புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_c10நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_m10நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_c10நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_m10நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_c10 
3 Posts - 7%
heezulia
நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_c10நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_m10நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_c10நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_m10நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_c10நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_m10நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:31 am

ரமலான் மாதம் நோன்பு நோற்பது ஒவ்வோர் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். நோன்பு இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இது இஸ்லாத்தின் அடிப்படைகளில் உள்ளதாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: ''இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுடையோர்களாக ஆகும் பொருட்டு. உங்களுக்கு முன்பு (இறைநம்பிக்கையாளர்களாக) இருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் (நோன்பு) கடமையாக்கப்பட்டுள்ளது.'' (அல்குர்ஆன் 2:183)

ஒரு பெண் தன் பருவ வயதை அடைந்து விட்டால் அவள் மீது நோன்பு கடமையாகிறது. சில பெண்கள் ஒன்பது வயதிலேயே பருவத்தை அடைந்து விடுகின்றனர். அப்போதிருந்தே அவள் மீது நோன்பு கடமையாகிறது. இதை சிலர் அறியாது இருக்கின்றனர். சில பெண்கள் நான் சிரியவள் தானே என்ற எண்ணத்தில் நோன்பை விட்டு விடுகின்றனர். அவளுடைய பெற்றோரும் அவளை நோன்பு நோற்குமாறு ஏவுவதில்லை. இவ்வாறு செய்வது இஸ்லாத்தின் மிக முக்கிய கடைமைகளில் ஒன்றை விட்டும் அலட்சியமாக இருப்பதாகும். இதுபோன்ற

நிலை ஏற்படும்போது மாதவிடாய் ஆரம்பமான நாளிலிருந்து விடுபட்ட நோன்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். நீண்ட நாட்கள் கடந்துவிட்டாலும் கூட அவள் அதை செய்தே ஆகவேண்டும். நோன்பு களாசெய்வ துடன், விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு உணவு கொடுக்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:32 am

ரமளான் மாதம் வந்துவிடுமானால் பருவமடைந்த, சீரிய சிந்தனையுள்ள, ஊரில் தங்கியிருக்கிற ஆண் - பெண் அனைவரின் மீதும் நோன்பு கடமையாகும். இந்த மாதத்தில் யாராவது நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் அந்நாட்களில் நோன்பை விட்டுவிடலாம். ஆனால், அவற்றை மற்ற நாட்களில் நோற்றாக வேண்டும்.

''உங்களில் எவர் ரமளான் மாதத்தில் ஊரில் தங்கி இருக்கிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்.'' (அல்குர்ஆன் 2:185)

அல்லாஹ் கூறுகிறான்: ''(ரமளான் நாட்களில்) உங்களில் யாராவது நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாட்களில் நோன்பு நோற்கவேண்டும்.'' (அல்குர்ஆன் 2:184)

ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்துவிட்ட நிலையில் அவர் வயது முதிர்ந்த நோன்பு நோற்க முடியாதவராக இருந்தால், அல்லது எப்போதுமே குணமாக முடியாத நிரந்தர நோயாளியாக இருந்தால் - ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. அவர் நோன்பை விட்டுவிட்டு ஒரு நாளைக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவு கொடுப்பார். அந்தந்த பகுதியிலுள்ள உணவிலிருந்து ஒரு நபருக்கு தேவையான அளவு கொடுப்பார்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) கூறுகிறார்: நோய், குணமாகாது என்ற நிலையில் உள்ளவர்களுக்கும், வயோதிகர்களுக்குமே இந்த சட்டமாகும். அவர்கள் நோன்பை 'களா'ச் செய்யவேண்டியதில்லை. ஏனெனில் அவ்வாறு நோன்பு நோற்பது அவர்களால் முடியாத, கஷ்டமான செயலாகும் என அல்லாஹ் கூறியுள்ளான்.

ரமளானில் பெண்கள் நோன்பை விடுவதற்கென சில சலுகைகள் உள்ளன. சில காரணங்களால் ரமளானில் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் அவர்கள் நோற்கவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:32 am

1. மாதவிடாய் மற்றும் பிரசவ தீட்டு

மாதவிடாயின் போதும், பிரசவ உதிரப்போக்கின் போதும் நோன்பு நோற்பது அவர்களின் மீது தடுக்கப் பட்டுள்ளது. விடுபட்ட நோன்பை அவர்கள் வேறு நாட்களில் நோற்க வேண்டும்.

''மாதவிடாயின் போது விடுபட்ட நோன்பை திரும்ப நோற்கவேண்டும் என்றும், விடுபட்ட தொழுகையை திரும்பத் தொழவேண்டியதில்லை என்றும் நாங்கள் ஏவப்பட்டிருந்தோம்'' என ஆயிஷா(ரழி) கூறினார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு பெண் ஆயிஷா(ரழி) அவர்களிடம் வந்து, ''மாதவிடாய்க் காரி நோன்பை 'களா'ச் செய்யவேண்டும் தொழுகையை 'களா'ச் செய்யவேண்டியதில்லை (என்று உள்ளதே) இது எதனால்? எனக் கேட்டதற்கு அவர், 'இது போன்ற செய்கைகளில் போதனைகளை நாம் அப்படியே பின்பற்ற வேண்டியதுதான் என்ற அடிப்படையிலேயே ஆயிஷா(ரழி) மேற்கண்ட ஹதீஸைக் கூறினார்.

இதனைப் பற்றி ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா ஃபத்வா தொகுப்பு 25ழூ ழூ251 ல் கூறும்போது,

''ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் இரத்தம் ஏற்படும் போது உடலிலுள்ள இரத்தம் வெளியேறுகிறது என்பது பொருளாகும். அவ்வாறு வெளியேறும்போது அவள் பலவீனமடைகிறாள். அந்நேரத்தில் அவளால் நோன்பை சரியான முறையில் நோற்க முடியாது. நோன்பு நோற்ப தற்கு உடல் வலிமையும் அவசியமாகிறது. எனவேதான் மாதவிடாயின்போது விடுபட்ட நோன்பை மற்ற நாட்களில் நோற்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளாள்.

2. கற்பமும் பாலூட்டலும்

கற்பகாலத்திலும் பாலூட்டும் நாட்களிலும் நோன்பு நோற்பது அவளுக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக் கக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த நேரங்களில் அவள் நோன்பை விட்டுவிடவேண்டும், குழந்தையை மட்டும் பாதிக்கும் என்ற காரணத்திற்காக நோன்பை விட்டுவிடுவாளானால், அவள் விட்டுவிட்ட நோன்பை நோற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு என்ற அடிப்படையில் உணவு வழங்க வேண்டும். அவள் மீது தீங்கு ஏற்பட்டு விடும் என்பதற்காக நோன்பை விட்டிருந்தால்.திரும்ப நோன்பு நோற்றால் போதுமானது, காரணம் குர்ஆனில் 2:184 வது வசனத்தின் படி கற்பினியும், பாலூட்டுபவளும் அடங்கிவிடுவர்.

இமாம் இப்னு கதீர் தம் தப்ªரில் 1ழூ ழூ379 ல் குறிப்பிடுகிறார். கற்பினி பெண்களும் பாலூட்டும் பெண் களும் தங்களுக்கோ, தங்கள் குழந்தைகளுக்கோ ஆபத்து ஏற்பட்டுவிடும் என பயந்தால் அவர்கள் நோன்பை விட்டுவிட அவர்களுக்கு அனுமதி உள்ளது.

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பு 25ழூ ழூ318 ல் கூறுகிறார்கள்.

கற்பினிப்பெண் தன் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என பயந்தால் அந்நாட்களில் நோன்பை விட்டுவிட்டு வேறு நாட்களில் அதை நோற்பாள். விடுபட்ட நோன்பிற்காக ஒரு நாளைக்கு ஓர் ஏழைவீதம் உணவு வழங்கவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 1:33 am

1. சாதாரனமாக தொடர் உதிரப்போக்குள்ள பெண் நோன்பு நோற்க வேண்டும். அவள் நோன்பை விடுவது அவளுக்கு அனுமதிக்கப்படவில்லை.

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா கூறுகிறார். தொடர் உதிரப்போக்கு என்பது எல்லாக் காலத்திலும் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. நோன்பு கடமையாக்கப்படும் நேரம் என்பது அதில் இல்லை. எனவே, அதிலிருந்து அவள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியாது. இது போன்று தான் வாந்தி, காயம் மற்றும் கட்டியிலிருந்து(பருவிலிருந்து) இரத்தம் கசிந்து விடுதல், தூக்கத்தில் விந்துவெளிப்படுதல் ஆகியவை போன்றவைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதத்தில் அவை குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதல்ல. எனவே மாதவிடாயைப் போன்று நோன்பு நோற்பதை தடுக்கக் கூடியதாக இவைகள் இல்லை.

2. மாதவிடாய்க் காரி, கற்பினி, பாலூட்டுபவள் ஆகியோர் இக்காலங்களில் விட்டுவிட்ட ரமளான் நோன்பை அடுத்த ரமளானுக்குள் நோற்று விடவேண்டும், விரைவாக நோற்பது சிறந்தது.

சென்ற ரமளானில் கடமையான நோன்பை நோற்காமல் விட்டுவிட்ட பெண் அடுத்த ரமளான் வரும் முன்பாக அதை நோற்றுக் கொள்ள வேண்டும். காரணம் எதுவுமின்றி அடுத்த ரமளான் வரை நோற்காமல் விட்டுவிட்டால், நோன்பை நோற்பதோடு ஒரு நாளைக்கு ஓர் ஏழை வீதம் உணவும் கொடுக்கவேண்டும். காரணத் துடன் நோன்பை விட்டிருந்தால் களா செய்வது மட்டுமே கடமையாகும்.

நோய், பிரயாணம் காரணமாக நோன்பை விட்ட வளுடைய சட்டமும் மேற்கூறப்பட்ட விளக்கத்துடன் மாதவிடாய்க்காக நோன்பை விட்டவளுடைய சட்டத்தை போன்றுதான்.

3. கணவன் ஊரில் தங்கி இருக்கும்போது கணவனின் அனுமதியின்றி உபரியான நோன்புகளை நோற்கக் கூடாது.

''கணவன் ஊரில் தங்கி இருக்கும்போது அவனுடைய மனைவி அவனுடைய அனுமதியின்றி நோன்பு நோற்பது கூடாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபுஹுரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

சில அறிவிப்புகளில், ''ரமளான் நோன்பைத் தவிர'' என இடம் பெற்றுள்ளது. (நூல்: அபுதாவுத்)

ஒரு பெண்ணுக்கு அவளுடைய கணவன் அனுமதித் தால் அல்லது கணவன் ஊரில் இல்லாமலிருந்தால் அவள் உபரியான நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம். அது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு, ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு, முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் நோன்பு, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள், துல்ஹஜ் மாதம் பத்துநாட்கள், ஒரு நாள் அதற்கு முன்போ அல்லது அதற்கு பின்போ சேர்த்து அரஃபா நோன்பு போன்ற சுன்னத்தான நோன்புகளை நோற்கலாம். என்றாலும் ரமளான் மாதத்தில் அவளுக்கு விடுபட்டுப் போன நோன்பு இருக்கும் போது, அதை 'களா'ச் செய்யும் வரை உபரியான நோன்பு களை நோற்பது கூடாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

4. மாதவிடாய்ப் பெண் ரமளானுடைய நடுப்பகலில் தூய்மையாகி விட்டால் அம்மாதத்தைக் கண்ணியப் படுத்தும் முகமாக அந்நாளின் மீதியுள்ள நேரத்தில் எதுவும் சாப்பிடாமல் இருந்துவிட்டு, அந்த நாளுக்குப் பகரமாக வேறு ஒருநாள் அவள் நோன்புநோற்க வேண்டும்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun May 09, 2010 8:08 pm

ரொம்ப அழகான விரிவான விளக்கம் நன்றி சகோதரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக