புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு
Page 1 of 1 •
பத்ம வியூகம்
தினம் தினம் போராடும் திராவிட அபிமன்யு நான்...
தண்ணீர் தேடிய தருணத்தில் திராவகம் சூழ்ந்த முதல் சுற்று,
வாழ்வாதரத்தை வேண்டியபோது அதிகார ஆதாரம் இரண்டாம் சுற்று,
பசிக்கு பருக்கை பந்தி - சதிகார ஸ்மார்ட் அட்டை மூன்றாம் சுற்று
கொம்பு சீவிய காளை நான்
- காலை சீவும் கருணை கூட்டம் நான்காம் சுற்று
-
காய்ந்து விட்ட மருத்துவக்கனவுகள் - கம்பி 'நீட்'டிய ஐந்தாம் சுற்று
சித்தாந்தம் சீண்டாத நாத்திகன் நான் -
சீண்டிப்பார்க்கும் வேதாந்தம் ஆறாம் சுற்று
மடிதேடும் மழலைமனம் -
மிதியடியாக்கிய மீத்தேன் ஏழாம் சுற்று...
கலியுலக பத்ம வியூகம் கருணித்த எட்டு வழி -
இலவச சுற்று
--
வீரத்தாய்ப்பால் கருணித்த ...வீரத்தமிழச்சியே...
வியூக விடுதலை போதனையில் விழிப்பூட்டாதது ஏன்?
தினம் தினம் போராடும் திராவிட அபிமன்யு நான்...
தினம் ஒரு சுற்று... தினம் ஒரு மரணம்...தினம் ஒரு ஜனனம்...
-
----------------------------------------
- நந்தா
விதியின் விளையாட்டா?
இதன் காரணகாரியத்தை யாரறிவார்?
பார்த்தனின் சுபத்திரை பத்மவியூகத்தில்
நுழைவதைப் பற்றி
பேசுவதை கருவிலே கேட்கின்றான் அபிமன்யு.
-
வளர்ந்தபோதும் வெளியில் வரக்கேட்கவில்லை
வீரனாய் வளர்ந்து பாரதப் போரில்
பதினான்காம் நாளில்
பத்மவியூகத்தை
உடைத்துக் கொண்டு
நடுவில் வெற்றியாளனாய்
நிற்கின்றான்.
-
அகங்காரத்துடன்
வெறிக்கொண்ட பகைவர்
கையால் அம்புபட்டு
மண்டைபிளக்க மாண்டான்
அபிமன்யு
-
புத்திர சோகத்தால்
அண்ணனிடம் நீதி கேட்கின்றாள் சுபத்திரை
வாழ்க்கைச் சூழலில் எல்லோரும்தான்
பத்மவியூகத்தில் நுழைகின்றோம்
வெளியில்வரும் வழி
தெரியாமலே!
-
தாமரை
இதழ்விரிப்பது போலே
வாழ்வைக் கடக்கின்றோம்!
இது காலதேவனின்
கணக்கன்றோ!
-
மனிதர்களின் அகங்காரமே
பத்மவியூகம் அதில்
தர்மத்தின் நீதியே
கர்மா! அதில் நுழைய
யார் சொல்லித் தந்தார்?
-
வாழ்வின் தத்துவமே
பத்மவியூகம் தானே! பூமிக்கு
வந்தோம், வாழ்ந்தோம்
பிரபஞ்ச விதிகளை மீறிட
நாம் யார்? தாமரையின்
மையத்தில் இயற்ஐயை,
இறைவனை அடைவதே
-
----------------------------
பத்மவியூகம்!
- A.K.சேகர், ஆகாசம்பட்டு
**
பத்ம வியூகம் எடுத்துவா பாரதத்தில் நல்வழிபிறந்திட
பரந்தாமனே பறந்துவா பாவிகளைப் பதம்பார்த்திட
பஞ்சமும் தீரலப் பாவிகளின் வஞ்சமும் போகல
அஞ்சுகத்து மைந்தனும் ஆழ்வதற்கு இங்கில்லை.
-
எங்கு செல்வோம் எங்கள் மக்கள் என்ன செய்வோம்
பஞ்சம் பிழைக்க வழியில்ல பசுமையும் பாலையாச்சி
கொஞ்சி வாழ்ந்த எங்கள் கூட்டம் அஞ்சி நடுங்குதையா
பஞ்சி ஆலையும் மூடியாச்சி பட்டினியால் வாடியாச்சி.
-
நெஞ்சமுழுதும் குமுறலாச்சி நினைத்தாலே நெருப்பாச்சு
எஞ்சியுள்ள எங்கள் நரல் ஏற்றம்பெற மாற்றம் வேண்டும்
ஏகாந்த பரம்பொருளே ஏன் இன்னும் வரத்தாமதம் நீயும்
ஏழு சக்கர வியூகம் அமைத்தே எழுந்துவா இறைவாநீ!
-
------------------------------------
- கவிஞர் பி.மதியழகன்
**
இரவின் கதவுத் திறந்து
இருட்டில்
இளைப்பாறிக் கொள்ள முடியாமல்
தவித்துக்கொண்டிருக்கிறது
வெளிச்சம்...
-
வெளிச்சத்தில் இருந்து கொண்டு
கையசைத்தபடி
தானும் உலவிக் கொள்ள முடியாமல்
துடித்துக் கொண்டிருக்கிறது
இருள்...
-
மொட்டிலிருந்து
மலர்ந்து கொண்ட பூ
மீண்டும்
அரும்பாக முடியாமல் வதங்கி
உதிர்ந்து
துக்கிக்கிறது தன்னை...
-
நிலம் பெயர்ந்து
வெளியில்
வெறுமையின் விரிப்பில்
வளர்ந்து கொள்ள முடியாமல்
ஏங்குகிறது கிளைகளைத் தாங்கும்
வேர்...
-
அந்தரத்தில் முளைத்து
நிழல் பரப்ப ஆர்வம் காட்டுகிறது
விதைகள்
-
கிளையைத் தொட முடியாமல்
தவிக்கும் உதிர்ந்த இலை போல்
நாவிற்குத் திரும்ப முடியாமல் துடிக்கிறது
நழுவி விழுந்து விட்ட வார்த்தைகள்...
-
தேவைப்படும் போதெல்லாம்
அனுபவிக்கவும் விற்றுக் கொள்ளவும்
வெளியின்
வெறுமையின் அடுகக்குகளில்
நீரை நெருப்பை காற்றை
பதுக்கி வைத்துக்கொள்ள
ரகசியமாய்
வியூகம் அமைக்க விழைகிறது
மனம்...
-
பசியில்லாமல் இருந்து கொள்ள
விகாரங்ளை
புசிப்பதிலிருந்து விடுபடாமல்
அனுபவித்துக் கொள்ள
படாதபாடு படுகிறது ஆறறிவு
-
எனப் பல
-
பத்ம வியூகமெனப் புனைந்த
எந்த வியூகமும் பலிதமாகாமல்
பின்னிய வியூகத்தில்
சிக்கிக் கொண்டுப் புரள்கிறது
ஒற்றைக்குடையில்
ஆளத் துடிக்கும் சுயநலம்...
-
--------------------------
- கவிஞர்.கா.அமீர்ஜான்
**
அபகரிக்கப்பட்ட தாய்நிலம் மீட்டிட
அன்று நடந்தது பாரதப் போர்.
அமைத்தனர் கௌரவர் பத்ம வியூகம்.
அன்னையின் வயிற்றிலிருந்தபோதே
அரைகுறையாகப் போர்க்கலை கற்ற
அபிமன்யு அதிற் சிக்கி உயிர்விட்டான்.
-
இயற்கை அமைத்த பத்ம வியூகமாயக்
எங்கும் சூழ்ந்தது கேரள வெள்ளம்
மயங்கி மலைத்திட மக்களெல்லோரும்
வாழ்வையழித்தம் மண்ணைக்கெடுத்தது.
முற்றுகையிட்டு முழுதாய் அழித்திட
முள்ளிவாய்க்காலிலிலும் பத்ம வியூகம்.
-
அமைத்த கொடியவர் ஆயுத பலத்தால்
ஆதரவற்றுத் தம்முயிர் ஈந்த
ஈழத்தமிழர் இனத்திற்கும் இஃதேதான்
நேர்ந்ததன்று. அந்த நினைவு மறக்காது.
**
நின்றிருக்கும் பகைதன்னை வெல்வ தற்கு
நிலையேழாய்த் தாமரையின் இதழ்கள் போன்று
நன்றாக வியூகம்தாம் அமைத்துக் கொண்டு
நரிசூழ்ச்சித் தந்திரத்தில் அபிமன் யூவைக்
கொன்றிட்ட துரியோத படைகள் போலக்
கொல்கின்றார் ஆட்சியாளர் மக்கள் தம்மை
வன்முறையின் பிடிக்குள்ளே நாடு செல்ல
வளமையெல்லாம் சுயநலத்தார் பையுக் குள்ளே !
--
சிக்கலினைத் தீர்த்திடுவர் என்றே யெண்ணிச்
சிக்கலுக்குள் சிக்குகின்றார் வாக்க ளித்தே
மக்கள்தம் வாக்குகளைப் பெற்ற வர்கள்
மகராசர் போலிங்கே வாழு கின்றார் !
தக்கதொரு விடியல்தாம் பிறக்கு மென்று
தடுமாறித் தடுமாறி எழுந்த போதும்
விக்கலுக்கு நீர்கிடைக்கா நிலைமை போன்று
விக்கித்து நிற்கின்றார் இருளுக் குள்ளே !
--
பத்திரமாய் நாடுதன்னைப் பாது காக்க
பாழான வாழ்வுதனைச் சீர மைக்க
பத்மமெனும் வியூகத்தை நாம்வ குப்போம்
படிப்படியாய் ஆட்சியரை அதில்நு ழைப்போம் !
தித்திக்க தித்திக்க உறுதி தந்த
திருடர்க்குத் தண்டனையை நாம்கொ டுப்போம்
சத்தியத்தில் அறநெறியில் மக்க ளாட்சி
சரித்திரத்தைப் படைத்திடுவோம் ஒன்றாய்ச் சேர்ந்தே !
--
- பாவலர் கருமலைத்தமிழாழன்
**
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|