புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2018 11:09 pm

First topic message reminder :


ஜோதிடம் அறிவோம்! - இதுதான்... இப்படித்தான்..!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

அனைவருக்கும் அன்பான வணக்கம்.

ஜோதிடம் என்பது கலை. அந்தக் கலையைப் பயில்வது சுலபம். சுவாரஸ்யம். ஜோதிடம் என்பது கணக்கு. அந்தக் கணக்கை நாமே போட்டு, விடை தெரிந்து கொள்ளலாம். ஜோதிடம் என்பது வாழ்க்கை. அந்த வாழ்க்கையை, நம் வாழ்க்கையை நாம் வாழாமல் எப்படி? ஆகவே ஜோதிடம் குறித்து உங்களுடன் பேசுவதில் எனக்கு எல்லையில்லா சந்தோஷமே!

இந்தத் தொடரில், ஜோதிடத்தைப் பற்றியும் ஜோதிடத்தில் உள்ள சில தோஷங்கள் பற்றியும் பேசுவோம்.

ஜோதிட ரீதியாக உள்ள சில தோஷங்கள் பற்றி சிலர் அறியாமையால் குழப்பங்களை ஏற்படுத்தி வீண்பயத்தை பரப்புகிறார்கள்.அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விரிவான விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும், உங்கள் முன் வைக்கப் போகிறேன்.

இந்தத் தொடர் மூலமாக, உங்கள் குழப்பங்களுக்கு விடை காணவும் தேவையற்ற பயங்களைப் போக்கிக் கொள்ளவும், ஜோதிடம் என்பது எத்தனை எளிமையானது, எவ்வளவு அற்புதமானது என்பதை நீங்களே உணருவீர்கள். உங்கள் ஜாதகத்தை உங்களுக்கு சாதகமாக மாற்றுவது எப்படி என்று முழுமையாகப் பேசுவோம்!

குரு வாழ்க! குருவே சகலமும்! குருவே துணை!

முதலில் எல்லோருக்கும் உள்ள ஆரம்பக் கேள்வி... ஜோதிடம் என்றால் என்ன? ஒருவகையில்... இதுதான் ஆரம்பக் கல்வி!

வாழ்க்கை என்னும் இருள் சூழ்ந்த பாதைக்கு வழிகாட்டுவது ஜோதி என்னும் ஜோதிடம்! ஜோதி என்றாலே நெருப்பு. இந்த பிரபஞ்சம் இயங்குவது, கிரகங்கள் இயங்குவது, என அனைத்துமே சூரியன் எனும் ஜோதியால்தான்.

ஒருவருக்கு ஜாதகத்தைக் கணிக்கும்போது, லக்னம் என்னும் புள்ளியிலிருந்தே ஜாதகம் இயங்கும்.

இந்த லக்னம் என்பது சூரியனின் ஒளிப்புள்ளி. எனவே லக்னம் என்பதை உயிர் என்னும் ஆத்மா என்று சொல்வதே பொருந்தும். அதனால்தான் சூரியனுக்கு ஆத்மகாரகன் என்றே பெயர்.

இப்படி நம் உயிர் தொடங்கி உலகின் அனைத்து இயக்கங்களும், கிரகங்களும், அந்த கிரகங்கள் பயணிக்கும் நட்சத்திரங்களும், சூரியனின் தலைமையைக் கொண்டே இயங்குகின்றன.

ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலுள்ள 12 ராசிகள், அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் அமைவைப் வைத்தே ஒரு ஜாதகம் கணிக்கப்படுகிறது.

இப்படிக் கணிக்கப்படும் ஜாதகங்களில் நம்முடைய எதிர்காலம் முதலான அனைத்து விஷயங்களும் உள்ளன. எந்த நேரத்தில் எந்த பலனைத் தரவேண்டும் என்பதை தசாபுத்திகள் தீர்மானிக்கின்றன. அவற்றை எப்படித் தரவேண்டும் என்பதை கோச்சார கிரகங்கள் நிர்ணயம் செய்கின்றன.

விதி, மதி, கதி என்ற மூன்று அம்சங்களே ஜோதிடத்தில் பிரதானமானது என்கிறார்கள் ஜோதிட சாஸ்திரம் அறிந்த வல்லுநர்கள்.

1. விதி என்பது நமக்கு என்ன விதிக்கப்பட்டது என்பதைக் காட்டுவது.

2. மதி என்பது இப்படி விதிக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக எப்படி மாற்றியமைத்துக் கொள்வது என்பதைக் காட்டுவது.

3. கதி என்பது மாற்றியமைக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவது என்பதைக் குறிக்கிறது.

இப்படி கணிக்கப்பட்ட ஜாதகங்களில் தோஷங்கள் என சில அமைப்புகளை ஜோதிடர்கள் சுட்டிக் காட்டுவார்கள்.

என்னென்ன தோஷங்கள்?

· செவ்வாய் தோஷம்.

· ராகு-கேது தோஷம்.

· சனி தோஷம்.

· ஒரு சில நட்சத்திரங்களுக்கான தோஷம்.

நாம் இப்போது பார்க்கப்போவது இந்த தோஷங்கள் என்ன செய்யும்? இந்த தோஷங்கள் உண்மையிலேயே பார்க்கப்படவேண்டியதா? தோஷத்தைப் பற்றி கவலைப்பட வேண்டுமா? கவலைப்பட தேவையில்லையா? தோஷத்தை மீறினால் ஏதாவது பாதிப்பு வருமா? பாதிப்பு வரும் என்றால் அதற்குப் பரிகாரம் உண்டா? என பலவிதமாக ஆராய்ந்து எளிமையாகவும், உங்களுக்கு புரியும்படியாகவும் விளக்கிச் சொல்லப்போகிறேன்.

முதலில் செவ்வாய் தோஷத்தை எடுத்துக் கொள்வோம்.

ஆணோ பெண்ணோ, திருமணத்திற்காக வரன் பார்க்கும்பொழுது முதல் கேள்வியாக எதிர்நோக்குவது செவ்வாய் தோஷம் இருக்கா என்பது தான்.

அப்படி இந்த செவ்வாய் தோஷம் என்ன தான் செய்யும்?

உண்மையில்... செவ்வாய் தோஷம், பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே இல்லை என்பதே உண்மை.

தோஷம் என்ற ஒன்று இருந்தாலே தோஷ நிவர்த்தி அல்லது தோஷ பரிகாரம் அல்லது தோஷ விமோசனம் கண்டிப்பாக உண்டு. அதனால்தான் அந்தக் காலத்திலேயே அதாவது புராணக் காலத்திலேயே சாபம் கொடுக்கப்பட்டது. சாபவிமோசனமும் அளிக்கப்பட்டது.

ஒருவர் ஜாதகத்தில், லக்னம் மற்றும் ராசிக்கு 2ம் இடம், 4ம் இடம், 7ம் இடம், 8ம் இடம், 12ம் இடம் ஆகிய இடங்களில் செவ்வாய்க் கிரகம் இருந்தால் அதுவே செவ்வாய் தோஷம்!

செவ்வாய் தோஷம் மட்டுமே லக்னம் மற்றும் ராசி என்னும் இரண்டுக்குமே பார்க்கப்படுகிறது.

அதற்கு காரணம், லக்னம் உயிராகவும், ராசி உடலாகவும் இருப்பதால் தான். அதனால் செவ்வாய் தோஷம் உடலையோ உயிரையோ பாதித்து விடும் என்று நம்பப்பட்டு வந்தது.

உண்மையில், முன்காலத்தில் சுக்கிரனுக்கும், செவ்வாய் தோஷம் பார்க்கப்பட்டு வந்தது. அப்படி சுக்கிரனுக்கும் சேர்த்து பார்க்கப்படும் பட்சத்தில் இங்கு ஒருவருடைய ஜாதகம் கூட, செவ்வாய் தோஷம் இல்லாமல் இருக்கவே முடியாது.

காலப்போக்கில் சுக்கிரனுக்கு... செவ்வாய் தோஷம் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள். இப்போது லக்னம் மற்றும் ராசிக்கு மட்டுமே செவ்வாய் தோஷம் பார்க்கப்படுகிறது.

சாபம் என்றால் சாப விமோசனம் இருப்பது போல், தோஷம் என்றால் தோஷ நிவர்த்தி அல்லது விமோசனம் கண்டிப்பாக உண்டு.

நாம் ஏற்கனவே கூறியபடி லக்னம் மற்றும் ராசிக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில், செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பொத்தாம்பொதுவாக” சொல்லிவிட முடியாது.

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய லக்னம் மற்றும் ராசிக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

மிதுனம், கன்னி லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு மட்டுமே தோஷ வீரியம் உள்ளது. அதற்கும் விதி விலக்குகள் உண்டு.

இன்னும் தோஷநிவர்த்திகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2018 12:30 am

தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நாட்களில், எந்த நேரத்தில் இணையலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இங்கு தரப்படும் நேரம் இரவுப்பொழுது மட்டுமே.



திங்கட்கிழமை :- இரவு 10 மணிமுதல் 11 மணிவரை

1 மணி முதல் 3 மணி வரை

செவ்வாய்கிழமை :- இரவு 10 மணிமுதல் 1 மணிவரை

புதன்கிழமை :- இரவு 8 மணிமுதல் 10 மணிவரை

11 மணிமுதல் 12 மணிவரை

வியாழக்கிழமை :- இரவு 11 மணிமுதல் 2 மணிவரை

வெள்ளிக்கிழமை :- இரவு 8 மணிமுதல் 11 மணிவரை

சனிக்கிழமை :- இரவு 9 மணிமுதல் 10 மணிவரை

12 மணிமுதல் 2 மணிவரை

ஞாயிற்றுக்கிழமை :-இரவு 9 மணிமுதல் 12 மணிவரை



இந்த நேரங்களில் தாம்பத்யம் என்பது சிறப்பென்றாலும், இதில் லக்னம் குறிப்பிடவில்லை. குறிப்பிடவும் முடியாது, எனவே அருகில் உள்ள ஜோதிடரிடம் லக்னம் குறித்துக்கொள்வது சிறப்பு.

ஏன் லக்னம் குறிப்பிட முடியாதென்றால் சூரியனை அடிப்படையாக வைத்துதான் லக்னம் கணிக்க முடியும்,

சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியாக மாறுவார். எனவே நான் இங்கே லக்னம் தரமுடியவில்லை. எனக்கும் வருத்தம்தான்,

“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்க பெறின்”


விரைவில் புத்திரபாக்கியம் உண்டாக எம்பெருமான் முருகன் எல்லோருக்கும் அருள் புரிவார்.



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2018 12:37 am

குலதெய்வ வழிபாடு முக்கியம்!


இஷ்ட தெய்வமாக எந்தக் கடவுளை வேண்டுமானாலும் வழிபடுங்கள். சதாசர்வ காலமும் அந்த இஷ்டதெய்வம் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் சென்று வாருங்கள். வழிபடுங்கள். நேர்த்திக்கடன் செலுத்துங்கள். அதேசமயம், முக்கியமாக ஒரு வழிபாட்டை, ஒரு தெய்வத்தை மறக்கவே மறக்காதீர்கள்.

அதுதான் குலதெய்வம்... குலதெய்வ வழிபாடு. குலதெய்வ வழிபாடு என்பது மிக மிக முக்கியம். எந்தப் பரிகாரங்கள் செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் அனுமதி பெறவேண்டும்.

உங்கள் வழிபாட்டு முறை எப்படியோ அதன் வழிமுறையில் பூஜை செய்த பின் பரிகாரங்களைத் தொடருங்கள். வெகு சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.

ஒருவர் தன் குலதெய்வத்தை 13 தலைமுறைக்கு மேல் தொடர முடியாது என்பதை அறிவீர்களா?

எவர் ஒருவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் பெண் குழந்தை மட்டும் இருக்கிறதோ... அவரோடு அந்த குலதெய்வமும் குலதெய்வ வழிபாடும் முடிந்து விடுகிறது.

அல்லது வாரிசே இல்லாமல் போனாலும் குலதெய்வ வழிபாடு முடிவுக்கு வந்துவிடும்.


மேலே சொன்ன இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

குலதெய்வ வழிபாடு “முறையாக செய்யாமல் போனால்” ஆண் வாரிசு இருக்காது.

குலதெய்வத்தை “மறந்தே போனாலும், அல்லது தெரிந்தே வணங்காமல் போனாலும்” வாரிசே இல்லாமல் போகும்.


இல்லை என் தந்தைதான் மறந்துவிட்டார். நான் தேடிப்பிடித்து வணங்கிவருகிறேன் என்பவர்களுக்கு... “முன்னோர் செய்த குற்றம் வாரிசுகளை வந்து சேரும்” என்பது விதி. ஆகவே அது மாறாது, மாற்றமுடியாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எனவே குலதெய்வத்தை மறக்காமல் வணங்குவதே புத்திரபாக்கியத்தை உறுதி செய்யும் என்பதை உணர்ந்து, குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.





ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2018 12:38 am

இனி நாம் நட்சத்திரங்களை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்,

இதுல என்ன சார் இருக்கு? என் நட்சத்திரம் எனக்குத் தெரியும், கோயிலுக்குப் போகும் போது அர்ச்சனை செய்வேன். திருமணத்துக்கு பொருத்தம் பார்க்கும் நிகழ்வுக்கு நட்சத்திரம் உபயோகப்படும்.

அதைத் தவிர, வேறென்ன பார்க்க முடியும்? என்பவர்களுக்கு...

இந்தத் தொடரில் நீங்கள் ஆச்சரியப்படும் அளவில் “நட்சத்திரங்களில் இவ்வளவு விஷயம் இருக்கா... என மெய்ம்மறக்கப் போகிறீர்கள்!

நட்சத்திரப் பட்டியல்
1) அஸ்வினி

2) பரணி

3) கார்த்திகை

4) ரோகிணி

5) மிருகசீரிடம்

6) திருவாதிரை

7) புனர்பூசம்

8) பூசம்

9) ஆயில்யம்

10) மகம்

11) பூரம்

12) உத்திரம்

13) அஸ்தம்

14) சித்திரை

15) சுவாதி

16) விசாகம்

17) அனுசம்

18) கேட்டை

19) மூலம்

20) பூராடம்

21) உத்ராடம்

22) திருவோணம்

23) அவிட்டம்

24) சதயம்

25) பூரட்டாதி

26) உத்திரட்டாதி

27) ரேவதி


28- வதாக ஒரு நட்சத்திரம் உண்டு. தெரியுமா உங்களுக்கு? அதைப் பிறகு பார்ப்போம்.

இப்போது சிறு தகவல் அல்லது குறிப்பு:-

உங்கள் நட்சத்திரம் எதுவோ அதற்கு அடுத்த நட்சத்திர நாட்களில் நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் முழு வெற்றியை தரும்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

இதை முயற்சித்துப் பாருங்கள்.



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2018 12:43 am

'ஜாதகத்திலேயே இருக்கு குலதெய்வ விவரம்!


ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு 2 ஆண்பிள்ளை இருக்கிறார்கள். அடுத்தவருக்கு 2ம் பெண்பிள்ளைகள், மூன்றாமவருக்கு குழந்தை இல்லை.

இது ஏதும் குலதெய்வக் குறையா?


ஆண் குழந்தை இருந்தால் குலதெய்வ வழிபாடு தொடரும் என்ற கருத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு சந்தோஷம் அடைந்தவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

அதேசமயம், பெண் குழந்தை மட்டும் பெற்றவர்கள் மிகவும் வருத்தம் அடைந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,

அதிலும் குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் சொல்ல முடியாத வருத்தத்துக்கு ஆளாகியிருப்பார்கள்.

இவர்களுக்கு நான் இப்போது கூறும் கருத்து, மனதை இதமாக்கும் என்பது உறுதி.

ஆண் வாரிசை உடையவர்கள் அவர்களுடைய காலத்திற்குப்பின் வருடாவருடம் திதி என்னும் தர்ப்பணம் செய்யக் கடமை உடையவர்கள்.

பெண் குழந்தை பெற்றவர்களுக்கு அந்தக் கவலை தேவையில்லை. ஏன் தெரியுமா?

இனி அவர்களுக்கு மறு ஜென்மம் என்பதே இல்லை. இனி பிறப்பு இல்லாதவர்களுக்கு தர்ப்பணம் எதற்கு? எனவே குலதெய்வ வழிபாடு முற்றுப்பெறும் என்ற வேதனையை விட “பிறப்பில்லா பெருவாழ்வு” என்பது மிகவும் உயர்ந்தது; உன்னதமானது!

வாரிசே இல்லாதவர்க்கும் இதே பதில்தான்.

இங்கு ஒரு அறிவுரை...

தயவுசெய்து உங்கள் பிள்ளைகளுக்கு பாட்டன், முப்பாட்டன், கொள்ளுத் தாத்தா, எள்ளுத்தாத்தா என அவர்களின் பெயர்களையும் அவர்களையும் தெரிந்த அளவுக்குச் சொல்லித்தாருங்கள்.,

இப்போது தாத்தா பெயரைத் தவிர முன்னோர் பெயர்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. எனவே கற்றுக்கொடுங்கள். அது நல்லது.

ஒருசிலருக்கு “நான் பல வருசமா என் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செஞ்சிட்டு வரேன். எல்லாப் பெயரையும் சரியாச் சொல்லுவேன், ஆனா இப்ப ஒரு தாத்தா பெயரை மறந்துட்டேன்” என்பவர்களுக்கு...

இது உங்கள் மறதி அல்ல, எந்தப் பாட்டன் பெயரை மறந்தீர்களோ... அவர் “சொர்க்கம் சென்று விட்டார் என அர்த்தம்.” எனவே, மறந்தவர் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என மெனக்கெடாதீர்கள்.

இன்னும் சிலர் “என் குலதெய்வத்தை எப்படித் தெரிந்து கொள்வது” என்று கேட்கிறார்கள்.

எளிமையான விளக்கத்தின் மூலமாக நான் தரும் குறிப்புகள் மூலம் உங்கள் குலசாமியை அறிந்துகொள்ளலாம்.

உங்கள் ஜாதகத்தில் 5 ம் இடம் உங்கள் குலதெய்வத்தை குறிக்கும் இடமாகும்.

அதாவது லக்னம் என்னும் கட்டம் ஒன்று என எண்ண ஆரம்பித்து கடிகாரச் சுற்றுப்படி எண்ணி வர 5ம் இடம் குலதெய்வத்தைக் காட்டும்.

சரி, கட்டம் தெரிந்து கொண்டோம். தெய்வத்தை எப்படி அறிவது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

5 ல் சூரியன் இருக்க, சிவன் சம்பந்தபட்ட தெய்வம் குலதெய்வம் என்பதாகச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

சந்திரன் இருக்க சாந்த சொரூப சக்தி வடிவ அம்மன், குலதெய்வமாக இருக்கிறாள் என்று அர்த்தம்.

செவ்வாய் இருந்தால் முருகப் பெருமான் குலதெய்வம் என்றும், மற்றும் சக்திவடிவான அம்மன் தெய்வங்கள் குலதெய்வம் என்றும்,

புதன் இருக்க மகாவிஷ்ணு தொடர்புடைய ஆலயம், குலதெய்வக் கோயில் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

குருபகவான் இருந்தால் சித்தர்கள், ஞானிகள் தொடர்புடைய ஆலயங்கள்,

சுக்கிரன் இருந்தால் மகாலக்ஷ்மி, பெருமாள் தொடர்பான ஆலயங்கள்,

சனிபகவான் இருந்தால் எல்லைத் தெய்வங்கள், ஐயனார், ஐயப்பன், சாஸ்தா முதலான தெய்வங்கள் குலதெய்வம் என்று அறிந்து உணரலாம்.

ராகு இருக்க ரத்தபலி கேட்கும் தெய்வங்கள், உக்கிரமான பெண் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் முதலான தெய்வங்களில் ஒன்று, குலதெய்வமாக நம்மை வழிநடத்துகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.


கேது இருக்க எல்லை பெண் தெய்வங்கள், கூரைகூட இல்லாத வெட்ட வெளியில் உள்ள தெய்வங்கள்,ஊருக்காக தியாகம் செய்து சாமியாக மாறியவர்கள்,சித்தர் பீடங்கள், ஜீவசமாதி அடங்கிய ஆலயங்கள் குலதெய்வ தலம் ஆகும்.

இனி அடுத்ததடுத்த பதிவுகளில் நட்சத்திரங்களைப் பற்றி முழுமையாக அறிவோம்.

இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்துதான் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு நல்ல ஜோதிடரை அணுகி உங்கள் குலதெயவத்தை அறிந்து கொள்ளுங்கள்.



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2018 12:49 am

குலதெய்வம் யார்? எங்கே இருக்கிறது? எப்படி அறிவது?அறிந்துகொள்வோமா?

நட்சத்திரங்களைப் பற்றித் தொடரலாம் என நினைக்கும் போது வாசகர்கள் குலதெய்வம் பற்றி கூடுதல் தகவல்கள் கேட்கிறார்கள்,

வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே முதல் கடமை. எனவே இன்னும் சில தகவல்களைப் பார்க்கலாம்.

எல்லை தெய்வம் என குறிப்பிடுகிறீர்கள். அதன் பெயர் எப்படி அறிவது? என்கிறார் வாசக அன்பர் ஒருவர்.

இன்னும் பலர் என் ஜாதகத்தில் 5 ம் இடத்தில் எந்தக் கிரகமும் இல்லை. அப்படியானால் எப்படி அறிவது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

எல்லை தெய்வம் என்றால் ஐயனார், ஐயப்பன், சாஸ்தா எனத் தந்திருந்தேன். இது ஒரு உதாரணம்தான். சுடலைமாடன், முனியப்பன், முனீஸ்வரன், காத்தவராயன், மதுரைவீரன் என இன்னும் பல பெயர்களும் உண்டு. சாமிகளும் உண்டு.

பெண் தெய்வம் என்றால் காத்தாயி, வீரமாயி, வீரமாகாளி, மாரியம்மா, காளியம்மா, புடவைக்காரி, சேலையம்மா, கன்னியம்மா என இன்னும் பல தெய்வங்கள் இருக்கிறார்கள்.

எனவே உங்கள் பூர்வீகத்திலிருந்து இதை ஆராய்ந்தால் எளிதாக உங்கள் தெய்வத்தை இனம்காண முடியும்.

5ம் இடத்தில் கிரகம் இல்லாவிட்டால் அந்த வீட்டின் அதிபதி கிரகம் அமர்ந்த இடம் பார்க்கப்பட வேண்டும்.

அந்த கிரகம் யார்? அதன்படி எப்படி தெய்வத்தை அறிவது என்பதை முந்தைய பதிவில் தெரிவித்தேன்.

உங்கள் ஜாதகத்தில் 5ஆம் அதிபதி கிரகம் அமர்ந்த இடம்.

மேஷம் என்றால்:- வறண்ட, கரடுமுரடான பாறைகள் நிறைந்த பகுதியில் கோயில் இருக்கும்.

ரிஷபம் :- வயல் பகுதியில் இருக்கும்.

மிதுனம்:- வாரச்சந்தை அல்லது வருடச் சந்தை ஊரின் எல்லைப் பகுதி ஆகியவற்றில் இருக்கும்,

கடகம்:- கடல், ஆறு, குளக்கரை பகுதியில் இருக்கும்.

சிம்மம்:- நகரின் மையப்பகுதி, ஊரின் தலைநகர், அல்லது சிவனின் பெயரில் அமைந்த நகரம்(உதாரணம்:- திருவண்ணாமலை) அமைந்திருக்கும்.

கன்னி:- சுற்றுலாத்தலம், மக்கள் ஒன்று கூடும் இடம். உதாரணம் திருப்பதி, நாகப்பட்டினம், கன்யாகுமரி, குற்றாலம்...

துலாம்:- இதுவும் மக்கள் ஒன்று கூடும் இடம்தான், சந்தைப்பகுதி, வியாபாரநகரம், என்று இருக்கும். உதாரணம் ஈரோடு, கள்ளக்குறிச்சி ....

விருச்சிகம்:- துணி துவைக்கும் துறை, கிளை ஆறு ஓடும் இடம், சுடுகாட்டுப்பகுதி, முட்புதர் உள்ள பகுதியில் இருக்கும் ஆலயம்.

தனுசு:- அனைவராலும் வணங்கும் தெய்வம், உதாரணம் சென்னை காளிகாம்பாள்- இந்த தலம் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமானது ஆனாலும் அனைவராலும் வணங்கப்படும் அம்மன் இவள். பிள்ளையார்பட்டியும் இந்த வகைதான். இது போன்ற தெய்வ ஆலயங்கள், சித்தர்கள், ரிஷிகள் வாழ்கின்ற இடம்.

மகரம்:- சுடுகாட்டுப்பகுதி, வறண்ட நிலப்பகுதி, சதுப்பு நிலப்பகுதி, உபயோகமற்ற மரம், செடிகொடி உள்ள காட்டுப்பகுதி.

கும்பம்:- புகழ் பெற்ற கோயில் உள்ள நகரப்பகுதி, உதாரணம்:- காஞ்சிபுரம், கும்பகோணம், மதுரை... இதன் சுற்றுவட்டாரப் பகுதி.

மீனம்:- கடற்கரை ஊர், நகரம் உள்ள பகுதி, ஞானிகள், மகான்கள் இருந்த பகுதி.


இந்தக் குறிப்புகளையும் சென்ற பதிவின் ( சூரியன் இருக்க, சந்திரன் இருக்க என தகவல் தந்தேன் அல்லவா! அந்த பகுதியையும்) தகவலையும் இணைத்துப் பார்த்தால் உங்கள் தெய்வத்தை நீங்களே அறிந்து கொள்ள முடியும்,



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2018 12:55 am

தமிழகத்தில் குலதெய்வமாக வழிபடும் சாமிகளின் எண்ணிக்கை 1100 க்கும் மேல் உள்ளது என்பதாக அறிகிறேன். இது நான் தெரிந்துகொண்டது. இன்னும் கூட இருக்கலாம்!

முதலில் குலதெய்வம் என்பவர் யார்? அவர் ஆகாயத்தில் இருந்து வரவில்லை.

அவர் உங்கள் குலம் காக்க உயிர்த் தியாகம் செய்த உங்கள் குடும்பத்தின் முன்னோர் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

அல்லது உங்கள் குலம் தழைக்க அல்லது ஊரைக் காக்க தன் உயிர் கொடுத்து காப்பாற்றியவர் ஆவார்.

என்ன இருந்தாலும் இறந்தவர் ஆவியானது ஊருக்குள் வரக்கூடாது என்ற கோட்பாட்டின் படி, எல்லையில் தங்கி உங்கள் ஊரை அல்லது உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்.

சரி எப்போதெல்லாம் குலதெய்வத்தை வணங்க வேண்டும்?

‘அதான் வருடத்துக்கு ஒருமுறை திருவிழாவின் போது நாங்கள் முறையாக வழிபாடு செய்கிறோமே... அப்புறம் என்ன?’ என்பவர்களுக்கு...

உங்கள் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியும் உங்கள் குலதெய்வத்தின் ஆசியுடன்தான் நடைபெற வேண்டும்.

உங்கள் குழந்தை அல்லது பேரன் பேத்திகளுக்கு முதல் மொட்டை, காதுகுத்து உங்கள் குலதெய்வத்தின் ஆலயத்தில் தான் நடக்கவேண்டும்.

நீங்கள் வீடு கட்டியவுடன் அல்லது வாங்கியவுடன் நீங்கள் செல்ல வேண்டிய இடம் உங்கள் குலதெய்வக் கோயில்.

உங்கள் பிள்ளைகள் உயர்கல்வி கற்கச் செல்கிறார்களா? குலதெய்வ வழிபாடு செய்த பிறகு துவக்குங்கள்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு வந்துள்ளதா. அட... வரவே இல்லை என அலுத்துக் கொள்கிறார்களா? உடனே உங்கள் தெய்வத்தைப் பார்த்து வாருங்கள்.

புதிய தொழில் தொடங்க இருக்கிறீர்களா? அனுமதியை உங்கள் குலதெய்வத்திடம் பெறுங்கள்.

பெண் பிள்ளை பூப்பெய்து விட்டாளா? நல்ல வாழ்வு அமைய வேண்டும் என உங்கள் சாமியிடம் வேண்டுங்கள்.

இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் குலதெய்வத் தொடர்பை உறுதிபடுத்திக்கொண்டே இருங்கள். எல்லா நலமும், வளமும், அருளிக்கொண்டே இருப்பார் அந்தக் கண்கண்ட தெய்வம்.

ஒருசிலர் எங்கள் குலதெய்வம் திருப்பதி, ஶ்ரீரங்கம் எனச் சொல்கிறார்கள். அது இஷ்ட தெய்வம். இருந்தாலும் குலதெய்வம் தெரியாதவர்கள் இப்படி இஷ்ட தெய்வ வழிபாடு செய்து இந்த “வணக்கத்தை என் குலசாமியிடம் சேர்த்துவிடு” என வேண்டிக் கொள்ளலாம். அந்த வழிபாடு அனைத்தும் உங்கள் குலதெய்வத்தைச் சென்றடையும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. எனவே நம்பிக்கையோடு செய்யப்படும் எந்தச் செயலும் எந்த வகையிலும் நமக்கு நன்மையே தரும்.

உங்கள் குலம் தழைக்கச் செய்யும் குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்துகொண்டே இருங்கள்.



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2018 1:00 am

தாரை... அள்ளிக்கொடுக்கும்!

நாம் இதுவரை செவ்வாய்தோஷம், ராகுகேது தோஷம், குலதெய்வம் அறிதல் என்று பலவிதமான ஜோதிடத் தகவல்களைப் பார்த்தோம்.

எனக்கு ஒரு மனநிறைவை தந்த விஷயம் என்னவென்றால், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் இவற்றைக் கண்டு பயந்திருத்தோம், இதற்கு இனி முக்கியத்துவம் தரப்போவதில்லை.

இந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தத்தான் இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது, அது வெற்றி அடைந்ததாகவே நம்புகிறேன்.

இனி நட்சத்திரங்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம். இரண்டு பதிவுகளுக்கு முன் நட்சத்திரம் பற்றி ஆரம்பித்தோம்.

அதில் 27 நட்சத்திரங்களை அறிமுகம் செய்தோம். 28 வது நட்சத்திரம் ஒன்று உள்ளது என்ற தகவலையும் தந்திருந்தேன்.

அப்போது 27 நட்சத்திரங்களையும் வரிசையாகத் தந்திருந்தேன், இப்போது 27 நட்சத்திரங்களையும் ஜோதிட ரீதியிலான தொகுப்பாக பிரித்துத் தருகிறேன்.

அப்போதுதான் உங்களுக்கு புரியும், புரிந்ததை நீங்களே பயன்படுத்தவும் முடியும்.

1) அஸ்வினி-மகம்- மூலம்-கேதுவின் நட்சத்திரங்கள்

2) பரணி-பூரம்-பூராடம்- சுக்கிரன்

3) கார்த்திகை-உத்திரம்-உத்திராடம்—சூரியன்

4)ரோகிணி-அஸ்தம்-திருவோணம்- சந்திரன்

5) மிருகசீரிடம்-சித்திரை-அவிட்டம்- செவ்வாய்

6)திருவாதிரை-சுவாதி-சதயம்— ராகு

7)புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி— குரு

8) பூசம்-அனுசம்-உத்திரட்டாதி- சனி

9) ஆயில்யம்-கேட்டை-ரேவதி— புதன்


இப்போது உங்கள் நட்சத்திரமும் அதன் அதிபதி கிரகம் யார் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.

இதுவரை உங்கள் நட்சத்திரத்தை கோயிலில் அர்ச்சனைக்கும், திருமணப் பொருத்தத்திற்கும் மட்டுமே பயன்படுத்தியிருப்பீர்கள்.

இப்போது முற்றிலும் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றும் விதமான தகவல்களை அறிந்துகொள்ளப் போகிறீர்கள்.

இங்கே தாரை என்னும் விஷயத்தையும், உங்களுக்கு அனுசரணையான, ஆதரவான நட்சத்திரங்கள் எதுவென்றும் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.

தாரை என்றால் என்ன? தாரை என்றால் கொடுப்பது என்று பொருள்.

தாரைவார்த்து கொடுப்பது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது தம்மிடம் இருப்பதை அப்படியே அள்ளிக்கொடுப்பது என்று பொருள்.

அது நன்மையோ அல்லது தீமையோ தயவுதாட்சண்யம் பார்க்காது அப்படியே வாரிக் கொடுத்துவிடும்.

என்னென்ன தாரைகள் உள்ளது என பார்ப்போம்,

1 வது தாரை - ஜென்ம தாரை (உங்கள் ஜென்ம நட்சத்திரம்)

2 வது தாரை - சம்பத்து தாரை ( உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரம்)

3 வது தாரை - விபத்து தாரை —- மூன்றாவது நட்சத்திரம்

4 வது தாரை- ஷேம தாரை — நான்காவது நட்சத்திரம்

5 வது தாரை- பிரத்தியக்கு தாரை - 5 வது நட்சத்திரம்

6 வது தாரை - சாதக தாரை - 6 வது நட்சத்திரம்

7 வது தாரை- வதை தாரை -7 வது நட்சத்திரம்

8 வது தாரை- மைத்ர தாரை - 8 வது நட்சத்திரம்

9 வது தாரை- அதி மைத்ர தாரை - 9 வது நட்சத்திரம்.


உங்கள் நட்சத்திரம் எதுவோ அதன் இணை நட்சத்திரங்களையும் உங்கள் நட்சத்திரமாக கருதவேண்டும்.

உதாரணம்:- உங்கள் நட்சத்திரம் அசுவினி என்றால் மகம், மூலம் இவையும் உங்கள் நட்சத்திரமாகச் செயல்படும்.

அதாவது அசுவினி - ஜென்ம நட்சத்திரம்

மகம்- அனு ஜென்ம நட்சத்திரம்

மூலம்- திரி ஜென்ம நட்சத்திரம்

இப்படி உங்கள் நட்சத்திரமும் இணை நட்சத்திரங்களும் உங்களுக்கு செயல்படும்.

உங்கள் ஜென்ம, அனுஜென்ம,திரிஜென்ம நட்சத்திரங்களில் சந்திரன் பயணிக்கும் போது உங்களுக்குள் நடக்கும் மாற்றங்களை இதுவரை உணர்ந்திருக்க மாட்டீர்கள்.

அதை ஏதோ அன்றாட நிகழ்வு போல் கடந்திருப்பீர்கள்.

இனி கவனியுங்கள்..,

அந்த நாட்களில் படபடப்பு, பதட்டம், சட்டென்று உணர்ச்சிவசப்படுதல், சுள்ளென்ற கோபம் உருவாகுதல், எரிந்து விழுதல், அலைச்சல் அதிகரித்தல், தாகம்அதிகமாகுதல், அதிக சிறுநீர் வெளிப்பாடு, மாலை நேரத்தில் அமைதி திரும்புதல்., மகிழ்ச்சி வெளிப்படுதல். இது போன்றவை அன்றைய தினம் உண்டாகும்.

இது ஒரு அறிமுகம்தான், இன்னும் ஏராளமாய் அறிவோம்.

ஒரு வேண்டுகோள் நான் மேலே கொடுத்த நட்சத்திர அட்டவணையையும், தாரை விபரங்களையும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் அடுத்தடுத்த பதிவுகள் உங்களுக்குத் தெளிவாகும்



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2018 1:08 am


27 நட்சத்திரக்காரர்களும்... அவர்களின் வெற்றிநாட்களும்!



உங்கள் வாழ்க்கையில் 100 சதவிகிதம்என்னும் முழுமையான வெற்றியைக்கண்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தால், அந்த நாள் என்ன என்பது தெரிந்தால்,அந்த நாளின் நட்சத்திரம் என்ன என்று பாருங்கள்.

அது நிச்சயமாக உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர நாளாகத்தான் இருக்கும்.

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்தானே. பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? எடுத்த முயற்சிகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் வெற்றியாக, கெளரவமாக, சந்தோஷமாக கிடைக்க வேண்டும் என்பதுதானே நம் எதிர்பார்ப்பு.

புதியதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில், வியாபாரம் முழு வெற்றியடைய வேண்டும் என்றுதானே கடும் போராட்டத்துக்குத் தயாராகிறோம்.  

புதிய கல்வி முயற்சி தடையில்லாமல் முடிக்கவேண்டும் என்பதுதானே நம் குழந்தைகள் குறித்த ஆகச்சிறந்த பெருங்கவலை.  வெளிநாட்டு வேலைமுயற்சி வெற்றிபெற வேண்டும் என்பது நம்மில் பலருக்குமான கனவு அல்லவா!

சொத்துக்கள் வாங்க, விற்க. பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய, வியாபாரரீதியிலான பயணம் மேற்கொள்ள என நம் வாழ்வியல் தொடர்பான அத்தனைவிஷயங்களும் முழுநன்மையோடு நம்மை வந்தடைய வேண்டும் என்பதற்காகத்தானே சதாசர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான். அதுதான் சம்பத்து தாரை.

சம்பத்துதாரை” என்னும் உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.

இதை எப்படி அறிந்துகொள்வது?

உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.



அஸ்வினி:- இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம்

பரணி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்

கார்த்திகை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம்,திருவோணம்

ரோகிணி:- இதன் சம்பத்து நட்சத்திரம் மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்

மிருகசீரிடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி,சதயம்

திருவாதிரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்  புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி

புனர்பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் பூசம், அனுசம்,உத்திரட்டாதி

பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் ஆயில்யம்,கேட்டை,ரேவதி

ஆயில்யம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் மகம், மூலம்,அசுவினி

மகம் :-   இதன் சம்பத்து நட்சத்திரங்கள் பூரம்,பூராடம்,பரணி

பூரம் :-  இதன் சம்பத்து நட்சத்திரங்கள் உத்திரம், உத்திராடம்,கார்த்திகை

உத்திரம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் அஸ்தம்,திருவோணம்,ரோகிணி

அஸ்தம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம்

சித்திரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் சுவாதி,சதயம்,திருவாதிரை

சுவாதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்

விசாகம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் அனுசம்,உத்திரட்டாதி, பூசம்

அனுசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் கேட்டை,ரேவதி,ஆயில்யம்

கேட்டை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் மூலம், அசுவினி,மகம்

மூலம் :-   இதன் சம்பத்து நட்சத்திரங்கள் பூராடம்,பரணி,பூரம்

பூராடம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் உத்திராடம், கார்த்திகை, உத்திரம்

உத்திராடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் திருவோணம், ரோகிணி,அஸ்தம்

திருவோணம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் அவிட்டம்,மிருகசீரிடம்,சித்திரை

அவிட்டம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் சதயம்,திருவாதிரை,சுவாதி

சதயம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் பூரட்டாதி, புணர்பூசம், விசாகம்

பூரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் உத்திரட்டாதி, பூசம், அனுசம்

உத்திரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் ரேவதி,ஆயில்யம்,கேட்டை

ரேவதி :-    இதன் சம்பத்து நட்சத்திரங்கள் அசுவினி,மகம்,மூலம்



இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்களை அறிந்துகொண்டீர்கள் அல்லவா. உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்கள் எந்த நாளில் இருக்கிறதோ... அந்த நாளே உங்களுக்கு உகந்த பொன்னாள். தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்களே. இந்த நாட்களில் நீங்கள் எடுக்கும் எந்தக் காரியமும் ஜெயத்தில்தான் முடியும். ஜெயத்தையே தந்தருளும்.

இதைப் பயன்படுத்தி வெற்றியை உங்கள் வசப்படுத்துங்கள்.

இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன்.

நவகிரகங்களே அவரவர் நட்சத்திரங்களுக்கு சம்பத்து நட்சத்திரமான அடுத்த நட்சத்திரங்களில் தான் பிறந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... சம்பத்து நட்சத்திரங்களின் மகத்துவத்தையும் மகோன்னதத்தையும்!

உதாரணமாக சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்று “உத்திரம்.” ஆனால் சூரியபகவான் ஜனித்த நட்சத்திரம் உத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான “அஸ்தம்”நட்சத்திரத்தில்.

சந்திரன் தன் நட்சத்திரமான “ரோகிணிக்கு” அடுத்த நட்சத்திரமான “மிருகசீரிடம்”நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இப்படி கிரகங்களே “சம்பத்து நட்சத்திரங்களை” பயன்படுத்தி அழியாப் புகழுடன் இருக்கும் போது, நாமும் அதைப் பயன்படுத்தி வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். செழிப்பான இந்த வாழ்க்கையை சீரும் சிறப்புமாக்குவோம்!



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2018 1:18 am

நீங்கள் வணங்கவேண்டிய அதிதேவதை இவர்கள்தான்!


செல்வம் வளம் கொழிக்க, எடுத்த காரியங்களில் வெற்றிபெற, உங்கள் கனவுகள் நனவாக, எப்போதும் மகிழ்ச்சி பொங்க, குடும்பத்தில் அமைதியும் வளமும் நிறைவாக இருக்க, மொத்தத்தில் எல்லாமும் பெற்று நிறைவாய் வாழ இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

ஆக, எப்படி இறை அருளை பெறுவது?

இதோ... பார்ப்போம்.

உங்களில் ஒரு சிலருக்கு நிச்சயம் ஒரு விஷயம் தெரியும் ...

உங்கள் நண்பரோ அல்லது உங்கள் அருகில் உள்ள வீட்டினரோ புதியதாக ஒரு கோயிலுக்குச் சென்று வந்ததும் அவர்களின் வாழ்க்கையில் இருந்து வந்த துயரங்கள் நீங்கி வளமான வாழ்வு அமைந்திருக்கும். நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

இது எதனால் ஏற்பட்டது?

ஒன்று அவரின் நட்சத்திரத்தின் அதிதேவதை தொடர்பான அல்லது அவரின் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான சம்பத்துதாரை நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு உரிய ஆலயத்திற்குச் சென்று வந்திருப்பார்,

அதன் காரணமாக அவரின் வாழ்வு உயரவும், மேம்படவும் செய்திருக்கும்.

இப்படி உங்கள் நட்சத்திரத் தொடர்பான தெய்வம் எது என்பதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். உங்கள் நட்சத்திரம் தொடர்பான தெய்வத்தை அறிந்து கொண்டு, அந்தத் தெய்வத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.

அதேபோல், சம்பத்துதாரை நட்சத்திரத்தின் தெய்வ வழிபாடு உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து உங்கள் வாழ்வை வளமாக்கும் என்பது உண்மை.

இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான அதிதேவதை யார் என்று பார்க்கலாமா?

நட்சத்திரம் அதிதேவதை


அசுவினி சரஸ்வதி


பரணி துர்கை


கார்த்திகை அக்னி


ரோகிணி பிரம்மா


மிருகசீரிடம் சந்திரன்


திருவாதிரை நடராஜர்


புனர்பூசம் அதிதி


பூசம் பிரகஸ்பதி (குரு)


ஆயில்யம் ஆதிசேஷன்


மகம் பித்ருக்கள்,சுக்கிரன்


பூரம் பார்வதி


உத்திரம் சூரியன்


அஸ்தம் சாஸ்தா


சித்திரை விஷ்வகர்மா


சுவாதி வாயு


விசாகம் முருகன்


அனுசம் ஶ்ரீலஷ்மி


கேட்டை இந்திரன்


மூலம் நிருதி


பூராடம் வருணன்


உத்திராடம் கணபதி


திருவோணம் விஷ்ணு


அவிட்டம் வசுக்கள்


சதயம் எமன்


பூரட்டாதி குபேரன்


உத்திரட்டாதி காமதேனு


ரேவதி சனிபகவான்


இப்போது நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் அறிந்துகொண்டீர்கள். இனியென்ன... அந்தத் தெய்வத்தை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். நினைக்க மறக்காதீர்கள். வழிபட மறக்காதீர்கள்.

அதேபோல உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர தேவதை தொடர்பான ஆலயங்களுக்கு சென்று வர 100 சதவிகித வெற்றியை அடைவீர்கள் என்பதும் சத்தியம்.

பூசம் நட்சத்திரத்திற்கு அதிதேவதை குரு பகவான். இவரையும் வணங்கி , இவருக்கு சம்பத்து நட்சத்திரமான ஆயில்யத்தின் தேவதையான “ஆதிசேஷனையும்” வணங்கி வந்தால், எல்லாம் நன்மையாகும். எல்லாக் காரியமும் ஜெயமாகும்.

ஆனால் ஆதிசேஷனுக்கு எங்கு போவது? எங்கும் போக வேண்டாம் நம் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆதிசேஷனின் மேல் சயனித்து அருள் பாலித்து வருகிறார் அல்லவா. அவரை தரிசிக்கும் போது ஆதிசேஷனையும் சேர்த்தே நாம் வழிபடுகிறோம். அவரிடமும் நம் கோரிக்கையையும் கண்ணீரையும் வைப்போம். கை மேல் பலன் தருவார் ஆதிசேஷன்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் குபேரனையும் வணங்கி, உத்திரட்டாதியின் காமதேனுவையும் வணங்க வேண்டும்.

இப்படி தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வணங்கி வாருங்கள். சகல செளபாக்கியங்களும் பெற்று, சுபிட்சத்துடன் நிம்மதியும் நிறைவுமாக வாழ்வீர்கள்.



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2018 1:22 am

எடுத்த காரியம் ஜெயிக்கணுமா? ‘அபிஜித்’ நேரத்தை பயன்படுத்துங்க!


தாரபலம் என்றால் என்ன என்பதை அறிந்திருப்பீர்கள்.

இந்த தாரபலத்தைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளி என அமைத்துக்கொள்ள எல்லாம் நன்மையாகும். எல்லாம் நன்மைக்கே!

நான் 28 வதாக ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா! அதன் பெயர் என்ன? அது எந்த ராசியில் இருக்கிறது? என பார்ப்போம்.

அந்த நட்சத்திரத்தின் பெயர் “அபிஜித்” நட்சத்திரம்.

இது மகர ராசியில் அமைந்திருக்கிறது.


இல்லையே ... மகரத்தில் உத்திராடம் 2,3,4, பாதங்கள்,திருவோணம் 1,2,3,4 ஆகிய பாதங்கள், அவிட்டம் 1,2 பாதங்கள் மட்டுமே இருக்கிறது என்கிறீர்கள்தானே...

இந்த அபிஜித் நட்சத்திரம் சூட்சும நட்சத்திரம் ஆகும்.

இது மகர ராசியில் உத்திராடம் 4 ஆம் பாதம், திருவோணம் 1 ம் பாதத்தில் உள்ளது,

எனவே உங்களில் யார் உத்திராடம் 4, திருவோணம் 1 என்ற நட்சத்திரப் பாதங்களில் பிறந்திருக்கிறீர்களோ அவர்கள் அபிஜித் நட்சத்திரகாரர்கள் ஆவார்கள்.


சரி என்ன செய்யும் இந்த அபிஜித்?

வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை சந்திக்காதவர்கள் என எவருமே இல்லை. இதில் துயரங்களைக் கண்டு துவண்டு விடுபவர்கள் பலர் உள்ளனர்.

துன்பமோ , துயரமோ எது வந்தாலும் அதன் பாதிப்பை சிறிதும் உணராதவர்கள், இந்த அபிஜித் நட்சத்திரக்காரர்கள்.

ஆக, துன்பத்தை மனம் உணராவிட்டாலே நோய் முதற்கொண்டு எந்த பாதிப்பும் நம்மை அணுகாது.

இந்த உத்திராடம், திருவோணத்தில் பிறந்த தெய்வங்களைப் பாருங்களேன்.

உத்திராடத்தில் கணபதி...

இவரை மஞ்சளிலும் பிடித்து வணங்கலாம், மண்ணிலும் பிடித்து வணங்கலாம், எதைப்பற்றியும் கவலைப்படாதவர்.

திருவோணத்தில் பிறந்தவர் மகாவிஷ்ணு. இவரையும் நீங்கள் அறிவீர்கள்.

சதா சயனத்தில் இருப்பவர், எதைப்பற்றியும் கவலைப்படாத தோற்றம், ஆனால் உள்ளுக்குள் அனைத்தையும் அசைபோட்டுக் கொண்டிருப்பவர்.

ஆக... இந்த அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதைபற்றியும் கவலைபடத்தேவையில்லை,

இவர்களுக்கு அனைத்தும் தேடாமலே கிடைக்கும்.

எனவே எல்லாம் இறைவன் செயல் என்று இருந்தாலே சகல காரியங்களும் நன்மையாகவே நடந்தேறும்.

இந்த அபிஜித்தை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.

ஏதோ ஒரு சூழ்நிலை, திடீர்த் திருமணம், வீடு குடிபோகுதல், பதவி ஏற்பு போன்ற சுப காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.

அந்த நாள், தோஷமுள்ள நாளாக இருந்தாலும் இந்த அபிஜித் நட்சத்திரநாள் அந்த தோஷங்களைக் களைந்துவிடும்.

ஆனால் இது மாதத்திற்கு ஒருமுறைதானே வரும். அதுவரை காத்திருக்க வேண்டுமா?

இல்லை... ஒவ்வொரு நாளும் அபிஜித் நேரம் என்ற ஒரு சுப நேரம் உண்டு.

அது எந்த நேரம் என்றால் .. மதியம் 12 மணி முதல்12-30 மணிவரை உள்ள நேரமே அபிஜித் நேரம் ஆகும்.

இந்த அபிஜித் நேரத்திற்கு எந்த தோஷமும் இல்லை. எந்த தோசமும் இந்த நேரத்தை கட்டுப்படுத்தாது,

ராகுகாலம், எமகண்டம்,கரிநாள், பிரதமை, அஷ்டமி, நவமி, செவ்வாய்க்கிழமை,சனிக்கிழமை என எதுவும் இந்த அபிஜித்தை கட்டுப்படுத்தாது.

எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த அபிஜித் நேரத்தையும், அபிஜித் நட்சத்திர நாளையும் பயன்படுத்தி வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள். எடுத்த செயல்கள் யாவும் வெற்றிபெறும் என்பது உறுதி!



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக