புதிய பதிவுகள்
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 18:27

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
109 Posts - 49%
heezulia
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
54 Posts - 24%
Dr.S.Soundarapandian
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
9 Posts - 4%
prajai
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
2 Posts - 1%
cordiac
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
234 Posts - 52%
heezulia
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
18 Posts - 4%
prajai
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
2 Posts - 0%
Barushree
திருக்குறளில் "அவர்'! Poll_c10திருக்குறளில் "அவர்'! Poll_m10திருக்குறளில் "அவர்'! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளில் "அவர்'!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon 6 May 2013 - 14:20

அவர்' எனும் சொல் மரியாதையின் பாற்பட்டு ஒருவரைச் சுட்டும் சொல்லாக வழங்குகிறது. "அவர்' என்னும் சொல், வள்ளுவரின் குறட்பாக்களில் பயின்று வரும் இடங்கள் அகப்பொருளாகக் கையாளப்பட்டிருக்கும் உயர்ந்த பண்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. திருக்குறள் காமத்துப்பாலில் "அவர்' என்னும் சொல் நயம் சொல்லப்பட்டிருக்கும் விதத்தைக் காண்போம்.

காமத்துப்பாலில் முதல் நான்கு அதிகாரங்களில், தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொண்டபோதும் தலைவி தன் வாய்திறந்து எந்தச் சொல்லும் சொல்லாது நிற்கிறாள். ஐந்தாவது அதிகாரத்தில்தான் ""நுண்ணியர் எங்காதலவர்'', ""கண்ணுள்ளார் காதலவர்'', நெஞ்சத்தால் காதலவர்'' என்றெல்லாம் முதன் முதலாகக் காதலனைப் பற்றி சொல்லும்போது, "அவர்' எனக் குறிப்பிட்டு அழைக்கிறாள். வள்ளுவரின் இந்தத் தலைவியின் பண்புச் செயல் இலக்கிய வகையில் "களவியலில்' அடங்கும்.

கற்பியலிலும் ""இன்கண் உடைத்தவர் பார்வல்'', ""அரிதவர் நல்குவர் என்னும் நகை'', ""அவர்க் காணாது அமைவிலகண்'', ""அவர் தந்தார்'', ""அவர் கொண்டார்'', ""உரைப்பது அவர் திறம்'', ""துறந்தார் அவர்'', ""அவர் நெஞ்சத்து'', ""அவரொடுயான்'', ""நல்காதலர்'', ""காதல் அவரிவர்'', ""அவர்க் காணலுற்று'' என்று பலவாறான சொற்களில் தலைவி தலைவனை "அவர்' என்றே குறிப்பிடுகிறாள்.

தலைவனை அண்மை, சேய்மை ஆகிய இரு இடங்களிலும் தலைவி "அவர்' என்றே குறிப்பிட்டுள்ளபடியால் "அவர்' என்பதை அவள் சுட்டுப்பெயராக மட்டும் கொள்ளாது தனக்கே உரிமையுள்ள பெயராகக் கருதியே கூறுவதாக வள்ளுவர் காட்டியுள்ளார்.

தன் இணைபிரியாத் தோழிகூட தலைவனை "அவர்' எனச் சுட்டிட அனுமதிக்கவில்லை. தனக்குச் சொந்தமான தலைவனை "அவர்' என்று சுட்டி, அவ்வுரிமையைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்கிறாள் தலைவி.

"அவர் வயின் விதும்பல்' என்ற அதிகாரத்தில் அமைந்துள்ள "அவர்' பற்றி உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பரிமேலழகர் "அவர்' பற்றி கீழ்வருமாறு விளக்கம் தந்துள்ளார்.

""அஃதாவது சேயிடைப் பிரிவின்கண் தலை மகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை ஒருவர் காண்டற்கு விரைதல், தலைமகன் பிரிவும் தலைமகளாற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின், இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலால் கூறினார். பிறரெல்லாம் இதனைத் தலைமகனை நினைத்து தலைமகள் விதுப்புறல் என்றார். சுட்டுப்பெயர் சொல்லுவான் குறிப்பொடு கூடிய பொருள் உணர்த்துவதல்லது தான் ஒன்றற்குப் பெயர் ஆகாமையானும் கவிக் கூற்றாய அதிகாரத்துத் தலைமகன் உயர்த்தற் பன்மையால் கூறப்படாமையானும் அஃது உரையின்மை அறிக. இதனுள் தலைமகன் கூற்று நிறையழிவான் நிகழ்ந்ததாகலின் அவ்வியைபு பற்றி நிறையழிதலின் பின் வைக்கப்பட்டது'' என "அவர்' என்பது பன்மைப்பெயரால் இருவரையும் சுட்டிற்று என்பார்.

பரிமேலழகர் கருத்துப்படி "அவர்' என்பது "ஊரவர்' எனப் பன்மைப்பெயராய் தலைவியாலேயே காமத்துப்பாலில் இரண்டு இடங்களில் பேசுவதாகக் கையாளப்பட்டுள்ளது.

"அவர் வயின் விதும்பலானது, ""அவர் வாவின் கண்ணே விரைதல்'', ""காதலர் வரவு கேட்டு இருத்தல்'' என்றவாறு தோழிக்குக் கூறினவாகக் கொள்ளப்படும். நிறையழிந்தார் எப்பொழுதும் காதலர் வரவிற்கு ஆசையுற்றிருப்பர் ஆதலான், அதன்பின் இது கூறப்பட்டது'' என, "அவர்' என்பது "அவனையே குறிக்கும்'' எனக் கூறுகிறார் ஓர் உரையாசிரியர்.

இவர்கள் கருத்துகளுக்கு அணியாக "அவர்' என்பது தலைவனைக் குறிக்கவே தலைவியால் பல இடங்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. தலைவனைப் பிரிந்த தலைமகள் தன் பிரிவாற்றாமை நோய் பற்றி தோழியிடம் பேசுவதாக வள்ளுவர் "அவர் வயின் விதும்பல்' (127-1, 9) அதிகாரத்தில் கூறியுள்ளார். இவ்வாறு தலைவனைப் பிரிந்த துன்பத்திலிருக்கும் தலைவியினது உள்ள நிலைமையை தலைவி, தோழிக்கு தன் வாய்மொழியாகக் கூறுவதாக வள்ளுவர் கூறியுள்ளார்.

இவ்வாறு இக்குறள்களில் தலைவன் ஒருவனை தலைவி மரியாதை நிமித்தம் "அவர்' எனப் பன்மையால் விளிப்பதாக வள்ளுவப் பெருந்தகை அமைத்துள்ளார்.
நன்றி-தினமணி-க.பரமசிவன்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 6 May 2013 - 20:28

மிகவும் அருமை சாமி அவர்களே....தலைப்பைப் பார்த்ததும் எனக்கு இந்தக்குறள்தான் ஞாபகம் வந்தது :

"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்"


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 6 May 2013 - 21:05

அருமை சாமி & Dr . சுந்தரராஜ் தயாளன், அவர்களே

"அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டு எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது "

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக