புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்ன சின்ன தெய்வீகமான விளக்கங்கள் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இறைவனின் அதிசயங்களில் தெய்வீகமான விளக்கம் கொடுத்து உள்ளோம் படித்து பயன் பெறுங்கள்….
1. கோவிலில் உட்காருவது ஏன்???
வழிபாடு முடிந்ததும், கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து எழுகிறார்கள். இதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத கடவுளின் துாதர்கள் உள்ளனர். அவர்கள்
பக்தர்களுக்கு வழிகாட்டுவதாக ஐதீகம். வழிபாடு முடிந்ததும் அவர்களிடம் விடை பெறும் விதமாக சிறிது நேரம் கோவிலில் உட்கார வேண்டும்.
அப்போது,
“தெய்வத்தின் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கும் துாதர்களே! எங்கள் வேண்டுகோளை ஏற்று அருள்புரிய வேண்டும்” என்று பிரார்த்திக்க வேண்டும்... சிறிது நேரம் தியானம் செய்து விட்டு கிளம்ப வேண்டும்.
____________________
2. வெற்றி பயணத்திற்கு!!!!
அஷ்டமி, நவமி திதிகளிலும். பரணி, கார்த்திகை நட்சத்திர நாட்களிலும் வெளியூர் செல்லக் கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் நடைமுறையில் நாள்,
நட்சத்திரம் பார்த்து கிளம்ப முடியாது. எந்த நாளில் கிளம்பினாலும் அது வெற்றிப் பயணமாக அமைய எளிய பரிகாரம் உள்ளது.
????பிள்ளையார் கோவிலில் தேங்காயை சிதறுகாயாக உடைத்து விட்டு, இரண்டு பழங்களை பசுவுக்கு கொடுத்தால் போதும். பயணம் சிறப்பாக அமையும்.
____________________
3. செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு?
1. புனித நதி நீராடுதல் - 3தலைமுறைக்கு
2. அன்னதானம், கோவிலில் தீபம், ஏழைப் பெண் திருமணம் - 5 த.மு
3. பித்ரு கைங்கர்ய உதவி - 6 த.மு
4. கோவில் திருப்பணி - 7 த.மு
5. அனாதை அந்திமக் கிரியை - 9 த.மு
6. பசு பராமரிப்பு - 14 த.மு
7. கயாவில் திதி - 21 தலை முறைக்கு
____________________
தொடரும்......
1. கோவிலில் உட்காருவது ஏன்???
வழிபாடு முடிந்ததும், கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து எழுகிறார்கள். இதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத கடவுளின் துாதர்கள் உள்ளனர். அவர்கள்
பக்தர்களுக்கு வழிகாட்டுவதாக ஐதீகம். வழிபாடு முடிந்ததும் அவர்களிடம் விடை பெறும் விதமாக சிறிது நேரம் கோவிலில் உட்கார வேண்டும்.
அப்போது,
“தெய்வத்தின் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கும் துாதர்களே! எங்கள் வேண்டுகோளை ஏற்று அருள்புரிய வேண்டும்” என்று பிரார்த்திக்க வேண்டும்... சிறிது நேரம் தியானம் செய்து விட்டு கிளம்ப வேண்டும்.
____________________
2. வெற்றி பயணத்திற்கு!!!!
அஷ்டமி, நவமி திதிகளிலும். பரணி, கார்த்திகை நட்சத்திர நாட்களிலும் வெளியூர் செல்லக் கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் நடைமுறையில் நாள்,
நட்சத்திரம் பார்த்து கிளம்ப முடியாது. எந்த நாளில் கிளம்பினாலும் அது வெற்றிப் பயணமாக அமைய எளிய பரிகாரம் உள்ளது.
????பிள்ளையார் கோவிலில் தேங்காயை சிதறுகாயாக உடைத்து விட்டு, இரண்டு பழங்களை பசுவுக்கு கொடுத்தால் போதும். பயணம் சிறப்பாக அமையும்.
____________________
3. செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு?
1. புனித நதி நீராடுதல் - 3தலைமுறைக்கு
2. அன்னதானம், கோவிலில் தீபம், ஏழைப் பெண் திருமணம் - 5 த.மு
3. பித்ரு கைங்கர்ய உதவி - 6 த.மு
4. கோவில் திருப்பணி - 7 த.மு
5. அனாதை அந்திமக் கிரியை - 9 த.மு
6. பசு பராமரிப்பு - 14 த.மு
7. கயாவில் திதி - 21 தலை முறைக்கு
____________________
தொடரும்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
4. மகிழும் மகாலட்சுமி!!!!
யானையின் மத்தகத்தில் (முன் நெற்றி) லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். இதனால், தினமும் கோவில் நடை திறந்ததும் கருவறை முன், யானைக்கு பூஜை நடத்தி சன்னதியை சுற்றி வரச் செய்வர்.
இதற்கு 'கஜ பூஜை' என்று பெயர். யானையின் பிளிறல் ஓசை கேட்டு லட்சுமியின் மனம் மகிழும் என 'ஸ்ரீசூக்தம்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி அவதரித்ததும், பூமியை தாங்கும் எட்டுத்திசை யானைகளும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்கின.
இவளை 'கஜ லட்சுமி' என்பர். 'கஜம்' என்றால் 'யானை'. கஜலட்சுமி சிற்பத்தை கோவில் கருவறை நுழைவு வாயிலிலும், வீட்டில் தலைவாசலிலும் அமைப்பது வழக்கம்.
____________________
5. வரம் தரும் ''இலை''
பூஜையில் சுவாமிக்கு பிரசாதமாக தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவை படைப்பர். சிலர் சுத்தன்னம் (வெள்ளைச்சோறு) மட்டும் கூட வைப்பதுண்டு. பிரசாதம் வைக்கும் பாத்திரம் சுத்தமாக இருக்கவேண்டும். அது தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகத்தால் ஆனதாக இருப்பது சிறப்பு. மண்சட்டி, தாமரை இலையிலும் பிரசாதம் படைக்கலாம்.
????தாமரை இலையில் படைத்தால், மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து வரம் தருவார் என பரசுராம கல்ப சூத்திரத்தில் உள்ளது.
____________________
6. பைரவா... பைரவா....
பைரவரின் சக்தி பற்றி சுப்ரபேதாகமம் என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இவர் சிவபெருமானின் அம்சம். இந்த பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கும் அளவற்ற சக்தி படைத்தவர் சிவன்.
அந்த சக்தியில் கோடியில் ஒரு பங்கால் உருவானவர் பைரவர். சிவபெருமானின் நேரடி சக்தி என்பதால், இவரை வணங்குவோர் அடையும் நன்மைக்கு அளவே கிடையாது.
பைரவர் என்ற சொல்லுக்கு 'அச்சுறுத்தும் போர்க்குரல் உடையவர்' என்று பொருள். சிவபெருமான் அசுரர்களையும், தனக்கு அடங்க மறுத்த அரசர்களையும் எதிர்த்து போரிடும் போது ஏற்ற வடிவமே பைரவக் கோலம்.
????இவர் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. சத்தம் போட்டாலே போதும்! எதிரிகள் அடங்கிப் போவார்கள். இவரை 'வைரவர்' என்று கிராமப்புறங்களில் சொல்வர்.
நவரத்தினங்களில் வைரத்தின் ஒளி பிரமிப்பு தருவதாக இருக்கும்.
????அதுபோல், பக்தர்கள் மனதில் அஞ்ஞானத்தை அழித்து ஞானம் என்னும் ஒளியேற்றுபவர் என்பதால், இப்பெயர் ஏற்பட்டது. இவரை ஞாயிறு அன்று ராகு காலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) வழிபடுவது சிறப்பு.
தொடரும்.....
யானையின் மத்தகத்தில் (முன் நெற்றி) லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். இதனால், தினமும் கோவில் நடை திறந்ததும் கருவறை முன், யானைக்கு பூஜை நடத்தி சன்னதியை சுற்றி வரச் செய்வர்.
இதற்கு 'கஜ பூஜை' என்று பெயர். யானையின் பிளிறல் ஓசை கேட்டு லட்சுமியின் மனம் மகிழும் என 'ஸ்ரீசூக்தம்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி அவதரித்ததும், பூமியை தாங்கும் எட்டுத்திசை யானைகளும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்கின.
இவளை 'கஜ லட்சுமி' என்பர். 'கஜம்' என்றால் 'யானை'. கஜலட்சுமி சிற்பத்தை கோவில் கருவறை நுழைவு வாயிலிலும், வீட்டில் தலைவாசலிலும் அமைப்பது வழக்கம்.
____________________
5. வரம் தரும் ''இலை''
பூஜையில் சுவாமிக்கு பிரசாதமாக தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவை படைப்பர். சிலர் சுத்தன்னம் (வெள்ளைச்சோறு) மட்டும் கூட வைப்பதுண்டு. பிரசாதம் வைக்கும் பாத்திரம் சுத்தமாக இருக்கவேண்டும். அது தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகத்தால் ஆனதாக இருப்பது சிறப்பு. மண்சட்டி, தாமரை இலையிலும் பிரசாதம் படைக்கலாம்.
????தாமரை இலையில் படைத்தால், மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து வரம் தருவார் என பரசுராம கல்ப சூத்திரத்தில் உள்ளது.
____________________
6. பைரவா... பைரவா....
பைரவரின் சக்தி பற்றி சுப்ரபேதாகமம் என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இவர் சிவபெருமானின் அம்சம். இந்த பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கும் அளவற்ற சக்தி படைத்தவர் சிவன்.
அந்த சக்தியில் கோடியில் ஒரு பங்கால் உருவானவர் பைரவர். சிவபெருமானின் நேரடி சக்தி என்பதால், இவரை வணங்குவோர் அடையும் நன்மைக்கு அளவே கிடையாது.
பைரவர் என்ற சொல்லுக்கு 'அச்சுறுத்தும் போர்க்குரல் உடையவர்' என்று பொருள். சிவபெருமான் அசுரர்களையும், தனக்கு அடங்க மறுத்த அரசர்களையும் எதிர்த்து போரிடும் போது ஏற்ற வடிவமே பைரவக் கோலம்.
????இவர் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. சத்தம் போட்டாலே போதும்! எதிரிகள் அடங்கிப் போவார்கள். இவரை 'வைரவர்' என்று கிராமப்புறங்களில் சொல்வர்.
நவரத்தினங்களில் வைரத்தின் ஒளி பிரமிப்பு தருவதாக இருக்கும்.
????அதுபோல், பக்தர்கள் மனதில் அஞ்ஞானத்தை அழித்து ஞானம் என்னும் ஒளியேற்றுபவர் என்பதால், இப்பெயர் ஏற்பட்டது. இவரை ஞாயிறு அன்று ராகு காலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) வழிபடுவது சிறப்பு.
தொடரும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
7. 'தல' கொடுத்த 'தல'
ரங்கநாதர் தவிர வேறெந்த பெருமாளையும் பாடாதவர் தொண்டரடிப் பொடியாழ்வார். தன் தந்தையின் அன்பு கிடைக்காததால் வருந்திய துருவன் என்ற சிறுவன், நாரதர் உதவியுடன் விஷ்ணு மந்திரம் சொல்லி வந்தான். இதன் காரணமாக அவன் வானுலகம் சென்ற போது, எமலோகத்தின் தலைவனான எமதர்மன், தன் தலையைப் படிக்கட்டாக்கி வைகுண்டம் செல்ல உதவினார். இதுபோல,
????இந்த கலியுகத்தில் நாம் நிம்மதி பெறவும், வாழ்வுக்குப் பின் மோட்சம் செல்லவும் ரங்கநாதரின் திருநாமத்தை ஜெபிக்க வேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார்.
_____________________
8. கோபமா....வரவே வராது!
முருகன் சூரபத்மனைக் கொல்லாமல், இரக்கமுடன் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன் வாகனம், கொடியாக மாற்றிக் கொண்டார். இதனை 'சூரனுக்கு பெருவாழ்வு அளித்தவர்' என முருகனைப் போற்றுவர். இரக்கம் மிக்க முருகன், கேட்ட வரம் எல்லாம் கொடுக்கும் தெய்வம் என கந்தபுராணம் கூறுகிறது.
ஒருவரிடம் ஒருமுறை உதவி கேட்கலாம்... இருமுறை கேட்கலாம்... கோடி முறை கேட்க முடியுமா என்றால் அப்போதும் முருகன் அருள்புரிவார் என்கிறது திருப்புகழ். கோடி முறை வேண்டுதல் வைத்தாலும் முருகன், அடியார்களிடம் கோபம் கொள்வதில்லை.
????'அடியார் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமானே' என அருணகிரிநாதர் பாடியுள்ளார்.????
____________________
9. அழகாய் இருக்க மந்திரம் இருக்கு!!!!
தெய்வங்களில் மூவருக்கு சுந்தரர் என்ற பெயர் வருகிறது. சிவனுக்கு 'கல்யாண சுந்தரர், சுந்தரேஸ்வரர்' என்ற பெயர்கள் உண்டு. திருமால் 'சுந்தர ராஜப் பெருமாள்' என்ற பெயர் பெறுகிறார். ராமதூதனான அனுமன் இளமையில் மிக அழகாக இருப்பார். இதனால் இவரது தாய் அஞ்சனை தன் மகனை 'சுந்தரா' என அழைத்து மகிழ்வார்.
????இந்த மூன்று சுந்தரர்களுக்குரிய மந்திரங்களான 'ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஸ்ரீராமதாச ஆஞ்சநேய' ஆகியவற்றை தினமும் சொல்லி வருபவர்களின் முகம் பொலிவாக இருக்கும்.????
____________________
10. இழந்தது கிடைக்கணுமா????
ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு 'நிர்ஜலா ஏகாதசி' என்று பெயர். வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் அருந்தாமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது.
'நிர்ஜலா' என்பதற்கு 'தண்ணீர் இல்லாமல்' என்பது பொருள்.
????காலையில் நீராடி பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. இதற்கு 'பீம ஏகாதசி' என்று பெயர். இதன் பயனாக பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. இழந்த சொத்து, கை விட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்க இந்த விரதமிருக்கலாம்.????
____________________
தொடரும்.....
ரங்கநாதர் தவிர வேறெந்த பெருமாளையும் பாடாதவர் தொண்டரடிப் பொடியாழ்வார். தன் தந்தையின் அன்பு கிடைக்காததால் வருந்திய துருவன் என்ற சிறுவன், நாரதர் உதவியுடன் விஷ்ணு மந்திரம் சொல்லி வந்தான். இதன் காரணமாக அவன் வானுலகம் சென்ற போது, எமலோகத்தின் தலைவனான எமதர்மன், தன் தலையைப் படிக்கட்டாக்கி வைகுண்டம் செல்ல உதவினார். இதுபோல,
????இந்த கலியுகத்தில் நாம் நிம்மதி பெறவும், வாழ்வுக்குப் பின் மோட்சம் செல்லவும் ரங்கநாதரின் திருநாமத்தை ஜெபிக்க வேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார்.
_____________________
8. கோபமா....வரவே வராது!
முருகன் சூரபத்மனைக் கொல்லாமல், இரக்கமுடன் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன் வாகனம், கொடியாக மாற்றிக் கொண்டார். இதனை 'சூரனுக்கு பெருவாழ்வு அளித்தவர்' என முருகனைப் போற்றுவர். இரக்கம் மிக்க முருகன், கேட்ட வரம் எல்லாம் கொடுக்கும் தெய்வம் என கந்தபுராணம் கூறுகிறது.
ஒருவரிடம் ஒருமுறை உதவி கேட்கலாம்... இருமுறை கேட்கலாம்... கோடி முறை கேட்க முடியுமா என்றால் அப்போதும் முருகன் அருள்புரிவார் என்கிறது திருப்புகழ். கோடி முறை வேண்டுதல் வைத்தாலும் முருகன், அடியார்களிடம் கோபம் கொள்வதில்லை.
????'அடியார் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமானே' என அருணகிரிநாதர் பாடியுள்ளார்.????
____________________
9. அழகாய் இருக்க மந்திரம் இருக்கு!!!!
தெய்வங்களில் மூவருக்கு சுந்தரர் என்ற பெயர் வருகிறது. சிவனுக்கு 'கல்யாண சுந்தரர், சுந்தரேஸ்வரர்' என்ற பெயர்கள் உண்டு. திருமால் 'சுந்தர ராஜப் பெருமாள்' என்ற பெயர் பெறுகிறார். ராமதூதனான அனுமன் இளமையில் மிக அழகாக இருப்பார். இதனால் இவரது தாய் அஞ்சனை தன் மகனை 'சுந்தரா' என அழைத்து மகிழ்வார்.
????இந்த மூன்று சுந்தரர்களுக்குரிய மந்திரங்களான 'ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஸ்ரீராமதாச ஆஞ்சநேய' ஆகியவற்றை தினமும் சொல்லி வருபவர்களின் முகம் பொலிவாக இருக்கும்.????
____________________
10. இழந்தது கிடைக்கணுமா????
ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு 'நிர்ஜலா ஏகாதசி' என்று பெயர். வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் அருந்தாமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது.
'நிர்ஜலா' என்பதற்கு 'தண்ணீர் இல்லாமல்' என்பது பொருள்.
????காலையில் நீராடி பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. இதற்கு 'பீம ஏகாதசி' என்று பெயர். இதன் பயனாக பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. இழந்த சொத்து, கை விட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்க இந்த விரதமிருக்கலாம்.????
____________________
தொடரும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
11. இதை படிக்க மறக்காதீங்க!!!!!!
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கு உருகார் என்பர். அடியவர் சொல்ல ஆண்டவன் கைப்பட எழுதிய பெருமை இதற்குண்டு. இதன் ஆசிரியர் மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மக நட்சத்திரத்தன்று நடக்கிறது.
???? அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகர், குதிரைகள் வாங்க கொடுத்த பணத்தில் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில்) கோவில் கட்டினார். இதனால் மன்னரின் தண்டனைக்கு ஆளானார்.
சிவன் பல திருவிளையாடல்களை நிகழ்த்தி, மாணிக்கவாசகரின் பெருமையை உலகறியச் செய்தார். அதன் பின் சிதம்பரம் சென்ற அவர், திருவாசகம் பாடினார். இதன் முதல் பகுதியாக உள்ள சிவபுராணம், சிவனின் பெருமைகளை விளக்குகிறது.
???? 95 வரிகள் கொண்ட இதைப் படிக்க, முற்பிறவியில் செய்த பாவம் தீரும் என மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.
____________________
12. நடராஜர்-பெயர் காரணம் :
சிவனின் நடனம் காண வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற முனிவர்கள் தவமிருந்தனர். அவர்களுக்கு சிவன் ஆனந்த தாண்டவம் ஆடி காட்டினார். இதை பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, தில்லை வாழ் அந்தணர்கள் ரசித்தனர். சிவன் அருகில் பார்வதியும் நின்று விருப்பமாக ரசித்தாள். இதனால் 'சிவகாமி' என்ற பெயர் அவளுக்கு ஏற்பட்டது.
???? இதை விட சிறந்த நடனத்தை யாராலும் ஆட முடியாது என்பதால், 'நடராஜர்' (ஆடல் அரசன்) என்னும் பெயர், சிவனுக்கு சூட்டப்பட்டது
____________________
13. தூசியினாலும் நன்மையிருக்கு!!!
தரையில் குழந்தைகள் உருண்டு விளையாண்டால், 'ஐயோ! உடலெல்லாம் தூசாகும், எழுந்திரு,” என்று கண்டிப்போம்.
ஆனால், ???????? கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் முன் கொடி மரம் முன் விழுந்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது நமது உடலில் எவ்வளவு தூசி படிகின்றதோ, அவ்வளவு வருட காலம் நாம் கைலாயத்தில் சிவ பார்வதியோடு வாழும் பாக்கியம் என்கிறது வேதம்.????????
தொடரும்......
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கு உருகார் என்பர். அடியவர் சொல்ல ஆண்டவன் கைப்பட எழுதிய பெருமை இதற்குண்டு. இதன் ஆசிரியர் மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மக நட்சத்திரத்தன்று நடக்கிறது.
???? அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகர், குதிரைகள் வாங்க கொடுத்த பணத்தில் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில்) கோவில் கட்டினார். இதனால் மன்னரின் தண்டனைக்கு ஆளானார்.
சிவன் பல திருவிளையாடல்களை நிகழ்த்தி, மாணிக்கவாசகரின் பெருமையை உலகறியச் செய்தார். அதன் பின் சிதம்பரம் சென்ற அவர், திருவாசகம் பாடினார். இதன் முதல் பகுதியாக உள்ள சிவபுராணம், சிவனின் பெருமைகளை விளக்குகிறது.
???? 95 வரிகள் கொண்ட இதைப் படிக்க, முற்பிறவியில் செய்த பாவம் தீரும் என மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.
____________________
12. நடராஜர்-பெயர் காரணம் :
சிவனின் நடனம் காண வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற முனிவர்கள் தவமிருந்தனர். அவர்களுக்கு சிவன் ஆனந்த தாண்டவம் ஆடி காட்டினார். இதை பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, தில்லை வாழ் அந்தணர்கள் ரசித்தனர். சிவன் அருகில் பார்வதியும் நின்று விருப்பமாக ரசித்தாள். இதனால் 'சிவகாமி' என்ற பெயர் அவளுக்கு ஏற்பட்டது.
???? இதை விட சிறந்த நடனத்தை யாராலும் ஆட முடியாது என்பதால், 'நடராஜர்' (ஆடல் அரசன்) என்னும் பெயர், சிவனுக்கு சூட்டப்பட்டது
____________________
13. தூசியினாலும் நன்மையிருக்கு!!!
தரையில் குழந்தைகள் உருண்டு விளையாண்டால், 'ஐயோ! உடலெல்லாம் தூசாகும், எழுந்திரு,” என்று கண்டிப்போம்.
ஆனால், ???????? கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் முன் கொடி மரம் முன் விழுந்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது நமது உடலில் எவ்வளவு தூசி படிகின்றதோ, அவ்வளவு வருட காலம் நாம் கைலாயத்தில் சிவ பார்வதியோடு வாழும் பாக்கியம் என்கிறது வேதம்.????????
தொடரும்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
14. நிழல்படும் நீர்நிலையில் நீராடுங்க!
அரசமரத்து நிழல்படுகின்ற நீர் நிலைகளில் வியாழக்கிழமையன்றும், அமாவாசையன்றும் நீராடுவது, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு சமமானது.
____________________
15. சிதம்பரத்தில் அரங்கேற்றம் ஏன்???
படைப்புக்கடவுளான பிரம்மா, ஒவ்வொரு யுகம் முடியும் காலத்திலும் சிவனால் அழிக்கப்படுவார். மீண்டும் உலகம் உருவாகும் போது உயிர்ப்பிக்கப் படுவார். இப்படி பிரம்மா 32 முறை அழிக்கப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றிருக்கிறார்.
இந்த 32 பிரம்மாக்களின் மண்டை ஓட்டினை (கபாலம்) சிவன் தன் கழுத்தில் மாலையாக அணிந்திருக்கிறார். அவரது தலையில் சூடியுள்ள சந்திரனில் இருந்து வழியும் அமிர்தம், கபாலத்தின் மீது பட்டதும் மண்டையோடு மாலை உயிர் பெற்று விடும். அந்த தலைகள் இசையுடன் பாடி, நடராஜரை வழிபடும். கபாலங்கள் பாடவும், நடராஜர் அதற்கேற்ப நடனமாட, உலகெங்கும் மகிழ்ச்சி பரவும்.
இந்த பிரம்ம கபாலங்களில் இருந்தே இசை பிறந்ததாக சங்கீத சாஸ்திரம் கூறுகிறது. ????இதன் அடிப்படையில் இசை, நடனம் கற்பவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்துகின்றனர்.????
____________________
16. வணக்கம் சொல்ல மறக்காதீங்க!!!????????????
தெரிந்தவர், பெரியவர்களை சந்தித்தால் 'ஹலோ...' என சொல்லி கை குலுக்குகின்றனர்.(நோய் தொற்றும் அபாயம் உண்டு). கைகளைக் குவித்து வணக்கம் (நமஸ்காரம்) சொல்ல வேண்டும் என்கிறது சாஸ்திரம். நமஸ்காரம் என்பது 'நம' என்னும் சொல்லில் இருந்து வந்தது. 'நம' என்பதற்கு 'பணிதல்' என்பது பொருள். அனைவரிடமும் பணிவுடன் இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் சொல்வதே 'வணக்கம்'.
____________________
தொடரும்.....
அரசமரத்து நிழல்படுகின்ற நீர் நிலைகளில் வியாழக்கிழமையன்றும், அமாவாசையன்றும் நீராடுவது, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு சமமானது.
____________________
15. சிதம்பரத்தில் அரங்கேற்றம் ஏன்???
படைப்புக்கடவுளான பிரம்மா, ஒவ்வொரு யுகம் முடியும் காலத்திலும் சிவனால் அழிக்கப்படுவார். மீண்டும் உலகம் உருவாகும் போது உயிர்ப்பிக்கப் படுவார். இப்படி பிரம்மா 32 முறை அழிக்கப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றிருக்கிறார்.
இந்த 32 பிரம்மாக்களின் மண்டை ஓட்டினை (கபாலம்) சிவன் தன் கழுத்தில் மாலையாக அணிந்திருக்கிறார். அவரது தலையில் சூடியுள்ள சந்திரனில் இருந்து வழியும் அமிர்தம், கபாலத்தின் மீது பட்டதும் மண்டையோடு மாலை உயிர் பெற்று விடும். அந்த தலைகள் இசையுடன் பாடி, நடராஜரை வழிபடும். கபாலங்கள் பாடவும், நடராஜர் அதற்கேற்ப நடனமாட, உலகெங்கும் மகிழ்ச்சி பரவும்.
இந்த பிரம்ம கபாலங்களில் இருந்தே இசை பிறந்ததாக சங்கீத சாஸ்திரம் கூறுகிறது. ????இதன் அடிப்படையில் இசை, நடனம் கற்பவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்துகின்றனர்.????
____________________
16. வணக்கம் சொல்ல மறக்காதீங்க!!!????????????
தெரிந்தவர், பெரியவர்களை சந்தித்தால் 'ஹலோ...' என சொல்லி கை குலுக்குகின்றனர்.(நோய் தொற்றும் அபாயம் உண்டு). கைகளைக் குவித்து வணக்கம் (நமஸ்காரம்) சொல்ல வேண்டும் என்கிறது சாஸ்திரம். நமஸ்காரம் என்பது 'நம' என்னும் சொல்லில் இருந்து வந்தது. 'நம' என்பதற்கு 'பணிதல்' என்பது பொருள். அனைவரிடமும் பணிவுடன் இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் சொல்வதே 'வணக்கம்'.
____________________
தொடரும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
17. அனுமனைப் போல் வாழ்வோம்!!!!
விவேகானந்தர் அனுமனைப் பின்பற்றி மக்கள் வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
“மகாவீர அனுமனை உன் வாழ்வின் லட்சியமாகக் கொள். அவர் ராமபிரானின் உத்தரவுப்படி கடலையும் தாண்டிச் சென்றார். அவருக்கு வாழ்வையும், சாவையும் பற்றிய கவலை சிறிதும் இல்லை. அவர் தன் புலன்களை முற்றிலும் அடக்கி ஆட்சி செய்தார். அற்புதமான புத்தி சாதுர்யம் கொண்டவர். ஒருபக்கம் அவர் தொண்டு என்னும் லட்சியத்தின் உருவகமாகத் திகழ்கிறார்.
இன்னொரு பக்கம் சிங்கம் போன்று தைரியத்துடன் உலகையே பிரமிக்க வைக்கிறார். ராமனின் நன்மைக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வதிலும் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை.
ராமசேவையைத் தவிர மற்ற அனைத்தையும் அறவே புறக்கணித்தார்.
பிரம்மலோக பதவியையோ, சிவலோகப் பதவியையோ கூட அவர் பெரிதாக கருதாமல் வேண்டாம் என்று ஒதுக்கினார். அவருடைய வாழ்க்கையின் ஒரே லட்சியம் ராமனுக்கு நன்மை செய்வது மட்டுமே.
முழுமனதோடுஅர்ப்பணிப்பு உணர்வுடன் பிறருக்கு செய்யும் சேவையே அனுமனிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.”
____________________
18. ஆச்சரியப்படும் அம்பிகை!!!!
சிவனுக்கும், காளிக்கும் நடனப்போட்டி நடந்தது. இதில் சிவன் ஊர்த்துவ தாண்டவம் என்னும் வலது காலைத் தூக்கி ஆடியதால் வெற்றி கிடைத்தது. இக்கோலத்தில் சிவன் காட்சி தரும் தலம் திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காடு. இங்குள்ள நடராஜர் 'ரத்தின சபாபதி' எனப்படுகிறார்.
???? இவரது நடனத்திற்கு ஈடு கொடுத்து காளி ஆடியதை பார்வதி ஆச்சரியமாகப் பார்த்தாள். இதனால் அவளுக்கு 'சமீசீனாம்பிகை'(ஆச்சரியப்படுபவள்) எனப் பெயர் வந்தது. இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைத்த நிலையில் ஆச்சரிய கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
நன்றி : whatsup
விவேகானந்தர் அனுமனைப் பின்பற்றி மக்கள் வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
“மகாவீர அனுமனை உன் வாழ்வின் லட்சியமாகக் கொள். அவர் ராமபிரானின் உத்தரவுப்படி கடலையும் தாண்டிச் சென்றார். அவருக்கு வாழ்வையும், சாவையும் பற்றிய கவலை சிறிதும் இல்லை. அவர் தன் புலன்களை முற்றிலும் அடக்கி ஆட்சி செய்தார். அற்புதமான புத்தி சாதுர்யம் கொண்டவர். ஒருபக்கம் அவர் தொண்டு என்னும் லட்சியத்தின் உருவகமாகத் திகழ்கிறார்.
இன்னொரு பக்கம் சிங்கம் போன்று தைரியத்துடன் உலகையே பிரமிக்க வைக்கிறார். ராமனின் நன்மைக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வதிலும் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை.
ராமசேவையைத் தவிர மற்ற அனைத்தையும் அறவே புறக்கணித்தார்.
பிரம்மலோக பதவியையோ, சிவலோகப் பதவியையோ கூட அவர் பெரிதாக கருதாமல் வேண்டாம் என்று ஒதுக்கினார். அவருடைய வாழ்க்கையின் ஒரே லட்சியம் ராமனுக்கு நன்மை செய்வது மட்டுமே.
முழுமனதோடுஅர்ப்பணிப்பு உணர்வுடன் பிறருக்கு செய்யும் சேவையே அனுமனிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.”
____________________
18. ஆச்சரியப்படும் அம்பிகை!!!!
சிவனுக்கும், காளிக்கும் நடனப்போட்டி நடந்தது. இதில் சிவன் ஊர்த்துவ தாண்டவம் என்னும் வலது காலைத் தூக்கி ஆடியதால் வெற்றி கிடைத்தது. இக்கோலத்தில் சிவன் காட்சி தரும் தலம் திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காடு. இங்குள்ள நடராஜர் 'ரத்தின சபாபதி' எனப்படுகிறார்.
???? இவரது நடனத்திற்கு ஈடு கொடுத்து காளி ஆடியதை பார்வதி ஆச்சரியமாகப் பார்த்தாள். இதனால் அவளுக்கு 'சமீசீனாம்பிகை'(ஆச்சரியப்படுபவள்) எனப் பெயர் வந்தது. இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைத்த நிலையில் ஆச்சரிய கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
நன்றி : whatsup
“நலம் தரும் சிவபுராணம் நாளும் பாடிடு மனமே
சிவன் வருவான் அருள் தருவான் வாழ்வில் அனுதினமே ”
(repeat this after each paragraph –
this is actually added in the SPB song and not in original
sivapuranam)
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க — 5
வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க — 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி — 15
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். — 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் — 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் — 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே — 35
வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே — 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே — 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை — 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, — 55
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் — 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் — 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே — 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் — 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் — 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று — 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே — 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. — 95
-
திருச்சிற்றம்பலம்
-
நன்றி - ஆன்மீக வலைத்தளம்
சிவன் வருவான் அருள் தருவான் வாழ்வில் அனுதினமே ”
(repeat this after each paragraph –
this is actually added in the SPB song and not in original
sivapuranam)
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க — 5
வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க — 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி — 15
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். — 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் — 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் — 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே — 35
வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே — 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே — 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை — 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, — 55
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் — 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் — 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே — 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் — 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் — 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று — 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே — 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. — 95
-
திருச்சிற்றம்பலம்
-
நன்றி - ஆன்மீக வலைத்தளம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி அண்ணா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|