புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
77 Posts - 43%
heezulia
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
10 Posts - 6%
prajai
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
6 Posts - 3%
Raji@123
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
4 Posts - 2%
mruthun
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
3 Posts - 2%
Saravananj
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
3 Posts - 2%
Guna.D
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
196 Posts - 41%
ayyasamy ram
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
21 Posts - 4%
prajai
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
8 Posts - 2%
Guna.D
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_m10திருக்குறளில் மெய்ப்பாடுகள் : Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளில் மெய்ப்பாடுகள் :


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 19, 2019 1:17 pm

திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
==============================
எட்டு வகையான மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார் . அவையாவன :

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப .

இவற்றுள் நகை என்பது சிரிப்பு . அழுகை என்பது அவலம் . இளிவரல் என்பது இழிபு . மருட்கை என்பது வியப்பு . அச்சம் என்பது பயம் . பெருமிதம் என்பது வீரம் . வெகுளி என்பது சினம் . உவகை என்பது காமம் முதலான மகிழ்ச்சி .

மெய்ப்பாடுகளை சுவை என்றும் குறிப்பர் . ஒவ்வொரு சுவையும் பிறப்பதற்கு நான்கு நிலைக்களன்களை தொல்காப்பியர் காட்டியுள்ளார் . ஆக எட்டு சுவைகள் பிறப்பதற்கு முப்பத்திரண்டு நிலைக்களன்களை தொல்காப்பியர் சுட்டுகிறார் . இந்த எண்வகை மெய்ப்பாடுகளைத் திருவள்ளுவர் எவ்வாறு தம் நூலில் காட்டியுள்ளார் என்று விரிவாகக் காண்போம் .

நகை :
=======
எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
உள்ளப் பட்ட நகைநான்கு என்ப .

சிரிப்பானது எள்ளல் , இளமை , பேதைமை , மடமை ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டு தோன்றும் என்று ஆசிரியர் கூறுகிறார் .

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் . ( 1040 )

போதிய நிலத்தை வைத்துக்கொண்டு , சிலர் அதில் பயிரிடாமல் சோம்பியிருப்பர் . யான் வறியவன் என்று சொல்லித் திரிவர் . இப்படிப்பட்ட சோம்பேறிகளைக் கண்டு அந்த நிலமகளே எள்ளி நகையாடுவாளாம் .

இது எள்ளல் பற்றித் தோன்றிய நகையாம் .

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் . ( 1094 )

தலைவனை நேருக்கு நேர் நோக்க முடியாமல் நாணம் தடுக்கிறது . அவன் தன்னை நோக்கும்போது , அவள் நிலத்தை நோக்குகிறாள் . அவன் தன்னைப் பார்க்காத போது , அவனழகைக் கண்டு ரசித்து தன்னுள் மெல்ல நகைக்கிறாள்

இது தலைவியின் பேதைமை காரணமாகப் பிறந்த நகையாம் .

அழுகை ;
=========
இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே .

இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியன் ஆதல் . இழவு என்பது ஒன்றை இழத்தல் . அசைவு என்பது முன்பிருந்த நிலைமை மாறி வருந்துதல் , வறுமை என்பது போகம் துய்க்கப் பெறாத நிலை . இவை நான்கு பாட்டானும் அழுகை வரும் என்று தொல்காப்பியர் உரைப்பார் .

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று . ( 1318 )

தலைவனுக்குத் தும்மல் வருகிறது . அதை அவன் மறைக்க முயலுகிறான் . அதைக்கண்ட தலைவி , " உமக்கு உறவான பெண் ஒருத்தி உம்மை நினைக்கிறாள் . அதை யான் அறியாதவாறு மறைக்க முயல்கிறீர் " என்று கூறி தலைவி அழுகிறாளாம் .

இது தலைவன் தன்னை இகழ்ந்தான் எனத் தலைவி கருதியமையால் பிறந்த அழுகையாதலின் , இதனை இளிவு பற்றி வந்த அழுகை என்னலாம் .

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய் . ( 1227 )

காலைப் பொழுதில் தலைவி நல்ல மனநிலையில் இருக்கிறாள் . ஆனால் மாலைப் பொழுது நெருங்க நெருங்க காம நோய் வருத்தத் துன்புறுகிறாள் . இது முன்னை நிலை மாறியது குறித்துப் பேசுதலின் , இது அசைவு காரணமாக வந்த அவலச் சுவைக்கு எடுத்துக்காட்டு என்னலாம் .

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது . ( 1049 )

நெருப்பிலே கூட ஒருவன் உறக்கம் கொள்ள இயலும் ; ஆனால் இந்த வறுமை வந்துவிட்டால் , ஒருவன் படுகின்ற துன்பம் சொல்லி மாளாது . வறுமையால் வாடி நலிவான் ஒருவனின் உணர்விலிருந்து பிறக்கும் இச்ச்சொற்கள் , அவ்வறுமைத் துன்பத்தின் மிகுதியால் நேர்ந்த அவலத்தினை உருக்கமாக உணாத்துகின்றன .

( தொடரும் )





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 19, 2019 9:40 pm

நகை  பெண்களுக்கு  மிக அவசியம்  என்பது சரியாக புரிந்து கொள்ளாமல் 
நகை என்றால் ஆபரணம் ஒன்றுதான் சிரிப்பு இல்லை என  பெண்களை நினைக்க வைத்து 
நகைக்கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 20, 2019 12:19 pm

இளிவரல் :
===========
மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே .

இளிவரல் என்பது இரக்கம் .

இது முதுமை , நோய் , வருத்தம் , ஆற்றல் குறைவு ஆகியவற்றால் வரும் என்பர் .

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு .( 1269 )

நெடுந்தொலைவு சென்ற துணைவர் , வரும் நாளை மனத்து வைத்து ஏங்குபவர்க்கு , ஒருநாள் செல்லுதல் ஏழுநாள் செல்லுதல்போல் நீண்டு கழியும் .

தலைவன் பிரிவு காரணமாகத் தலைவி மாட்டுத் தோன்றும் வருத்தத்தைப் புலப்படுத்துதலின் , இது வருத்தம் காரணமாக வந்த இளிவரல் சுவைக்கு எடுத்துக்காட்டாகும் .

மருட்கை :
==========
மருட்கை என்பது வியப்பாகும் .

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே .

புதுமையானது , முன்பு காணாத புதிய பொருள் , பெருமை என்பது மிகப்பெரிய ஒன்று , சிறுமை என்பது மிகச்சிறிய ஒன்று , ஆக்கமாவது ஒன்று மறறொன்றாய் திரிந்தது . இவை நான்கு காரணமாக வியப்பு அல்லது அற்புதம் உண்டாகும் .

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு . ( 1081 )

தலைவன் , தலைவியுடைய அழகைப் பார்த்து அதிசயிக்கிறான் . " இவள் தெய்வப் பெண்ணோ ! அழகிய மயிலோ ! திரண்ட கூந்தலையுடைய மாதோ !
என் நெஞ்சம் அறியாமல் மயங்குகிறது . " என்று கூறுகிறான் .

இது புதுமை காரணமாகத் தோன்றிய மருட்கையாகும் .

தொடின்சுடின் அல்லது காமநோய் போல
விடின்சுடல் ஆற்றுமோ தீ . ( 1159 )

இது காமத்தீயின் தனித்தன்மை குறித்து வியந்தவாறாம் . இயல்பான தீ தொட்டால்தான் சுடும் . ஆனால் காமத்தீயோ தொட்டால் சுடாது ; விட்டால்தான் சுடும் . இது இயற்கைக்கு மாறாக இருக்கும் ஆக்கநிலை மருட்கையாகும் .

( தொடரும் )




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Thu Jun 20, 2019 5:00 pm

T.N.Balasubramanian wrote:நகை  பெண்களுக்கு  மிக அவசியம்  என்பது சரியாக புரிந்து கொள்ளாமல் 
நகை என்றால் ஆபரணம் ஒன்றுதான் சிரிப்பு இல்லை என  பெண்களை நினைக்க வைத்து 
நகைக்கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.

ரமணியன் 
[You must be registered and logged in to see this link.]

பெண்மைக்கு அழகு சேர்ப்பது புன்னகைத்தான் பொன்ன்னகை அல்ல என்பதை நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள்.

படிக்க படிக்க ஆவலை தூண்டுகிறது MJ அவர்களின் பதிவு.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Sudharani

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 23, 2019 7:30 am

அச்சம் :
========
அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே . ( தொல்-மெய்ப்-8 )

அணங்கு என்பது தெய்வம் . விலங்கு என்பது சிங்கம் , புலி முதலிய அஞ்சத்தக்க விலங்குகள் , கள்வர் என்பார் தீத்தொழில் புரிவார் , இறை எனப்படுவது பெரியோர் ,தந்தையர் , ஆசிரியர் , அரசர் முதலானோரைக் குறிக்கும் . இந்த நான்கின் காரணமாக ஒருவனுக்கு அச்சம் ஏற்படும் .

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு . ( 1048 )

நாள்தோறும் வறுமையால் வாடி துன்புற்ற ஒருவன் , " நேற்றுத் துன்புறுத்தி வாட்டிய அந்த வறுமை , இன்றும் என்னிடம் வருமோ ? " என்று அச்சம் கொள்கிறான் . அந்த அச்சத்தின் விளைவே இந்தக் குறட்பா ஆகும் .

( தொடரும் )



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக