வதி விருதை பரத நாட்டியக் கலைஞர் வைஜெயந்திமாலா பாலிக்கு வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவர
----------------------------------------------------

கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த கலைமாமணி விருதுகள், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பல்வேறு கலைஞர்களுக்கு அளிக்கப்பட்டன.

இந்த விழாவில் 200 பேருக்கு கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். மூத்த கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் அவர்களின் இருக்கைகளுக்கே சென்று விருதுகளை முதல்வர் வழங்கி கௌரவித்தார்.

திரைப்படம்,  இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கான கலைமாமணி விருதுகள் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டன. 3 சவரன் எடையுள்ள பதக்கம், சான்றிதழ் அடங்கிய இந்த விருதுடன், பாரதி, பாலசரஸ்வதி, எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பெயரிலான விருதுகளும் அளிக்கப்பட்டன.

ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள்  விவரம்:-

2011-ஆம் ஆண்டு: கீழாம்பூர் எஸ். சங்கரசுப்பிரமணியன் (இயற்றமிழ்),  முனைவர் கோவி.மணிசேகரன் (இயற்றமிழ்),  லேனா தமிழ்வாணன் (இயற்றமிழ்),  திருப்பூர் கிருஷ்ணன் (இயற்றமிழ்),  சி.ராமசாமி (இயற்றமிழ் கவிஞர்),  நெய்வேலி ஆர்.சந்தானகோபாலன் (அவரது மகள் பெற்றார்) (குரலிசை), லால்குடி ஜெ.விஜயலட்சுமி (வயலின்), சேர்த்தலை ஆர்.அனந்தகிருஷ்ணன் (மிருதங்கம்), முனைவர் பிரபஞ்சம் எஸ்.பாலச்சந்திரன் (புல்லாங்குழல்), டி.இ. பழனிசாமி (நாகஸ்வரம்), கோவிலூர் கே.வி. பழனிவேல் (தவில்), பல்லடம் எஸ்.வெங்கடரமணா ராவ் (ஆர்மோனியம்),  ஜனார்த்தன் மிட்டா (சித்தார்), அபஸ்வரம் ராம்ஜி (மெல்லிசை), ராதிகா சுர்ஜித் (பரத நாட்டிய ஆசிரியர்), லட்சுமி ராமசாமி (பரத நாட்டியம்),  கே.சூரியஸ்ரீ (குச்சுப்புடி), டி.கே.எஸ். புகழேந்தி (நாடக நடிகர்), டி.வெங்கட்ராமன் (நாடக நகைச்சுவை நடிகர்), எம்.எஸ்.பி. கலைமணி (இசை நாடக நடிகர்), ஆர்.ராஜசேகர் (நடிகர்), பி.ராஜீவ் என்கிற பி.ராஜசேகர் ( நடிகர்),  குட்டி பத்மினி ( நடிகை), பி.பாண்டு (நகைச்சுவை நடிகர்),  புலியூர் எஸ்.சரோஜா ( நடன இயக்குநர்),  பி.எஸ்.சசிரேகா (பின்னணிப் பாடகி), பி.காசி (திரைப்பட உடை அலங்காரம்),  ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் (கலை விமர்சகர்), குன்னியூர் ஆர்.கல்யாணசுந்தரம் (விகடம்),  ஏ.இராஜகிளி (வில்லிசை)

2012-ஆம் ஆண்டு:  முனைவர் வாசுகி கண்ணப்பன் (இயற்றமிழ்),  முனைவர் கி.சேகர் (இயற்றமிழ்),  இலக்கியவீதி இனியவன் (இயற்றமிழ் கவிஞர்),  தமிழருவி மு.பெ. இராமலிங்கம் (இலக்கிய சொற்பொழிவாளர்-கல்வியாளர்),  எஸ்.ஆர். அசோக்குமார் (சலன்) - பத்திரிகையாளர், ஆ.சுப்புலட்சுமி கணபதி (நூலாசிரியர்), மகாராஜபுரம் ச.இராமச்சந்திரன் (குரலிசை), மகாநதி டாக்டர் ஷோபனா விக்னேஷ் (குரலிசை), முடிகொண்டான் எஸ்.என்.ரமேஷ் (வீணை),  டி.ரவிச்சந்திர மோகன் (புல்லாங்குழல்),  பி.வி.திருமூர்த்தி (நாகஸ்வரம்), ஏ.பி.அய்யாவு (நாகஸ்வரம்), எம்.ஆர். தீனதயாளு (மோர்சிங்),  உடையாளூர் கே.கல்யாணராமன் (ஆன்மிக இசை சொற்பொழிவாளர்), எம்.யூ. பிரேம்குமார் (இசை நாடக ஆர்மோனியம்), விசாகா ஹரி (சொற்பொழிவு, ஹரிகதை விற்பன்னர்), அனிதா குஹா (பரதநாட்டிய ஆசிரியர்),  பாலதேவி சந்திரசேகர் (பரத நாட்டியம்), ரேவதி ராமச்சந்திரன் (பரத நாட்டியம்), ஆர்.மகாலிங்கம் (பாகவத மேளா), என்.மகாலிங்கம் (மாலி)-நாடக நடிகர்), எஸ்.எஸ். செண்பகமுத்து (நாடகம்,  திரைப்பட நடிகர்), என்.எஸ்.பார்வதி (நாடக நடிகை), டி.ராஜஸ்ரீ ( நடிகை),  பி.ஆர்.வரலட்சுமி ( நடிகை),  எஸ்.உலகநாதன் (கானா பாடல் கலைஞர்),  சித்ரா லட்சுமணன் (திரைப்பட இயக்குநர்), பாபு என்கிற என்.வி. அனந்தகிருஷ்ணன் ( ஒளிப்பதிவாளர்), சிவாஜி ராவ் (காவடியாட்டம்),  எஸ்.யோகலிங்கம் (புரவியாட்டம்).

2013-ஆம் ஆண்டு: பால. இரமணி (இயற்றமிழ்), தா.கு.சுப்பிரமணியன்-
(நூலாசிரியர்- மனைவி பெற்றார் ), சுபா கணேசன் (குரலிசை), சுகந்தா காளமேகம் (குரலிசை), பி.ஜி.வெங்கடேஷ் (வயலின்), ராஷ்மி மேனன் (மோகினியாட்டம்), சி.வி.சந்திரமோகன் (நாடக நடிகர்-இயக்குநர்), ஆர்.கிருஷ்ணராஜ் (பின்னணிப் பாடகர்), பிரசன்னா (நடிகர்), நளினி ( நடிகை), காஞ்சனா தேவி ( நடிகை), சாரதா ( நடிகை), ஆர்.பாண்டியராஜன் (நடிகர்), டி.பி.கஜேந்திரன் (நடிகர்), ஜூடோ கே.கே.ரத்னம் (சண்டைப் பயிற்சியாளர்), வேல்முருகன் (நாட்டுப்புற பாடல் கலைஞர்), பரவை முனியம்மா (நாட்டுப்புற பாடகி), சோமசுந்தரம் (பொம்மலாட்டம்), கோ.திருஞானம் (சிற்பக் கலைஞர்).

2014-ஆம் ஆண்டு: முனைவர் அய்க்கண் (இயற்றமிழ்), இரா.கமலக்கண்ணன் (நூலாசிரியர்), மா.திருநாவுக்கரசு (கவிஞர்), மீரா நாதன் (குரலிசை), சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி, ஆர்.சித்ரா (குரலிசை), பாலசாய் (புல்லாங்குழல்), நாகஸ்வர தம்பதி கே.எஸ்.செந்தில்முருகன், சாந்தி செந்தில்முருகன் (நாகஸ்வரம்), பந்தநல்லூர் பாண்டியன் (பரதநாட்டியம்), டி.எம்.சுப்ரமணியன் (நாடக நடிகர்), யு.எம்.கண்ணன் (நாடக நடிகர்), பி.கே.செல்வம் (நாடக நடிகர்), கார்த்தி (நடிகர்), சரவணன் (நடிகர்), பொன் வண்ணன் (நடிகர்), சுரேஷ் கிருஷ்ணா (இயக்குநர்), மாலதி (பின்னணிப் பாடகி), என்.ஏ.தாரா மாஸ்டர் (நடன இயக்குநர்), ஏ.வி.ஜெயராம் (பண்பாட்டுக் கலை பரப்புநர்),  பிலிம் நியூஸ் ஆனந்தன் (மூத்த பத்திரிகையாளர்),  கே.ஏ. சத்தியபாலன் (நாட்டுப்புற பாடல் கலைஞர்)

2015-ஆம் ஆண்டு: ஏ.கே.பி.கதிர்வேலு (இயற்றமிழ் கவிஞர்), சியாமளா வெங்கடேசன் (குரலிசை), ஆ.வடிவேலன் (குரலிசை), ர.ஹேமலதா (வயலின்), வைத்தியநாதன் (மிருதங்கம்),  கீதா கிருஷ்ணமூர்த்தி (வீணை), டி.பி.ஜெ.செல்வரத்னம் (நாகஸ்வரம்), மயில்சாமி (சாக்சபோன்), சரயுசாய் (பரதநாட்டியம்), சூரிய நாராயணமூர்த்தி (பரத நாட்டியம்), மாது பாலாஜி (நாடக நடிகர்), பிரபு தேவா (திரைப்பட நடிகர்--தந்தை சுந்தரம் பெற்றார்), ஏ.என்.பவித்ரன் (திரைப்பட இயக்குநர்), விஜய் ஆண்டனி (இசையமைப்பாளர்), யுகபாரதி--பெயர் அறிவித்தும் வரவில்லை (பாடலாசிரியர்), ஆர்.ரத்தினவேலு (ஒளிப்பதிவாளர்), கானா பாலா (பாடகர்), பாரதி திருமகன் (வில்லிசை), எஸ்.ஆண்ட்ரூஸ் (பம்பை வாத்தியம்), சுதா (நிகழ்ச்சித் தொகுப்பாளர்).

2016-ஆம் ஆண்டு: கொ.மா.கோதண்டம் (இயற்றமிழ்), பாவலர் க.குகானந்தம் (இயற்றமிழ்), நிர்மலா சுந்தரராஜன் (குரலிசை), சந்துரு (ஆர்மோனியம்), விஜயகோபால் (புல்லாங்குழல்), எம்.கே.எஸ்.நடராஜன் (நாகஸ்வரம்), எஸ்.ஜெயசந்திரன் (தாளவாத்ய இசை), பத்மா சங்கர் (வயலின்), ஜெயந்தி ராமச்சந்திரா (பரதநாட்டியம்), ராஜேஷ்வரி சாய்நாத் (பரதம்), ஸ்ரீஹரி (நாடகம்), எம்.சண்முகம் (நாடகம்), ஸ்ரீலேகா ராஜேந்திரன் (சின்னத்திரை), சசிகுமார் (நடிகர்), எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்), தம்பி ராமையா (நடிகர்), எம்.சூரி (நடிகர்), பேராசிரியர் தி.இராசகோபாலன் (சமய சொற்பொழிவாளர்), தாராபுரம் சி.கலாராணி (நாட்டுப்புறக் கலை), நெல்லை சுந்தரராஜன் (பத்திரிகையாளர்).

2017- ஆம் ஆண்டு:  எஸ்.செளம்யா (குரலிசை), பிரேமா ரங்கராஜன் (குரலிசை), சூரியபிரகாஷ் (குரலிசை),  எச்.சிவராமகிருஷ்ணன் (கடம்), ஏ.என்.பாக்யலட்சுமி (புல்லாங்குழல்), ரங்கநாத பட்டாச்சாரியார் (தவில்), சம்பந்த ஓதுவார் (தேவார இசை), டி.லோகநாத சர்மா (குரலிசை), ஸ்ரீராம் பரசுராம் (குரலிசை), ரோஜா கண்ணன் (பரதம்), பிரியா முரளி (பரதம்), ஆர்.எஸ்.ஜெயலதா (இசை நாடக நடிகை), சிவன் ஸ்ரீனிவாசன் (சின்னத்திரை), நல்லசிவம் (நாடக நடிகர்), பிரியா மணி (நடிகை), சிங்கமுத்து (நடிகர்), ஜி.ஹரி (இயக்குநர்), யுவன் சங்கர் ராஜா (இசையமைப்பாளர்), கலைஞானம் (தயாரிப்பாளர்), சேஷாத்திரி நாதன் சுகுமாரன் (புகைப்படக் கலைஞர்), ஸ்டில்ஸ் ரவி (புகைப்படம்), ராஜநிதி (கைச்சிலம்பு), தவமணி (கரகாட்டம்), ராஜா (கொம்பு தப்பட்டை), சமுத்திரம் (நையாண்டி மேளம்), சுஜாதா சிவபிரசாத் (வில்லிசை), பிரகாஷ் எம்.சுவாமி (பத்திரிகையாளர்).

2018- ஆம் ஆண்டு: அமுத குமார் (மருத்துவ நூல் ஆசிரியர்), ரமணன் (கவிஞர்), கணேசன் (இயற்றமிழ்), நிர்மலா பெரியசாமி (இயற்றமிழ்), மணவை பொன் மாணிக்கம் (இயற்றமிழ்), ஏ.எம்.ஜேம்ஸ் (நூலாசிரியர்), எஸ்.ஜே.ஜனனி (குரலிசை), லட்சுமி மோகன் (குரலிசை), வித்யா சுப்ரமணியன் (குரலிசை), பிரியா சகோதரிகள் சண்முகப்பிரியா, ஹரிப்பிரியா (குரலிசை), ராஜ்குமார் பாரதி (குரலிசை), மணிபாரதி (வயலின்), வீணை எம்.ராகவன் (வீணை), திருப்பனந்தாள் எஸ்.பாலசுப்பிரமணியம் (நாகஸ்வரம்), கே.சத்தியநாராயணன் (கீ போர்டு), வி.ராஜா (மெல்லிசை), பத்மலட்சுமி சுரேஷ் (பரதநாட்டியம்), நந்தினி ரமணி (பரதநாட்டியம்), லாவண்யா சங்கர் (பரதநாட்டியம்), நிவேதிதா பார்த்தசாரதி
(பரதநாட்டியம்), பினேஷ் மகாதேவன் (பரதநாட்டியம்), லதா ராஜேந்திரன் (பரதநாட்டியம்), பி.முரளிதரன் (பரதநாட்டியம்), வரதராஜன் (நாடக நடிகர்), ஸ்ரீகாந்த் (நடிகர்), சந்தானம் (நகைச்சுவை நடிகர்), ஏ.எம்.ரத்னம் (தயாரிப்பாளர்), ரவிவர்மன் (ஒளிப்பதிவாளர்), உன்னிமேனன் (பின்னணிப் பாடகர்), முத்துலட்சுமண ராவ் (தோற்பாவை கூத்து), பி.முத்துச்சந்திரன் (தோற்பாவைக் கூத்து), கே.குமரவேல் (பம்பை), எஸ்.ஏ.கருப்பையா (நையாண்டி மேளம்), கோவிந்தராஜ் (கெக்கலிக்கட்டை).  

முதல்வரிடம்  பாரதி விருது பெறும் எழுத்தாளர் சிவசங்கரி.
அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தமிழகக் கலைஞர்களுக்கான விருதுகள்...
2016- முதல் 2018-ஆம் ஆண்டுகளுக்கான விருதுபெறும்   அகில இந்திய  அளவில் புகழ்பெற்ற  தமிழகக் கலைஞர்கள் பட்டியல்:
பாரதி விருது:  புலவர் புலமைப்பித்தன் (கவிஞர்- பாடலாசிரியர்),  கவிஞர் சுப்பு ஆறுமுகம் (வில்லிசை),  சிவசங்கரி (எழுத்தாளர்)
பாலசரஸ்வதி விருது: சி.வி.சந்திரசேகர் (பரதநாட்டியம்),  வைஜெயந்தி மாலா பாலி (பரதநாட்டியம்),  வி.பி.தனஞ்ஜெயன் (பரதநாட்டிய ஆசிரியர்)
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது: எஸ்.ஜானகி (திரைப்பட பாடகி -குடும்பத்தினர் பெற்றனர் ),  பாம்பே சகோதரிகள் சி.சரோஜா- சி.லலிதா (கர்நாடக இசைக் கலைஞர்கள்), டி.வி. கோபாலகிருஷ்ணன் (கர்நாடக இசைக் கலைஞர்).

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 14, 2019 6:20 am


மூத்த கலைஞர்களுக்கு கௌரவம்


மூத்த கலைஞர்களின் வயது, அவர்களை கௌரவிக்கும் வகையில் 20 பேரின் இருக்கைகளுக்கே சென்று கலைமாமணி விருதுகளை முதல்வர் பழனிசாமி அளித்தார்.

கோ.வி.மணிசேகரன், இலக்கிய வீதி இனியவன், சுப்புலட்சுமி கணபதி, பிரபல நடிகை காஞ்சனாதேவி உள்ளிட்ட 20 பேருக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து அவர்களிடம் விருதுகளை வழங்கினார் முதல்வர்.

மாலை 6.15 மணிக்குத் தொடங்கிய விருது அளிக்கும் நிகழ்வு மட்டும் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்றது.

பட்டியலில் பெயர்; மேடையில் அறிவிப்பில்லை


2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய்சேதுபதியும் தேர்வு செய்யப்பட்டு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், விருது வழங்கும் விழாவில் அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை. விழாவுக்கு அவர் வரவும் இல்லை. பாடலாசிரியர் யுகபாரதியின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அவர் விழாவுக்கு வரவில்லை.

கேடயம் பெறும் சிறந்த கலை நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல்: ஸ்ரீ கிருஷ்ண கானசபா, சென்னை, பாரதிய வித்யா பவன், சென்னை, சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் .சுழற்கேடயம் பெறும் சிறந்த நாடகக் குழு: குட்வில் ஸ்டேஜ், சென்னை.

முதல்வரிடம், கர்நாடக இசைக்கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பெறும் பாம்பே சகோதரிகள் லலிதா, சரோஜா.

ஜெயலலிதா பெயரில் மூன்று சிறப்பு விருதுகள்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் மூன்று சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் விருதுகளை வழங்குவதற்கு முன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:-

இசை, கிராமியக் கலை, நாட்டியம் என பல்வேறு கலைகளின் பிறப்பிடமாகத் தமிழகம் திகழ்கிறது. இயல், இசை, நாடகத் துறைக்கு தன்னையே அர்ப்பணித்து தொண்டாற்றும் கலைஞர்களை ஆதரித்து அவர்களின் நல்வாழ்வுக்காக அந்தக் கால தமிழ் மன்னர்கள் பெரும் பொருளுதவி செய்தனர். தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கலைஞர்களின் நலன் காத்தவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

பொது மக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் எப்போதும் தங்களது வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இருவரும் முதல்வராக இருந்த காலத்தில் பல்வேறு நலத் திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து ஊக்கப்படுத்தினர்.
அதன்படி, பல்வேறு கலைத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த கலை பண்பாட்டுத் துறை எனும் தனித்துறையானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.

இந்தத் துறையின் கீழ், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக பல்வேறு திட்டங்கள் கலைஞர்களுக்காகவும், கலைக் குழுக்களுக்காகவும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலைமாமணி விருது ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 200 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர்கள் பலர் சில கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கைகளை ஏற்று மூன்று அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

புதிய அறிவிப்புகள்: கலைமாமணி விருது 3 சவரனுக்குப் பதிலாக இனி 5 சவரன், அதாவது 40 கிராம் எடையுள்ள பொற்பதக்கங்களாக அளிக்கப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் மூன்று சிறப்பு கலைமாமணி விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். இவையும் தலா 5 சவரன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும்.
நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
---
தினமணி

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 14, 2019 1:38 pm

200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர் 1571444738
வாழ்த்துகள்.அதேசமயம் இதில் அரசியலும் இல்லாமல் இல்லை.
விஜய் சேதுபதி விருதை நிராகரித்ததாக கேள்வி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக