புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
32 Posts - 42%
heezulia
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
32 Posts - 42%
prajai
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
2 Posts - 3%
Saravananj
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
398 Posts - 49%
heezulia
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
26 Posts - 3%
prajai
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_m10#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 5:57 pm

தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நிலையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் இரண்டாவது பாகம். இக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் )
நன்றி
பிபிசி தமிழ் நியூஸ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 5:59 pm

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? KelqrO4JTIicnnFZ8k5r+63025a0ba51f19236b6e7f69fec1186d

1. "தேசம் ஒரு கற்பிதம்.
கற்பிதம் செய்யப்பட்ட சமூகம் (imagined community) என்றுதான் பெனெடிக்ட் ஆன்டர்சன் சொல்கிறார். அவர் ஒன்றும் தேசியத்தைக் குறைவுபடுத்தியோ, அது ஒரு பொய் அல்லது மாயை என்றோ சொல்லவில்லை. தேசத்தின் பெயரால் அரசியல் செயல்பாடுகள் அமைகின்றன. மக்கள் திரள்கிறார்கள். உயிரைத் தத்தம் செய்கிறார்கள், மக்கள் கொல்லப்படுகிறார்கள், இடம் பெயர்கிறார்கள். எனவே தேசம் ஒரு மாயை என்றெல்லாம் நான் சொல்லவில்லை.
அதே நேரத்தில் குடும்பம், தனிச் சொத்து, அரசு என்பவை போலவே தேசமும் இயற்கையானதல்ல. அது வரலாற்று ரீதியானது. தேசிய அரசியலுக்கு அப்பாற்பட்ட புறநிலை எதார்த்தமாக தேசத்தைப் பார்க்க வேண்டியதில்லை. நூறாண்டுகளுக்கு முன்னால் எர்னஸ்ட் ரெனான் குறிப்பிட்டதுபோல நவீன தேசங்களுக்கிடையே பொதுக் காரணி ஏதும் இல்லை. ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு கூறுகள் சிலவற்றின் தொகு புள்ளியாக வரலாற்றுப் போக்கில் உருவாக்கப்படுகிறது.
பிரிவினையின் போது மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. ஆனால் மதம் ஒன்றானாலும் அது ஒரே தேசமாகப் பரிணமிக்கவில்லை. இன்று மொழி அடிப்படையில் பாகிஸ்தான் எனவும் வங்கதேசம் எனவும் ஒன்றுக்கொன்று பகையான இரண்டு நாடுகளாகிவிட்டன. ஒரே மொழி அடிப்படையில் பஞ்சாப் ஒரு தேசமாகப் பரிணமிக்க முடியவில்லை. மத அடிப்படையில் சீக்கியர்கள் காலிஸ்தான் கேட்கின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:00 pm

முந்தைய கட்டுரை:
#தமிழ்தேசியம்: 'தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?'
மொழி அல்லது இன அடிப்படையில் விசால ஆந்திரம் ஒரே தேசமாக உருப்பெற இயலவில்லை. இன்று ஒரே மொழி, ஒரே மாதிரியான மத அடையாளங்கள் உள்ள ஆந்திரமும், தெலங்கானாவும் தனித்தனியாகப் போகத் துடிக்கின்றன. இங்கே 'வளர்ச்சி' (development) என்பது பிரிவினையின் முக்கிய காரணியாக அமைகிறது. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இவை சில எடுத்துக்காட்டுகள். உலக அளவில் இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.
"எனில் தேசத்தின் ஆதிமூலம் எது? நதிமூலம் ரிஷிமூலம் போலவே தேசத்தின் மூலத்தையும் சொல்ல முடியாது. தேசத்தின் மூலத்தைத் தேடிப் போனீர்களானால் கடைசியாக உங்களுக்கு ஒரு கதைதான் பரிசாகக் கிடைக்கும். இமயத்தில் கொடி பொறித்த கதை. கனக விசயர் தலையில் கல்லேற்றிய கதை. கலிங்கத்தை வீழ்த்திப் பரணி பாடிய கதை. அனுராதபுரத்தையும் பொலனருவையையும் தீக்கிரையாக்கிய கதை..."
- இது நான் இருபதாண்டுகளுக்கு முன் எழுதியது. அப்போதுதான் இதற்கு எத்தனை எதிர்ப்புகள்; எத்தனை வசவுகள்.
ஆனால் அப்படி ஆத்திரப்பட்டவர்கள் எல்லோரும் இன்று சாதியின் அடிப்படையில் தமிழர்களை வரையறுக்கக் கிளம்பியுள்ளனர். சாதியைச் சொல், நீ தமிழனா இல்லையா எனச் சொல்கிறேன் என்கிறார் சீமான். மணியரசன் முதல் இன்னும் பலரும் இன்று அப்படித் தமிழ்ச் சாதிகள் பற்றிப் பேசுகின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:00 pm

சில மாதங்களுக்கு முன் மலேசியாவில் நடைபெற்ற இந்தக் கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் துண்டுச் சீட்டு கொடுத்து அதில் வந்திருந்தவர்களின் முகவரிகளோடு சாதிகளையும் எழுதச் சொல்லி வாங்கியுள்ளார்கள்.
"பிரபாகரனுடன் சீமான் புகைப்படமே எடுத்ததில்லை": வைகோ பாய்ச்சல்
அம்பேத்கரை காங்கிரஸ் வஞ்சித்தது எப்படி?
2. ஒரு ஒப்பீட்டுக்காக இந்திய தேசிய உருவாக்கத்தின் கதையை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். இந்தியா, பாரதம் என்கிற கருத்தாக்கங்கள் எல்லாம் வரலாற்றில் மிகச் சமீபமாக உருவானவை. "தேசப் போராட்டங்கள்தான் தேசத்தை உருவாக்குகின்றனவே ஒழிய தேசம் தேசப் போராட்டங்களை உருவாக்குவதில்லை" - என ரெனான் சொன்னதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு 'இந்தியா' என்கிற கற்பிதம்தான்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இந்தியா என ஒன்று கிடையாது என்பதை எல்லோரும் சொல்லிவிட்டார்கள். உண்மை. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பின் முதல் சுதந்திரப்போர் எனச் சொல்லப்படும் சிப்பாய்க் கலகத்தின்போது கூட 'இந்தியா' என்கிற கருத்தாக்கம் உருவாகவில்லை.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: முக்கிய துளிகள்
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத வலி
'இந்திய தேசியக் காங்கிரஸ்' என இங்கு ஒன்று உருவாக்கப்பட்டபோது கூட அதை உருவாக்கியது ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் எனும் ஆங்கிலேயர்தான். பின் எப்போது இந்தியா என்கிற கருத்தாக்கம் உருவாகியது?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:01 pm

1905 ல் கர்சான் பிரபு வங்கத்தை இந்து வங்கம் (மேற்கு) எனவும் முஸ்லிம் வங்கம் (கிழக்கு) எனப் பிரித்தபோது இங்கு ஒரு எழுச்சியும் போராட்டமும் கிளர்ந்ததே அப்போதுதான் இந்தியா என்கிற கருத்து உருவானது. மகாகவி பாரதி அதை இப்படிச் சொல்கிறார்: வங்கப் பிரிவினையை ஒட்டி "தேசபக்தி என்கிற நவீன மார்க்கம்" தோன்றி, "நல்லோர்கள் சிந்தையை எல்லாம் புளகிக்கச் செய்தது" என 1908ல் அவர் எழுதினார்.
இந்த எழுச்சி இந்தியாவுக்குள் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்குத் தனி மாநிலம் என்கிற கருத்துக்கு எதிராக உருவானது. அந்த அடிப்படையில் ஆரிய சம்பத்து, பாரதம் முதலான அடையாளங்களுடன் இந்தியா என்பதைக் கற்பிப்பது தொடங்கியது. ஒரு பத்தாண்டுகளுக்குப் பின் காந்தி என்றொரு மனிதன் இந்திய அரசியலில் தோன்றினான்.
அவன் இந்த மத அடிப்படையிலான தேசக் கற்பிதத்தை இயன்ற வரையில் எல்லோருக்குமான தேசியம் (Inclusive Nationalism) என்பதாகக் கட்டமைக்க உயிரைக் கொடுத்துப் போராடினான். ஆமாம் உயிரைக் கொடுத்துத்தான் போராடினான். அவனும் போனான். அடுத்த சில மாதங்களில் பாபர் மசூதிக்குள் இராமர் சிலைகள் வைக்கப்பட்டன. வட மாநிலங்களில் பசுவதைத் தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்தியாவிற்குள் முஸ்லிம்களை விலக்கிய தேசியம் (Exclusive Nationalism) ஒன்று வேகமாக வளர்ந்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:02 pm

3. தமிழகம் தொன்மை வாய்ந்த ஒரு வரலாறு மற்றும் பண்பாட்டுப் பின்னணி கொண்ட ஒரு நாடு. இனக்குழுச் சமூகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விவசாயமயமாக்கம், முதற்கட்ட அரசுருவாக்கம் எல்லாம் உருவாக்கப்பட்டபோதுதான் மொழி உணர்வு, நில எல்லை குறித்த உணர்வு (territorial consciousness) எல்லாம் உருவாகின்றன. மொழியையும் நில எல்லையையும் இணைத்துப் பேசும், "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல் உலகத்து" என்கிற தொல்காப்பியப் பாயிரம் இந்தச் சூழலின் வெளிப்பாடுதான்.
இந்த மொழி - எல்லை உணர்வு தேசிய இன உணர்வின் ஒரு தொன்ம மாதிரி. "துடியன், பாணன், கடம்பன், பறையன் என இந் நான்கல்லது குடியும் இலவே" (புறநானூறு 335: 7-8) என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல். இவ்வகையில், பல்வேறு இனக் குழுக்களின் தனித்துவங்கள், தலமொழி, பண்பாட்டு வேறுபாடுகள் எல்லாவற்றையும் உள்ளிணைத்த (inclusive) 'தமிழ் கூறும் நல்லுலகம்' எனும் ஒரு கருத்தாக்கம் இங்கு மேலெழுகிறது.
எனினும் அப்போது கூட ஒற்றை அரசு என்கிற ஒருங்கிணைப்பு முன் வைக்கப்படவில்லை என்பதற்கு "தமிழ்கெழு மூவர்" (அகம் 31:14) என்கிற கூற்று சான்றாகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:03 pm

தமிழ்நாட்டின் தனித்தன்மையைக் காட்டும் திராவிட ஆட்சி சாதனைகள்
அடுத்த 2500 ஆண்டுகளில் இங்கு என்னென்னவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. புதிய படை எடுப்புகள், புதிய சிந்தனைகள், மதங்கள், அரசுகள், குடியேற்றங்கள் என என்னென்னவோ நடந்துவிட்டன. தமிழக மன்னர்களும் படை எடுத்துச் சென்று நாடுகளைக் கைப்பற்றினார்கள், தமிழகத்தின் மீதும் படை எடுப்புகள் நடந்தன.
தமிழர்கள் இன்று இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் எனப் பல நாடுகளில் பாரம்பரியமாக வாழ்கின்றனர். தமிழகத்திற்குள்ளும் பலர் வந்து குடியேறித் தம் வேர்களை மறந்து, மொழியையும், மண்ணையும், அவற்றுக்குரிய அடையாளங்களையும் கைவிட்டு வாழ்கின்றனர்.
இன்று தமிழகத்தில் சுமார் 30 சதவீதம் இப்படியான மொழிச் சிறுபான்மையர் வாழ்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, வாக்ரிபோலி இப்படிப் பல மொழிகள் பேசுபவர்கள் இவர்கள். இவர்களுள் நில உடமையாளர்களும் உண்டு. நரிக்குறவர் போன்ற நாடோடிகளும் உண்டு. ஒட்டர்கள் போன்ற மண்வெட்டிக் கூலி தின்னும் மக்களும் உண்டு. மலம் அள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட அருந்ததியர்களும் உண்டு. முஸ்லிம்கள் உண்டு. கிறிஸ்தவர்கள் உண்டு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:03 pm

திராவிட மொழி குடும்பத்திலேயே பழமை வாய்ந்த 'தமிழ்' மொழி: ஆய்வு சொல்லும் உண்மை என்ன?
'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'
இந்தப் பின்னணியில்தான் இங்கு பிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திர இந்தியா, மொழிவாரி மாநிலம் அதை ஒட்டிய போராட்டங்கள் எல்லாம் நடந்தேறின.
இன்று தமிழ்த் தேசியம் இங்கு வரையறுக்கப் படுவதில் இந்தச் சமகால வரலாறு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக 19, 20ம் நூற்றாண்டு அரசியல் போக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தப் பின்னணியில் உருவான தமிழ் தேசியத்தை நாம் இரண்டாகப் பிரித்து அணுகலாம். அவை:
அ. திராவிட இயக்கம் முன்னெடுத்த தமிழ்த் தேசியம், ஆ. ம.பொ.சி வழிவந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:04 pm

அ. திராவிட இயக்கம் முன்னெடுத்த தமிழ்த் தேசியம்
தமிழ்நாட்டில் 30 சதவீதம் மொழிச் சிறுபான்மையர் உள்ளனர்; ஒ 12 சதவீதம் மதச் சிறுபான்மையர் உள்ளனர்; 18 சத வீதம் பட்டியல் சாதியினர் உள்ளனர். இவர்கள் யாரையும் ஒதுக்கிவிடாமல் உள்ளடக்கியது திராவிட தேசியம். இரண்டரை சதவீத அளவு உள்ள பார்ப்பனர்களைத்தான் அது வெளியில் நிறுத்தியது.
திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக் கட்சிக்கும், பெரியார் முன்வைத்த திராவிடக் கருத்தாக்கத்துக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உண்டு. நீதிக் கட்சியினர் பார்ப்பனர்களின் சமூக மேலாண்மையை (social hegemony) மட்டுமே எதிர்த்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான கல்வி வளர்ச்சி, அரசியல் நிர்வாகம், பதவிகள் ஆகிய எல்லாவற்றையும் அளவில் மிக மிகக் குறைவான பார்ப்பனர்களே கைப்பற்றிக் கொள்கிறார்களே என்கிற அடிப்படையிலேயே நீதிக்கட்சியின் அரசியல் இருந்தது.
ஆனால் பெரியார் இந்தச் சமூக மேலாண்மையோடு பார்ப்பனர்களின் சடங்கு மேலாண்மையையும் (ritual hegemony) கேள்விக்குட்படுத்தினார். பிறப்பு முதல் இறப்பு வறையிலான அனைத்துச் சடங்குகளிலும் அவர்களுக்கு இருந்த பூசாரி நிலையையும் ஒழிக்க வேண்டும் என்றார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:05 pm

இந்து மதம், கடவுள் மறுப்பு ஆகியவை குறித்த கடும் விமர்சனங்களையும் இந்தப் பின்னணியிலிருந்தே முன் வைத்தார். சுயமரியதைத் திருமணம் போன்ற மாற்றுக்களையும் அவர் இதனூடாகவே நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.
அப்போது கூட அவர்கள் மீது வன்முறையையோ, அவர்களை முற்றாக ஒதுக்க வேண்டும் என்றோ, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றோ ,பெரியாரரோ, வேறு எந்த திராவிட இயக்கத்தினரோ சொன்னதே இல்லை.
'50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்'
தமிழ்நாட்டின் தனித்தன்மையைக் காட்டும் திராவிட ஆட்சி சாதனைகள்
பார்ப்பனர்களுக்கும் கூட அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 2 சத ஒதுக்கீடு கொடுத்துவிடலாம், வரலாறு பூராவும் இருந்ததுபோல அனைத்துப் பதவிகளையும் அவர்களே ஆக்ரமிப்பது என்பதற்குத்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுதான் பெரியார் சொன்னார். சரியாகச் சொல்வதானால் அவர் பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் எதிர்த்தார். பார்ப்பனரை எதிர்க்கவில்லை. பின்னால் வந்த திமுகவோ இந்த பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையும் கைவிட்டது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக